பிரேசில் யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Spread the love

பிரேசில் யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

சர்வதேச (‘இன்டபோல்’) பொலிஸாரினால் ‘சிவப்பு அறிவித்தல்’ பிறப்பிக்கப்பட்டிருந்த ,பிரேசில்

நாட்டைச் சேர்ந்த யுவதி ஒருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரேசில் பொலிஸார் இவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்ட போது, இவர்

தாய்லாந்துக்கு தப்பிச் சென்றதாக, விமான நிலைய அதிகாரிகள் முன்னெடுத்த விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இலங்கையில் தங்கியிருக்கும் நோக்கில் இவர் தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் ஊடாக இலங்கைக்கு வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணை, குடிவரவு – குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் மீண்டும் பிரேசிலுக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *