பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான ASLAT கொழும்பு துறைமுகத்தில்
Posted in இலங்கை செய்திகள்

பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான ASLAT கொழும்பு துறைமுகத்தில்

பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான ASLAT கொழும்பு துறைமுகத்தில்

பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான ASLAT கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.

இலங்கை கடற்படையால் கடற்படை மரபுகளுக்கு இணங்க இந்த கப்பல் வரவேற்கப்பட்டது. PNS ASLAT கப்பல், முகமது அசார் அக்ரம் தலைமையிலான 123 மீட்டர் நீளமுள்ள ஒரு போர்க்கப்பலாகும்.

பயணப் பயிற்சி இந்தக் கப்பலில் 243 பேர் கொண்ட குழுவினர் பணியாற்றுகின்றனர். கொழும்பில் கப்பல் தங்கியிருக்கும் போது, அதன் பணியாளர்கள் நாட்டின் சில சுற்றுலா தலங்களைப் பார்வையிடுவார்கள் என்று இலங்கையின் கடற்படை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் பிஎன்எஸ் ASLAT 2025 பெப்ரவரி 4 ஆம் திகதியன்று இலங்கையை விட்டு புறப்படும் இதன்போது, கொழும்பு கடலில் இலங்கை கடற்படையின் ஒரு கப்பலுடன் ஒரு பயணப் பயிற்சியை பாகிஸ்தானிய கப்பல் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி கொழும்பு வீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள்
Posted in இலங்கை செய்திகள்

கண்டி கொழும்பு வீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள்

கண்டி கொழும்பு வீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள்

கண்டி கொழும்பு வீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் ,நிட்டம்புவ ஸ்ரீ விஜேராமய விகாரையில் வருடாந்த “துருது நத” மகா பெரஹெர ஊர்வலம் காரணமாக வீதி போக்குவரத்து மட்டுப்பாடு தொடர்பில் பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

அதன்படி, நாளை (24) இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பெரஹெர ஊர்வலம் இடம்பெறவுள்ளது.

இந்த ஊர்வலம் நிட்டம்புவ அத்தனகல்ல வீதியில் உள்ள களுவாகஸ்வில ஸ்ரீ விஜயராமய விகாரையில் இருந்து தொடங்கி, நிட்டம்புவ நகரத்தை அடைந்து, இடதுபுறம் திரும்பி

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கொழும்பை நோக்கிச் சென்று, வால்வத்த சந்தியில் வலதுபுறம் திரும்பி ஸ்ரீ போதி விகாரையை சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது.

பெரஹெர நிகழ்வைக் காண ஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கண்டி-கொழும்பு பிரதான வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, நிட்டம்புவ நகரத்திலிருந்து மல்வத்த சந்தி வரையிலான வீதியின் ஒரு வழித்தடம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு கொழும்பு-நோக்கியும், கண்டி நோக்கியும் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் அனுமதி
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் அனுமதி

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் அனுமதி

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் அனுமதி ,கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் விடுவிப்பில் ஏற்படும் தாமதங்களை முடிவுக்குக் கொண்டுவர இலங்கை சுங்கம் ஒரு விசேட திட்டத்தை தொடங்கியுள்ளது.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த திட்டம் தொடங்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்தார்.

நேற்றைய (13) நாளின் நிலவரப்படி, கொழும்பு துறைமுகத்திலிருந்து 459 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, RCT, கிரேலைன் 1 மற்றும் 2 பிரிவுகளில் இருந்து 242 கொள்கலன்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டன.

சுங்கத்துறை நாளொன்றுக்கு சுமார் 500 கொள்கலன்களை சோதனை செய்து விடுவிக்க முடியும் என்றாலும், அனுமதி வழங்கும் முகவர்கள் மற்றும் கொள்கலன் லொறி சாரதிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் விடுவிக்கக்கூடிய கொள்கலன்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாக சுங்கத்துறை குறிப்பிட்டுள்ளது.

video

இன்று (14) காலை நிலவரப்படி, நுழைவாயில் அனுமதி வழங்கப்பட்ட போதிலும், 496 கொள்கலன்கள் துறைமுகத்தில் உள்ளன, ஆனால் இன்னும் சரக்கு சோதனை நிறைவடைந்து அவைகள் விடுவிக்கப்படவில்லை.

இன்று விடுமுறை நாளாக இருந்தாலும், சுங்கம் மற்றும் பிற தொடர்புடைய அரசு நிறுவனங்கள் கொள்கலன்களை விடுவிக்கும் பணியில் ஈடுபடும் என்று சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தின் ஒப்பந்தத்திலிருந்து விலகிய அதானி நிறுவனம்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு துறைமுகத்தின் ஒப்பந்தத்திலிருந்து விலகிய அதானி நிறுவனம்

கொழும்பு துறைமுகத்தின் ஒப்பந்தத்திலிருந்து விலகிய அதானி நிறுவனம்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை மேம்படுத்துவதற்காக அமெரிக்காவுடனான 553 மில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் இருந்து அதானி குழுமம் விலகியுள்ளது.

அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானி மீது அமெரிக்க சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்த பின்னணியில் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அந்த நிறுவனம் விலகியுள்ளது.

இருப்பினும், மேற்கு முனையத்தின் அபிவிருத்தியை அதானி குழுமம் அதன் உள் மூலதன கையிருப்பைப் பயன்படுத்தி மேற்கொள்ளவுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்காக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனம் எதிர்பார்த்திருந்த 553 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தம் கைவிடப்பட்டுள்ளதாக அதானி துறைமுகங்கள் மற்றும் விசேட பொருளாதார வலய நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதானி குழுமம் தனது உள் மூலதன இருப்புக்களை கொழும்பு மேற்கு சர்வதேச முனைய திட்டத்திற்கு பயன்படுத்தவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்காக நிறுவப்பட்ட நிறுவனத்தின் பெரும்பங்கு அதானி குழுமத்திற்கு சொந்தமானது.

இந்த திட்டத்திற்கு நிதியுதவி அளிக்க அமெரிக்கா கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்தது.

ஆனால் அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானி மீது அமெரிக்க அமெரிக்க சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ததால், அதற்கான நிதி உதவி பெறுவதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டது.

இத்தகைய பின்னணியில், உரிய கடன் ஒப்பந்தத்தில் இருந்து அதானி குழுமம் விலகியுள்ளது.

கொழும்பு-கேகேஎஸ் ரயில் சேவை இன்று மீண்டும் ஆரம்பமானது
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு-கேகேஎஸ் ரயில் சேவை இன்று மீண்டும் ஆரம்பமானது

கொழும்பு-கேகேஎஸ் ரயில் சேவை இன்று மீண்டும் ஆரம்பமானது

கொழும்பு-கேகேஎஸ் ரயில் சேவை இன்று மீண்டும் ஆரம்பமானது ,வடக்கு புகையிரத பாதையின் புனரமைக்கப்பட்ட மஹவ – அனுராதபுரம் பகுதி மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், கொழும்பு கோட்டையில் இருந்து

காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவைகள் இன்று (28) மீள ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

பராமரிப்பு மற்றும் நவீனமயமாக்கல் பணிகள் காரணமாக பல மாதங்களாக இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மீண்டும்

ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பிரதிப் பணிப்பாளர் எம்.ஜே.இண்டிபோலகே தெரிவித்தார்.

மஹவ மற்றும் அநுராதபுரத்திற்கு இடையிலான புகையிரத பாதை நவீனமயப்படுத்தப்பட்டதன் பின்னர் கொழும்பு கோட்டையிலிருந்து

காங்கேசன்துறை வரையிலான புகையிரத நேரம் மாற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இன்று முதல் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை மற்றும் அனுராதபுரத்திற்கு இரண்டு புகையிரத பயணங்களும், கொழும்பு

கோட்டையில் இருந்து காலை 5:45 மணிக்கு ஒரு புகையிரதமும், இரவு 7:45 மணிக்கு மற்றுமொரு புகையிரதமும் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார். தயார் செய்யப்பட்டுள்ளன.

காங்கசந்துறை மற்றும் அனுராதபுரத்திலிருந்து கொழும்பு கோட்டை வரை இன்று முதல் இரண்டு ரயில் பயணங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கோட்டை-திருகோணமலை மற்றும் கோட்டை-மட்டக்களப்பு புகையிரதங்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கோட்டையில் இருந்து காலை 6:05 மணிக்கு புறப்படும் ரயில் 12:38 மணிக்கு திருகோணமலை சென்றடையும் என்றும் அவர் குறிப்பிட்டார். மற்றும் 1:30

மணிக்கு திருகோணமலையில் இருந்து புறப்படும் ரயில். 7:59க்கு கொழும்பை சென்றடையும்.

கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு வரை இரண்டு புகையிரத பயணங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அந்த ரயில்கள் காலை 6:50 மற்றும் மாலை 3:15 மணிக்கு கோட்டையில் இருந்து புறப்படும் எனவும் அவர் கூறினார்.

மற்றும் மட்டக்களப்பில் இருந்து கோட்டை வரை இரண்டு ரயில் பயணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

புகையிரத சேவைகள் மீளமைக்கப்படும் அதேவேளை, புகையிரத கடவைகளுக்கு பாதுகாப்பு கதவுகள் பொருத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

கடவுப்பாதைகளில் எச்சரிக்கையாக இருக்கவும், பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவும் ரயில்வே துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.

கொழும்பு உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு

கொழும்பு உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு

கொழும்பு உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு ,ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளைப் அளிக்க முடியும்.

இதன்படி இன்று காலை 10 மணி வரையான காலப்பகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,

களுத்துறை – 32%
கம்பஹா – 25%
கேகாலை – 15%
நுவரெலியா – 30%
இரத்தினபுரி – 20%
அம்பாறை- 30%
மன்னார்- 29%
முல்லைத்தீவு – 25%
வவுனியா – 30%
கொழும்பு – 20%
கண்டி – 20%
காலி – 18%
மாத்தறை – 30%
மட்டக்களப்பு – 17%
குருநாகல் – 30%
பொலனறுவை – 38%
மொனராகலை – 21%
பதுளை – 21%
மாத்தளை – 22%
ஹம்பாந்தோட்டை – 25%
யாழ்ப்பாணம் – 22%
கிளிநொச்சி – 27%
புத்தளம் – 23%
அனுராதபுரம் – 30%
திருகோணமலை – 30%

கொழும்பு வீதியில் விபத்தில் சிக்கியவான்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு வீதியில் விபத்தில் சிக்கியவான்

கொழும்பு வீதியில் விபத்தில் சிக்கியவான்

கொழும்பு வீதியில் விபத்தில் சிக்கியவான் ,விபத்தில் சிக்கிய வான் மக்கள் காயம் ,

இலங்கை ஹரனையில் இருந்து நோக்கி பயணித்த வான் ஒரு சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது .

விபத்துக்குள்ளான வான் தற்பொழுது மீட்க்கப்பட்டுள்ளது .

கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

கொழும்பு பிரதான வீதியில்

கார் விபத்துக்குள்ளானதாக கொழும்பு பிரதான வீதியில் வைத்த பகுதியில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

காரின் சாரதி துவங்கியதால் கட்டுப்பாட்டை இழந்து வான் விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நெடுந்தூரம் பயணிக்கின்ற வானை ஓட்டி செல்லும் சாரதிகள் தூக்கமடைந்து வருவதால் இவ்வாறான விபத்துக்கள் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் நாள்தோறும் இடம்பெறும் விபத்து க்கள் சாரதிகள் அலட்சிய போக்கும் அவர்கள் விதிமுறைகளை மீறி விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனங்களை செலுத்துவதாலேயே இந்த விபத்துக்கள் அதிகமாக ஏற்படுவதாக போலீசார் தெரிவித்து வருகின்றனர் .

தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இவ்வாறான விபத்துகளை தடுக்க போலீசார் தற்பொழுது மேலதிக நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிய வருகிறது.

வீழ்ந்து நொறுங்கிய விமானம் விமானி பலி
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு மும்பை இடையே விமான சேவை

கொழும்பு மும்பை இடையே விமான சேவை

இந்தியாவின் இண்டிகோ எயார்லைன்ஸ் கொழும்பு மற்றும் மும்பை இடையே நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

வாரத்திற்கு மூன்று தடவைகள் இந்த விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

தற்போது சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத்திலிருந்து கொழும்பிற்கு இண்டிகோ எயார்லைன்ஸ் மூலம் நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன.

விமானங்களின் எண்ணிக்கை மற்றும் பயணிகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், இண்டிகோ எயார்லைன்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமாக கருதப்படுகிறது

அக்கரைப்பற்று கொழும்பு பஸ் விபத்து பலர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று கொழும்பு பஸ் விபத்து பலர் காயம்

அக்கரைப்பற்று கொழும்பு பஸ் விபத்து பலர் காயம்

கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணிகளை ஏற்றி சென்ற அதிசொகுசு பஸ் இன்று (30) அதிகாலை, மட்டக்களப்பு ஆரையம்பதி 4 ஆம் கட்டை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது

இந்த விபத்தில் சிக்கி, பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதோடு, சில வர்த்தக நிலையங்கள் பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளன.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 4 ஆம் கட்டை பகுதியிலே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சொகுசு பஸ் அதிகாலை 3.30 மணியளவில் 4 ஆம் கட்டை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள வர்த்தக நிலையங்கள் பலவற்றை உடைத்தெறிந்துள்ளது.

இந்த விபத்துச் சம்பவத்தின் போது சாரதி உட்பட்ட பலர் பலத்த காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சாரதியின் தூக்கக் கலக்கமே விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

கொழும்பு புறநகர் பகுதிகளில் McDonalds இயங்கத் தடை
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு புறநகர் பகுதிகளில் McDonalds இயங்கத் தடை

கொழும்பு புறநகர் பகுதிகளில் McDonalds இயங்கத் தடை

McDonald’s வர்த்தக நாமத்தின் கீழ் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் 12 உணவகங்கள் இயங்குவதற்கு தடை விதித்து கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அவர்களது உடன்படிக்கைகளில் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பில் ஆதார நிறுவனம் முறைப்பாடு செய்ததை அடுத்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மக்டொனால்ட் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், பெயர் பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடக பாவனையாளர்கள் பலரும் பதிவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை மகன் பலி தாய்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை மகன் பலி தாய்

கொழும்பு மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை மகன் பலி தாய்

வைத்தியசாலையில்… கொழும்பு ஹைலெவல் வீதியின் கொஸ்கம மிரிஸ்வத்த பகுதியில் நேற்று (08) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த சீமெந்து ஏற்றிய லொறி ஒன்று டயர் வெடித்து வீதியை விட்டு விலகி எதிர் திசையில் ஓடி மோட்டார் சைக்கிளில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பு மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை மகன் பலி தாய்

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த தாய் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொஸ்கம, அலுபோடல பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய தந்தையும் 8 வயது சிறுவனும் உயிரிழந்துள்ளனர்.

லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவின் இரண்டு கரையோர பாதுகாப்பு கப்பல்கள் கொழும்பு வருகை
Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவின் இரண்டு கரையோர பாதுகாப்பு கப்பல்கள் கொழும்பு வருகை

இந்தியாவின் இரண்டு கரையோர பாதுகாப்பு கப்பல்கள் கொழும்பு வருகை

இந்தியாவின் இரண்டு கரையோர பாதுகாப்பு கப்பல்கள் காலி மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கு சுற்றுலா மேற்கொள்வதற்காக வந்துள்ளன.

இந்தியாவின் கரையோர பாதுகாப்பு படைப்பிரிவிற்கு சொந்தமான சமர்த் எனும் கடல்சார் கண்காணிப்பு கப்பலும், அபினவ் எனப்படும் அதிவேக கண்காணிப்பு கப்பலும் வந்துள்ளன.

இந்தியாவின் இரண்டு கரையோர பாதுகாப்பு கப்பல்கள் கொழும்பு வருகை

இந்த கப்பல்கள் நேற்று முன்தினம் காலி துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இவை மார்ச் முதலாம் திகதி வரை காலியில் தரித்திருக்கவுள்ளன என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக, மார்ச் 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளன.

இந்திய கரையோர பாதுகாப்பு கப்பல்கள் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் தீயணைப்பு, சேதங்களைக் கட்டுப்படுத்துதல், சமுத்திர பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான பயிற்சிகளை வழங்குதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளன

கொழும்பில் உள்ள சிசிரிவி போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

கொழும்பில் உள்ள சிசிரிவி போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம்

கொழும்பில் உள்ள சிசிரிவி போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம்

கொழும்பில் உள்ள சிசிரிவி அமைப்பின் மூலம் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் நபர்கள் அடையாளம் காணும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இவ்வாறு போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் நபர்கள் அடையாளம் காணப்பட்டு அபராத சீட்டு வாகன உரிமையாளருக்கு அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வீடியோ

கொழும்பு முகத்திடலில் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு முகத்திடலில் சடலம் மீட்பு

கொழும்பு முகத்திடலில் சடலம் மீட்பு

புத்தளம் கொழும்பு முகத்திடலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்படுதை அவதானித்த பொதுமக்கள் புத்தளம் தலைமையகப் பொலிஸாருக்குத் தகவலை வழங்கியுள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தைப் பார்வையிட்டதோடு, பிரேத பரிசோதனைக்காக சடலத்தை புத்தளம் தள வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது

வீடியோ

கொழும்பு துறைமுக நகரில் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு துறைமுக நகரில் சடலம் மீட்பு

கொழும்பு துறைமுக நகரில் சடலம் மீட்பு

கொழும்பு துறைமுக நகரின் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கொழும்பு துறைமுக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (23) பிற்பகல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இறந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு துறைமுக நகரில் சடலம் மீட்பு

இந்த நபர் 40 முதல் 45 வயதுடையவர் எனவும் 5 அடி 8 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர் இறுதியாக நீல நிற டெனிம் காற்சட்டையை அணிந்திருந்தாக குறிப்பிடப்படுகிறது.

தற்போது சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கொழும்பு ரயில் சேவைகள் இரத்து
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு ரயில் சேவைகள் இரத்து

கொழும்பு ரயில் சேவைகள் இரத்து

மலையக ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவின் காரணமாக கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் இடம்பெறவிருந்த பல ரயில் சேவைகள் இன்று(05) இரத்து செய்யப்பட்டுள்ளன.

நாவலப்பிட்டி மற்றும் ஹட்டனுக்குமிடையிலான ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவே இதற்கு காரணம்.

இதற்கமைவாக கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு காலை 5.55மணி, 8.30மணி மற்றும் 9.45 மணிக்குக்கு சேவையில் ஈடுபடவிருந்த ரயில்களும்,

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு காலை 5.45மணி,
8.30மணி மற்றும் 10.15மணிக்கு புறப்படவிருந்த ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

    Posted in இலங்கை செய்திகள்

    கொழும்பில் குவிக்க படும் ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார்

    கொழும்பில் குவிக்க படும் ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார்

    கொழும்பு பகுதி எங்கும் பாதுகாப்பை பலப் படுத்தும் நோக்கில் ஆயிரத்திற்கு மேற்பட்ட

    போலீசார் வரவழைக்க பட்டு வீதி ரோந்து மற்றும் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்த உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது

    ஆளும் அரசுகளுக்கு எதிராக முன்னெடுக்க படும் போராட்டங்கள் காரணமாக வன்முறைகள் வெடிக்கலாம் என்பதாலும் ,


    அந்த மக்களை அடக்கி ஒடுக்கவும் இந்த போலீசார் இவ்விதம் அழைக்க பட்டுள்ளனர்.

      Posted in இலங்கை செய்திகள்

      கொழும்பில் இடம்பெற்ற வன்முறை காட்சிகள் – எரிக்க பட்ட வாகனங்கள் – படங்கள் உள்ளே

      கொழும்பில் இடம்பெற்ற வன்முறை காட்சிகள் – எரிக்க பட்ட வாகனங்கள் – படங்கள் உள்ளே

      இலங்கை கொழும்பு பகுதி எங்கும் இடம்பெற்ற வன்முறையில் அரச மற்றும் தனியார் வாகனங்கள் எரியூட்ட பட்டுள்ளன.


      மேலும் ஆற்றுக்குள்ளும் வாகனங்கள் தூக்கி எறியப்பட்டுள்ளன.

      பதவி விலக மறுத்து வரும் சகோதர்ரகள் அரக்க குணத்தினால் இந்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.


      தொடர்ந்து இராணுவம் குவிக்க பட்டுள்ளதால் , பதட்டம் தொடர்கிறது.

        Posted in Uncategorized

        இலங்கை வந்தடைந்த இந்தியா எண்ணெய் கப்பல்

        இலங்கை வந்தடைந்த இந்தியா எண்ணெய் கப்பல்

        இலங்கைக்கு இந்தியா தொடரந்து அவசர உதவிகளை வழங்கிய வண்ணம் உள்ளது

        ,கொழும்பு துறைமுகத்திற்கு 440,000 மெட்ரிக் தொன் எடையுள்ள எண்ணெய்களை

        தாங்கிய வண்ணம் இந்த கப்பல் வந்தடைந்துள்ளது

        சமீப காலங்களாக இலங்கைக்கு இந்தியா அவசர வசர உதவிகளை வழங்கியவண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

          Posted in Uncategorized

          கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி எதிரணியில் போராட்டம்

          கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி எதிரணியில் போராட்டம்

          இலங்கையில் ஆளும் ராஜபக்ஸ குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்கள் 22 நாளாக

          போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் ,இவ்வேளை ஐக்கிய மக்கள் சக்தியினர் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி


          பெரும் பேரணி ஒன்றை நடத்திய வண்ணம் உள்ளனர்

          இந்த பேரணி இரண்டாவது நாளாக தொடர்ந்த வண்ணம் உள்ளது