LTTE மீதான தடை நீட்டிப்பு
Posted in இலங்கை செய்திகள்

LTTE மீதான தடை நீட்டிப்பு

LTTE மீதான தடை நீட்டிப்பு

LTTE மீதான தடை நீட்டிப்பு ,தமிழீழ விடுதலை புலிகள் தடையை இந்தியா மேலும் நீடித்துள்ளதக அறிவித்துள்ளது புலிகள் அழிக்க பட்ட பின்னரும் தொடரும் தடை.

விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 1991 ஆம் ஆண்டு இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது.

அதன் பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு தடை நீட்டிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தற்போது விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் உயிரோடு இந்தியா

தடை குறித்த அறிவிப்பில், “விடுதலைப் புலிகள் இன்னும் இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக மத்திய அரசு கருதுகிறது.

இலங்கையில் நடைபெற்ற போரில் கடந்த 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்ட போதிலும், தனி ஈழம் என்ற கருத்தை அவர்கள் கைவிடவில்லை.

பிரச்சாரம் மற்றும் நிதி சேர்க்கை நடவடிக்கை

பிரச்சாரம் மற்றும் நிதி சேர்க்கை நடவடிக்கைகள் என தனி ஈழத்துக்கான நடவடிக்கைகள் தொடர்ந்து ரகசியமாக நடைபெறுகின்றன.

போரில் உயிர் தப்பிய விடுதலைப் புலிகள் அமைப்பின் நிர்வாகிகள் இலங்கையிலும் சரி, சர்வதேச அளவிலும் சரி விடுதலைப் புலிகள் அமைப்பினை மீண்டும் கட்டமைக்க தேவையான முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குழுக்கள்

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குழுக்கள் மக்கள் மத்தியில் பிரிவினைவாதப் போக்கைத் தொடர்ந்து வளர்த்து வருவதோடு, இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவுத் தளத்தை மேம்படுத்துகின்றன.

இது இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்” என்று கூறி தடைக்கான காரணங்களாக மத்திய உள்துறை சுட்டிக்காட்டியுள்ளது. என இந்து தெரிவித்துள்ளது .

இலங்கைக்கான வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கிய இந்தியா
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கான வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கிய இந்தியா

இலங்கைக்கான வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கி உள்ளதாக இந்தியா அரசாங்கதின் கொழும்பு உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அதிக அளவான வெங்காயம் இந்தியாவில் இருந்தே இலங்கைக்கு இறக்குமதி செய்ய பட்டு வருகிறது .

இந்தியா வெங்காயம் இலங்கைக்கு இறக்குமதி செய்திட விதிக்க பட்ட தடையால் இலங்கையில் வெங்காயத்துக்கு அதிக தட்டு படு காணப்பட்டது .

இந்தியா அரசின் வெங்காய தடையினால் இலங்கையில் வெங்காயத்தின் விலை திடிரென கடுகதி வேகத்தில் உயர்ந்தது .

வெங்காய தடை நீக்க பட்டதை அடுத்து வெங்காயத்தின் விலையில் அதிக வீழ்ச்சி காணப்படும் எனவும் ,மக்கள் மலிவு விலையில் வெங்காயத்தை வாங்கி பயன் படுத்தி கொள்வார்கள் என தெரிவிக்க படுகிறது .

மண்மேடு சரிந்து போக்குவரத்து தடை
Posted in இலங்கை செய்திகள்

மண்மேடு சரிந்து போக்குவரத்து தடை

மண்மேடு சரிந்து போக்குவரத்து தடை

இராவணா எல்ல மேல் பகுதியில் இருந்து மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் எல்ல – வெல்லவாய வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

மண்மேடு சரிந்து விழுந்த நிலையில், அப்பகுதியில் வாகனங்களை செலுத்திய வாகன சாரதிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனால் தற்போது அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

video

புலிகளின் நிழல் கூட்டமைப்பு தடைசெய்ய கோரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

புலிகளின் நிழல் கூட்டமைப்பு தடைசெய்ய கோரிக்கை

புலிகளின் நிழல் கூட்டமைப்பு தடைசெய்ய கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தவறு செய்துவிட்டார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற வரவு-செலவுத் திட்டத்தின் மீதான குழுநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழீ​ழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டனர். ஆனால், அவ்வமைப்பின் நிழலாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர். புலிகளை அழித்த கையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைச்செய்து இருக்கவேண்டும். மஹிந்த ராஜபக்ஷ அதனை செய்யாது தவறு செய்துவிட்டார்.

மஹிந்த பாவம் பார்த்தார். இப்போது அது பெரும் அனர்த்தமாக உள்ளது என்றார்.

வெளிநாட்டு ஆறு தமிழர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம்
Posted in இலங்கை செய்திகள்

செங்கோலை தொட்ட எம்.பிக்கு தடை

செங்கோலை தொட்ட எம்.பிக்கு தடை

பாராளுமன்றத்தில் செங்கோலை தொட்ட ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியான அஜித் மன்னம்பெரும சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அவர், இன்றிலிருந்து நான்கு வாரங்களுக்கு சபை அமர்வில் ​கலந்துகொள்வதற்கும் சபாநாயகரால் தடை விதிக்கப்பட்டது.

நிலையியற் கட்டளையின் பிரகாரம் செங்கோலை தொட்டது குற்றமாகும்

வீடியோ .

யாழ் பல்கலைக் கழகத்தில் மோதல் 31 பேருக்கு தடை
Posted in இலங்கை செய்திகள்

யாழ் பல்கலைக் கழகத்தில் மோதல் 31 பேருக்கு தடை

யாழ் பல்கலைக் கழகத்தில் மோதல் 31 பேருக்கு தடை

யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தில் மாணவர் குழுக்களுக்கு இடையில் ,
கடும் மோதல் இடம் பெற்றதை மாணவர்கள் உள்நுழைய தடை விதிக்க பட்டுள்ளது .


மூன்று மாணவர்கள் காயமடைந்த நிலையில் ,மருத்துவமனையில் அனுமதிக்க பட்டனர் .

அதனை எடுத்து மேற்கொள்ள பட்ட நீதி ,
விசாரணைகளின் பின்னர் ,இந்த தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது .

யாழ்ப்பாண வளாகம் தற்போது ரவுடிகளின்,
காவல் நிலையமாக மாறியுள்ளதாக ,குற்ற சாட்டு விமர்சனம்
மக்களினால் முன் வைக்க படுகிறது

No posts found.
Posted in இலங்கை செய்திகள்

21 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

21 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

இலங்கை,கொழும்பு ; ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதான பொருளாதார நிலையங்களின் நுழைவாயிலை மறைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக்

கூறப்படும் 21 போராட்டக்காரர்களின் வெளிநாட்டுப் பயணத்தை உடனடியாகத் தடை செய்யுமாறு நேற்று (28) பிற்பகல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் குறித்த சந்தேகநபர்கள் வெளிநாடு செல்லத் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த

தகவலின்படி, கோட்டை பொலிஸ் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இவர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக உடனடியாக கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களுக்கு அறிவிக்குமாறு குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

21 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

சங்கைக்குரிய வீகொடவத்த காஸ்யப தேரர், திசர நுவந்த அனுராத, ருமேஸ் இந்திக்க, எல்.என்.டி பெரேரா, ஆர்.ஏ. ராஜபக்ச, சிறில் மனதுங்க, இசுரு வர்ணகுல, ரொஷான் அலி டானிஷ் அலி, சண்டிமால் கமகே, டி.ஆர்.டி. பெந்தர

ஆரச்சி, எம். காசிம், என். எம். தௌபிக், நிலந்த சமித் பெர்னாண்டோ, பந்துல பிரபாத், சமீர மதுசங்க சிறிவர்தன, எச். எம். டி. ஜி. மெனிகா, எம்.ஆர். சாரக

கிம்ஹான், சதுரிகா சரோஜினி, ஜே. நிலந்த, எம். நிஷாந்தி மற்றும் சுதத் லக்ஷ்மன் ஆகிய 21 பேருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

கடந்த 13ம் திகதி, தேசிய தொலைக்காட்சி நிறுவனத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களை மிரட்டி, நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஈடுபட்ட ரொஷான் அலி டானிஷ்

அலி மற்றும் சமிந்த கலும்பிரிய அமரசிங்க ஆகியோரின் வெளிநாட்டு பயணத்தை இடைநிறுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க நேற்று உத்தரவிட்டுள்ளார்.

கறுவாத்தோட்ட பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய, பிரதான நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பிரகாரம், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட டானிஷ் அலியை எதிர்வரும் 1ஆம் திகதி

நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவிடப்பட்டது.சந்தேக நபரின் அடையாளப் பிடியாணையையும் பிரதம நீதவான் இரத்துச் செய்தார்.

அத்துடன், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் முன்னாள் அழைப்பாளர் லஹிரு வீரசேகர மற்றும் டெம்பிடியே சுகதானந்த

தேரரையும் கைது செய்வதற்காக கோட்டை நீதவான் திலின கமகே பிடியாணை பிறப்பித்துள்ளார்.

கல்வி அமைச்சுக்கு முன்னால் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது அங்கு சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பாக கைது செய்யப்பட்ட

ருஹுணு பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவர் என்னடி வேரங்க புஷ்பக டி சில்வாவை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, பாராளுமன்றம் செல்லும் பொல்துவ சந்திக்கு அருகில் (13ஆம் திகதி) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலவரச் சூழலுக்கு தூண்டியதாக

கூறப்படும் போராட்டத்தின் தீவிர உறுப்பினரான பெத்தும் கர்னர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (28ஆம் திகதி) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் பிரதமரை வெளியேறுமாறு வலியுறுத்தி பொல்துவ சந்திக்கு அருகில் போராட்டம் நடைபெற்றுக்

கொண்டிருந்த வேளையில் பெரும் கும்பலை அந்த இடத்திற்கு வரவழைத்து பாராளுமன்றத்தை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு குறிப்பிடுகின்றது.

அன்றைய தினம், ஆர்ப்பாட்டக்காரர்கள் முதலாவது பாதுகாப்பு அரணை உடைத்து, இரண்டாவது பாதுகாப்பு வேலியில் கடமையாற்றிய இராணுவத்தின் பாதுகாப்புப் படையினருடன் மோதலுக்குச் செல்ல முற்பட்டுள்ளனர்.

அங்கு நிலைமையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க நடவடிக்கை

எடுத்ததுடன், அங்கு 24 பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தாக்கப்பட்டனர். மேலும், போராட்டக்காரர்கள் இரு இராணுவ வீரர்களை தாக்கி அவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகளையும் திருடிச் சென்றதாக தெரிவிக்பட்டது

இச்சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக திரு.பெத்தும் கெர்னர் கடந்த 18ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த

போதிலும், அவர் அன்றைய தினம் அங்கு ஆஜராகாத போதிலும், நேற்றைய தினம் குற்றப் புலனாய்வு பிரிவிடம் சரணடைந்தார்.

அதன்படி அவர் கைது செய்யப்பட்டதாக அந்த பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இராணுவ மருத்துவப் பிரிவில் லெப்டினன்டாக இருந்து வெளியேறி இங்கிலாந்து சென்றுள்ள இவர், அங்கிருந்து இலங்கையில் இளம் சமூகத்தை

இணையத்தில் போராட்டத்துக்கு தூண்டிவிட்டு வருவது தெரியவந்துள்ளது. காலி முகத்திடல் போராட்டம் ஆரம்பமானதும், இந்நாட்டிற்கு வந்த பெத்தும் கெர்னரை


போராட்ட களத்தில் இருந்து விரட்டியடிக்க அங்கிருந்த ஒரு குழுவினர் செயற்பட்டுள்ளனர்.

    Posted in இலங்கை செய்திகள்

    பாராளுமன்றம் செல்லும் சாலைகள் அடித்து பூட்டு

    பாராளுமன்றம் செல்லும் சாலைகள் அடித்து பூட்டு

    இலங்கை பாராளுமன்றத்திற்குள் நுழையும் சாலைகள் இரு நாட்களுக்கு தடை செய்ய பட்டுள்ளது ,


    போராட்ட காரர்கள் உள்நுழைய கூடும் என்ற காரணத்தால் இந்த முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக


    இந்த தடையினை போலீசார் விதித்துள்ளனர்

      Posted in Uncategorized உலக செய்திகள்

      மேற்கு நாடுகளின் பொருளாதார தடை தோல்வி – புட்டீன் நக்கல்

      மேற்கு நாடுகளின் பொருளாதார தடை தோல்வி – புட்டீன் நக்கல்

      உக்கிரேன் மீது போரினை நடத்தி வரும் ரசியா மீது மேற்குலக நாடுகளின் கூட்டணி பொருளாதார தடையினை விதித்தன

      இந்த தடை உத்தரவினால் தமக்கு எவ்வித இழப்பும் ஏற்படவில்லை எனவும், அதனால்

      அவர்கள் தோல்வியை தழுவியுள்ளதகாக ரசியா அதிபர் புட்டீன் கம்பிரமாக தெரிவித்துள்ளார்

      ரஷியாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட முக்கிய நாடுகள் அதிக அளவான எரிவாயு

      மற்றும் எரிபொருளை கொள்வனவு செய்து வருகின்றன

      இதனால் அமெரிக்கா சீற்றம் அடைந்தது ,இந்த நிலையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டு மேற்குலக நாடுகள் ,


      மற்றும் அவர்கள் கூட்டணிக்கு கடுப்பை கிழப்பியுள்ளன

        Posted in இலங்கை செய்திகள்

        முன்னாள் மதியவங்கி ஆளுநர் நாட்டை விட்டு செல்ல நீதிமன்றம் தடை -சிக்கலில் கோட்டா

        முன்னாள் மதியவங்கி ஆளுநர் நாட்டை விட்டு செல்ல நீதிமன்றம் தடை -சிக்கலில் கோட்டா

        முன்னாள்
        மத்திய வாங்கி ஆளுநர் Ajith Nivard நாதரை விட்டு செல்ல எதிர்வரும்

        பதினெட்டாம் திகதிவரை தடை விதிக்க பட்டுள்ளது


        நாடு பெரும் பொருளாதாரா சீரழிவை சந்திக்க இவரே காரணமாக இருந்தார்

        என தெரிவித்து நீதிமன்றில் வழக்கு தொடர பட்டுள்ளது

        இவ்வேளையே இந்த இடைக்கால தடை விதிக்க பட்டுள்ளது ,இவர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டால் ஆளும் மகிந்தா


        ,கோட்டா சகோதர்கள் பெரும் நெருக்கடியில் சிக்குவார்கள் என தெரிவிக்க படுகிறது

          Posted in Uncategorized

          சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தற்காலிக தடை

          சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தற்காலிக தடை

          வெல்லவாய – வெலியார பிரதேசத்திற்கு சுற்றுலாப் பிரயாணிகள் செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெல்லவாய பிரதேச சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

          குறித்த பிரதேசத்திற்கு கடந்த சில தினங்களில் சென்ற சிலர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதன் காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

          சுற்றுலா செயற்றிட்டத்தின் கீழ் பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்ட பின்னர் குறித்த பிரதேசம் மீண்டும் சுற்றுலாப் பிரயாணிகளுக்குத் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்

            Posted in Uncategorized

            இலங்கைக்கு விதிக்க பட்ட தடைகள் நீக்கம்

            இலங்கைக்கு விதிக்க பட்ட தடைகள் நீக்கம்

            இலங்கை அரசுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் விதித்த தடைகள் நீக்க பட்டுள்ளன ,


            இந்த தடை நீக்கத்தை அடுத்து இலங்கை உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த பயணிகள்; குறித்த நாட்டுக்கு பயணிக்கலாம் என அறிவிக்க பட்டுள்ளது

              Posted in இலங்கை செய்திகள்

              இலங்கையில் இருந்து பகரைனுக்கு வேலைக்கு செல்ல தடை

              இலங்கையில் இருந்து பகரைனுக்கு வேலைக்கு செல்ல தடை

              இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து
              பகரைனுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு தற்காலிக தடை விதிக்கபட்டுள்ளது

              இவர்களுக்கு வேலை செய்திடும் அனுமதி சான்றிதழ்கள்இரத்து செய்ய பட்டுள்ளன

              இந்த தடைகளினால் இலங்கை பெரும் பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ளது

                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கையர்கள் குவைத்துக்கு செல்ல தடை

                இலங்கையர்கள் குவைத்துக்கு செல்ல தடை

                இலங்கை மக்கள் குவைத் நாட்டுக்கு செல்ல குவைத் அரசு தடை விதித்துள்ளது .இலங்கையில்

                பரவி வரும் கொரனோ தாக்குதலை அடுத்து இந்த இடைக்கால பயண தடை விதிக்க பட்டுள்ளது

                Posted in இலங்கை செய்திகள்

                இந்தியர்கள் இலங்கை வர முற்றாக தடை

                இந்தியர்கள் இலங்கை வர முற்றாக தடை

                இந்தியர்கள் இலங்கைக்குள் நுழைவதற்கு முற்றாக தடை விதிக்க பட்டுள்ளது ,அவ்வாறு மீறி

                நுழைபவர்கள் செய்ய படுவார்கள் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

                இந்தியாவில் அதிகமாக நோயானது பரவி வருவதால் இந்த இடைக்கால பயண தடை விதிக்க

                பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                  Posted in Uncategorized

                  பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கின் அடுத்தகட்ட தீர்ப்பு வருகின்றது !

                  விடுதலைப் புலிகள் மீதான தடை

                  தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான சட்டப்போராட்டத்தின் அடுத்த கட்ட தீர்ப்பினை நாளை வியாழக்கிழமை ( 18-02-2021) எதிர்பார்த்திருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

                  இது தொடர்பிலான இணையவழி ஊடக சந்திப்பொன்று பிரித்தானிய நேரம் மாலை 3 மணிக்கு நாடுகடந்த தமிழீழ

                  அரசாங்கத்தின் www.tgte.tv வலைக்காட்சி வழியே காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

                  தடைசெய்யப்பட்ட அமைப்பு மேல்முறையீடு

                  தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையத்திடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடுத்திருந்த சட்டப்போராட்டத்தின் முதல்கள வெற்றியாக, பயங்கரவாத

                  தடைப்பட்டியலில் விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் வைத்திருக்கும் பிரித்தானிய உள்துறையமைச்சரின் செயல்

                  சட்டமுறைமைக்கு முரணானது என ஆணையம் தனது தீர்ப்பில் (ஒக்ரோபர் 21-2020) முன்னராக தெரிவித்திருந்தது.

                  முதல் தீர்ப்பு

                  முதல் தீர்ப்பு தொடர்பில் தீர்ப்பு வெளிவந்து அடுத்து வருகின்ற 28 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக ஆணையத்திடமட் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற நிலையில், தமிழீழ

                  விடுதலைப்புலிகளை தடைநீக்கம் செய்யும் ஆணையை, உள்துறையமைச்சர் நாடாளுமன்றத்தில் முன்வைப்பது மட்டுமே

                  அடுத்த நடவடிக்கை

                  உரிய அடுத்த நடவடிக்கையாக அமையவேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது வாதுரையில் தெரிவித்திருந்தது.

                  இதேவேளை பிரித்தானிய அரச தரப்பும் தமது வாதுரைகளை ஆணையத்திடம் எழுத்துமூலமாக முன்வைத்துருந்தது.

                  இந்நிலையில் நாளை வியாழக்கிழமை இரு தரப்பு வாதுரைகளின் அடிப்படையில் மேன்முறையீட்டு ஆணையம் தனது அடுத்த தீர்ப்பினை வழங்க இருக்கின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  புலிகள் தொடர்பாக பாராளுமன்றில் பேச தமிழர் எம்பிகளுக்கு தடை

                  புலிகள் தொடர்பாக பாராளுமன்றில் பேச தமிழர் எம்பிகளுக்கு தடை

                  இலங்கையின் தமிழர் தேசிய விடுதலைக்காக போராடிய மேதகு தலைவர் பிரபாகரன் தொடர்பாக இலங்கை பாரளுமன்றில் பேசுவதற்கு தடை

                  சட்டம் ஒன்றை கொண்டுவருவதற்கு ஆளும் கோட்டபாய அரசு நடவடிகை மேற்கொண்டு வருகிறது

                  மக்கள் தொடர்பாளராக நியமனம் பெற்றுள்ள முன்னாள் தமிழர் இனஅழிப்பை மேற்கொண்ட இராணுவ தளபதியே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்

                  இலங்கை பாரளுமன்றில் பேச தடை

                  ஜெர்மன் பாரளுமன்றில் ஹிட்லரை பற்றி பேசுவதற்கு தடைகள் உள்ளதாக கூறும் அவர் அதே போன்று இலங்கையிலும் இலங்கை

                  புலிகளினால் கடத்தபட்ட இலங்கை சோனகர்

                  இறையாண்மையையை ஏற்று வழிவந்தவர்கள் லட்ச கணக்கான மக்களை கொன்று குவித்த பிரபாகரன் தொடர்பாக பேசுவதற்கும் அருகதை அற்றவர்கள் என்கிறார்

                  எங்கே மக்கள் படுகொலை
                  ஆனல் எவ்விடத்தில் புலிகள் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தார் என்பதை அவர் தெரிவிக்காது மறைந்து தப்பி கொண்டார் ,அதன் ஆதாரங்களையும் காண்பிக்கவில்லை

                  இன அழிப்பு
                  ஆக 2009 ஆம் ஆண்டு இறுதி போரில் லட்ச கணக்கான ,தமிழர்களை கொன்று குவித்த மகிந்தா,கோட்டபாயாவின் அரச

                  பயங்கரவாத இனஅழிப்பு தொடர்பாக பேசுவதற்கு இலங்கையில் எந்த ஒரு சிங்கள குடிமகனோ அல்லாது அரசியல் வாதிகளோ தயராக இல்லை

                  சிங்கள அடக்குமுறை

                  புலிகள் தொடர்பிலான எவ்வித பேச்சுக்களும் மீள் எழுந்துவிடாது பலத்த அடக்குமுறை மேற்கொண்டு வருகிறது சிங்கள தேசம்,

                  இராணுவத்தை அரசு கட்டி கொடுக்காது பொன்சேகா

                  சர்வதேச ரீதியிலும் தமிழர்கள் புலிகளின் நினைவுகளை தாங்கி வணக்கம் செலுத்திட கூடாது என்பதிலும் மிக தீவிரம் காட்டுகிறது

                  எழுக தமிழ்

                  எனவே தமிழர்களே சிங்களத்தின் இந்த சூழ்ச்சிகளை உடைத்து எமது விடுதலை நோக்கி நகரவேண்டிய தருணம் இது

                  ஒன்று பட்டு வடம் இழுப்போம் ஆளும் சிங்கள அரச பயங்கரவாதத்தை உலகின் முன் இடித்து கூறுவோம்

                  Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

                  விடுதலை புலிகள் மீதான தடை அமெரிக்கா நீக்கும் நகர்வுகள் ஆரம்பம்

                  புலிகள் மீதான தடை நீக்க தயாரா கும் அமெரிக்கா -உள்ளே நடத்த படும் இராய தந்திர பேச்சுக்கள் -அடக்கப்படுமா இலங்கை அரச பயங்கரவாதம் ..?

                  உலக பயங்கரவாத அமைப்பாக தமிழீழ விடுதலை புலிகள் உள்ளனர் என கோரி இந்தியாவின் அழுத்தத்துடன் அமெரிக்கா தடை

                  உத்தரவை வெளியிட்டது ,புலிகள் அந்த தாய் மண்ணில் அழிக்க பட்டு பன்னிரெண்டு ஆண்டுகள் கழியும் நிலையில் ,ஐரோப்பிய நீதிமன்றங்கள் புலிகள் இல்லாத போது தடை ஏன் என கேள்வி

                  எழுப்பி ,அந்த தடையினை நீக்கிய நிலையிலும் ,குறிப்பிட்ட முக்கிய வல்லரசுகள்; உள்ளிட்டவை இதுவரை விதிக்க பட்ட தடையினை நீக்கவில்லை

                  இதன் கால சூழல் ,தற்பொழுது எமன் நாட்டில் இயங்கி வரும் கவுதி படைகள் மீது விதிக்க பட்ட பயங்காரவாத தடையினை அமெரிக்கா

                  நீக்கியுள்ள நிலையை போன்று புலிகள் மீதான தடையும் நீக்குவதற்குரிய பரிந்துரைகள் முக்கிய சில நாடுகள் ஊடக கோரப்பட்டுள்ளதாம்

                  அவ்வாறு அமெரிக்கா தடையினை நீக்கினாலே புலிகள் அமைப்பு பலமாக வெளி நாடுகளில் ஒரு நிழல் அரசை அமைத்து இயங்கும்

                  நிலையை இது உருவாக்கிவிடும் ,அதனை செய்திடவே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நெருங்கி வருகின்றன

                  இலங்கை அரசின் சீனாவுடனான நெருங்கிய உறவும் ,அதனால் எழப்போகும் பேரா பத்தையும் கருத்தில் கொண்டு இந்த நகர்வுகள்

                  நிழல் ஆட்ட படுகின்றன ,இது இலங்கையை அடிபணிய வைக்குமா இல்லை மேலும் நெருங்க வைக்குமா …?

                  கோட்டா,மகிந்த சகோதரர்கள் ஆட்சியில் இந்த விடயங்கள் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தும் என பர பரப்பாக எதிர் பார்க்க படுகிறது

                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கையில் 19 மாவட்டங்களில் -10 மணித்தியாலம் தாற்காலிகமாக ஊரடங்கு அகற்றல்

                  இலங்கையில் 19 மாவட்டங்களில் -10 மணித்தியாலம் தாற்காலிகமாக ஊரடங்கு அகற்றல்

                  இலங்கையில் பத்தொன்பது மாவட்டங்களில் தற்காலிகமாக பத்து மணித்தியாலங்கள்

                  வரை ஊரடங்கு அகற்ற பட்டு இருக்கும் என இராணுவம் அறிவித்துள்ளது

                  கண்டி ,யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகள் இதில் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது ,


                  இவ்வேளை மக்கள் சென்று தமக்கு வேண்டிய பொருட்களை மற்றும் அத்தியாவசிய

                  முதன்மை விடயங்களை செய்திடவே இந்த அறிவிப்பு நடைமுறை படுத்த பட்டுள்ளது

                  மக்கள் முண்டியடித்த படி வீதிகள் செல்வதை காண முடிகிறது ,வீதி போக்குவரத்து

                  கண்காணிப்பில் போலீசார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்

                  இலங்கையில் 19 மாவட்டங்களில்
                  இலங்கையில் 19 மாவட்டங்களில்
                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கை பயணிகள் விமானங்கள் வெளி நாடுகளுக்கு பறக்காது

                  இலங்கை பயணிகள் விமானங்கள் வெளி நாடுகளுக்கு பறக்காது

                  இலங்கை அரசிக்கு சொந்தமான எயார் லங்கா விமான சேவைகள் எதிர்வரும்

                  சித்திரை முப்பதாம் திகதி வரை பறப்பில் ஈடுபடாது எனவும் ,திட்டமிட்ட

                  படி தொடர்ந்து சரக்கு விமானங்கள் மட்டும் சேவையில் இருக்கும் என குறித்த விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது

                  இதனடிப் படையில் இவைகள் இடம் பெறும் எனவும் ,முப்பதாம் திகதி

                  தமது மறு அறிவித்தலில் இது தொடர்பான விடயங்கள் தெரிய படுத்த படும் என மேலும் கூறப்பட்டுள்ளது

                  வெளிநாடுகள் சென்ற இலங்கையர்கள் விமானிகள் இன்றி பெரிதும் சிக்கி தவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                  இலங்கை பயணிகள்
                  இலங்கை பயணிகள்