Tag: இந்தியா
இந்தியவிடம் மேலும் 500 மில்லியன் டொலர் கடன் வாங்கும் இலங்கை
இந்தியவிடம் மேலும் 500 மில்லியன் டொலர் கடன் வாங்கும் இலங்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்கால பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக
நாடுகளிடம் ஓடி ஓடி இலங்கை கடனை வாங்கி குவிகிறது
தற்போது ஐநூறு மில்லியன் டொலரினை இலங்கைக்கு இந்தியா மேலும் கடனாக வழங்க உள்ளது
இந்த டொலர் கடன் ஒயில் இறக்குமதிக்கு பயன் படுத்த படும் என இலங்கை
நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்
இலங்கைக்கு உதவாதீர்கள் ராமதாஸ் கோரிக்கை
இலங்கைக்கு உதவாதீர்கள் ராமதாஸ் கோரிக்கை
இலங்கைக்கு செய்யப்படும் உதவிகள் ஒரு போதும் இந்தியாவுக்கு எதிராக அமைந்து
விடக் கூடாது, எனவே கடல்வழி மின் தடம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
இது குறித்து இன்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதற்கு வசதியாக தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடலுக்கடியில் மின்
பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுகள் மீண்டும் தொடங்கியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்
அதிர்ச்சியளிக்கின்றன. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் அது நாட்டின்
வளர்ச்சியை பாதிக்கும் என்பதை அரசு உணர வேண்டும்.
என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
இந்தியாவுக்கு 3,000 கோடி கடனை திருப்பிச் செலுத்த முடியா தவிக்கும் இலங்கை
இந்தியாவுக்கு 3,000 கோடி கடனை திருப்பிச் செலுத்த முடியா தவிக்கும் இலங்கை
பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு உதவும் வகையில், அந்த நாடு
கடனாகப் பெற்ற 40 கோடி டொலா் (ரூ.3,000 கோடி) தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசத்தை இந்தியா நீட்டித்துள்ளது.
இதுகுறித்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கைக்கு பல்வேறு வழிகளில் இந்தியா உதவி செய்வது தொடா்கிறது. இலங்கை அரசுக்கு அந்த நாட்டு மத்திய வங்கி மூலமாக இந்திய ரிசா்வ் வங்கி 40 கோடி டொலா்
கடனுதவி அளித்துள்ளது. அந்தக் கடன் தொகையை கரன்சி பரிமாற்ற முறையில் இலங்கை அரசு திருப்பிச் செலுத்துவதற்கு அளிக்கப்பட்டிருந்த அவகாசம் கடந்த ஜனவரி மாதத்துடன் முடிந்துவிட்டது. இந்நிலையில், இலங்கை அரசு கடன்
தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசத்தை இந்திய ரிசா்வ் வங்கி நீட்டித்துள்ளது என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியாவுக்கு கடன் தவணையைத் திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
தலைமையிலான அரசு கடந்த 12 ஆம் திகதி அறிவித்தது. IMF மூலமாக நிதியுதவி கிடைக்கும் வரை கடன் தவணை நிறுத்தி வைப்புத் தொடரும் என்றும் இலங்கை அரசு கூறியது.
இந்த அறிவிப்பு வெளியான பிறகு, சா்வதேச அளவில் கடன் தவணையைத் திருப்பிச் செலுத்த இந்தியா அவகாசம் அளித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
இலங்கை மத்திய வங்கியுடன் ‘சாா்க்’ கரன்சி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் இந்திய ரிசா்வ் வங்கி ஒப்பந்தம் மேற்கொண்டது. அந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய ரிசா்வ் வங்கியிடம்
அதிகபட்சமாக 40 கோடி டொலா் தொகையை, டொலா் அல்லது யூரோ அல்லது ரூபாய் மதிப்பில் பல தவணைகளில் இலங்கை மத்திய வங்கி கடனாகப் பெற முடியும்.
இதுதவிர, இந்தியாவிடம் இருந்து அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காக இலங்கை அரசு 100 கோடி டொலா் (ரூ.7,460 கோடி) கடன் பெற்றுள்ளது. பெட்ரோல், டீசல்
உள்ளிட்ட எரிபொருள் வாங்குவதற்காக 50 கோடி டாலா் ரூ.3,700
கோடி இலங்கை கடன் பெற்றுள்ளது.
இலங்கை வந்தடைந்த இந்தியா எண்ணெய் கப்பல்
இலங்கை வந்தடைந்த இந்தியா எண்ணெய் கப்பல்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அதற்கு
கடனடிப்படையில் உதவிட 40 மெட்ரிக் தொன்
எரிபொருளுடன் இந்திய எண்ணெய் கப்பல் ஒன்று இலங்கை வந்தடைந்துள்ளது
இந்திய சமீப நாட்களாக தொடராக இலங்கைக்கு எரிபொருளை அனுப்பிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
இலங்கையில் புகுந்து விளையாடும் இந்தியா சீனா
இலங்கையில் புகுந்து விளையாடும் இந்தியா சீனா
இலங்கைக்கு பாரிய கடனை வழங்கி அந்த ஆட்சியினை கவிழ்த்துள்ள சீனா அரசானது
தற்போது ஏற்படடுள்ள நெருக்கடி நிலையினை அடுத்து மைத்திரி ,சஜித்
உள்ளிட்டவர்களை தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளனர்
இதில் இவ்ரகளுக்குரிய தேர்தல் செலவு மற்றும் முக்கிய ஆட்சி அமைப்பு தொடர்பான விடயங்கள் பேச பட்டுள்ளன
சீனாவின் இந்தஅவசர சந்திப்பும் கலந்துரையாடலும் இந்தியாவுக்கு கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
அதற்கு பதிலாக இந்தியா தமக்கு சார்பான ஒருவர் அரியணையில் ஏறுவதை அது விரும்புகிறது ,அதற்கு ஏற்றது போல
இந்தியா டில்லி மையம் காய்களை நகர்த்தி செல்கிறது ,
இவர்களது ஆதரவு சஜித் பக்கமே சாய்ந்துள்ளது
கடந்த கால மைத்திரி ,ரணில் இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் நகர்வில் ஈடுபட்டனர் ஆதலால் சஜித் வருவதை அவர்கள் விரும்புகின்றனர்
இதற்கான பச்சை சமிக்கை இந்தியாவால் வழங்க பட்டுள்ளது ,அதற்கு எதிராக சீன செயல் படுகிறது
இந்த பிராந்திய அரசியல் சதுரங்க விளையாட்டில் வெல்ல போவது இந்தியாவா சீனாவா என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வியாகும்
- வன்னி மைந்தன் –
இந்திய கடல் பரப்பில் இராணுவம் குவிப்பு – தேடுதல் அதிகரிப்பு
இந்திய கடல் பரப்பில் இராணுவம் குவிப்பு – தேடுதல் அதிகரிப்பு
இலங்கையில் இருந்து அகதிகள் கடல்வழியாக தப்பித்து இந்தியா வருவதால்
,அவர்களை தடுக்கும் முகமாக ஆந்திர பகுதி கடல்பரப்புகளில் இராணுவத்தின் விசேட
ரோந்து பணிகளில் ஈடுப்படுத்த பட்டுள்ளதுடன் கண்காணிப்பு பல படுத்த பட்டுள்ளது
சமீப நாட்களாக படகுகள் மூலம் தமிழர்கள்இலங்கையில் இருந்து தப்பித்து
இந்தியாவில் தஞ்சம்
அடைந்து வரும் நிலையில் இந்த கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ளது
இலங்கைக்கு பெட்ரோல் ,டீசல் வழங்கி அதிரடி காட்டிய இந்தியா
இலங்கைக்கு பெட்ரோல் ,டீசல் வழங்கி அதிரடி காட்டிய இந்தியா
இந்திய கடந்த 24 மணித்தியாலத்தில் 2,70,000 மர்டிக் தொன் டீசல் மற்றும் பெட்ரோலை
வழங்கியுள்ளது
சீனாவுடன் ஒட்டி உறவாடி இந்தியாவை பகைத்து கொண்டு ஆணவத்தில்
ஆடிய இலங்கை தற்போது இந்தியாவுக்கு நல்ல பிள்ளையாக தன்னை காட்டி கொள்கிறது
முதுகில் குத்திய கோட்டா ,மகிந்த அரசுகளை மீளவும் மோடி அரசு
நம்புகின்றமை கோமாளித்தனம் என்பது குறிப்பிட தக்கது
இலங்கைக்கான இந்தியா விமான சேவைகள் குறைப்பு
இலங்கைக்கான இந்தியா விமான சேவைகள் குறைப்பு
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலையை அடுத்து
தற்பொழுது வராம் ஒன்றுக்கு இடம் பெற்று வந்த 13 விமான சேவைகள்
தற்போது 13
ஆக குறைக்க பட்டுள்ளது ,இம்மாதம் முதல் அவை ஒன்பதாக குறைக்க
படவுள்ளது என் எயார் இந்திய விமான சேவை அறிவித்துள்ளது
இவை மேலும் இலங்கை பொருளாதரத்தில் பெரும் இடியை ஏற்படுத்தியுள்ளது
100 மில்லியன் டொலர் உதவியை இந்தியாவிடம் கோரியுள்ள இலங்கை
100 மில்லியன் டொலர் உதவியை இந்தியாவிடம் கோரியுள்ள இலங்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாத நெருக்கடியில் இருந்து நாட்டை மீள
கட்டியெழுப்ப உலக நாடுகளிடம் இலங்கை அவசர நிதி உதவியினை கோரியுள்ளது
இதற்கு அமைவாக தற்போது இந்தியாவிடம் ஒரு பில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக கேட்டுள்ளது
உணவு ,எரிபொருள்,மருத்துவ பொருட்கள் என்பன இதில் கொள்வனவு செய்ய பட போகிறது
ஓடி கடனை வாங்கி குவிக்கும் இலங்கை இதனை மீள செலுத்திட முடியா நிலையில் சிக்கும்
காலம் விரைவில் ஏற்படலாம் என்பது பொருளாதாரா நிபுணர்கள் கருத்தாக உள்ளது
இந்தியா இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்
இந்தியா இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்
கடினமான காலங்களில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்’ என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் திட்டம் இருதரப்பு எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும் என்று இந்தியாவும் வரவேற்றது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸுடன் தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “இந்த கடினமான காலங்களில்” இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்றார்.
“இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸூக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள ஜெய்சங்கர், நம்பகமான நண்பரான இந்தியா இந்த கடினமான காலங்களில் இலங்கைக்கு ஆதரவாக இருக்கும். நெருங்கிய தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டேன்” என்று ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.
இதேவேளை, கருத்துரைத்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி,
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியா கடன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேட்டபோது, அந்த நாட்டு மக்களுக்கு அது எப்போதும் துணை நிற்கும் என்றார். மீனவர்கள் விவகாரம் தொடர்பாக, கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை அதிகாரிகளால் கடந்த மாதம் தடுத்து வைக்கப்பட்டுள்ள எஞ்சிய இந்திய மீனவர்களை விரைவில் விடுவிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பாக்சி கூறினார்.
மொத்தம் 68 மீனவர்கள் மற்றும் 10 படகுகளை இலங்கை தடுத்து வைத்துள்ளது, இவர்களில் 12 மீனவர்கள் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளனர், மீதமுள்ளவர்களை விடுவிக்க இந்திய உயர் ஸ்தானிகராலயம் செயல்பட்டு வருவதாகவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
கடற்றொழில் தொடர்பான கூட்டு செயற்குழு கூட்டத்தை விரைவில் நடத்துவது குறித்து இரு தரப்பும் ஆலோசனை நடத்தி வருவதாக அவர் கூறினார். இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணையை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு இலங்கையின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இது இருதரப்பு எரிசக்தி ஒத்துழைப்பை அதிகரிக்கும் என்று பாக்சி கூறினார்.
“திருகோணமலை எண்ணெய் பண்ணைகளை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக செய்திகளை பார்த்தோம். இலங்கையுடனான எமது இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கியப் பகுதி எரிசக்திப் பாதுகாப்பு” என்று அவர் கூறினார்.
“திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணைகளை நவீனமயமாக்குவது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் நாங்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம். இது எரிபொருளைச் சேமிப்பதை அனுமதிக்கும் மற்றும் இருதரப்பு எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும்,” என்று பாக்சி மேலும் கூறினார்.
திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணையை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தங்கள் வியாழக்கிழமை (6) கைச்சாத்திடப்பட்டது.
லங்கா ஐ.ஓ.சி.யின் கீழ் இருந்த திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணையில் உள்ள பெரும்பாலான தாங்கிகள் தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் அபிவிருத்தித் திட்டமாக வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சர் அலுவலகம் வியாழன் (6) பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கடன் வரியை நீட்டிப்பது குறித்த கேள்விக்கு, கடந்த மாதம் இலங்கை நிதியமைச்சர் பெசில் ராஜபக்சே புதுடெல்லிக்கு சென்றதை பாக்சி குறிப்பிட்டார்.
“இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் இந்த சவால்களை எதிர்கொள்வதில் தனது அரசாங்கத்தின் அணுகுமுறை குறித்து அவர் இந்திய தரப்புக்கு விளக்கினார். இந்தியா எப்பொழுதும் இலங்கை மக்களுக்கு ஆதரவாக நிற்கிறது மற்றும் இலங்கை நமது அண்டை நாடுகளுக்கு முதன்மையான கொள்கையின் ஒரு முக்கிய அங்கமாகும்,” என்று அவர் கூறினார்.
ராஜபக்ஷவின் பயணத்தின் போது, உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, செலுத்தும் நிலுவை பிரச்சினைகள் மற்றும் இலங்கையில் இந்திய முதலீடுகள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை ஆழமாக்குவது குறித்து விவாதித்ததாக அவர் கூறினார். “மேலும் ஆலோசனைகள் நடந்து வருகின்றன என்பதை நான் புரிந்துகொள்கிறேன்,” என்று பாக்சி கூறினார்.
பிரிட்டனில் ஒரே நாளில் 148 000 பேர் பாதிப்பு 143 பேர் மரணம் அமெரிக்கா 869 மரணம்
பிரிட்டனில் ஒரே நாளில் 148 000 பேர் பாதிப்பு 143 பேர் மரணம் அமெரிக்கா 869 மரணம்
பிரிட்டனில் கடந்த தினம் 148 ஆயிரம் பேர் கொரனோ நோயினால் பாதிக்க பட்டும் ,சுமார் 143 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 842 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்
அமெரிக்கா
இதே போன்று அமெரிக்காவில் 233,485 பேர் பாதிக்க பட்டும் 869 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 16 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்
இந்தியா
இதே போன்று இந்தியாவில் ,6,358 பேர் பாதிக்க பட்டும் 293 பேர் பலியாகியுள்ளனர்
ரஷியாவில் 305,155 பேர் பாதிக்க பட்டும் 937பேர் பலியாகியுள்ளனர்
தொடர்ந்து நோயின் தாக்குதல் தீவிரமாகி வருவதால் பிரிட்டன் உள்ளிட்ட பல நாடு முழு அடைப்புக்கு வரும் சில தினங்களில் இடம்பெற கூடும் என முக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன
மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக்- அதிர்ச்சியில் ஐயா
மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக்- அதிர்ச்சியில் ஐயா
பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே மீட்கப்பட்டது.
பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதால் பரபரப்பு
பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் பக்கம் PM @narendramodi என்ற பெயரில் உள்ளது. இதில் பல
மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக்- அதிர்ச்சியில் ஐயா
மில்லியன் பேர் அவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை பிரதமர் மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு
ஹேக்கர்களால் சிறிது நேரம் முடக்கப்பட்டது. பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடியின் டுவிட்டர்
கணக்கு சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டது. பிட்காயினை இந்தியாவில் சட்டப்பூர்வமாக்குவதாக
ஹேக்கர்கள் குறிப்பிட்டு இருந்தனர் ஹேக் செய்யப்பட்ட நேரத்தில் வெளியான பதிவுகளை கருத்தில் கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளது.
.
மோடியை சந்திக்க பறந்தார் – நிதியமைச்சர் பசில்
மோடியை சந்திக்க பறந்தார் -நிதியமைச்சர் பசில்
இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசிட இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸா
விரைந்துள்ளார்
இந்த சந்திப்பில் இலங்கை தொடர்பான அபிவிருத்தி மற்றும் முதலீடுகள் தொடர்பாக பேச
உள்ளார் என
தெரிவிக்க படுகிறது
வடக்கு தமிழர்களுக்கு இந்தியா உதவும் என அறிவிப்பு
வடக்கு தமிழர்களுக்கு இந்தியா உதவும் என அறிவிப்பு
போரினால் பாதிக்க பட்ட வடக்கு தமிழர்களுக்கு இந்திய மாபெரும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறை படுத்தி உதவும் என இந்தியா தூதர் யாழில் தெரிவித்துள்ளார்
வடபகுதியின் புதிய ஆளுனருடன் இடம்பெற்ற சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்க பட்டுள்ளது
இந்தியாவின் 5,000 km செல்லும் ஏவுகணை சோதனை வெற்றி
இந்தியாவின் 5,000 km செல்லும் ஏவுகணை சோதனை வெற்றி
இந்தியா தனது பலத்தை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணை
சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், கண்டம் விட்டு கண்டம் தாண்டி சென்று 5
ஆயிரம் கிலோ மீட்டர் தொலையில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி-5 ரக
ஏவுகணையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
நிலத்தில் இருந்து ஏவக்கூடிய இந்த ஏவுகணை நிலத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி
அழிக்கும் திறன்கொண்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏவுகணை சோதனை ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவில் நடைபெற்றதாக தெரிவிhttp://ethirinews.com/க்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்… ஸ்காட்லாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நமீபியா
இந்தியா செல்லும் பிரிட்டன் மக்கள் 10 நாள் தனிமை – அதிரடி அறிவிப்பு
இந்தியா செல்லும் பிரிட்டன் மக்கள் 10 நாள் தனிமை – அதிரடி அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி சான்றிதழ் விவகாரத்தில் இங்கிலாந்து முடிவுக்கு, இந்திய அரசு பரஸ்பர நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து நாட்டினர் 10 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள்: இந்தியா பரஸ்பர நடவடிக்கை எனத் தகவல்
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் மிகப்பெரிய அளவில் செலுத்தப்பட்டு வருகிறது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்து
வருகிறது. இந்த தடுப்பூசியை இங்கிலாந்து நிறுவனம் கண்டுபிடித்தது. ஆனால் இந்தியாவில் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டு நபர்கள் இங்கிலாந்து வந்தால் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதனால் இந்தியாவில் இருந்து இங்கிலாந்து செல்லும் தொழில் அதிபர்கள், மாணவர்களுக்கு சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து இந்திய அரசு பலமுறை இங்கிலாந்திடம் பேசி பார்த்தது. ஆனால், இங்கிலாந்து அரசு இந்தியாவின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.
இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டினர் இந்தியாவுக்கு வந்தால் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பரஸ்பர நடவடிக்கை எடுக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நடைமுறை அக்டோபர் 4-ந்தேதியில் இருந்து அமலுக்கு வர இருப்பதாக தெரிகிறது.
இந்தியா பாகிஸ்தனியர் கனடா செல்ல தடை அரசு அதிரடி அறிவிப்பு
இந்தியா பாகிஸ்தனியர் கனடா செல்ல தடை அரசு அதிரடி அறிவிப்பு
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து கனடாவுக்குள் குறித்த இரு நாட்டவர்களும் நுழைய கனடா அரசு அதிரடி தடை உத்தரவை பிறப்பித்துள்ளது .
இது போலவே மேலும் பல முக்கிய நாடுகள் தடையினை பிறப்பித்துள்ளது இங்கே குறிப்பிட தக்கது.
மேற்படி தடையினால் குறித்த நாடுகளில் அதிகமாக வசிக்கும் மேற்படி நாட்டவர்கள் செல்ல முடியாத பெரும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர்.
இந்தியா பாகிஸ்தான் பேச்சுக்கள் ஆரம்பிக்க உத்தேசம் – பிரியுமா காஸ்மீர் ..?
இந்தியா பாகிஸ்தான் பேச்சுக்கள் ஆரம்பிக்க உத்தேசம் – பிபிரியுமாரியா காஸ்மீர் ..?
இந்தியா பாக்கிஸ்தானுக்கு இடையில் சர்சையில்சி க்கியுள்ள கஸ்மீர் தொடர்பான பேச்சுக்களில் ஈடுபட இரு நாடுகளுக்கும் இணக்கம் தெரிவித்துள்ளன
உயர் மட்ட புலனாய்வு அதிகாரிகள் வட்டத்தில் இருந்து மேற்படி செய்தி கசிந்துள்ளது ,இவ்வாறு
நாடுகளுக்கு இடையில் ஏற்படும் போர் பதட்டத்தை தனித்து இணக்கமான முறையில் செயல் பட இருநாடுகளும் முயன்று வருகின்றன
ஆனால் இந்த பேச்சுக்கள் மூலம் குறித்த நாடுகளுக்கு இடையிலான பிரச்சனைக்கு தீர்வு கிட்டுமா என்பதே கேள்வியாக உள்ளது
பயணிகள் விமான சேவை இந்தியாவில் ஏப்ரல் 30 வரை தடை
சர்வதேச பயணிகள் விமான சேவை இந்தியாவில் ஏப்ரல் 30 வரை தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.
இருப்பினும், ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது.
இருப்பினும் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் திட்டமிடப்பட்ட சர்வதேச விமான சேவைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகைகளை சாடிய கங்கனா
பிரபல நடிகைகளை சாடிய கங்கனா
உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி தீரத் சிங் ராவத் பெண்கள் கிழிந்த ஜீன்ஸ் அணிவதை விமர்சித்தது சர்ச்சையாகி உள்ளது.
அவர் பேசும்போது, “இளைய தலைமுறையினர் நாகரிகம் என்ற பெயரில் கிழிந்த ஜீன்ஸ் அணிகிறார்கள். இளம்பெண்களும் அணிகிறார்கள்.
நான் விமானத்தில் பயணித்தபோது தொண்டு நிறுவனம் நடத்தும் ஒரு பெண் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து இருந்தார். அவரால் சமூகத்தில் நல்ல தாக்கத்தை எப்படி உருவாக்க முடியும்’’ என்றார்.
அவரது பேச்சை கண்டிக்கும் வகையில் நடிகைகளும், இளம்பெண்களும் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத்தும் லேசாக கிழிந்த ஜீன்ஸ் அணிந்துள்ள தனது புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு, “கிழிந்த ஜீன்ஸ் அணிய விரும்பினால் இந்த புகைப்படத்தில் குளிர்ச்சியாக இருப்பது போன்ற ஜீன்ஸை அணியுங்கள்.
அது ஸ்டைலாக தெரியும். அதற்கு மாறாக வீடு இல்லாத பிச்சைக்காரர்கள் போன்று கிழிந்த ஜீன்ஸை அணிய வேண்டாம். இளசுகள் பலர் தற்போது இப்படித்தான் அணிகிறார்கள்” என்றார்.
இந்த கருத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சிலர் கங்கனா அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இன்னும் சிலர் தீபிகா படுகோனே, சாரா அலிகான், டாப்சி, ஆலியா பட் உள்ளிட்டோரின் கிழிந்த
ஜீன்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு இவர்களைத்தான் கங்கனா ரணாவத் சாடி உள்ளார் என்று பதிவுகள் வெளியிட்டுள்ளனர்.






