Tag: சடலம்
வீதியோரத்தில் உள்ள முட்புதர் ஒன்றில் சடலம்
வீதியோரத்தில் உள்ள முட்புதர் ஒன்றில் சடலம்
ஹப்புத்தளை, பிடபொல பிரதேசத்தில் வீதியோரத்தில் உள்ள முட்புதர் ஒன்றில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (23) காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 33 வயதுடைய இதல்கஸ்ஹின்ன, போவத்த பகுதியைச் சேர்ந்தவராவார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக தியத்தலாவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு
வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு
வவுனியா, ஓமந்தை, நாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலையில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் நேற்று (05) மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைவிடப்பட்ட கற்க்குவாரியாக காணப்பட்ட அந்த பகுதியில் சடலம் ஒன்று கிடக்கின்றமை தொடர்பாக அப் பகுதிக்கு சென்றவர்களால் ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு
சடலம் அழுகிய நிலையில் உள்ளமையினால் சில தினங்களிற்கு முன்னராகவே இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஓமந்தை பொலிஸார் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பு வாவியில் ஆணின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு வாவியில் ஆணின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு நகரிலுள்ள தனியார் பேரூந்து தரிப்பிடத்தின் அருகிலுள்ள வாவியில் உயிரிழந்த நிலையில் ஆணொருவரின் சடலம் இன்று (28) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதிய காத்தான்குடி 6 ம் பிரிவு ஏ.எல்.எஸ். மாவத்தையைச் சேர்ந்த 49 வயதுடைய முகமது கனிபா முகம்மது அஸ்மி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சுனயீனம் காரணமாக சம்பவதினமான செவ்வாய்க்கிழமை (27) வீட்டை விட்டு வெளியேறி மட்டு போதனா வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் உறவினர்கள் தேடிவந்த போதே வாவியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குடிகார கணவனின் சடலத்தை ஏற்க மறுத்த மனைவி
குடிகார கணவனின் சடலத்தை ஏற்க மறுத்த மனைவி
குடிகார கணவனின் சடலத்தை ஏற்க மறுத்த மனைவியின் செயல் பர பரப்பை ஏற்படுத்தியது ,கணவன் இறந்த நிலையில் அவரது சடலத்தை ஏற்க மனைவி மறுத்ததால் அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர் .
மது போதைக்கு அடிமையான கணவன்
கணவன் குடிபோதையில் நாள் தோறும் மனைவி பிள்ளைகளுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார் ,அதனால் கணவனை விட்டு மனைவி தனியாக வசித்து வந்துள்ளார் .
உழைக்கும் பணத்தை மது போதைக்கு செலவு செய்து மது போதையே வாழ்வாக மாற்றி குடும்பத்தை பராமரிக்க மறந்து மதுவுக்கு அடிமையானதினால் ,கணவனின் சடலத்தை ஏற்க மறுத்த மனைவி செயல் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை கேகாலை இடம்பெற்ற இந்த் சம்பவம் ,இலங்கை மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
நிந்தவூரில் காணாமல் போன மாணவர்களின் ஒருவரின் சடலம் மீட்பு
நிந்தவூரில் காணாமல் போன மாணவர்களின் ஒருவரின் சடலம் மீட்பு
கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போன மாணவர்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓலுவில் நிந்தவூர் எல்லைக் கடலோரங்களில் விளையாட்டில் ஈடுபட்ட 8 மாணவர்களில் இருவர் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போன சம்பவம் நேற்று (16) மாலை அப்பகுதியில் சோக நிலையயை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் காணாமல் போன சூர்தின் முஹம்மட் முன்சிப் என்ற மாணவனின் உடல் இன்று காலை ஒலுவில் பகுதியில் கரையோதுங்கியுள்ளது. மற்றுமொரு மாணவன் தொடர்பான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நிந்தவூரில் காணாமல் போன மாணவர்களின் ஒருவரின் சடலம் மீட்பு
சம்பவ தினம் மாளிகைக்காடு – சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த இரண்டு மாணவர்களே பிரதேச கடலில் புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
13-15 வயதுக்குட்பட்ட 08 பாடசாலை மாணவர்கள் தொழுகையை முடித்துக்கொண்டு துவிச்சக்கர வண்டியில் நிந்தவூர்- ஒலுவில் எல்லை கடற்கரைக்கு சென்று புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன் இரண்டு மாணவர்கள் கடல் அலை உள்ளிழுத்து சென்றுவிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தவிர ஏனைய ஆறு மாணவர்களிடம் நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவலாளியின் உடல் கடலில் சடலமாக மீட்பு
காவலாளியின் உடல் கடலில் சடலமாக மீட்பு
பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடலில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மீன்பிடி துறைமுகத்தில் காவலாளியாக பணியாற்றிய ஒருவரே இவ்வாறு கடலில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் நேற்று (13) இரவு வேலைக்காக வந்திருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மக்கொன பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லண்டன் தேம்ஸ் நதியில் இரு சடலங்கள் மீட்பு
லண்டன் தேம்ஸ் நதியில் இரு சடலங்கள் மீட்பு
லண்டன் தேம்ஸ் நதியில் இரு மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளன
கடந்த மதம் காணாமல் போனவர்களே இவ்வாறு சடலமாக மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
குறித்த மாரணம் தொடர்பில் குற்ற தடுப்பு போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
வீடொன்றில் இருந்து தம்பதியினர் சடலமாக மீட்பு
வீடொன்றில் இருந்து தம்பதியினர் சடலமாக மீட்பு
வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த தம்பதியினரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிரிஹான ஜுபிலி மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து நேற்று (08) இந்த சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
பொலிசார் குறித்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது, வீட்டின் அறையில் கட்டிலில் சில நாட்களுக்கு முன் உயிரிழந்த ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வீட்டின் சமையலறை தரையில் நிர்வாணமாக பெண்ணின் சடலம் இருந்ததாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
சில நாட்களாக குறித்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதாக அயலவர் ஒருவர் மிரிஹான பொலிஸாருக்கு வழங்கிய அறிவித்தலின் படி குறித்த வீடு சோதனையிடப்பட்டுள்ளது.
80 வயதுடைய ஆணும் 96 வயதான பெண்ணுமே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
காட்டு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு
காட்டு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு
ஏலயாபத்துவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உலுக்குளம் காட்டு பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (03) பிற்பகல், அந்த வனப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இருப்பதாக ஏலயாபத்துவ பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், சடலம் அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் குறித்த இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று (04) நீதவான் விசாரணை இடம்பெறவுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏலயாபத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் கட்டடங்களுக்குள் சடலம்
உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் கட்டடங்களுக்குள் சடலம்
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடும் மோதல் ,கட்டடங்களுக்குள் சடலம் மீட்பு , ரஷ்யா நடத்தும் போரில் உக்ரைனுக்கு பலமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது .
உக்ரைன் டொன்ஸ்டெக் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் பல கட்டடங்கள் வீழ்ந்த நிலையில் ,கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து ஐந்து மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளதாக உக்ரைன் மீட்பு படைகள் தெரிவித்துள்ளன .
இரண்டு வருடங்கள் எட்டிப்பிடித்து கடக்கும் போரில் உக்ரைன் உள் கட்டமைப்பு பலமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது .
யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில் வீரர்கள் உயிரிழந்ததாக வந்த செய்திகளை சென்ட்காம் மறுத்துள்ளது
இன்று எண்ணெய் விலை குறைந்துள்ளது
தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்
பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது
சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது
ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது
அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு
அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு
வெலிபன்ன, பல்லேகொட வீதியில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெலிப்பன்ன பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்படுகிறது.
நீதவான் விசாரணையின் பின்னர் சடலம் களுத்துறை நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் வெலிப்பன்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யாழில் ஆண் சடலமாக மீட்பு யாழ்ப்பாணத்தை மிரட்டும் கொலைகள்
யாழில் ஆண் சடலமாக மீட்பு யாழ்ப்பாணத்தை மிரட்டும் கொலைகள்
யாழில் ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .வீடு ஒன்றில் இருந்து இவர் சடலமாக மீட்க பட்டார் .
இவ்வாறு இறந்தவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியை சேர்ந்த 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுளளார் .
இவரது மரணம் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்ப்பில் தெரியவரவில்லை .விசாரணைகள் தொடர்கிறது .
யாழ்ப்பாணத்தை மிரட்டும் கொலைகள் என்று நிறுத்த படும் என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது .
பெண் மர்மமான முறையில் மரணம் சடலம் மீட்பு
பெண் மர்மமான முறையில் மரணம் சடலம் மீட்பு
கொழும்பு 07, விஜேராம வீதியில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் மர்மமான முறையில் சனிக்கிழமை (16) உயிரிழந்துள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மித்ராணி பெர்னான்டோ ஸ்மின் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் 119க்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், உயிரிழந்த
பெண்ணின் சடலம் தரையில் கிடந்ததாகவும், வாய் மற்றும் மார்புப் பகுதியில் இரத்தக் கறைகள் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது தொடர்பில் குருந்துவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள்
- லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியது
- சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்பு
- நுவரெலியா பந்தயத்தில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் படுகாயம்
- ஆஸ்திரேலியா தமிழரை நாட்டுக்கு பணம் அனுப்புங்க அனுரா மன்றாட்டம்
- பல மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்
- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது
- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது
- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது
வீதியில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்
வீதியில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்
மஹியங்கனை – தெஹியத்தகண்டிய பிரதான வீதியின் கிராந்துருகோட்டை பிரதேசத்தில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அவ்வழியாக சென்ற ஒருவர் சடலத்தை பார்த்து பொலிசாருக்கு தகவல் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கிரந்துருகோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வீதியில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்
சடலம் மீட்கப்பட்ட போது அழுகிய நிலையில் இருந்ததால், சடலத்தை யாராவது அவ்விடத்தில் வீசிவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் ஒரு பாடசாலை மற்றும் பேருந்து நிறுத்தமும் உள்ளதுடன் கருப்பு நிற பயணப்பையொன்றும் காணப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதுடன், கிராந்துருகோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள்
- லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியது
- சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்பு
- நுவரெலியா பந்தயத்தில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் படுகாயம்
- ஆஸ்திரேலியா தமிழரை நாட்டுக்கு பணம் அனுப்புங்க அனுரா மன்றாட்டம்
- பல மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்
- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது
- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது
- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது
- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவு
- ஆகஸ்ட் மாதத்தின் முதல் 13 நாட்களில் 6,000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள்
உயிரிழந்தவர் உயிர்த்தெழுந்த மர்ம சம்பவம்
உயிரிழந்தவர் உயிர்த்தெழுந்த மர்ம சம்பவம்
சடலம் அடக்கம் செய்யப்பட்ட மூன்று நாட்களுக்குப் பின்னர், உயிரிழந்த நபர் தனது தாய் மற்றும் உறவினர்களுடன் கம்பளை வைத்தியசாலையின் திடீர்
மரண விசாரணை அதிகாரி நளின் மெதவக முன்னிலையில் ஆஜராகிய சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவர் உயிர்த்தெழுந்த மர்ம சம்பவம்
அதன்படி இரண்டு மாதங்களுக்கு முன்னர் கம்பளை பஸ் நிலையத்தில் மாரடைப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் சடலம் இரண்டு மாதங்களாக கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.
பின்னர், கம்பளை, மேரிவில வத்த பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் சிலர் வந்து, குறித்த சடலமானது தனது 59 வயதுடைய மகன் லாசர் மைக்கேலின் சடலம் என கூறி சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, குடும்பத்தினர் மதச் சடங்குகள் செய்து உடலை அடக்கம் செய்தனர்.
எவ்வாறாயினும், இறுதிச் சடங்கு நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட நபர் வீடு திரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் இறந்தாக தெரிவிக்கப்பட்ட நபரும் அவரது குடும்பத்தினரும் சம்பவம் குறித்து மரண விசாரணை அலுவலகத்திற்கு அறிவிக்க அலுவலகத்தில் ஆஜரானார்கள்.
குறித்த மர்ம சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்
- இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்
- மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை
- காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள்
- லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியது
- சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்பு
- நுவரெலியா பந்தயத்தில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் படுகாயம்
- ஆஸ்திரேலியா தமிழரை நாட்டுக்கு பணம் அனுப்புங்க அனுரா மன்றாட்டம்
- பல மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை
- ப்ளோரஸ் தீவில் ஏற்பட்ட பேரழிவு
குளியலறையில் இருந்து பழைய சடலம் மீட்பு
குளியலறையில் இருந்து பழைய சடலம் மீட்பு
இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடியிலுள்ள குளியலறையில் மூன்று நாட்களுக்கு முன்னர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும்
நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர்.
பன்னிபிட்டிய, மலபல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் ஹோமாகம டென்சில் கொப்பேகடுவ
மாவத்தையைச் சேர்ந்த சுதத் சிந்தனை ரூபசிங்க (39), என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் தனியார் வங்கியொன்றின் நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றுகின்றார்.
குளியலறையில் இருந்து பழைய சடலம் மீட்பு
குறித்த நபர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மேற்படி முகவரியில் தனது தாயாருடன் வசித்து வந்ததாகவும், பின்னர் தனது தாய் பாதிரியார் ஆனதன் காரணமாக இந்த இடத்தில் தனியாக வசித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இவர் வசித்த அறையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் 119 என்ற அவசர இலக்கத்திற்கு வழங்கிய
தகவலின் பேரில் பொலிஸார் வந்து அறையின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது குறித்த நபரின் சடலம் கிடப்பதை கண்டுள்ளனர்.
- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்
- இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்
- மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை
- காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள்
- லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியது
- சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்பு
- நுவரெலியா பந்தயத்தில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் படுகாயம்
- ஆஸ்திரேலியா தமிழரை நாட்டுக்கு பணம் அனுப்புங்க அனுரா மன்றாட்டம்
- பல மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை
- ப்ளோரஸ் தீவில் ஏற்பட்ட பேரழிவு
கை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
கை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
வவுனியா – தரணிக்குளம், குறிசுட்ட குளம் பகுதியிலிருந்து நேற்று (14) மாலை பெண் ஒருவரின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
தரணிக்குளம் குறிசுட்ட குளத்தின் நீரேந்து பகுதியில் நீரில் மிதந்த நிலையில் காணப்பட்ட அழுகிய நிலையிலுள்ள பெண்ணின் சடலம் தொடர்பாக அப் பகுதி மக்களால் ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதுடன், அதனை மீட்டனர். குறித்த சடலமானது இரண்டு
கைகளும், ஒரு காலும் இல்லாத நிலையில் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
இரு கைகளும், காலும் வெட்டப்பட்டிருக்கலாம் என தடவியல் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சடலமாக மீட்கப்பட்டவர் 26 வயதிற்கு
உட்பட்டவராக இருக்கலாம் என கருதப்படுவதுடன், சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக வவுனியா விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்
- இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்
- மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை
- காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள்
- லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியது
- சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்பு
- நுவரெலியா பந்தயத்தில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் படுகாயம்
- ஆஸ்திரேலியா தமிழரை நாட்டுக்கு பணம் அனுப்புங்க அனுரா மன்றாட்டம்
- பல மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை
- ப்ளோரஸ் தீவில் ஏற்பட்ட பேரழிவு
வலயக் கல்வி அலுவலகத்தின் கழிவறையில் சடலம்
வலயக் கல்வி அலுவலகத்தின் கழிவறையில் சடலம்
கம்பளை வலயக் கல்வி அலுவலகத்தின் மலசலகூடத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கம்பளை கல்வி அலுவலகத்தில் உதவியாளராக கடமையாற்றிய கம்பளை ரத்மல்கடுவ பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கம்பளை பொலிஸ் நிலையத்தில் நேற்று (13) மாலை முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கம்பளை மரண விசாரணை அதிகாரியின் உத்தரவின் பேரில் பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள்
- லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியது
- சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்பு
- நுவரெலியா பந்தயத்தில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் படுகாயம்
- ஆஸ்திரேலியா தமிழரை நாட்டுக்கு பணம் அனுப்புங்க அனுரா மன்றாட்டம்
- பல மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்
- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது
- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது
- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது
யாழ் இளைஞனின் சடலம் வௌ்ளவத்தையில் மீட்பு
யாழ் இளைஞனின் சடலம் வௌ்ளவத்தையில் மீட்பு
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சர்வானந்தா திருசாந்த் (வயது 28) இளைஞன் உயிரிழந்த நிலையில் வெள்ளவத்தை கடற்கரையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவ்விளைஞனின் சடலம், ஞாயிற்றுக்கிழமை (05) மீட்கப்பட்டது.
உயிரிழந்தவரின் உடலில் சிராய்ப்பு அடையாளங்கள் காணப்படுவதாகவும்
, இது தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
- காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள்
- லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியது
- சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்பு
- நுவரெலியா பந்தயத்தில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் படுகாயம்
- ஆஸ்திரேலியா தமிழரை நாட்டுக்கு பணம் அனுப்புங்க அனுரா மன்றாட்டம்
- பல மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்
- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது
- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது
- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது
வௌ்ளவத்தையில் கரையொதுங்கிய யாழ் இளைஞரின் சடலம்
வௌ்ளவத்தையில் கரையொதுங்கிய யாழ் இளைஞரின் சடலம்
வெள்ளவத்தை கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சர்வானந்தா திருசாந்த் என்ற 28 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.
வௌ்ளவத்தையில் கரையொதுங்கிய யாழ் இளைஞரின் சடலம்
இன்று (05) காலை வெள்ளவத்தை பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிரதேசவாசிகளால் சடலம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் உடலில் சிவப்பு நிற சிராய்ப்பு அடையாளங்கள் காணப்படுவதாகவும், இது தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
- காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள்
- லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியது
- சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்பு
- நுவரெலியா பந்தயத்தில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் படுகாயம்
- ஆஸ்திரேலியா தமிழரை நாட்டுக்கு பணம் அனுப்புங்க அனுரா மன்றாட்டம்
- பல மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்
- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது
- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது
- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது







































