Tag: kavithai
எட்டு திசையும் எழ வெடி
எட்டு திசையும் எழ வெடி
எதுகை மோனை புனையாதான்
எதற்கும் இங்கு உதவாதான்
அடியும் தொடையும் அறியாதான்
அவையில் உலவ இயலாதன்
செயலும் பொருளும் செப்பாதன்
செயல் பாட்டிற்கிங்கு செழியாதான்
இத்தனை நுணுக்கம் இதிலிருக்கு
இது புரிந்து இவை இயக்கு
அற்புதம் அடியில் அவை அழுத்து
அதனை அறிந்து கவி இயக்கு
அலைகள் அடிக்கும் அடி தாங்கி
அக்கரை அகலும் அவை கப்பல்
இக்கரை இயம்பும் இயல் இசையை
இப்படி இயற்று இயல் இடையை
இப்படி இயற்றின் இவை இனிக்கும்
இப்படி இயற்றின் இவை இருக்கும்
ஏது உரைத்தாய் என்றென்பின்
ஏடு புரட்டி எடுத்து படி
ஏற்றம் ஏற்பின் எடுத்து அடி
எட்டு திசையும் எழ வெடி ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 04-04-2024
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

- அழும் நீதி

- அர்ச்சுனா

- ஏன் அழுகின்றாய்

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஆறுதல் கூறி விடு

- வீர மகன் அர்ச்சுனா

- அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு

- அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை

- என்னை அழைப்பாயா

- என்னை அழைக்காயா

- எழுந்து வா

கிழவருக்கு ஒரு மடல்
கிழவருக்கு ஒரு மடல்
மண்டையில முடி விழுந்தும்
மாண்பு இன்னும் தெரியவில்லை
மக்களது அரசியலை
மன்றில் பேச தெரியவில்லை
நரை விழுந்த கிழவருக்கு
நாற்காலி இன்றெதுக்கு
பாப்பா பாட்டு பாடுகின்ற
பர தேசிக்கு வாழ்வெதற்கு
உயிரெழுத்தில் பெயர் வைத்து
உலவுகின்ற கிழவருக்கு
அலரிக்கா மாளிகையில்
அடி கழுவி திரிந்தாருக்கு
பேச்சு மேசைக்கு
பெரும் இடரை கொடுத்தார்க்கு
வால் பிடிக்கும் கூட்டங்களே
வையத்தில் தொல்லைகளே
இல்லாத அவர் காலம்
இருக்கின்றாய் நீ இக் காலம்
என் செய்தாய் தமிழுக்கு
ஏ தொன்று சொல் எனக்கு
மளிகை வீடு கட்டி
மல்லாக்காய் படுத்திருந்து
கொறட்டை தினம் விட்டால்
கொடை வள்ளல் நீ ஆகாய்
இக் கலாம் வாழ்கின்ற
இடர் செய்த பெரு மகனே
உன் வாழ்வே வீனாகும்
உன் இறப்பே தப்பாகும்
கோபத்தில் உனை வரைந்து
கொழுத்தி விட வரவில்லை
ஏக்கத்தில் மனம் தவிக்க
எழுதி வைத்து நீட்டுகிறேன் ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 26-03-2024
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

- அழும் நீதி

- அர்ச்சுனா

- ஏன் அழுகின்றாய்

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஆறுதல் கூறி விடு

- வீர மகன் அர்ச்சுனா

- அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு

- அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை

- என்னை அழைப்பாயா

நான் ஆட நீ வா …!
நான் ஆட நீ வா …!
உடையாதே பூவே
உன்னை சூடவா …?
உள்ளத்தில கோயில் கட்டி
உன்னை வணங்கவா …?
ஒழுகும் நிலவொளியில்
ஓடி பாடவா ..?
உன்னை நான் விரட்ட
என்னை நீ மிரட்ட …
கோயில் மணி ஓசையில
கொழுந்து காற்றினிலே …..
ஆனந்தம் பிறக்குமே
அதிகாலை உதிக்குமே ….
தேன் சிந்தும் இனிமையில
தேகம் குளிர மனம் மகிழ ….
தந்தனா பாட்டு தான்
தாளமிடும் நேரம் தான் ….
கண்ணே கவலை விடு
காதலே உயிர் கொடு ..
நாளுமே ஊர்கோலம் தான்
நாள் திசையும் எம் வசம் தான் ….!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -18/03/2019
பெண்ணே கொஞ்சம் திருந்து …..!
பெண்ணே கொஞ்சம் திருந்து …..!
ஆடை குறைத்து
அரை உடல் நிறுத்து …
போகும் பெண்ணே
போக்கிடம் மாற்று ….
தீங்கை விதைத்து
தீயாய் கசிந்து …
ஊரை எரிக்கும்
ஊனம் மாற்று ….
நக்கி குலைக்கும்
நாய்கள் கூட….
வாலை ஆட்டும்
வாழ்தல் மாற்று …..
தொப்பை நீட்டி
தொடையும் காட்டி …
வன்முறை தூவும்
வாழ்க் கை மாற்று ….
ஆடை குறைத்து
அங்கம் காட்டும் ,,,
அழிவே உந்தன்
அடி எண்ணம் மாற்று ….
கண்ணில் காமம்
கசியும் நிலையை
தூவும் பெண்ணே – உன்
தூரிகை மாற்று ….
கண்டவன் நின்றவன்
கன்னியில் ஏறியே
காமம் புணர்தல்
கழிவே நிறுத்து ….
பொல்லா உடலை
பொருத்தி உயிரில்
நடக்கும் நிலவே
நாயாய் வேண்டாம் …
தப்பை விதைத்து
தண்டனை அறுக்கும் …
குற்ற மன்றாய்
குந்த வேண்டாம் …
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -16/03/2019
நிச்சயம் நீ அழுவாய் ….!
நிச்சயம் நீ அழுவாய் ….!
நானும் இன்று தொழிலாளி
நாளை ஒரு முதலாளி …
நயாகராவாய் நீளுவேன்
நாள் திசையும் ஓடுவேன் ….
கண்டபடி வார்த்தைகளை
நெஞ்சுக்குள்ளே எறிந்தவனே …..
கெஞ்சுகின்ற காலம் ஒன்று
கொஞ்சி வரும் காத்திரு …..
பஞ்சு போல பிய்த்தவனே
படு பாதகங்கள் செய்தவனே …..
கொடுங்கோல் உடைத்தெறிய
கொட்டும் தேளாய் நான் மலர்வேன் …
உப்பு கண்ணீர் உடல் படிய
உள்ளம் தீயாய் எரிய ….
பற்றும் தீயாய் நான் வருவேன்
பாதகனே நீ அழிவாய் ……
முற்றுகையில் நீ அமிழ
முட்டாள் சிந்தை இன்றொழிய ….
கத்துகின்ற நாள் வரும் பார்
கை கட்டும் நிலை தரும் பார் ….!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -14/03/2019
நினைவில் துடிக்கும் காதல் …!
நினைவில் துடிக்கும் காதல் …!
இன்று வந்து உன் நினைப்பு
இதயத்தை வாட்டுதடி ..
தூக்கம் இன்றி விழி
துடி துடித்து சாகுதடி …
பாண் மேலே பட்டரிட்டு
பாசமுடன் நீயளித்த ….
உணவு பரிமாறல்
உள்ளத்திலே இனிக்குதடி …
கையிலே காசு இன்றி
காகிதம் தூது விட்ட ….
உன் பணி எண்ணையில
உள்ளம் துடிக்குதடி …
தனிமையில நான் தவிக்க
தாலாட்டு நீ பாட …
உள்ளத்தில சிறு மகிழ்வு
ஊட்டினாய் மறவேனே ….
முகில் முட்டும் மலையோரம்
முடங்கி நீ மறைந்தாலும் …
நினைவுக்குள் நீ இருப்பாய்
நீங்காது மலர்வாய் ….
நான் உனை பார்த்திடத்தான்
நாள் ஒன்று வந்திடுமா ..?
நான் தொழும் என்னிறைவா
நாள் ஒன்று தந்திடுமா ..?
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -12/03/2019
நாம் வாழ்வோம் ஓடி வா …!
நாம் வாழ்வோம் ஓடி வா …!
துளை போடும் பார்வைக்குள்ள
துடுப்பாட்டம் ஈடுப்பாட …
மனது மயங்குதடி – விழி
மத்தாளம் கொட்டுதடி …
காற்று பட்டு சேலை நுனி
கன்னம் வருட …
அடி உள்ளம் துள்ளுதடி
ஆசை காதல் கொல்லுதடி …
அச்சப்பட்டு வெக்கப்பட்டு
அடி மேனி வேர்க்குதடி …
காத்திருந்த போதுமடி
கண்ணே நீ வந்திடடி . …
வயதான வேளையில
வாலிபம் சாக முன்ன …
வாழ வேணுமடி
வாழ்க்கை பட வேணுமடி …
தினம் தோறும் தேவைகளோ
தீராது கூடுமடி …
அயராது உழைத்து கொட்ட – இந்த
ஆயூள் போதாதடி …
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -10/03/2019
பிறந்த நாளில் இறக்க வேண்டும் …!
பிறந்த நாளில் இறக்க வேண்டும் …!
நான் பிறந்த நாளு – அட
ஏன் பிறந்தன் சாமி …?
நாளுமே கோடி துன்பம்
நட்டு படைத்த சாமி …
வலியெடுக்க நெஞ்சுக்குள்ள – நீர்
வழிந்தோட கண்ணுக்குள்ள …
செத்து செத்து பிழைக்கிறேன்
சொகம் இன்றி தவிக்கிறேன் ….
கலரு என்ன கறுப்பா …
கண்ணை மூடி படைத்தவா …
தொல்லை வேணாம் விட்டு விடு
தொலைய வேணும் எடுத்து விடு …
வெறுப்பான உலகத்தில
வெந்து வாழ முடியல …
தப்பான மனிதத்தில
தாழ நிதம் முடியல ….
ஆண்டென்ன நாப்பதாச்சு
ஆயுல் வாசலாச்சு …
வந்து விட்டேன் இது போதும்
வாழ்ந்து விட்டேன் அது போதும் …
நான் பிறந்த நாளினிலே
நான் மடிய வேண்டுகிறேன் …
என் ஆசை வேண்டுதலை
என்னிறைவா தந்து விடு ….!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -07/03/2019
என் காதலை ஏற்றுவிடு …!
என் காதலை ஏற்றுவிடு …!
உடையாத நிலவே
உள்ளம் தரவா …?
உயிரையே தாரேன்
உள்ளே வரவா ..?
ஒத்தவரி சொல்லம்மா
ஒத்துகிறேன் எண்ணம்மா ….
கரை தேடும் அலைபோல
காத்திருக்கேன் நானம்மா …
ஏக்கம் தந்து போறவளே
என்ன பதில் சொல்லாயோ ..?
தாக்கம் தந்து நின்னவளே
தகுமென்னு கூறாயோ …?
பாதி நாளு தூங்கவில்லை
பகலிரவு தெரியவில்லை …
என்னாச்சோ தெரியவில்லை
என்னையே காணவில்லை ….
உன்னாலே தவிக்கிறேனே
உள்ளமே புரிந்திடுவாய் …..
இந்நாளு உந்தனுக்கே
இதயம் தந்திடுவாய் ……..!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -01/03/2019
உன்னை நான் மறப்பேனா …?
உன்னை நான் மறப்பேனா …?
உடைத்து பாயும் அருவி போல
உன் நினைவு ஓடுதடி…..
உருளும் அலை வேகம் போல
உள்ளம் ஆடுதடி …
வெடித்து பறக்கும் கணை போல
வேகம் கூடுதடி – என்னை
வேக வைத்து பார்த்தவளே
வேண்டும் வரம் தந்திடடி ….
பூவை சூடி நீயும் நடக்க
பூமி குளிருதடி – அந்த
வானம் கூட சிரிக்க
வாழ்த்து கொட்டுதடி ….
கலைந்த கூந்தல்
கண்ணில் விழவே காதல் பிறக்குதடி .
கண்ணே உன்னை தீண்டத்தானே
காமம் அழைக்குதடி …
நெஞ்சுக்குள்ளே உந்தன் நினைவு
நெருப்பாய் கொதிக்குதடி ….
நெஞ்சே உன்னை சுமந்தேன்
நெருங்கி வந்திடடி …!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -26/02/2019
அழகிய வெள்ளச்சி ….!
அழகிய வெள்ளச்சி ….!
பருவத்தில் உடைந்தவளே
பால் நிலவாய் பொழிய …
கூடுகள் வாடுதடி
குளிராலே நோகுதடி ….
மெல்ல மெல்ல நீ உருக
மேனி மெல்ல விறைக்க ..
உன்னை திட்டி உதடு பேச
உருகும் பனியே அழுதிடுவாய் …
முன் பகலின் வெண்பனியே
முழு நிலவாய் நிலம் வீழ்ந்து ….
மேகமாய் விரிந்தேன்
மேனி வதைக்கிறாய் …?
உடல் மேலே எடை ஏற்றி
உருவங்களை மாற்றி ..
ஆட வைத்து மகிழ்வாய்
அடியே வேணாம் சீண்டலே ….
அழையாமலே உடல் வீழ்ந்து
ஆடி பாடும் வெண்பனியே …
சொல்லாமலே மறைந்த தென்ன..?-என்
சொந்தமே பிரிந்ததென்ன …?
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -11/02/2019
என்னை ஏன் மறந்தாய் …?
என்னை ஏன் மறந்தாய் …?
ஆள் மனதில் நீ உறங்க
அழுது விழி உடல் நோக ….
தேம்புதடி உன் நினைவு
தேவதையே என் செய்வேன் ..? ..
கை பிடிக்கும் தூரத்திலே
காணமல் போனவளே ….
பெருக்கெடுத்த நிலவொளியில்
பேரழகை தேடுகிறேன் …
கூடு கட்டி தனிமையிலே
கூடி வாழ ஆசைப்பட்ட ….
நினைவுகளின் வேர் அறுத்து
நினைவே ஏனெறிந்தாய் ….?
கண்ணீர் சாலையிலே
காயங்களால் வாடுகிறேன் ….
பேறு கொண்டு முன்னெழுந்த
பெரும் கனவு சிதறிடிச்சு …..
வில்லெடுத்து அம்பெய்து
வீழ்த்தி நெஞ்சை போனவளே ….
காரணத்தை சொல்லி விடு
காதல் செய்த பாவம் என்ன …?
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -10/02/2019
அசிங்கதில் பிறந்தவளே …அடங்கு ….!
அசிங்கதில் பிறந்தவளே …அடங்கு ….!
ஆடை வெட்டி உடல் காட்டி
ஆடி போவது யாரோ ..?
ஆடவன் தொடர பூவும் கிழிய
அழுவது இன்று ஏனோ …?
ஆசை ஊற உறவு கூட
அலைவது இந்த பெண்ணே
அந்தோ வந்தான் கற்பை தின்றான்
அழுவது இன்று வீணே …
நடிப்பில் நன்றாய் மிஞ்சி நிற்பீர்
நாயிடை கீழாய் ஆனீர் …
கொஞ்சி குலவி ஆசை தீர்த்து
கொடியான் ஆனாய் எறிவீர் …
பத்தினி என்றே பாரில் அலையும்
பாவையே கொஞ்சம் நிற்பாய் ..
கன்னி தண்மை சோதனை நடத்தி
கற்பை கூறு முன்னாய் ….
வழியில் கிழிசல் பெருகி கிடக்கும்
வந்தான் மறைத்து நடப்பான் …
இந்த விடயம் ஏதும் புரியா
இன்றும் பத்தினி நடிப்பாம் ….
விதிகள் மீறி வீதியில் செல்லும்
விதிகளை முன்னே மாற்று ….
உன்னை மாற்றிட மறந்தேன்
ஊனமாய் ஆணை இழிந்தாய் …?
கற்பை தின்றான் என்றே பாடி
கட்டி வைத்து கொன்றாய் ..
கற்பை இழந்தாள் வாழ்வு நாளை
கரம் பிடிப்பது ஆணே மறந்தாய் ….
உன்னை காப்பதாய் எண்ணி இங்கே
உன்னில் ஏனோ உமிழ்ந்தாய் ..?
உலகின் முன்னே நீயே இன்று
உலவும் வேசி ஆனாய் …
சிந்தனை விரித்தே கொஞ்சம் எழுவாய்
சிறகு பறவை ஆவாய் …
திசைகள் அறிந்து வழிகள் அறியும்
திறவு கோல் ஆகி மலர்வாய் ….
ஆசை தீரும் உடலுறவு
அசிங்கத்தில் மலர்வது கர்ப்பம் …
அதனை அறியா அரங்கில் ஏறி
அசிங்கமே என்ன உரைத்தாய் ..?
நாளுமே ஆசை தீர தானே
நாயே செய்வாய் என்ன ..?
முன்னுக்கு பின்னே முரண்கள் கூவி
முட்டாளாவது பெண்ணே …!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -09/02/2019
( கற்பழித்தான் என ஊரே கூடி ஒருவனை அடித்து கொன்ற துயர் அறிந்த பொழுது )
தப்பி ஓடு ….!
தப்பி ஓடு ….!
வண்டமிழ் வீரத்தை
வந்தவன் கொய்வதோ ..?
வாலாட்டும் நாய்களாய்
வண்டமிழ் மலர்வதோ ..?
கூணாது பேசும்
கூனிகள் வாய்களிற்கு …..
நகல்களாய் மாறும்
நகைச்சுவை ஆணீரோ ..?
வீர திருமறைகள்
விளையாது என்றெண்ணி …..
முதிர் கன்னி விழி நீராய்
முன்னே வீழ்ந்தீரோ ..?
உறங்கி போனதால்
ஊர்வலம் போகின்றீர் …
நாளை எழுவார்
நரகத்தில் மறைவீர் ….
கருணாக்கள் உயிலில்
கரிகாலன் உறைந்தான் …
கண்ணிலா பொழுதிலும்
கருணாக்கள் பயந்தான் ….
பேருக்கே அஞ்சும்
பெருச்சாளிகள் எல்லாம் …
முரசு அறைந்தீரோ ..?
முன் எச்சரிக்கை மறைவீர் ..!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -05/02/2019
முன்னேறி தாக்கு ………!
முன்னேறி தாக்கு ………!
செழிமைக்கும் எளிமைக்கும்
செந்தமிழ் முழுமைக்கும் ……..
அடிமையாய் மூழ்கவோ –
அட தமிழா எழுவாய் …..
வெந்தணல் மனத்திற்குள் –
வேகும் கனதிக்குள் …………..
பொசுங்கவோ நீயின்று ..?
பொடியாக்கி பகை முழக்கு ….
வந்தனர் ஆரியர் –
வலிகளை தந்திங்கு ……….
குந்திட விடுவதோ ..?
குல தமிழ் அழுவதோ …?
செய் நெறி விற்றுமே
செந்தமிழ் குடித்தவர் ………..
வந்தாளா விடுவதோ ..? – தமிழ்
வழி மாறி மடிவதோ ..?
முன்னைய பரம்பரை
முன் விட்ட தவறதை …..
பின்னைய பரம்பரை
பின் தொடர் முறையோ …?
கரிகாலன் வழி சொன்ன
கனதியாம் தமிழீழம் ……
ழுமையாய் பெற்றிட
முன்னேறி தாக்கு ………!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -21/01/2019
ஏன் இவள் இப்படியானாள் …?
ஏன் இவள் இப்படியானாள் …?
கொட்டுகிற அருவியில
கொடி கூந்தல் விரிப்பவளே ….
கொடுக்கை அவிழ்க்க பாக்ககுதடி
கோர அலை தாக்குதடி ….
முடிச்சவிழ்ந்து போகுமென்று
மூசி அலை வீசுதடி …
அடி ஆற்று பக்கம் யாரும் வந்தா
அம்மணமே என் செய்வாய் …?
ஒத்தையில உன்னை வைச்சு
ஓடி விளையாடுதடி …
கட்டெறும்பா குத்தி தானே – தேகம்
காயம் வைத்து போகுதடி ….
வைச்ச கண்ணு வாங்காம
உச்சி வானம் பாக்குதடி ..
மஞ்சள் வெயில் வீசுறவன்
மடி தடவி போறாண்டி ….
ஒத்திருந்தது பேசிடவே
ஒர கண்ணனால் பார்ப்பவளே ..
கன்னி ராசி கொண்டவனோ
கள்ள சூரியன் திண்ணுறானே ….!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -24/10/2018
உன்னை மறக்க என் செய்ய …?
உன்னை மறக்க என் செய்ய …?
உன் பாடல் நான் கேட்டு ஆடவா ..? – தினம்
உன்னோடு நான் வந்து கூடவா ..?
ஏனோ இன்று நான் பாடும்
என் கீதம் நீ ஆனாய் …?
பாடி பாடி அழைத்தவளே
பாடி தேடி பார்க்கிறேன் …
என் தேகம் உள்ளுக்குள்ளே
என் செய்தாய் துடிக்கிறேன் …..
ஓடி வந்து காதுக்குள்ளே
ஓதி என்ன போகின்றாய் …?
ஏறி வந்து பார்க்கும் முன்னே
எங்கோ ஓடி மறைகின்றாய் …?
கனவாகி தினம் விழவே
கன்னி பூவே துடிக்கிறேன் ….
கனவுக்குள் வதைகள் செய்தேன்
கண்ணே நோக வைக்கிறாய் ….?
தலையாட்டி பாடும் குயிலே – உன்
தாலாட்டில் தூங்கிறேன் ….
ஏது செய்வேன் என் கிளியே
உனை மறக்க கூறாயோ …?
-வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -21/07/2018
சிறை பட்ட புலி ….!
சிறை பட்ட புலி ….!
சிறைக்குள்ளே புலி ஒன்று சிறை பட்டதோ ..?
சிறை பட்டும் அடங்காது குரல் இட்டதோ ….?
இவன் செய்த பாவம் இன்றென்னவோ..?
இது தான் தமிழ் என்றான் இது குற்றமோ ..?
ஏனடா தமிழா நீ மூடனா ..?
எரியடா தீயாய் நீ நாடடா …
சிறைக்குள்ளே நுழைந்து சிறை நிரப்படா
சீமான் பிள்ளைகள் நாம் சொல்லடா ….
கொடியவன் ,கொள்ளையன் அதிரட்டுமே
கொடியார் விலங்கும் உடையட்டுமே …
இனி ஒரு கைதை நிறுத்தட்டுமே
இது தான் போர்க்குணம் தமிழ் உரைக்கட்டுமே…
சிறை பட்ட புலி இனி தூங்கிடுமோ ..?
சிறுத்தையின் பிள்ளைகள் தூங்கிடுமோ ..?
ஏதடா தமிழா உன் போர்க்குணமோ ..?
எங்கே கட்டாட இது களமே….
அஞ்சுதல் தமிழுக்கு கேவலமே
அடிமை தமிழுக்கு சீதனமோ ..?
கெஞ்சுதல் இங்கே முதல் பாவமே
கொட்டடா முரசு விலங்கு உடையட்டுமே ….!
19/07/2018 சீமானை சிறை அடைத்த செய்தி அறிந்த போது…!
-வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -21/07/2018
முடிந்தால் வா மோதலாம்
முடிந்தால் வா மோதலாம்
எழுந்தவர் வீழ்ந்தவர் நூறடா – இங்கு
எரியுது கேள்வி தீ பாராடா ….
தீர்வுக்கு நீர் நீ ஊற்றடா
தீராத பகை நீள் எதுக்கடா ..?
பொதுவென வந்தால் திறனடா
போர் என வந்தால் கள மடா …
எது இன்று உனக்கு சொந்தமோ …?
ஏற்று நீ வருவாய் மன்றமோ …?
அறியாதார் சிந்தைக்குள் ஆயிரம்
ஆமைகள் உள்ளதை காணலாம் …
புரிந்தவர் சிந்தைக்குள் ஆயிரம்
புரட்சிகள் வெடிக்குது மகிழலாம் ……
என்னடாய் சொன்னாய் ஏதிலி – சிந்தை
எண்ணா உள்ள போக்கிரி ….
யாரடா இங்கே சீர் கேடி …?
யாம் முன்னே என்னடா போர்க்கொடி …?
என் தமிழ் உனக்கென்ன கீழ் நிலையா ..?
என்னடா சொன்னாய் கேவலமா …
வன்னியின் மைந்தர்கள் மூலமே
வான் ஆண்டா சாட்சிகள் கூறுமே ….!
–வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -15/05/2018
வன்னி மைந்தன் கவிதைகள்
நீ பிள்ளையா
நீ பிள்ளையா
அழகான ஊருக்கும்
ஐயாறு பிள்ளைக்கும்
முதலான தந்தை
முன் என்ன தலை வெட்டு …?
காதில கம்மலும்
கரட்டி ஓணான் தாடியும்
குண்டி காட்டும்
குளியாத சட்டையும் …..
உலக அழகு என்று
ஊர் சுற்றும் காவாலி ….
போலான பிள்ளைக்கு
பொறுப்பெங்கே கூடி வரும் ..?
தான் உண்ணும் வேளையில்
தான் பெற்றது அழுகுதென்று
உண்டதை எறிந்தோடி
உயிர் காத்த அப்பனை …..
வழி மறந்து போனவனே
வாழ்ந் தென்ன கண்டாய் ..?
முதியோர் இல்லத்தில்
முன் எறிந்து ஏன் போனாய் ..?
எதிர் காலம் ஒன்றுண்டு
என்பதை மறந்தின்று …
உலவி திரிபவரே
உது போல நிலையுனக்கும் கான் …!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -21/01/2018
வன்னி மைந்தன் கவிதைகள்








