Posted in இலங்கை செய்திகள்

பேரூந்தில் பயணித்த 48 பேர் கைது – பாயும் பொலிஸ் சோதனை

பேரூந்தில் பயணித்த 48 பேர் கைது – பாயும் பொலிஸ் சோதனை

இலங்கையில் நிலவி வரும் கொரனோ தாக்குதலை அடுத்து தனிமை படுத்தல் சட்டங்கள் அமூல்

படுத்த பட்டுள்ளது ,இவ்வேளை பேரூந்து ஒன்றில் பயணித்த 48 பேர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

அரசு அறிவித்த விதிகளை மீறி மக்கள் தொடர்ந்தும் இவ்விதம் செயல் பட்டு வருவது ,அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    Posted in Uncategorized

    பொலிசாரின் விடுமுறை இரத்து

    பொலிசாரின் விடுமுறை இரத்து

    பொலிசாரின் விடுமுறையை எதிர்வரும் 15 ஆம் திகதி (ஜூன் 15) வரை இரத்துச் செய்வதற்கு

    தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

    கொரோனா வைரசு தொற்று பரவல் நிலைமையை தொடர்ந்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறையை கடந்த 17ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை ரத்து செய்ய நடவடிக்கை

    எடுக்கப்பட்டது. தொடர்ந்தும் பயண கட்டுப்பாடுகள் அமல் படுத்தப் படுவதால் பொலிசாரின்

    விடுமுறையை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இரத்துச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

    Posted in இலங்கை செய்திகள்

    மக்களை கண்காணிக்கும் 20 ஆயிரம் பொலிஸ்

    மக்களை கண்காணிக்கும் 20 ஆயிரம் பொலிஸ்

    நாட்டில் கொரனோ பரவலை தடுக்க மக்கள் போக்குவரத்து கண் காணிப்பில் சுமார் இருபதாயிரம்

    பொலிஸார் பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்

    இவர்கள் அனைவரும் மக்கள் நடமாட்டங்களை கண்காணிப்பதில் ஈடுபட்டுள்ளனர் என போலீசார்

    தெரிவித்துள்ளனர்

      Posted in Uncategorized

      கொழும்பு உட்பட முடங்கிய ஏழு கிராமங்கள் – திணறும் இலங்கை

      கொழும்பு உட்பட முடங்கிய ஏழு கிராமங்கள் – திணறும் இலங்கை

      இலக்கையில்; வேகமெடுத்து கொரனோ பரவலை அடுத்து தற்பொழுது கொழும்பு உள்ளிட்ட ஏழு

      கிராம சேவகர் பிரிவுகள் முடக்க பட்டுள்ளன

      தனிமை படுத்த பட்ட பகுதிகள் எங்கும் இராணுவம் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு

      பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்

        Posted in Uncategorized

        மிரட்டும் கொரனோ – எட்டு பொலிஸ் பிரிவுகள் முடக்கம்

        மிரட்டும் கொரனோ – எட்டு பொலிஸ் பிரிவுகள் முடக்கம்

        இலங்கையில் வேகமாக கொரனோ நோயானது பரவி வரும் நிலையில் தற்போது எட்டு

        காவல்துறை பிரிவுகள் முடக்க பட்டுள்ளன

        இவ்வாறு முடக்க பட்ட பகுதிகள் எங்கும் இராணுவம் காவல்துறை பாதுகாப்பில் ஈடுபடுத்த

        பட்டுள்ளது

          Posted in Uncategorized

          இலங்கை குண்டு தாக்குதல் 702பேர் கைது – பொலிஸ் அறிவிப்பு

          இலங்கை குண்டு தாக்குதல் 702பேர் கைது – பொலிஸ் அறிவிப்பு

          இலங்கையில் தேவலாயங்கள் மீது தொடராக நடத்த பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலின் பின் புலத்தில் செயல்

          பட்டார்கள் என்ற குற்ற சாட்டின் பேரில் இதுவரை 702 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக பொலிஸ்மா பேச்சாளர் தெரிவித்துள்ளார்

          கைதானவர்கள் தொடர்ந்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டு வருவதாகவும் ,இந்த தாக்குதலில்

          படு கொலை செய்ய பட்ட மகளிற்குரிய நீதி நிலை நாட்ட படும் என அவர் சூளுரைத்துள்ளார்

            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            பிரிட்டனில் மரணவீட்டுக்குள் புகுந்த பொலிஸ் 15 பேருக்கு தண்டம்

            பிரிட்டனில் மரணவீட்டுக்குள் புகுந்த பொலிஸ் 15 பேருக்கு தண்டம்

            பிரிட்டன் Shandwick Place பகுதியில் நிகழ்கால கொரனோ விதிகளை மீறி மரண வீட்டில் சட்டவிரோதமான

            முறையில் கூடியமைக்காக அங்கு கலந்து கொண்ட 12 பேருக்கும் ,இதனை தலைமை ஏற்று நடத்திய முதண்மை நபர்கள் மூவருக்குமாக தண்டம் அறவிட பட்டுள்ளது

            மேற்படி தண்டம் எதிர்வரும் 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் தவறின் அது இரட்டிப்பாகும் என்பது விதியாகவுள்ளது

            மக்கள் அரசின் விதிகளை மறந்து இவ்விதம் பால்வேறு இடங்களில் ஒன்று கூடி வருகின்ற செயல் தொடரத்தான் செய்கிறது

            அவையே இவ்விதம் செய்திகளாக வீழ்கின்றன

            பிரிட்டனில் மரணவீட்டுக்குள் புகுந்த பொலிஸ்
            பிரிட்டனில் மரணவீட்டுக்குள் புகுந்த பொலிஸ்
              Posted in Uncategorized

              காரில் இருந்து சடலம் மீட்பு – விசாரணையில் பொலிஸ்

              காரில் இருந்து சடலம் மீட்பு – விசாரணையில் பொலிஸ்

              வாதுவ பிரதேச பகுதியில் கார் ஒன்றுக்குள் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுளளார்

              .இவ்வாறு சடலமாக மீட்க பட்டவர் 57 வயதுடைய நபர் எனவும் ,இவரது மரணம் எவ்வாறு நிகழ்ந்தது

              என்பது தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

                Posted in Uncategorized

                மாறு வேடம் தரித்த பொலிஸ்-பஸ் சாரதிகளுக்கு எச்சரிக்கை!

                மாறு வேடம் தரித்த பொலிஸ்-பஸ் சாரதிகளுக்கு எச்சரிக்கை!

                மாறு வேடம் தரித்த பொலிஸ் அதிகாரி ஒருவரை இன்று (05) முதல் பயணிகள் பஸ்களில் கடமையில் ஈடுப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

                பஸ் சாரதிகள் விடும் தவறுகளை குறித்த அதிகாரி விழிப்புடன் கண்கானிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

                விசேடமாக அதிக வேகம், போக்குவரத்தின் போது கையடக்க தொலைப்பேசிகளை பயன்படுத்தல் மற்றும் ஏனைய வீதி போக்குவரத்து விதிகளை மீறுகின்றமை உள்ளிட்ட விடயங்களை அந்த அதிகாரி கண்காணிக்கவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

                அவ்வாறு சாரதி ஒருவர் தவறு இழைப்பானாரால் அவர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுச் செல்லப்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

                இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 7 பேர் விபத்துக்களால் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

                அவர்களில் ஐவர் மோட்டார் வண்டி செலுத்துனர்கள் என்பதுடன், ஒருவர் பதசாரி எனவும் மற்றையவர் அண்மையில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

                Posted in Uncategorized

                பொலிஸ் அதிகாரி லொறியால் மோதி படுகொலை

                பொலிஸ் அதிகாரி லொறியால் மோதி படுகொலை

                வீதியின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் லொறியொன்று மோதியதில்

                பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

                நேற்று இரவு (04) பழைய கெஸ்பேவ வீதியில் உள்ள கட்டிய சந்தியில் இருந்து தெல்கந்த நோக்கி

                பயணித்த லொறி ஒன்று வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

                விபத்தில் உயிரிழந்தவர் மருதானை பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த புளத்சிங்கள

                பகுதியில் வசிக்கும் 47 வயது பொலிஸ் சார்ஜென்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

                  Posted in உலக செய்திகள்

                  13 வயது சிறுவனை சுட்டு கொன்ற பொலிஸ் – கொந்தளிப்பில் மக்கள்

                  13 வயது சிறுவனை சுட்டு கொன்ற பொலிஸ் – கொந்தளிப்பில் மக்கள்

                  அமெரிக்கா சிக்காக்கோ பகுதியில் 13 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கி வைத்திருந்த நிலையில் அவனை காவல்துறையினர் சுட்டு படு கொலை செய்துள்ளனர்

                  கையில் வைத்திருந்த துப்பாக்கியினை கீழே போடும் படி போலீசார் அறிவித்தல் விடுத்த

                  பொழுதும் அதனை அவன் செய்திட மறுத்த நிலையில் இந்த சூட்டு தாக்குதல் இடம் பெற்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர்

                  மேற்படி சிறுவன் படுகொலை தொடர்பாக நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளது

                  ,அமெரிக்கா காவல்துறையின் இனவெறி தொடர்ந்து நீடித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                    Posted in இலங்கை செய்திகள்

                    போதைவஸ்து கடத்த முயன்ற பெண் – மடக்கி பிடித்த பொலிஸ்

                    போதைவஸ்து கடத்த முயன்ற பெண் – மடக்கி பிடித்த பொலிஸ்

                    சிறை சாலைக்குள் துவாய் ஒன்றுக்குள் மறைத்து போதைவஸ்து கடத்த முயன்ற பெண் ஒருவர்

                    கைது செய்ய பட்டுள்ளார் ,கவால்துறையினருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து இந்த கைது

                    இடம்பெற்றுள்ளது


                    கைதானவர் தொடர்ந்து விசாரணைகளுக்கு உட்படுத்த பட்ட பின்னர் நீதிமன்றில் நிறுத்த பட்டுள்ளார்

                      Posted in Uncategorized

                      ஆறு பெண்களை கடத்தி கற்பழித்து – அடித்து கொன்ற மர்ம கொலையாளி சிக்கினார்

                      ஆறு பெண்களை கடத்தி கற்பழித்து – அடித்து கொன்ற மர்ம கொலையாளி சிக்கினார்

                      அமெரிக்கா கலிபோனியா பகுதியில் 1977 முதல் 1987 ஆண்டுவரையில கால பகுதியில் அழகிய ஆறு பெண்களை கடத்தி

                      கற்பழித்து அதன் பின்னர் அடித்து கொன்ற மர்ம கொலையாளி தற்போது சிக்கியுள்ளார்

                      நீண்டகாலமாக போலீசார் மேற் கொண்டு வந்த மேற்படி கொலை வழக்கில் குறித்த நபர் சிக்கியுள்ளார்


                      இவ்வாறு பல்வேறு பட்ட கொலை வழக்குகளில் இன்று வரை சிக்காது சிலர் மர்மமாக உலாவி வருகின்றனர்

                      இவர்களை கைது செய்திட முடியாது காவல்துறையினர் திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது

                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                      லண்டனில் – ஒன்பது வயது சிறுமியை காணவில்லை தேடும் பொலிஸ்

                      லண்டனில் – ஒன்பது வயது சிறுமியை காணவில்லை தேடும் பொலிஸ்

                      மேற்கு லண்டன் பகுதியில்கடந்த தினம் முதல் ஒன்பதுவயது ஆசிய நாட்டை சேர்ந்த சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார் ,

                      இவரை தெரிந்தால் தமக்கு உடனடியாக தெரிவிக்கும்படி காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

                      இவர் கடத்த பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது

                      சிறுமி இறுதியாக நின்ற பகுதியில் உள்ள கமராக்கள் பகுப்பாய்வுக்கு உட்படுத்த பட்டு வருகின்றன

                      இவரை யாரவது கண்ணுற்ற்றால் தமக்கு உடனடியாக தெரிவிக்கும் படி போலீசார்

                      வேண்டியுள்ளதுடன் ,இந்த செய்தியினை அதிகமாக சேர் ,பகிர்ந்து உதவும் படி மன்றாடி

                      வேண்டியுள்ளனர் ,மக்களே முடிந்தவரை இதனை பகிருங்கள் ,சிறுமியை மீட்க இது உதவியாக அமையலாம்

                        Posted in இலங்கை செய்திகள்

                        கிளிநொச்சியில் சிக்கிய 2,685 கிலோ கஞ்சா

                        கிளிநொச்சியில் சிக்கிய 2,685 கிலோ கஞ்சா

                        கிளிநொச்சி பகுதியில் போலீசார் மேற்கொண்ட திடீர்

                        சுற்றிவளைப்பின் பொழுது மறைத்து வைக்க பட்டிருந்த சுமார் 2,685 கிலோ கஞ்சா மீட்க பட்டுள்ளது

                        போலீசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்படி கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                        Posted in இலங்கை செய்திகள்

                        ஒரு நாளில் ஆறு மோட்டர் சைக்கிள் திருட்டு

                        ஒரே நாளில் ஆறு மோட்டர் பைகில்கள் மாயம் – மக்களுக்கு காவல்துரை அவசர எச்சரிக்கை

                        திருடர்கள் கைவரிசை
                        இலங்கையில் பல மாதங்காளாக ஊந்துருளிகள் திடீரென காணமல் போகின்றன ,வீடுகளுக்கு முன்னால் மற்றும் கடை தொகுதிகளில்

                        நிறுத்தி வைக்க பட்டவை காணாமல் போயின
                        ,மேற்படி திருட்டை கும்பல் ஒன்று இணைந்து செய்து வந்துள்ளது


                        திருடப்பட்ட ஊந்துருளிகள் பாகங்களாக கழற்றி விற்பனை செய்ய பட்டும் வந்துள்ளன

                        இவ்வாறு கடந்த 24 மணித்தியாலத்தில் ஆறு ஊந்துருளிகள் காணாமல் போயுள்ளன

                        திடீர் சுற்றிவளைப்பு

                        போலீசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை

                        புலிகள் ஒரு லட்சம் பேரை தலை வெட்டி கொன்றனர்

                        தொடர்ந்து இந்த திருடடை கட்டு படுத்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

                        Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

                        லண்டனில் கொரோனா விதியை மீறிய இருவர் கைது -50 பேருக்கு தண்டம்

                        லண்டனில் கொரோனா விதியை மீறிய இருவர் கைது -50 பேருக்கு தண்டம்

                        கடந்த தினம் லண்டன் ஸ்பீக்கிலுள்ள காஸ்கில் சாலையில் உள்ள உடல் பயிற்சி நிலைய ஒன்றில் திடீரென கூடிய


                        ஐம்பதுக்கு மேற்பட்டவர்களினால் அங்கு பதட்டம் நிலவியது ,தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் இருபத்தி நான்கு வயதுடைய

                        வாலிபர் மற்றும் 33 வயதுடைய பெண் ஆகியோரை கைது செய்தனர்

                        இவர்களே இந்த நிகழ்வை ஒன்று கூட்டியதாக காவல்துறையினர் சநதேகம் வெளியிட்டுள்ளனர்,சந்தேகம் நிரூபிக்க பட்டால்

                        இருவருக்கும் தலா பாத்து ஆயிரம் பவுண்டுகள் விகிதம் தண்டம் வழங்க படலாம் .

                        மேலும் நிகழ்கால நோயின் பரவல் கட்டு பாட்டு விதிகளை மீறிய குற்ற

                        சாட்டில் ஐம்பது பேருக்கு நிர்ணயிக்க பட்ட தண்டம் அறவிட பட்டுள்ளது ,இருநூறு முதல் எண்ணூறு பவுண்டுகள் விகிதம் வழங்க பட்டுள்ளது

                        சமீப நாட்களில் இவ்விதம் ஒன்று கூடுதல் நிகழ்வுகள் அதிகரித்து செல்கின்றதும் ,

                        போலீசார் மடக்கி பிடிப்பதும் தொடந்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

                          Posted in இலங்கை செய்திகள்

                          4 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா

                          4 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா

                          தலதா மாளிகை வளாகத்தில் நிருவப்பட்டுள்ள பொலிஸ் நிலைய அதிகாரிகள்

                          நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                          அதனடிப்படையில் குறித்த நிலையத்தில் கடமையாற்றும் 200 பேர் அளவில்

                          தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                          குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமைகளுக்ககாக வேறு பொலிஸ் அதிகாரிகள்

                          180 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

                          Posted in இலங்கை செய்திகள்

                          பொலிஸ் வேட்டையி 34 பேர் திடீர் கைது

                          பொலிஸ் வேட்டையி 34 பேர் திடீர் கைது

                          இலங்கையில் பரவி வரும் நோயின் தாக்குதலை கட்டு படுத்த

                          அரசால் விதிக்க பட்ட விதிகளை மீறி செயல்பட்ட 34 பேர்

                          காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

                          இவர்களில் பெரும்பாலானோர் முகக் கவசம் அணிய மறுத்த

                          நிலையில் கைது செய்ய பட்டுள்ளனர்

                          Posted in இலங்கை செய்திகள்

                          தனிமைப்படுத்தலில் இருந்து தப்பியோடுபவர்களுக்கு உதவுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை- பொலிஸ்

                          தனிமைப்படுத்தலில் இருந்து தப்பியோடுபவர்களுக்கு உதவுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை- பொலிஸ்

                          கொரோனா வைரஸ் தொற்றில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள அல்லது சிகிச்சைக்காக உட்படுத்தப்படிருந்த நிலையில்

                          தப்பியோடுபவர்களுக்கு மற்றும் மறைந்திருப்பதற்கு உதவி புரிகின்ற நபர்களுக்கெதிராக கடும் சட்ட நடவடிக்கைகள்

                          எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

                          கொவிட் வைரஸ் தொற்றாளியாக அடையாளம் காணப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டிருந்த நிலையில் தப்பியோடிய

                          சப்புகஸ்கந்த பகுதியைச் சேர்ந்த நபர் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

                          தப்பியோடிய நிலையில் கைது செய்யப்பட்ட இந்த நபர் சம்பந்தமாக இதுவரையிலும் ஆறு வீடுகளைச் சேர்ந்த 22 பேர்

                          தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பட்டுள்ளனர்.
                          அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தனிமைப்படுத்தல்

                          விதிகளை மீறிய மேலும் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.