Tag: இலங்கை
கிளிநொச்சியில் கற்க வந்த மாணவி – விபத்தில் மரணம்
இலங்கை
கிளிநொச்சியில் கற்க வந்த மாணவி – விபத்தில் மரணம்
கிளிநொச்சி – ஊற்றுப்புலம் கிராமத்தில் இருந்து உயர்தரம் கற்பதற்கான அனுமதிக்கு, கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு வருகை தந்த மாணவியே, இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி – ஊற்றுப்புலம் பாடசாலையில் க.பொ.த சாதாரண தரம் கல்வி கற்ற மாணவிகள் மூவர், உயர்தர கல்விக்காக, கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு
அனுமதி பெறுவதற்காக பாடசாலைக்கு வருகை தந்தனர்.
இதன் போது, ஏ9 வீதியில் மேற்கு பக்கத்திலிருந்து பாடசாலை பக்கமாக உள்ள மஞ்சல் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட போது, ஏ9 வீதியில் பயணித்த பட்டா ரக வாகனம் மாணவிகள் கடந்து செல்வதற்காக நிறுத்தியது.
இதன் பின் வந்த மின்சார சபை ஒப்பந்தகாரருடைய ஹன்ரர் ரக வாகனமும் நிறுத்தியிருந்த போது, பின்னால் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், ஹன்ரர் ரக வாகனத்தை மோதியதில், ஹன்ரர் வாகனம் பட்டாவுடன், மோதி குறித்த வாகனங்கள் இரண்டும் மாணவிகள் மீது மோதியுள்ளன.
இதன்போது சம்பவ இடத்திலயே, திருவாசகம் மதுசாளினி (வயது 17) என்ற மாணவி உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு மாணவி காயமடைந்துள்ளார்.
குறித்த மாணவியின் தந்தை, சைக்கிளில், நாளாந்தம் ஊற்றுப்புலத்தில் இருந்து கிளிநொச்சிக்கு விறகு வெட்டி விற்பனை செய்யும் தொழிலாளி என்பதுடன், மிகவும் வறுமைக்குட்பட்ட நிலையில் தனது மகளை உயர்தரத்துக்கு கற்பித்து அனுப்பிய நிலையில், முதல் நாளே இப்பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது.
சம்பவம் தொடர்பில், கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த விபத்தை அடுத்து, சிவில் சமூக அமைப்பினர், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பெற்றோர்கள், மாணவர்கள் என பல்லும் இணைந்து, கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்
வீதி ஒழுங்குகளை கடைபிடிக்க வேண்டிய பொலிஸார் உரிய காலத்தில் கடமையில் இருப்பதில்லை என்றும் வாகன சாரதிகள் விழிப்புணர்வின்றி வாகனங்களைச் செலுத்துதல் உள்ளிட்ட பல விடயங்களை கண்டித்து, குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வீட்டில் பாரிய வெடிப்பு – இருவர் காயம்
வீட்டில் பாரிய வெடிப்பு – இருவர் காயம்
இலங்கை அலவ்வயில் பன்கொல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் தீடிரென வெடிப்பு சம்பவம்
இடம்பெற்றுள்ளது
இதன் பொழுது அங்கிருந்த இருவர் படுகாயமடைந்துள்ளனர்
மேற்படி வெடிப்பு தொடர்பில் போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இலங்கையில் தொடரும் மர்ம கொலைகள் – வீட்டுக்குள் தூர் நாற்றம்
இலங்கையில் தொடரும் மர்ம கொலைகள் – வீட்டுக்குள் தூர் நாற்றம்
இலங்கையில் ஆளும் கொலையாளிகள் ஆட்சியில் நாடெங்கும் பல மர்ம கொலைகள் இடம்பெற்ற
வண்ணம் உள்ளன, இவை நேரடி பார்வைக்கு தற்கொலை என காண்பிக்க படும் ,ஆனால்
அவையோ திரை மறைவில் திட்டமிடப்பட்ட படுகொலைகளாக பெற்றுள்ளன
இவ்விதம் புத்தளம் பகுதியில் வீடொன்றுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம்
மீட்க பட்டுள்ளது
இது தற்கொலை என தெரிவிக்க படுகின்ற பொழுதும் அவை திட்டமிட்ட பட்ட படுகொலை என்ற நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்
இலங்கையில் கொரானாவுக்கு 22 பேர் மரணம்
இலங்கையில் கொரானாவுக்கு 22 பேர் மரணம்
நேற்று முன்தினம் இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இருபத்தி
இரண்டு பேர் பலியாகியுள்ளனர்
மேலும் அதே நாளில் எழுநூறுக்கு மேற்பட்டவர்கள் புதிய தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்
மழைக் காலத்தில் மேற்படி நோயானது வேகமாக பரவி வருகின்றமை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
இலங்கைக்கு அமெரிக்கா 150 மில்லியன் நிதியுதவி
இலங்கைக்கு அமெரிக்கா 150 மில்லியன் நிதியுதவி
இலங்கை அரசின் வேண்டுதலுக்கு இணங்க அமெரிக்கா 50 மில்லியன் டொலர் கடன் உதவி
வழங்கியுள்ளது
நாட்டின் அபிவிருத்திக்கு இந்த நிதி பயன் படுத்த பட உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
ஆளும் கோட்டா ,மகிந்தா ஆட்சியில் பலத்த லஞ்சம் ,ஊழல் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
,இவ்வேளை
இந்த நிதி உதவிகள் செல்வதும் அதிலும் மோசடிகள் இடம்பெறுவதும் குறிப்பிட தக்கது
கடலில் மிதந்த பெண்ணின் சடலம் – வாலிபன் மாயம்
கடலில் மிதந்த பெண்ணின் சடலம் – வாலிபன் மாயம்
மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் நேற்று (13) காலை
சடலமாக கரை ஒதுங்கிய யுவதி, மன்னார் பஸ் தரிப்பு நிலையத்தில் இளைஞர் ஒருவருடன் நடந்து வருகின்ற CCTV காட்சி வெளியாகியுள்ளன.
குறித்த காட்சியானது கடந்த வியாழக்கிழமை (11) மாலை பதிவாகி உள்ளது.
குறித்த யுவதியும், இளைஞன் ஒருவரும் முகக்கவசம் அணிந்து நடந்து வருகின்ற காட்சி பதிவாகி உள்ளது.
இந்த நிலையில் வியாழக்கிழமை (11) மாலை 7 மணி அளவில் மன்னார் பிரதான பாலத்தில் இருந்து
கடலில் மிதந்த பெண்ணின் சடலம் – வாலிபன் மாயம்
பெண் ஒருவர் கடலில் குதித்ததாக நேரில் கண்டவர் மீனவர் ஒருவர் பொலிஸாரிடம் தெரிவித்த
நிலையில் பொலிஸாரும், கடற்படையினரும் உடனடியாக தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிய வந்துள்ளது.
எனினும் எவரும் மீட்கப்படவில்லை.
சாக்கில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு
இந்த நிலையில் நேற்று (13) காலை யுவதி ஒருவர் கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் சடலமாக
கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
எனினும் இது வரை சடலம் அடையாளம் காணப்படவில்லை.
யாழ்ப்பாணத்தில் எறிகணை மீட்பு – இராணுவம் அறிவிப்பு
யாழ்ப்பாணத்தில் எறிகணை மீட்பு – இராணுவம் அறிவிப்பு
யாழ்ப்பாணம் நாவாந்துறை பொம்மைவெளி பகுதியில் இருந்து 81 எம் எம் எறிகணை ஒன்று மீட்க பட்டுள்ளது
மேற்படி விடயம் குறித்து இராணுவத்தினருக்கு தெரிவிக்க பட்ட நிலையில் ,விரைந்து வந்த இராணுவத்தினர் குறித்த எறிகணையை மீட்டனர்
250 மில்லியன் வருமானம் – அதிகரிக்க பட்ட வரி
250 மில்லியன் வருமானம் – அதிகரிக்க பட்ட வரி
இலங்கையில் நேற்று வெளியிட பட்ட வரவு செலவு அறிக்கையில் பெரு ம் நிறுவனம்களிடம்
இருந்து வரி அறவீடும் தொகை அதிகரிக்க பட்டுள்ளது ,இதன் ஊடாக மேலதிகமாக 254 மில்லியன்
ரூபாய்களை ஈட்டி கொள்ள திட்டமிட்ட பட்டுள்ளது
ஆளும் அரசின் இந்த திடீர் நடவடிக்கையால் பெரும் நிறுவனங்கள் கொதிப்பில் உறைந்துள்ளன ,
அத்துடன் அத்தியாவசிய பொருட்கள் விலைகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள்
கருத்துரைத்துள்ளனர்
இளம் ஆண் பெண்களுக்கு விவசாயம் செய்திட காணி – அரசு அதிரடி அறிவிப்பு
இளம் ஆண் பெண்களுக்கு விவசாயம் செய்திட காணி – அரசு அதிரடி அறிவிப்பு
விவசாயிகளின் நலன்களை உறுதி செய்வதற்கும், விவசாயிகளை பாதுகாப்பதற்கும் சட்டம் தயாரிக்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும், பயிர் செய்கை மேற்கொள்ளப்படாத நிலங்களை, இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு பயிர்ச்செய்கைக்காக வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட உரையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, பால் உற்பத்தி தொடர்பான திட்டங்களை அதிகரிக்கும் நோக்கில் திரவ பால்
பாவனையை அதிகரிப்பதற்காக ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழ் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள
தொகைக்கு மேலதிகமாக மேலும் 1000 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்க எதிர்பார்ப்பதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
சாராய போத்தல்களுக்கு வரி அதிகரிப்பு – கொதிக்கும் குடிமகன்கள்
சாராய போத்தல்களுக்கு வரி அதிகரிப்பு – கொதிக்கும் குடிமகன்கள்
இலங்கையில் நேற்று அறிமுக படுத்த பட்ட வரவு செலவு அறிக்கையில் மதுபானங்களுக்கு பல
நூறு ரூபாய்கள் வரி அதிகரிக்க பட்டுள்ளது .இந்த வரி அதிகரிப்பால் குடிமகன்கள் பெரும்
கொதிப்பில் உறைந்துள்ளனர்
இதன் மூலம் பல மில்லியன் ரூபாய்களை வாரியாக பெறும் நோக்கில் இந்த அதிகரிப்பு
இடம்பெற்றுள்ளது
ஆளும் அரசு எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெறாது என எதிர் பார்க்க படுகிறது
கிளிநொச்சியில் அதிகரிக்கும் கொரனோ – மக்களுக்கு எச்சரிக்கை
கிளிநொச்சியில் அதிகரிக்கும் கொரனோ – மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கை கிளிநொச்சி பகுதியில் மீண்டும் கொரனோ நோயானது அதிகரித்து வருவதாக
தெரிவிக்க பட்டுள்ளது
கடந்த தினம் மட்டும் ஐம்பதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தொற்று கண்டு பிடிக்க பட்டுள்ளது
சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிய மறுத்து மக்கள் செல்வதும் ,சுகாதார கேட்டின்
ஊடாகவும் இந்த
பரவல் இடம்பெற்று வருவதாக சுட்டி காட்ட பட்டுள்ளது
வவுனியாவில் போதையில் தமிழ் வாலிபனை தாக்கிய இராணுவம் – வீடியோ
வவுனியாவில் போதையில் தமிழ் வாலிபனை தாக்கிய இராணுவம் – வீடியோ
சற்று முன்னர் வவுனியா பகுதியில் ஆட்டோவில் பயணித்து கொண்டிருந்த தமிழ் வாலிபன்
ஒருவரை வழிமறித்த இராணுவத்தினர் சரமாரியாக தகக்கியுள்ளனர்
அதி போதையில் இருந்த இராணுவ சிப்பாய்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்
சம்பவ ஐஇடத்திற்கு விரைந்து வந்த ஊடக நபர்கள் மேற்படி விடயத்தை அம்பல படுத்திய நிலையில் இவர்கள் சிக்கலில் உள்ளனர்
இதுவே தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது
கோட்டா ஆடசியில் இராணுவ மயமாக்களின் ஒன்றாக இதனை பார்க்க முடிகிறது ,தமிழா என்று
விழிப்பாய் ..? கூட்டமைப்பு என்ன செய்கிறது இதுவே மக்கள் கேள்வியாக உள்ளது
யாழில் இளம் பெண் கற்பழிப்பு – இருவர் கைது
யாழில் இளம் பெண் கற்பழிப்பு – இருவர் கைது
யாழ்ப்பாணம் பருத்துறை பகுதியில் 15 வயதுடைய இளம் பெண் ஒருவர் இரண்டு
வாலிபர்களினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டுள்ளார்
பேரூந்து நிலையத்தில் அதிகாலை வேளையில் தனிமையில் நின்ற பொழுது அவர் காவல்
துறையினர் விசாரித்த வேளையில் மேற்படி விடயம் அரங்கேறியுள்ளது
மேற்படி பெண்ணை கற்பழித்த 24 மற்றும் 19 வயது வாலிபர்கள் கைது செய்து தடுத்து வைக்க பட்டுள்ளனர்
எகிறிய டெங்கு நோயாளர்கள் – மக்களுக்கு எச்சரிக்கை
எகிறிய டெங்கு நோயாளர்கள் – மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் மீண்டும் டெங்கு நோயின் இக வேகமாக பரவி வருகிறது
,கடந்த பத்து நாட்களில் மட்டும் சுமார் 1300 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
சுற்று புற சூழல் அசுத்தம் காரணமாக இந்த நோயானது வேகமாக பரவி வருகின்றமை இங்கே
குறிப்பிட தக்கது
இலங்கையில் வேகமாக பரவும் கொரனோ
இலங்கையில் வேகமாக பரவும் கொரனோ
இலங்கையில் மீண்டும் கொரனோ நோயானது மிக வேகமாக பரவி வருகிறது
இவ்வாறு கடந்த தினம் மாட்டு 750 க்கு மேற்பட்டவர்களை இந்த நோயானது பாவியுள்ளமை கண்டு
பிடிக்க பட்டுள்ளது .
விசேட பொலிஸ் தேடுதல் நடவடிக்கை: 1205 பஸ்கள் பரிசோதனை
விசேட பொலிஸ் தேடுதல் நடவடிக்கை: 1205 பஸ்கள் பரிசோதனை
மேல் மாகாணத்தில், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத, 369 பயணிகள் போக்குவரத்து
பஸ்களின் சாரதிகள் மற்றும் 67 குளிரூட்டப்பட்ட சொகுசு ரக பஸ்களின் சாரதிகளுக்கும் பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், மேல் மாகாணத்தில் 581 கடைகளின் உரிமையாளர்களுக்கும் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் நேற்று பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை விசேட பொலிஸ் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மக்கள் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுகின்றார்களா என்பதை கண்டறியவே இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த தேடுதல் நடவடிக்கையில் 437 பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர். மற்றும் 998 பயணிகள் பஸ்கள்
207 குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்கள் மற்றும் 1290 சில்லறை விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் மற்றும் சிறிய கடைகள் ஆகியன பரிசோதனை செய்யப்பட்டன
இன்று வரவு செலவு திட்டம் அறிவிப்பு – பொருட்கள் விலையில் மாற்றம்
இன்று வரவு செலவு திட்டம் அறிவிப்பு – பொருட்கள் விலையில் மாற்றம்
இன்று சற்று நேரத்தில் பாராளுமன்றில் வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்க படவுள்ளது ,இந்த
அறிக்கையின் பின்னர்
இலங்கையில் பொருள்களின் விலையில் மாற்றம் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது
விபத்தில் வண்டிகள் சிக்கினால் தண்டம் – புதிய சட்டம்
விபத்தில் வண்டிகள் சிக்கினால் தண்டம் – புதிய சட்டம்
இலங்கையில் இன்று புதிதாக வெளியான வரவு செலவு திட்ட அறிக்கையில்
தற்பொழுது வாகனங்கள் விபத்தில் சிக்கினால் அதற்கு மேலதிகமாக தண்ட பணம் அறவிட
உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இதன் மூலம் நான்கு மில்லியன் ரூபாய்களை மேலதிகமாக சம்பாதிக்கலாம் என்பது அரசின்
முடிவாக உள்ளது
வீதி விபத்துக்களை தடுப்பதற்கு ஏற்ப இந்த விடயங்கள் அறிமுக படுத்த படுகிறது என தெரிவிக்க பட்டுள்ளது
வவுனியாவில் சிங்கள குடியேற்றங்கள் முழங்கிய ஸ்ரீதரன் VIDEO
வவுனியாவில் சிங்கள குடியேற்றங்கள் முழங்கிய ஸ்ரீதரன் VIDEO
இலங்கையில் ஆளும் சிங்கள அரச படைகளின் கடத்தல் ,காணாமல் போதல் மற்றும் கொலைகள் என்பனவற்றை உடைத்து பேசிய சிறிதரன்
இதில் அழுத்தி காணொளி பாருங்கள்
வெள்ளத்தில் சிக்கிய 288 பேர் – கடற்படையால் மீட்பு
வெள்ளத்தில் சிக்கிய 288 பேர் – கடற்படையால் மீட்பு
இலங்கை வெள்ளத்தில் சிக்கிய 288 மக்களை தாம் மீட்டு கரை சேர்த்துள்ளதாக இலங்கை
கடற்படை தெரிவித்துள்ளது
மேலும் படகுகளுடன் மீட்பு மற்றும் உதவி பணிகளில் தம ஈடுபட்டுள்ளதாக சிங்கள கடற்படை
தெரிவித்துள்ளது






