Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை

கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை

இலங்கையில் கடந்த தினம் கெந்தலியத்தபாலுவ பிரதேசத்தில் நபர் ஒருவர் கோரமாக கத்தியால் குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளார் ,

இவ்வாறு கத்தி குத்துக்கு உள்ளானவர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்

கத்தியால் குத்திய நபர் படுகொலை செய்ய பட்ட நபராது கைபேசியை திருடிய

நிலையில் அது தொடர்பாக அவரது இரு மகனுடன் சென்று விசாரிக்க சென்ற பொழுது அவரது வீட்டில் வைத்து கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்

கத்தியால் கோரமாக குத்தி படுகொலையை புரிந்து விட்டு கொலை குற்றவாளி தப்பி

ஓடியுள்ளார் ,இவ்வாறு தப்பி ஓடிய கொலையாளியை கைது செய்யும் நோக்குடன் விசேட காவல்துறையினர் செயலாற்றி வருகின்றனர்

இலங்கையில் நாள் தோறும் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலைவாசி போல எகிறிய வண்ணம் உள்ளது

மக்கள் மத்தியில் இவ்விதமான கொடூர குற்றவியல் மனோ நிலையை இவ்வாறான படுகொலை சம்பவங்களுக்கு காரணமாக அமைய பெறுகிறது

கடந்த சில காலங்களாக நீர் நிலைகளில் படுகொலை செய்யப்பட்டு வீச பட்ட

நிலையில் மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றன ,அதுபோலவே இவ்வாறான கத்தி குத்து படுகொலைகளும் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

இலங்கையில் அதிகரித்து செல்லும் இவ்வாறான கத்தி குத்து படுகொலைகளை

தடுக்க போலீசார் தவறி வருகின்றனர் ,மேலும் இந்த படுகொலை குற்ற செயல்களில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளவும் மக்கள் தவறி வருகின்றனர்

திருட பட்ட ஒரு கைபேசியை திருடன் என்கின்ற முறையில் வன்முறையோடு திருடியவர் வீடு சென்று விசாரிக்க சென்ற போதே

வாக்குவாதம் முற்றிய நிலையில் குறித்த திருட்டு பழிக்குற்றத்தில் இருந்து தப்பிக்க திடீர் கத்தி குத்து படுகொலை தாக்குதலை நடத்தியுள்ளார்

வாய் தர்க்கம் முற்றிய நிலையில் அதனை சமாதான முறையில் அணுகிட தவறியதன் விளைவே அப்பாவி உயிர் ஒன்று படு கோரமாக கத்தியால் குத்தி படுகொலை செய்யப்படும் நிலைக்கு சென்றுள்ளது


அறிவார்ந்த நிலையில் பிரச்சனைகளை கையாள மறுத்ததன் விளைவே இந்த கத்தி குத்து படுகொலைக்கு காரணமாக அமைந்துள்ளது.

  • வன்னி மைந்தன் –
    Posted in உலக செய்திகள்

    டாங்கிகளுடன் 100 ரசிய படைகள் கொலை

    டாங்கிகளுடன் 100 ரசிய படைகள் படுகொலை

    உக்கிரேன் மீது பாரிய இராணுவ படையெடுப்பை மேற்கொண்டு வரும் எதிரி படைகள் மீது உக்கிரேன் அரச இராணுவம் கடந்த இருபத்தி நான்கு மணித்தியால மேற்கொண்ட தாக்குதல்களில் மட்டும்

    ஐந்து டாங்கிகள் 13 armoured combat vehicles, 8 UAVs, and 23 pieces of automotive equipment

    மற்றும் எரிபொருள் பவுசர்கள் இவற்றுடன் 100 ரசியா இராணுவத்தினரும் படு கொலை செய்ய பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது

    நூற்றி ஒரு நாட்களை கடந்து பயணிக்கும் இந்த கொடிய போரில் தாம் வெற்றியை தம தாக்கி வருவதாக உக்கிரேன் அரச இராணுவத்தினர் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்

    முன்னேறி வரும் ரசியா டாங்கிகள் பலமாக அழிக்க பட்டு வருகிறது ,அந்த போர் ஆயுத

    வண்டிகளில் பயணிக்கும் இளம் வயதுடைய ரசியா எதிரி படைகளும் பலியாகி சிதறி கிடக்கும் காட்சிகள் வெளியிட பட்டு வருகின்றன

    துருக்கிய இராணுவத்தின் உளவு விமானங்களின் துல்லியமான களமுனை காட்சிகள் ஊடாகவே உக்கிரேனிய அரச இராணுவத்தினர் ரசியா டாங்கிகள் மற்றும் அதன் இராணுவம் மீது துல்லியமான தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளன

    உக்கிரேன் போர்க் களத்தில் ரசியா எதிரி படைகள் பலமான இழப்புக்களை சந்திக்க துருக்கிய தயாரிப்பான ஆள் இல்லாத உளவு விமானங்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது

    டாங்கிகளுடன் 100 ரசிய படைகள் படுகொலை

    இதனால் என்னவோ உக்கிரேனுக்கு குறித்த உளவு விமானங்களை வழங்க வேண்டாம் என துருக்கியை ரசியா அரசு வேண்டி நின்றது

    இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்ட ரசியா டாங்கிகளை தாம் அழித்துள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு புள்ளி விபாரங்களுடன் அதன் வகைகளை குறிப்பிட்டுள்ளது

    இந்த டாங்கிகள் யாவும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மூலம் அழிக்க பட்டுள்ளமையும் ,அதன் திறம்பட்ட தாக்கும் திறன் இந்த படைக்கல இழப்பின் ஊடாக உலகத்திற்கு காண்பிக்க பட்டுள்ளது

    உக்கிரேன் கள முனையில் ரசியாவின் டாங்கி படையின் முன்நகர்வு அளப்பரிய ஒன்றாக அமைந்துள்ளது குறிப்பிட தக்கது

    • வன்னி மைந்தன் –
      Posted in உலக செய்திகள்

      உக்கிரேனில் 31 000 ரசியா இராணுவம் படுகொலை

      உக்கிரேனில் 31 000 ரசியா இராணுவம் கொலை

      உக்கிரேன் மீது ரசியா இராணுவத்தினர் நடத்தி வரும் ஆக்கிரமிப்பு போருக்கு

      எதிராக உக்கிரேனிய இராணுவம் கடும் சமராடி வருகிறது

      முன்னேறி வரும் எதிரி படைகளை திணறடித்த வண்ணம் உக்கிரேனிய இராணுவம் போரிட்ட வண்ணம் உள்ளது ,உக்கிரேன் மீதான எதிரிகளின் படையெடுப்பு

      மேற்கொள்ள பட்டு நூறு நாட்கள் கழிந்துள்ள நிலையில் இதுவரை முப்பத்தி ஓராயிரம் எதிரி படைகளை தாம் கொன்று குவித்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது

      மேற்குலக நாடுகளின் ஆயுதங்களை பெற்றுக்கொண்டு தொடர்ந்து வல்லரசாக வலம் வரும் ரஷியா இராணுவத்திற்கு எதிராக நூறு நாட்கள் உக்கிரேன் இராணுவம் கடும் எதிர் சமர் புரிந்துள்ளது

      இதுவரையில் உக்கிரேன் பகுதியில் எதிரி இராணுவத்தால் ஐந்தாயிரம் அப்பாவி மக்கள் படுகொலை செய்ய பட்டுள்ளனர்

      மேலும் எட்டாயிரம் பேர் வரை படு காயமடைந்துள்ளனர் ,வீடுகள் அழிக்க பட்டுள்ளது ,
      இழப்புக்களை எதிர் கொண்டவாறு ரசியா இராணுவம் தொடர்ந்து முன்னேறிய வண்ணம் உள்ளது

      ,தமது இறுதி மூச்சு இருக்கும் வரை தமது தாய் மண்ணை விட்டு கொடுக்க மாட்டோம் என உக்கிரேன் இராணுவம் எதிரி படைகளுடன் சமராடி வருகிறது

      உக்கிரேனில் இடம்பெறுவது இனப்படுகொலை என உக்கிரேன் உரத்து கூறி வருகிறது ,சர்வதேச நீதிமன்றில் ரசியா நிறுத்த பட்டு தண்டிக்க படும் எனவும் ஐநா தெரிவித்துள்ளது

      உக்கிரேனில் 31 000 ரசியா இராணுவம் படுகொலை

      உக்கிரேனுக்கு ஆயுத உதவிகள் வழங்க படும் நாடுகளுக்கு ரசியா எச்சரித்திருந்தது

      ,ஆனால் அத்தனையும் மீறி பிரிட்டன்,அமெரிக்கா எண்பது கிலோ மீட்டர் சென்று தாக்கும் நீண்ட தூர ஏவுகணைகளை பல மில்லியன் டொலருக்கு வழங்கியுள்ளது

      மேற்குலக நாடுகள் வழங்கும் ஆயுத உதவிகளுடன் வல்லரசாக விளங்கி வரும் எதிரி இராணுவத்தை வீழ்த்தி உக்கிரேன் இராணுவம் வெற்றி கொள்ளுமா என்பது சந்தேகமே

      அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளை நம்பிய இராணுவ குழுக்கள் ,அதே

      இராணுவத்தால் கைவிட பட்டு அழிவின் விளிம்பில் சிக்கியுள்ளதை மத்திய கிழக்கு அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கான போர் பாடம் புகட்டுகிறது

      அவ்விதம் உக்கிரேனும் சம காலத்தில் கைவிட பட்டு ,எதிரியிடம் மண்டியிடும் நிலைக்கு உக்கிரேன் செல்ல கூடும் என எதிர் பார்க்கலாம்

      தனது பலத்தில் உள்ளவன் மட்டுமே, எதிரி முன்னேற்றம் குறித்தும்,அவன் பலம் குறித்தும் ஆழ்ந்து யோசித்து
      போராடுவான் என்பது போரியல் நிலையாக உள்ளது ,

      உக்கிரேன் ரசியா போர் கோடை காலத்தில் முடிவுக்கு வரும் என கூறும் எதிரியாக உள்ள ரசியாவின் கூற்று சாத்தியம் தானா என்பதை பொறுத்திருந்தது பார்க்கலாம்

      உக்கிரேன் கூறும் எதிரி இராணுவத்தின் ஆயுத தளபாட மற்றும் ஆளணி அழிப்பு என்பது ரசியாவுக்கு நெருக்கடி தரும் ஒன்றாக மற்றம் பெற்றுள்ளது ,

      வரும் எதிர்ப்புக்களை உடைத்து எதிரி நாட்டை தம் வசப்படுத்துவோம் என்கின்ற ரசியாவின் கனவு பலிக்குமா ..?

      உக்கிரேன் ரசியா போர் எது வரை நீளும் ..?
      அது சொல்ல போகும் செய்தி என்ன ..?

      • வன்னி மைந்தன் –
        Posted in இலங்கை செய்திகள்

        கத்தியால் குத்தி பெண் படுகொலை

        கத்தியால் குத்தி பெண் படுகொலை

        இலங்கை ஆனைமடு பொலிஸ் பிரிவில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தி பெண் படுகொலை செய்ய பட்டுள்ளார்.

        உடலின் பல பகுதிகளில் ஏற்படுத்த பட்ட வெட்டு காயங்களினால் ஏற்பட்ட இரத்த போக்கின் காரணமாக இவர் பரிதாபமாக இறந்துள்ளார்.

        கத்தியால் குத்தி பெண்ணை படுகொலை புரிந்த கொலையாளி தப்பி சென்றுள்ளனர்.

        இவ்வாறு தப்பி ஓடிய கொலையாளிகளை கைது செய்யும் நகர்வில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

        இலங்கையில் அதிகரித்து செல்லும் கத்தி வெட்டு படுகொலைகள் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச நிலையை ஏற்படுத்தியுள்ளது .

          Posted in இலங்கை செய்திகள்

          கொழும்பு பகுதியில் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை

          இலங்கை கொழும்பு ஆர்மர் வீதி பகுதி அடுக்குமாடியில் வசித்து வந்த 47வயதுடைய

          நபர் ஒருவர் மர்ம நபர்களினால் கத்தியால் குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளார்

          இவ்விதம் கொலை செய்ய பட்டதற்கான காரணம் தெரியவில்லை .

          தற்போது காவல்துறை விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்க பட்டு வருகின்றன.

          விரைவில்கொலைக்கன காரணம் கண்டறிய படும் என நம்ப படுகிறது .

            Posted in உலக செய்திகள்

            27 400 ரசியா படைகள் உக்கிரேனில் படுகொலை

            27 400 ரசியா படைகள் உக்கிரேனில் படுகொலை

            உக்கிரேன் மீது ரசியா படைகள் நடத்தி வரும் போரில் இதுவரை 27.500 இராணுவத்தினர் உக்கிரேனில் பலியாகியுள்ளனர்


            மேலும் இருநூறு ரசியா போர் விமானங்கள் மற்றும் 164 உலங்குவானூர்திகள் என்பன தாக்கி அழிக்க பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது

            ரசியா இராணுவத்தின் மூன்றில் ஒரு பலத்தை ரஷியா இராணுவத்தினர் இழந்துள்ளதாக பிரிட்டன் உளவுத்துறை தெரிவித்துள்ளது


            உக்கிரேனில் இடம்பெற்று வரும் போரில் பலத்த அவமானத்தையும் ,பொருளாதார பின்னடைவையும் ரஷியா சந்தித்துள்ளதாக அமெரிக்கா சார்பு நாடுகள் பரப்புரை புரிந்த வண்ணம் உள்ளன

            உக்கிரேன் இராணுவத்தால் பரம எதிரியாக விளங்கும் ரசியா இராணுவத்தினரால் படுகொலை செய்ய பட்டு வருகின்றனர்

            ரசியா இராணுவத்தின் பல்வேறு பட்ட முன்னேற்ற நகர்வுகள் எதிரி படைகளினால் துவாம்சம் செய்ய பட்டுள்ளன

            27 400 ரசியா படைகள் உக்கிரேனில் படுகொலை

            இதுவரை உக்கிரேன் மீது ரசியா அணு குண்டு மற்றும் கெமிக்கல் தாக்குதல்கள் எதனையும் மேற்கொள்ளவிலை

            அவ்விதம் மேற்கொண்டால் உக்கிரேனில் மக்கள் படுகொலை அதிகம் தோற்றம் பெறும் என்ற அச்சம் நிலவுகிறது

            வரும் காலங்களில் மேற்குலக நாடுகளின் போர் தளபாடங்கள் ஊடாக இராணுவ தாக்குதல்கள் வலுப்பெற்றால் ,ரசியாவின் இராணுவம் இந்த ஆயுதங்களை பயன் படுத்தும் எனவும்

            அதனால் மக்கள் வாழ்விடங்கள் இலக்கு வைக்க பட்டு ரசியா படைகள் வன்முறை தோய்ந்த பழிவாங்கும் தகத்தல்களை மெக்கோளும் பொழுது பல்லாயிரம் அப்பாவி மக்கள் படுகொலை செய்ய படும் நிலை ஏற்படும்

            இவ்வாறான ரசிய படுகொலையை நிறுத்திட உக்கிரேன் பணிந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது ,

            இதுவரை தமது இராணுவத்தால் 27 400 ரசியா இராணுவ படைகள் உக்கிரேனில் படுகொலை செய்ய பட்டுள்ளது என்ற வீர அறிக்கை

            உகிரேனை மேலும் நெருக்கடியில் சிக்க வைக்கும் என எதிர் பார்க்க படுகிறது

            ,மேற்குலக நாடுகளையும் தமது மக்களையும் குஷி படுத்த உக்கிரேன் இராணுவம் இந்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது

            விரைவில் உக்கிரேன் களத்தில் தலை கீழ் மாற்றங்கள் உருவாகும் என்பதை அடித்து கூறலாம் .

            ரசியா படைகள் படுகொலைகள் உக்கிரேனில் அதிர்ச்சிகளை ஏற்படுத்த போகிறது .

            • வன்னி மைந்தன் –
              Posted in உலக செய்திகள்

              130 ரசியா இராணுவம் படுகொலை – ஆயுதங்கள் அழிப்பு

              130 ரசியா இராணுவம் படுகொலை – ஆயுதங்கள் அழிப்பு

              உக்கிரேன் கிழக்கு பகுதி ஊடாக முன்னேறிய ரசியா படைகளின் முக்கிய படைப் பிரிவு மீது


              தாம் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 130 இராணுவத்தினர் கொலை செய்யப்பட்டனர்

              மேலும் இரு டாங்கிகள் ,கவச வண்டிகள்,வாகனங்கள் ,தாங்கிய ஆயுத தொகுதி அழிக்க
              பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தெரிவிதுள்ளது

              ஆனால் ரசியா படைகளோ எதிர் தரப்பிற்கு இழப்பு அதிகம் என பரப்புரை புரிந்து வருகின்றனர்


              தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                Posted in Uncategorized

                கோட்டா கட்சி பாராளும்னற உறுப்பினர் உள்ளிட்ட ஐவர் படுகொலை – 173 பேர் காயம்

                கோட்டா கட்சி பாராளும்னற உறுப்பினர் உள்ளிட்ட ஐவர் படுகொலை – 173 பேர் காயம்

                இலங்கையில் ஆளும் சகோதர்கள் ஆட்சிக்கு எதிராக மக்கள் அமைதி வழியில் போராடி வந்தனர்


                இவர்களது இந்த போராட்டத்திற்குள் புகுந்து மகிந்த குண்டர்கள் தாக்குதலை நடத்தினர்

                ,இதனால் ஆத்திரமுற்ற மக்கள் திடீரென ஒன்றுகூடி மகிந்த குண்டர்கள் மீது தாக்குதலை நடத்தினர்

                இவ்விதம் இரு தரப்பும் மேற்கொண்ட மோதல்களில் சிக்கி இதுவரை ஆளும் கட்சியை சேந்த பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட ஐந்து பேர் பலியாகியுள்ளனர்

                மேலும் 173 பேர் படுகாயமடைந்துள்ளனர்

                எம்பிக்கள் ,அமைச்சர்கள் ,உள்ளிட்ட பத்து பேரது வீடுகள் தீக்கிரையாக்க பட்டுள்ளன ,தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது

                  Posted in Uncategorized

                  45 ஊடக நபர்கள் படுகொலை

                  45 ஊடக நபர்கள் படுகொலை

                  2021 ஆம் ஆண்டு உலகலாவிய ரீதியில் 45 ஊடக நபர்கள் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடக

                  அமைப்பு தெரிவித்துள்ளது

                  பாலஸ்தீனத்தில் மட்டும் அதிக ஊடக நபர்கள் இஸ்ரேலிய இராணுவத்தினரால் படுகொலை

                  செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                    Posted in Uncategorized

                    எகிறும் படுகொலைகள் – மிதக்கும் சடலங்கள்

                    எகிறும் படுகொலைகள் – மிதக்கும் சடலங்கள்

                    மஹியங்கனை மொரகெட்டிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று (12) நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

                    மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடும் இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதிலில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது,

                    மொரகெட்டிய  வேவத்த பகுதியை சேர்ந்த 59 வயதுடைய நபர் இதன்போது உயிரிந்துள்ளார்.

                    சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

                    இதேவேளை, பலாங்கொடை மெதகந்தவத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று (12) இரவு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

                    அயல்வீட்டினருடன் ஏற்பட்ட முரண்பாட்டில் குறித்த நபர் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

                    மெதகந்தவத்த  பகுதியை சேர்ந்த 59 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                    சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

                    இந்த கொலை சம்பங்கள் தொடர்பில் அந்தந்த பிரசேதத்துக்கு பொறுப்பான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    மாட்டை கொன்றவரை குத்தி கொன்ற நபர் – அரங்கேறிய பழிவாங்கல் படுகொலை

                    மாட்டை கொன்றவரை குத்தி கொன்ற நபர் – அரங்கேறிய பழிவாங்கல் படுகொலை

                    இலங்கை கலுவலகொட பகுதியில் பால் கறக்கும் பசு மாடு ஒன்றினை மின்சார வேலியில் சிக்க வைத்து கொலை

                    செய்த நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர் ,அவரோ பிணையில் விடுதலையாகி வீடு வந்த வேளை

                    இரவு அவர் நடமாடிய பொழுது ,அவரை பின்தொடர்ந்து சென்ற மமாட்டின் உரிமையாளரின் மகன் அவரை சரமாரியாக கத்தியால் குத்தி கொன்றுள்ளார்

                    பல்லாயிரம் ரூபா பெருத்தியான மாடு படுகொலை செய்ய பட்ட வேதனையின் துடிப்பில் இந்த

                    பழிவாங்கல் படுகொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                      Posted in Uncategorized

                      யாழில் ரவுடிகள் மோதல் – ஒருவர் வெட்டி படுகொலை – ஐவர் காயம்

                      யாழில் ரவுடிகள் மோதல் – ஒருவர் வெட்டி படுகொலை – ஐவர் காயம்

                      யாழ்ப்பாணம் பருத்துறை பகுதியில் இடம்பெற்ற இரு குழுக்களுக்கு இடையிலான மோதலில்

                      சிக்கி ஒருவர் படுகொலை செய்ய பட்டுள்ளார் மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்

                      இறந்தவர் ஒரு பிள்ளையின் தந்தை என தெரிவிக்க படுகிறது

                      கட்டாக்காலி ரவுடிகளின் அடடூழியம் யாழ் மண்ணில் சமீப காலங்களாக அதிகரித்து செல்வதும்

                      ,அதுவே இறுதியில் கொலையில் முடிவடைவதும் குறிப்பிட தக்கது

                        Posted in Uncategorized

                        இராணுவத்தால் 300 அப்பாவி மக்கள் படுகொலை

                        இராணுவத்தால் 300 அப்பாவி மக்கள் படுகொலை

                        மியன்மாரில் இராணுவத்தினரின் ஆட்சிக்கு எதிராக மக்கள் நடத்திய 164 க்கு மேற்பட்ட

                        போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது இராணுவம் நடத்திய வன்முறை தாக்குதலில் சிக்கி இதுவரை 300 மக்கள் படுகொலை செய்ய பட்டுள்ளனர்

                        தொடர்ந்து இராணுவ ஆட்சி நீடித்து வருவதால் மக்கள் பெரும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர்

                        மக்கள் சுதந்திரம் மறுக்க பட்டு அங்கு முழு இராணுவ நெருக்கடி இடம்பெற்ற வண்னம் உள்ளது

                        உலக நாடுகள் கண்டித்த பொழுதும் ,ஆளும் அரச இராணுவத்தின் செயல்பாடுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது குறிப்பிட தக்கது

                          Posted in Uncategorized

                          200 பேர் படுகொலை -40,000 பேர் இடபெயர்வு

                          200 பேர் படுகொலை -40,000 பேர் இடபெயர்வு

                          கொங்கோவில் இடம்பெற்று பவரும் இராணுவ நடவடிக்கை காரணமாக 200 பேர் படுகொலை

                          செய்யப்பட்டும் ,சுமார் நாற்பது ஆயிரம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது

                          ADF இராணுவத்தினர் தொடுத்து வரும் இந்த தாக்குதலினால் மேற்படி பாதிப்பு ஏற்படுத்த

                          பட்டுள்ளது ,கொங்கோவில் இடம் பெற்று வரும் உள் நாட்டு போர் காரணமாக பல லட்சம் மக்கள் பலியாகியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

                            Posted in Uncategorized

                            38 மக்களை சுட்டு கொன்ற இராணுவம்

                            38 மக்களை சுட்டு கொன்ற இராணுவம்

                            மியன்மாரில் இடம் பெற்று வரும் இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்த்தில் குதித்தனர் .

                            மேற்படி மக்கள் மீது இராணுவ சர்வாதிகார அடக்குமுறை பயன்படுத்தி தடியடி தாக்குதல் ,மற்றும் துப்பாக்கி தாக்குதல்கள் இடம்பெற்றன

                            இந்த தாக்குதலில் இதுவரை முப்பத்தி எட்டு மக்கள் படுகொலை செய்ய பட்டுள்ளனர்

                            தொடர்ந்து முன்னாள் அதிபர் சிறையில் வைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                            லண்டனில் -டிலிவரி டிரைவர் 12 தடவை கத்தியால் குத்தி படுகொலை

                            லண்டனில் -டிலிவரி டிரைவர் 12 தடவை கத்தியால் குத்தி படுகொலை

                            லண்டன் குரைடன் பகுதியில் deliveroo சாரதி ஒருவர் ,அந்த உணவை வினியோகிக்க சென்ற நபர்களினால் கத்தியால் குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளார்

                            இவர் மீது 12 தடவை கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது ,இவருக்கும் கொலையாளிகளுக்கு இடையில் நீண்ட நேர வாக்குவாதம் இடம் பெற்றுள்ளது

                            அதன் பின்னரே இந்த படு கொலை இடம் பெற்றுள்ளது ,

                            குறித்த டிலிவரி வேலை ஆரம்பித்து இரண்டாவது நாள் இவர்

                            படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குடும்பத்தாரை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

                            மேற்படி கொலை குற்ற செயல் தொடர்பில் கொலையாளி கைது செய்யப்பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்தப் பட்டுளளார்


                            குறித்த பகுதி நீதிமன்றில் இடம்பெற்று வரும் விசாரணைகளில் இவருக்கு மரண தண்டனை வழங்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது

                            Posted in Uncategorized

                            ஓடும் பேரூந்தில் இருந்து வாலிபர் தள்ளி படுகொலை

                            ஓடும் பேரூந்தில் இருந்து வாலிபர் தள்ளி படுகொலை

                            கடந்த தினம் இலங்கை கண்டி Udawela பகுதியில் பயணிகள் பேரூந்தில்

                            பயணித்து கொண்டிருந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய் தகராறு கொலையில் முடிவடைந்துள்ளது

                            ஓடிக் கொண்டிருந்த பேரூந்தில் இருவருக்கும் வாய்த்தகராறு

                            ஏற்பட்டுள்ளது ,அதில் சீற்றம் உற்ற மறு நபர் குறித்த நபரை அதில் இருந்து தள்ளி வீழ்த்தியுள்ளார் .

                            இதன்பொழுது பேரூந்தில் இருந்து வீழ்ந்த நபர் அவ்விடத்திலே மரணித்துள்ளளார் ,

                            மேற்படி சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

                            Posted in Uncategorized

                            இராணுவம் வெறியாட்டம் – நூற்றுக்கு மேலானவர்கள் படுகொலை

                            இராணுவம் வெறியாட்டம் – நூற்றுக்கு மேலானவர்கள் படுகொலை

                            எதிரிதிரியாவில் இடம்பெற்று வரும் உள் நாட்டு போரில் அரச இராணுவம்

                            தனது எதிரி மக்கள் எனப்படுபவர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்களை ஒரே நாளில் படுகொலை செய்துள்ளது

                            மேற்படி பாடுகொலைக்கு எதிராக மனித உரிமை ஆணையம் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது


                            ,பயங்கரவாதிகள் என்ற போர்வையில் அவர் தம் மொழி பேசும்

                            மக்களை இவ்வாறு ஈவிரக்கமின்றி இராணுவத்தினர் கொன்று வருகின்றமை குறிப்பிட தக்கது

                            Posted in Uncategorized

                            இலங்கை தமிழர் படுகொலைக்கு தீர்வு வேண்டும் -பிரிட்டன்

                            இலங்கை தமிழர் படுகொலைக்கு தீர்வு வேண்டும் -பிரிட்டன்

                            இலங்கையில் மகிந்த ஆட்சியில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்புக்கு

                            உரிய தீர்வினை ஐநா மனித உரிமை ஆணையம் பெற்று கொடுக்க வேண்டும் என பிரிட்டன் தெரிவித்துள்ளது

                            மனித உரிமை மையம் தனது கடமையை சரிவர செய்து .அந்த உரிமைகளை காப்பாற்ற வேண்டும் என அது வேண்டியுள்ளது

                            .பிரிட்டன் முன்வைக்க போகும் இந்த புதிய விடயத்தால் இலங்கை பெரும் நெருக்கடியில் உறைந்துள்ளது

                            நாளை இது தொடர்பான விவாதங்கள் ஐநாவில் இடம்பெறவுள்ள நிலையில் ,இந்தியா உதவியை இலங்கை நாடியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                            Posted in இலங்கை செய்திகள்

                            முஸ்லீம் தீவிரவாதி சகரான் மனைவி தொடர்ந்து தடுத்து வைப்பு

                            இலங்கையில் பல இடங்களில் குண்டு வைத்து அப்பாவி மக்களை கொன்று குவித்த சகரான் என்ற மத போதகரின் மனைவி பாத்திமா

                            படுகாயமடைந்த நிலையில் உயிருடன் மீட்க பட்டார் ,இவர்

                            தற்போது நீதி விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகிறார்

                            இலங்கை நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில், அவரை

                            தொடந்து தடுப்பு காவலில் வைக்குமாறு நீதிமன்ற நீதவானால் அதிரடி உத்தரவிட பட்டுள்ளது