Tag: கயேந்திரகுமார்
நாங்களே வெல்வோம் கயேந்திரகுமார்
நாங்களே வெல்வோம் கயேந்திரகுமார்
நாங்களே வெல்வோம் கயேந்திரகுமார் ,யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெறுமனே 24 சதவீத வாக்குகளை வைத்துக்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் மக்கள்
நிராகரித்ததாக அநுர அரசு கணக்குப் பார்க்கின்றது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்.
பாரம்பரிய தமிழ்க் கட்சிகளைத் தமிழ் மக்கள் புறக்கணித்து தேசிய மக்கள் சக்திக்கு ஆணையை வழங்கியுள்ளனர் என்று கூறும் ஜனாதிபதி அநுரகுமார அந்த மக்கள் ஆணையை வைத்து தையிட்டி விகாரைப் பிரச்சினையைத்
தீர்த்திருக்கலாமே? யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெறுமனே 24 சதவீத வாக்குகளை மட்டுமே தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்டது.
76 சதவீதமான வாக்குகள் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக வழங்கப்பட்டிருக்கின்றன. 24 சதவீத வாக்குகளை வைத்துக்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும்
மக்கள் நிராகரித்ததாக அரசு கணக்குப் பார்க்கின்றது எனில் நாட்டின் பொருளாதாரக் கணக்கு எவ்வாறு அமையப் போகின்றது என்பதை மக்கள் யோசிக்க வேண்டும் என்றார்
ஐநாவில் இலங்கைக்கு பொறி – கயேந்திரகுமார் முழக்கம்
ஐநாவில் இலங்கைக்கு பொறி – கயேந்திரகுமார் முழக்கம்
ஐநாவில் இலங்கைக்கு பொறி – கயேந்திரகுமார் முழக்கம்
ஐக்கிய நடக்குகள் மனித உரிமை அவையில் இம்முறை இலங்கை சிக்கி தவிக்கும் நிலை ஏற்படும் என கயேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்
இலங்கையில் தொடர்ந்து மீறப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களும் ,ஆளும் அரசின் கண் மூடித்தனமான செயல் பாடுகளுமே இந்த நிலைக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது
கயேந்திரகுமார் கைதிற்கு சுமந்திரன் கண்டனம்
கயேந்திரகுமார் கைதிற்கு சுமந்திரன் கண்டனம்
இலங்கையில் ஆளும் கோட்டாபய ஆட்சியில் எம்பியாக விளங்கி வரும் செல்வராசா கயேந்திரன்
சிங்கள காவல்துறையால் கைது செய்ய பட்டு இழுத்து செல்ல பட்டார்
மேற்படி சம்பவத்திற்கு கூட்டமைப்பின் பேச்சளார் சுமந்திரன் கடும் கணடனம் தெரிவித்துள்ளார்
தியாக தீபம் நினைவு நாளில் கலந்து கொண்ட பொழுதே கயேந்திரகுமார் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிட தக்கது








