காதல் என்னும் வேதம் அதை |Kaathal Enum vetham Athai|560|வாணன் | | VANNI MAINTHAN Song
Posted in பாடல்கள் வாணன் பாடல்கள்

காதல் என்னும் வேதம் அதை |Kaathal Enum vetham Athai|560|வாணன் | | VANNI MAINTHAN Song

காதல் என்னும் வேதம் அதை |Kaathal Enum vetham Athai|560|வாணன் | | VANNI MAINTHAN Song

காதல் என்னும் வேதம் அதை |Kaathal Enum vetham Athai|560|வாணன் | | VANNI MAINTHAN Song ,காதல் என்னும் வேதம் அதை எனும் காதல் பாடலை பாடலின் ஆசிரியர் வாணன் அவர்கள் எழுதியுள்ளார் .

இந்த பாடலை அழகுற இசை அமைத்து

இந்த பாடலை அழகுற இசை அமைத்து காதல் என்னும் வேதம் அதை கலக்கியுள்ளார் வன்னி மைந்த ஏய் ஐ இசை தயாரிப்பு குழு .

காதலின் ஏக்கத்தை சுமந்து இந்த பாடலானது தெறிக்க விடும்படியாக வெளிவந்த்துள்ளது குறிப்பிட தக்கது |Kaathal Enum vetham Athai|560|வாணன் |

வாணன்

பாடல் பெயர் காதல் என்னும் வேதம் அதை

பாடல் பெயர் காதல் என்னும் வேதம் அதை
பாடல் ஆசிரியர் வாணன்
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இணையம்

காதல் என்பது மாயை தானோ Kaathal Enpathu Maayai Thaano|534|நந்தினி Ai Tamil Song |VANNI MAINTHAN Song
Posted in நந்தினி பாடல் பாடல்கள்

காதல் என்பது மாயை தானோ Kaathal Enpathu Maayai Thaano|534|நந்தினி Ai Tamil Song |VANNI MAINTHAN Song

காதல் என்பது மாயை தானோ Kaathal Enpathu Maayai Thaano|534|நந்தினி Ai Tamil Song |VANNI MAINTHAN Song

காதல் என்பது மாயை தானோ Kaathal Enpathu Maayai Thaano|534|நந்தினி Ai Tamil Song |VANNI MAINTHAN Song

காதலே கண்ணில் விழுந்த கனவு தானோ .

காதல் என்பது மாயை தானோ ,இந்த காதலே கண்ணில் விழுந்த கனவு தானோ .

கல்லறையில் அழும் பெண் நெஞ்சில் உள்ளவன் கல்லறையில் …
கதறி அழும் காதலி ன் வலிகள் படர்ந்த பாடலாக லண்டனை சேர்ந்த பாடலின் ஆசிரியர் நந்தினி அவர்கள் எழுதியுள்ளார் .

நதியின் பாடல் சோக துயரை ஏற்படுத்தியுள்ளது .வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் வெளியாகி வரும் இன்றைய

இரண்டு பாடல் சோக பாடலாக வெளியாகியுள்ளது

பாடல்களில் ,இரண்டு பாடல் சோக பாடலாக வெளியாகியுள்ளது . கல்லறையில் உறங்கும் மாவீரம் Kaathal Enpathu Maayai Thaano| 534| நந்தினி

Is love an illusion, is this love a dream that has fallen into the eyes?

A woman crying in the cemetery, a man in the cemetery…
The song is written by London-based author Nanthini.

Nadi’s song has caused sadness and grief. Among the songs released today on Vanni Maindan’s TikTok platform, two songs have been released as sad songs. A hero sleeping in the cemetery

மரண மௌனம்
Posted in கவிதைகள்

மரண மௌனம்

மரண மௌனம்

என்னை மறந்துவிட்டு
நீ சந்தோசமாக இருப்பாயா
ஆமென்பது உனது பதில் எனில்
மரணத்தின் மெளனத்தில்
நான் மூழ்க விரும்புகிறேன்.

உன் நினைவுகள் தோளில் வீழ்ந்தால்
நானும் வாழ்வேன் என்ற நம்பிக்கை,
நீ சிரிக்கும்போது
என் மனம் காற்றில் சிறகுவிரிக்கும்.
உன் கோவமோ
என்னை இருள்குகையில் தள்ளாட வைக்கும்

நீ எனை மறந்து சென்ற பாதை
நான் காணாமல் போன திசை,
நீ மீளவும் இன்முகத்துடன் நடந்தால்
எனக்குள் ஒரு நிலவெழுச்சி பிறக்கும்.

என்னையும் என் காதலையும்
ஒர் கனவென எண்ணி விலகினால்,
அந்த கனவின் இறுதியில்
நான் இல்லை, என் மரண ஒலியில்
நீ சந்தோசித்திரு
அது போதும் எனக்கு

என்னை மறந்துவிடு
அது உனக்கு இன்பமெனில்
நான் மரித்துவிடுவேன்,
ஆனால் ஒருபோதும்
உன்னை மறக்காது என் காதல்.

ஏனோ இந்த பிரிவு
Posted in கவிதைகள்

ஏனோ இந்த பிரிவு

ஏனோ இந்த பிரிவு

ஏனோ இந்த பிரிவு…
இன்னும் நீயின்றி உயிர் வாழ
நானோ பழகவில்லை,
உன் சுவாசமே எனது தேசம்
என்று நம்பிய என் நெஞ்சம்,
தொலைந்துவிட்டது நம்
பார்வையின் வழியில்…

கண்ணீரோ நம் காதலின்
கடைசி கடிதமா?
அதில் எழுத்துகள் இல்லை, ஆனால்
உணர்வுகள் அலைகடலாக.
நீ சென்ற பாதையில்
நான் இருளாய் நின்றேன்,
வந்துவிடுவாய் என்ற
திடமான நம்பிக்கையுடன்…

நீ சொன்ன சொற்கள் இன்னும் என் காதில்
“நாம் என்றும் இணைவோம்…” என்று
அந்த எண்ணம் என்னை நிமிர்த்துகிறது,
அதே நேரத்தில் நசுக்கியும் விடுகிறது.

காதல் வென்றதோ
தோற்றதோ தெரியாது,
ஆனால் நான் தோற்றேன்,
உன் நினைவுகளிடம்…
உன் இல்லாமையிடம்.

கண்ணாமூச்சியா காதல்
Posted in கவிதைகள்

கண்ணாமூச்சியா காதல்

கண்ணாமூச்சியா காதல்


மெல்லமாக எனைக் கொல்கின்றேன் – உன்
மௌனத்தில் சிரிக்கின்றேன்
கண் பேசும் வார்த்தைகள் – நான்
காவியங்களாக சேர்க்கின்றேன்

தெரிந்த பாசம் தெரியாதவளாய்
தெரியாத வேஷம் கொண்டவளாய்…
நெருக்கம் கொஞ்சம், தூரம் அதிகமாக
என் இதயத்தை நாளும் சோதிக்கிறாய்

உன் பேச்சு ஓர் பதில் தரும் என
நான் காத்திருக்கின்றேன்
புரிந்தும் புரியாமலும் – காதல்
ஒரு கண்ணாமூச்சி ஆட்டம்தான்.

வந்து வந்து பேசுகிறாய் -தினம்
வரவேற்பை தருகின்றாய்
கொஞ்சி பேச மறுப்பதேன் -என்னை
கொள்ளையடிக்க வெறுப்பதேன்

காதல் பிரிவு
Posted in கவிதைகள்

காதல் பிரிவு

காதல் பிரிவு

இருவரும் இருந்த இடத்தில்,
இப்போது நிழலும் நமக்குள் பேசாது.
சிரிப்பின் சத்தம் மறைந்தபின் – உனை
சீண்டாமல் வாழ்வது தான் என் பழக்கம்.

உன் கை தொட்டு போன காற்றே – இப்போதும்
என் கன்னத்தில் ஓர் நினைவாக வீசுகிறது.
“நீ இல்லை” என்பதைக் கேட்ட என் இதயம்,
மீண்டும் காதலிக்க தயங்குகிறது.

நாம் சேர்ந்து வாசித்த அந்த புத்தகம்,
இப்போது வெறும் காகிதங்களாகிறது.
ஒவ்வொரு பக்கமும் உன் நினைவுகள்,
படிக்க முடியாத உரையாய் மாறுகிறது.

என் கனவில் நீ வந்தாலும்,
வெறும் பார்வை கொடுத்து விலகுகிறாய்.
நிஜத்தில் நீ இல்லாத வேதனை,
கனவில் கூட தொடராய் தொடருகிறது.

காதல் வெறும் சேர்வல்ல,
பிரிவும் அதில் ஒரு பாகம் என்பதை
இப்போது தான் உணர்கிறேன்,
உன் நேசம் இன்னும் என் உள்ளம் சுமக்கிறது…

—-

இப்படிக்கு
உன் பிரிவில்
என் உயிரை தேடும்
நான்

நீ நான்
Posted in கவிதைகள்

நீ நான்

நீ நான்

இன்பம் கொண்டு தோன்றியாய்,
என் இதய தாளம் தூண்டும் பூவாய்,
கண்கள் காணும் ஒளியாக,
கனவில் கூட நீயே வாசல் தாண்டுவாய்.

வானில் நிலா என்றாலும்,
நீயும் சிரிப்பும் தான் என் இரவின் அழகு.
காற்றில் வீசும் மழைதுளி போல,
உன் வார்த்தைகள் என் வாழ்வின் இனிப்பு.

பூக்கள் மலர காத்திருப்பது போல,
உன் வருகைக்கு என் உள்ளம் தேடிக்கொண்டே இருக்கு.
நீ பேசும் ஒவ்வொரு முறை,
மனதோடு கூட உயிரும் சிரிக்குது.

காதல் என்றால் வெறும் சொல் அல்ல,
உன்னால் மட்டும் தான் அதுக்கு அர்த்தம் தெரிகிறது.
நீ இல்லாத நாளில் கூட,
நீயாகவே என்னை நிரப்பி விடுகிறாய்.

  • இப்படிக்கு
    உன் காதலால் வாழும்
  • ஒரு பெண்
சொல்வாயா
Posted in கவிதைகள்

சொல்வாயா

சொல்வாயா

உனை நான் பார்த்தேன்
எனையே உடன் மறந்தேன்

காளை உனை நினைத்து
காதல் கொண்டு துடித்து

நீ செல்லும் வழி மீது
நித்தமும் விழி வைத்து

துடிதுடிக்கும் இதயத்தோடும்
படபடக்கும் விழிகளோடும்

கன்னி நான் காதலோடு
உனை எண்ணிக் காத்திருக்கின்றேன்

திருமகனே என் மனமகனே
ஒருமுறையேனும் உன்

உதட்டைக் குவித்து
நெத்தியில் அன்பாக

முத்தம் ஒன்று இட்டு
சத்தமாக சொல்

கன்னி இவளே உன்
காதலி என்று…!

சொல்வாயானால்,

வெண்ணிலா சிரிக்கும்
விண்மீன் ஒளிரும்

வானம் பூத்தூவும்
வானவில் நிறம்கூடும்

மின்னல் மின்னும்
முகில்கள் நாணும்

இவைக்காக என்றாலும்
அவைமுன் காதலை சொல்

கன்னி இவளே உன்
காதலி என்று…!

ஆக்கம் – ராகவி
08/05/2025

Posted in கவிதைகள்

உறங்கிய காதல்

உறங்கிய காதல்

பார்த்ததும் உன்மேல்
பூத்தது காதல் என்னில்
பழகாமலே ருசித்தேன்
விலகியே நடந்தேன்

விண்ணில் இருந்தே
மண்ணில் இருக்குமுனை
தொட நினைத்து

நீட்டினேன் கைகளை
முடியாமல் தவித்தேன்
சிட்டாக மாறியுனை
கட்டியணைக்க எண்ணி

சட்டென வந்தேன் மண்மீது
அருகிருந்தே உனை நான்
அளந்தேன் பார்வைகளால்

இதமாக இருந்த போதிலும்
இமைகள் படபடத்தன பயத்தில்
பூவான நான்.. காதலை இயம்ப
புயலாக நீ மாறி… எனை காயமாக்கி

அனலான பார்வையால் எனை
தகனம் செய்துவிடுவாய் என்று
சொல்ல நினைத்த காதலை
சொல்லாமலே புதைத்தேன்

இன்றுதான் தெரிந்துகொண்டேன்
அன்று நீயும் எனைபோலவே…..

உன்மீதான என் காதலும்
என்மீதான உன் காதலும்
உச்சரிக்கப்படாமல் உரசாமல்
உறங்கியது மனக்கல்லறைகளில்…!

யோசி...நேசி...
Posted in கவிதைகள்

யோசி… நேசி…

யோசி… நேசி…

அந்திசாயும் இதமான நேரம்
மந்திகள் தொங்கும் மரநிழலின்கீழ்

உன் தோளில் என் தலைசாய்த்து
பன்னாட்டு கதை பல பேசி….

இனிமையான அப்பொழுதில்
இணைந்த நம் இதழ்களோடு

நாசிகள் உரசியவேளையில்
நங்கையிவள் சட்டென கூசி…

இன்னும் எத்தனையோ சில்மிசங்கள்
இவையனைத்தயும் ஒருநொடியில்

மறந்ததுமேனோ மன்னவனே
மனம் திறந்து நீ யோசி….

என் உடல் உருக உருக
உன்னையே தினமும் சுற்றி சுற்றி

கன்னக்குழிகள் தெரிய சிரித்து வந்த
பெண்ணிவளை ஒருகணம் யாசி…

பட்டாம்பூச்சியென பறந்து திரிந்தவள்
விட்டில் பூச்சியாகி சாகத்துணிந்து

தன்னந் தனிமையில் அல்லாடும்
கன்னியவளை வா வந்து நேசி…!

எனக்கு என்ன ஆச்சு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

எனக்கு என்ன ஆச்சு

எனக்கு என்ன ஆச்சு

உயிரே உன்னை பிடிக்குதே – ஏனோ
உன்னால் உள்ளம் துடிக்குதே
கண் இரண்டில் காட்சிகளாய் நீ விழ
கவலை மெல்ல கலையுதே

ஏனோ உன்னால் இரவும் விடியுதே
ஏதோ மாற்றம் எனக்குள் நிகழுதே
புரிய முடியா தவிக்கிறேன்
புகலிடமாய் மனம் தவிக்குதே

விடியும் பொழுதில் விழியோரம்
விடயம் சொல்கிறாய் –
கனவில் வந்தே கதைகள் சொல்ல
கண் உறக்கம் தொலைக்கிறேன்

நிலவரம் என்னவோ – இந்த
நிகழ்வு என்னவோ
தெரிந்தவளே பதில் சொல்லு
தெரியா கேட்கிறேன்

எனக்கு என்ன ஆச்சு
என்னை கேள்வி கேட்கிறேன்
ஆனால் அமைதியாகும் மனதால்
அவதி படுகிறேன்

புரிந்தவளே புதிர் சொல்லு
புரியும் மொழியில் சொல்லு
ஏன் இப்படியானேன்
எனக்கு ஏதும் தெரியலையே …!

அக்கம் – 28-04-2025

  • வன்னி மைந்தன் –

மஸ்க் மற்றும் டிரம்ப் காதல் எவ்வளவு காலம் நீடிக்கும்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

மஸ்க் மற்றும் டிரம்ப் காதல் எவ்வளவு காலம் நீடிக்கும்

மஸ்க் மற்றும் டிரம்ப் காதல் எவ்வளவு காலம் நீடிக்கும்


மஸ்க் மற்றும் டிரம்ப் காதல் எவ்வளவு காலம் நீடிக்கும் ,பில்லியனர் ப்ரோமன்ஸுக்குள் (அது கண்ணீரில் முடிவடையும்) வெறுக்கத்தக்க கூச்சல்கள் முதல் அற்புதமான சமரசம் மற்றும் தேர்தல் வெற்றி வரை

டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எலோன் மஸ்க் ஹாலிவுட்டுடன் அத்தகைய முரண்பாடான உறவைக் கொண்டிருக்கவில்லை என்றால், ரியல் எஸ்டேட் அதிபராக மாறிய ரியாலிட்டி டிவி நட்சத்திரம் அமெரிக்க அதிபராக மாறிய –

மற்றும் ஜனநாயகக் கட்சிக்கு இடையேயான மோதல் பற்றிய ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படத்தை ஒரு ஸ்டுடியோ இயக்கும் என்று ஒருவர்

கற்பனை செய்யலாம். சாய்ந்த தொழில்நுட்ப தொழில்முனைவோராக மாறிய MAGA சியர்லீடராக புதிதாக உருவாக்கப்பட்ட அரசாங்கத் திறன் துறையின் இணைத் தலைவராக மாறினார்…

காதல் முறிவால் உயிரை மாய்த்த யுவதி
Posted in இலங்கை செய்திகள்

காதல் முறிவால் உயிரை மாய்த்த யுவதி

காதல் முறிவால் உயிரை மாய்த்த யுவதி

காதல் முறிவால் உயிரை மாய்த்த யுவதி ,மொனராகலை நக்கல்லை யொவுன் கிராமத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியை ஒருவர் தனது வீட்டில் வைத்து தன் உயிரை மாய்த்துக்கொண்டு உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.

மொனராகலை நக்கல்லை யொவுன் கிராமம், நக்கலவத்தை பாரதி முன்பள்ளியின் ஆசிரியராக பணிபுரிந்த 29 வயதுடைய ராமச்சந்திரன் இந்திராதேவி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவருடைய காதல் முறிவு காரணமாகவே உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அர்ச்சுனா காதல் புதுசா கிளப்பிராங்க
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா காதல் புதுசா கிளப்பிராங்க

அர்ச்சுனா காதல் புதுசா கிளப்பிராங்க

அர்ச்சுனா காதல் புதுசா கிளப்பிராங்க ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மீது சிலர் சுமத்திய விசமதனமான குற்ற சாட்டுக்கு சாட்டையடி வழங்கிய அர்ச்சுனா இராமநாதன் பதில்கள் .

காணொளியை அழுத்தி முழுமையாக பாருங்கள் மக்களே

காதல் கவிதை அர்ச்சுனா எழுதினார்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

காதல் கவிதை அர்ச்சுனா எழுதினார்

காதல் கவிதை அர்ச்சுனா எழுதினார்

காதல் கவிதை அர்ச்சுனா எழுதினார் ,2020.05.14
காலம் என் மகனையும் என்னையும் தனித்து விட்ட போது..
இனம் மொழி கடந்த நீ செய்த உதவிகள்..
இன்று வரை என் பிள்ளைகளை பார்த்துக் கொண்டவை..
எல்லாம் மறக்க..
நான் ஒன்றும் நன்றி கடந்தவன் அல்ல..
நீ சொன்ன வரிகளுக்காய்..
நான் தந்த வார்த்தைகளுக்காய்..
நான் சொன்னதை செய்தேன்..
உன் அர்ப்பணிப்புகள்..
நீ வயிற்றில் சுமக்காத ஒரு பிள்ளையை..
இன்று வரை உன் தோளில் சுமக்கிறாய் என்பதை..
கடைசி வரை நான் மறவேன்..
சமூகத்திற்கு இது ஒரு பிழையாக போகலாம்..
என் பிள்ளையின் தாயும் நானும் பிரிந்த போது..
நீதிமன்றம் என் பிள்ளையை தந்ததற்குரிய காரணம்..
நீதான் என்பதை உலகறிய வேண்டும்..
இன்று வரை அவனை ஒரு வசனம் கூட உருக்கி பேசாத உன் இதயம்..
நீ செய்த உதவிகளை மறக்காத என் பிள்ளையின் அன்பு..
நான் தமிழ்..
நீ சிங்களத்தி என்பதை தாண்டி..
என்னோடு என் வாழ்க்கையில் இதுவரை இணைந்திருந்ததை..
சமூகத்திற்கு சொல்லியாகவே வேண்டும்..
சாவகச்சேரியில் எனது குவாட்டர்ஸ்க்கு நீ வந்தபோது
கேதீஸ்வரன் மற்றும் தயாளினி எழுதிய கடிதங்கள்..
பொல்லாத உறவு என்று சொன்னார்கள்..
ஒருவனை தனியே வைத்து வளர்க்கிறேன்…
தயாளினியும் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாய்..
அவள் எழுதிய கடிதங்கள் என்னிடம் இப்போதும் இருக்கின்றன..
நீ அப்போது ஒரு மருத்துவ பீட மாணவி..
உன் படிப்பையும் தாண்டி நீ செய்த அர்பணிப்புகள்..
கோவிட் வந்தபோது நான் உன்னையும் மகனையும்
ஒன்றாக வீட்டில் விட்டு
நாள் கணக்காக மருத்துவமனையே தவம் என கிடப்பேன்..
அன்று எனக்கு நீ வரம்..
என் பிள்ளைக்கு நீ ஒரு பெற்றெடுக்காத தாய்..
அவனுக்கு சிங்களம் தெரியாது..
உனக்கோ தமிழ் தெரியாது..
இடையில் மாட்டிக் கொண்ட நான்..
மும்மொழி ஆகிய காரணம் இதுதான்..
கோபத்தில் கத்தி இருக்கிறேன்..
மனம் உடைந்து அழுது இருக்கிறேன்..
எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டவள்..
இரவு பகலாக மகனைப் பார்த்தாய்..
அவன் என் அரவணைப்பை தாண்டி..
உனக்குள்ளே ஒரு குழந்தையாகினான்..
ராத்தி என பெயர் வைத்தது கூட அவன் தான்..
இன்றுவரை..
அம்மாவா நானா நீயா என..
உன் வாழ்க்கை போராடிக் கொண்டிருக்கிறது..
பெற்றெடுக்காத பிள்ளையை நீ தத்தெடுத்த போது..
உன் அன்பிற்கு..
அவன் அடைக்கலமான அந்த நாட்களை..
இன்னாளில் அன்றோ அன்னாள் தொடங்கியது..
நன்றி அம்மா..
வார்த்தைகள் இல்லை..

எண்ணிக்கையில் அல்ல எண்ணத்திலே தான் உண்மை காதல்
Posted in இலங்கை செய்திகள் நிலா தமிழ்

எண்ணிக்கையில் அல்ல எண்ணத்திலே தான் உண்மை காதல்

எண்ணிக்கையில் அல்ல எண்ணத்திலே தான் உண்மை காதல்


எண்ணிக்கையில் அல்ல எண்ணத்திலே தான் உண்மை காதல் அவள் சிதைக்கப்பட்ட சிலையாய் தூக்கி வீசப்பட்டு கேட்பாரற்றுக் கிடந்தாள்.
அச்சிலையைப் பற்றி அறியாதவர்கள் அதன்மேல் கழிவுகளைக் கொட்டி அதைக் காலால் மிதித்து மேலும் காயப்படுத்திக் கொண்டு இருந்தனர்.


வாழ்க்கையை வலியோடு நகர்த்த முயன்று கொண்டிருந்த அந்த சிலையின் அருகே வழிப்போக்கன் ஒருவன் வந்தமர்ந்தான்.

சிலையைச் சிதைத்தவன் துர்ப்பாக்கியசாலி


அந்தச் சிலையின் அருமையை ஆராய்ந்து அறிந்தவன், இப்பேர்ப்பட்ட சிலையைச் சிதைத்தவன் துர்ப்பாக்கியசாலி என்று கூறி, அச்சிலையை தூசி தட்டித் தூக்கி நிறுத்தினான்.


என்னை முதன்முறை சிலையாக மாற்றியவனே சிதைத்து தூக்கி வீசி விட்டான். இவனைப் பார்த்தால் சிற்பியாகவே தெரியவில்லை என்று சிதிலமடைந்த சிலை சிரித்தது.

காயப்பட்ட சிலைக்கு கண்கள் காணும் காட்சி


காயப்பட்ட சிலைக்கு கண்கள் காணும் காட்சி பிழையாகத்தானே இருக்கும் எனப் புரிந்து கொண்ட அவன், பிறந்த குழந்தையைப் போல அச்சிலையை கண்ணியமாய்க் கவனித்துக் கொண்டான்.


அரைகுறைச் சிற்பி எண்டாலும் அச்சிலையின் வலியை அழகாய்ப் புரிந்து கொண்டு மருந்திடத் தொடங்கியவன், அவ்வப்போது அச்சிலைக்கே தெரியாமல் அதன் போக்கில் அதை அழகாய்ப் புதுப்பிக்க ஆரம்பித்தான்.


வெயிலோ, மழையோ, புயலோ, பூகம்பமோ வந்தாலும் அச்சிலையை விட்டு அகலாமல் இருந்தவன், எப்படியோ அதன் கால்களை ஆவலுடன் தன்னுடன் சேர்ந்து நடப்பதற்கு தயார்ப்படுத்தி விட்டான்.

சிலையை காதலோடு செதுக்கி கலைநயமாக வடிவமைத்தான்


காலப்போக்கில், காயமடைந்த சிலையை காதலோடு செதுக்கி கலைநயமாக வடிவமைத்தான். வலியை முற்றிலுமாக மறந்த அச்சிலையின் கண்களை மீண்டும் காதலால் நிரப்பினான்.


இரண்டாம் முறை காதல் கண்ணாடியை கையில் எடுத்து அச்சிலை மீண்டும் அது புதுப்பிக்கப்பட்டிருப்பதை ஆசையாய் தயங்கியபடி பார்த்து இரசிக்கத் தொடங்கியது.


நடைப் பயணமாய்….பேருந்துப் பயணமாய்….ரயில் பயணமாய்….

அச்சிலை காண நினைத்த இடங்களெல்லாம் உடன் சென்றவனிடம், அவ்விடங்களுக்கும் அதிலிருக்கும் நினைவுகளையும் தன்னையறியாமல் கூறிக் காயப்படுத்தினாலும் அதை அவன் காட்டிக் கொள்ளாமல்,

அந்த நினைவுகளிலிருந்து நிதானமாய் அச்சிலையை வெளிக் கொண்டு வரத்தொடங்கினான்.


இரண்டாவதாக செதுக்கப்பட்ட காதல் என்றாலும் இயல்பை விட இன்றியமையாத ஒன்றாக அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமே என்று நினைத்துக் கொண்ட அந்தச் சிலை அவனை அவமதிக்காமல் அரைகுறைச் சிற்பி என்றாலும் ஆசையாய் அணைத்துக் கொண்டது.


ஆறுதலும் ஆதரவும் அரவணைப்பும் அக்கறையும் அன்பும் மதிப்பும் காதலின் எண்ணத்தில் உண்மையாக இருக்கிறதா என்று எண்ண வேண்டுமே தவிர எண்ணிக்கையில் எத்தனையாவது என்று எண்ணத் தேவையில்லை.


02.06.2024. நிலா தமிழ்

வெட்டி கொலையான காதல் ​ஜோடி
Posted in உலக செய்திகள்

வெட்டி கொலையான காதல் ​ஜோடி

வெட்டி கொலையான காதல் ​ஜோடி

வெட்டி கொலையான காதல் ​ஜோடி ,முன்விரோதம் காரணமாக உறங்கிக் கொண்டிருந்த காதல் ஜோடி மீது கொடூரமான முறையில் ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று சென்னையில் பதிவாகியுள்ளது.

சென்னை டி.பி.சத்திரம் 27-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் இஸ்ரவேல் (வயது 20). இவர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு

படித்ததாக கூறப்படுகிறது. இவர் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது.

பாடசாலை மாணவி

இவர், ஜாபர்கான்பேட்டை பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர்கள் 2 பேரும் ஒன்றாக ஜாலியாக சுற்றி வந்தனர். கடந்த சனிக்கிழமை இரவு பெரியமேடு பகுதியில் ஒன்றாக கைகோர்த்தபடி நடந்து வந்தனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி அப்பாஸ் என்பவர் வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இஸ்ரவேலின் காதலியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். அதில் மோதல் ஏற்பட்டது. அக்கம், பக்கத்தினர் தடுத்து அவர்களை விலக்கி விட்டுள்ளனர்.

ஆனால் அப்பாஸ் இஸ்ரவேலையும், அவரது காதலியையும் தீர்த்துக்கட்டாமல் விட மாட்டேன் என்று மிரட்டி அனுப்பியதாக தெரிகிறது.

இதனால் இஸ்ரவேல் மிகவும் எச்சரிக்கையோடு தனது காதலியோடு டி.பி.சத்திரம் பகுதியில் உள்ள வீட்டின் மொட்டை மாடியில் நேற்று முன்தினம் இரவு படுத்து தூங்கி உள்ளார்.

அவர்களை தீர்த்துக்கட்டும் நோக்கத்தோடு அப்பாஸ் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து கொடூர தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

காதலிக்கும் அரிவாள் வெட்டு

இஸ்ரவேலுக்கும், அவரது காதலிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் இஸ்ரவேல் பலத்த காயமடைந்தார்.

அவரது காதலிக்கும் காயம் ஏற்பட்டது. அக்கம், பக்கத்தினர் திரண்டு வந்ததால் அப்பாசும், அவரது நண்பர்களும் தப்பி ஓடிவிட்டனர்.

இஸ்ரவேலும், அவரது காதலியும் கீழ்ப்பாக்கம் அரசு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் பொலிசார் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அப்பாசும், மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Error: View 9293b2au4w may not exist
வந்து விடு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

வந்து விடு

வந்து விடு

நித்தம் உனக்கு முத்தமிட்டு
நீண்டுறங்க ஆசை
நீ எனக்கு உரித்தானால்
நித்தமிட ஆசை

பத்து திங்கள் ஆக்கி வைத்து
பார்த்துவிட ஆசை
பார் காணும் இரவெல்லாம்
பகலாக்க ஆசை

நெஞ்சுக்குள்ள நீ துடிக்க
நித்தம் என்ன செய்வேன்
காத்திருப்பு போது மடி
கண் மணியே வாடி

போர்வைக்குள்ள நீ இருந்தா – உலக
போரெல்லாம் தோற்குமடி
வேர்வைக்குள்ள நீ குளிக்க
வேண்டுதலும் தீருமடி ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 12-11-2023

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

காதல் விவகாரத்தால் ஒருவர் கொலை

காதல் விவகாரத்தால் ஒருவர் கொலை


காதல் விவகாரத்தால் ஏற்பட்ட தகராறால் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இரத்தோட்டை – நிக்லோயாவத்த பிரதேசத்தில் இன்று (18) காலை இக்கொலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் தாக்கப்பட்ட நபர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

காதல் விவகாரத்தால் ஒருவர் கொலை

சம்பவத்தில் 39 வயதுடைய நபரே கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் வசிக்கும் 05 சந்தேக நபர்களை ரத்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் மகளுடன் ஏற்பட்ட காதல் காரணமாக ஏற்பட்ட தகராறால் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

எல்லை தாண்டிய காதல்: இலங்கை பெண்ணுக்கு நோட்டீஸ்

எல்லை தாண்டிய காதல்: இலங்கை பெண்ணுக்கு நோட்டீஸ்

இலங்கையை சேர்ந்தவர் விக்னேஸ்வரி. இவருக்கு ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள வி.கோட்டா அடுத்த அரிமகுலப்பள்ளியை சேர்ந்த லட்சுமணன் (கட்டிட மேஸ்திரி) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். லட்சுமணனை திருமணம் செய்ய விக்னேஸ்வரி முடிவு செய்தார்.

இதற்காக சுற்றுலா விசா பெற்று இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். விமான நிலையத்தில் லட்சுமணன், விக்னேஸ்வரியை வரவேற்று தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

தனது குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்தார். லட்சுமணன் குடும்பத்தினரும் இவர்கள் காதலை ஏற்று கொண்டனர்.

எல்லை தாண்டிய காதல்: இலங்கை பெண்ணுக்கு நோட்டீஸ்

இதனை தொடர்ந்து, ஊர்பெரியவர்கள் முன்னிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அதேபகுதியில் உள்ள சாய் பாபா கோவிலில் திருமணம் செய்து

கொண்டனர். இதற்கிடையே, விக்னேஷ்வரியின் விசா ஆகஸ்ட் 6-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது.

எனவே அதற்குள் விக்னேஸ்வரி நாட்டை விட்டு வெளியேறுமாறு போலிஸார் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

மேலும், வெளிநாட்டு இளம்பெண்ணின் திருமணத்தை இலங்கையில் உள்ள விக்னேஸ்வரியின் பெற்றோருக்கு தெரிவித்து சட்டப்பூர்வமாக பதிவு செய்யுமாறு போலிஸார் அறிவுறுத்தினர்.

தற்போது எல்லை தாண்டிய காதல் அதிகரித்து வருகிறது. அந்த பட்டியலில் இவர்களும் சேர்ந்துள்ளனர்.