Posted in இலங்கை செய்திகள்

இராணுவம் தயார்நிலையில் – இராணுவத் தளபதி

இராணுவம் தயார்நிலையில் – இராணுவத் தளபதி

இலங்கை இராணுவம் பல்வேறு பயிற்சித் தொகுதிகள் மற்றும் பயிற்சிகளையும் அறிமுகப்படுத்தும் அதேவேளை நடைமுறைக்கு உகந்த வகையிலான மிக உயரிய போர்த் தயார்நிலையைகளைப் பேணுகிறது. எல்.ரீ.ரீ.ஈ உடனான மூன்று தசாப்த கால மோதலின் போது பெறப்பட்ட சொந்த அனுபவங்களின் அடிப்படையில் திறனமிக்க நவீன போர் நுட்பங்களுடனான எந்தவொரு சந்தர்ப்பங்களிலும் சவால்களை எதிர்கொள்ளத் தயாராகிவருகிறது.

போர் அல்லது சமாதானம் உள்ளிட்ட எந்தவொரு சந்தர்ப்பங்களிலும் ஒரு சிப்பாய் எப்போதும் தோற்கடிக்க முடியாத சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் நவீன எதிரிகள் வழக்கத்திற்கு மாறானவர்கள், குறிப்பாக அவர்களின் சிறிய செயற்பாடுகள், மிகப்பெரிய பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடியவை.

அதேபோல் 20 ஆம் நூற்றாண்டில் நாடுகளுக்கிடையில் ஏற்படக்கூடிய மோதல்களானது அந்த நாடுகளுக்குள் பிளவுகளை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளதை போன்றே மற்றைய நாடுகளுக்கும் சிக்கல்களை தோற்றுவிக்க கூடியதாக உள்ளது.

இராணுவ அழுத்தமானது அதிக சவால் நிலைமைகளாக காணப்படும் பொருளாதார, இராஜதந்திர மற்றும் உளவியல் நெருக்கடிகள் ஆகியவற்றுடன் பிணைந்ததாக காணப்படுகிறது. அடிப்படைவாதம் மற்றும் கருத்தியல் அடிப்படையிலான மோதல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். குறிப்பாக நவீன எதிரிகளை பொறுத்தவரையில் நபர்கள் மற்றும் ஆயுதங்களை விடவும் அவர்கள் கையாளும் வழிமுறைகள் மிகவும் சிக்கலான வகையில் அமைந்துள்ளன என்று பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் 08.12.2021 காலை சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் 15 ஆம் இலக்க பாடநெறியை பூர்த்தி செய்து ‘பிஎஸ்சி’ பட்டம் பெற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இளங்கலை அதிகாரிகளுக்காக நிகழ்த்திய உரையில் சுட்டிக்காட்டினார்.

‘சமகால பாதுகாப்பு பரப்பிற்குள் ஆயுதப்படைகளின் வகிபாகம்’ என்ற தொனிப்பொருளில் உரை நிகழ்த்தியிருந்த இராணுவத் தளபதி, இன்றைய பன்முக மற்றும் சிக்கலான பாதுகாப்பு சவால்களுக்கு முகம்கொடுப்பதற்கு இராணுவப் படைகளை நேரடியாகப் பயன்படுத்துவதை விட முறையான, விரிவான மற்றும் பின்னிப்பிணைந்த அணுகுமுறைகள் மற்றும் கட்டமைக்கப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்றார்.

“பாதுகாப்பு சார் சூழ்நிலைகள் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது, அதனால் நேரடியான தீர்மானங்களை எடுப்பது கடினமாக அமைந்துள்ளது. எனவே, முன்னைய அனுபவத்தை வைத்து அடுத்த நெருக்கடியை நம்மால் வெல்ல முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நான் உங்களுக்கு கொடுக்கக்கூடிய சிறந்த உதாரணம் கொவிட் 19. தொற்றுநோய்; ஒரு சிறிய வைரஸ் அனைத்து வழக்கமான பாதுகாப்பு பரிமாணங்களையும் மிஞ்சும் என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாம் எப்போதாவது நினைத்திருக்கிறோமா? ”என்று அவர் வினவினார்.

இலங்கையின் முப்படையினருக்காக சர்வதேச தரத்திலான கற்பித்தல்களை வழங்கும் களமான சபுகஸ்கந்தவில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக வருகை தந்திருந்த ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு நுழைவாயில் வளாகத்தில் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதோடு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனையடுத்து பாதுகாப்பு கட்டளைகள் மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹேரத் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், பாடநெறி எண் – 15 இன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இளங்கலை பட்டதாரிகளால் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது.

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் எண்-15 பாடநெறியில், பாகிஸ்தான், பங்களாதேஷ், ருவாண்டா, மாலத்தீவு, இந்தோனேசியா, நேபாளம், அமெரிக்கா, செனகல் மற்றும் சவுதி அரேபியாவை உள்ளிட்ட 17 நாடுகளை சேர்ந்த 144 இளங்கலை பட்டதாரிகள் கலந்துகொண்டனர். அவர்களில் 78 இராணுவ அதிகாரிகள், 23 கடற்படை அதிகாரிகள், 26 விமானப்படை அதிகாரிகளும் பீஎஸ்சீ பட்டத்தை பெற்றுகொண்டனர்.

பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹேரத் அக்கல்லூரிக்கு வருகை தந்த விரிவுரையாளருக்கு அன்பான வரவேற்பளித்ததோடு, நிகழ்வின் பங்கேற்பாளர்களுக்கும் அறிமுகம் செய்தார்.

அதேபோல் நிகழ்வின் நிறைவம்சமாக இடம்பெற்ற கேள்வி-பதில் அமர்வைத் தொடர்ந்து இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா அவர்களுக்கு சிறப்பு நினைவு பரிசொன்றை வழங்கி நன்றிகளையும் கூறிக்கொண்டார். கல்லூரி வளாகத்திலிருந்து விடைபெறும் முன்பாக தளபதியவர்களால் கல்லூரியின் விருந்தினர் பதிவேட்டில் எண்ணங்களை பதிவிட்டார்.

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் இளங்கலைப் பட்டதாரிகளுக்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “வழக்கமான முறைகளை விட எதிரிகளுக்கு பல வழிமுறைகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தீவிரவாத குழுக்கள் இன்று பொது மக்களுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அணுகுமுறைகளை முன்னெடுக்கின்றனர். மிகவும் சூட்சுமான முறையில் ஆட்சேர்ப்பு, தூண்டுதல், பிரச்சாரம் மற்றும் ஆயுதங்கள் கொள்வனவு செய்தல் மற்றும் வரையறையற்ற பணப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். அதனால் ஒற்றுமைக்கான தேசிய பொறிமுறைகளுடன் இணங்கிச் செயற்பட நாம் மறுக்கின்ற பட்சத்தில் நமது தேசிய பாதுகாப்பு கட்டமைப்பில் மாற்ற முடியாத இடைவெளிகள் ஏற்படுவதற்கு இடமளித்துவிடுவோம். “சாதிக்க முடியாத இலக்குகளையும் அடைவதற்கான ஒரே கருவியாக ஒற்றுமை மட்டுமே உள்ளது என்று நான் நம்புகிறேன்”. இந்த பரந்த நோக்கத்தை அடிப்படையாக கொண்டுதான் இலங்கை இராணுவத்தின் 2020 – 2025 முன்நகர்விற்கான மூலோபாய திட்டமிடல் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேற்படி விரிவான மூலோபாய திட்டமிடலை செயற்படுத்துவதற்கு நாடு எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பது தொடர்பிலான மூலோபாய சிந்தனைகளை கொண்டிருக்க வேண்டியது அவசியமாகிறது. அதேபோல் 2020 – 2025 முன்நகர்விற்கான மூலோபாய திட்டமிடல் அதிமேதகு ஜனாதிபதியவர்களின் “சௌபாக்கியத்திற்கான தெரிவு” என்ற கொள்கைத்திட்டத்துடன் எவ்வாறு பொருந்துகிறது என்பது குறித்தும் விரிவான புரிதலை கொண்டிருப்பது அவசியமாகும். அத்தோடு நமக்கான பயிற்சிகள் இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்புச் சூழ்நிலை மற்றும் அதற்குள்ளான ஆயுத படைகளின் வகிபாகம் பாதுகாப்பு கொள்கைகள் அதற்கு தகுந்த படைகளின் கட்டமைப்பு மற்றும் திறன் ஆகியவை தொடர்பான புரிதல்களை ஏற்படுத்த கூடிய வகையில் அமைந்திருக்க வேண்டியதும் அவசியமாகும். அதேபோல் மேற்படி காரணிகளை மீளாய்வு செய்து ஆயுத படையினரை அர்ப்பணிப்பு மற்றும் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளகூடிய வகையிலும் கட்டமைக்க வேண்டியது அவசியமாகும் எனவும் ஜெனரல் ஷவேந்திர சில்வா வலியுறுத்தினார்.

“அண்மைய காலங்களில், இராணுவம் குறிப்பாக போர்ச் சூழலுடன் தொடர்பற்ற பணிகளை மேற்கொண்டது, எதிர்காலத்திலும் இவ்வாறான பணிகளை தொடர நேரிடலாம். எனவே, நமது ஆயுதப் படைகள் அதற்கு தகுந்த வகையில் முழுமையாக பயிற்றுவிக்கப்படவேண்டியது அவசியமாகும். அதற்கு ஏற்ற வகையில் உரிய வளங்கள் மற்றும் சட்டங்கள், அதிகாரங்களுடன் பாதுகாப்பு தொடர்பான வகிபாகத்தை பேண வேண்டும், மேலும் புதிய மூலோபாய ரீதியில் வரையறுக்கப்பட்ட மற்றும் நியாயமான நோக்கங்களுக்காக ஆயுதப்படைகளை பயன்படுத்துவதன் மூலம் நிறுவன கட்டமைப்பின் மட்டத்திலும் சர்வதேச அளவிலும் பொறுப்புகூறலுடன் செயற்பட முடியும் என்றும் கூறினார்.

இராணுவத் தளபதியின் உரையின் முக்கிய விடயங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

“நான் கல்வி பயின்ற கல்விக்கூடத்தில் உங்களுக்கு உரை நிகழ்த்துவதை மரியாதையாகவும் பாக்கியமாகவும் கருதுகிறேன்.

இந்த மதிப்புமிக்க நிறுவனம் கட்டளைகள், திறன், அறிவுசார் ஊழியர்களை கொண்ட்ட கூட்டிணைப்பாகும்.முப்படை அதிகாரிகளுக்கும் நிறுவனத்தில் உயர் பொறுப்புகளை வழங்க வேண்டும் வலியுறுத்தியதன் விளைவாக இன்றைய நிலைமைக்கு என்னை உருவாக்கிய பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரிக்கு உயர்வான மரியாதையை செலுத்துகிறேன்.

அதேபோல் ஆரம்ப கட்டத்தில், ஒரு அதிகாரியின் தொழில் வாழ்க்கையின் மிக முக்கியமான அடைவை ஒன்றை நீங்கள் நிறைவு செய்கிறீர்கள் என்பதை நினைவூட்டுகிறேன். எனவே, இந்த நிறுவனத்திலிருந்து கற்றல் மற்றும் வடிவமைப்பை உங்கள் ஆளுமை, தொழில்முறை மற்றும் சிந்தனை முறை ஆகியவற்றை ஊக்குவிப்பாக எடுத்துக் கொண்டு உங்களது முன்னேற்றத்தை ஆரம்பிக்க வேண்டும்.

மேலும் நமது நட்பு நாடுகளைச் சேர்ந்த பயிலிளவல் அதிகாரிகள் தொடர்பாக சிறப்பாக எடுத்துரைக்க விரும்புகிறேன். சர்வதேச மாணவர்களின் பங்கேற்பானது, வெவ்வேறு கலாச்சார், கல்வி, கோட்பாடு மற்றும் தனிப்பட்ட மாறுபாடுகளின் அடிப்படையில் வெவ்வேறு கொள்கைகளின் கீழ் எவ்வாறு நிலைமையைக் காண முடியும் என்பதை விளங்கிக்கொள்வதற்கு பயிலிளவல் அதிகாரிகளுக்கு வாய்ப்பாக அமையும் என்றும், அதனால் பாடநெறிக்கு மெலும் தரம் சேர்க்கப்படுகிறது எனவும் இப்பாடநெறியின் போது நீங்கள் கொள்கை ரீதியான, தந்திரோபாய மற்றும் கொள்கை ரீதியான அறியியல் திறன்களை மேம்படுத்துகொண்டிருப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.

இராணுவக் கோட்பாட்டாளரான, கார்ல் வான் கிளாஸ்விட்ஸ் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு “போரின் மூடுபனி” என்னும் நூலில் மைதானத்தில் அடுத்து என்ன நடக்கிறது என்பதை அறிந்து வைத்திருப்பது எப்போதுமே கடினமானது என குறிப்பிட்டுள்ளார். எனவே நேற்றை போரை வெற்றிகொண்டதால் நவீன மோதல்களையும் அதேபோன்று அணுக முடியுமென கருதுவது மிகவும் ஆபத்தானதும் விவேகமற்றதுமான அனுமானமாகும். எனவே வெறும் நிகழ்தகவுகளை மாத்திரம் நம்பிகொண்டிருப்பதை விடவும் சாத்தியமான சிந்தனைகளை தூண்டுவது மிகவும் அவசியமாகிறது.

சமகால பிரச்சினையை கடக்க வேண்டுமானால் அவை தொடர்பில் ஆழமாக கற்றறிய வேண்டும். எனவே, நிலையான விழிப்புணர்வு மற்றும் பரந்த அளவிலான தெரிவுகள் என்பன மாத்திரமே புதிய சவால்களுக்கு ஏற்ப நமது படைகளை வடிவமைக்க ஒரே வழியாகும் எனவும் வலிறுத்தினார்.

தீவிரவாத குழுக்கள் இன்று பொது மக்களுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அணுகுமுறைகளை முன்னெடுக்கின்றனர். மிகவும் சூட்சுமான முறையில் ஆட்சேர்ப்பு, தூண்டுதல், பிரச்சாரம் மற்றும் ஆயுதங்கள் கொள்வனவு செய்தல் மற்றும் வரையறையற்ற பணப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். இன்றளவில் சைபர் தாக்குதல்கள் எதிரிகள் விரும்பிய இலக்குகளை அடைவதற்கான மிகச் சிறந்த வழிமுறையாக மாறியுள்ளது. இது எதிரிகளின் கையொப்பத்தை மறைப்பதற்கும், பாரம்பரிய பாதுகாப்பு வழிகளை தகர்க்கவும் அவர்களின் இலக்கை அடையவும் உதவியாக அமைந்துள்ளது.

மோதல்களுக்கு எவ்வேளையிலும் தயாராக இருந்தாலும் எதிர்பாராத மோதல் நிலைமைகளுக்கு தயாராக இல்லாமல் இருப்பதானது பேரழிவை தருகிறது. குறிப்பாக எதிரிகளுக்கு வழமையான முறைமைகளுக்கு மாறான புதிய உபாயங்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகும். மறுமுனையில் தீவிரவாத குழுவினர் இன்று பொதுமக்களுக்கு பரீட்சயம் இல்லாத முறைமைகளை கொண்டுள்ளதோடு அதனூடாக மிகவும் சூட்சுமான முறையில் ஆட்சேர்ப்பு, தூண்டுதல், பிரச்சாரம் மற்றும் ஆயுதங்கள் கொள்வனவு செய்தல் மற்றும் வரையறையற்ற பணப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.

மேலும் மோதலை தூண்டுவோரின் நோக்கங்களை அறிந்துகொள்வது கடினமானதாகும். அதேபோல் மோதல்களும் நல்ல மற்றும் தவதறான நோக்கங்களை அடிப்படையாக கொண்டதாகவும் அமைந்திருக்கூடும். ஆசியா-பசுபிக் பிராந்தியத்தின் பிராந்தியத்தின் பொருளாதார முன்னேற்றம் காரணமாக பாதுகாப்பு செயற்பாடுகளில் பரிணாமங்களை உருவாக்க வேண்டிய அவசியம் தோன்றியுள்ளது. குறிப்பாக வளர்ந்துவரும் நாடுகளுக்கு புவிசார் மூலோபாய பாதுகாப்பு பொறிமுறைகளை மேம்படுத்துவதற்கான அவசியங்களும் தோன்றியுள்ளன.

உலகெங்கிலும் உள்ள பிரிவினைவாதம், தீவிரவாதம் மற்றும் குற்றச் செயல்களால் நிகழ்கால பாதுகாப்பு சூழலுக்கு ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தலால் வன்முறைகள் இடம்பெறுகின்றன. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் அரசியல் மற்றும் சமூக பாதிப்புக்களை ஏற்படுத்தியிருந்தது. எனவே, இதுபோன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்கு இராணுவத்தின் தயார் நிலைமை அவசியமாகும்.

ஜனநாயக சமூகங்கள் மத்தியில் ஆயுதப் படைகளின் அளவு மற்றும் வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு படைகளுக்கான செலவீனங்கள் தொடர்பிலான நியாயமாக கேள்விகள் மற்றும் ஆயுதப் படைகள் பன்முகத் திறன்கள் கொண்டதாகவும் நவீனத்துவத்தில் இராணுவ முயற்சியில் கட்டமைக்கப்பட்ட பொருளாதாரத்தை அடித்தளமாகக் கொண்டதாகவும் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

நவீனகால பாதுகாப்பு மற்றும் நிகழ்கால சூழலின் நடைமுறைகள் முன்பை விட இராணுவ சக்தியின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளன. இதனால் அடுத்த சில வருடங்களிலும் கூட உலகம் ஒரு சிக்கலான, நிலையற்ற, கணிக்க முடியாத மற்றும் ஆற்றல்மிக்க பாதுகாப்பு சூழலை எதிர்கொள்ள நேரிடும் என நம்புகிறேன்.குறிப்பாக மோதல்களின் தன்மையை பொருத்து பாதுகாப்பு சூழல் கட்டுப்படுத்த கூடியதாகவும் கட்டுக்குள் அடங்காததாகவும் மாற்றம் அடைகிறது. எவ்வாறாயினும் நாம் வாழ வேண்டும் எனில் சூழலுக்கு மாற வேண்டும் என்பதுதான் நிதர்சனமாகும். இலங்கையின் புவிசார் மூலோபாய அமைவிடம், தேசிய பாதுகாப்பு கட்டமைப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சக்திகளால் பல அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

பொதுவாக வெளிநாட்டில் இடம்பெறும் மோதல்களை மையப்படுத்திக்கொண்டு அடிப்படைவாதச் சிந்தனைகள் மற்றும் வன்முறைச் செயற்பாடுகள் இடம்பெறுவதோடு, அதன் விளைவாக உள்நாட்டு மக்களையும் எதிரிகளாக கருதிக்கொண்டு செயற்படுவோரால் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

அதேபோல் நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றுமொரு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதோடு. மேற்கத்திய மற்றும் கிழக்கு உலக அதிகார தொகுதிகளின் மேலாதிக்கச் செயற்பாடுகளின் விளைவாக பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் அடிப்படை வாதத்தை மையப்படுத்திய தாக்குதல்கள் இடம்பெறக்கூடும் அவை பொருளாதார,இராஜதந்திர அல்லது இராணுவ வழிமுறைகளில் நடத்தப்படலாம் என்றார். மேற்கு மற்றும் கிழக்கு அதிகாரத் தொகுதிகள் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மேலாதிக்கத்திற்கான பாதுகாப்புப் போட்டி அல்லது கருத்தியல் போரில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன, இது பொருளாதார, இராஜதந்திர, பினாமி அல்லது இராணுவ வழிமுறைகளின் மீது நடத்தப்படலாம்.

இந்த செயற்பாடுகள் இலங்கையின் எதிர்காலத்திற்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமையும். எனவே வெறுமனே தந்திரோபாய செயற்பாடுகள் மூலம் மாத்திரம் வெற்றிகளை அடைந்துகொள்ள எதிர்பார்ப்பதும் எதிரிகளின் ஒரு தொகுதியை மற்றும் வெற்றிகொள்ள முற்படுவதும் பொருத்தமற்றதாகும். வழமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மாறாக வேறு சிறிய அளவிலான அச்சுறுத்தல்களுக்கும் முகம்கொடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. காலநிலை மாற்றம், நாடுகடந்த குற்றங்கள், இணைய பயங்கரவாதம் மற்றும் நிலையற்ற பிரச்சினைகள், பொருளாதார ஸ்தம்பிதம் மற்றும் பேரழிவு தரும் தொற்றுநோய்கள் உள்ளிட்ட பிரச்சினைகளும் எழுந்துள்ளன. அதே சமயத்தில் பழமையான அச்சுறுத்தல்கள் புதியவகை அச்சுறுத்தல்கள் என வேறுபாடுகளை ஏற்படுத்துவதும் கடினமானது. எனவே அத்தகைய கணிப்புக்களை சரியாக மேற்கொள்ள வேண்டுமாயின் அதற்கான ஆளணி மற்றும் தொழில்நுட்ப வளங்களும் அவசியமாகும்.

போரின் போது எதிரிகள் தங்களது நகர்வுகள் மற்றும் வழிமுறைகளை நுட்பமாக கட்டமைக்கிறார்கள், இவ்வாறன விடயங்களில் உண்மை நிலைமைகைள ஏற்றுக்கொள்ள நாம் பின்வாங்ககூடாது. எனவே, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவ தளபதி என்ற வகையில் நான் ஒருபோதும் எதிரியின் தோல்விகளை குறைத்து மதிப்பிடுவதில்லை அதேபோன்று, சொந்த படைகளின் வெற்றிக்கான சாத்தியக்கூறுகளை மையப்படுத்தி தயார்படுத்தல்களை மேற்கொள்வதும் இல்லை. எனவும் தெரிவித்தார்.

இலங்கை இராணுவம் தேசத்தின் மீட்பாளர்கள் என்ற அடையாளத்தை நீண்ட காலமாகக் கொண்டுள்ளது ஏனெனில் இராணுவம் ஒவ்வொரு அவசரநிலைகளிலும் தலையிட்டு நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளது. “இலங்கையின் குடிமக்கள் எங்கள் தாய்நாட்டிற்கான எங்கள் தியாகங்களையும் பங்களிப்புகளையும் பாராட்டுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.” எதிர்வரும் காலத்திலும் இராணுவம் மக்களின் உயிர்கள், சொத்துக்கள் மற்றும் நலன்களை பேணுவதில் அக்கறை செலுத்தும். வளர்ந்து வரும் நாடு என்ற வகையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு முன்னுதாரணமாக நமது நாடு மாறியிருக்கிறது. அவ்வப்போது இந்த நிலைமைகள் மாற்றமடைந்துகொண்டு இருக்கும். எவ்வாறாயினும் நாட்டின் முன்னேற்றத்திற்கான மக்களின் கோரிக்கை அவ்வண்ணமே உள்ளது.

எனவே, இலங்கை இராணுவப் படைகளை இப்போது ஒரே விதமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தகுந்தவையாக விரிவுபடுத்த முடியாது, மாறாக அச்சுறுத்தல்களின் தன்மைகளுக்கு ஏற்ப பயணிக்கும் வகையில் கட்டமைக்கப்பட வேண்டும். எனவே, தற்போது நம்மிடம் உள்ள எண்ணக்கருக்கள், கோட்பாடுகள் மற்றும் திறன்கள் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம் அதனால் மேலும் நாம் மறுசீரமைக்க வேண்டும் என்றார்.

இன்று ஒரு சில முக்கியமான கேள்விகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்; என்ன அச்சுறுத்தலுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்? ஆயுதப் படைகள் எந்த அளவில் பயன்படுத்தப்படும்? எதிர்காலத்தில் எந்தச் சூழலில், சுதந்திரம் மற்றும் கட்டுப்பாடுகளின் கீழ் ஆயுதப் படைகள் செயல்படும்? மிக முக்கியமாக, மோதலின் எந்தப் பகுதியை இராணுவம் ஒட்டுமொத்த பாதுகாப்புக் கட்டமைப்பின் கருவியாகப் பயன்படுத்தப்படும்? யார் சண்டையிடுவார்கள், யாருடன் போரிடுவார்கள், எங்கு போரிடுவார்கள், என்ன உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும் என்று ஆயுதப் படைகள் கணிக்க இந்த கேள்விகள் வழிவகுக்கும்.

மேற்படி விடயங்களுடன் தொடர்புடையதான விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தி எதிர்பார்க்கும் இராணுவ இலக்குகளை அடைந்துகொள்ளகூடிய வகையில் அடிக்கடி இராணுவ கட்டமைப்பை மறுசீரமைப்பது அவசியமாகும். அதன்படின நிலையாக தேசிய பாதுகாப்பை உறுதி செய்துகொள்வதற்கு பல்துறை சார் திறன்களை கொண்டதார இராணுவ கட்டமைப்பு வடிவமைக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுடன் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்படகூடிய திறன் மிக்கதாகவும் இராணுவம் இயங்க வேண்டும்.

இறுதியாக, இலங்கை தற்போது உள்ளுர் மற்றும் சர்வதேச சூழல்களில் தோன்றிய பொருளாதார முன்னேற்றம், ஊழலை மட்டுப்படுத்தல், போர்க்குற்றங்களுக்கு எதிரான ஆக்கப்பூர்வமான ஈடுபாடு, வெற்றி-வெற்றி செயற்றிட்டத்தை நோக்கிய வெளியுறவுக் கொள்கைக்கு புத்துயிர் அளிப்பது, நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், தேசிய பாதுகாப்பு அணியை வலுப்படுத்துதல், சமூக-பொருளாதார மேம்பாடு, அண்மைய காலமாக பரவிவரும் தொற்றுநோய் நிலைமை மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு மற்றும் அரசாங்கத்திற்கு எழுந்துள்ள நெருக்கடிகள் உள்ளிட்ட சவால்களுக்கு மத்தியில் சாதகமான பயணத்தில் முன்னேறி வருகிறது.

தேசிய பாதுகாப்புக்கு வரும் சவால்களை எதிர்கொள்வதற்கு சிறந்த கருவியாக அனைத்து தரப்புக்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பையே கருத முடியும். இது சம்பந்தமாக, இராணுவ பிரதானிகளுக்கு மூலோபாய சூழல் குறித்து உறுதியான புரிதல் இருக்க வேண்டும். எனவே, இன்று அதிகாரிகள் அரசாங்கத்தின் அனைத்து கூறுகளினதும் ஒருங்கிணைப்பு மற்றும் தேசிய நோக்க கொள்கைகளை புரிந்துகொண்டு அதனுடன் இணைந்ததாக இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியமாகும். “இலங்கை இராணுவம் ஒரு வளமான மற்றும் நிலையான தேசத்தை அபிவிருத்தி செய்வதற்கும் பராமரிப்பதற்குமான திறன்களை கொண்டுள்ளது”. எனவும் சுட்டிக்காட்டினார்.

விரைவில் நீங்கள் பணியாளர் கல்லூரியில் தேர்ச்சி பெற்றவர் என்ற பண்புடன் புதிய நியமனங்களைத் தொடங்குவீர்கள். எனவே, இன்றைய பாதுகாப்பு சூழல் மற்றும் ஒரு தளபதி, பணியாளர் அதிகாரி அல்லது பயிற்றுவிப்பாளிடம் எதிர்பார்க்கப்படும் புரிதலை கொண்டவர்களாக நீங்கள் இருப்பீர்கள் எனவும் எதிர்பார்க்கிறேன். அதனால் இங்கும் இங்கிருந்து சென்ற பின்னரும் நீங்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற அதேவேளை சிக்கலான இராணுவ பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வுகளை வழங்குவீர்கள் எனவும் நம்புகிறேன் என்றார்.

இந்த மதிப்பிற்குரிய பயிற்சி நிறுவனத்தின் தரத்தை இராணுவக் கல்விக்கு மிகவும் உகந்த நிலைக்கு உயர்த்துவதற்கும் பராமரிப்பதற்கும் அயராத முயற்சிகளை மேற்கொண்ட பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதி மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் நான் சிறப்பு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இறுதியாக, நட்பு நாடுகளைச் சேர்ந்த மாணவர் அதிகாரிகளுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் எதிர்கால முயற்சிகளில் சிறந்து விளங்க உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியில் இருந்து வரவிருக்கும் உங்கள் அனைவருக்கும் இனிவரும் காலங்களில் உங்கள் இராணுவப் பணியில் வெற்றியின் உச்சத்தை அடைய எனது ஆசிகள் எப்போதும் உண்டு.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் ஒமிக்ரோன் எச்சரிக்கை

இலங்கையில் ஒமிக்ரோன் எச்சரிக்கை

நாட்டில் ‘ஒமிக்ரோன் வைரஸ் திரிபு’ இனங்காணப்பட்டிருப்பதனால் பண்டிகைக் காலத்தில்

பொறுப்புடன் செயற்படுமாறு சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளரான

விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹோரத் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இம்மாதம் மற்றும் ஜனவரி மாதங்களில் மக்கள் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதில்

மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

    Posted in இலங்கை செய்திகள்

    17 உணவுப் பொருட்கள் – இறக்குமதி நிறுத்தப்படும் பசில் அறிவிப்பு

    17 உணவுப் பொருட்கள் – இறக்குமதி நிறுத்தப்படும் பசில் அறிவிப்பு

    விவசாயிகள் பயிரிடக்கூடிய 17 உணவுப் பொருட்கள் இனங்காணப்பட்டுள்ளன.

    அவை உள்ளூரில் பயிரிடப்பட்ட பின்னர் அவற்றுக்கான இறக்குமதி நிறுத்தப்படும் என்று நிதி அமைச்சர் பஷில் ராஜபக்க்ஷ தெரிவித்தார்.

    பாராளுமன்றத்தில் 2022 வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

    நாடு செலுத்த வேண்டிய சகல வெளிநாட்டு கடனுக்கான டொலர்களையும் அடுத்த வருடத்தில் செலுத்துவதாக அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

    கடன் செலுத்திய பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீண்டும் கடன் பெறப்போவதில்லை என்று குறிப்பிட்ட அவர் ,அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் 500 மில்லியன் டொலரும், ஜூன் மாதத்தில் ஆயிரம் மில்லியன் டொலரும் செலுத்தப்படும் என்றும் கூறினார்.

    டுபாயும் மாலைதீவும் அச்சமின்றி சுற்றுலா பயணிகளுக்காக நாட்டை திறந்துள்ளன. சுற்றுலா அமைச்சர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    சேவைத் துறையில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. கப்பற்துறையில் அதிக முதலீடு செய்யப்பட்டுள்ளது. எமது நாட்டின் அமைவிடம் காரணமாக விமான சேவை வாயிலாகவும் அதிக வருமானம் பெற முடியும். தகவல் தொழில் நுட்ப கம்பனிகள் எமது நாட்டுக்கு வந்துள்ளன. 2,000 இளைஞர்களை அதிக சம்பளத்துக்கு நியமித்துள்ளனர். 5,000 பேருக்கு வரை தொழில் கிடைக்க இருக்கிறது என்றும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

    கடன் பெற்று ஏன் வீதி அமைக்கிறீர்கள் என்று வினவுகின்றனர். கைத்தொழில் துறை முன்னேற்றத்திற்கு வீதி அபிவிருத்தி பிரதானமானது. மின்சாரத் துறை மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் முன்னேற்றப்பட்டது.ஒவ்வொரு அங்குல நிலத்திற்கும் நீர் வழங்குவோம். பலமான நாடொன்றை உருவாக்க ஒத்துழையுங்கள். இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டின் நிதியை சேமிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

    வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் போது தெளிவான வேலைத்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டது. நாட்டின் அந்நியச் செலாவணியில் நெருக்கடி நிலை காணப்படுவதாகவும் அவர் கூறினார். உலக வங்கியின் பிரதி தலைவர் இலங்கைக்கு வருகை தந்து 500 மில்லியன் டொலரை வழங்கினார். அது வீதி அபிவிருத்திக்காக வழங்கப்பட்டது. விவசாயம் மற்றும் சேவை வழங்கலில் மாத்திரமல்லாது கைத்தொழில் துறையிலும் நாட்டை அபிவிருத்தி செய்வது இலக்கு என்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்

    Posted in இலங்கை செய்திகள்

    கைது செய்யப்பட்டவர்கள் கடலில் சடலங்களாக மிதப்பு

    கைது செய்யப்பட்டவர்கள் கடலில் சடலங்களாக மிதப்பு

    வடக்கில் பல்வேறான கடற்கரையோரங்களில் சடலங்கள் கரையொதுங்குகின்றன. இந்த சடலங்கள் தொடர்பில் பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளனவென சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக்

    கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், இராணுவத்திடம் சரணடைந்தவர்களா? இவ்வாறு சடலங்களாக கரையொதுங்குகின்றனர் என்றும்
    கேள்வியெழுப்பினார்.

    சரணடைந்தவர்கள், இப்போதுதான் கொலை செய்து கடலில் வீசுகிறார்களா? எனும் சந்தேகமும் எழுந்துள்ளது என்றும் சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.


    2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தின் இறுதி நாள் விவாதம்


    நேற்று (10) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே
    அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    “யாழ்ப்பாணம், வெற்றிலைக்கேணியில் கரையொதுங்கிய உடல் எங்கேயென யாருக்கும் தெரியாது. மருதங்கேணி பொலிஸார் அந்த உடலை சென்று பார்த்துள்ளனர். இப்போது அந்த

    உடலை காணவில்லை. கரையொதுங்கிய உடல் எவ்வாறு காணாமற்போகும்? அதனை யார் எங்கே கொண்டு சென்றனர் என்பது தெரியாதுள்ளது” என்றார்.

    சரணடைந்தவர்கள், காணாமல்போனவர்களை வைத்திருந்து, கொலை செய்து கடலில் வீசியுள்ளார்களா?

    அந்த உடல்கள்தான் கரையொதுங்கியுள்ளனவா? என காணாமல் போனவர்களின் உறவுகளினால் சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன என்றார்.

    மேலும், பாகிஸ்தானுக்கு 3,500 கண்களை இலங்கையில் இருந்து தானம் செய்யப்பட்டதாகக் கூறுகிறார்கள்

    . அந்த கண்கள் யாருடையவை என்பதில் சந்தேகங்கள் உள்ளன. எனவே இது தொடர்பில் அரசாங்கம் உரிய பதிலை வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

      Posted in இலங்கை செய்திகள்

      போதைவஸ்துடன் வெளிநாட்டு கப்பல் ஒன்று சிறைபிடிப்பு

      போதைவஸ்துடன் வெளிநாட்டு கப்பல் ஒன்று சிறைபிடிப்பு

      இலங்கை தெற்கு கடல்பகுதியில் போதைவஸ்துடன் நடமாடிய வெளிநாட்டு கப்பல் ஒன்று

      இலங்கை கடல் படையினரால் சுற்றிவளைக்க பட்டு சிறை பிடிக்க பட்டுள்ளது


      மேற்படி கப்பலில் பயணித்த ஆறு பேர் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

        Posted in சினிமா

        80 கோடிக்கு திருமண வீடியோ விற்ற நடிகை

        80 கோடிக்கு திருமண வீடியோ விற்ற நடிகை

        பிரபல இந்தி பட நடிகை கத்ரினா கைப்புக்கும், விக்கி கவுசலுக்கும் ராஜஸ்தானில் திருமணம் நடைபெற்றுள்ளது.

        இந்தி நடிகரை மணந்தார் கத்ரினா கைப்
        கத்ரினா கைப்- விக்கி கவுசல்


        பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப்பும், நடிகர் விக்கி கவுசலும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம் ராஜஸ்தானில் உள்ள பழமையான கோட்டையில் நேற்று நடந்தது.

        திருமணத்துக்கு 120 பேர் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். இந்தி நடிகர்-நடிகைகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

        இந்த திருமணம் பல கோடி ரூபாய் செலவில் ஆடம்பரமாக நடந்துள்ளது. சொகுசு விடுதியில் மணமக்கள் தங்கிய அறையின் ஒருநாள் வாடகை ரூ.7 லட்சம் ஆகும். திருமணத்துக்கு செல்போன்

        கேமராக்கள் கொண்டுவர தடை விதித்து இருந்தனர். திருமண வீடியோவை ஓ.டி.டி. தளத்துக்கு ரூ.80 கோடிக்கு விற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

        கத்ரினா கைப்
        கத்ரினா கைப்- விக்கி கவுசல்

        கத்ரினா திருமணம் ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியது. திருமண நிகழ்ச்சிக்காக கோவிலுக்கு செல்லும் பாதையை மூடிவிட்டதாக கத்ரினா மற்றும் விக்கி கவுசல் மீது சட்ட ஆணையத்தில்

        புகார் அளிக்கப்பட்டது. கத்ரினாவும், விக்கி கவுசலும் திருமணம் முடிந்த கையோடு குடியேற மும்பை ஜூஹூ கடற்கரை பகுதியில் உள்ள 8 மாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு

        எடுத்துள்ளனர். வீட்டின் மாத வாடகை ரூ.8 லட்சம் ஆகும். இந்த வீட்டில் 5 வருடம் தங்குவதற்காக முன்பணமாக ரூ.1.75 கோடி கொடுத்துள்ளன

          Posted in இலங்கை செய்திகள்

          கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தும் கோட்டா

          கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தும் கோட்டா

          எமது நாட்டின் கல்வி முறைமை, தற்போதைய உலக நடைமுறைக்கு ஏற்ற வகையில் காணப்படவில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விசேடமாக மூன்றாம் நிலைக் கல்வி முறைமையில் பல்வேறு மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் காணப்படுகின்றதெனச் சுட்டிக்காட்டினார்.

          கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (09) பிற்பகல் நடைபெற்ற சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 2021ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

          அங்கு தொடர்ந்துரையாற்றிய ஜனாதிபதி, பல்கலைக்கழக மாணவர்கள் எந்தப் பட்டப்படிப்பைத் தொடர்ந்தாலும், அவர்கள் அனைவரும் குறைந்தது தகவல் தொழில்நுட்பத்திலேனும் ஓரளவு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதோடு, தற்கால உலகை வெற்றிகொள்வதற்கு அவசியமான ஏனைய திறன்களையும் பெற்றிருக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

          நமது பல்கலைக்கழகங்களால், ஏற்கெனவே பல்வேறு புதிய சீர்திருத்தங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர் தொகையைப் பத்தாயிரத்தால் அதிகரித்தமை தற்போதைய அரசாங்கம் அடைந்த பாரிய வெற்றியாகுமென்றும், அவ்வாறு அதிகரித்தாலும்கூட, உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தும், பல்கலைக்கழகக் கல்வியைப் பெறமுடியாத ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்னமும் இருக்கின்றனர் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

          இதற்குக் காரணம், தகுதிபெறும் அனைத்து மாணவர்களுக்கும் இடமளிப்பதற்கு அரச பல்கலைக்கழக கட்டமைப்பில் போதுமான கொள்ளளவின்மையாகும். இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு எமது இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இந்தப் பல்கலைக்கழகம் அரச பல்கலைக்கழகமாக மாத்திரம் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உலகில் உள்ள அனைத்துச் சிறந்த பல்கலைக்கழகங்களும், அரச பல்கலைக்கழகங்கள் அல்ல என்றும் எடுத்துரைத்தார்.

          பெரும்பாலானவை சுதந்திரமான சுயநிர்வாக நிறுவனங்களாகவும் தொண்டு நிறுவனங்கள் அல்லது கல்வியில் கவனம் செலுத்தும் இலாப நோக்கற்ற நிறுவனங்களாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளதோடு, இலங்கையில் இவ்வாறான நிறுவனங்களை நிறுவ முடியாமைக்குக் காரணமில்லை என்றும் குறிப்பிட்டதோடு, இதைச் சாத்தியமாக்குவதற்கான சட்டக் கட்டமைப்பை மாற்ற வேண்டுமென்றால், அதைச் செய்ய முடியுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

          அரச பல்கலைக்கழகங்களுக்கு வெளியே உள்ள உயர்க்கல்வி நிறுவனங்கள், பட்டங்களை விற்கும் கல்விக் கடைகள் என்ற பழைய ஆட்சேபனைகள் முட்டாள்தனமானவை என்பதோடு, பட்டப்படிப்புக்குப் பிறகு தொழிற்சந்தையில் வாய்ப்புகளை வழங்க முடியாத பல்கலைக்கழகங்களை மாணவர்கள் நாட மாட்டார்கள் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

          “நாட்டில் மூன்றாம் நிலைக் கல்விக்கான சுதந்திரமான சூழலை ஏற்படுத்துவதன் மூலம், சர்வதேசத் தரம்வாய்ந்த பிராந்திய உயர்க்கல்வி நிறுவனங்களை இலங்கைக்குள் ஈர்க்க முடிவதோடு, அதன் மூலம் இந்நாட்டில் வழங்கப்படும் கல்வியின் தரத்தை மேலும் மேம்படுத்த முடியும்.

          “காலப்போக்கில், இது இலங்கையின் உயர்க்கல்வித் துறையை பொருளாதாரத்துக்குச் சாத்தியமான அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தருகின்ற வருமானம் ஈட்டக்கூடிய ஒரு வழியாக மாறும்” என்று நம்பிக்கைத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாடு விரைவாக அபிவிருத்தியடைந்து, எதிர்காலத்தில் வளமான நாடாக மாற வேண்டுமாயின், இலங்கைக்கு அவசியப்படுவது உயர்க்கல்வி கட்டமைப்பில் பரந்த மாற்றத்தை ஏற்படுத்துவதாகும் என்றும் குறிப்பிட்டார்.

          சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 32ஆவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. பாதுகாப்புக் கல்வி, முகாமைத்துவம், வர்த்தக மேலாண்மை, சட்டம், மருத்துவம், பொறியியல் மேம்பாட்டு முகாமைத்துவம், தொழில்நுட்ப விஞ்ஞானம், சமூகவியல், இணை சுகாதார விஞ்ஞானம் மற்றும் ஆக்கப்பூர்வமான சூழலியல் மற்றும் விண்வெளி அறிவியல் ஆகிய துறைகளை உள்ளடக்கிய வகையில் 1,408 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

          இவர்களில் கலாநிதிப் பட்டதாரி ஒருவரும் பட்டப் பின்படிப்பு மற்றும் பட்டப் பின்படிப்பு டிப்ளோமா ஆகியோரும் அடங்குவர். இதன்போது, 1,180 பேர் தமது முதல் பட்டத்தைப் பெற்றுக்கொண்டனர்.

          சிறந்த இராணுவப் படை அதிகாரியாக கெடட் அதிகாரி எஸ்.எச்.ரொத்ரிகோ, சிறந்த கடற்படை அதிகாரியாக லெப்டினன் எஸ்.டி.கருணாசேன, சிறந்த விமானப்படை அதிகாரியாக பறக்கும் அதிகாரி எஸ்.கே.எஸ்.ருக்ஷான், அதிசூர அதிகாரியாக லெப்டினன் எல்.டி.ஐ.லியனாரச்சி ஆகியோர், ஜனாதிபதி அவர்களிடமிருந்து விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

          முப்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு விஞ்ஞான பீடம், 1981இல் நிறுவப்பட்டது. 2009ஆம் ஆண்டில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் அது முழுமையான பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. 2009ஆம் ஆண்டில் சிவில் மாணவர்களுக்கும் பட்டக் கல்வியை தொடர்வதற்கு வாய்ப்புக் கிடைத்தது. தற்போது, முப்படை மற்றும் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கலாநிதிப் பட்டம் மற்றும் பட்டப் பின்படிப்பு டிப்ளோமா பாடநெறிகளை தொடர வாய்ப்பு கிடைத்துள்ளது.

          கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் தற்போது உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல்கலைக்கழகமாக பொதுநலவாய அமைப்பின் பல்கலைக்கழக சங்கம் மற்றும் சர்வதேச பல்கலைக்கழக சங்கத்தின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

            Posted in இலங்கை செய்திகள்

            திருமணவீட்டுக்கு சென்ற வான் சிதறல்- பலர் காயம்

            திருமணவீட்டுக்கு சென்ற வான் சிதறல்- பலர் காயம்

            இலங்கை அநுராதபுரத்திலிருந்து நொச்சியாகம நோக்கி பயணித்த பஸ்ஸுடன் வான் ஒன்று

            மோதியதில் சம்பவ இடத்தில இருவர் படுகாயமடைந்தனர் .


            மேற்படி விபத்தில்சிக்கிய வான் திருமண நிகழ்வுக்கு சென்று கொண்டிருந்த பொது இந்த விபத்து

            நேர்ந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

              Posted in இலங்கை செய்திகள்

              இந்தியா பறந்த இலங்கை இராணுவ தளபதி

              இந்தியா பறந்த இலங்கை இராணுவ தளபதி

              இந்தியாவின் இராணுவ தளபதி விபத்தில்பலியானதை அடுத்து தற்பொழுது அவரது உடலுக்கு

              அஞ்சலி செலுத்திட இலங்கை இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா டில்லிக்கு பயணமானார்

              இந்த விபத்து சதி என பேச படுகிறது

                Posted in இலங்கை செய்திகள்

                பிரேசில் யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

                பிரேசில் யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

                சர்வதேச (‘இன்டபோல்’) பொலிஸாரினால் ‘சிவப்பு அறிவித்தல்’ பிறப்பிக்கப்பட்டிருந்த ,பிரேசில்

                நாட்டைச் சேர்ந்த யுவதி ஒருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளார்.

                பிரேசில் பொலிஸார் இவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்ட போது, இவர்

                தாய்லாந்துக்கு தப்பிச் சென்றதாக, விமான நிலைய அதிகாரிகள் முன்னெடுத்த விசாரணையில் தெரிய வந்துள்ளது.

                இலங்கையில் தங்கியிருக்கும் நோக்கில் இவர் தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் ஊடாக இலங்கைக்கு வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

                கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணை, குடிவரவு – குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் மீண்டும் பிரேசிலுக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

                  செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                  Posted in Uncategorized

                  கொரானாவுக்கு இலங்கையில் 22 பேர் மரணம்

                  கொரானாவுக்கு இலங்கையில் 22 பேர் மரணம்

                  இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 22 பேர்

                  பலியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது

                  மேலும் நோயானது பரவாமல் தடுக்க பல பாதுகாப்பு வழிமுறைகள் பேணப்பட்டு வருகின்ற

                  பொழுதும் நோயினை கட்டு படுத்த முடியாது அரசு திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது

                    Posted in இலங்கை செய்திகள்

                    பாம்பு தீண்டி உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு புதிய வீடு

                    பாம்பு தீண்டி உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு புதிய வீடு

                    வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கட்டுமுறிவு கிராமத்தில் வருமானம் குறைந்த

                    குடும்பம் ஒன்றுக்கு தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ஊடாக, புதிய வீட்டை அமைத்துக்

                    கொடுப்பதற்கான நடவடிக்கை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் அண்மையில் ஆரம்பமானது.

                    பின்தங்கிய பிரதேசமான கட்டுமுறிவு கிராமத்தில், பாம்பு தீண்டி உயிரிழந்த ரவித்திரன்

                    கிருத்திகா எனும் 4 வயது சிறுமியின் பெற்றோருக்கே இந்த வீடு அமைக்கப்படுகிறது..

                    இதுதொடர்பான நிகழ்வில் வாகரை பிரதேச செயலக உயர் அதிகாரிகள், தேசிய வீடமைப்பு

                    அதிகாரசபையின் அதிகாரிகள், இராஜாங்க அமைச்சரின் செயலாளர்கள், பிரதேச இணைப்புச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      முல்லை கடலில் செத்து மிதக்கும் மீன்கள்

                      முல்லை கடலில் செத்து மிதக்கும் மீன்கள்

                      முல்லைதீவு கடல்பகுதியில் மீன்கள் செத்து மிதக்கின்றன ,இந்த மீன்கள் ஏன் இவ்விதம் செத்து மிதக்கின்றன என தெரியவில்லை

                      கரை ஒதுங்கிய டொல்பின் வகை மீன்கள் என கணடறிய பட்டுள்ளது

                      மீன்கள் செத்து இறந்தால் சுனாமி வரும் பேராபத்து என மக்கள் அச்சமடைந்த வருகின்றனர்

                        Posted in இலங்கை செய்திகள்

                        மனைவி கள்ள காதலனை மடக்கிப்பிடித்து -கத்தியால் வெட்டிய கணவன்

                        மனைவி கள்ள தொடர்பு -கத்தியால் வெட்டிய கணவன்

                        தனது மனைவியை கூரிய ஆயுதங்களால் தாக்கிய சந்தேகநபரை 10,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 100,000 ரூபா சரீரப் பிணையில்  விடுவிக்குமாறு தம்புத்தேகம நீதவான் நுவன் கௌசல்ய உத்தரவிட்டார்.

                        இராஜாங்கனை பகுதியில் வசிக்கும் ஒருவரே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

                        சந்தேக நபர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நிலையில் அவர் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

                        இந்த நிலையில் அவரது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்துள்ளார்.

                        இதனை கேள்வியுற்ற சந்தேகநபர், வீட்டுக்கு அருகில் மறைந்திருந்து இரவு வேளையில் வீட்டிற்குள் சென்று இருவரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

                        காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                        சம்பவத்தன்று இரவு இராஜாங்கனை பொலிஸில் சரணடைந்த சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காக நொச்சியாகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

                        சம்பவம் தொடர்பில் இராஜாங்கனை மற்றும் நொச்சியாகம பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதால் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

                        சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஸ்ரீ லால் மகேஷ் தலங்கல்ல, தமது கட்சிக்காரரை பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

                        இந்த நிலையில் சந்தேகநபரை 10,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 100,000 ரூபா சரீரப் பிணையில்  விடுவிக்குமாறு தம்புத்தேகம நீதவான் நுவன் கௌசல்ய உத்தரவிட்டார்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          பெருமளவு இராணுவத்தினருக்கு பதவி உயர்வு

                          பெருமளவு இராணுவத்தினருக்கு பதவி உயர்வு

                          இலங்கை இராணுவத்தின் மிக்க முக்கிய பதவி நிலைகளில் உள்ளவர்கள் மற்றும் கீழ் நிலையில்

                          உள்ளோர் என 84 கடற்படை அதிகாரிகள் and 1,684 பேருக்கு திடீர் பதவி உயர்வு வழங்க பட்டுள்ளது

                          கோட்டா ஆட்சியில் இராணுவம் நவீன மயமாக்களுக்கு உள்ளாக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                            Posted in இலங்கை செய்திகள்

                            நாட்டின் கடன் பிரச்சினையை தீர்க்க பணிந்து செல்ல வேண்டிய தேவை இலங்கைக்கு இல்லை

                            நாட்டின் கடன் பிரச்சினையை தீர்க்க பணிந்து செல்ல வேண்டிய தேவை இலங்கைக்கு இல்லை

                            நாட்டின் கடன் பிரச்சினையை தீர்க்க வெளிநாட்டு நிறுவனங்களிடம் பணிந்து செல்ல வேண்டிய

                            தேவை இலங்கைக்கு இல்லை என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

                            இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் 07 ஆம் திகதி நடாத்தப்பட்ட பொருளாதார செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

                            கடனை திருப்பி செலுத்த எந்தவொரு விடயத்திலும் தங்கியிருக்க வேண்டிய தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

                            இதேவேளை தனியார் நிறுவனங்களின் கடன் சுமை குறித்து ஆளுநர் குறித்து தெரிவிக்கையில்,

                            பேச்சு வார்த்தை நடாத்jp, வட்டி விகிதங்களை குறைக்க, வெளிநாட்டு கடன் மற்றும் உள்நாட்டு கடன் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

                            அரசாங்கத்தின் கடன் சுமைகளை கூடுமானவரையில் குறைப்பதில் கவனம் செலுத்தியுள்ளோம்.

                            இலங்கை கடன்களை மட்டும் பெற்றுக் கொள்வதிலிருந்து விலகி கடன் இல்லாதா வரவுகளை

                            உருவாக்கும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

                              Posted in இலங்கை செய்திகள்

                              60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசி

                              60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசி

                              60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாம் கட்ட பைஸர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள்

                              மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரில் முன்னெடுக்கப்பட்டுவருவதாக

                              மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே. கிரிசுதன் தெரிவித்துள்ளார்.

                              மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனை பிரிவிற்குட்பட்ட மண்முனை வடக்கு பொது

                              சுகாதார பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ள மூன்றாம் கட்ட பைஸர் தடுப்பூசிகளில் முன்னுரிமை

                              அடிப்படையில் 60 வயதிற்கு மேற்பட்டோர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை, 7 தடுப்பூசி ஏற்றும் நிலையங்களில் இடம்பெறுகின்றன.

                              இதற்கமைவாக பாலமீன்மடு, சின்னஊறணி, கருவப்பங்கேணி, இருதயபுரம் கிழக்கு ஆகிய

                              நான்கு பொதுசுகாதார பிரிவுகளில் நேற்று (08) பைஸர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              பள்ளத்தில் வீழ்ந்த கார்

                              பள்ளத்தில் வீழ்ந்த கார்

                              தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்.கிளயார் பகுதியில் இன்று (09) அதிகாலை ஒரு

                              மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி படுங்காயம்பட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

                              நுவரெலியா பகுதியிலிருந்து கொட்டகலை பகுதிக்கு சென்ற கார் ஒன்று நுவரெலியா – அட்டன்

                              பிரதான வீதியில் சென்.கிளயார் பகுதியில் வீதியை விட்டு விலகி குறித்த கார் சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

                              மேற்படி காரில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், அவரே இவ்வாறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                              சாரதி மதுபானம் அருந்தியிருந்ததாகவும், இதனால் அவரின் கவனயீனம் காரணமாகவே

                              இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தலவாக்கலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

                              இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

                                Posted in இலங்கை செய்திகள்

                                காதலியை கடத்தி சென்ற காதலன் – காதல் செய்த கோலம்

                                காதலியை கடத்தி சென்ற காதலன் – காதல் செய்த கோலம்

                                தருமபுரம் வட்டக்கச்சிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

                                டிப்பர் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியை விட்டு விலகி கால்வாயில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                                விபத்தில் படுகாயமடைந்த டிப்பர் வாகனத்தில் பயணித்த இளைஞரும் பெண்ணும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளான்.

                                உயிரிழந்தவர் நாகேந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

                                இளைஞன் ஒருவர் தனது காதலியை கடத்திச் சென்று டிப்பர் வாகனத்தில் பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தை அடுத்து டிப்பர் பாரவூர்தியின் சாரதி உட்பட பலர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                                சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு – கொலையா ..?

                                  ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு – கொலையா ..?

                                  நுவரெலியா, ருவான் எலியா, பிளாக்பூல் ஆற்றில் விழுந்து உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம்

                                  இன்று (08) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

                                  நுவரெலியா, ருவான் எலியா, பன்சல வீதியைச் சேர்ந்த 78 வயதுடைய புஞ்சிபண்டாரகே மெனிகாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

                                  தனது மகள் மற்றும் மருமகன்களுடன் வீட்டில் தங்கியிருந்த நிலையில் இரவு உறங்கிக்

                                  கொண்டிருந்த தாய் காலையில் பார்க்கும் பொழுது வீட்டில் இல்லை என உயிரிழந்த பெண்ணின் மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

                                  இவ்வாறு வீட்டிற்கு அருகில் உள்ள பிளாக்பூல் ஆற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தமைக்கான

                                  காரணம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                                  சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

                                  நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.