ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு
ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு ஜனவரி மாதப் போராட்டங்களில் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை நிறைவேற்றியது.
ஜனவரியில் நடந்த அரசாங்க எதிர்ப்பு
ஜனவரியில் நடந்த அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களின் போது சங்கிலி அறுக்கும் இயந்திரத்தை (செயின்சா) எடுத்துச் சென்றதாகக் குற்றம்
சாட்டப்பட்டு, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் முகவராகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் ஞாயிற்றுக்கிழமை மரணதண்டனை நிறைவேற்றியது.
கடந்த ஆண்டு இறுதியில் வெடித்த நாடு தழுவிய பேரணிகளில் “விரோதக் குழுக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதற்காக” மஜித் அடினே குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதாக நீதித்துறை கூறியது.
“நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு எதிரான குற்றங்களைச் செய்யும் நோக்கத்துடன் வேண்டுமென்றே தீவைத்தல், ஒன்றுகூடுதல் மற்றும் கூட்டுச்
சதி செய்தல்” ஆகிய குற்றச்சாட்டுகள்
சதி செய்தல்” ஆகிய குற்றச்சாட்டுகள் அடினே மீது சுமத்தப்பட்டதாக நீதித்துறையின் மிசான் ஆன்லைன் இணையதளம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“இந்த வழக்கில் உள்ள ஏராளமான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் மற்றும் பிரதிவாதியின் வாக்குமூலங்களின் அடிப்படையில், கராஜ் புரட்சிகர
நீதிமன்றம் அவருக்கு மரணதண்டனை விதித்து, அவரது சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டது.”
அடினே செய்த மேல்முறையீடு தோல்வியடைந்ததை அடுத்து, உச்ச நீதிமன்றம் தீர்ப்பை உறுதிசெய்தது. அதைத் தொடர்ந்து,
ஞாயிற்றுக்கிழமை காலை அவரது மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக மிசான் கூறியது. (செய்தி: ஏ.எஃப்.பி)







