நாங்களே வெல்வோம் கயேந்திரகுமார்
Posted in இலங்கை செய்திகள்

நாங்களே வெல்வோம் கயேந்திரகுமார்

நாங்களே வெல்வோம் கயேந்திரகுமார்

நாங்களே வெல்வோம் கயேந்திரகுமார் ,யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெறுமனே 24 சதவீத வாக்குகளை வைத்துக்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் மக்கள்

நிராகரித்ததாக அநுர அரசு கணக்குப் பார்க்கின்றது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற

ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்.

பாரம்பரிய தமிழ்க் கட்சிகளைத் தமிழ் மக்கள் புறக்கணித்து தேசிய மக்கள் சக்திக்கு ஆணையை வழங்கியுள்ளனர் என்று கூறும் ஜனாதிபதி அநுரகுமார அந்த மக்கள் ஆணையை வைத்து தையிட்டி விகாரைப் பிரச்சினையைத்

தீர்த்திருக்கலாமே? யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெறுமனே 24 சதவீத வாக்குகளை மட்டுமே தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்டது.

76 சதவீதமான வாக்குகள் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக வழங்கப்பட்டிருக்கின்றன. 24 சதவீத வாக்குகளை வைத்துக்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும்

மக்கள் நிராகரித்ததாக அரசு கணக்குப் பார்க்கின்றது எனில் நாட்டின் பொருளாதாரக் கணக்கு எவ்வாறு அமையப் போகின்றது என்பதை மக்கள் யோசிக்க வேண்டும் என்றார்

தந்தை செலுத்திய டிப்பர் மோதி குழந்தை உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

தந்தை செலுத்திய டிப்பர் மோதி குழந்தை உயிரிழப்பு

தந்தை செலுத்திய டிப்பர் மோதி குழந்தை உயிரிழப்பு

தந்தை செலுத்திய டிப்பர் மோதி குழந்தை உயிரிழப்பு ,வீட்டில் நின்ற டிப்பர் வாகனத்தைத் தந்தை செலுத்திய போது அதன் சில்லுக்குள் அகப்பட்டு ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில், வி. டர்சிகா என்ற பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது.

டிப்பர் வாகனத்தின் பின்புறம் குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது, அதனைக் கவனிக்காத தந்தை, டிப்பரைப் பின்னோக்கி நகர்த்தியுள்ளார். இதன்போது டிப்பர் சில்லுக்குள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்துள்ளது.

கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இலங்கையில் மூடப்படும் 100 பாடசாலைகள்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் மூடப்படும் 100 பாடசாலைகள்

இலங்கையில் மூடப்படும் 100 பாடசாலைகள்

இலங்கையில் மூடப்படும் 100 பாடசாலைகள் ,மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ள 100 சிறிய பாடசாலைகளை மூடுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கை இப்போது 500ஐ தாண்டிவிட்டது.

அவற்றில், அதிக எண்ணிக்கையிலான பாடசாலைகளில் இரண்டு அல்லது மூன்று மாணவர்கள் மட்டுமே உள்ளனர்.

இவ்வாறான பாடசாலைகளை மூடி, அந்த மாணவர்களை வசதிகள் உள்ள பாடசாலைகளில் சேர்ப்பதற்கான முறையான திட்டத்தைத் தொடங்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள பல சிறிய பாடசாலைகள் மூடப்பட்டு, அவற்றின் மாணவர்கள் தற்போது வேறு பாடசாலைகளை அனுப்பப்படுகிறார்கள். மூன்று கிலோமீட்டருக்குள் ஒரு பாடசாலை என்ற கருத்தை மனதில் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது

கழுத்து அறுக்கப்பட்ட பெண் கொலை
Posted in இலங்கை செய்திகள்

கழுத்து அறுக்கப்பட்ட பெண் கொலை

கழுத்து அறுக்கப்பட்ட பெண் கொலை

கழுத்து அறுக்கப்பட்ட பெண் கொலை ,மத்துகம, தொலஹேன பகுதியில் நேற்று (18) பகல் 33 வயதுடைய பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மர்வின் சமரநாயக்க மாவத்தை, அங்கலவத்தை பகுதியைச் சேர்ந்தவர் குறித்த பெண்ணின் உடலில் பல வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

காதல் உறவு தொடர்பான தகராறு காரணமாக இந்தப் படுகொலை இடம்பெற்றுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன்படி, சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மேலும் உயிரிழந்த பெண்ணின் சடலம் நீதவான் விசாரணையின் பின்னர் நாகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரை கைது செய்ய மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

ரயிலில் மோதி ரயில் கடவை மேற்பார்வையாளர் பலி
Posted in இலங்கை செய்திகள்

ரயிலில் மோதி ரயில் கடவை மேற்பார்வையாளர் பலி

ரயிலில் மோதி ரயில் கடவை மேற்பார்வையாளர் பலி

ரயிலில் மோதி ரயில் கடவை மேற்பார்வையாளர் பலி ,கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயில் மோதியதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து, இன்று சனிக்கிழமை (19) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக, பட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர்.

தியத்தலாவ பகுதியைச் சோர்ந்த 26 வயதுடைய சம்பத் சல்காடு என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயிலில் பெரகும்புர – அம்பெவெல ரயில் நிலையங்களுக்கு இடையில், அதிகாலை 4:15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் ரயில் நிலையத்தில் ரயில் கடவை மேற்பார்வையாளராக பணி புரிந்து வருவதாகவும் ரயில் செல்லும் போது அவர் தண்டவாளத்தில் படுத்து உறங்கியதாகவும், விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் அதே ரயிலில் ஏற்றி அம்பெவெல ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

பிள்ளையானின் சாரதி அதிரடியாக கைது
Posted in இலங்கை செய்திகள்

பிள்ளையானின் சாரதி அதிரடியாக கைது

பிள்ளையானின் சாரதி அதிரடியாக கைது

பிள்ளையானின் சாரதி அதிரடியாக கைது முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை

தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பிலேயே பிள்ளையானின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிள்ளையானின் பலநூறு கோடி சொத்துக்களின் விபரங்கள் இதோ
Posted in இலங்கை செய்திகள்

பிள்ளையானின் பலநூறு கோடி சொத்துக்களின் விபரங்கள் இதோ

பிள்ளையானின் பலநூறு கோடி சொத்துக்களின் விபரங்கள் இதோ

பிள்ளையானின் பலநூறு கோடி சொத்துக்களின் விபரங்கள் இதோ ,பிள்ளையானின் பலநூறு கோடி மதிப்புள்ள சொத்துக்களின் விபரங்கள் இதோ..!


மனித உரிமை பாதுகாவலர் அமைப்புக்களான Amnesty International, Human Right Watch ஆகியன UNHRC ஊடாக இலங்கை அரசு முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கொலைகள் மற்றும்

சொத்துக்குவிப்பு ஆகியவற்றை ஆராய்ந்து விசாரிக்க உடனடியாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்கும் வண்ணம் வலியுறுத்தியுள்ளனர்.


அறிக்கையில் பின்வரும் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
சொத்துக்கள்:-
இலங்கையில் உள்ள சொத்துக்கள்.

  1. வீடு – 01, மட்டக்களப்பு பூம்புகார் என்ற இடத்தில் இந்த வீடு அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 2 கோடி.
  2. வீடு – 02, கொழும்பு இராஜகிரிய என்னும் இடத்தில் றோயல் அப்பார்ட்மென்டில் அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 6.5 கோடி.
  3. வீடு – 03, கொழும்பு கறுவாத்தோட்டம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 23 கோடி.
  4. வீடு – 04, மட்டக்களப்பு வாவிக்கரை வீதி – 01 என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 12 கோடி.
  5. சுற்றுலாவிடுதி – 01, திருகோணமலை உப்புவெளி என்ற இடத்தில் இந்த சுற்றுலாவிடுதி அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 5 கோடி.
  6. சுற்றுலாவிடுதி – 02, நுவரெலியா, நுவரெலியா நகர் என்ற இடத்தில் இந்த சுற்றுலாவிடுதி அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 17 கோடி.
  7. 12 ஏக்கர் நிலம், மட்டக்களப்பு பாசிக்குடா என்ற இடத்தில் இந்த 12ஏக்கர் நிலம் காணப்படுகிறது. இதன் பெறுமதி: 25 கோடி.
  8. 50 ஏக்கர் நிலம், திருகோணமலை, கும்புறுப்பிட்டி என்ற இடத்தில் காணப்படுகிறது. இதன் பெறுமதி: 20 கோடி.
  9. நிலத்தொகுதி, மட்டக்களப்பு திராய்மடு என்னும் இடத்தில் இந்த நிலத்தொகுதி காணப்படுகிறது. இதன் பெறுமதி: மதிப்பீடு செய்யப்படவில்லை.
  10. 115ஏக்கர் வயற்காணி, மட்டக்களப்பு புளுட்டுமானோடை என்ற இடத்தில் இந்த வயற்காணி அமைந்துள்ளது. இதன் பெறுமதி: மதிப்பீடு செய்யப்படவில்லை.
  11. 10ஏக்கர் நிலம், மட்டக்களப்பு மாங்கேணி என்ற இடத்தில் இந்த நிலம் அமைந்துள்ளது. இதன் பெறுமதி: மதிப்பீடு செய்யப்படவில்லை.
  12. ஆழ்கடல் மீன்பிடி இழுவைப்படகுகள் 12, கொழும்பு டிக்கோவிட்ட என்னும் இடத்தில் இந்த இழுவைப்படகுகள் காணப்படுகின்றன. இதன் பெறுமதி: 20 கோடி.
    வெளிநாட்டு சொத்துக்கள்:-
  13. சிங்கப்பூர் Orchard Road இல் அமைந்துள்ள Alfred Tower என்ற இடத்தில் இருக்கும் தொடர்மாடி குடியிருப்பில் வீடு – 01. இதன் பெறுமதி: 7.5 கோடி.
  14. நகைக்கடையும் கட்டடமும், சுவிட்சர்லாந்து சூரிச் என்ற இடத்தில் இந்த நகைக்கடையும் கட்டடமும் காணப்படுகிறது. இதன் பெறுமதி: 150 கோடி.
  15. வெளிநாட்டு வங்கிகளிலுள்ள மொத்த பணத்தொகை 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.
அனுரா சஜித் மோதல்
Posted in இலங்கை செய்திகள்

அனுரா சஜித் மோதல்

அனுரா சஜித் மோதல்

அனுரா சஜித் மோதல் ,உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது, எந்தக் கட்சி அவற்றைக் கட்டுப்படுத்துகிறது என்பதைப் பொறுத்தது என்ற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் சமீபத்திய கருத்துக்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக விமர்சித்துள்ளார்.

இன்று முன்னதாக ஜனாதிபதி, “நிதி ஒதுக்குவதற்கு முன், யார் திட்டத்தை அனுப்புகிறார்கள் என்பதை விசாரிக்க வேண்டும். மன்னார் நகர சபை தேசிய மக்கள் சக்தியுடன் இருந்தால், நாங்கள் கண்களை மூடிக்கொண்டு நிதியை

ஒதுக்குவோம். இருப்பினும், அது வேறொரு கட்சியுடன் இருந்தால், நாங்கள் திட்டத்தை குறைந்தது 10 முறையாவது படிக்க வேண்டும். ஏனென்றால் அந்த நபர்கள் மீது எங்களுக்கு உறுதியான நம்பிக்கை இல்லை” என்று கூறினார்.

பிரேமதாச இந்தக் கருத்தைக் கண்டித்து, இது பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் மற்றொரு முயற்சி என்றும், இதுபோன்ற “மலிவான அரசியல் தந்திரங்களுக்கு” எதிர்காலம் இல்லை என்றும் கூறினார்.

“இந்த வகையான அரசியல் குறுகிய காலம் மட்டுமே நீடிக்கும். NPP இன் கட்டுப்பாட்டில் இல்லாத சபைகளுக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படாது என்று கூறி

ஜனாதிபதி மக்களை முட்டாளாக்க முயற்சிக்கிறார், இதுபோன்ற அற்பமான அரசியல் மிரட்டல்களால் சோர்வடைய வேண்டாம்.

ஜனாதிபதி என்பவர் இன,மத பேதங்களைக் கடந்து சேவையாற்ற வேண்டும். மக்களில் எத்தனை பேர் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் எத்தனை பேர்

ஐக்கிய மக்கள் சக்தியினர் என்று பாரபட்சம் பார்த்து கடமையாற்றக் கூடாது” என்று அவர் கூறினார்.

பாடசாலை முன்னால் துப்பாக்கிச் சூடு
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை முன்னால் துப்பாக்கிச் சூடு

பாடசாலை முன்னால் துப்பாக்கிச் சூடு

பாடசாலை முன்னால் துப்பாக்கிச் சூடு ,அஹுங்கல்லவில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னால் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு, முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

லக்ஷான் மதுஷங்க என்ற 28 வயதான இளைஞர் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன் அவரின் இடுப்புப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு பிஸ்டல் ரக துப்பாக்கியால் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வரணியில் நீரில்மூழ்கி ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

வரணியில் நீரில்மூழ்கி ஒருவர் பலி

வரணியில் நீரில்மூழ்கி ஒருவர் பலி

வரணியில் நீரில்மூழ்கி ஒருவர் பலி ,யாழ். வரணி சிட்டிவேரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் நீராடிய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

தவசிக்குளம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த சிவராசு சிலுசன் (வயது 23) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை (17) புதுவருட கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சுமார் எட்டுப் பேர் அடங்கிய நண்பர்கள் சிட்டிவேரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் நீராடிய போது குறித்த இளைஞர் தாமரைக் கொடியில் சிக்குண்ட நிலையில்

மீட்கப்பட்டு வரணி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் மரண விசாரணைக்காகவும் பிரேத பரிசோதனைக்காகவும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

மோட்டார் சைக்கிள் எரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிள் எரிப்பு

மோட்டார் சைக்கிள் எரிப்பு

மோட்டார் சைக்கிள் எரிப்பு ,இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக 7 லட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் தீக்கிரையாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்று (17) மாலை 6 மணிக்கு ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை பகுதியில் உள்ள சுரங்கத்தை அன்டிய பகுதியில் இடம் பெற்றுள்ளது.

இது குறித்து திம்புள்ள பத்தனை பொலிஸார் கருத்து தெரிவிக்கையில், இருவருக்கு இடையே ஏற்பட்ட வாய் தர்க்கம் சண்டையில் முடிந்து இருவரும் படுகாயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றனர்

ஆயுதங்கள் மீட்பு நபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஆயுதங்கள் மீட்பு நபர் கைது

ஆயுதங்கள் மீட்பு நபர் கைது

ஆயுதங்கள் மீட்பு நபர் கைது ,பொலிஸ் காவலில் உள்ள சந்தேகநபர் தெரிவித்த தகவலின்படி, T56 துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் 50 தோட்டாக்களையும், ஒரு கூர்மையான ஆயுதத்தையும் அதுருகிரிய பொலிஸார் மீட்டுள்ளனர்.

கடந்த 12 ஆம் திகதி அதுருகிரிய பொலிஸ் அதிகாரிகள் குழுவால் குறித்த சந்தேகநபர் 11 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

பின்னர் சந்தேகநபர் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கப்பட்ட போது இந்த வெடிமருந்துகள் மற்றும் கூர்மையான ஆயுதங்கள் நேற்று (17) மீட்கப்பட்டன.

சந்தேக நபர் அதுருகிரிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அதுருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

பணம் நகைகளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
Posted in இலங்கை செய்திகள்

பணம் நகைகளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

பணம் நகைகளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

பணம் நகைகளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது ,தெவுந்தர – ஹும்மன வீதியில் மூன்றரை கோடி ரூபாய் பணம் மற்றும் தங்க வளையல்கள், காதணிகள் உட்பட 150 கிராம் தங்கம் என்பவற்றுடன் மேல் மாகாண பொலிஸ்

புலனாய்வுத் தலைமையகத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் மேலும் ஐவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்கிடமான வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யும் போது வாகனத்தின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

தெவுந்தர பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள், ஹும்மான வீதியில் வேகமாகச் சென்ற வாகனத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.

இந்த சோதனையின் போது, சந்தேகத்திற்குரிய ஐந்து பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் பணம் மற்றும் தங்க ஆபரணங்களுடன் கைது செய்யப்பட்டனர்.

மேல் மாகாண புலனாய்வுத் தலைமையகத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே காரை ஓட்டிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விசாரணையின் போது பொலிஸ் உத்தியோகத்தர் வழங்கிய வாக்குமூலங்களில் முரண்பாடுகள் காணப்படுவதாக விசேட அதிரடிப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் விற்பனையில் கிடைத்த பணத்தை பகிர இவர்கள் எடுத்துச் சென்றார்களா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

அர்ச்சுனா செய்த மோசடி அடித்து விட்ட பெண் வேட்பாளர்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா செய்த மோசடி அடித்து விட்ட பெண் வேட்பாளர்

அர்ச்சுனா செய்த மோசடி அடித்து விட்ட பெண் வேட்பாளர்

அர்ச்சுனா செய்த மோசடி அடித்து விட்ட பெண் வேட்பாளர் ,பல விடயங்களை வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் வருகை தந்து தெரிவித்தார் .

அர்ச்சுனா இராமநாதன் வழிநடத்தும் ஊசி கட்சியில் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட்ட வனேஸ்வரி தம்மிடம் பணம் வணங்கி விட்டு அர்ச்சுனா ஏமாற்றிய விடயங்கள் தொடர்பாக பகிரங்க படுத்தினார் .

தங்களை நம்ப வைத்து அர்ச்சுனா ஏமாற்றி விட்டார் என வனேஸ்வரி தெரிவித்தார் .

தேர்தலில் போட்டியிடும் நோக்கமே அர்ச்சுனா இராமநாதனுக்கு இல்லை எனவும் ,அவர் திட்டமிட்டு மக்களை அவதூறு செய்து ஏமாற்றி வருவதாக அவர் குற்றம் சுமத்தினார் .

தேர்தல் சட்டங்களை மீறும் அறிக்கைகள் வேண்டாம்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் சட்டங்களை மீறும் அறிக்கைகள் வேண்டாம்

தேர்தல் சட்டங்களை மீறும் அறிக்கைகள் வேண்டாம்

தேர்தல் சட்டங்களை மீறும் அறிக்கைகள் வேண்டாம் ,தேர்தல் சட்டங்களை மீறும் அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு தேர்தல் ஆணைக்குழு, ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அளித்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து ஆணைக்குழு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அரசு அதிகாரங்கள் இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை வழங்க மாட்டேன் என்று அரசியல் மேடைகளில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறியதாக இந்த அமைப்புகள் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளன.

வாகன விபத்தில் தாய் பலி
Posted in இலங்கை செய்திகள்

வாகன விபத்தில் தாய் பலி

வாகன விபத்தில் தாய் பலி

வாகன விபத்தில் தாய் பலி ,ஒரு பாறையில் இருந்து சுமார் 100 அடி பள்ளத்தில் வாகனம் விழுந்ததில், ஒரு குழந்தையின் தாயான, 28 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், காலி, யக்கலமுல்ல, கராகொட பகுதியில் புதன்கிழமை (16) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யக்கலமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

ஓர் அங்கவீனமான சிப்பாய் காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார், அது ஒரு பாறையிலிருந்து சுமார் 100 மீட்டர் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

காயமடைந்தவர்களில் ஓட்டுநர், கொல்லப்பட்ட பெண்ணின் தாயும், பாலர் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளையும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கலமுல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

400 000 குடும்பங்களுக்கு அஸ்வெசும ஜனாதிபதி
Posted in இலங்கை செய்திகள்

400 000 குடும்பங்களுக்கு அஸ்வெசும ஜனாதிபதி

400 000 குடும்பங்களுக்கு அஸ்வெசும ஜனாதிபதி

400 000 குடும்பங்களுக்கு அஸ்வெசும ஜனாதிபதி எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும நன்மையை வழங்க

அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

வடக்கில் நடந்த போர் காரணமாக, மக்களின் நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்த வேண்டியிருந்தது என்றும், சில வீதிகள் மூடப்பட வேண்டியிருந்தது என்றும் கூறிய ஜனாதிபதி, தேசிய மக்கள் சக்தி இந்தப்

பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து, மக்கள் தங்கள் பணிகளைச் சுதந்திரமாகச் செய்யக்கூடிய ஒரு நாட்டை உருவாக்கும் என்றும் கூறினார்

புத்தாண்டு 3 நாட்களில் 18 பேர் பலி
Posted in இலங்கை செய்திகள்

புத்தாண்டு 3 நாட்களில் 18 பேர் பலி

புத்தாண்டு 3 நாட்களில் 18 பேர் பலி

புத்தாண்டு 3 நாட்களில் 18 பேர் பலி ,2025 புத்தாண்டு கொண்டாட்டத்தின் மூன்று நாட்களில் (13, 14 மற்றும் 15) ஆம் திகதிகளில் வீதி விபத்துகள், கொலைகள் மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தெஹியத்தகண்டிய, ஹல்தும்முல்ல, பதவிய, குச்சவெளி, காத்தான்குடி, பானம, மன்னம்பிட்டிய, பலாங்கொடை, சிலாவத்துறை, ஈச்சலம்பற்று,

கொஸ்கம, அஹங்கம, தம்புள்ளை, நாரம்மல, அத்துருகிரிய, ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்தச் சம்பவங்கள் பதிவாகி வருவதாகவும் அந்தப் பிரிவு குறிப்பிடுகிறது.

தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரகஸ்வெவவில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர், கிராந்துருகோட்டையில் வசிக்கும், மாநில புலனாய்வு சேவை தலைமையகத்தில் இணைக்கப்பட்ட 29 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார்.

இறந்த கான்ஸ்டபிள் பல நண்பர்களுடன் நீந்திக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி இறந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரணவராவ சந்தியில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் கடந்த 14 ஆம் தேதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

உயிரிழந்தவர் வெல்லவாய, ரன்தெனிய பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் ஆவார்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், இறந்தவருக்கும் மற்றொரு நபருக்கும் இடையே இருந்த பழைய தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

மனம்பிட்டிய, திம்புலாகல பகுதியில் வீதியோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் இறந்தவர் மஹௌல்பதாவின் காஷ்யபபுராவைச் சேர்ந்த 81 வயது பெண்மணி ஆவார்.

பலாங்கொடை, ருக்மல்கந்துர பகுதியில், வீட்டை விட்டு வெளியேற பின்னோக்கிச் செல்லும் போது, வீட்டின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த

லொறியின் இடது பின்புற சக்கரத்தின் கீழ் நசுங்கி 1 வயது மற்றும் 7 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. இறந்த குழந்தை லாரி ஓட்டுநரின் மகன் ஆவார்.

ஹல்துமுல்ல களுபஹன பிரதேசத்தில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புஸ்ஸெல்ல, களுபஹான பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஆவார்.

பதவிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிஹிந்து மாவத்தை கால்வாயில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பராக்கிரம புரத்தைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவர் (15 ஆம் திகதி) காலை உயிரிழந்தார் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது

பெண்கள் அழுகை என்ன செய்யலாம்
Posted in இலங்கை செய்திகள்

பெண்கள் அழுகை என்ன செய்யலாம்

பெண்கள் அழுகை என்ன செய்யலாம்

பெண்கள் அழுகை என்ன செய்யலாம் ,சமீப சில நாட்களாக தங்களால் சமையலில் உப்பு, புளி ருசி பார்க்க முடியவில்லை என்று இல்லத்தரசிகள் முகம் சுழிக்கின்றனர். உப்புப் புளி தட்டுப்பாட்டால் அடுக்களைச் சமையல் கசந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் தற்போது உப்பு, புளியம்பழம் ஆகிய சுவையூட்டிகளுக்கு கடும் தட்டுப்பாடும் கிராக்கியும் காணப்படுவதால் இல்லத்தரசிகளால் சமையலில்

உப்பு, புளி ருசி பார்க்க முடியவில்லை. இவ்விரண்டு சுவையூட்டிகக்கான விலையும் எகிறியுள்ளது.

50 கிராம் புளியம்பழம் 100 ரூபாவுக்கு இரகசியமாக விற்கப்படுகிறது. அதேபோல கடைகளில் கல் உப்பு பெற முடியாத நிலை உள்ளது. கைவசம்

இருக்கும் தூள் உப்பை கடைக்காரர்கள் அதன் வழமையான வாடிக்கையாளர்களுக்கு மாத்திரம் இரகசியமாக விற்பனை செய்கிறார்கள்.

தூள் உப்பை இரகசியமாக வழங்கும்போது இந்த உப்பை மருந்து போல பயன்படுத்துங்கள் என்று கடைக்கார்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை

வழங்குவதையும் காணக்கூடியதாகவுள்ளது. சதோச விற்பனை நிலையங்களிலும் உப்பு, புளியம்பழம் என்பன விற்பனைக்கு இல்லை.

இதேவேளை, சித்திரைப் புத்தாண்டு காலத்தில் சுமார் ஏழு இலட்சத்திற்கு மேற்பட்ட அஸ்வெசும பயனாளிகளுக்கு சதோச விற்பனை நிலையங்களினூடாக 5000 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதியை

சலுகை விலையில் 2500 ரூபாவுக்குப் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும் அத்தகைய பொதிகள் எதுவும் இதுவரை விற்பனை செய்யப்படவில்லை.

கடந்த ஏழாம் திகதி தொடக்கம் நாட்டிலுள்ள அனைத்து சதோச நிலையங்களிலும் இந்த 5000 ரூபாய் பெறுமதியான சலுகை உலருணவுப்

பொதிகளை 2500 ரூபாவுக்குப் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. அரச ஊடகங்களும் இந்தச் செய்தியை திரும்பத் திரும்ப அறிவித்து வந்தன.

ஆனால், உள்ளுரதிகாரசபை தேர்தல் தொடர்பான பிரகடனத்தால் இத்தகைய புத்தாண்டு சலுகை உலருணவுப் பொதி விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே, விநியோகிப்பதற்காக நாடெங்கிலுமுள்ள சதோச விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பொதிகள் மீளப் பெறப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு தொடர்பில் விசாரணை
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூடு தொடர்பில் விசாரணை

துப்பாக்கிச் சூடு தொடர்பில் விசாரணை

துப்பாக்கிச் சூடு தொடர்பில் விசாரணை ,கம்பஹா நகரில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள், சிறிய லொரி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் சிறிய லொரியில் பயணித்த 2 பேர் வாகனத்தில் இருந்து இறங்கி அருகிலுள்ள கடைக்குள் ஓடியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் அவர்களுக்கு காயம் ஏற்படவில்லை என்றும், லொரிக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தப்பிச் சென்ற சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.