பறவைக்காவடி கவிழ்ந்ததில் ஒருவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பறவைக்காவடி கவிழ்ந்ததில் ஒருவர் காயம்

பறவைக்காவடி கவிழ்ந்ததில் ஒருவர் காயம்

பறவைக்காவடி கவிழ்ந்ததில் ஒருவர் காயம் ,பொகவந்தலாவை செப்பல்டன் தோட்ட இந்து கோவிலில் வருடாந்திர தேரு திருவிழாவின் பறவைக்காவடி ஏற்றிய டிராக்டரின்- டிரெய்லர் 22 ஆம் திகதி மதியம் கவிழ்ந்ததில் ஒருவர்

காயமடைந்ததாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

டிராக்டரின் டிரெய்லரில் இணைக்கப்பட்டிருந்த பறவாக்காவடி (தொங்கும் சாதனம்), கூர்முனைகளில் தொங்கிய நபருடன் சேர்ந்து, சாலையை விட்டு விலகி தேயிலைத் தோட்டத்தில் கவிழ்ந்தது.

பின்னர், தாங்கியில் தொங்கிக் கொண்டிருந்த நபரை மீட்டு கோவிலுக்கு ஊர்வலம் அழைத்துச் சென்றனர்.

டிராக்டர் டிரெய்லர் சமநிலையை இழந்து டிராக்டர் சாலையை விட்டு விலகிச் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லொறி கவிழ்ந்தது வேடிக்கை பார்த்த பொலிஸ்
Posted in இலங்கை செய்திகள்

லொறி கவிழ்ந்தது வேடிக்கை பார்த்த பொலிஸ்

லொறி கவிழ்ந்தது வேடிக்கை பார்த்த பொலிஸ்

லொறி கவிழ்ந்தது வேடிக்கை பார்த்த பொலிஸ் செயல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது .

வாகன சாரதிகள் சாலை கட்டுப்பாடுகளை மறந்து வாகனம் , போதை தூக்கத்தில் வாகனத்தை ஒட்டி செல்வதால் நாள் தோறும் அதிகமான விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன .

வீதிக்கு வீதி போலீசார் குவிக்க பட்டுள்ள பொழுதும் ,இவ்விதம் இடம்பெறும் வாகன விபத்துக்களை தடுக்க முடியவில்லை .

காட்டன் பகுதியில் புண்ணாக்கு ஏற்றி சென்ற லொறி ஒன்றே சாலையை விட்டு தடம் புரண்டது விபத்தில் சிக்கியது .

இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

பேஸ்புக் கொண்டாட்டம் 75 ஆண் பெண்கள்கைது
Posted in இலங்கை செய்திகள்

பேஸ்புக் கொண்டாட்டம் 75 ஆண் பெண்கள்கைது

பேஸ்புக் கொண்டாட்டம் 75 ஆண் பெண்கள்கைது

பேஸ்புக் கொண்டாட்டம் 75 ஆண் பெண்கள்கைது செய்யப்பட்டுள்ளனர் .
சீதுவ பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட இரகசிய இடம் ஒன்றில் இடம்பெற்று வந்த கொண்டாட்ட நிகழ்வின் பொழுதே இவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .

இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் போதை ,கஞ்சா ,சிகரெட் ,மதுபோதை என்பன காணப்பட்டுள்ளன .

இது யோடிகள் ஒன்றாக கூடி கும்மாளம் அடித்த பொழுதே கைது செய்யப்பட்டனர் .

கைதானவர்களில் 15 முதல் 25 வயது உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அனுரா ஆட்சியில் 27 பேர் சுட்டு கொலை
Posted in இலங்கை செய்திகள்

அனுரா ஆட்சியில் 27 பேர் சுட்டு கொலை

அனுரா ஆட்சியில் 27 பேர் சுட்டு கொலை

அனுரா ஆட்சியில் 27 பேர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து இதுவரையான 83 நாளில் 27 .

இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில் 27 பேர் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டவர் காயமடைந்துள்ளனர் .

ஆளுகின்ற அனுரா குமார திசாநாயக்க ஆட்சியில் இந்த சம்பவங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன .

சட்டம் ஒழுங்கு கெட்டு விட்ட நாட்டில் எப்படி பாமர மக்களுக்கு பாதுகாப்பு இருக்க முடியும் என்ற கேள்வியை மக்கள் மன்றம் எழுப்பி நிற்கின்றது .

அனுராவை வெல்ல வைக்க அர்ச்சுனா சதி
Posted in இலங்கை செய்திகள்

அனுராவை வெல்ல வைக்க அர்ச்சுனா சதி

அனுராவை வெல்ல வைக்க அர்ச்சுனா சதி

அனுராவை வெல்ல வைக்க அர்ச்சுனா சதி செய்து வருகிறார் .கடந்த பாரளுமன்ற தேர்தலில் நடத்திய அதே தந்திரோபாய திட்டத்தை தற்போது ஆரம்பித்துளளார் .

தொடர்ந்தும் அர்ச்சுனா மக்கள் மத்தியில் பேசு பொருளாக்க பட்டு பேசி கொண்டிருக்க வைத்து ,அனுரா கட்சியின் நகர்வை மக்கள் பார்வையில் இருந்து திசை திருப்பி

அதன் ஊடக அர்ச்சுனா மீதான வெறுப்பு வாக்குகளை அனுராவிற்கு விழ வைத்து வெல்ல வைக்கும் நகர்வில் ஈடுபடும் நோக்குடன் இந்த விடயங்கள் காணப்படுகிறது .

எனவே இந்த தேர்தலில் மக்கள் தமிழரசு கட்சியை வெல்ல வைத்து அதன் ஊடாக தேசிய தலைவர் உருவாக்கிய கட்சியை பலப்படுத்தி ,சிங்கள பேரினவாத கட்சியாக விளங்கி வரும் அனுரா கட்சி வடக்கில் வெல்வதை தடுக்க வேண்டும் .

மானத் தமிழர்களா ,மானம் கெட்ட தமிழர்களா என்ற போட்டி நிலவுகிறது .

இது தன்மான தமிழர்க்கு மிக பெரும் இழுக்கை ஏற்படுத்தும் .மீளவும் வடக்கில் சிங்கள மேலாதிக்கம் நிலவ விடாது தடுக்க வேண்டுமாக இருந்தால் தமிழர்கள் ஒன்று பட்டு தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்திற்கு ஓட்டை போட்டு வெல்ல வைக்க வேண்டும் .

அர்ச்சுனா கூலிக்கு ஏவிவிட பட்ட ஒரு குழப்பவாதி என்பதை கடந்த பல வாரங்களாக அவர் மேற்கொண்டு வரும் இழிநிலை பேச்சுக்கள் மற்றும் குழப்பங்கள் ஊடக காண முடிகிறது .

ஆகவே தமிழ் மக்கள் இதனை கண்ணுற்று செயல்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது .

தமிழ் நிலம் செழிக்க தமிழா ஒன்று படு ,,இனவாத அனுரா ஆட்சியை வடக்கில் தோற்கடித்து , ஒட்டு குழு , மாபியா குழுக்களை ஓட ஓட விரட்டு .தமிழாஒன்றாகி தமிழை அணிதிரட்டு .

வன்னி மைந்தன் –

தென்னிலங்கையை உலுப்பும் துப்பாக்கி கொலைகள்
Posted in இலங்கை செய்திகள்

தென்னிலங்கையை உலுப்பும் துப்பாக்கி கொலைகள்

தென்னிலங்கையை உலுப்பும் துப்பாக்கி கொலைகள்

தென்னிலங்கையை உலுப்பும் துப்பாக்கி கொலைகள்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது .

மேலும் அனுரா ஆட்சியின் வருகையின் பின்னர் மீளவும் துப்பாக்கி சூட்டு சத்தங்கள் மீளவும் ஓங்கி ஒழிக்க ஆரம்பித்துள்ளது .

பாதாள உலக குழுக்களுக்கு இடையில் மோதல்கள் ஏற்படுவதாக தோற்ற பாடு ஒன்று காண்பிக்க படுகிறது .

எனினும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களு பின்புலத்தில் இராணுவ புலனாய்வு குழு மற்றும் அதன் தொடர்பு பட்ட அரசியல் செல்வாக்கு காணப்படுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றன .

உச்ச நீதிமன்றம் முதல் ,சாதாரண தெரு வரையும் இந்த துப்பாக்கி தோட்டாக்கள் துளையிட்டு வருகின்றன .

இது மக்களுக்கு விடுக்க படும் மிக பெரும் மிரட்டலாக பார்க்க படுகிறது .

இதன் எதிரொலி விரைவில் சிங்கள தேசத்தில் மீளவும் ஆட்சி கவிழிப்புக்கான போராட்டங்கள் வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

வெளிநாட்டு மக்களை கண்டு அலறும் சிங்கள தேசம்
Posted in இலங்கை செய்திகள்

வெளிநாட்டு மக்களை கண்டு அலறும் சிங்கள தேசம்

வெளிநாட்டு மக்களை கண்டு அலறும் சிங்கள தேசம்

வெளிநாட்டு மக்களை கண்டு அலறும் சிங்கள தேசம் என சமீப நாட்களாக சிங்கள கூலிகள் மற்றும் அவர் தம் வாடகை வாய்கள் பரப்பும் கருத்துக்கள் ஊடாககாண முடிகிறது .

தமிழர் தேசம் தாயாக மண்ணில் நிலைத்து நிமிர்ந்து வாழ உரம் கொடுத்தவர்கள் ஐரோப்பிய வெளிநாட்டு தமிழர்கள் ஆவார் .

இன்றும் கட்டு குலையாது தமிழர்கள் ஒன்று பட்டு வாழ்ந்து வருவது சிங்கள தேசத்திற்கு மிக பெரும் நெருக்கடியாக இருந்து வருகிறது .

அதனால் வெளிநாட்டு தமிழர் பலம் சிங்கள இனவாத அரசுகளுக்கு பெரும் நெருக்கடியை தருவித்து வருகிறது. .

இதனால் தாயக மற்றும் புலத்து மக்களுக்கு இடையில் நீண்டதொரு இடைவெளியை ஏற்படுத்தும் நகர்வை ,சிங்கள பவுத்த தேசம் மேற்கொண்டு வருகிறது .

எனினும் சிங்கள பவுத்த பேரினவாதம் எடுத்து வைக்கும் இந்த பிரித்தாளும் தன்மையை உணர்ந்து கொண்ட தமிழர்கள் ,அதனை எதிர்த்து தமது பரப்புரைகளை ஆற்றி வருவது சிங்கள கூலிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .

வன்னி மைந்தன் –

மனைவியை வெட்டி கொன்ற கணவன்
Posted in இலங்கை செய்திகள்

மனைவியை வெட்டி கொன்ற கணவன்

மனைவியை வெட்டி கொன்ற கணவன்

மனைவியை வெட்டி கொன்ற கணவன் .மாத்தளைப்பகுதியில் மருத்துவ மனையில் வேலை பார்க்கும் கணவன் மனைவிக்கு இடையில் இடம்பெற்று வந்த வாய் தர்க்கம் முற்றியதில் கணவன் தனது மனைவியை வெட்டி படுகொலை செய்துள்ளார் .

இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன .,மகள் 11 மகன் 13 வயதில் உள்ளதாகவும் இந்த இழி செயலினால் இப்பொழுது இரு பிள்ளைகளும் அனாதையாக கைவிட பட்டுள்ளனர் .

சிந்திக்க மறந்த்து செயல் படும் இவ்வாறான சம்பவங்கள் ஊடக பிள்ளைகள் மன நிலை பாதிக்க பட்ட நிலையில் வளரும் நிலை காணப்படுகிறது .

கணவன் மனைவியை வெட்டி படுகொலை செய்த்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் பதட்டத்தை .ஏற்படுத்தியுள்ளது.

இருவர் சுட்டு கொலை எகிறும் துப்பாக்கி கலாச்சாரம்
Posted in இலங்கை செய்திகள்

இருவர் சுட்டு கொலை எகிறும் துப்பாக்கி கலாச்சாரம்

இருவர் சுட்டு கொலை எகிறும் துப்பாக்கி கலாச்சாரம்

இருவர் சுட்டு கொலை எகிறும் துப்பாக்கி கலாச்சாரம் .இலங்கை மாத்தறை பகுதியில் வாகனத்தில் வந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள்மீது திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினர் .இதில் சம்பவ இடத்தில இரண்டு வாலிபர்கள் பலியாகினர் .

வானில் வந்தவர்கள் டீ 56 மற்றும் கை துப்பாக்கி ஊடாக தாக்குதலை நடத்தியுள்ளனர் .

எனினும் சம்பவம் இடம்பெற்ற சற்று தொலைவில் வான் எரிக்க பட்ட நிலையில் கண்டு பிடிக்க பட்டுள்ளது .

இந்த துப்பாக்கி சூட்டு படுகொலைகளின் காரணம் உடனடியாக தெரியவில்லை .இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

கருணா பிள்ளையான் இணைவு கிழக்கு கூட்டமைப்பு
Posted in இலங்கை செய்திகள்

கருணா பிள்ளையான் இணைவு கிழக்கு கூட்டமைப்பு

கருணா பிள்ளையான் இணைவு கிழக்கு கூட்டமைப்பு

கருணா பிள்ளையான் இணைவு கிழக்கு கூட்டமைப்பு எனும் கட்சியின் உருவாக்கத்தில் தற்போது பிள்ளையான் கருணா ஆகியோர் இணைந்து புதிய கட்சி ஆரம்பித்துள்ளனர் .

இந்த கட்சி கிழக்கு கூட்டமைப்பு என உருவாக்கம் பெற்றுள்ளது .

தமிழ் மக்களுக்கு எதிராக செயல் பட்டு காட்டி கொடுப்புக்களில் ஈடுபட்ட தேசவிரோத கட்சிகளை இணைந்து இப்பொழுது இந்த உள்ளுராட்ச்சி தேர்தலில் களம் குதிக்க உள்ளனராம் .

எனவே தான் அவர்கள் மிக பெரும் வெற்றியினை இந்த தேர்தலில் பெற்று கொள்வார்கள் என அவர்கள் நம்புகின்றனராம் .

தேசியத்தின் உயிர்களை குடித்த சிங்கள கூலிகள் வெல்ல போகிறார்கள் என கூவி வருகின்றனர் .

பாராளுமன்ற தேர்தலில் தோற்று போனவர்கள் இப்பொழுது மீளவும் அரியணை ஏற இதுவாக காண படுகிறது .

வெளிநாட்டு மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அர்ச்சுனா
Posted in இலங்கை செய்திகள்

வெளிநாட்டு மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அர்ச்சுனா

வெளிநாட்டு மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அர்ச்சுனா

வெளிநாட்டு மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அர்ச்சுனா மக்கள் மத்தியில் கொதிப்பலையை ஏற்படுத்தியுள்ளது .

தேர்தலில் போட்டியிட போகிறேன் என தெரிவித்து அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார் அர்ச்சுனா இராமநாதன் தங்கம் ஆகியோர் .

பாராளுமன்ற தேர்தலில் பல கோடிகளை சுருட்டிய அர்ச்சுனா இப்பொழுது மீளவும் அதே போன்ற பணத்தை சுருட்டியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

தமிழ் தேசியல் ,தலைவர் பிரபாகரன் என பேசியவாறு சிங்க தேசியவாதத்தின் செயல்பாடுகளுக்கு ,செயல் வடிவம் கொடுத்து வருகிறார் .அருச்சுனா இராமநாதன் .

ஆகவே பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மேற்கொள்ளும் இந்த கபடத்தனமான அரசியலில் இருந்து மக்களே தப்பித்து கொள்ளுங்கள் .

வெளிநாட்டு தமிழர்களை பணம் காய்க்கும் மரமாக நினைக்கும் அர்ச்சுனா ஒரு கதிர்காமர் என்பதை எதிர்வரும் காலம் உணர்த்தும் என இன்றைய இவரது செயல்பாடுகள் அடித்து சொல்கிறது.

வடக்கில் ஆதிக்கம் செலுத்த துடிக்கும் அனுரா
Posted in இலங்கை செய்திகள்

வடக்கில் ஆதிக்கம் செலுத்த துடிக்கும் அனுரா

வடக்கில் ஆதிக்கம் செலுத்த துடிக்கும் அனுரா

வடக்கில் ஆதிக்கம் செலுத்த துடிக்கும் அனுரா குமார திசாநாயக்க .ஈடேறுமா உள்ளுராட்சி தேர்தல் கட்டியம் இடப்போகிறது .

பாராளுமன்ற தேர்தலில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்று கொண்டது போன்று ,.இந்த உள்ளுராட்சி தேர்தலில் ஐம்பது வீதமான ஆசனங்களை பெற்று சம பலத்தில் கூட்டாட்சியை யாழில் மேற்கொள்ள முனைகின்றார் .

அதற்காக அவர் இப்பொழுதே தனது தேர்தல் சதுரங்க ஆட்டத்தை ஆட்டுவிக்க முனைகிறார் .
இப்பொழுது தமிழ் தேசியமா அல்லது சிங்கள தேசியமா நிலை பெற போகிறது என்பதே கேள்வியாக உள்ளது .

தலைவர் பிரபாகரன் சிந்தனையை மழுங்கடிக்க முனையும் சிங்கள பேரினவாத சிந்தனைக்கு சாட்டையா டி கொடுத்து தமிழர்கள் நிமிர்ந்து நிற்க வேண்டிய காலத்தின் கட்டாயம் ஏற்பட்டுள்ளது .

எனவே தான் தமிழர்கள் ஒன்றிணைந்து சாட்டை அடி வழங்க வேண்டும் என்பதாக தமிழர் கடமையாகும் .

ஈழம் என்ற திருநாட்டை கட்டி வளர்த்து அறத்தை நிலை நாட்டின் தலைவர் பிரபாகரன் பிறந்து வடக்கு சிங்கள இனவாதத்திடம் வீழ்ந்துவிடாது, தமிழ் தேசியத்தை பாத்துக்க வேண்டியது தமிழரது கடப்பாடாகும் .

எனவே தமிழ் மக்களே ஒன்று திரண்டு தமிழரசு கட்சியை வலுப்படுத்தி தலைவர் உருவாக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பை பாதுகாக்க வேண்டும் என்பதே மக்கள் என்ன கருத்தாக உள்ளது .

தங்கம் அரசியலில் இருந்து விலகினார்
Posted in இலங்கை செய்திகள்

தங்கம் அரசியலில் இருந்து விலகினார்

தங்கம் அரசியலில் இருந்து விலகினார்

தங்கம் அரசியலில் இருந்து விலகினார் என ஊசி கட்சி தலைவர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளாராம் .


அதன் அடிப்படையில் எதிர்வரும் காலங்களில் அவர் எவ்வித அரசியலிலும் ஈடுபட மாட்டார் என்கிறார் ஊசி கட்சியின் ஊசி அடி தலைவர் .

பிரபல யூடுப் பெண்களை விபச்சாரிகள் என அர்ச்சுனா அதெரிவித்த நிலையில் ,அதுவே மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த நல்மதிப்பை இழக்க செய்ததுடன் ,அவருக்கு எதிராக அதிகளவான பெண்கள் திரும்ப காரணமாக மாறியது .

அதனால் தேர்தலில் மிக பெரும் சரிவு ஏற்பட்டதுடன் அதில் இருந்து விலக வேண்டிய நிர்பந்தம் அர்ச்சுனாவுக்கு ஏற்பட்டது .

எனவே தோல்வியை தழுவுவோம் என தெரிந்தும் ,இந்த தேர்தலில் போட்டியிட்டால் தோற்றுவிடுவோம் என தெரிந்த நிலையில் இந்த நிலை ஏற்பட்டு ஓட்டம் பிடித்துள்ளார் தங்கம் .

யாழில் வேட்பு மனுக்களின் முழு விவரம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வேட்பு மனுக்களின் முழு விவரம்

யாழில் வேட்பு மனுக்களின் முழு விவரம்

யாழில் வேட்பு மனுக்களின் முழு விவரம் ,யாழ். மாவட்டத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பான முழுமையான விபரத்தை யாழ். மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார்.

வேட்புமனு தாக்கல் மற்றும் பரிசீலனை நடவடிக்கைகளுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இம்முறை தேர்தலுக்காக 148 கட்சிகளும் 27 சுயேட்சைக் குழுக்களுமாக கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர்.

இதில் 136 கட்சிகளும் 23 சுயேட்சைக் குழுக்களும் நியமனம் பத்திரத்தை தாக்கல் செய்திருந்தன.

136 கட்சிகளுடைய நியமன பத்திரங்களும் 10 சுயேட்சைக் குழுக்களுடைய நியமனம் பத்திரங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை, 22 கட்சிகளுடைய நியமனம் பத்திரங்களும் 10 சுயேட்சைக் குழுக்களுடைய நியமனம் பத்திரங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

யாழ் மாநகர சபைக்கான வேட்புமனுவில் தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, ஈரோஸ் ஜனநாயக முன்னணி, ஆகிய கட்சிகளுடைய வேட்புமனுக்களும், ஞானப்பிரகாசம் சுலக்சன், நரேந்திரன் கௌசல்யா ஆகியோர் தலைமையிலான சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வல்வெட்டித்துறை நகர சபைக்கான வேட்புமனுவில் ராமச்சந்திரன் சுரேன், யோகேஸ்வரி அருளானந்தம் ஆகியோர் தலைமையிலான சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

பருத்தித்துறை நகர சபைக்கான வேட்புமனுவில் அனைத்து வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

சாவகச்சேரி நகர சபைக்கான வேட்புமனுவில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி கட்சியினுடைய வேட்புமனுவும், மகாலிங்கம் சதீஸ், பெரியான் சிவகுருநாதன் ஆகியோர் தலைமையிலான சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

காரைநகர் பிரதேச சபைக்கான வேட்புமனுவில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கான வேட்புமனுவில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

வேலணைப் பிரதேச சபைக்கான வேட்புமனுவில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி கட்சியினுடைய வேட்புமனுவும், துரைராஜா சுஜிந்தன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், சவரிமுத்து ஸ்டாலின் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், ஸ்ரீ இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், தமிழ் மக்கள் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், மக்கள் போராட்ட முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, பொதுஜன ஐக்கிய முன்னணி, ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்களும், தவம் தவனிலாவின் தாசன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

பருத்தித்துறை பிரதேச சபைக்கான வேட்புமனுவில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி, பொதுஜன ஐக்கிய முன்னணி, ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் அல்பிரட் ரெஜி ராஜேஸ்வரன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

சாவகச்சேரி பிரதேச சபைக்கான வேட்புமனுவில், வைத்தியலிங்கம் ஜெகதாஸ் என்பவர் தலைமையிலான சுயேச்சை குழுவும் குணரட்ணம் குகானந்தன் என்பவர் தலைமையிலான சுயேட்சை குழுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

நல்லூர் பிரதேச சபைக்கான வேட்புமனுவில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் திலீப் தீபாரஞ்சன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

வாரியபொலவில் விமான விபத்து
Posted in இலங்கை செய்திகள்

வாரியபொலவில் விமான விபத்து

வாரியபொலவில் விமான விபத்து

வாரியபொலவின் மினுவங்கேட் பகுதியில் சில நிமிடங்களுக்கு முன்பு ஒரு விமான விபத்து நிகழ்ந்ததாக உறுதிப்படுத்தப்படாத செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

வாரியபொல பொலிஸார் தற்போது சம்பவ இடத்தை நெருங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இலங்கை விமானப்படையின் சீன K-8 பயிற்சி ஜெட் விமானமே சற்று நேரத்திற்கு முன்பு வாரியப்பொலவில் விபத்துக்குள்ளானதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

விபத்துக்கு முன்னர் விமானியும் துணை விமானியும் விமானத்திலிருந்து வெளியேறிவிட்டதாக தெரிவித்தனர்.

பாராளுமன்றத்துக்கு அருகில் பதற்றம்
Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்றத்துக்கு அருகில் பதற்றம்

பாராளுமன்றத்துக்கு அருகில் பதற்றம்

பாராளுமன்றத்துக்கு அருகில் பதற்றம் ,வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து, பாராளுமன்றத்துக்கு செல்லும் வீதிக்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அரசாங்கம் வேலைவாய்ப்பு வழங்கக் கோரி, மேல் மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தைச் சேர்ந்த பலர் பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் வௌ்ளிக்கிழமை (21) ஈடுபட்டனர்.

பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் பட்டதாரிகள் பலர் கண்ணீர் மல்கினர்.

நீதிமன்றத்துக்கு சங்கு செல்லும் சுரேஸ் பிரேமச்சந்திரன்
Posted in இலங்கை செய்திகள்

நீதிமன்றத்துக்கு சங்கு செல்லும் சுரேஸ் பிரேமச்சந்திரன்

நீதிமன்றத்துக்கு சங்கு செல்லும் சுரேஸ் பிரேமச்சந்திரன்

நீதிமன்றத்துக்கு சங்கு செல்லும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ,சங்கு சின்னத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த கூட்டணி, வேட்பு மனுக்கள் நிராகரிக்க பட்டமைக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் என ஜனநாயக தமிழ் தேசிய

கூட்டசியின் முக்கியஸ்தரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுத் தாக்கலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பு மனுக்கள் பல நிராகரிக்கப்பட்ட நிலையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை பொறுத்த வரையில் இரண்டு சபைகளை தவிர ஏனைய சபைகளுக்கு நாங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தோம். இதில் எங்களுடைய பல சபைகள் நிராகரிக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.

இவ்வாறு நாங்கள் மாத்திரமல்லாமல் பல கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் ஒரே காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.

ஆனால் நிராகரிக்கப்பட்டதற்கு எமக்கு கூறப்படுகின்ற காரணம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. ஏனெனில் தேவையான அனைத்தையும் நாம் வழங்கி இருக்கிறோம்.

ஆகையால் ஏதேனும் காரணங்களுக்காக எமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. எனவே தான் இதற்கு எதிராக நாம் நீதிமன்றம் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளோம். விரைவில் நீதிமன்றம் செல்வோம் என்றார்.

அர்ச்சுனாவை விரட்டிய தேர்தல் ஆணையம்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவை விரட்டிய தேர்தல் ஆணையம்

அர்ச்சுனாவை விரட்டிய தேர்தல் ஆணையம்

அர்ச்சுனாவை விரட்டிய தேர்தல் ஆணையம் .இடம்பெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்திட சென்ற ஊசி கட்சி வேட்பு மனு தாக்கல் இரத்து செய்ய பட்டுள்ளது

எனினும் அதற்கு செலுத்த பட்ட பணம் மீள் கையளிக்க படும் என தெரிவித்துள்ளது .


இந்த தேர்தலுக்கு 46 லட்சம் வழங்க படும் . எனவே அந்த பணத்தை எடுத்து அவர் என்ன செய்ய போகிறார் என்பதே நமது கேள்வியாக உள்ளது .

மிருசுவில் படுகொலை கோட்டா மன்னிப்பு வழங்கிய குற்றவாளிக்கு பயணத்தடை
Posted in இலங்கை செய்திகள்

மிருசுவில் படுகொலை கோட்டா மன்னிப்பு வழங்கிய குற்றவாளிக்கு பயணத்தடை

மிருசுவில் படுகொலை கோட்டா மன்னிப்பு வழங்கிய குற்றவாளிக்கு பயணத்தடை

மிருசுவில் படுகொலை கோட்டா மன்னிப்பு வழங்கிய குற்றவாளிக்கு பயணத்தடை ,யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் எட்டு தமிழர்களை படுகொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் மரணதண்டனை விதிக்கப்பட்டு

பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட குற்றாவளி சுனில் ரத்நாயக்கவிற்கு உயர்நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடையை வியாழக்கிழமை (20) விதித்துள்ளது.

குற்றவாளியான சுனில் ரத்நாயக்கவிற்கு மார்ச் 2020 இல் ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக

தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை பூர்த்தியாகியுள்ள நிலையிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ச வழங்கிய பொதுமன்னிப்பிற்கு எதிராக மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

மிருசுவிலில் இருந்து இடம்பெயர்ந்த 9 பேர், 2000ம் ஆண்டு டிசம்பர் 19ம் திகதி தங்கள் வீடுகளை பார்ப்பதற்காக மீண்டும் மிருசுவில் பகுதிக்கு

சென்றனர்.இவர்களில் பதின்மவயதினரும்,ஐந்து வயது சிறுவனும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அவர்கள் தங்கள் பகுதிக்கு திரும்பிவந்தவேளை இரண்டு இராணுவத்தினர் அவர்களின் கண்களை கட்டி மோசமாக தாக்கியுள்ளனர்.

ஒரு இளைஞன் அவர்களின் பிடியிலிருந்து தப்பினான்.எனினும் ஏனைய 8 பேரும் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் உடல்கள் அருகில் உள்ள பகுதியில் புதைக்கப்பட்டிருந்த பகுதியில் மீட்கப்பட்டன

லண்டனில் கார் விபதில்தமிழர் பலி
Posted in இலங்கை செய்திகள்

லண்டனில் கார் விபதில்தமிழர் பலி

லண்டனில் கார் விபதில்தமிழர் பலி

லண்டனில் கார் விபதில்தமிழர் பலி .லண்டன் மாநகரசபைக்கு உள்ளிட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார் .

கார் ஒன்றில் மோதுண்டு அவர் பலியான கோர காட்சிகள் வெளியாகியுள்ளன ..வேகமாக வந்த கார் இவ்வாறு மோதி தள்ளியது .

அதில் காரின் கீழே அவர் தலையில் பலமான அடி காயங்களுக்கு உள்ளான நிலையில் பலியாகியுள்ளார் .

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சையை மேற்கொண்ட பொழுதும் ,சிகிச்சை பலனின்றி அவர் இறந்துள்ளார் என அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

கலகலப்பாக அன்பாக பழக்க கூடிய அற்புத நண்பனை பிரிந்து துயரில் வாடுவதாக அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர் .

வெளிநாடுகளில் வீதி விபத்துக்களில் சிக்கி நம்மவர்கள் அதிகம் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது