தமிழர்கள் வந்தேறிகள்- சிங்கள அரசு

Spread the love

தமிழர்கள் வந்தேறிகள்- சிங்கள அரசு

இலங்கையின் பூர்வி குடிகளான தமிழர்கள் வந்தேறிகள் என வந்து குடியேறிய சிங்களவர்கள் பேசி வருகின்றமையும் ,

பிக்குகளை கொண்டு தமிழர்கள் மீது வன்முறையை தூவி வருவதையும் நடப் பாண்டு ஆட்சியில் மக்கள் அவதானிக்க முடிகிறது


நல்லிணக்கத்தை சிதைத்து ,ஒன்று பட்ட இலங்கையர்களாக மக்கள் ஒன்றித்து வாழ்வதை ஆளும் இனவாத அரசு விரும்பவில்லை .


தனி பெரும் பான்மை வாக்குகள் பெற்று எம்மை அதிகாரத்தில் சிங்களவர்களே வைத்தனர் .

அதனால் தமிழர் பகுதியில் அவர் தம் பிரச்சனைக்கு தீர்வு இல்லை ,என்பதையும் பேச்சளவில் மட்டும் அபிவிருத்தியை பேசி வருகிறது ஆளும் வர்க்கம் ,

நால்லாட்சி தத்துவம் பிடுங்கி ஏறிய பட்டு வன்மம் தேய்ந்த இனவாத ஆட்சி நாட்டில் பரவி கிடக்கிறது .

கொடூரமாக பழிவாங்க பட்டு வஞ்சிக்க பட்ட தமிழர் இனம் இதுவரை போர் வடுவை தாங்கியபடி நடை பயில்கிறது .

வீடு இன்றி ,உயிர் வாழ தகுந்த வீடின்றி ,இந்த குடும்பம் அல்லல் படுகிறது


குடும்ப உறவுகளை கொன்று வீசிய அதிகாரம் ,அதை மன்னித்து எமக்கு வாழ்வு கொடுங்கள் ,உங்கள் வாக்கை தாருங்கள் என்றால் வலி தாங்கிய சமூகம் என்ன செய்யும் ..?

ஒற்றை புரிதல் கூட இல்லாத இனவாத ஆளும் அரசு ,எதிர்காலத்தில் தமிழரால் எமக்கு ஒருபொழுதும் வாக்கு தாராமாட்டார்கள்

என்பதை உணர்ந்த நிலையில் ,அந்த தமிழ் பேசும் மக்களை பழிவாங்கும் அரசியல் வலையை விரிந்துள்ளது .

அதற்குள் சிக்கி தவிக்கும் அப்பாவி தமிழர்களை காப்பாற்ற யார் வருவார் என தமிழர் சமூகம் கண்ணீருடன் தவிக்கிறது .

தமிழ் தேசியம் பேசும் தமிழ் அரசியல் கட்சிகள் ,அவர் தம் தனி நலனை முன் நிறுத்தி ,தமது குடும்ப உறவுகளுக்கு

சொத்து சேர்க்கும் சுய அரசியல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்


வெள்ளாதல் பாதிக்க பட்ட தமிழர் பகுதி புறக்கணிக்க பட்டதில் இருந்து நாம் இந்த விடயங்களை மிக துல்லியமாக அவதானிக்க முடிகிறது

வஞ்சிக்க பட்ட தமிழர் இனம் என்று எழுந்து நிமிரும் ..?இனவாத சிங்களத்தை என்று வேரோடு பிரட்டும் ..?

  • வன்னி மைந்தன்-

Leave a Reply