Tag: ஏன் மறந்தாய்
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்
என்னை ஏன் மறந்தாய் …?
என்னை ஏன் மறந்தாய் …?
ஆள் மனதில் நீ உறங்க
அழுது விழி உடல் நோக ….
தேம்புதடி உன் நினைவு
தேவதையே என் செய்வேன் ..? ..
கை பிடிக்கும் தூரத்திலே
காணமல் போனவளே ….
பெருக்கெடுத்த நிலவொளியில்
பேரழகை தேடுகிறேன் …
கூடு கட்டி தனிமையிலே
கூடி வாழ ஆசைப்பட்ட ….
நினைவுகளின் வேர் அறுத்து
நினைவே ஏனெறிந்தாய் ….?
கண்ணீர் சாலையிலே
காயங்களால் வாடுகிறேன் ….
பேறு கொண்டு முன்னெழுந்த
பெரும் கனவு சிதறிடிச்சு …..
வில்லெடுத்து அம்பெய்து
வீழ்த்தி நெஞ்சை போனவளே ….
காரணத்தை சொல்லி விடு
காதல் செய்த பாவம் என்ன …?
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -10/02/2019
Home » ஏன் மறந்தாய்






