ஆணி வேர் ஒன்று அறுந்தது

Spread the love

ஆணி வேர் ஒன்று அறுந்தது

உன் மக்கள் அவை காக்க
உரமேறி நின்றவா
தம் மக்கள் உனை காக்க
தவறியது ஏன் நண்பா

பின்னிருந்து இரு குண்டு
பிய்த்து நெஞ்சுடைக்க
மூச்சிழந்து போனாயே
முகவரி தொலைத்தாயே

காட்சிகள் இது ஒன்றாய்
காணொளியில் நீ இருக்க
வீச்சிழந்து போனவனே
வித்துடல் ஆனாயே

பேச்சிழந்து போவதற்கா
பேராசை நீ கொண்டாய்
அறுபத்தெட்டு அகவையில
ஆறடியில் ஏன் உறைந்தாய்

உன் துயரில் உலகெல்லாம்
உனை எண்ணி அழுகுதடா
உதயமாய் ஒளித்தவனே
உறக்கத்தில் ஏன் ஒளிந்தாய் ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 08-07-2022

வன்னி மைந்தன் கவிதைகள்
08-07-2022 ஜப்பான் முன்னாள் பிரதமர் shinzo Ape சுட்டு கொலை செய்யப்பட்ட துயரில் வடித்தவை

    Leave a Reply