Tag: பொலிஸ்
199 பொலிஸ் அதிகாரிகளுக்கு , கொரோனா
199 பொலிஸ் அதிகாரிகளுக்கு , கொரோனா
மேல் மாகாணத்தில் இன்று (6) வரை 199 பொலிஸ் அதிகாரிகள்,
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்றுத் தெரிவிக்கப்படுகிறது.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் 258 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் 1,350 பேர்
சுயத்தனிமைப்படுத்தலில் உள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
03 சிறைச்சாலைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு
03 சிறைச்சாலைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு
நாட்டில் உள்ள 03 சிறைச்சாலைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணிகளில் இன்று (24) முதல் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை, வெலிக்கடை சிறைச்சாலை
மற்றும் மெகசின் சிறைச்சாலை ஆகியவற்றுக்கு இவ்வாறு பொலிஸ் விசேட
அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள்
ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் வியாபாரம் மற்றும் சிறைச்சாலைக்குள் இருந்துகொண்டு
மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
10 பொலிஸ் அதிகாரிகள் பேருக்கு இடமாற்றம்
10 பொலிஸ் அதிகாரிகள் பேருக்கு இடமாற்றம்
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர், பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் உதவிப் பொலிஸ் அதிகாரிகள் 8 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சேவையின் நிமித்தம் தேர்தல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் அனுராதபுரம் வலயத்திற்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி விஜித் த அல்விஸ் ஹட்டன் வலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் தீவிரவாத ஒழிப்பு மற்றும் விசாரணை பிரிவின் உதவி பொலிஸ் அதிகாரி எம்.ஆர் நூறுதீன் பொலிஸ் விசேட பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு -376 பேர் கைது
பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு -376 பேர் கைது
மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றம் சம்பவங்களுடன் தொடர்புடைய 376 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று காலை 6 மணி முதல் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இந்த சந்தேக நபர்கள் கைது
செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.
இதன்போது ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த 171 பேரும், கஞ்சா வைத்திருந்த 78 பேரும், சட்டவிரோத மதுபானம்
மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருளுடன் 127 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மேல் மாகாணத்தினுள் முகக்கவசம் அணியாமல் இருந்த 2164 பேர் பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சமூக இடைவெளி பேணப்படாமை தொடர்பில் 1765 பெயர் எச்சரிக்கப்பட்டு உள்ளதாக மேல் மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் காரியாலயம் குறிப்பிட்டுள்ளது
சேவையில் இருந்து விலகிய பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகளை மீண்டும் சேவைக்கமர்த்த பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்
சேவையில் இருந்து விலகிய பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகளை மீண்டும் சேவைக்கமர்த்த பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்
சேவையிலிருந்து விலகிய பொலிஸ், விசேட அதிரடிப் படை வீரர்கள் உள்ளடங்கலான பொலிஸ் அதிகாரிகளை நாட்டில் சட்டம் ஒழுங்கை
வலுப்படுத்தும் வகையில் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்காக மூவர் அடங்கிய குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய அவர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள பாதுகாப்பு
அமைச்சுக்கு 2020 பெப்ரவரி மாதம் 19ம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இதற்கமைய 2009 ஜூன் 1ம் திகதிக்கு முன்னரும் பின்னரும் சேவையில் இருந்து விலகிய பொலிஸ் உத்தியோகத்தர்களில் 2020 ஜனவரி 1ம் திகதியாகும் போது 50 வயதுக்குட்பட்டவர்களை
மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையானது முறையாக மற்றும் திறந்த செயற்றிட்டத்தின் மூலம் மூவர்
அடங்கிய குழுவின் பரிந்துரைக்கேற்ப தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் ஒப்புதலோடு மேற்கொள்ளப்படவுள்ளது.
சேவையில் இருந்து விலகிய பொலிஸ் உத்தியோகத்தர்களிடமிருந்து அமைச்சு பெறும் முறையீடுகளை கருத்தில் கொண்டு அவர்களை
மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளும் வழிவகைகள் குறித்து ஆராயுமாறு பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல்
குணரத்ன பணிப்புரைகளை வழங்கியுள்ளார். இந்தக் குழுவானது, 2009 ஜூன் 01க்கு முன்னரும் பின்னரும் சேவையில் இருந்து விலகிய
அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட முறையீடுகள் குறித்து ஆராயவுள்ளது.
2009 ஜூன் முதலாம் திகதிக்குப் பின்னர் சேவையில் இருந்து விலகிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீண்டும் சேவையில் இணைக்கப்படும் போது அவர்கள், பொலிஸ் மா அதிபரால்
குறிப்பிடப்படும் பிரதேசத்தில் குறைந்தபட்சம் மூன்று வருடங்களுக்கு திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கு அமைய
பணியாற்ற வேண்டும். இக்கால எல்லைக்குள் அவர்கள், இடமாற்றம் பெற்றுச் செல்ல எதிர்பார்ப்பதாயின் இது தொடர்பாக தேசிய பொலிஸ் ஆணைக் குழுவில் முறையீடு செய்தல் அவசியமாகும்.
சேவையில் இருந்து விலகிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் இருந்து விலகியதற்கான பின்னணி குறித்து
ஆராயப்பட்ட பின்னர் அவர்கள் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட, உடல் மற்றும் உளரீதியாக தகுதியுள்ளவர்கள் என
பொலிஸ் வைத்தியசாலையின் பிரதான வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்படும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்படுதல் வேண்டும்.
2009 ஜூன் முதலாம் திகதிக்கு முன்னர் சேவையிலிருந்து விலகிய நிலையில் மீண்டும் சேவையில் இணைய முறையீடு
மேற்கொள்ளும் அதிகாரிகள், சேவை காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் (நடவடிக்கை வலயம்) ஒரு வருடம் பணியாற்றி இருத்தல் வேண்டும்.
சேவையில் இருந்து விலகிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது முறையீடுகளை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ
இணையத்தளமான www.defence.lk இல் அல்லது இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.police.lk இல் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி
செய்வதன் மூலம் அளிக்க முடியும். மேலும் இதுதொடர்பான மேலதிக விபரங்களை 0112887884 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.
விண்ணப்பங்களை அனுப்பும் போது கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் ‘மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளல் 2020’ என குறிப்பிடல் அவசியமாகும். மீண்டும் சேவையில்
இணைத்துக்கொள்ள பரிசீலனை செய்வதற்கான மாதிரி விண்ணப்ப படிவத்தை 2020 ஜூலை, 17ம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ அனுப்பி வைத்தல் வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்பப்படவேண்டிய முகவரி : மேலதிக செயலாளர், பாதுகாப்பு அமைச்சு, (சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு) 14ம் மாடி, சு{ஹருபாய, பத்தரமுல்ல.
அதிரடிப் படையின் புதிய கட்டளை தளபதியாக பிரதி பொலிஸ் மா அதிபர் நியமனம்
அதிரடிப் படையின் புதிய கட்டளை தளபதியாக பிரதி பொலிஸ் மா அதிபர் நியமனம்
பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புதிய கட்டளை தளபதியாக பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர
நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது
பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது
பாதாள உலக குழு உறுப்பினரான அமில பிரசன்ன ஹெட்டிஹேவா என அழைக்கப்படும் ´சன்சைன் சுத்தா´ மீது துப்பாக்கிப்
பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபருக்கு
உதவி புரிந்த சந்தேகத்தின் பேரில் தலங்கம பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 30 ஆம் திகதி மாத்தறை மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக வைத்து
மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் சன்சைன் சுத்தா காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
143 பேர் கைது – தொடரும் பொலிஸ் வேட்டை
143 பேர் கைது – தொடரும் பொலிஸ் வேட்டை
இலங்கையில் வைரஸ் நோயின் காரணமாக மக்களை வீடுகளை
விட்டு வெளியேற வேண்டாம் என ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது
இவ்வாறான கால பகுதியில் வீதியில் நடமாடிய சுமார் 143 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
35 பொலிஸ் அதிகாரிகளுக்கு திடீர் பதவி உயர்வு
35 பொலிஸ் அதிகாரிகளுக்கு திடீர் பதவி உயர்வு
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமையவும் தேர்தல்கள்
ஆணைக்குழுவின் அனுமதிவுடனும் இவர்களுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மே மாதம் 9 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு பதவி உயர்வு பெற்றவர்கள் பொலிஸ் திணைக்களத்தில் பல்வேறு பிரிவுகளில் கடமையாற்றவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தள்ளது.
யாழில் நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த மக்களை தாக்கிய சிங்கள பொலிஸ்
யாழில் நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த மக்களை தாக்கிய சிங்கள பொலிஸ்
இலங்கை யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் நள்ளிரவு வீடொன்றுக்குள்
புகுந்த சிங்கள காவல்த்துறை காடையர்கள் அப்பாவி மக்கள் மீது வன்முறை தாக்குதலை நடத்தியுள்ளனர்
சிங்கள காடையர் காவல்துறையுடன் மோதலில் ஈடுபட்டதாக கூற படும் வாலிபன்
ஒருவனை கைது செய்து இழுத்து செல்லும் முகமாக அவர்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த சிங்கள படையினர் தேடுதலி நடத்தினர்
அதன் பின்னர் அங்கிருந்த ஆண் பெண்கள் மீது வன்முறை தாக்குதலை
நடத்தியதுடன் ,குறித்த வாலிபனை காவல்துறையில் ஒப்படைக்கும் படி மிரட்டி விட்டு சென்றுள்ளனர்
நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணைகளில் தாம் அவ்வாறு ஒருவரை தேடவில்லை என போலீசாரை தெரிவித்து இருந்தமை குறிப்பிட தக்கது

லண்டனில் -சிதறிய பொலிஸ் கார் – தப்பி ஓடிய நபர்
லண்டனில் -சிதறிய பொலிஸ் கார் – தப்பி ஓடிய நபர்
பிரிட்டன் M22 வேக சாலையில் BMW காரில் வேகமாக பயணித்த ஒருவரை காவல்துறையினர் ,துரத்தி சென்றனர்
அவர் தம்மை காவல்துறையினர் துரத்துகின்றனர் என அறிந்து வேகமாக வண்டியை செலுத்தியுள்ளார் .
காவல்துறையினர் சிவப்பு எச்சரிக்கை செய்த பொழுதும் அவர் அதனை ,
காணாது பயணித்ததினால் குறித்த கார் மோதி சேதத்திற்கு உள்ளாகியது
தற்போது காவல்துறை சிப்பாய் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் ,
காவல்துறையினர் கார் விபத்தில் சிக்க காரணமாக இருந்தத18 வயது நபர்
கைது செய்ய பட்டுள்ளார் ,போலீஸ் கார் சேதமானதற்கு குறித்த வாலிபர்
பணத்தை செலுத்த வேண்டிய சிக்கல் ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது

பெண்களை வீதிகளில் கடும் சோதனைக்கு உட்படுத்தும் இராணுவம்-கவனத்தில் கொள்வாரா ஆளுனர் அம்மணி …?
பெண்களை வீதிகளில் கடும் சோதனைக்கு உட்படுத்தும் இராணுவம்-கவனத்தில் கொள்வாரா ஆளுனர் அம்மணி …?
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து ஊரடங்கு பிறப்பிக்க பட்டுள்ளது
இவ்வேளை முக்கியமான பணியில் ஈடுபடுபவர்கள் உலவிட அனுமதி
அளிக்க பட்டுள்ளது ,அதற்கு அவர்களுக்கு சிறப்பு அடையாள படுத்தல்கள் வழங்க பட்டுள்ளன .
இவ்வாறு அரச பணியில் உள்ள பெண்கள் தமது பணிகளுக்கு சென்று வீடு
திரும்பும் பொழுது, இராணுவம் ,காவல்துறையினர், நீண்ட நேரம் காக்க வைத்து கடும் சோதனைக்கு உள்ளாக்கி வருகின்றனர்
இதனால் இந்த யுவதிகள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்
பாதுகாப்பு படைகளின் இந்த கடும் நடவடிக்கையை தளர்த்துவது தொடர்பாக
வடக்கு ஆளுநரோ ,மாவட்ட அரசாங்க அதிபர்களோ ,அன்றி அந்த பகுதி
பாராளுமனற உறுப்பினர்கள், எவருமே கவனம் செலுத்தவிலை என பாதிக்க பட்டவர்கள் கண்ணீருடன் தெரிவிக்கினறனர்
மருத்துவ மனைகளில் பணிபுரியும் தாதிமார்கள் கூட இவ்வாறு கடும் சோதனைக்கு உள்ளாகி வருகின்றனர் ,தமிழ் மக்களுக்கு
சேவை ஆற்ற வந்தவர் என தெரிவிக்கும் ,வடக்கு ஆளுநர் ,இந்த செயலை தடுக்க நடவடிக்கை மேற் கொள்வாரா ..?

பிரிட்டனில் வீட்டுக்குள் வெடி குண்டு – சுற்றிவளைத்த பொலிஸ்
பிரிட்டனில் வீட்டுக்குள் வெடி குண்டு – சுற்றிவளைத்த பொலிஸ்
பிரிட்டன் West Hill, Hastings. பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் இருந்து வெடிகுண்டுகள் மீட்க பட்டுள்ளன .
இங்கு குண்டுகள் உள்ளதாக Sussex காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து மேற்படி குண்டுகள் மீட்க பட்டுள்ளன
குண்டூ செயல் இழக்க வைக்கும்படையினர் வரவழைக்க பட்டு வெடிக்காத நிலையில் இருந்த குண்டு அகற்ற பட்டுள்ளது
இதனை அடுத்து அந்த பகுதி தீவிர சோதனைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளது .
மோப்ப நாய்கள் இந்த சோதனையில் ஈடுபடுத்த பட்டன ,எனினும் இது
தீவிரவாத செயலுடன் தொடர்பு பட்டதா என்பது தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை

இலங்கையில் வெடிக்க இருந்த குண்டு – தப்பிய மக்கள்
இலங்கையில் வெடிக்க இருந்த குண்டு – தப்பிய மக்கள்
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்குப் பின்னரும் மற்றுமொரு
பயங்கரவாத தாக்குதலை நடக்க திட்டமிடப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தனர்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதுதொடரபாக மேலும்
தெரிவிக்கையில் ,கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து மேற்கொள்ள
திட்டமிடப்பட்ட இரண்டாவது தாக்குதல் குறித்து தகவல்கள் புலனாய்வுப்பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகள் மூலம்
கண்டறியப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இதன் அடிப்படையில் இந்த தாக்குதலைத் திட்டமிட்டமை தொடர்பில் சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி தொடர்பாக ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு
பதிலளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அவரது தொழில் ரீதியான தொடரின் அடிப்படையில் இடம்பெற்ற தொடர்பு மற்றும்
தொலைபேசி அழைப்புகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படவில்லை. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சமிபத்தில்
மேற்கொண்ட விரிவான விசாரணையின் அடிப்படையிலேயே சட்டத்தரணி கைது இடம்பெற்றதாகவும் கூறினார்.
ஒரு சில அமைப்புகளை ஆரம்பித்து அதற்கு தலைமைத்துவம் வழங்கி, அதற்கு நிதியுதவி வழங்கிய நபர்கள் குறித்த விடயங்களும்
தற்போது இடம்பெற்று வரும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அவ்வாறானோரும் தற்போது
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர் . உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர்
பயங்கரவாத தலைவர் ஸஹ்ரான் ஹாசிமின் குழு இரண்டாக பிளவுபட்டதாகவும், அதில் ஒரு குழு பிரிந்து சென்றதோடு, மற்றைய
குழுவே இவ்வாறான தாக்குதலை மேற்கொண்டதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டிய பொலிஸ் ஊடகப்
பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன புலனாய்வுப் பிரிவினரை திசைதிருப்புவதற்காக பயங்கரவாதிகள் மேற்கொண்ட முயற்சி இது என்றும் கூறினார்.
இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் முஸ்லிம் தீவிரவாதத்தை ஏற்படுத்துவதற்காக சில அமைப்புகளுடன்
இணைந்து பணியாற்றியுள்ளமை மற்றும் இஸ்லாத்தை தவறான விளக்கங்கள் மூலம் வெளிப்படுத்தி ஒரு சில இளைஞர்களை
பிழையாக வழி நடாத்திச் சென்றுள்ளனர். இதில் இக்குண்டுதாரிகள் நேரடியாக தொடர்புபட்டுள்ளனர்.
இவ்வாறான திட்டத்திற்கு உதவி ஒத்தாசை, அதனைத் தூண்டியமை உள்ளிட்ட விடயங்களை மேற்கொண்டவர்கள் தொடர்பிலும்
தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுகிறது. தெற்காசிய வலயத்திலுள்ள நாடொன்றில்
மேற்கொள்ளப்படும் தாக்குதலொன்றை அடுத்து, அதனை மேற்கொள்ளும் சில வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை, இரகசியமாக இலங்கைக்கு அழைத்து வந்து பாதுகாப்பாக வைத்திருக்க
உதவுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தமை தொடர்பில் தகல்வகள் வெளிவந்துள்ளன என்று தெரிவித்த அவர் உயிர்த்த ஞாயிறு
தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் ஓரிரு மாதங்களில் இடம்பெற்ற விசாரணைகளின்போதும், குறித்த சட்டத்தரணி விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவித்த அவர்
சமிபத்திய விசாரணைகளின் அடிப்படையிலேயே அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகள் உயிர்த்த ஞாயிறு தொடர்பானவை அல்ல.
அவர் தனது கடமையில் தவறியமை தொடர்பில் வேறு குற்றத்தின் அடிப்படையிலானது எனவும் அவ்விசாரணை வேறாக
இடம்பெறுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன மேலும் தெரிவித்தனர்.

21 பொலிசாருக்கு கொரனோ தொற்று – தனிமை படுத்தல்
21 பொலிசாருக்கு கொரனோ தொற்று – தனிமை படுத்தல்
இலங்கை Keselwatta பகுதியை சேர்ந்த காவல்துறையினர் 21 பேர் கொரனோ
நோயின் தொற்றுக்கு உள்ளாகி இருக்க கூடும் என்ற சந்தேகத்தில் 21 நாட்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர் .
கொரனோ தொற்றுக்கு உள்ளான ஒருவருடன் நெருங்கி பழகினார்கள்
என்ற நிலையில் இவர்கள் இவ்விதம் அவசரமாக தனிமை படுத்த பட்டுள்ளனர்
காவல்துறையினர் யாரவது பாதிக்க பட்டால் அவர்களுக்கு சிறப்பு முகாம்கள்
மூன்று அமைக்க பட்டிருந்தமை இங்கே நினைவு கூற தக்கது

அத்து மீறி உலாவிய 1,599 பேர்- அதிரடி கைது
அத்து மீறி உலாவிய 1,599 பேர்- அதிரடி கைது
இலங்கையில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் விடுக்க பட்ட ஊரடங்கு
சட்டத்தின் பொழுது அத்து மீறி வெளியில் உலாவிய 1,599 பேரை தாம் கைது செய்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இவ்வாறு கைதானவர்களுக்கு ஐநூறு ரூபா முதலான தண்டமும் அறவிட
பட்டுள்ளதுடன் அவர்கள் போக்குவரத்திற்கு பயன் படுத்திய வாகனங்களும் பறிமுதல் செய்ய பட்டுள்ளன .
மேலும் 14 நாட்களுக்குள் குற்ற பணம் செலுத்த பட வேண்டும், தவறின்
நீதிமன்றில் முன்னிலை படுத்த படுவார்கள் என குறிப்பிட பட்டுள்ளது

இலங்கையில் 19 மாவட்டங்களில் -10 மணித்தியாலம் தாற்காலிகமாக ஊரடங்கு அகற்றல்
இலங்கையில் 19 மாவட்டங்களில் -10 மணித்தியாலம் தாற்காலிகமாக ஊரடங்கு அகற்றல்
இலங்கையில் பத்தொன்பது மாவட்டங்களில் தற்காலிகமாக பத்து மணித்தியாலங்கள்
வரை ஊரடங்கு அகற்ற பட்டு இருக்கும் என இராணுவம் அறிவித்துள்ளது
கண்டி ,யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகள் இதில் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது ,
இவ்வேளை மக்கள் சென்று தமக்கு வேண்டிய பொருட்களை மற்றும் அத்தியாவசிய
முதன்மை விடயங்களை செய்திடவே இந்த அறிவிப்பு நடைமுறை படுத்த பட்டுள்ளது
மக்கள் முண்டியடித்த படி வீதிகள் செல்வதை காண முடிகிறது ,வீதி போக்குவரத்து
கண்காணிப்பில் போலீசார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்

வெள்ளைக்கார பெண்களுக்கு கொரனோ பரப்பிய பொலிஸ்
வெள்ளைக்கார பெண்களுக்கு கொரனோ பரப்பிய பொலிஸ்
உத்திரகாண்டில் ஊரடங்கை மீறி சுற்றித்திருந்த வெளிநாட்டினரை பிடித்த போலீஸ் அவர்களை ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுத வைத்து நூதன தண்டனை வழங்கினர்.
ஊரடங்கை மீறிய வெளிநாட்டினர் – ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுத வைத்த போலீஸ்
தண்டனை பெற்ற வெளிநாட்டினர்
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 8 ஆயிரத்து 447 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி
செய்யபட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 273 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மாதம் 25-ம் தேதி முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய காரணங்களுக்கு அல்லாமல் மக்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஆனால், பொதுமக்களில் சிலர் ஊரடங்கை மீறி அத்தியாவசிய
காரணங்கள் அல்லாமல் சாலைகளிலும், பொது இடங்களிலும் சென்ற வண்ணம் உள்ளனர்.
அவ்வாறு ஊரடங்கை மீறுபவர்களை பிடிக்கும் போலீசார் அவர்கள் மீது குற்றங்களுக்கு ஏற்றார்போல் வழக்குகளும் பதிவு செய்து சிறையிலும் அடைக்கின்றனர்.
அதேபோல் சில சமயங்களில் ஊடரங்கை மீறுபவர்களுக்கு போலீசார் நூதனை தண்டனைகளும் வழங்குகின்றனர்.
அவ்வாறான ஒரு சம்பவம் உத்திரகாண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஆனால், அங்கு ஊரடங்கை மீறியவர்கள் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆவர்.
தண்டனை பெற்ற வெளிநாட்டினர்
உத்திரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் நகரில் பாயும் கங்கை நதிக்கரையோரம் நேற்று போலீசார் ரோந்து பணியில்
ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 10 பேர் ஊரடங்கு உத்தரவை மீறி
கங்கை நதிக்கரையோரம் சுற்றித்திரிந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
அவர்களை பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வெளிநாட்டினர் 10 பேரும் ஊரடங்கை மீறி கங்கையை சுற்றிப்பார்க்க வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, ஊரடங்கை மீறிய வெளிநாட்டினர் 10 பேரிடமும் ‘ நான் ஊரடங்கு விதிகளை பின்பற்றவில்லை, என்னை மன்னித்து
விடுங்கள்’ என 500 முறை எழுதச்சொல்லி நூதன தண்டனை வழங்கினர்.
தாங்கள் செய்த தவறை உணர்ந்த வெளிநாட்டினர் அனைவரும் தனித்தனியாக போலீசார் வழங்கிய இந்த தண்டனையை ஏற்ற 500
முறை ‘ நான் ஊரடங்கு விதிகளை பின்பற்றவில்லை, என்னை மன்னித்து
விடுங்கள்’ என எழுதி கொடுத்தனர். இதையடுத்து அந்த வெளிநாட்டினரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

கள்ள சாராயம் தயாரித்த கும்பல் மடக்கி பிடிப்பு
கள்ள சாராயம் தயாரித்த கும்பல் மடக்கி பிடிப்பு
இலங்கையில் ஊரடங்கு வேளையில் கட்டுக்குள் மறைந்திருந்து கள்ள
சாராயம் காய்ச்சிய கும்பல் ஒன்றை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
வடி சாராயங்களை அதிக விலைக்கு மேற்படி நபர்கள் விற்று வருகின்றனர்
மதுபான சாலைகள் பூட்ட பட்டுள்ள நிலையில் இந்த சாராயங்களு தற்பொழுது
மவுசு ஏற்பட்டுள்ளது ,பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய
தகவலை அடுத்து இவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

இன்று முதல் ஊரடங்கு சட்டத்தை மீறி சென்றால் – தனிமை படுத்தல் முகாமில் அடைப்பு – பொலிஸ் அவசர அறிவிப்பு
இன்று முதல் ஊரடங்கு சட்டத்தை மீறி சென்றால் – தனிமை படுத்தல் முகாமில் அடைப்பு – பொலிஸ் அவசர அறிவிப்பு
ஊரடங்கு சட்டத்தை மீறி ஒரு மாவட்டத்திலிருந்து மற்றுமொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு முயற்சிப்பார்களாயின்
அவ்வாறானோர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்படும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்கள் என்று பிரதி
பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஊரடங்;குச்சட்டம் அமுல் நடத்தப்பட்ட கடந்த 19 ஆம் திகதி தொடக்கம் இன்று வரையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய சுமார் 19
ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய தினம் மாத்திரம் ஆயிரத்து 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று
தெரிவித்த பிரதி பொலிஸ் மா அதிபர
இவ்வாறு சட்டத்தை மீறுவோர் நாளை முதல் 14 நாட்கள்
தனிமைப்படுத்தப்படும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்கள் என்றும் கூறினார்.
அத்தியாவசிய தேவைக்காக வழங்கப்பட்டுள்ள அவசரகால அனுமதிப்பத்திரத்தை சிலர் முறைகேடாக பயன்படுத்துவதாக
தெரியவந்துள்ளது இவ்வாறோனருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.







