Posted in இலங்கை செய்திகள்

போதை பொருளுடன் பொலிஸ் அதிகாரி கைது

போதை பொருளுடன் பொலிஸ் அதிகாரி கைது

இலங்கை சீனன்குடா பொலிஸ் பிரிவில் போதை மாத்திரை வைத்திருந்த பொலிஸ்
அதிகாரி ஒருவர் காவல் துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்

போதை பொருளுடன் கைது செய்ய பட்ட உயர்நிலை பொலிஸ் அதிகாரி தீவிர விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளார்

இலங்கை பாதுகாப்பு படைகள் போதைவஸ்த்திற்கு அடிமையாகி ,குறித்த போதை பொருட்களை கடத்தி வியாபாரம் செய்து வருகின்றனர்

தமது அரச வாகனத்தில் மறைத்து எடுத்து செல்லும் பொழுது சிலர் சிக்கியும் இருந்தனர் ,
இலங்கையில் போதை பொருளுடன் நாளாந்தம் பலர் கைதாகி வருகினறனர்

போதைக்கு அடிமையான பெண்கள் உள்ளிட்ட சிறார்கள் கடத்தி ,கற்பழித்து கொலை செய்யப் படுகின்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது

மக்களை பாதுகாக்க வேண்டிய பொலிஸ் அதிகாரி போதை பொருளுடன் கைது
செய்ய பட்ட சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    சிறைக்கைதிகள் மீது தாக்குதல் – பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட 10 பேர் காயம்

    சிறைக்கைதிகள் மீது தாக்குதல் – பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட 10 பேர் காயம்

    சிறை கைதிகளை ஏற்றியபடி பயணித்த பேரூந்து ஒன்றின் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது.

    இதில் போலீஸ் அதிகாரி உள்ளிட்ட சிறை கைதிகள் பத்து பேர் காயமடைந்த நிலையில்

    மருத்துவ மனையயில்
    அனுமதிக்க பட்டுள்ளனர்.

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      லூசியம் பகுதியில் 17 கத்தி குத்து தாக்குதல் -6 பேர் மரணம் – பொலிஸ் கண்காணிப்பு தீவிரம்

      லூசியம் பகுதியில் 17 கத்தி குத்து தாக்குதல் -6 பேர் மரணம் – பொலிஸ் கண்காணிப்பு தீவிரம்

      லண்டன் லூசியம் பகுதியில் கடந்த சித்திரை மாதத்தில் மட்டும் பதினேழு கத்தி குத்து.

      வன்முறை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன ,இதில்,இதுவரை பாதிக்க பட்ட ஆறுபேர் மரணமாகியுள்ளனர்.

      இந்த சம்பவங்கள் Croydon, Lewisham, Bromley, Southwark, Lambeth, Beckenham, Orpington, and Streatham. பகுதிகளில் இடம்பெற்றுள்ளன.

      இந்த திடீர் அதிகரித்த வன்முறைகளை கட்டுப்படுத்த போலீசாருக்கு அதிகாரங்கள் .

      அதிகம் வழங்க பட்டுள்ளதுடன் ,தீவிர ரோந்து கண்காணிப்பு மற்றும் ,இரகசிய கமரா கண்காணிப்புக்கள் பல பகுதிகள் உட்படுத்த பட்டுள்ளது.

      சந்தேகத்திற்கு இடமானவர்கள் சோதனைக்கு உள்ளாக்க படுவதுடன் ,அவர்கள்

      கண்காணிப்பு பாகுதிக்குள் உள்ளாக்க பட்டு வருகின்றனர்.

      ஆசிய நாட்டவர்கள் அதிகம் இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளது பதிவாகியுள்ளது

      ,இதனை தடுக்க இந்த விசேட படையினர் சிவில் உடையில்
      சுற்றிய வண்ணம் உள்ளனர்.

        Posted in Uncategorized

        யாழில் லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

        யாழில் லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

        யாழ்ப்பாணத்தில் பத்து ஆயிரம் ரூபா லஞ்சம் பெற்ற மூன்று போலீஸ் அதிகாரிகள்

        நெடுந்தீவிலுக்கு இட மாற்றம் செய்ய பட்டுள்ளனர்.

        இவர்கள் வாங்கிய ஊழல் தெரியவந்துள்ள,
        நிலையிலும் ,அவர்கள் பதவி பிடுங்க பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையம் அறிவித்துள்ளது .

          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          லண்டன் லூசியம் பகுதியில் -12 வயது சிறுமியை காணவில்லை – தேடும் பொலிஸ்

          லண்டன் லூசியம் பகுதியில் -12 வயது சிறுமியை காணவில்லை – தேடும் பொலிஸ்

          லண்டன் லூசியம் பகுதியில் பன்னிரெண்டு வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.


          இவர் லூசியம் பகுதியில் முப்பதாம் திகதி காணப்பட்டுள்ளார் ,அதன் பின்னர் எங்கு

          சென்றார் என்பது தொடர்பாக தெரியவில்லை.

          இவரை கண்ணுற்றால் தமக்கு தெரிய படுத்தும் படி போலீசார் வேண்டுதல் விடுத்துள்ளனர்.

            Posted in Uncategorized

            இந்து முஸ்லீம் மோதல் – ராஜஸ்தானில் ஊரடங்கு

            இந்து முஸ்லீம் மோதல் – ராஜஸ்தானில் ஊரடங்கு

            இந்தியா ராஜஸ்தான் மாநிலத்தில் இந்து முஸ்லீம்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து அங்கு


            ஊரடங்கு பிறப்பிக்க பட்டுள்ளது ,மேலும் இணையம்,தொலைத் தொடர்புகள் துண்டிக்க பட்டுள்ளன

            இரு மதங்களுக்கு இடையில் ஏற்படுத்த பட்ட மதவாத போர் திட்டமிட்ட அரசியல்

            நடவடிக்கை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்

            இந்த மத மோதலினால் ஜோடபூர் பகுதி இயல்பு வாழ்வு முடங்கியுள்ளது

              Posted in Uncategorized

              26 லட்சம் ரூபா நகை திருடனை மடக்கி பிடித்த பொலிஸ்

              26 லட்சம் ரூபா நகை திருடனை மடக்கி பிடித்த பொலிஸ்

              இலங்கை அநுராதபுரம், தலாவையில் உள்ள நகை கடை ஒன்றில் இருபத்தி ஆறு லட்சம்

              ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையடித்து சென்ற திருடனை
              போலீசார் மடக்கி பிடித்தனர்

              அவரிடம் கொள்ளையடித்த நகைகளை விற்க இரகசிய முகவர் ஒன்றை பயன் படுத்தி

              அதன் ஊடாக இந்த திருடனை கைதுசெய்துள்ளனர்

              கைதானவர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்

                Posted in இலங்கை செய்திகள்

                கொழும்பில் மீண்டும் பொலிஸ் பதிவு

                கொழும்பில் மீண்டும் பொலிஸ் பதிவு

                வெளிப் பிரதேசங்களிலிருந்து வந்து கொழும்பில் தற்காலிகமாக தங்கியிருக்கும் நபர்களின்

                விவரங்களைத் திரட்டும் பணிகளில் மேல் மாகாண சமூக பொலிஸ் பிரிவினர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

                இம்மாதம் 14, 15 மற்றும் 16 ஆகிய தினங்களில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வீடுகள், அலுவலகங்கள், வியாபார நிலையங்கள், அரச அல்லது தனியார்

                காணிகளில் இடம்பெறும் நிர்மாணங்கள் போன்றவற்றில் தற்காலிகமாக தங்கியிருப்போரின் விவரங்கள் திரட்டப்படும்.

                தேசிய பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் போதைப் பொருள் பாவனையை ஒழிப்பதை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

                இந்த 3 நாட்களுக்குள் உங்களின் பிரதேசத்துக்கு வருகை தரும் பொலிஸ் அதிகாரிகள் வழங்கும் படிவத்தைப் பெற்று, தற்காலிகமாக உங்கள் வசிப்பிடத்தில் காணப்படும் நபர்களின்

                விவரங்களைக் குறிப்பிட்டு அந்தப் படிவத்தை பூர்த்தி செய்து அந்த அதிகாரிகளிடம்

                ஒப்படைக்குமாறு அல்லது அருகாமையிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறும் பொலிஸ் ஊடகப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  கொழும்பு நகரில் மூன்று தினங்களுக்கு விசேட தேடுதல் நடவடிக்கை

                  கொழும்பு நகரில் மூன்று தினங்களுக்கு விசேட தேடுதல் நடவடிக்கை

                  தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு கொழும்பு நகரில் இன்று (14) முதல் மூன்று

                  தினங்களுக்கு விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக

                  பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

                  தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி, குற்றச்செயல்களையும் போதைப்பொருள் வர்த்தகத்தை

                  ஒழிப்போம் எனும் தொனிப் பொருளில் தேசிய பாதுகாப்பு செயற்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கூறினார்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    வியாபாரியை துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி மரணம்!

                    வியாபாரியை துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி மரணம்!

                    திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில்

                    கடமையாற்றிய பொலிஸ் அதிகாரியொருவர் நேற்றிரவு (16) போதை வியாபாரி ஒருவரை துரத்தி பிடித்த போது தவறி விழுந்து மரணமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                    இதன்போது கஜ்ஜி முகமது தாரிக் வயது 49 என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                    மேலும் தெரியவருவதாவது,

                    தம்பலகாமம் பொலிஸாருக்கு ஹோரொயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக

                    கிடைத்த ரகசிய தகவலையடுத்து சந்தேக நபர்களை முள்ளிப்பொத்தானை என்ற இடத்தில் கைது செய்ய முற்பட்ட போதே இவ் மரணம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                    கைது செய்யப்பட்டவர் கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

                    மரணம் குறித்து மேலதிக விசாரணை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

                    சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையின்

                    பின்னர் உறவினர்களிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                      Posted in Uncategorized

                      இலங்கையில் புதிய சட்டம் – மக்களை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவிப்பு

                      இலங்கையில் புதிய சட்டம் – மக்களை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவிப்பு

                      இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வருகின்றன , திருமண

                      மன்படங்களில் 200க்கு குறைவானவர்களே அனுமதிக்க படுவார் ,மேலும் உணவகங்களில் உள்ளே

                      100 உள்ளானவர்கள் மட்டும் அமர வேண்டும்

                      தவிர வீடுகளை விட்டு தேவையின்றி வீதிகளில் நடமாட வேண்டாம் என எச்சரிக்கை பட்டுள்ளது

                      ,மீறுவோர் காவல்துறையால் கைது செய்ய படுவார்கள் என தெரிவிக்க படுகிறது
                      மக்களே விழிப்பாக இருங்கள்

                      பரவும் நோயில் இருந்து உங்களை காப்பற்றி கொள்ளுங்கள்

                        Posted in Uncategorized

                        இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!

                        இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!


                        பனாமுரே பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

                        கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் பொலிஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                        மேலும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                        பனாமுரே பொலிஸ் சிறைக்கூண்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து அப்பகுதி மக்கள்

                        பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

                        குடும்ப தகராறு காரணமாக மனைவி செய்த முறைப்பாட்டையடுத்து கைது செய்யப்பட்ட

                        பனாமுரே, வெலிபோத யாய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை

                        ஒருவர் பொலிஸ் சிறைக்கூண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

                        சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

                        சம்பவத்தை அடுத்து இன்று (17) காலை பனாமுரே பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடிய

                        பிரதேச மக்கள், இந்த மரணத்திற்கு பொலிஸாரே காரணம் என குற்றம் சுமத்தியுள்ளனர்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          வீட்டு தோட்டத்தில் கஞ்சா வளர்த்த நபர் – சுற்றிவளைத்த பொலிஸ்

                          வீட்டு தோட்டத்தில் கஞ்சா வளர்த்த நபர் – சுற்றிவளைத்த பொலிஸ்

                          இலங்கை வெள்ளவாய பகுதியில் 39 வயதுடைய நபர் ஒருவர் தனது வீட்டு தோட்டத்தில் ஏனைய

                          செடிகளுக்கு இடையில் மறைத்து பத்துக்கு மேற்பட்ட கஞ்சா செடிகள் வளரத்து வந்துள்ளமை

                          கண்டு பிடிக்க பட்டுள்ளது


                          பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றது


                          தற்போது நபர் உலர்ந்த கஞ்சா போதையுடன் கைது செய்ய பட்டுள்ளார்

                            Posted in Uncategorized

                            சாரதியை அடித்து துன்புறுத்தி நிர்வாணமாக்கிய சிங்கள பொலிஸ்

                            சாரதியை அடித்து துன்புறுத்தி நிர்வாணமாக்கிய சிங்கள பொலிஸ்

                            இலங்கையில் ஆளும் கோட்டபாய அரசில் சாரதி ஒருவர் கைது செய்ய பட்டு துன்புறுத்த பட்டு நிர்வாணமாக்க பட்ட விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                            மேற்படி சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் .

                              Posted in Uncategorized

                              இளைஞர்கள் மீது, கொடூரமாக தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்

                              இளைஞர்கள் மீது, கொடூரமாக தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்

                              மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் இரண்டு இளைஞர்கள் மீது, கொடூரமாக தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

                              பொலிஸ் ஊடகப் பிரிவு இந்த தகவலை தெரிவிக்கின்றது.

                              பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஏறாவூர் பிரதேசத்தில் இளைஞர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தும் வீடியோ ஒன்று நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

                              தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இதை தனது டுவிட்டரிலும் பதிவிட்டிருந்தார்.

                              இதனையடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதோடு குறித்த அதிகாரி தற்சமயம் பணிநீக்கமும் செய்யப்பட்டிருக்கின்றார்.

                                Posted in இலங்கை செய்திகள்

                                16 பொலிஸ் அதிகாரிகள் – ஏஎஸ்பி யாக பதவி உயர்வு

                                16 பொலிஸ் அதிகாரிகள் – ஏஎஸ்பி யாக பதவி உயர்வு

                                இலங்கையில் எஸ் பியாக பதவி வகித்து வந்த பதினாறு காவல்துறை அதிகாரிகள் ஏஎஸ்பி யாக பதவி உயர்த்த பட்டுள்ளனர்

                                உடனடி அமுலுக்கு வரும் நிலையில் இந்த பதவி உயர்வு வழங்க பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது

                                  Posted in உலக செய்திகள்

                                  அமெரிக்காவில் கறுப்பினத்தவரை கொன்ற பொலிஸ் காரனுக்கு 22 1/2 வருடம் சிறை

                                  அமெரிக்காவில் கறுப்பினத்தவரை கொன்ற பொலிஸ் காரனுக்கு 22 1/2 வருடம் சிறை

                                  அமெரிக்காவில் இனவெறி பிடித்த காவல்துறை சிப்பபாய் ஒருவர் கறுப்பினத்தவர் , ஒருவரை கழுத்தில் நெரித்து படுகொலை செய்தார்

                                  ,இவர் மேற்கொண்ட இந்த கொலை வெறி செயலினால் நாடே கொந்தளித்தது ,அந்த கொலை வழக்கு விசாரணைகள்

                                  முடிவு அறிவிக்க பட்டுள்ளது ,அதன் பிரகாரம் இவருக்கு இருபத்தி இரண்டரை வருடம் சிறை

                                  தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது ,அனால் மரண தண்டனை வழங்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    பொலிஸ் அதிகாரி எனக்கூறி பணமோசடி

                                    பொலிஸ் அதிகாரி எனக்கூறி பணமோசடி

                                    வீட்டிலுள்ள தொலைபேசி அழைப்பு விடுத்து பணமோசடி செய்யும் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                                    பொலிஸ் அதிகாரி என தெரிவித்து இவ்வாறு மோசடியில் ஈடுபடுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

                                    இலங்கையில் பிரசித்தி பெற்ற பொலிஸ் அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

                                    Posted in உலக செய்திகள்

                                    பிரிட்டனில் சுற்றிவளைத்த பொலிஸ் சிக்கிய பெரும் பணம்

                                    பிரிட்டனில் சுற்றிவளைத்த பொலிஸ் சிக்கிய பெரும் பணம்

                                    பிரிட்டனில் போலீசார் நடத்திய திடீர் முற்றுகையில் இரண்டு லட்சம் பவுண்டுக்ளுக்கு அதிகமான

                                    பணமும் ,ஆயுதங்கள் மற்றும் போதைவஸ்து என்பன மீட்க பட்டுள்ளது

                                    பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற உளவு தகவலை அடுத்து நடத்த பட்ட பெரும் முற்றுகையில் இந்த
                                    போதைவஸ்து கும்பல் சிறை பிடிக்க பட்டுள்ளனர்

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      பொலிஸ் அதிகாரிகளாக போலி வேடத்தில் பண மோசடி

                                      பொலிஸ் அதிகாரிகளாக போலி வேடத்தில் பண மோசடி

                                      பயங்கரவாத விசாரணைப் பிரிவு அல்லது குற்றவியல் விசாரணைத் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி பொலிஸ் அதிகாரிகள் என தம்மை

                                      அடையாளப்படுத்தி ஏற்படுத்தப்படும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பாக மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிசார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

                                      இந்த அழைப்பினூடாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தங்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், இது தொடர்பாக அவர்களிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறி, அழைப்பவர்களிடமிருந்து

                                      பணமோசடியொன்று மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.