Tag: தாக்குதல்
யாழில் பெண்மீது வாள்வெட்டு – திருடர்கள் கொலைவெறி தாக்குதல்
யாழில் பெண்மீது வாள்வெட்டு – திருடர்கள் கொலைவெறி தாக்குதல்
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் தனிமையில் வசித்து வந்த பெண்மணி ஒருவர்
வீட்டுக்குள் திருடர்கள் நுழைந்துள்ளனர்.
இவர்களை கண்ணுற்ற அவர்கள் பெண்மணியை வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
தப்பி ஓடிய திருடர்ளை கண்டு பிடிக்கும் நகர்வில் ல் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேற்படி சம்பவம் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
யாழில் தெரு ரவுடிகள் வாள்வெட்டு
யாழில் தெரு ரவுடிகள் வாள்வெட்டு
நல்லூர் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நல்லூர் சட்டநாதர் கோவிலுக்கு அண்மையாக உள்ள வீடொன்றின் முன்பாக இன்று இரவு 6.40 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
47 வயதுடைய இருவரே தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளனர்.
3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேரே இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஆரம்ப விசாரணைகளின் பின்னர் பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் முன்பாக இருவர் மோட்டார் சைக்கிள்களில் நின்று கதைத்துக் கொண்டிருந்த போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மூவர் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதுடன் மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்தனர்.
கல்வியங்காடு செங்குந்தா மைதானம் தொடர்பான பிணக்கே இந்தத் தாக்குதலின் பின்னணியாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் இடம்பெற்றமை தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும் சில மணித்தியாலங்களின் பின்பே சம்பவ
இடத்துக்குப் பொலிஸார் வருகை தந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
குண்டுகளினால் அதிரும் உக்கிரேன் -பலநூறு மக்கள் காயம்
குண்டுகளினால் அதிரும் உக்கிரேன் -பலநூறு மக்கள் காயம்
உக்கிரேன் கீவ் நகரை அண்மித்து ரசியா இராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது ,இந்த ஏவுகணைகள் மக்கள் வாழ்விடங்களை இலக்கு.
வைத்து நடத்தப்படுகிறது என பாதிக்க பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்
இந்த குண்டு தாக்குதல்களில் சிக்கி பல, நூறு மக்கள் பலியாகியும் காயமடைந்து வருகின்றனர்.
இவர்கள் உயிரை காப்பாற்ற ஐநா உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் ,அடிபணிய மறுக்கும் உக்கிரேன் .
அதிபரை சிறை பிடிக்கும் நடவடிக்கையில் ரஷியா ஈடுபட்டுள்ளது .
கிட்டத்தட்ட பெரும் முற்றுகையில் உக்கிரேன் சிக்கியுள்ளது ,தொடர்ந்து ரசியா படைகள் முன்னேறிய வண்ணம் உள்ளது.
இந்து முஸ்லீம் மோதல் – ராஜஸ்தானில் ஊரடங்கு
இந்து முஸ்லீம் மோதல் – ராஜஸ்தானில் ஊரடங்கு
இந்தியா ராஜஸ்தான் மாநிலத்தில் இந்து முஸ்லீம்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து அங்கு
ஊரடங்கு பிறப்பிக்க பட்டுள்ளது ,மேலும் இணையம்,தொலைத் தொடர்புகள் துண்டிக்க பட்டுள்ளன
இரு மதங்களுக்கு இடையில் ஏற்படுத்த பட்ட மதவாத போர் திட்டமிட்ட அரசியல்
நடவடிக்கை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்
இந்த மத மோதலினால் ஜோடபூர் பகுதி இயல்பு வாழ்வு முடங்கியுள்ளது
ரசியாவுக்குள் நுழைந்து உக்கிரேன் விமானங்கள் தாக்குதல்
ரசியாவுக்குள் நுழைந்து உக்கிரேன் விமானங்கள் தாக்குதல்
ரசியாவின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த உக்கிரேன் விமானங்கள் அங்கு தாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளன ,
இந்த தாக்குதலின் பொழுது ரசியாவின் Bryansk பகுதியில் பலத்த சேதமடைந்துள்ளது
ரசியா உக்கிரேன் பல பகுதிகளை ஆக்கிரமித்து தற்போது தலைநகர் கீவ் வீழ்ச்சியுற உள்ள நிலையில் இந்த
அதிரடி தாக்குதலில் உக்கிரேன் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது
ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதல்-பதிலடியாக இஸ்ரேல் எறிகணை தாக்குதல்
ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதல்-பதிலடியாக இஸ்ரேல் எறிகணை தாக்குதல்
இஸ்ரேல் நிலைகள் மீது ஹிஸ்புல்லா போராளிகள் ரொக்கட் தாக்குதலை நடத்தினர்
,அதனை அடுத்து குறித்த ரக்கட் வீச பட்ட நிலைகள் மீது இஸ்ரேல் இராணுவம் ஐம்பது ஆட்டிலறி எறிகணைகள் வீசியுள்ளன
இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரியவரவில்லை ,
கமாஸ் இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல் நடத்தி ஓய்ந்துள்ள நிலையில் தற்போது
ஹிஸ்புல்லாக்களை இஸ்ரேல் வலிந்து இழுத்து வருகிறது
கடந்த தினம் இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்த பட்ட நிலையில் இந்த பழிவாங்கும்
தாக்குதலை இஸ்ரேல் படைகள் நடத்தியுள்ளமை குறிப்பிட தக்கது.
துருக்கி இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல் – முகாம் பலத்த சேதம்
துருக்கி இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல் – முகாம் பலத்த சேதம்
கிழக்கு ஈராக் மொசூல் பகுதியில் அமைந்துள்ள துருக்கிய இராணுவத்தின் Zelikan”
இராணுவ தளம் மீது ஏழு ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இதில் அந்த முகாம் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
எனினும் துருக்கிய இராணுவம் சேதங்கள் தொடர்பில் தெரிவிக்கவில்லை
ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா
ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா
உக்கிரேன் நாட்டின் ஆளுகைக்குள் உள்ள முக்கிய நகர்கள் ரசியாவிடம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் ,உக்கிரேன் தலைநகர் கீவ் நகர் நோக்கி ரசிய இராணுவம் முன்னேறிய வண்ணம் உள்ளது ,
உக்கிரேனின் இந்த தலை நகர் எதிரி இராணுவத்திடம் வீழ்ச்சியடைந்தால்
ரோமானியா மீது எதிரியாக விளங்கும் ரசியா தாக்குதலை நடத்தலாம் என்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது
உக்கிரேன் எல்லையோர நாடாக உள்ளது ரொமேனியா ,அதுபோலவே போலந்து,ரசியா ஐரோப்பா நாடுகள் மீது .
எதிரி நாடாக விளங்கி வரும் ரஷியா போரினை தொடுக்கலாம் என்ற நிலையில் அமெரிக்கா இராணுவம் ,மற்றும் நேட்டோ படைகள் குறித்த நாடுகளில் குவிக்க பட்டுள்ளனர்
எனினும் பரம எதிரியான ரசியாவின் ஆயுத பலத்தின் முன்னால் இந்த நாடுகள் தாக்கு பிடிக்குமா என்ற ஐயம் எழுந்துள்ளது
ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா
உக்கிரேன் மீது ரசியா தன் வசம் உள்ள அதி நவீன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை,அதனை அது பரம எதிரியாகவும் பார்க்கவில்லை
இவ்வாறான நிலையில் அது தவிர்ந்த எதிரிகளாக விளங்கிவரும் நேட்டோ நாடுகள் மீது உக்கிரேன் மீது மேற்கொண்ட தாக்குதல் போன்று நடத்துமா என்ற அச்சம் எழுந்துள்ளது
பொருளாதார நிலையில் தள்ளாடி வரும் ஐரோப்பா நாடுகள்மீது ,ரசியா பெரும் படையெடுப்பை மேற்கொண்டால் .அங்கு ஆட்சி கவிழ்ப்புக்கள் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது
ரசியாவின் போரினால் பல நாடுகள் பதட்டத்தில் உள்ளது ,எதிர் காலத்தில் எதிரிகள் முந்தி தாக்கிட முன் எதிர் தாக்குதலை நடத்திட இப்போதே திட்டங்கள் தீட்ட பட்டு வருகின்றன
ரொமேனியா போலந்து ஜேர்மனி பகுதியில் அமெரிக்கா இராணுவம் குவிக்க பட்டு புதிய இராணுவ முகாம்கள் நிறுவ பட்டு வருகின்றன
மேலும் இரு நாடுகளும் இணைந்து கூட்டு தாக்குதல் தொடர்பான பயிற்சிகளிலும் ஈடுபட்ட வண்ணம் உள்ளன
ரசியாவிடம் உக்கிரேன் முற்றாக வீழ்ச்சியுற்றால் விரைந்து பெரும் இராணுவ படையெடுப்பை ரசியா நடத்தும் என ஐரோப்பியா மற்றும் பிரிட்டன் அமெரிக்கா எதிர் பார்க்கிறது குறிப்பிட தக்கது
ரசியாவின் குறியில் இருந்து தப்புமா இந்த எதிரி நாடுகள் ..?
-வன்னி மைந்தன் –
ரசியா அணுமின் நிலையம் மீது உக்கிரேன் தாக்குதல் – பற்றி எரியும் காட்சிகள்
ரசியா அணுமின் நிலையம் மீது உக்கிரேன் தாக்குதல் – பற்றி எரியும் காட்சிகள்
ரசியாவின் முக்கிய அணுமின் உற்பத்தி நிலையமான Dmitrievsky Chemical Plant மீது
உக்கிரேன் இராணுவத்தினர் ஏவுகணை தாக்குதலை நடத்தினர் ,இதில் அந்த கூடம் பற்றி எரிந்த வண்ணம் உள்ளது
இந்த தாக்குதலில் அங்கு பணிபுரிந்த ஏழுபேர் பலியாகியும் பலர் படுகாயமடைந்துள்ளனர்
மரியபோல் நகரம் வீழ்ச்சியடைந்து சில மணிநேரத்தில் ரசியாவுக்குள் உக்கிரேன்
தாக்குதலை நடத்தியுள்ளது ,இதற்கு பதிலடியாக ரசியா கெமிக்கல் தாக்குதலை கீவ் நகர் மீது நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது
வரும் மணித்தியாலங்கள் ரசியாவின் அகோர தாக்குதல்கள் உக்கிரேன் கட்டு பாட்டு
பகுதிகளில் தீவிரமாக இடம்பெறும் என எதிர் பார்க்க படுகிறது
ஈராக்கில் அமெரிக்கா தொடரணி மீது தாக்குதல்
ஈராக்கில் அமெரிக்கா தொடரணி மீது தாக்குதல்
ஈராக்கில் முக்கிய சாலை வழியாக பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவ
தொடரணியை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் அந்த அணியில் பயணித்து
கொண்டிருந்த கவச வண்டி சேதமாகியது
இதன் பொழுது அதில் பயணித்தவர்கள் இறந்துள்ளனர் என தெரிவிக்க படுகிறது
எனினும் இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா இராணுவம் எதனையும் தெரிவிக்க வில்லை
அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல் -சிதறிய முகாம்
அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல் -சிதறிய முகாம்
ஈராக் மேற்கு அன்பர் பகுதியில் அமைந்துள்ள Ain Assad base இராணுவ தளம் மீது ரொக்கட் மற்றும் ஆளில்லா
உளவு விமானம் மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இதன் பொழுது அங்கு தரித்து நின்ற இராணுவ வண்டிகள் பல
சிதறியுள்ளதாகவும் ,இராணுவத்தினர் பல படுகாயமடைந்துள்தாக சுயாதீன
தகவல்கள் தெரிவிக்கின்றன
எனினும் இதுவரை அமெரிக்கா இராணுவம் தமது இழப்பு தொடர்பில்
அறிவிக்கவில்லை
அமெரிக்கா இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல் – இருவர் காயம்
அமெரிக்கா இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல் – இருவர் காயம்
சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் ஒயில்,எண்ணெய் சேமிப்பு கூதம் அமைந்துள்ள
Al-Omar oil இராணுவ தளம் மீ து நடத்த பட்ட திடீர் ரொக்கட் தாக்குதலில் சிக்கி
இரண்டு அமெரிக்கா படையினர் படுகாயமடைந்துள்ளனர்
மேலும் அங்கிருந்த போர் தளபாடங்கள் பல சேதமடைந்துள்ளது
இந்த முகாம் மீது தொடராக ரொக்கட் தாக்குதல் நிகழ்த்த பட்ட வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
மக்கள் மீது தாக்குதல் நடத்த கூடாது – இலங்கைக்கு ஐநா கண்டணம்
மக்கள் மீது தாக்குதல் நடத்த கூடாது – இலங்கைக்கு ஐநா கண்டணம்
இலங்கையில் ஆளும் சகோத ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்
இந்த போராட்டம் காரணமாக நாடு பதட்டத்தில் உள்ளது
சீற்றமடைந்துள்ள ஆட்சியாளர்களும் படை தரப்பும் மக்கள் மீது
கண்மூடித்தனமான தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது
இவ்வாறானவர்கள் மீது தாக்குதல் நடத்திட கூடாது எனவும் ,ஆத்திரமுற்றுள்ள
மக்களை மேலும் தூண்டிவிட எதிர்க்கட்சிகள் கூடாது எனவும் அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளதுடன் ,
பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு ஐநா எடுத்துரைத்துள்ளது
வெடித்து பறக்கும் குண்டுகள் – வடிந்தோடும் கண்ணீர்
வெடித்து பறக்கும் குண்டுகள் – வடிந்தோடும் கண்ணீர்
ரசியா இராணுவம் உக்கிரேன் தலைநகர் வடக்கு பகுதி வழியாக ஆட்டிலறி மற்றும் ஏவுகணைகள் வசம் நுழைந்துள்ளது
இந்த இராணுவம் நுழைத்துள்ளதால் அடுத்து வரும் நாட்களுக்குள் தலைநகர் ரசியா படைகள் வசம் வீழ்ந்து விடும் என எதிர்வு கூற படுகிது
இராணுவ தாக்குதல்
தாம் இராணுவத்தின் இலக்குகளை மட்டும் குறிவைத்து தாக்கி வருவதாகவும் ,அப்பாவி
மக்கள் மீது அல்ல என ரசிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்து வருகிறது ,இதனையே புட்டீன் அவர்களும் தெரிவித்துள்ளார்
அகதிகள்
இராணுவம் மேற்கொள்ளும் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கும் ஓசையினால் சிறார் உள்ளிட்ட மக்கள் பீதியடைந்து வருகின்றனர் ,மேலு ஒரு லட்சத்திற்கு அதிகமான
மக்கள் உக்கிரேன் எல்லையோர நாடுகளான போலந்து ,ரோமானிய போன்ற நாடுகளுக்கு தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர்
விமானங்கள் இரத்து
இந்த தாக்குதல்கள் வெடித்துள்ளதால் ,மக்கள் பயணிகள் விமானங்கள் யாவும் உக்கிரேன் மேலாக பறப்பதற்கு தடை விதிக்க பட்டுள்ளது
வெடித்து பறக்கும் குண்டுகள் – வடிந்தோடும் கண்ணீர்
இதனால் வான்வழி பயணங்கள் முடக்க பட்டுள்ளன
குளிர் நிலை
ஆளை கொள்ளும் சினோ பொழிந்து வருவதால் ,மக்கள் பதுங்கு குழிக்குள் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது ,சிறார் உள்ளிட்டவர்கள் பதுங்கு குழிகளுக்குள் வசித்த வண்ணம் உள்ளனர்
பெரும் சிரமத்தின் மத்தியில் அந்த மக்கள் அங்கும் கண்ணீருடன் வசித்த வண்ணம்
உள்ளனர் ,மேலும் ரயில்வே நிலையங்களில் ,நில கீழ் சுரங்க வழியிலும் மக்கள் தமது இருப்பிடங்களாக மாற்றி வசித்து வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன
கண்டனங்கள்
ரசியாவின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலதும் கண்டித்துள்ளன ,தற்போது ஜெர்மனி மற்றும்
பெல்ஜியம் என்பனவும் கண்டித்துள்ளதும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூடியுள்ள பொழுதும் தீர்வு ஏதும் எட்டப்படாத நிலை காண படுகிறது
உக்கிரேன் மாதான போர் உலா ஒழுங்கு வீதியில் பெயரம் மாற்றத்தை ஏற்படுத்த போகிறது
ரஷியா தனது இலக்கு நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது ,வரும் நாட்களில் புதிய அத்தியாயம் எழுத படும் என எதிர் பார்க்கலாம்
தீயில் எரிந்த அமெரிக்கா இராணுவ கவச வண்டிகள்
தீயில் எரிந்த அமெரிக்கா இராணுவ கவச வண்டிகள்
வட கிழக்கு சிரியா பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா வாகன தொடரணியை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் இரண்டு கவச வண்டிகள் தீ பற்றி எரிந்தன ,
இவ்வேளை அதில் பயணித்த இராணுவத்தினருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
சமீப காலங்களாக அமெரிக்கா படைகளை இலக்கு வைத்து இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிட தக்கது
லண்டனில் தீவிர வாத தாக்குதல் – தப்பிய மருத்துவமனை
லண்டனில் தீவிர வாத தாக்குதல் – தப்பிய மருத்துவமனை
பிரிட்டன் லிவர்பூல் பெண்கள் மருத்துவமனை முன்பாகபாரிய
கார் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது ,
இதில் இருவர் காயமடைந்த நிலையில் பெரும் சேதங்கள் தவிர்க்க பட்டுள்ளது
டாக்சி சாரதி ஒருவர் உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்துள்ளனர்
மேற்படி தாக்குதலை நடத்திய குற்ற சாட்டில் மூவர் கைது செய்ய பட்டுள்ளனர் ,
இந்த சமபவத்தை அடுத்து தற்போது ஆளும் பிரதமர் அவசர கூட்டத்தை கூட்டி
நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்
பிரிட்டனில் என்றுமில்லாதவாறு பெரும் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தலை எதிர்கொண்டு உள்ளதாக முக்கிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன
மேற்படி சம்பவம் தொட்ரபில் பிரதமர் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது
சிரியா மீது இஸ்ரேல் விமானங்கள் அகோர ஏவுகணை தாக்குதல்
சிரியா மீது இஸ்ரேல் விமானங்கள் அகோர ஏவுகணை தாக்குதல்
சிரியாவின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தின
இதில் எதிரிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது
லெபனான் போராளிகள் சிரியாவுக்குள் இருந்து ஆயுத கடத்தலில் ஈடுபட்டுள்ளதால் இந்த தாக்குதல் மேற்கொள்ள பட்டதாக தெரிவிக்க படுகிறது
யாழ்ப்பாணம் மிருசுவிலில் வீடு புகுந்து தாக்குதல்
யாழ்ப்பாணம் மிருசுவிலில் வீடு புகுந்து தாக்குதல்
மிருசுவில் – தவசிக்குளம் பகுதியில், நேற்று (26) இரவு, வீடொன்றுக்குள் அயல்வீட்டார் அத்துமீறி
புகுந்து மேற்கொண்ட தாக்குதலில், வயோதிப தம்பதிகள் காயமடைந்த நிலையில், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில், 69 வயதான கணவனும் 52 வயதான அவரது மனைவியும் காயமடைந்துள்ளனர்.
அயல்வீட்டார் தம் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, தம் மீது தாக்குதலை மேற்கொண்டதாக, தாக்குதலுக்கு இலக்கான தம்பதிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில், கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இராணுவ துணை குழுவை இலக்கு வைத்து தாக்குதல் – 4 பேர் மரணம் பலர் காயம்
இராணுவ துணை குழுவை இலக்கு வைத்து தாக்குதல் – 4 பேர் மரணம் பலர் காயம்
பாகிஸ்தான் Balochistan மாகாணத்தில் அரச துணை இராணுவ குழுக்களை இலக்கு வைத்து நடத்த
பட்ட தாக்குதலில் நான்கு துணை படை குழுக்கள் பலியாகின ,மேலும் எட்டு பேர் படு காயமடைந்துள்ளனர்
பலவேறு பட்ட குழுக்கள் பாகிஸ்தானில் போராடி வருகின்றனர் ,அவர்களை கட்டு படுத்துவது என்பது கடினமான
ஒன்று ,ஆரம்பத்தில் இலங்கையில் தமிழ் குழுக்கள் உருவாகியது போன்று இங்கேயும் ,பலமான பல அமைப்புக்கள் ,உள்ளன ,அதில் அரச ஆதரவு பெற்ற குழுக்களும் உள்ளடங்கும்
அவ்விதமான தாக்குதல் சம்பவமாக இவை பார்க்க படுகிறது .
கார் குண்டு தாக்குதல் -சிதறிய மினிபஸ்- 13 பேர் மரணம்
கார் குண்டு தாக்குதல் -சிதறிய மினிபஸ்- 13 பேர் மரணம்
ஆப்கானிஸ்தான் Parwan மாகாணத்தில் இடம்பெற்ற கார் குண்டு தாக்குதலில் சிக்கி சுமார் 13 பேர் பலியாகியுள்ளனர்
பொலிசாரை இலக்கு வைக்க பட்ட தாக்குதலில் இந்த மினிபஸ் சிக்கி சிதறியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
எனினும் முழுமையான சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை






