Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
அரிசி விலை மீண்டும் அதிகரிப்பு
அரிசி விலை மீண்டும் அதிகரிப்பு
பொலன்னறுவை பிரதான அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் அரிசியின் விலைகளை, மீண்டும் உயர்த்தியுள்ளனர்.
அதன்படி, கீரி சம்பா அரிசியின் விலை கிலோவுக்கு 30 ரூபாயும், சம்பா நாட்டு அரிசி கிலோ 15 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசி 195 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம்சம்பா அரிசி 155 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் நாட்டு அரிசி 130 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான சேதன பசளை
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான சேதன பசளை
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு சேதன திரவம், நைதரசன் சாறு, களைநாசினி போன்றவற்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இரசாயன உரங்களை முழுமையாக தடை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தினால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இரசாயன உரப் பாவனையை தடை செய்வது என்பது, உடனடித் தீர்மானம் இல்லையெனவும் ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டதன் அடிப்படையில் இரசாயன கலப்பற்ற உணவுகளை மக்களுக்கு வழங்கும் நோக்கத்திலான தீர்மானம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக சேதனத் திரவம், நைதரசன் சாறு போன்றவற்றை உடனடியாக பெற்று விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
தாயின் கள்ள காதலனால் மகன் குத்தி கொலை
தாயின் கள்ள காதலனால் மகன் குத்தி கொலை
முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளி – கரிக்கட்டைப் பிரதேசத்தில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் மதுரங்குளி கரிக்கட்டைப் பிரதேசத்தில் நேற்று (18) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கும் முந்தல் பொலிஸார், மதுரங்குளி
கரிக்கட்டை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மதுரங்குளி கரிக்கட்டைப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் நீண்ட காலமாக நபர் ஒருவருடன் தவறான தொடர்பை பேணி வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (18) அறையொன்றில் இருந்துகொண்டு தனது கள்ளக் காதலனுக்கு இரவு நேரச் சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்த போது அங்கு வருகை தந்த குறித்த பெண்ணின் மகன் இதனைப் பார்த்ததுடன்
கடுமையாகவும் கண்டித்துள்ளதுடன், தாயின் கள்ளக் காதலனை வீட்டை விட்டு வெளியே போகுமாறும் கூறியுள்ளார்.
தாயின் கள்ள காதலனால் மகன் குத்தி கொலை
இதையடுத்து தாயின் கள்ளக் காதலனுக்கும், இளம் குடும்பஸ்தரான மகனுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
அந்த வாய்த்தர்க்கம் முற்றியதால் ஆத்திரமடைந்த தாயின் கள்ளக் காதலன் அருகிலிருந்த கூரிய ஆயுதம் ஒன்றை எடுத்து குறித்த இளம் குடும்பஸ்தரான கள்ளக் காதலியின் மகனை கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி, உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மதுரங்குளி கரிக்கட்டைப் பகுதியைச் சேர்ந்த குறித்த இளம் குடும்பஸ்தர் கேகாலை – அலவ பிரதேசத்தில் திருமணம் முடித்துள்ளார்.
இந்த நிலையில் சுகயீனமடைந்துள்ள தனது தாயை பார்ப்பதற்காக கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் மதுரங்குளியிலுள்ள தனது தாயின் வீட்டுக்கு வருகை தந்துள்ள நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்திய முப்படை தூதுக்குழு-இராணுவத் தளபதி சந்திப்பு
இந்திய முப்படை தூதுக்குழு-இராணுவத் தளபதி சந்திப்பு
இராணுவத் தளபதி மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரியைச் சேர்ந்த இந்திய முப்படை தூதுக்குழுவினருக்கிடையில் சந்திப்பு
இந்திய இராணுவத் தளபதியின் விஜயத்தின் பின்னர் இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பினை தொடரும் பிரதிநிதி குழுவினர் ஐந்து நாள் விஜயத்தினை நோக்கமாக கொண்டு, 18 ஆம் திகதி காலை இலங்கை வந்தடைந்தனர்.
இலங்கைக்கு வருகை தந்த மேஜர் ஜெனரல் ஹரி பி பிள்ளை தலைமையிலான 18 பேர் கொண்ட குழுவினர், ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் நேரில் சந்தித்தனர்.
இராணுவத் தலைமையகத்திற்கு வருகை தந்த அக்குழுவினரை பயிற்சி பணிப்பாளர் பிரிகேடியர் கபில டோலகே மற்றும் நடவடிக்கை பணிப்பாளர் பிரிகேடியர் சாந்த ரணவீர ஆகியோர் நுழைவாயிலில் வைத்து வரவேற்றதுடன் அவர்களை இராணுவத் தளபதி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, மேஜர் ஜெனரல் ஹரி பி பிள்ளை தலைமையிலான பிரதிநிதிகள் குழுவை அன்புடன் வரவேற்று அவர்களுடன் உரையாடினார். குறித்த கலந்துரையாடலின் போது, இலங்கை மற்றும் இந்திய ஆயுதப் படைகளுக்கு இடையே பல ஆண்டுகளாகத் தொடரும் இராணுவ ஒத்துழைப்பு குறித்து பாராட்டினார்
இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, நட்புரீதியாக இடம்பெற்ற கலந்துரையாடலின் இறுதியில், இலங்கையில் நட்புறவை தொடரவிரும்பும் பிரதிநிதி தூது குழுவினர்களுக்கு சில நினைவுச்சின்னங்களை வழங்கினார். அதன்பிறகு, இராணுவத் தலைமையகத்தின் பொது பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரியங்கர பெர்னாண்டோ, இலங்கை இராணுவம் , அதன் வரலாறு மற்றும் அதன் தற்போதைய பணிகள் தொடர்பான விளக்கக்காட்சியை முன்வைத்தார். இந்த மாநாட்டில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, பிரதி பதவி நிலை பிரதானி சம்பத் கொடுவேகொட மற்றும் இலங்கை இராணுவ தொண்டர் படையின் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
வருகையின் நினைவுச் சின்னமாக அனைவரும் இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவுடன் ஒரு குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டனர். தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பயிற்சிகளை தொடரும் 18 பேர் கொண்ட தூதுக் குழுவில் அமெரிக்கா, ஈரான், வங்களதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் முப்படை அதிகாரிகள் உள்ளடங்குவதுடன் அவர்கள் ஒக்டோபர் 23 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பர்.
தூதுக்குழுவினர் புதன்கிழமை (20)ம் திகதி யாழ்ப்பாணத்தில் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டு, யாழ். பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்களை சந்திக்கவுள்ளதுடன் பலாலியில் அமைந்துள்ள இந்திய அமைதிகாக்கும் படை நினைவு தூபிக்கும் அஞ்சலி செலுத்தவுள்ளனர். அவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் போது அனுராதபுரம் மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
புலனாய்வு உத்தியோகத்தர்களை பிரதேச செயலகங்களுக்கு நியமிக்க கோரிக்கை
புலனாய்வு உத்தியோகத்தர்களை பிரதேச செயலகங்களுக்கு நியமிக்க கோரிக்கை
மாவட்டச் செயலகங்களில் இணைப்புச் செய்யப்பட்டிருக்கும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு விசாரணை உத்தியோகத்தர்களை மீளவும் பிரதேச செயலகங்களுக்கு நியமிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தென்கிழக்கு சமூக அபிவிருத்தி மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி, வர்த்தக, வாணிப அமைச்சர், பாவனையாளர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ஆகியோருக்கு கடிதங்களை அனுப்பி வைத்திருப்பதாக மன்றத்தின் செயலாளரும் இலங்கை கல்வி நிருவாக சேவையின் ஓய்வுநிலை கல்விப்
பணிப்பாளருமான ஏ.எல்.முகம்மது முக்தார், இன்று (20) தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
“2018ஆம் ஆண்டு, அமைச்சரவை, முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் மற்றும் திறைசேரி என்பவற்றின் அனுமதியுடன் பிரதேச செயலக மட்டத்தில் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்குடன், நாடளாவிய ரீதியில் சுமார் 200க்கு மேற்பட்ட புலனாய்வு விசாரணை உத்தியோகத்தர்கள், வர்த்தக அமைச்சால் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.
“இந்த நியமனம், நிபந்தனைகளுக்கு முரணான வகையில் திடீரென மாவட்டச் செயலகங்களுக்கு இணைப்புச் செய்யப்பட்டு, அங்கிருந்து கடமை செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்களது புலனாய்வுப் பணிகளை சுதந்திரமாக செய்ய முடியாத
நிலை உருவாகியுள்ளது.
“தற்போதைய கொவிட் பெருந்தொற்று அசாதாரண சூழ்நிலையில், வர்த்தகர்கள் தாம் நினைத்தவாறு பொருள்களின் விலையை அதிகரித்து விற்பனை செய்வதற்கும் கறுப்பு சந்தை, பதுக்கல் வியாபாரம்
என்பவற்றில் ஈடுபடுவதற்கும் பிரதான காரணம் யாதெனில், பிரதேச செயலக மட்டத்தில் பொறுப்புக்கூற வேண்டிய பாவனையாளர் அதிகார சபை அதிகாரிகள் இல்லாமல் போனமையேயாகும்.
“பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உத்தியோகத்தர்களின் நேரடி கண்காணிப்பு, பிரதேச மட்டத்தில் இருந்தால்தான் வணிகக் கொள்ளைகளைத் தடுக்க முடியும்.
“அதிகாரம் பரவலாக்கப்படுகின்ற இக்காலத்தில் பாவனையாளர் அதிகார சபையின் நிர்வாகம் மாத்திரம் அதிகார குவிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது பாவனையாளர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.
“இதேவேளை, இவ்வுத்தியோகத்தர்கள் பலர் இதுவரை சேவையில் நிரந்தரமாக்கப்படாமல் இருந்து வருவதுடன், அடிக்கடி இடமாற்றத்துக்கும் உட்பட்டு வருவதன் காரணமாக அதிகமான பாவனையாளர் பாதுகாப்பு அதிகாரிகள் தமது பதவிகளை விட்டுச் சென்றுள்ளனர் எனவும் தெரிய வருகிறது.
“ஆகையால், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அனைத்து புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படுவதுடன், அவர்களது சேவையை பிரதேச செயலக மட்டத்தில் முன்னெடுப்பதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறித்த கடிதங்களில் வலியுறுத்தியுள்ளோம்” என்றார்.
பேரூந்தில் இருந்து வீழ்ந்த பெண் – சாரதியை தாக்கிய மக்கள்
பேரூந்தில் இருந்து வீழ்ந்த பெண் – சாரதியை தாக்கிய மக்கள்
பதுளை – கொழும்பு பிரதான வீதியின் பண்டாரவெல, ஹல்பே பகுதியில் வைத்து பண்டாரவெலயில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றின் மிதி பலகையில் இருந்து பெண் ஒருவர் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் அருகில் இருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
பேருந்தில் இருந்து தனது சிறிய மகளை இறக்கி விட்டு குறித்த பெண் இறங்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் பேருந்து முன்னோக்கி சென்றுள்ளது.
இதன்போது குறித்த பெண் மிதி பலகையில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இதனைபடுத்து அங்கிருந்த சிலர் குறித்த பெண்ணை தூக்கிவிட்டு பேருந்து ஓட்டுனர் மீது தாக்கல் நடத்த முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெடுந்தீவில் தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படை மோதல் – ஒருவர் மரணம்
நெடுந்தீவில் தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படை மோதல் – ஒருவர் மரணம்
நெடுந்தீவுக்கும் கச்சத் தீவுக்கும் இடையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரின் படகு மோதியதில், இந்திய மீனவர்களின் படகு சேதமாக்கப்பட்டுள்ளது.
இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்து மீன் பிடித்துக் கொண்ட போது, இந்திய மீனவர்களின் படகை கடற்படையினர் தடுத்து நிறுத்த முற்பட்டபோது , இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் படகை தாக்க முற்பட்டுள்ளனர்.
இதன்போது கடற்படையினரின் ரோந்து கப்பல் முட்டியதில், இந்திய மீனவரின் படகு சேதமடைந்துள்ளது. இதில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த மீனவர்கள், தமிழ்நாடு – புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
நீரில் மூழ்கி காணாமல் போன மீனவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்
மகிந்த மகனுக்கும் சிறிதரனுக்கும் இடையில் சண்டை video
மகிந்த மகனுக்கும் சிறிதரனுக்கும் இடையில் சண்டை video
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எனக்கும், நாமல் ராஜபக்ஷவிற்கும் இடையில் வாதப்பிரதிவாதம்!
இன்றைய தினம் 09.10.2018 பாராளமன்றில் வரவுசெலவுத்திட்ட
குறைநிரப்பு விவாத வேளையில், தமக்கான நீதி வேண்டி உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில்
ஈடுபட்டுள்ள அரசியல்க் கைதிகளின் விடயங்களை அவையின் கவனத்துக்கு மீண்டும் ஒருமுறை கொண்டுவந்த போது.
அடித்து கொலை செய்ய பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு
அடித்து கொலை செய்ய பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் முள்ளிச்சேனை தோட்டம் ஒன்றின் வாடியில் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் சடலமாக இன்று (19) மீட்கப்பட்டடுள்ளதாகவும் இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் உயிரிழந்தவரின் நண்பன் ஒருவரை கைது செய்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
மரப்பாலம் முள்ளிச்சேனையைச் சேர்ந்த 56 வயதுடைய கிருஷ்ணபிள்ளை நேசராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரும் அவருடைய நண்பனும் சம்பவதினமான நேற்று (18) இரவு வீட்டிற்கு அருகாமையிலுள்ள தோட்டம் ஒன்றில் உள்ள வாடியில் மதுபானத்துடன் சென்று மது அருந்தியுள்ளனர்.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நண்பனை தாக்கியதாகவும் அதனையடுத்து தான் அங்கிருந்து தப்பி ஓடி காட்டில் ஒளிந்திருந்ததாகவும். யானை பயத்தினால் அங்கிருந்து இன்று காலையில் வெளியேறி நண்பனின் வீட்டிற்கு சென்று நண்பனை அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவித்து அவர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை பார்த்ததாக கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு தடவியல் பிரிவினர் மற்றும் மேப்ப நாய் கொண்டுவரப்பட்டு தீவிர விசாரணையினை பொலிசார் முன்னெடுத்துவருகின்றதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் நாள்தோறும் 25 சிறுவர்கள் கற்பழிப்பு
இலங்கையில் நாள்தோறும் 25 சிறுவர்கள் கற்பழிப்பு
நாளாந்தம் 25 சிறுவர்கள் பல்வேறு வகையான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இந்த துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்ற சிறுவர்களில், சுமார் 21 வீதமானோர் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பேருவளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், “இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலும், 180 நாட்களில் (6 மாதங்களினுள்) சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 4,743 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த முறைப்பாடுகளின் எண்ணிக்கையை 180 ஆல் வகுக்கும்போது, நாளொன்றிற்கு 25 க்கும் மேற்பட்ட
சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர். அதாவது, ஒரு மணித்தியாலத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர். இந்த குற்றச்சாட்டுகளில் பாதிக்கின்ற சிறுவர்களை வயதுக்கு ஏற்ப பிரிந்தால், 21%மானோர் 5
வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகள், 17% மானோர் 5 முதல் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் , 38% வீதமானோர் 11 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் . 75 வீதமானோர் 15 வயதிற்குட்பட்டவர்களாகவும் பதிவாகியுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 13 வீதமானோரின் பிரதிவாதியாக தந்தை அடுத்ததாக தாய் மற்றும் மதகுருமார்கள் இருக்கின்றனர்” என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, நாளாந்தம் சுமார் 6 சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகின்றார்கள் என்று சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தெரிவித்தார்.
காதலர்கள் சடலம் காட்டுக்குள் இருந்து மீட்பு
காதலர்கள் சடலம் காட்டுக்குள் இருந்து மீட்பு
வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்றுவதற்காக கட்டப்பட்டிருந்த அனுமதியற்ற மின்சார வேலியில் சிக்கி இளைஞன் ஒருவனும் யுவதி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இன்று (17) முற்பகல் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
26 வயதுடைய இளைஞன் ஒருவரும் 17 வயதுடைய யுவதி ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த யுவதியின் வீட்டிற்கு அருகில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சமூக வலைத்தளத்தில் பழக்கமான குறித்த யுவதியை காண திக்வெல்ல பிரதேசத்தில் இருந்து குறித்த இளைஞன் வந்துள்ளான்.
பின்னர் யுவதியின் வீட்டிற்கு அருகில் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை யுவதியின் வீட்டார் கண்டுள்ளனர்.
இதன்போது, குறித்த இருவரும் வீட்டிற்கு அருகில் சுமார் 500 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள கருவாப்பட்டை தோட்டத்தை நோக்கி ஓடியுள்ள நிலையில் இவ்வாறு மின்சார வேலியில் சிக்கியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் எம்பிலிப்பிட்டிய குற்றவியல் பிரிவு மற்றும் கொலொன்ன பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையின் மூன்றாவது தூபியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
இலங்கையின் மூன்றாவது தூபியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
தீகவாபி ரஜமஹா விஹாரையில் நிர்மாணிக்கப்படவுள்ள பக்தர்களின் ஓய்வு மண்டப அறைக்கான அடிக்கல் ஒக்டோபர், 15 சுபவேளையில் பௌத்த சமய ஆராதணைகளின் பின்னர் பாதுகாப்பு செயலாளரும், தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க
அமைச்சின் செயலாளரும், கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் பாரம்பரியங்களை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான ஜெனரல் கமல் குணரத்னவினால் (ஓய்வு) நட்டப்பட்டது.
உத்தேச திட்டத்தில் உள்ளடக்கப்பட்டவாறு மரங்களால் சூழப்பட்ட இரம்யமான சூழலைக் கொண்ட பக்தர்களுக்கான ஓய்வு மண்டபம் (விஷ்ராம ஷாலா) இலங்கை கடற்படையின் தொழில்நுட்ப நிபுணத்துவத்துவம் மற்றும் ஆளணியைக் கொண்டு 2022ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்குள் பூர்த்திசெய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின்போது, தூபி வளாகத்தில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அன்னதானசாலை, தாமரை பொய்கை, புனித தந்ததாது மனை, மர நடுகை மற்றும் நிலப்பயன்பாடு என்பன தொடர்பாகவும் பாதுகாப்பு செயலாளர் கேட்டறிந்து கொண்டார்.
துரித கதியில் இடம்பெற்றுவரும் நிர்மாணப்பணிகள் காரணமாக தூபி கட்டுமானம் இன்று வரை மூன்றாவது அடித்தள சுற்றுவட்டத்தை அண்மித்து சுமார் 17 அடி உயரத்தை எட்டியுள்ளது
இதன்போது ஊடகங்களுக்கு பதிலளித்த ஜெனரல் குணரத்ன, வரலாற்று சிறப்புமிக்க இந்த தூபியின் முன்னைய மகிமை இன்னும் 18 மாதங்களுக்குள் மீட்டெடுக்கப்படும் என்று உறுதியளித்த
அதேவேளை, பண்டைய அரசர்களால் ஸ்தூபியை புதுப்பிக்க அவ்வப்போது தொடங்கப்பட்ட பல முயற்சிகளை நினைவுகூர்ந்தார். இந்த தூபி வழக்கத்தில் மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள அனைத்தும் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
” வரலாற்று சிறப்பு மிக்க இந்த தூபியின் நிர்மாணப்பணிகள் நிறைவு பூர்த்தியானத்தின் பின்னர் , 275 அடி உயரம் கொண்ட நாட்டின் மூன்றாவது பெரிய தூபியாக காட்சியளிக்கும் ” என்று அவர் மேலும் கூறினார்.
அத்தோடு தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் ‘சந்தஹிரு சேய’ தூபியின் நிர்மாணப்பணிகள் நிறைவு செய்யப்பட பின்னர் இதற்காக பயன்படுத்தப்பட்ட ஆளணி மற்றும் உபகரணங்கள் என்பன தீகவாபி தூபியின் புனர்நிர்மாணப்பணிகளுக்காக ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தூபியின் நிர்மாணப்பணிகளை முடிவுக்குக் கொண்டு வருவதுடன், கற்களைக்கொண்டமைந்த நடைபாதை வளாகத்தை (சலபதல மலுவ) நிறைவு செய்வதற்கான திட்டங்களும் முன்னெடுக்கபடவுள்ளன என்றும் ஜெனரல் குணரத்ன கூறினார்.
தீகவாபி தூபியின் புனரமைப்பு பணிகள், இலங்கையிலும் வெளிநாட்டிலும் உள்ள புரவலர்கள் மற்றும் பக்தர்களின் பங்களிப்புடன் தீகவாபிய அருண நிதியத்தின் முன்னெடுக்கப்படவுள்ளதால் இதற்காக அரச நிதி எதுவும் பயன்படுத்தப் படமாட்டாது.
தீகவாபி ரஜமஹா விஹாரையின் பிரதம விஹாராதிபதி மகாஓய சோபித தேரரின் வழிகாட்டுதல்களுடன் தீகவாபி தூபியின் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவருகின்றன.
‘தீகவாபி தூபி’ புனரமைப்பு திட்டத்திற்கு, நாட்டின் பிரதமரும், புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சருமான கௌரவ மஹிந்த ராஜபக்ஷவினால் 2020 நவம்பர் 11ம் திகதி மங்களகரமான முறையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிகழ்வில், தீகவாபி விகாரையின் பிரதம விகாராதிபதி மகாஓய சோபித தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர்கள், புத்த சாசன, மத, கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதி செயலணி உறுப்பினர் பேராசிரியர் கபில குணவர்தன, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டீஎம்எல் பண்டாரநாயக்க, சிவில் பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் லமா ஹேவகே (ஓய்வு), தொல்பொருள் திணைக்களத்தில் தொல்பொருளியல் சிரேஷ்ட பேராசிரியர் அனுர மனதுங்க, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார பிராந்திய முப்படை அதிகாரிகள், கட்டிடக் கலைஞர்கள், தொல்பொருளியலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டன
துப்பாக்கிகளை தயாரித்த ஒருவர் கைது
துப்பாக்கிகளை தயாரித்த ஒருவர் கைது
திஸ்ஸமஹராம, காவன்திஸ்ஸபுர பகுதியில் சட்ட விரோதமான முறையில் துப்பாக்கிகளை தயாரித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து 5 துப்பாக்கிகள் மற்றும் இதர பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த துப்பாக்கிகளை தயாரிக்கும் நிலையத்தில் இருந்து துப்பாக்கிகள் இரண்டு, துப்பாக்கி தயாரிக்கும் இயந்திரங்கள் இரண்டு மற்றும் மேலும் பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபரிடம் இருந்து துப்பாக்கிகளை கொள்வனவு செய்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் டொலர் கடன் பெறும் அரசாங்கம்
இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் டொலர் கடன் பெறும் அரசாங்கம்
எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக, இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் டொலர்களை
கடனாகப் பெற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருங்கிய உறவு, குறிப்பாக பெற்றோல் மற்றும்
டீசல் இறக்குமதிக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஒருங்கிணைப்பு மூலம், இந்த கடன் பெறப்படுவதாகவும், அந்த அதிகாரி கூறினார்.
இலங்கையில் ரசியாவின் நீர்மூழ்கி கப்பல்
இலங்கையில் ரசியாவின் நீர்மூழ்கி கப்பல்
இலங்கை கொழும்பு துறைமுகத்தில் ரசியாவின் இரண்டு நீர்மூழ்கி கப்பல் மற்றும் ,ஒரு யுத்த கப்பல் என்பன வந்தடைந்துள்ளன
நாடுகளுக்கு இடையிலான கடற்படை பாதுகாப்பு மற்றும் போர் ஒத்திகையில் ஈடுபடவே மேற்படி கப்பல்கள் வந்தடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
சிங்கள போலீசாரை வெட்டிய மர்ம நபர்
சிங்கள போலீசாரை வெட்டிய மர்ம நபர்
இலங்கையில் சிங்கள காவல்துறை சிப்பாய்கள் இருவரை மர்ம நபர் ஒருவர் சரமாரியாக
வெட்டியுள்ளார் ,இவரது இந்த வெட்டு தாக்குதலில் சிக்கி படுக்கையமடைந்த இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மேற்படி குற்ற செயலை புரிந்த அப்பர் தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
கோர விபத்து -சிதறிய வாகனங்கள் – மக்கள் அவதி
கோர விபத்து -சிதறிய வாகனங்கள் – மக்கள் அவதி
மீகஹவத்த தெல்கொட பகுதியில் சாரதியின் கவனயீனம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று நான்கு வாகனங்கள் மீது மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
குறித்த கார் நிர்மாணப்பணியில் இருக்கும் பாலம் ஒன்றில் இருந்த பீப்பாய் ஒன்றில் மோதிய பின்னர் முன்னால் வந்த இரண்டு முச்சக்கரவண்டிகளிலும், மோட்டார் சைக்கிள் ஒன்றிலும் மற்றும் லொறி ஒன்றிலும் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில், முச்சக்கரவண்டி ஒன்றின் சாரதி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆகியோர் படுகாயம் அடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் ஹோமாகம மற்றும் கம்பஹா பிரதேசங்களை சேர்ந்த 31 வயது மற்றும் 38 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மனைவியை உயிரோடு எரித்த கணவன்
மனைவியை உயிரோடு எரித்த கணவன் – வவுனியாவில் நடந்த பயங்கரம்
வவுனியா பூவரம் குளத்தில் 43 வயதுடைய மனைவியை கணவன் அடித்துள்ளார் ,அவ்வேளை அவர் மயங்கி வீழ்ந்துள்ளார்
அதன் பின்னர் தீ வைத்து எரித்துளளார்
பலத்த தீ காயங்களுக்கு உள்ளான நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்
தப்பி ஓடிய கணவன் கைது செய்ய பட்டு விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளார்
இவ்வாறான சம்பவங்கள் இலங்கையில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
கிளிநொச்சியில் கவிழ்ந்த லொறி – போக்குவரத்து பாதிப்பு
கிளிநொச்சியில் கவிழ்ந்த லொறி – போக்குவரத்து பாதிப்பு
கிளிநொச்சி டிப்போ சந்தியில் வேகமாக பயணித்த கனரக வாகனம் ஒன்று திடீரென கவிழ்ந்தது
இதனால் அவ்வழி போக்குவரத்து பாதிக்க பட்டுள்ளது
மேலும் வண்டி பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது
கைக்குண்டுடன் பெண் ஒருவர் கைது
கைக்குண்டுடன் பெண் ஒருவர் கைது
மீகஹவத்த, தெல்கொட பகுதியில் உள்ள வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் வௌிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீகஹவத்த பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (13) காலை குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
குண்டசாலை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மீகஹவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











