Posted in உளவு செய்திகள்

ஏமன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த சவூதி

ஏமன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த சவூதி

ஏமன் நாட்டுக்கு பெட்ரோல் ஏற்றி வந்து கொண்டிருந்த கப்பல் ஒன்றை சவூதி நாட்டு இராணுவத்தினரால் சிறை பிடிக்க பட்டுள்ளது.

ஏமன் மற்றும் சவுதிக்கு இடையில் இடம்பெற்று வரும் மோதல்களின் உச்சமாக 31,000 தொன் பெட்ரோல் ஏற்றி வந்த எண்ணெய் கப்பல் சிறை பிடிக்க பட்டுள்ளது.

சவுதியினால் இந்த கப்பலுடன் ஐந்து கப்பல்கள் இதுவரை சிறை பிடிக்க பட்டுள்ளன .

இந்த ஏமன் நாட்டு எண்ணெய் கப்பல் சிறை பிடிக்க பட்டதற்கு பதிலடியாக
சவூதி மீது ஏமன் புரட்சி படைகள் தாக்குதலை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது.

    Posted in உளவு செய்திகள்

    இஸ்ரேல் உளவுத்துறையால் கடத்த பட்ட ஈரான் முக்கிய தளபதி

    இஸ்ரேல் உளவுத்துறையால் கடத்த பட்ட ஈரான் முக்கிய தளபதி

    இஸ்ரேல் ,மொஸாட் ; ஈரான் நாட்டின் புரட்சிகர படையை சேர்ந்த முக்கிய தளபதி ஒருவரை இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறையான மொசாட் கடத்திய சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

    குறித்த ஈரானிய தளபதி ஈராக்,லெபனான்,சிரியா ஏமன் நாடுகளுக்கு ஆயுதங்களை கடத்தி கொடுத்து வந்துள்ளார் .

    ஈரானின் உயர் மட்ட உளவுத்துறையுடன் இணைந்து பிரதானமாக இவரது தலைமையில் ஆயுதங்கள் எடுத்து செல்லப்பட்டு வழங்க பட்டுள்ளது .

    ஈரான் தனது ஆதரவு போராளிக் குழுக்கள் ஊடக தனது எதிரி நாடுகள் மீது எதிர் தாக்குதலை தொடுத்த வண்ணம் உள்ளது

    இஸ்ரேல் உளவுத்துறை தலைவரை இலக்கு வைக்கும் ஈரான் கொல்லப்படுவாரா

    இஸ்ரேல் மொஸாட் உளவாளி ஈரானால் கைது

    தனது எதிரியை துல்லியமாக தெரிவு செய்திடும் ஈரான் அந்த எதிரி படைகள் திணறும் வகையில் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

    சவூதி மீதான நேரடி போரினை ஏமன் கிளர்ச்சி படைகள் ஊடக ஈரான் மேற்கொண்டு வந்ததது.

    இஸ்ரேல் உளவுத்துறையால் கடத்த பட்ட ஈரான் முக்கிய தளபதி

    அதன் பின்னரே எதிரி நாடக விளங்கிய சவூதி ஈரானுடன் இணக்க பாட்டுக்கு செல்லும் நிலைக்கு சென்றது .

    ஈரானின் இரண்டாம் நிலை தளபதியாக விளங்கிய சோலைமானியை விமான தாக்குதல் மூலம் ஈராக்கில் வைத்து இஸ்ரேல் படுகொலை செய்தது .

    அவ்விதமான தாக்குதல் போன்று இவரை கடத்திய மோசாட் விரணைகளின் பின்னர் ஈரான் தளபதியை விடுதலை செய்துள்ளது.

    அதன் பின்னர் அவர் பாதுகாப்பாக அவர் வீடு சென்றிட இஸ்ரேல் மொசாட் அனுப்பி வைத்ததாக தெரிவித்துள்ளது.

    குறித்த முக்கிய தளபதியை ஈரான் கொலை செய்திடும் நிலைக்கு இஸ்ரேல் மொசாட் தாக்குதல் திட்டத்தை வகுத்து ஈரான் ஆட்சியில் கலவரத்தை ஏற்படுத்திவிட இந்த விடுதலை விளையாட்டை ஆரம்பித்தது.

    ஆனால் அதனை நன்கறிந்த ஈரானின் உளவுத்துறை மொசாட்டுக்கு சாட்டை அடி வழங்கியுள்ளது.

    ஒரு நாட்டை அழிப்பதற்கு அந்த நாட்டில் முக்கிய மூலைகளாக செயல்படுபவர்கள் கொலை செய்வதன் ஊடாக அந்த நாட்டை தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவரலாம் என்பது இஸ்ரேல் மொசாட் கொள்கை கோட்பாடாக உள்ளது.

    எங்கும் எப்பொழுதும் எவரையும் தாக்குவோம் தூக்குவோம் என்பது மொசாட்டின் தாரக மந்திரமாக உள்ளது .

    ஈரான் முக்கிய தளபதியை இஸ்ரேல் மொசாட் கடத்திய சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

    Posted in உளவு செய்திகள்

    உக்கிரேனுக்கு விமானங்களை அனுப்பும் அமெரிக்கா தாக்குதல் தீவிரம்

    உக்கிரேனுக்கு விமானங்களை அனுப்பும் அமெரிக்கா தாக்குதல் தீவிரம்

    உக்கிரேன் நாட்டின் மீது ரஷ்ய இராணுவம் தாக்குதலை தொடர்ந்த வண்ணம் உள்ளது .

    இவ்வேளை ரஷ்ய இராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து உக்கிரேன் இராணுவத்தை காப்பாற்றிட அமெரிக்கா போர் விமானங்களை வழங்குகிறது .

    மேலும் உக்கிரேன் விமான படையினருக்கு வான் படை பயிற்சிகளையும் வழங்கி வருகிறது .

    உக்கிரேனுக்குள் நுழைந்த நேட்டோ கப்பல்கள் விமானங்கள் பதட்டம் அதிகரிப்பு

    உக்கிரேனுக்கு 42 உளவு விமானங்களை விற்ற துருக்கி ரசியா கண்டனம்

    ரஷ்ய இராணுவத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தவும் .ரஷ்ய இராணுவத்தின் ஆயுதங்களை சோதனை செய்யும் முகமான பரீட்ச்சார்த்த களமாக உக்கிரேனை அமெரிக்கா , பிரிட்டன் என்பன பயன்படுத்தி வருகின்றன .

    உக்கிரேன் இராணுவத்தில் எண்பது வீதமான படைகள் இறந்தோ அல்லது காயமடைந்து உள்ளனர் என்கிறது மேற்குலக உளவு நிறுவனம் .

    உக்கிரேனுக்கு விமானங்களை அனுப்பும் அமெரிக்கா தாக்குதல் தீவிரம்

    இவ்வாறாக மாற்றமடைந்து வரும் களமுனையை தனது நலன் சார்ந்த நிலையில் அமெரிக்கா மாற்றியமைத்து நகர்கிறது .

    நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் இராணுவத்தினர் வழங்களுடன் நேரடி பயிற்சிகளையும் அமெரிக்கா வழங்கி வருகிறது.

    அமெரிக்காவின் இந்த செயல் பாடு ரஷ்யாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உக்கிரேன் மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து பலத்த ஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது.

    முக்கிய பகுதிகளை மீட்கும் நோக்குடன் அணுமின் உற்பத்தி நிலையங்கள் மீதும் நேரடி தாக்குதலை ஆரம்பித்துள்ளது .

    ரஷ்ய இராணுவத்தின் இவ்வகையான தாக்குதல்கள் அமெரிக்கா மற்றும் மேற்குலகத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் முகமாக அமைந்துள்ளதை ஆடுகளம் காண்பித்து செல்கிறது .

    உக்கிரன் ரஷ்ய போர் உலக நாடுகளில் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது .

    மேலும் எரிபொருள் தட்டுப்பாட்டுடன் உணவு பற்றாகுறையும் நிலவி வருகிறது .உக்கிரேன் ரசியா போரானது தொடர்ந்து நீடித்து செல்லும் என்றால் உணவு தட்டுப்பாட்டால் உலகில் பஞ்ச நிலை ஏற்படும் எனப்படுகிறது .

    உக்கிரேன் நாட்டில் போர் மூண்ட நாள் முதல் இன்றுவரை பல மில்லியன் டொலருக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்று பணத்தை அள்ளியுள்ளது .

    தொடர்ந்து மேற்குலக முதுகில் ஏறி நின்று ஆடிவரும் உகிரேனை ,அமெரிக்கா குருதீஸ் போராளிகளை கைவிட்ட நிலையை போன்று ,உக்கிரேனிலும் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம் .

    Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

    சீனா கடனால் சீரழிந்தத இலங்கை உண்மையை உடைத்த அமெரிக்கா உளவுத்துறை

    சீனா கடனால் சீரழிந்தத இலங்கை உண்மையை உடைத்த அமெரிக்கா உளவுத்துறை

    ,

    இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணம் சீனா வழங்கிய கடன் பொறியே என அமெரிக்கா உளவுத்துறை உண்மையை உடைத்து தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவின் உளவுத்துறை தலைவர் நிகழ்வு ஒன்றில் பேசும் பொழுது இன்று இந்த பொருளாதார நெருக்கடியில் இலங்கை நாடு சிக்கி தவிக்க சீனாவின் கடன் பொறியும் அதிகமான வட்டி வீதமும் மூலம் என இடித்துரைத்துள்ளார்.

    ஆசை காட்டி சீனா நாடுகளை கடன் நிலைக்கு தள்ளி அந்த நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நரி திட்டமே இது என்கிறது .

    இலங்கையில் நெருக்கடி ஏற்படும் ரணில் எச்சரிக்கை

    இலங்கையை கைவிட்ட உலக நாடுகள் பிச்சைக்கார நாடான இலங்கை

    இலங்கை இன்று இந்த நிலையில் சிக்கி தவிக்க சீனாவே காரணம் என அமெரிக்கா உளவுத்துறை விடயத்தை போட்டுடைத்துள்ளது.

    பவுத்த மதம் என்ற நிலையில் சீனாவுடன் ஒட்டி உறவாடிய இலங்கைக்கு இன்று இந்த பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படக்காரணமாக அமைந்தது.

    சீனா கடனால் சீரழிந்தத இலங்கை உண்மையை உடைத்த அமெரிக்கா உளவுத்துறை

    மேலும் சீனா வழங்கிய பல பில்லியன் டொலர் காரணமாக அதில் லஞ்ச ஊழல் மோசடி புரிந்து ஏப்பம் விட்டது மறு காரணம் என தெரிவிக்க படுகிறது.

    சீனாவின் இந்த நெருக்கடி ஏனைய நாடுகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என அமெரிக்கா உளவுத்துறை எச்சரித்துள்ளது.


    அப்படி என்றால் மேலும் சில நாடுகள் சீனாவின் கடன் பொறிக்குள் சிக்கியள்ளது என்பதையே அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கிறது.

    வளர்ந்து வரும் நாடுகளில் அபிவிருத்தி என்கின்ற போர்வையில் காபட் வீதிகளை அமைக்கும் ஒப்பந்தத்தில் சீனா களம் இறங்குகிறது .

    அதன் ஊடாக வீதிகளை அபிவிருத்தி செய்வதுடன் தனது தயாரிப்பு வாகனங்களையும் அங்கே இறக்குமதி செய்து விடுகிறது .

    அந்த நாட்டி செல்வ செழிப்பை சுரண்டிட இவ்விதமான ஆடம்பர ஆசைகளை காண்பித்து அந்த மக்களையும் நாட்டையும் இவ்விதம் நெருக்கடியில் சிக்க வைத்து தனது அரசியல் மேலாண்மையை அந்த நாடுகளில் நிறுவி விடுகிறது .

      Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

      கோட்டபாயா பிடியில் ரணில் அரசியல் சதுரங்கம் ஆரம்பம்

      கோட்டபாயா பிடியில் ரணில் அரசியல் சதுரங்கம் ஆரம்பம்

      ,

      இலங்கையில் மக்களினால் துரத்த பட்ட ஒருவர் இலங்கையின் ஜனாதிபதியான வரலாறு இடம்பெற்றுள்ளது .


      ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக விளங்கிய ரணில் விக்கிரமசிங்க தனது பாராளுமன்ற உறுப்பு அங்கத்துவத்தை இழந்த நிலையில் இன்று இலங்கையின் ஜனாதிபதியானார் .

      யாரும் சற்றும் எதிர் பார்த்திராத அரசியல் சித்து விளையாட்டில் ரணில் வென்று முடி சூடினார் .


      பேரம் பேச்சுக்களின் அடிப்படையில் வாக்குகள் சிதறடிக்க பட்டு அரியணையில் அமர்ந்தார் .

      இந்த அரியணை ஏற்றத்திற்காக பல கோடிகள் பேரம் பேச்சில் மாற்ற பட்டுள்ளன .

      தனது ஜனாதிபதி ஆசையையும் வரலாற்றில் இலங்கை ஜனாதிபதி என்கின்ற கீரீடத்தையும் ரணில் தட்டி சென்றுள்ளார் . எனினும் இவரது ஆட்சி 18 மாதங்களில் கவிழ்க்க படும் நிலையே உள்ளது.

      அதன் பின்னர் பொது தேர்தலை சந்திக்க வேண்டும்.

      இதற்குள்ளாக கொந்தளித்த மக்களை குஷி படுத்த வேண்டும் மீளவும் இயல்பு நிலைக்கு நாட்டை அழைத்து செல்ல வேண்டும் .

      அவ்விதம் வென்றால் மட்டுமே தனது கட்சியை காப்பாற்றி கொள்வதுடன் மேலும் மக்கள் நன்மதிப்பை பெற்றுக்கொள்ள முடியும்.

      ஆனால் மக்கள் விதிக்கும் கோரிக்கை என்னவென்றால் ராஜபக்ச அரசின் லஞ்ச ஊழல் மோசடி விசாரிக்க பட வேண்டும் .

      மேலும் அவர்கள் கொள்ளையடித்த பணம் மீள நாட்டுக்கு கொண்டுவரப் படவேண்டும் ராஜபக்சாக்கள் சிறையில் அடைக்க படவேண்டும்

      இவ்வாறான பலத்த சவாலுக்கு மத்தியில் ரணில் போராட்டம் இடம்பெறுகிறது.

      தான் ஜனாதிபதியானேன் என்ற மமதையை ரணில் விக்கிரமசிங்காவில் காண முடியவில்லை .மேலும் எதிர்கால நெருக்கடியை எவ்வாறு கையாள போகிறார் என்பதே ரணில் உடல் அசைவில் அவதானிக்க முடிகிறது .

      தனக்கு எதிராக கொதித்துள்ள மக்களுக்கு ரணில் விக்கிரமசிங்க என்ன செய்ய போகிறார் …?


      கோட்டாவை போல ரணிலும் விரட்டியடிக்க படுவாரா..? அல்லது மக்கள் போராட்டத்தை நீர்த்து போக வைப்பாரா ..?

      மக்கள் கொதிப்பு இவ்விதம் எழுந்தால் ரணில்விக்கிரமசிங்கா கோட்டாவை போல விரட்டியடிக்க படுவார் என்பதே களநிலவரம் .

      மக்கள் கோரிக்கைக்கு கட்டு பட்டு பதவி விலகும் நிலையே ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்படும் என்பதை இப்பொழுதே இங்கே பதிந்து வைக்கிறோம் .

      மக்களை கட்டாய படுத்த பல இலவச அறிவிப்புகளை ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்வார் ,அதில் மயங்கி மக்கள் ரணிலை மக்கள் ஏற்று கொள்வார்களா என்பதே சந்தேகமாக உள்ளது .

      கடன் தள்ளுபடி என்பன இதனை காண்பிக்கிறது .ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான மறு மணித்தியாலம் சர்வதேச நாணய நிதியம் பேசிட அழைக்கிறது .

      அவ்வாறு எனின் ரணில் விக்கிரமசிங்காவின் நிகழ்ச்சி நிரலின் கீழ் யாவும் நடக்கிறது என்பதை இதன் மூலம் கணிக்க முடிகிறது .

        Posted in உளவு செய்திகள்

        ஆயுதங்களுடன் பயணித்த உக்கிரேன் விமானம் வெடித்து சிதறல்

        ஆயுதங்களுடன் பயணித்த உக்கிரேன் விமானம் வெடித்து சிதறல்

        உக்கிரன் நாட்டின் இராணுவ கார்க்கோ விமானம் ஒன்று மிக ஆபத்தான கெமிக்கல் ஆயுதங்களை காவியபடி பயணித்த வேளை வெடித்து சிதறியது .

        இந்த விமானத்தில் அதி பயங்கரமான மிகவும் ஆபத்தான கெமிக்கல் ஆயுதங்களை காவியபடிபயணித்த பொழுது அந்த விமானத்தின் இயந்திரம் ஒன்றில் தீப்பற்றி கொண்டது .

        இந்த தீவிபத்த்தை அடுத்து அந்த உக்கிரேன் இராணுவ விமானம் வானில் வெடித்து சிதறியது .

        உக்கிரேன் இராணுவ கார்க்கோ ஆயுத விமானம் வெடித்து சிதறும் காட்சிகள் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன.

        இந்த இரட்சத கார்க்கோ விமானத்தில் விமானிகள் உள்ளிட்ட பன்னிரண்டு பேர் பயணித்துள்ளனர் .

        இவ்வாறு பயணித்த அனைவரும் அந்த விமானத்துடன் வெடித்து சிதறி இறந்துள்ளனர்.

        இந்த விமானத்தில் எவ்விதம் தீ பிடித்தது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

        ரசியா இராணுவத்தின் மீது தாக்குதலை மேற்கொள்ளும் நோக்கில் எடுத்துவரப்பட்ட நான்கு தொன் எடையுள்ள கெமிக்கல் ஆயுதங்களே விமானத்துடன் வெடித்து சிதறியுள்ளது.

        உக்கிரேன் கார்க்கோ விமனாத்தில் கெமிக்கல் ஆயுதங்கள் எடுத்துவரப்பட்ட தகவல் உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன .

          Posted in உளவு செய்திகள்

          ஈரான் உளவு விமானங்களை வாங்கி குவித்த ரசியா உக்கிரேனில் தாக்குதல் தீவிரம்

          ஈரான் உளவு விமானங்களை வாங்கி குவித்த ரசியா உக்கிரேனில் தாக்குதல் தீவிரம்

          உக்கிரன் நாட்டின் மீது போரினை தொடுத்துள்ள ரசியா நாடு பெரும் எதிர் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது.

          உக்கிரேன் போர் முனையில் துருக்கியின் உளவு விமானங்கள் பெரும் பங்களிப்பு புரிந்து வரும் நிலையில் ரசியா ஈரானின் உளவு விமானங்களை கொள்வனவு செய்துள்ளது .

          இந்த ஈரான் உளவு விமானத்தின் செயல் திறன் ரசியா இராணுவத்தினருக்கு கை கொடுத்து வருவதால் ஈரானிடம் இருந்து மேலும் இதே உளவு விமானங்களை வாங்கி குவித்திட ரசியா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

          ஈரான் உளவு விமானங்களை வாங்கி குவித்த ரசியா உக்கிரேனில் தாக்குதல் தீவிரம்

          உக்கிரேன் ரசியா போரினால் உலக நாடுகளில் உணவு மற்றும் எரிபொருள் விலை ஏற்றம் அதிகரித்துள்ளது.

          உக்கிரேன் ரசியா போர் முடிவுக்கு வந்தால் மட்டும் இந்த பேரவலத்தின் இருந்து நாடுகளை பாதுகாக்கலாம் என்ற நிலை உருவாக்கம் பெற்றுள்ளது .

          இவ்வாறான நிலையில் ரசியா உக்கிரேனில் போரினை வேகப்படுத்த ஈரான் உளவு விமானங்களை அதிகம் நம்பியுள்ளதாக எதிர் பார்க்க படுகிறது.

          ஈரானின் உளவு விமனங்கள் உக்கிரேன் களமுனையில் பறப்பதை அமெரிக்கா உளவு துறையினர் செய்தி படங்களுடன் வெளியிட்டுள்ளமை குறிப்பிட தக்கது.

            Posted in உளவு செய்திகள்

            கோட்டபாயாவை ஏற்க மறுக்கும் நாடுகள் மிரட்டும் அமெரிக்கா

            கோட்டபாயாவை ஏற்க மறுக்கும் நாடுகள் மிரட்டும் அமெரிக்கா

            இலங்கை ஜனாதிபதி கோத்தபாயா அமெரிக்கா செல்ல முயனறார் .ஆனால் அமெரிக்கா அரசு விசா வழங்குவதை நிறுத்தி அவரது பயணத்திற்கான ஆப்பு வைக்கும் ஆட்டத்தை ஆரம்பித்தது .

            அதனை தொடர்ந்து தற்போது மலேசியாவுக்கு சென்றார்

            .அங்கும் அவருக்கான அடைக்கலத்தை வழங்க முடியாத நெருக்கடி அந்த நாட்டு ஆளும் அரசுக்கு எதிர் கட்சிகள் மற்றும் ஒன்றிணைந்த கட்சிகளினால் நெருக்கடி வழங்கப்பட்டது .

            அதனால் மலேசியாவில் இருந்து தற்போது சிங்கப்பூருக்கு பயணமானார் .

            அங்கு புகலிட அடைக்கல கோரிக்கை வழங்குவதில்லை என்று சிங்கப்பூர் கையி விரித்து விட்டது .

            அதனை தொடர்ந்து டுபாய் அல்லது அபுதாபிக்கு அவர் தப்பி செல்லும் நிலை ஏற்படவுள்ளது.

            அங்கும் அவருக்கான அடைக்கலம் அல்லது பாதுகாப்பு வழங்கும் நிலை கேள்விக்குறியாகியுள்ளது .

            ஐரோப்பா எங்கும் கோட்டபாய செல்ல முடியாத நிலையில் உள்ளனர் .கரணம் தமிழர்கள் போராட்டத்தில் குதித்து இவரை போர்குற்றத்தில் தூக்கிசென்று விடுவார்கள் .

            கோட்டபாயாவை ஏற்க மறுக்கும் நாடுகள் மிரட்டும் அமெரிக்கா

            தற்போது எந்த நாட்டிலும் நிரந்தரமாக தங்கிட முடியா நிலையில் கோட்டபாய சிக்கி தவித்த வண்ணம் உள்ளார் .

            அப்படி என்றால் அவருக்கு மாற்று வழி என்ன மீளவும் இலங்கைக்கு திரும்பி வரவேண்டும்.

            இலங்கை நாட்டில் கோட்டபாய தங்கிட முடியாத நெருக்கடி இவர்களுக்கு உள்ளது .

            கோட்டபாய மனைவியுடன் நாடு நாடாக ஓடுவதற்கு பின்புல காரணம் அமெரிக்கா .

            அமெரிக்காவே கோட்டபாயவுக்கு அடைக்கலம் வழங்க வேண்டாம் என்ற அழுத்தத்தை கொடுத்து வருகிறது .

            இதனால் ராஜபக்ச குடும்பங்கள் பீதியில் உறைந்துள்ளனர் .

            நாடுகளை கூட்டி வைத்து புலிகளையும் தமிழர்களையும் பயங்கரவாதம் என்ற தோரணையில் அழித்தனர் .

            ஆனால் தற்போது உலக நாடுகள் இவர்களை கைவிட்ட நிலையில் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

            இதன் மறுமுனை எதுவாக உள்ளது எனின் நீங்கள் செத்து போங்கள் என்பது தான் .

            அவ்வாறு நோக்கின் கோட்டபாய உள்ளிட்டவர்கள் போர்குற்றத்தில் சர்வதேச நாடுகளில் வைத்து தூக்கி செல்லும் நகர்வுகள் முன்னெடுக்க படுகின்றன.

            தமிழர்களின் சாபங்களும் கண்ணீரும் தற்போது 13 வருடங்களின் பின்னர் ராஜபக்ச குடும்பத்தை துரத்தி வருகிறது.

            தனது சொந்த மக்களும் ராஜபக்ச குடும்பத்தை வெறுத்துள்ள நிலையில் தமிழர்களும் எதிரியாக உள்ள நிலையில் என்ன செய்வதென்று தெரியாது பெரும் பொறிக்குள் ராஜபக்ச குடும்பம் சிக்கியுள்ளது.

            இன்று இரவு அல்லது நாளை அரபு நாடு ஒன்றுக்கு பயணிக்கும் கோட்டபாய அங்கு தங்கி இருக்கும் நிலையில் உள்ளார் .

            ஆனால் அவருக்கு அமெரிக்கா அரசியல் சதுரங்க ஆட்டம் சாத்தியமான ஒன்றாகி காணப்படவில்லை .

            கோட்டாபய நாயை போல ஆடு நாடாக ஓட வேண்டிய நிலையிலேயே சிக்கியுள்ளார் என்பதே நிலையாக உள்ளது.

            அமெரிக்கா கோட்டாவை பழிவாங்க காரணம் ,சீனாவுடன் நெருங்க ஒட்டி தமக்கு எதிராக செயல்பட்டதை இப்பொழுது சாதிக்கிறது.

            இப்பொழுது என்றாலும் ராஜபாக்ஸை குடும்பம் உலக நாகரிக அரசியலை புரிந்திருப்பார்களாக…?

            இப்பொழுது மக்கள் கேள்வி என்னவெனில் ஏன் கோட்டபாய சீனாவுக்கு தப்பி ஓடவில்லை என்பது தான் .

            இலங்கை நாட்டை பிச்சைகார நிலைக்கு ஆக்கியதே புத்த மதம் என நம்பிய சீனா தனே .

            அப்புறம் எப்படி சீனா காரனிடம் போய் தப்பிக்க முடியும் .இதைத்தான் ஆப்பு என்பார்கள் .ஆப்பு என்றால் அப்படி சிறந்த ஆப்பு .கோட்டா கோ கோம் Gotta GO Home அல்ல கோட்டா நோ கோம் Gotta NO Home.

            • வன்னி மைந்தன்
              Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

              இந்தியா இராணுவம் இலங்கைக்கு வந்தால் புதிய ஆயுத மோதல் வெடிக்கும்

              இந்தியா இராணுவம் இலங்கைக்கு வந்தால் புதிய ஆயுத மோதல் வெடிக்கும்

              இலங்கைக்கு இந்தியா இராணுவம் இம்முறை வந்திறங்கினால் அது இலங்கைக்கு பெரும் நெருக்கடியை தருவிக்கும்.


              சுருங்க சொல்ல போனால் இலங்கை பொல்லு கொடுத்து அடிவாங்க தயாராகிறது .

              மக்கள் தமது அதிகார வர்க்கங்கள் புரிந்த இழிவு கெட்ட செயலினால் ராஜா பாக்ஸ அரசுக்கு எதிராக வீதி இறங்கினர் .

              இதுவே தவறு என கருதி லஞ்ச ஊழல் பெருச்சாளிகளை காப்பாற்ற இந்தியா இராணுவ வரவு முனைந்தால் அதுவே இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியை தோற்றுவிக்கும் நாடாக இலங்கை மாற்றம் பெறும் .

              சீனா தமிழர்களுக்கு உதவும் நிலையை ஏற்படுத்தும் .அதுவே இலங்கைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் நிலையும் தோன்றலாம் .

              தவிர இந்தியா இராணுவத்தை வலிந்து சீண்டும் நகர்வில் சீனா கண்டிப்பாக செயல் படும் .

              சீனாவின் ஆதிக்கம் கொழும்பை அண்மித்து அகல கால் பாதித்துள்ளது .சீனத்தவர்களும் சிங்களவர்களும் கலப்பு திருமணம் புரிந்துள்ளதுடன் பிள்ளைகளையும் பெற்றுள்ளனர் .

              சீனாவின் உளவுத்துறையால் மேற்கொள்ள பட்ட நீண்ட கால தந்திர திட்டமாக இவை காணப்படுகிறது .

              இவ்வேளை இந்தியா இராணுவத்தை இலங்கை அழைத்தால் ., இந்தியா இராணுவம் இலங்கை வந்தடைந்தால், இம்முறை சுலபமாக இந்தியா இராணுவத்தை இலங்கையில் இருந்து மீள் பெற முடியா நிலையில் இலங்கை சிக்கும்.

              இவ்வேளை தமிழர்களுக்கு இந்தியாவின் ஆதரவுடன் தீர்வினை வழங்க வேண்டிய நிலையும் ஏற்படலாம் .

              மேலும் இம்முறை இலங்கைக்கு இந்தியா இராணுவம் பெரும் நெருக்கடியை வழங்கும்.

              அது புதிய ஆயுத குழுக்களை உருவாக்கும் நிலைக்கு செல்லும் .இலங்கை புதிய போர் களமாக மாற்றம் பெறும் .

              கோட்டபாயா ஆடுகளத்தில் இலங்கையில் நடக்க போகும் எதிர்மறை ஆயுத மோதலை தமிழர்கள் மட்டும் அல்ல சிங்களவர்களும் காண தயாராகுங்கள் .

              இந்தியா துல்லியமாக சிந்தித்து தொலைதூர பார்வையுடன் செயல் பட்டால் தமிழர்கள் ஆதரவுடன் இந்தியாவை காப்பாற்றி கொள்ள முடியும் .

              தொடர்ந்து தமிழர் அரசியல் நிலை தொடர்பில் இந்தியா தவறான கோணத்தில் அதன் வெளியுறவு கொள்கை காணப்படுகிறது .

              இந்தியா வெளியுறவு கொள்கையில் மாற்றம் ஏற்படாது விடின் அது இந்தியா இலங்கையில் பெரும் அவமானத்துடன் வெளியேறும் நிலை ஏற்படும் .

              இலங்கை ஆடு களம் மாற்றமடைகிறது .தமிழருக்கு புதிய நாடுகளின் ஆதரவு தானாக தேடி வரும் நிலையை இந்தியாவே உருவாக்க போகிறது என்பதே வெளிப்படை .

              • வன்னி மைந்தன் –
              Posted in உளவு செய்திகள்

              கோட்டாவை துரத்தி ஜனாதிபதியாகும் ரணில் ஆட்டத்தை ஆரம்பித்தார்

              கோட்டாவை துரத்தி ஜனாதிபதியாகும் ரணில் ஆட்டத்தை ஆரம்பித்தார்

              இலங்கை ஜனாதிபதி கோட்டபாய கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதுங்கியுள்ள நிலையில் தற்போது நாட்டின் பிரதமராக விளங்கி வரும் ரணில் ஜனாதிபதியாக பதவி ஏற்க உளளார் .

              அதறகான ஆதரவை அனைத்து தரப்பில் இருந்தும் அவர் கோரியுள்ளார் .

              கோட்டாபய தப்பி ஓடிய நிலையில் இலங்கை சட்டவியல் யாப்பிற்கு அமைவாக தானே ஜெனதிபதியாக பதவி ஏற்க உள்ளார் .

              இலங்கை அரசியலில் நரி ரணில் என தமிழீழீழ விடுதலை புலிகளின் தத்துவ ஆசிரியர் ஆண்டான் பாலசிங்கம் அன்றே கூறியது இன்றுவரை இலங்கை அரசியலில் ரணில் விக்கிரமசிங்காவின் சதுரங்க ஆட்டம் அவ்வாறே உள்ளது .

              மாறாத அவரது தந்திரமும் அதனால் மறையாத வடுவாகவும் ரணிலின் கூட்டாச்சிகள் உள்ளகத்தே கவிழ்க்க பட்டமை வரலாறாக உள்ளது

              பிதமராக ஜேவிபியின் அனுரகுமார பதவி ஏற்கலாம் என எதிர் பார்க்கபடுகிறது .

              இலங்கையின் பிரதமராக ரணில் ஆட்சிக்கு வருகை தந்த நாள் முதல் அணுர குமாராவை வாயில் உரைத்த படி ரணில் விக்கிரமசிங்க கடந்து செல்வதை அவதானிக்க முடிந்தது .

              அதனால் இதனை அவர் செய்ய கூடும் என எதிர் பார்க்க படுகிறது.

              ரணில் நாட்டின் ஜனாதிபதியாக மாறினால் சஜித் பிரேமதாச ரணிலினால் பழிவாங்க பட்டு அரசியலில் இருந்து ஒதுக்க படும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்கலாம் .

              கோட்டாவை துரத்தி ஜனாதிபதியாகும் ரணில் ஆட்டத்தை ஆரம்பித்தார்

              ரணிலுடன் யார் எல்லாமே அங்கம் வகிக்கின்றனரோ அவர்கள் எல்லாம் அந்த ஆட்சியில் இருந்து துரதியடிக்க படும் நிலை ஏற்படும் என்பதை மீளவும் உறுதி படுத்தியுள்ளார்.

              பாராளுமன்ற உறுப்பு உரிமையை இழந்து தவித்த ரணிலுக்கு பிரதமர் பதவி லொத்தரியாக கிடைத்தது .

              அதுவே தற்போது நாட்டின் ஜனாதிபதியாக அமரும் நிலைக்கு மக்கள் போராட்டத்தை கோட்டாவுக்கு எதிராக தூண்டி விட்டு அவரை நாட்டை விட்டு ஒடவைத்து ஜனாதிபதியாகிறார் ரணில் .

              கூட இருந்து குழிபறித்த கதையாக இந்த அரசியல் சதுரங்க ஆட்டம் நிகழ்ந்துள்ளது

              கோட்டா ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த அடுத்த நொடியில் இலங்கையின் ஜனாதிபதியாக ரணில் பதவியே ஏற்பார் என எதிர் பார்க்க படுகிறது.

              ரணில் ஜனாதிபதியாவதை நாட்டு மக்கள் ஏற்று கொள்வார்களா என்பதே இன்றுள்ள கேள்வியாகும் ,

                Posted in உளவு செய்திகள்

                உக்கிரேனுக்கும் ஏவுகணைகள் 150 ஆயிரம் ஆட்டிலறி குண்டுகளை அனுப்பிய அமெரிக்கா

                உக்கிரேனுக்கும் ஏவுகணைகள் 150 ஆயிரம் ஆட்டிலறி குண்டுகளை அனுப்பிய அமெரிக்கா

                உக்ரேன் மீது ரஷ்ய இராணுவம் தொடராக போரினை தொடுத்த வண்ணம் உள்ளது .இவ்வேளை உக்கிரேனுக்கு அவசர உதவியாக அமெரிக்கா ஏவுகணைகள் மற்றும் ஆட்டிலறி குண்டுகள் 150ஆயிரம், மற்றும் ராடர் உள்ளிட்ட முக்கிய ஆயுத தளபாடங்களை வழங்கியுள்ளது .

                ரசியாவின் ஏவுகணை தாக்குதல்கள் பலமாக உள்ளதால் தமது முதல்தர ஆயுதங்களை உக்கிரேனில் வைத்து அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் சோதனையை நடத்திய வண்ணம் உள்ளனர்.


                அதன் ஒரு அங்கமாக உதவி என்ற போர்வையில் அமெரிக்கா உக்கிரேனுக்கு ஏவுகணை ஆட்டிலறி குண்டுகளை பெருமளவில் அள்ளி வழங்கிய வண்ணம் உள்ளது .

                அமெரிக்கா வழங்கிய ஆயுதங்கள் மூலம் ரசியாவின் உக்கிர தாக்குதல்களை தடுத்துவிட முடியுமா என்ற கேள்வி எழுகிறது .

                என்று தணியும் இந்த போர் ..?

                Posted in உளவு செய்திகள்

                ரஷ்ய ரொக்கட் ஆட்டிலறி அழிப்பு வெடித்து சிதறும் ஆயுதங்கள் எதிரி வெளியிட்ட வீடியோ

                ரஷ்ய ரொக்கட் ஆட்டிலறி அழிப்பு வெடித்து சிதறும் ஆயுதங்கள் எதிரி வெளியிட்ட வீடியோ

                உக்கிரேன் மீது போரினை தொடுத்து வரும் ரஷ்ய இராணுவத்தின் ரொக்கட் ஆட்டிலறி பீரங்கி படைப்பிரிவை முற்றாக தாக்கி அழித்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் வீடியோ காட்சிகளுடன் வெளியிட்டுள்ளது .

                ரஷ்ய இராணுவத்தின் 95வது பீரங்கி படைப்பிரிவு ஒன்று காட்டு பகுதிகளுக்குள் உருமறைப்பு செய்த படி மறைந்திருந்த படைகள் அழிக்க பட்டுள்ளன .

                இவர்கள் அங்கு மறைத்து வைத்திருந்த ரொக்கட் மற்றும் ஆட்டிலறி செலுத்திகள் மற்றும் குண்டுகள் அதனை இயக்கிய இராணுவத்தினர் என முழுவதுமாக உக்கிரேன் இராணுவ தாக்குதல் மூலம் அழிக்க பட்டுள்ளது .

                அங்கிருந்த ரஷ்ய இராணுவத்தின் பீரங்கி படைப்பிரிவு முற்றாக வெடித்து சிதறும் ஆயுதங்கள் காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது .

                உலகில் முதல் தாக்குதல் திறனை கொண்ட ரஷ்ய இராணுவத்தினர் உக்கிரேன் களமுனையில் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் தமது இராணுவ நகர்வை முன்னெடுத்த வண்ணம் உள்ளனர் .

                உக்கிரேன் இராணுவம் தமது இராணுவத்தின் இழப்புக்களை மறைத்து ரஷ்ய இராணுவத்தினருக்கு பாரிய இழப்பு என தொடர்ந்து பரப்புரை புரிந்த வண்ணம் உள்ளது .


                உக்கிரேன் இராணுவத்தின் எண்பது வீதமான இராணுவம் இறந்தோ அல்லது காயமடைந்தோ உள்ளது என உக்கிரேன் இராணுவத்தின் முன்னரங்க தாக்குதல் தளபதிகள் மற்றும் சிப்பாய்கள் தெரிவித்துள்ளனர் .

                ஆனால் உக்கிரேன் இராணுவம் ரஷ்ய இராணுவத்தால் தமக்கு ஏற்பட்ட இழப்புக்களை மூடி மறைத்தே வருகின்றனர் .

                உக்கிரேன் இராணுவம் கூறுவது போன்று இதுபோல தாக்குதல் ஊடாக ரஷ்ய இராணுவம் பயன்படுத்தும் ரொக்கட் ஆட்டிலறி அழிக்க பட்டுள்ளது எனின் எவ்வாறு எண்பது வீதமான உக்கிரேன் இராணுவம் செயல் இழந்து போனமைக்கான காரணமாக அமைய பெறும் ..?

                ரஷ்ய ரொக்கட் ஆட்டிலறி அழிப்பு வெடித்து சிதறும் ஆயுதங்கள் எதிரி வெளியிட்ட வீடியோ
                ரஷ்ய ரொக்கட் ஆட்டிலறி அழிப்பு வெடித்து சிதறும் ஆயுதங்கள் எதிரி வெளியிட்ட வீடியோ

                இவ்வாறு எழுப்ப படும் கேள்விகளுக்கு உக்கிரேன் இராணுவ தலைமையகத்தில் இருந்து பதில் ஏதும் வழங்கப்படவில்லை .

                மாறாக தமது எதிரி இராணுவம் பலத்த இழப்புக்களை சந்தித்துள்ளது என எதிரி போலவே பரப்புரை செய்து வருகிறது உக்கிரேன் இராணுவம் .

                தொடர்ந்து உக்கிரேன் நாட்டின் இரண்டு மாநிலங்களை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் எதிரியான ரஷ்ய இராணுவம் அங்கு தமது ஆதரவு குழுக்களுக்கு அந்த மாநிலங்களை ஆட்சி செலுத்திட வழங்கியுள்ளன .

                இங்கே எதிரி ரஷ்ய மொழியே பேசப்படுகிறது .அவர்களுக்கு ரஷ்ய பாஸ்போர்ட் வழங்க பட்டுள்ளது . அந்த பகுதிகள் ரஷ்ய நாட்டின் ஒரு பகுதியாக மாற்றம் பெற்றுள்ளது .

                உக்கிரேன் களத்தில் இவ்விதம் ரஷ்ய அதிரடி காட்டிய வண்ணம் நகர்ந்து செல்ல எதிரி தப்பி ஓட்டம் என எதிரி இராணுவம் சிரிக்கும் வண்ணம் உக்கிரேன் இராணுவம் போலி பரப்புரைகளை புரிந்து வருகிறது .

                ஓரிரு தாக்குதல்கள் இவ்வாறு இடம்பெற்று இருக்கலாம் எதிரி செய்திகள் இதனை காண்பித்து வென்றுவிட்டோம் என்கிறது உக்கிரேன் இராணுவ தலைமை .

                இலங்கை இராணுவத்தின் தொற்று பொய் பரப்புரைகள் இவர்களையும் விட்டு வைக்கவில்லை போலும் .

                • வன்னி மைந்தன்

                வெடித்து சிதறும் ரஷ்ய பீரங்கி படை அணி வீடியோ பார்க்க இதில் அழுத்துங்க

                Posted in உளவு செய்திகள்

                உகிரேன் நாட்டை முழுமையாக ஆக்கிரமிக்க துடிக்கும் ரஷ்ய ஜனாதிபதி புட்டீன்

                உகிரேன் நாட்டை முழுமையாக ஆக்கிரமிக்க துடிக்கும் ரஷ்ய ஜனாதிபதி புட்டீன்

                ரஷ்ய ; உக்கிரேன் நாட்டை முழுமையாக ஆக்கிரமிக்க ரஷ்ய ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீன் துடித்த வண்ணம் உள்ளதாக அமெரிக்கா உளவுத்துறை தெரிவித்துள்ளது .

                தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு உக்கிரேன் நாடு எதிராக திரும்பிய நிலையில் ,இராணுவ தாக்குதல் மூலம் அந்த நாட்டை ஆக்கிரமிக்க துடிக்கும் ரஷ்ய ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீன் திட்டத்தை தடுக்கும் நகர்வில் நேட்டோ முன்னேறிய வண்ணம் உள்ளது.

                நேட்டோ நாடுகளுக்கு உக்கிரேன் மீதன ரஷ்ய இராணுவத்தின் ஆக்கிரமிப்பு அச்சறுத்தலாக விளங்கி வருகிறது .

                இந்த நிலையில் நேட்டோ நாடுகள் புதிய கூட்டு முயற்சி தாக்குதல்களை தொடுத்திட உக்கிரேன் நாட்டுக்கு இராணுவ மற்றும் நிதி உதவிகளை வழங்கிய வண்ணம் உள்ளது .

                உக்கிரேன் மீதான ரஷ்ய போர் என்று முடியும் ..?

                எதிர்வரும் கோடைகாலத்திற்கு உக்கிரேன் போர் முடிவுக்கு வந்து விடும் என ரஷ்ய ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீன் தெரிவித்து இருந்தார் .

                ரஷ்ய ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீன் இந்த செயல் திட்ட நகர்வுகளை முறியடிக்கும் விதமாக அமெரிக்கா,பிரித்தானிய மற்றும் நேட்டோ நாடுகள் இணைந்து எதிர் திட்டங்களை வகுத்து ரஷ்ய இராணுவ நகர்வுகளை தோற்கடிக்கும் இராணுவ அரசியல் தந்திரோபாய நகர்வில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .

                ஆனால் இணைந்த பிரித்தானிய அமெரிக்கா நேட்டோ நாடுகள் கூட்டு முயற்சி தாக்குதல் ரஷ்ய மேற்கொள்ளும் இராணுவ நகர்வினை முழுமையாக தடுத்து விடுமா என்ற கேள்வியை எழுப்பி நிற்கிறது .

                உலக முதல் சோவியத் வல்லரசாக விளங்கிய ரஷ்ய உக்கிரேன் நாட்டை முழுமையாக ஆக்கிரமிக்க முடியாது 127 வது நாளில் திணறிய வண்ணம் உள்ளதாக எதிரி நாடுகள் பரப்புரை புரிந்த வண்ணம் உள்ளன .

                உக்கிரேன் நாட்டை முழுமையாக ரஷ்ய இராணுவம் வாசம் வீழ்வது தடுக்க படும் என நேட்டோ கூட்டமைப்பு நாடுகளை முழங்கிய வண்ணம் உள்ளன .

                உக்கிரேன் நகரங்கள் ரஷ்யா இராணுத்திடம் வீழ்ந்தது

                ஆனால் ரஷ்ய இராணுவம் உக்கிரேனின் மரியபோல் ,டொன்பஸ், உள்ளிட்ட முக்கிய நகரங்களை தமது முழுமையாந கட்டு பாட்டுக்குள் வைத்திருக்கும் அதேவேளை தமது தாக்குதல்களை தீவிரமாக தொடுத்த வண்ணம் உள்ளன .

                உகிரேன் நாட்டை முழுமையாக ஆக்கிரமிக்க துடிக்கும் ரஷ்ய ஜனாதிபதி புட்டீன்

                ரஷ்ய ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீன் தலைக்குள் என்ன இருக்கிறது அவர் என்ன சிந்திக்கிறார் அவர் செயல் படுத்த போவது என்ன என்பதை கண்டறிய

                முடியாது அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாட்டு உளவுத்துறையினர் மண்டையை போட்டு பிய்த்த வண்ணம் உள்ளனர்.

                உலக நாடுகளை ரஷ்ய மீது தொடர் பொருளாதார தடைகளை விதித்து மேலும் ரஷ்ய நாட்டுக்கு நெருக்கடிகளை தருவித்தால் ரஷ்ய ஜனாதிபதி பிளாடிமீர்

                புட்டீன் ஐரோப்பா மீது தாக்குதலை தொடுப்பார் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது .

                உக்கிரேன் மீதான ரஷ்யா போரினால் மூன்றாம் உலகம் போர் வெடிக்கும் அபாயம்

                அவ்வாறு ரஷ்ய ஐரோப்பா மீது தாக்குதல் தொடுக்க முற்பட்டால் அதுவே மூன்றாம் உலக யுத்தமாக மாற்றம் பெறுவதுடன் பெரும் மனித மற்றும் சொத்து அழிவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது.


                மூன்றாம் உலக யுத்தம் மூண்டால் முப்பது மில்லியனுக்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாவர்கள் என்ற புள்ளிவிபர தகவல் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .

                மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பித்தால் இங்கு அணுகுண்டு பாவனைகள் ஆதிக்கம் பலமாக இருக்கும் என்வும், மீளவும் ஜப்பானை போன்று பல

                நாடுகளில் பல நகரங்கள் உருவாகும் அபாயம் ஏற்படும் என்கிறது அந்த உளவு நிறுவன எச்சரிக்கை தகவல் .

                உக்கிரேன் நாட்டை முழுமையாக ஆக்கிரமித்து ஆண்டிட ரஷ்ய இராணுவத்தை தடுக்காது அமெரிக்கா பிரித்தானியா நேட்டோ நாடுகள் வழிவிட்டால் மூன்றாம் உலக யுத்தம் தடுக்க படும் .

                அவ்வாறு இல்லாது கிளித்தட்டு விளையாட முனைந்தால் ரஷ்ய இராணுவ தாக்குதல் நிலவரம் மேலும் மோசமாகும் என்பதே சமகால அரசியல் நிகழ்வுகள் கட்டியம் இடுகின்றன

                • வன்னி மைந்தன்
                  Posted in உளவு செய்திகள்

                  இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தள்ளாடும் கோட்டா ஆட்சி

                  இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தள்ளாடும் கோட்டா ஆட்சி

                  இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய சேவைகள் யாவும் முடக்க பட்டுள்ளது .இதனால் மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து பட்டினியால் தவித்து வருகின்றனர் .

                  மோசமான எரிபொருள் தட்டுப்பாடு

                  ஆட்டோ டாக்சி டிலிவரி செய்து பிழைத்து வந்த மக்கள் தமது தொழில் துறையை முற்றாக இழந்துள்ளனர் .

                  எரிபொருள் தட்டுப்பாட்டால் சீற்றத்தில் உள்ள மக்கள் ஆளும் அரசு மற்றும் அந்த அரச இயந்திரமாக செயல் பட்டு வரும் பொலிஸ் மக்களுக்குள் இடம்பெறும் மோதல் சம்பவம் பெரும் ஆபத்தான நிலையில் பயணிக்கிறது .

                  காவல்துறை இராணுவத்திற்கு எரிபொருள்

                  காவல்துறையினர் இராணுவத்தினர் தமது வாகனங்களில் சென்று எரிபொருளை நிரப்பி சென்ற வண்ணம் உள்ளனர் .

                  எரிபொருள் தட்டுப்பாடு தள்ளாடும் கோட்டா ஆட்சி
                  எரிபொருள் தட்டுப்பாடு தள்ளாடும் கோட்டா ஆட்சி

                  எரிபொருள் தட்டுப்பாடு வதந்தி அரசு

                  ஆனால் மக்கள் நாள்கணக்காய் காத்துக்கிடந்தும் அவர்களுக்கு எரிபொருள் வழங்கப்படவில்லை .

                  எமக்கு வேண்டும் எரிபொருள்

                  இதனை எதிர்த்து கேள்வி கேட்ட சிங்கள மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளதுடன் அவர்கள் வண்டிகளும் சேதமாக்க பட்டுள்ளன .

                  தொடர்ந்து இந்த காவல்துறை இராணுவத்தின் அடக்குமுறைகள் நீடித்து சென்றால் அதுவே ஆளும் கோட்டபாய ரணில் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்.

                  மக்கள் அரச சொத்துக்கள் வங்கிகளை கொள்ளையடிக்கும் நிலை உருவாக்கம் பெறும் மிக பெரும் ஆபத்தான நிலைக்கு இலங்கைசென்ற வண்ணம் உள்ளது.

                  திட்டமிடப்படும் படுகொலைகள்

                  எரிபொருள் பெறும் காவல்துறை இராணுவத்தினருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினால் அது வன்முறையாக மாற்றம் பெறும் நிலை ஏற்பட்டால்,அங்கே துப்பாக்கி சூட்டு தாக்குதல்களுக்கு உள்ளாக நேரிடலாம் .

                  இதன் பொழுது அப்பவி மக்கள் பலியாகும் நிலை ஏற்பட போகிறது.இந்த படுகொலை களம் திறக்க படவுள்ளது என்பதை அடித்து கூறுகிறோம் .

                  முதன் முதலாக சிங்கள மக்களை நேரடியா சிங்கள காவல்துறை இராணுவம் தாக்கும் சம்பவங்கள் இன்று அரங்கேற்ற பட்டுள்ளது.

                  இந்த தாக்குதல் காணொளிகள் சமுக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் ,மீளவும் கோட்டாவுக்கு எதிரான மக்கள் போராட்டம் நாடு தழுவிய ரீதியில் வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

                  இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தள்ளாடும் கோட்டா ஆட்சி

                  இவ்வேளை தமிழர்கள் மிக பொறுமையுடன் செயல் படுவது அவசியம் .அவ்வாறு தவறின் அப்பாவி தமிழர்கள் இதே சிங்கள இனவாத இராணுவத்தினரால் படுகொலை செய்ய படும் நிகழ்ச்சி நிரல்கள் தயாரிக்க பட்டுள்ளன .

                  அசைந்து செல்லும் களமுனை அதன் திட்டமிடல் நிகழ்வு செயல்பாடுகள் தற்போது எதிர்வு கூறியவாறு செல்கிறது.

                  தயராகும் எரிபொருள் வன்முறை

                  எதிர்வரு சில நாட்களில் இதன் உக்கிரத்தை இலங்கை சந்திக்க போகிறது .நாம் முன்னர் கூறியது போன்று இலங்கை ஒரு மியான்மாராக மாற்றம் பெறப்போகிறது .

                  ,இனவாத சிங்களத்தினால் தமிழர்கள் படு கொலை செய்ய படும் நிலையும் அவர்கள் சொத்துக்களும் சூறையாட படும் நிலையும் உருவாக்கம் பெற போகிறது.

                  இதனை புரிந்து கொண்டு தமிழர்கள் புத்திசாலித்தனமாக செயல்படுவது காலத்தின் கட்டாயமாக உள்ளது.தமிழர்களே உங்கள் வீடுகளை தேடி இனவாத காடையர்கள் உள்நுழைவர்கள் அதனை எதிர்கொள்ள தயராக இருங்கள் .

                  • களமுனை ஆய்வு – வன்னி மைந்தன்
                    Posted in உளவு செய்திகள்

                    உக்கிரன் இராணுவம் 80 வீதம் மரணம் -ஒப்பு கொண்ட இராணுவம்

                    உக்கிரன் இராணுவம் 80 வீதம் மரணம் -ஒப்பு கொண்ட இராணுவம்

                    உக்கிரேன் நாட்டின் மீது ரசியா இராணுவம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .இந்த தாக்குதலில் சிக்கி உக்கிரேன் இராணுவத்தின் முக்கிய அனுபவம் வாய்ந்த படையணிகள் அழிக்க பட்டுள்ளன .

                    உக்கிரேன் இராணுவ படையில் 80வீதமான இராணுவம் பலியாகியோ அல்லது காயமடைந்துள்ளனர் என சக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர் .


                    இவர்கள் யாவரும் பலத்த கால் ,கைகள் முறிவுக்கு உள்ளாகியுள்ளனர் .என முன்னரங்க காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் உக்கிரேன் படை தளபதி தெரிவித்துள்ளார் .

                    முதன் முதலாக மேற்குலக ஊடகம் ஒன்றுக்கு உக்கிரேன் இராணுவத்தினர் நேரடியாக வழங்கிய சாட்சியாக இந்த காட்சிகள் உள்ளன .

                    உக்கிரேன் அரசு கூறுவது போன்று தாம் வெற்றி கொண்டு எதிரி படைகளை விரட்டி வருகின்றோம் என்ற கூற்று பொய்யானது என்பது அதே அரச இராணுவத்தின் வாயிலாக வெளிந்துள்ளது .

                    உக்கிரன் இராணுவம் 80 வீதம் மரணம் -ஒப்பு கொண்ட இராணுவம்
                    உக்கிரன் இராணுவம் 80 வீதம் மரணம் -ஒப்பு கொண்ட இராணுவம்

                    அதில் கடமையாற்றும் பெண் இராணுவ சிப்பாய் தெரிவிக்கின்ற பொழுது நான் நான்கு நாட்களாக குளிக்கவில்லை .உறங்கவில்லை இவ்வாறே போர் செய்து வருகிறோம் .எனது சாகாக்கள் காயம்பட்ட நிலையில் துடித்து கொண்டுள்ளதை அவர் கண்முன்னே காண்கின்றார் .

                    இவரது கண்ணில் பேச்சில் உளவியலில் விரக்தி நிலையில் உள்ளதும் ,எப்பொழுதும் தாம் இறப்போம் என்ற அச்சத்தை காண முடிகிறது .

                    நாள் ஒன்றுக்கு உக்கிரேன் இராணுவத்தினர் ரசியா இராணுவ நிலைகளை நோக்கி ஆறாயிரம் ஆட்டிலறி குண்டுகளை ஏவிய வண்ணம் உள்ளதாக தெரிவித்தது .

                    உக்கிரேன் மட்டும் இவ்வாறு ஆறாயிரம் குண்டுகளை நாள் ஒன்றுக்கு வீசுகிறது என்றால் ரசியா எத்தனை மடங்கு அதிகமாக குண்டுகளை வீசி வரும் என்பதை கற்பனை செய்து பாருங்கள் .

                    ரசியா உக்கிரேன் இராணுவம் கடும் மோதல்

                    ரசியாவிடம் 1400 உக்கிரேன் இராணுவம் சரண்

                    உக்கிரேன் இராணுவத்தால் 32500 ரசியா இராணுவம் படுகொலை

                    தவிர உக்கிரேன் போரில் நாள் ஒன்றுக்கு முன்னூறு மில்லியன் டொலர்களை செலவு செய்து வருவதாக ரசியா தெரிவித்துள்ளது .

                    அவ்வாறு எனின் உக்கிரேன் களமுனையில் யாரது பலம் ஓங்கியுள்ளது என்பதையும் ,இந்த போரில் உக்கிரேன் இராணுவம் செத்து போயுள்ளது முற்றாக உள் இராணுவ கட்டமைப்பு சிதைந்து போயுள்ளது .

                    அந்த செத்த பாம்பை தொடர்ந்து ரசியா இராணுவம் அடித்த வண்ணம் உள்ளது.

                    இதே போல உங்களுக்கும் அடி விழும் என்பதை நேட்டோ நாடுகளுக்கு ரசியா தெரிவித்து கொள்கிறது என்பதை இங்கே கவனியுங்கள்.

                    இந்த ஊடகத்தில் வெளியான இந்த காட்சிகள் உக்கிரேன் ரசியாவிடம் முற்றாக விரைவில் வீழ்ந்து விடும் என்பதை இப்போதே முன்னோட்டம் விட்டுள்ளது .

                    அப்படி என்றால் உக்கிரேன் களமுனையில் அதிரடி திருப்பங்கள் எதிர் வரும் நாட்களில் இடம்பெற போவதை காணலாம் என்பதை இந்த செய்தி காண்ப்பிக்கிறது .

                    தன் பலம் அறியாது ஏவல் முதுகில் ஏறிநின்று ஆடினால் இது தான் நிலை

                    .இன்று தோற்று தப்பி ஓட போகும் உக்கிரேன் அதிபர், அதனை முன்பே செய்திருந்தால் ,மக்களையும் இராணுவத்தின் உயிர்களையாவது காப்பற்றி இருக்கலாம் என்பதே மனித நேயவாதிகள் கருத்தாக உள்ளது .

                    • வன்னி மைந்தன்
                      Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

                      இலங்கை வந்தடைந்த இந்தியா தூதுக்குழுவிடம் சிக்கிய இலங்கை

                      இலங்கை வந்தடைந்த இந்தியா தூதுக்குழுவிடம் சிக்கிய இலங்கை

                      கொழும்பு ;இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தொடர்ந்து இலங்கைக்கு உதவும் முகமாக இந்தியா தூதுக்குழு இலங்கை வந்தடைந்துள்ளது .

                      இந்தியா தூதுக்குழு

                      இந்த விசேட தூதுக்குழுவில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா,இந்திய பொருளாதார உறவுகள் தொடர்பான
                      செயலாளர் அஜய் சேத், த பொருளாதார ஆலோசகர் கலாநிதி வி அனந்த நாகேஸ்வரன் ஆகியோர் முக்கிய அதிகாரிகள் பங்கெடுத்துள்ளனர் .

                      ஆளும் ஜனாதிபதி கோட்டபாய ,மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோரை சந்தித்து பேச்சில் ஈடுபடவுள்ளது .இந்தியா வெளியுறவு அமைச்சர் தலைமையில் மேற்படி குழு வருகை தந்துள்ளது .

                      இலங்கை வந்தடைந்த இந்தியா தூதுக்குழு இலங்கை ஜனாதிபதி கோட்டபாய பிரதமர் விக்கிரமசிங்க சந்திப்பு

                      இலங்கை வந்தடைந்துள்ள இந்திய விசேட குழுவினர் இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தனிப்பதற்குரிய வேலைகளை இந்த இந்தியா தூதுக்குழு செயல்முறை படுத்தும் .

                      ஆனால் அதற்கு கைமாறாக இலங்கையிடம் கச்சத்தீவை இந்தியா குத்தகைக்கு 99 வருடங்களுக்கு மீளப்பெற்று கொள்ளும் பேச்சுக்களும் இதில் இடம் பெற்று உள்ளதாக முக்கிய அரசியல்வாதிகள் தெரிவித்து வருகின்றனர் .

                      மிக ஆபத்தான நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு சீனாவின் பாணியில் பணத்தை அள்ளி வழங்கி இலங்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இந்தியா முனைகிறது .

                      அவ்வாறான நகர்வுகள் இன்று இங்கே வந்த இந்தியா விசேட குழுவினர் பேசியுள்ளதாக எதிர் பார்க்க படுகிறது .

                      இந்தியாவுக்கு ஜனாதிபதி கோட்டபாய நன்றி

                      இலங்கை சந்தித்து வரும் மிக நெருக்கடியான கால கட்டத்தில் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவி வருகின்றது .அவ்வாறான அவசர புரிந்துணர்வு உதவிகளுக்கு இலங்கை மக்கள் சார்பில் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார் .

                      இலங்கை வந்தடைந்த இந்தியா தூதுக்குழுவிடம் சிக்கிய இலங்கை

                      இந்தியா சும்மாவா உதவி செய்கிறது என்பதற்கு இன்று உள்ளே இடம்பெற்ற பேச்சுக்கள் மூலம் கொழும்பு புரிந்திருக்கும்.

                      சோழியன் குடும்பி சும்மாவா ஆடும் என்பதும் தமிழக மீனவர்கள் மீது தேவையற்று கைது செய்திட முனைந்து இன்று இடியாப்ப சிக்கல்லுளுக்குள் இலங்கை சிக்கியுள்ளது .

                      மேலும் இலங்கையை தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அணைத்து நகர்விலும் இந்தியா ஈடுபட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .

                        Posted in உளவு செய்திகள்

                        ரசியா எல்லையில் பரசூட்டில் குதித்த பிரான்ஸ் இராணுவம்

                        ரசியா எல்லையில் பரசூட்டில் குதித்த பிரான்ஸ் இராணுவம்

                        ரசியா எல்லையில் பாராசூட்டில் குதித்த பிரான்ஸ் இராணுவம் நடத்திய அதிரடி நகர்வு நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

                        ரசியாவின் எல்லையை அண்மித்து காணப்படும் Estoniaபகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்னதாக ரசியா விமானங்கள் அத்துமீறி நுழைந்தது மிரட்டலை விடுத்தன ,

                        ரசியா போர் விமானங்கள் இந்த அத்துமீறல் மிரட்டல் சம்பவம் நடந்து இரு நாட்களில் அதே பகுதியில் பிரான்ஸ் இராணுவத்தினர் நூறு பேர் பாராசூட்டில் குதித்து போர் பயிற்சியில் ஈடுபட்டனர் .

                        பிரான்ஸ் இராணுவம் நடத்திய இந்த திடீர் போர் ஒத்திகை நடவடிக்கை ரசியாவுக்கு விடுக்க பட்டுள்ள எச்சரிக்கியாக பார்க்க படுகிறது .

                        Estonia நாட்டின் மீது இராணுவ தாக்குதல்களை ரசியா இராணுவம் மேற்கொண்டால் அதற்கு பதிலடி வழங்கும் தாக்குதல் முன் கள தயாரிப்பு நகர்வாக.

                        இந்த பிராஸ்ன இராணுவம் நடத்திய பரசூட்டில் குதித்த போர் ஒத்திகை காணப்படுகிறது .

                        உக்கிரேன் போரில் பலத்த தோல்விகளை சந்தித்த வண்ணம் உள்ள ரசியா இராணுவம் ,நாடுகள் மீது பெரும் படையெடுப்பை நாடத்தினால் அதில் வெற்றி கொள்ளுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது .

                        ரசியா எல்லையில் பரசூட்டில் குதித்த பிரான்ஸ் இராணுவம்

                        ரசியா எல்லையில் பாராசூட்டில் குதித்து அசத்திய பிரான்ஸ் இராணுவத்தின் வீர தீர செயல் பாடுகள் உலக போருக்கான முன்கள தயாரிப்பாக பார்க்க படுகிறது .

                        உக்கிரேன் மீது ரசியா இராணுவம் தொடராக நடத்தி வரும் ஆக்கிரமிப்பு தாக்குதலை அடுத்து உலக நாடுகளில் எரிபொருள்,மற்றும் எரிவாயு ,மின்சார விலை உயர்வுகள் அதிகரித்தன .

                        பொருளதிகார ரீதியில் பெரும் நெருக்கடிகளை வளர்ந்து வரும் நாடுகள் உள்ளிட்டவை சந்தித்த வண்ணம் உள்ளன ,

                        இவ்வாறான நெருக்கடியான காலத்தில் ரசியா எல்லை அருகே பிரான்ஸ் இராணுவம் நடத்திய போர் ஒத்திகை .

                        இராணுவ நடவடிக்கை மேலும் பொருளாதார ரீதியில் நெருக்கடிகளை நாடுகளுக்கு இடையில் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிது .

                        போரில் கவனம் தீவிர கவனம் செலுத்தி வரும் வல்லாதிக்க நாடுகள் வளர்ந்து வரும் ,அல்லது ஏழை நாடுகள் தொடர்பில் எவ்வித கவனத்தையும் செலுத்தவில்லை என்பதே மேற்படி விடயங்கள் எடுத்துரைக்கின்றன .

                          Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

                          பரம எதிரி தமிழர்கள் சிங்கள இனவாதம் முழக்கம்

                          பரம எதிரி தமிழர்கள் சிங்கள இனவாதம் முழக்கம்

                          இலங்கையில் சிறுபான்மை தேசிய இனமாக வாழ்ந்து வரும் தமிழர்கள் தமது பரம எதிரிகள் என சிங்கள இனவாதம் முழக்கம் இட்ட வண்ணம் உள்ளது .

                          தமிழர்கள் பூர்விக பகுதியை ஆக்கிரமித்து அங்கு நிலை கொண்டுள்ள சிங்கள இனவாதம் தமிழர்கள் பாரம்பரிய முறைமைகள் மற்றும் கலாச்சார நுகர்வுகளை கலர்ப்படம் செய்து வருகிறது .

                          போருக்கு பின்னரான கால பகுதியில் பண்பட்ட தமிழ் தேசியத்தின் கலாச்சார பண்பாட்டை சிதைத்து போருக்கு பின்னரான ஓசை படாத இனவாதத்தை அரங்கேற்றிய வண்ணம் உள்ளது .

                          தமிழர்கள் முக்கிய பகுதிகள் எங்கும் புத்த விகாரைகள் நிர்மாணிக்க பட்டு வருகின்றன.

                          இலங்கை இனவாத சிங்களவர்களுக்கே உரியது என்ற வகையில் பரம எதிரி சிங்கள இனவாதம் புரிந்த வண்ணம் உள்ளது .

                          தமிழர் பகுதிகள் எங்கும் திட்டமிடப் பட்ட சிங்கள குடியேற்றங்கள் மற்றும் போதைவஸ்து பாவனை வாழ்வை விஸ்தரித்து தமிழர்கள் சிந்தனையை மழுங்கடித்து குற்றவியல் சமூகமாக மாற்றிய வண்ணம் உள்ளது .


                          ஆயுதம் ஏந்தி போராடிய போராளிகள் வீழ்த்த பட்டு அந்த மண்ணில் இனப் படுகொலை அரங்கேற்றி மகிழ்ந்த சிங்களம் .

                          தற்போது இன கலப்பை மேற்கொண்டு வருவதுடன் தமிழர்களின் தேசிய அடையாளங்களை சிதைக்கும் முக்கிய நகர்வுகளை திட்டமிட்டு நடத்திய வண்ணம் உள்ளது .

                          நமது நேரடி மற்றும் பரம எதிரி தமிழர்கள் தான் என்பதை நினைவில் வைத்து இவ்விதமான அடக்குமுறை ஒடுக்குமுறைகளை மேற்கொண்டு தமிழர் தேசியத்தின் தேச கனவுகள் சிதைத்து வருகிறது .

                          பரம எதிரி தமிழர்கள் சிங்கள இனவாதம்

                          ஈராக்,லிபியாவில் மக்களை அடக்கிய அரசுகளை பயங்கரவாதம் என்ற போர்வையில் புகுந்த அமெரிக்கா வல்லாதிக்கம் ,அந்த நாடுகளை நாற்பது ஆண்டுகால ஆட்சியாளர்களை வேரோடு புடுங்கி எறிந்தது .


                          அதன் பின்னர் அந்த அரசுகளுக்கு எதிரான குழுக்களை உருவாக்கி இரத்தம் தோய்ந்த போர் ஒன்றை அங்கு கட்டவிழ்த்து விட்டுள்ளது.

                          பரம எதிரி தமிழர்கள் சிங்கள இனவாதம் முழக்கம்

                          அவ்வாறான ஓர் போர் இலங்கையில் வெடிக்க போகிறது ,பலத்த பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மேலும் பலத்த பின்னடைவுகளை சந்திக்க போகிறது .

                          ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு கண்டு அமைதியான நாடாக இலங்கையை மாற்றியமைக்க வேண்டிய அரசியல் தலைமைகள் இனவாத சிந்தார்ந்துக்குள் தம்மை மூழ்கடித்து வளமான இலங்கை திருநாட்டை சுடுகாடாக்கி நகர்கிறது .

                          ஒன்று பட்டு அனைவரும் பயணிக்கின்ற ஒருமை பாட்டு முழக்கத்துடன் நேசக்கரம் நீட்ட வேண்டிய வேளையில் ,இனவாத பார்வையை விதைத்து குற்றவியல் சமுகமாக

                          தமிழர்களை உருவாக்கி செல்லும் சிங்கள ஆட்சியாளர்களின் மனோ நிலையில் இனவாதம் அழியாது என்பதை தற்கால நிகழ்வுகள் தெளிவாக கட்டியம் இடுகின்றன .

                          ஒன்றிணைந்த இலங்கையில் பரம எதிரிகளாக தமிழர்கள் உள்ளார்கள் என கருதும் சிங்கள இனவாத சாய முகம் கிழிக்க படும் நாளே இலங்கை வாழ் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாளாக மாற்றம் பெறும் .

                          சிங்கள இனவாதம் என்றும் மாறும்

                          அரசியல்வாதிகளின் அடிப்படை சித்தார்த்த கோட்பாட்டில் மாற்றங்கள் ஏற்படும் வரை இலங்கை நின்மதியாக உறங்கிட முடியாது என்பதற்கு வரும் காலங்களில்

                          இலங்கையில் நடக்க போகும் எதிர்மறை அரசியல் அதிரடி தலைகீழ் திருப்பங்கள் இதனை உணர்த்தும் .

                          அப்போது இவர்கள் விழிகளில் கண்ணீர் மட்டுமே எஞ்சி இருக்கும் .தவறுகளை புரிந்தவர்கள் அன்று கல்லறையில் உறக்கமிடுவார்கள் ,ஆனால் அதன் வழித்தடம் மாறாமல் பயணிக்கும் .

                          தமிழர்கள் பரம எதிரிகள் இல்லை என்பதை என்று உணரும் இந்த சிங்கள பவுத்த பேரினவாத தேசம் …?

                            Posted in உளவு செய்திகள்

                            எதிரி ஓட ஓட விரட்டி தாக்குவோம் உக்கிரேன் இராணுவம்

                            எதிரி ஓட ஓட விரட்டி தாக்குவோம் உக்கிரேன் இராணுவம்

                            எங்கள் நாட்டின் மீது இராணுவ படையெடுப்பை மேற்கொண்ட எதிரி இராணுவம் ஓட ஓட அவர்களை விரட்டி தாக்குவோம் என உக்கிரேன் இராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது .

                            எதிரிகள் முன்னேற்ற வழிகள் யாவிலும் உக்கிரேன் இராணுவம் தயார் நிலையில் உள்ளது ,நாற்பது நாடுகள் ஆதரவுடன் எதிரிகளை ஓட ஓட விரட்டி தாக்கி வருகிறோம் .

                            எமது மண்னையும் ம் மக்களையும் காப்பாற்றிட அமெரிக்கா,பிரித்தானியா தொடர்ந்து ஆயுத உதவிகளை புரிந்த வண்ணம் உள்ளன .இந்த ஆயுதங்களே எதிரி இராணுவம் தப்பி ஓட காரணமாக உள்ளது .

                            அதிர்ச்சியில் எதிரி நாடுகள் வடகொரியா புதிய வகை ஆயுதம் தயாரிப்பு

                            பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் இரண்டு முறை உக்கிரேனுக்கு பயணம் புரிந்து தனது நேரடி ஆதரவையும் .

                            எதிரி இராணுவம் செயல் இழக்க வைக்க அதற்குரிய ஆயுத தளபாட உதவிகளை வழங்குவோம் என தெரிவித்து சென்றுள்ளார் .

                            உக்கிரேன் மீது ரசியா இராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் நடத்தும் உக்கிரேன் இராணுவ தரப்பிலும் பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன .

                            ஆனாலும் அவர்கள் தொடர்ந்து தமது எதிரி இராணுவத்தை விரட்டி தாக்கிய வண்ணம் உள்ளனர் .

                            பாம்பு தீவில் நிலை கொண்டிருந்த ரசியா இராணுவம் மீது எதிர் தாக்குதல் நடத்தினர் .அங்கு மைக்க பட்ட எதிரிகளின் ஆயுத முகாம்கள் மற்றும் ஆயுத தளபாடங்கள் என்பன அழிக்க பட்டு எதிரிக்கு பலத்த அடி வழங்கியுள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவிக்கிறது .

                            உக்கிரேன் அரசுக்கு பலமான ஆயுத தளபாடங்களை மேற்குலக எதிரி நாடுகள் வழங்கி வருகின்ற நிலையில், தற்போது ரசியா நீண்ட தூரம் சென்று தாக்கும் ஐ சி எம் ஏவுகணைகளை பயன் படுத்த தயராகி வருகிறது .

                            இந்த குண்டுகள் பல தொன் எடை கொண்டவை .அவை வீழ்ந்து வெடிக்கும் பகுதிகள் முற்றாக அழியும் நிலையை ஏற்படுத்த கூடியவை .

                            அவ்விதமான நாசகார தாக்குதலை நடத்திட எதிரி இராணுவம் என கூறி வரும் ரசியா இராணுவம் உக்கிரேனுக்கு மரண அடி வழங்க தன்னை தயார் படுத்தி வருகிறது.

                            இந்த ஏவுகணைகள் ரசியா எதிர் பார்ப்பது போல எதிரி நிலைகளை துல்லியமாக தாக்கி பலத்த சோதனைகளை எதிரிக்கு ஏற்படுத்துமா என்பதை காத்திருந்து பார்க்க வேண்டும் .

                              Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                              உக்கிரேன் விமானங்கள் 228 சுட்டு வீழ்த்தீய ரசியா

                              உக்கிரேன் விமானங்கள் 228 சுட்டு வீழ்த்தீய ரசியா

                              உக்கிரேன் மீது ரசியா இராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது

                              . இவ்வேளை உக்கிரேன் விமானங்கள் ,மற்றும் உலங்குவானூர்தி 228 டை தாம் சுட்டு வீழ்த்தியதாக ரசியா இராணுவம் அறிவித்துள்ளது.

                              அது தவிர எதிரி டாங்கிகள் 3,503 மற்றும் 3,545 special military motor vehicles,1,859 ஆட்டிலறி செலுத்திகள் ,337 ஏவுகணை செலுத்திகள் ,506 பல்குழல் ரொக்கட் லோஞ்சர்கள்

                              உள்ளிட்ட முக்கிய ஆயுதங்கள் தம்மால் அழிக்க பட்டுள்ளதாக ரசியா இராணுவம் தெரிவித்துள்ளது.

                              ஆனால் உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தமது விமானங்கள் ,மற்றும் ஆயுத தளபாட இழப்புக்களை மறைத்து ரசியாவுக்கே அதிக இழப்பு என தெரிவித்து பொய் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது.

                              ரசியா இராணுவத்தின் சுடுதிறன் தாக்குதல் அதிகரிக்க பட்டுள்ள நிலையில் உக்கிரேன் இராணுவம் பலத்த பின்னடைவை சந்தித்த வண்ணம் உள்ளது.

                              வான் பலத்தில் இரண்டு மடங்கு பலத்தை உக்கிரேன் இராணுவம் இழந்து நிற்கிறது .

                              துருக்கிய உளவு விமானங்கள் சிறந்த சேவையாற்றி வந்த நிலையில் அந்த உக்கிரேன் விமானங்கள் அதிகம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன.

                              உக்கிரேன் விமானங்கள் 228 சுட்டு வீழ்த்தீய ரசியா இராணுவத்தின் தாக்குதல் திறன் அதன் பலத்தை மெய்ப்பட காண்பிக்கிறது .

                              தற்போது முன்னேறி வரும் ரசியா இராணுவத்தை எதிர்கொள்ள முடியாது உக்கிரேன் இராணுவம் திணறிய வண்ணம் உள்ளது.

                              அமெரிக்கா பிரிட்டன் வழங்கிய ஆயுதங்கள் போதாமை உள்ளது ,அவ்விதம் வழங்க பட்ட ஆயுத களஞ்சியங்களை இலக்கு வைத்து ரசியா ஏவுகணை தாக்குதல் நடத்தி அழித்துள்ளது.

                              இதனால் மேலும் ஆயுத இழப்பை சந்தித்துள்ள உக்கிரேன் இராணுவம் மேலும் ஆயுதங்கள் தாருங்கள் என வேண்டி நிற்கிறது.

                              உக்கிரேன் களமுனையில் எதிரி இராணுவமான ரசியா படைகள் நடத்தும் தாக்குதலில் நாள் தோறும் 500 உக்கிரேன் இராணுவம் காயமடைந்தும் நூறு பேர் மரணமாகியும் வருகின்றனர்.

                              இவை உக்கிரேன் இராணுவத்தின் போரிடும் மனோ நிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது ,

                              எதிரி இரணுவத்தால் உக்கிரேன் விமானங்கள் அதிகளவு சுட்டு வீழ்த்த பட்ட நிலையில் உக்கிரேன் இராணுவம் தமது வான்பலத்தில் அரைவாசியை இழந்துள்ளது .

                              இந்த வான்பல இழப்பும் ,அதனால் ஏற்பட்ட இராணுவ பின்னடைவும் ,எதிரி ஆயு பலத்தை குறைத்து மதிப்பிட்ட உக்கிரேன் இராணுவத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது .

                              எதிரி இராணுவத்தை வென்று விடுவோம் என கருதிய உக்கிரேன் அதிபருக்கும் ,இராணுவத்திற்கும் இந்த களமுனை பெரும் தோல்வியையும் பலத்த வரலாற்று போரியல் மற்றும் பாடங்களையும் கற்பித்துள்ளது எனலாம் .

                              • வன்னி மைந்தன்