Tag: மனைவி
கணவனிடம் சிக்கிய மனைவி கள்ள காதலன்மடியில் இருந்து குதிப்பு வீடியோ
கணவனிடம் சிக்கிய மனைவி கள்ள காதலன்|மடியில் இருந்து குதிப்பு
கணவனிடம் சிக்கிய மனைவி கள்ள காதலன் | மடியில் இருந்து குதிப்பு |கள்ள காதல் லீலை
கணவனிடம் சிக்கிய மனைவி கள்ள காதலன்,கணவன் வீடில்லா நேரம் கள்ள காதல் விளையாட்டு , திடீரென கணவன் வீடு வந்ததால் சிக்கிய மனைவி காதல் லீலைகள்
மனைவி
மனைவி
காகம் போல தினம் கரைவாள்
கடமை சோரா தினம் காய்வாள்
இல்லா நிலையில் இல்லம் வாடாள்
இருப்பதை வைத்தே இயக்கி போவாள்
அன்பு அதிகம் கொள்வாள்
அதனால் அதிகம் எரிவாள்
பண்பு தினம் பொலிவால்
பாயிலே தினம் ஓய்வாள்
பத்து மாதம் சுமப்பதுவும்
பணிவிடைகள் தினம் செய்வதும்
சத்தி வாய் வயிறோடும்
சளைக்கா வீடு உழைப்பதுவும்
எண்ணையில் மனம் வியக்கிறது
எப்படி இவளால் முடிகிறது
பாவம் செய்த ஓர் பிறப்பு
பாவை இவளின் பொறுப்பு
உணவு கொஞ்சம் இருந்தாலும்
ஊட்டி பிள்ளை வளர்ப்பதுவும்
பட்டினி கிடப்பதை மறைப்பதுவும்
பழகி போன வாழ்வாகும்
போதையில் கணவன் அடிப்பதுவும்
பொல்லாமை நெஞ்சு வீசுவதும்
எல்லாம் சகித்து வாழ்வதும்
எப்படி இவளால் முடிகிறது
பெண்ணாய் பிறந்தவர் பாவமடா
பெரும் துயர் கடக்கிறார் நாளுமடா
அன்பை கொஞ்சம் காட்டுங்கடா
அறத்தை நாட்டி வாழுங்கடா ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 06-04-2024
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

- அழும் நீதி

- அர்ச்சுனா

- ஏன் அழுகின்றாய்

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஆறுதல் கூறி விடு

- வீர மகன் அர்ச்சுனா

- அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு

- அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை

- என்னை அழைப்பாயா

- என்னை அழைக்காயா

- எழுந்து வா

போதையில் வந்த கணவனுக்கு மரண தண்டனை வழங்கிய மனைவி
போதையில் வந்த கணவனுக்கு மரண தண்டனை வழங்கிய மனைவி
மாத்தறை வெலிகம பிரதேசத்தில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த கணவர், தனது மனைவியால் தாக்கப்பட்டு உயிரிழந்த மற்றுமொரு சம்பவம் பதிவாகியுள்ளது.
42 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
மாத்தறை, வெலிகம, கொஸ்கஹஹேன பிரதேசத்தில் வசிக்கும் இவர், நேற்று இரவு மது போதையில் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியை தாக்கியதால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இவர் நேற்று இரவு குடிபோதையில் வந்து மனைவியை தாக்க முயன்றார்.
இதன்போது மனைவி அயலவர்கள் சிலருடன் இணைந்து சேர்ந்து வீட்டின் முன் உள்ள மின்கம்பத்தில் கணவனை கட்டிப்போட்டுள்ளார்.
பின்னர், அவரது மனைவி உள்ளிட்டவர்கள் அவரைத் தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் மயக்கமடைந்த அவர், வெலிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்டப்பட்ட கயிற்றில் கழுத்து இறுகி இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவியை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உக்ரைன் இராணுவத்தில் வேலை ஆட்கடத்தலில் ஈடுப்பட்ட கணவன் மனைவி கைது
உக்ரைன் இராணுவத்தில் வேலை ஆட்கடத்தலில் ஈடுப்பட்ட கணவன் மனைவி கைது
உக்ரைன் இராணுவத்தில் வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி மனித கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த கணவன் மனைவி தம்பதியரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் விசாரணை பிரிவில் இன்று சரணடைந்ததை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகத்திற்குரிய தம்பதியினர் கடவத்தை பிரதேசத்தில் வசித்து வருவதுடன், கணவர் தொழில் ரீதியாக பொருளியல் ஆசிரியர் ஆவார்.
உக்ரைன் ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவர்கள், இந்த நாட்டை விட்டு அனுப்பியவர்களின் எண்ணிக்கை 55 ஆகும்.
இவர்களில் இராணுவத்தில் பணியாற்றிய ஒரு குழுவும் உள்ளடங்கியதுடன், சந்தேகநபர்கள் உக்ரைன் இராணுவத்தில் கெப்டனாக கடமையாற்றி தற்போது உயிரிழந்துள்ள ரனிஷ் ஹெவெகேவின் ஒருங்கிணைப்புடன் குறித்த தரப்பினரை உக்ரைனுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. .
இலங்கையில் இருந்து வெளியேறும் நபர்கள் இந்தியா வழியாக போலந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் உக்ரைனுக்குள் நுழைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உக்ரைன் இராணுவத்தில் வேலை ஆட்கடத்தலில் ஈடுப்பட்ட கணவன் மனைவி கைது
இவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் ஒருவரிடம் இருந்து சந்தேகநபர்கள் 02 முதல் 05 லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
நாட்டை விட்டு வெளியேறியவர்களில் சிலர் உக்ரைனுக்கு சென்றுள்ள போதும் மேலும் சிலர் போலந்துக்குள் செல்ல முடியாமல் நாடு திரும்பியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றுமொரு குழு அஜர்பைஜானுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதன் பின்னர் அவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என விசாரணை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உக்ரைன் இராணுவத்தில் பணியாற்றச் சென்றவர்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் பணிப்புரைக்கமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமரகோன் பண்டாவின் தலைமையில், ஆட்கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவியை கொன்ற கணவன்
மனைவியை கொன்ற கணவன்
அலபாத்த, நிரியெல்ல பிரதேசத்தை சேர்ந்த மனைவியை, கணவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (10) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவம், விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குடும்பத் தகராறு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனித்தனி வீடுகளில் வசித்து வந்த நிலையில், உயிரிழந்த பெண் பிள்ளைகளுக்கான புத்தகங்களை எடுத்து வருவதற்காக கணவன் வீட்டுக்குச் நேற்று சென்ற போதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
கணவன் மகைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் 40 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
43 வயதான சந்தேக நபர் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கணவனை வெட்டிக் கொன்ற மனைவி
கணவனை வெட்டிக் கொன்ற மனைவி
கரந்தெனிய – குருபேபில பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது கணவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இன்று (03) அதிகாலை வீட்டினுள் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.
கொலையை செய்த பெண்ணை கரந்தெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இருவருக்குமிடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாகவும், பல தடவைகள் கரந்தெனிய பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரந்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கணவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை வழங்கிய மனைவி கைது
கணவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை வழங்கிய மனைவி கைது
களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை இரகசியமாக கொண்டு வந்த மனைவி ஒருவர் நேற்றைய தினம் (28) கைது செய்யப்பட்டுள்ளார்.
கணவனுக்கு கொடுப்பதற்காக கோழி இறைச்சி பொதி ஒன்று கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் அதனை சோதனை செய்த போது அதனுள் ஹெரோயின் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
கணவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை வழங்கிய மனைவி கைது
அதனை அவதானித்த சிறைச்சாலை அதிகாரிகளினால் குறித்த பெண், களுத்துறை வடக்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பயாகல முலட்டியன பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான பெண் தனது 6 வயது மகளுடன் அங்கு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது 550 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடிகார கணவனின் சடலத்தை ஏற்க மறுத்த மனைவி
குடிகார கணவனின் சடலத்தை ஏற்க மறுத்த மனைவி
குடிகார கணவனின் சடலத்தை ஏற்க மறுத்த மனைவியின் செயல் பர பரப்பை ஏற்படுத்தியது ,கணவன் இறந்த நிலையில் அவரது சடலத்தை ஏற்க மனைவி மறுத்ததால் அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர் .
மது போதைக்கு அடிமையான கணவன்
கணவன் குடிபோதையில் நாள் தோறும் மனைவி பிள்ளைகளுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார் ,அதனால் கணவனை விட்டு மனைவி தனியாக வசித்து வந்துள்ளார் .
உழைக்கும் பணத்தை மது போதைக்கு செலவு செய்து மது போதையே வாழ்வாக மாற்றி குடும்பத்தை பராமரிக்க மறந்து மதுவுக்கு அடிமையானதினால் ,கணவனின் சடலத்தை ஏற்க மறுத்த மனைவி செயல் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை கேகாலை இடம்பெற்ற இந்த் சம்பவம் ,இலங்கை மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
மனைவி குளிப்பதில்லை கணவன் முறைப்பாடு
மனைவி குளிப்பதில்லை கணவன் முறைப்பாடு
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த கணவன் ஒருவர் மனைவி குளிப்பதில்லை என அப்பிரதேச தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட புதுத் தம்பதிகளிடத்திலே இந்த முரண்பாடு தோன்றியுள்ளது.
கணவனின் முறைப்பாட்டுக்கமைய பிரதேச தலைவர் மனைவியிடம் பேசி சமரசம் செய்ய முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனுக்கு 6 வருட சிறை
மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனுக்கு 6 வருட சிறை
அமெரிக்காவில் கணவன் தனது மனைவியை ஆறு நிமிடங்கள் தொடர்ந்து கொடூரமாக தாக்கிய நிலையில் அவருக்கு ஆறு ஆண்டு சிறை தணடனை விதிக்க பட்டுள்ளது
தாயை தாக்குவதை பிள்ளை காணொளி பிடித்து வெளியிட்ட நிலையில், தற்போது கணவன் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார் .
மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனுக்கு 6 வருட சிறை
கோபத்தில் அவ்விதம் நடந்து விட்டதாகவும் அதற்கு மன்னிப்பு கோரிய பொழுதும் அவர் சிறையில் அடைக்க பட்டு தணடனை விதிக்க பட்டுள்ளது
அறியாமையில் ஏற்படுகின்ற சொல்லடியால் ஏற்படும் கோபம் இவ்விதம் ,உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி விளைவுகளை அதிகரித்து விடுகிறது
கோபம் செய்த பாவம் .விதியின் விளையாட்டில் யாரும் தப்பிக்க முடியாது என்பதற்கு இவர் ஒரு முன்னுதாரணம் ஆகும் .
- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது
- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்
- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்
- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்
- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்
- சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகளில் ஈரான் தூதுக்குழு
- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்
- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்
- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்
- பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா
- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்
மகளை நிர்வாணமாக படமெடுக்க முயற்சி கணவனை வெட்டிக்கொன்ற மனைவி
மகளை நிர்வாணமாக படமெடுக்க முயற்சி கணவனை வெட்டிக்கொன்ற மனைவி
தனது 14 வயது மகளின் நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து பணம் தேட முயற்சித்த கணவனை மனைவி வெட்டிக் கொன்ற சம்பவம் வெல்லவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலை உதவியாளராக பணியாற்றிய 37 வயதுடைய வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வீட்டின் குளியலறையில் மறைந்திருந்த கணவன் மீது மனைவி, மிளகாய்ப் பொடியை வீசியதாகவும், மிளகாய்ப் பொடி தாக்குதலுக்கு உள்ளானவர்,
வெளியே வந்த போது, மனைவி வெட்டிக் கொன்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகளை நிர்வாணமாக படமெடுக்க முயற்சி கணவனை வெட்டிக்கொன்ற மனைவி
தாக்குதலுக்கு இலக்காகி வீட்டின் வரவேற்பறையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் சமீபத்தில் யூடியூப் சேனலை தொடங்கி, பெண்களின் நிர்வாண புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, அதை பிரபலப்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வந்தது பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்தது.
- செம்மணியில் 19 எலும்பு கூடுகள் மீட்பு
- ஐ நா அறிக்கை காசாவில் 80 சதவீத மக்கள் மோசமான நிலையில்
- ஹோர்முஸ் நீர்வழித்தடத்தைத் தவிர்க்க தற்காலிக கடல்வழிப் பாதையை ஓமான் அறிவித்துள்ளது
- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது
- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்
- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கனடிய மாணவி கைது
- கைதுகளுக்குப் பிறகு ஸ்பா சிகிச்சையாளர்களின் அடையாளங்கள் வெளியாகின
- சிக்கிய அனுரா அரசு கடன் சுமை
- பள்ளி உணவகங்களுக்கு அபராதம்
- மே 25 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் மீதான போக்குவரத்து விதிமீறல் வழக்கு
இந்தியாவில் மனைவியை 17 தடவை குத்தி கொன்ற கணவன்
இந்தியாவில் மனைவியை 17 தடவை குத்தி கொன்ற கணவன்
இந்தியாவில் தாதியாக வேலை புரிந்து வந்த 26 வயதுடைய மனைவியை
கணவன் 17 தடவை கத்தியால் குற்றி இல்லாது அழித்துள்ளார்
இவரது தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனறி உயிரிழந்தார் .
இந்த சம்பவம் தொடர்ப்பில் இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையில் ,
குற்றவாளியாக அடையும் காணப்பட்ட கணவனுக்கு
ஆயூள் தண்டனை வழங்க பட்டுள்ளது .
மனைவிக்கும் கணவனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றிய நிலையில்
இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
மனைவியை கொலை செய்த கணவனின் பகீர் வாக்குமூலம்
மனைவியை கொலை செய்த கணவனின் பகீர் வாக்குமூலம்
மனைவி தவறான தொடர்பை தனது சகோதரருடன் வைத்திருந்ததை அறிந்து ஆத்திரமுற்றதாலேயே இருவரையும் தாக்கினேன் என நாவற்குழியில் கொலை செய்துவிட்டு தப்பிக்க முயன்றபோது கைதான சந்தேக நபர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – நாவற்குழி ஐயனார் கோயிலடியில் இளம் தாயொருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று (16) காலை சடலமாக மீட்கப்பட்டார்.
இந்நிலையில் வீட்டில் கணவனை காணாத நிலையில் பொலிஸாரின் சந்தேகம் வலுத்தது.
குடும்ப தகராறில் கணவரால் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதிய பொலிஸார் கணவரை தேடி தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.
மனைவியை கொலை செய்த கணவனின் பகீர் வாக்குமூலம்
யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அண்மையில் முச்சக்கரவண்டியில் சந்தேகநபர் தப்பிக்க முற்பட்ட வேளையில் பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைதான சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையில் “தான்
மனைவியை தாக்கியதாகவும் உயிரிழந்தது தனக்கு தெரியாது” என சந்தேக நபர் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும்,”மனைவி தவறான தொடர்பை தனது சகோதரருடன் வைத்திருந்ததை அறிந்து ஆத்திரமுற்றதாலே இருவரையும் தாக்கினேன்” எனவும் தெரிவித்தார்.
குறித்த சந்தேக நபர் ஏற்கனவே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர் என்பதுடன் வேறு சில குற்றச் செயல்களுடன் தொடர்புள்ளவராகவும் கருதப்படுகிறார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மனைவியை கொலை செய்த கணவனின் பகீர் வாக்குமூலம்
உயிரிழப்பு தொடர்பான விபரங்கள் மரண விசாரணை அதிகாரியின் அறிக்கை மற்றும் சட்ட மருத்துவ அறிக்கை மேற்கொண்டதன் பின்னரே தெரியவரும்.
சந்தேக நபரின் தாக்குதலுக்கு இலக்காகி நேற்றைய தினம் சகோதரரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
எமது விசாரணைகள் நிறைவுற்றதும் சந்தேகநபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்தனர்.
- செம்மணியில் 19 எலும்பு கூடுகள் மீட்பு
- ஐ நா அறிக்கை காசாவில் 80 சதவீத மக்கள் மோசமான நிலையில்
- ஹோர்முஸ் நீர்வழித்தடத்தைத் தவிர்க்க தற்காலிக கடல்வழிப் பாதையை ஓமான் அறிவித்துள்ளது
- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கனடிய மாணவி கைது
- கைதுகளுக்குப் பிறகு ஸ்பா சிகிச்சையாளர்களின் அடையாளங்கள் வெளியாகின
- சிக்கிய அனுரா அரசு கடன் சுமை
- பள்ளி உணவகங்களுக்கு அபராதம்
- மே 25 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் மீதான போக்குவரத்து விதிமீறல் வழக்கு
- மதிப்புக்கூட்டு வரி (VAT) வரம்பை ரூ. 60 மில்லியனாக அரசு தக்கவைத்துக் கொண்டது
- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்
மனைவியை கொன்றவர் வைத்தியசாலையில் மரணம்
மனைவியை கொன்றவர் வைத்தியசாலையில் மரணம்
மட்டக்களப்பு வந்தாறுமூலையில் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கணவன் கடந்த புதன்கிழமை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 13 ம் திகதி வந்தாறுமூலையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக 74 வயதுடைய கணவர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
மனைவியை கொன்றவர் வைத்தியசாலையில் மரணம்
இந்த நிலையில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட அவர் சுகயீனம் காரணமாக மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 23 ம் திகதி புதன்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த 74 வயதுடைய வீரக்குட்டி தவராசாவின் உடல் பிரேத பரிசோதனையின் பின்னர் வெள்ளிக்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
- செம்மணியில் 19 எலும்பு கூடுகள் மீட்பு
by நிருபர் காவலன் - ஐ நா அறிக்கை காசாவில் 80 சதவீத மக்கள் மோசமான நிலையில்
by நிருபர் காவலன் - ஹோர்முஸ் நீர்வழித்தடத்தைத் தவிர்க்க தற்காலிக கடல்வழிப் பாதையை ஓமான் அறிவித்துள்ளது
by நிருபர் காவலன் - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கனடிய மாணவி கைது
by நிருபர் காவலன் - கைதுகளுக்குப் பிறகு ஸ்பா சிகிச்சையாளர்களின் அடையாளங்கள் வெளியாகின
by நிருபர் காவலன்
மனைவியை ஐந்து துண்டாக வெட்டி எறிந்த கணவன் | உலக செய்திகள்
மனைவியை ஐந்து துண்டாக வெட்டி எறிந்த கணவன் | உலக செய்திகள்
உலக செய்திகள் |இந்தியா சத்தீஸ்கர் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய கணவன் ,தனது மனைவியை ஐந்து துண்டுகளாக வெட்டி
பொலித்தீன் பையில் சுற்றி வைத்த கொடூரம் நிகழ்ந்துள்ளது .
மனைவி கள்ள காதல் தொடர்பில் ஈடுபட்டார் என்ற குற்ற சாட்டில்,
இவ்வாறு கோரமாக வெட்டி கொலை செய்துளளர் .
மேலும் இதே கணவன் ,மனைவி இணைந்தது கள்ள நோட்டு ,
அச்சிட்டு வந்துள்ளதும் கண்டு பிடிக்க பட்டுள்ளது .
கள்ள நோட்டு அச்சிட படுவதாக காவல்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து ,சோதனை நடத்திய போலீசார் ,தண்ணி தாங்கி ஒன்றுக்குள் துண்டுகளாக ,வெட்ட பட்ட நிலையில் .பெண்ணின் சடலத்தை கண்டு மீட்டனர் .
கணவனிடம் இடம்பெற்ற விசாரணைகளில் ,
இந்த கொலை தொடர்பான விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது .
அறியாமையும் ,அதனால் எழுந்த குரோத ,மூட தானத்தால் ,இவ்வாறான சம்பவங்கள் இடம்பற்று வருவதாக தெரிவிக்க படுகிறது .
மனைவி 3 பிள்ளைகளை சுட்டு கொன்று கணவன் தற்கொலை
மனைவி 3 பிள்ளைகளை சுட்டு கொன்று கணவன் தற்கொலை
அமெரிக்கா வடக்கு கரோலினா பகுதியில் மனைவி மற்றும் மூன்று
பிள்ளைகளை கணவன் சுட்டு கொன்றுள்ளார் ,
அதன் பின்ன தன்னை தானும் சுட்டு தற்கொலை புரிந்துள்ளார் .
இந்த தற்கொலைக்கான காரணம் தெரிய வரவில்லை .
போலீஸின் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
கடந்த வாரமும் ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் ,
சுட்டு கொலை செய்ய பட்டு இருந்தமை குறிப்பிட தக்கது.
வீரவன்ச மனைவி பிணையில் விடுதலை
வீரவன்ச மனைவி பிணையில் விடுதலை
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவங்ச கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோத இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சசி வீரவன்சவுக்கு அண்மையில் இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விமல் வீரவன்சா மனைவிக்கு இருவருட ம் சிறை .
விமல் வீரவன்சா மனைவிக்கு இருவருட ம் சிறை .
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிற்கு இரண்டு
வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
போலியான தகவல்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர கடவுச்சீட்டை
பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் அவரை குற்றவாளியாக அறிவித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது
நாட்டை விட்டு தப்பி ஓடிய மகிந்த மகனின் மனைவி – நாடு திரும்பினார்
நாட்டை விட்டு தப்பி ஓடிய மகிந்த மகனின் மனைவி – நாடு திரும்பினார்
இலங்கையில் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தின் உச்சத்தை அடுத்து நாட்டை விட்டு
மகிந்த மகனின் மனைவி தப்பி ஓடினர் .அவர் தற்போது மீள நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
Yoshitha மனைவியே இவ்விதம் நாடு திரும்பியுள்ளார் ,எனினும் நாமல் மனைவி
இதுவரை இலங்கை வரவில்லை என்பது குறிப்பிட தக்கது
- செம்மணியில் 19 எலும்பு கூடுகள் மீட்பு
- ஐ நா அறிக்கை காசாவில் 80 சதவீத மக்கள் மோசமான நிலையில்
- ஹோர்முஸ் நீர்வழித்தடத்தைத் தவிர்க்க தற்காலிக கடல்வழிப் பாதையை ஓமான் அறிவித்துள்ளது
- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது
- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்
மனைவியை தோளில் சுமந்து கணவர்கள் ஓடும் போட்டி- வெற்றி பெற்ற தம்பதி
கணவன் மார்கள் தங்கள் மனைவியை தோளின் பின்புறம் சுமந்தப்படி ஓடினார்கள். சேறு, மணல்மேடு, குட்டை, ஆகியவற்றை கடந்து ஓடினர்.
ஹங்கேரியில் மனைவியை தோளில் சுமந்து கணவர்கள் ஓடும் போட்டி- வெற்றி பெற்ற தம்பதிக்கு எடைக்கு எடை ‘பீர்’
மனைவியை தோளில் சுமந்து கணவர்கள் ஓடும் போட்டி
ஹங்கேரி நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மனைவியை கணவன் மார்கள் தோளில் சுமந்து செல்லும் ஓட்டப்பந்தயம் நடத்தப்படுகிறது.
மொத்த பந்தய தூரம் 260 மீட்டராக நிர்ணயிக்கப்பட்டது. இதில் சேறு, குட்டை, மண்ல்மேடு, டயர்கள் ஆகியவற்றை கொண்டு தடைகள் அமைக்கப்பட்டன.
இந்த தடைகளை மனைவியை தோளில் சுமந்தபடி கணவர்கள் தாண்டிச் செல்ல வேண்டும்.
இப்போட்டியில் ஏராளமான தம்பதிகள் கலந்து கொண்டனர். கணவன் மார்கள் தங்கள் மனைவியை தோளின் பின்புறம் சுமந்தப்படி ஓடினார்கள். சேறு, மணல்மேடு, குட்டை,
ஆகியவற்றை கடந்து ஓடினர். இதில் ஒரு சிலர் கீழே விழுந்தனர். போட்டியில் பங்கேற்றவர்களை கை தட்டி உற்சாகப்படுத்தினார்கள்.
இப்போட்டியில் முதலிடம் பிடித்த தம்பதிக்கு பரிசு பொருட்களும், எடைக்கு எடை பீர் பாட்டில்களும் வழங்கப்பட்டன.
- செம்மணியில் 19 எலும்பு கூடுகள் மீட்பு
- ஐ நா அறிக்கை காசாவில் 80 சதவீத மக்கள் மோசமான நிலையில்
- ஹோர்முஸ் நீர்வழித்தடத்தைத் தவிர்க்க தற்காலிக கடல்வழிப் பாதையை ஓமான் அறிவித்துள்ளது
- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது
- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்









































