Posted in மருத்துவம்

சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்க இதை சாப்பிடுங்க

சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்க இதை சாப்பிடுங்க

சிறுநீரகம் கல்லீரல் மற்றும் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை வெளியேற்றும் சக்தி மூக்கிரட்டை கீரையில் உள்ளது. சிறுநீரகங்களில் கற்கள்

உருவாவது, சிறுநீரக தொற்று நோய்கள் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணமாக மூக்கிரட்டை கீரை விளங்குகிறது.

சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கும் மூக்கிரட்டை கீரை சூப்
மூக்கிரட்டை கீரை சூப்
தேவையான பொருட்கள்:

மூக்கிரட்டை கீரை – 2 கையளவு

வெங்காயம் – 1
தக்காளி – 1
பூண்டு – 2 பல்
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மூக்கிரட்டை கீரையை நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு 2 டம்ளர் நீரை அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பிக்கும் போது, வெங்காயம், தக்காளி, கீரையை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

கீரை நன்கு வெந்ததும், அதில் சீரகப் பொடி, தட்டிய பூண்டு, மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

நன்றாக கொதித்த பிறகு அதனை இறக்கி வடிகட்டி பருக வேண்டும்.

சூப்பரான மூக்கிரட்டை கீரை சூப் ரெடி.

மூக்கிரட்டை கீரை கிடைக்காதவர்கள் மூக்கிரட்டை கீரை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கியும் பயன்படுத்தலாம்

சிறு நீராக நரோயினால் உலக அளவில் பல லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் ,இந்த சிறுநீரக நோயானது தொற்றி கொள்ள நாம் நாளாந்தம் அருந்தும் குடிநீர் முக்கியமான ஒன்றாகும்

இந்த நீரில் கால்சியம் படிந்துள்ளதால் அதி வேகமாக சிறு நீரக கல்லடைசல் ஏற்படுகிறது ,இது ஆசியா நாடுகளில் அதிகம் காணப்படுகிறது ,

வறண்ட நில பகுதியில் வசிக்கும் மக்கள் நீர் தட்டுப்பாடு காரணமாக ஆற்று நீர் மற்றும் மஞ்சள் காவி படர்ந்த ஒருவகை அசுத்த நீரினை அருந்துகின்றனர், இதனால் அதிக மக்கள் இவ்வகையான நோயிற்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர் .

    Posted in மருத்துவம்

    சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலா அப்ப இந்த வைத்தியம் பலன் தரும்

    சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலா அப்ப இந்த வைத்தியம் பலன் தரும்

    சிறுநீர் கழிக்கும் போது சிலருக்கு எரிச்சல் ஏற்படும். இதற்கு பொதுவான காரணம் என்னவென்றால் கிருமிகள் சிறுநீர் வடிகுழாயின் மூலமாக உடலினுள் நுழையும் போது தொற்று ஏற்படுத்தும்

    . சிறுநீர் பாதையில் வளர்ச்சியடையும் பாக்டீரியாக்களின் விளைவாக அதனை சுற்றியுள்ள திசுக்களில் வீக்கம் ஏற்படுத்துவதன் காரணமாக, வலி மற்றும் எரிச்சல் உண்டாகிறது.

    இது தவிர, உடலில் நீர் வறட்சி, சிறுநீரக கற்கள், கல்லீரல் பிரச்சனை, அல்சர், விந்து அல்லது விரைகளில் உள்ள தொற்றுநோய்,

    பால்வினை நோய், நீரிழிவு, ஊட்டச்சத்துக் குறைவு, குறுகிய சிறுநீர் பாதை போன்றவையும் காரணம் ஆகும்.

    எரிச்சலுக்கான தீர்வு என்ன?

    உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், சிறுநீரானது அடர்ந்த மஞ்சள் நிறத்தில் வருவதோடு, எரிச்சலோடும் இருக்கும்.

    சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலா அப்ப இந்த வைத்தியம் பலன் தரும்

    ஆகவே ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை 2-3 டம்ளர் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக கொள்ள வேண்டும்.

    சிட்ரஸ் பழத்தின் ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் ஆகியவை சிறுநீர் எரிச்சலை சரிசெய்யும், ஏனெனில் சிட்ரஸ் பழங்கள் பாக்டீரிய கிரிமிகளை அழிக்கவல்லது.

    தேங்காய் நீர் உடலில் ஏற்படும் நீர்வறட்சியை தடுக்க வல்லது. அதிலும் இதை உடலில் நீர் வறட்சியின் போது 2-3 டம்ளர் குடித்து வந்தால்,

    அந்த எரிச்சலானது போய்விடும். இதனால் வலியுடன் சிறுநீர் வெளியேறுவது குணமாகும்.

    ஒரு டம்ளர் தண்ணீருடன், 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூளை சேர்த்து, இரவில் படுக்கும் முன் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில், அதில் சர்க்கரை சேர்த்து குடித்தால் சிறுநீர் எரிச்சல் சரியாகிவிடும்

    Home » சிறுநீர்