இளைஞன் படுகொலை ஐவருக்கு மரண தண்டனை
Posted in இலங்கை செய்திகள்

இளைஞன் படுகொலை ஐவருக்கு மரண தண்டனை

இளைஞன் படுகொலை ஐவருக்கு மரண தண்டனை

இளைஞன் படுகொலை ஐவருக்கு மரண தண்டனை ,இளைஞன் படுகொலை: ஐவருக்கு மரண தண்டனை இளைஞன் ஒருவரை கிரிக்கெட் மட்டை மற்றும் பொல்லுகளால் தாக்கிபடுகொலை செய்தனர் என குற்றஞ்சாட்டப்பட்ட

ஏழுவரில் ஐவரை குற்றவாளியாக இனங்கண்டகொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, ஐவருக்கும் மரண தண்டனைதீர்ப்பளித்து,

ஏனைய இருவருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்தார். தற்போது 27 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட இருவர், சம்பவம்இடம்பெற்ற போது, 15 மற்றும் 17 வயதுடைய சிறுவர்களாக இருந்தனர். அதனால்,அவ்விருவருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்குளிய, மோதரை பகுதியில் இரண்டு கோவில்களுக்கு இடையில் வீடொன்றில் வைத்து, இன்றைக்கு 13 வருடங்களுக்கு முன்னர் 21 வயதான பிரான்சிஸ் சுரஞ்சன் என்ற இளைஞனே படுகொலை செய்யப்பட்டார்.

பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றங்கள்எவ்விதமான சந்தேகத்துக்கும் இடமின்றி, நிரூபிக்கப்பட்ட மையால், அவர்களைகுற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க,அவர்களுக்கு மேற்கண்டவாறு தண்டனையை, திங்கட்கிழமை (28) விதித்தார்.

2012 செப்டம்பர் 26 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாளொன்றில், பிரான்சிஸ்சுரஞ்சன் என்ற இளைஞனை கிரிக்கெட் மட்டைமற்றும் பொல்லுகளால் தாக்கி படுகொலை செய்தனர் என ஒன்பது பேருக்கு எதிராக சட்டமாஅதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது, அதில் இருவர் மரணமடைந்துவிட்டனர்.அதனால், ஏழு பேருக்கு எதிராக வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு மேற்கண்டவாறு தீர்ப்பளிக்கப்பட்டது

2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் காயம்

2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் காயம்

2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் காயம் ,பெலியத்த, ஹெட்டியாராச்சி வளைவுக்கு அருகில் இன்று அதிகாலை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, டிக்வெல்லவிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, எதிர் திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்துடன் மோதியது.

விபத்தில் காயமடைந்த பேருந்துகளில் இருந்த பயணிகள் தங்காலை மற்றும் பெலியத்த வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெலியத்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி ,பாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 35 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் வந்த இருவர் வீட்டிற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

10 முடிவுகளை அறிவித்தது போக்குவரத்து அமைச்சு
Posted in இலங்கை செய்திகள்

10 முடிவுகளை அறிவித்தது போக்குவரத்து அமைச்சு

10 முடிவுகளை அறிவித்தது போக்குவரத்து அமைச்சு

10 முடிவுகளை அறிவித்தது போக்குவரத்து அமைச்சு ,போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமீபத்தில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

(NTC), இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் ஒன்பது மாகாணங்களின் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரிகளின் தலைவர்களுடன் சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.

NTC, SLTB மற்றும் மாகாண அமைப்புகளின் அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, இலங்கையின் பயணிகள் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்தவும் நவீனமயமாக்கவும் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன.

எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் பின்வருமாறு:

– புத்தளம் பாதையில் ஒருங்கிணைந்த நேர அட்டவணையை உடனடியாக செயல்படுத்துதல்.

  • 138வது வழித்தடத்தில் ஒரு முன்னோடித் திட்டத்தைத் தொடங்குதல், அனைத்து பேருந்துகளையும் ஒரே சங்கத்தின் கீழ் லாபப் பகிர்வு பொறிமுறையுடன் இயக்குதல்.
  • அனைத்து பேருந்துகளிலும் ஜிபிஎஸ் கண்காணிப்பு மற்றும் சிசிடிவி கமராக்களை கட்டாயமாக நிறுவுதல்.
  • டிஜிட்டல் அமைச்சகத்துடன் இணைந்து நிகழ்நிலை பற்றுச்சீட்டு முன்பதிவு முறையை உருவாக்குதல்.
  • பேருந்து ஓட்டுநர்களுக்கு திடீர் போதைப்பொருள் மற்றும் மது சோதனை நடத்துதல்.
  • டிக்கெட் இயந்திரங்கள் மூலம் டிக்கெட் வழங்குவதை கட்டாயமாக்குதல் (சலுகைக் காலம் வழங்கப்படும்).
  • பயணிகள் பேருந்துகளுக்கான விவரக்குறிப்புகளை நிறுவுதல்.
  • பேருந்து ஓட்டுநர்கள் சீட் பெல்ட்களை பயன்படுத்தலை கட்டாயமாக்கல்
  • புதிய பேருந்துகளுக்கு புதிய வழித்தடங்களை ஒதுக்குவதற்கான ஒரு வழிமுறையை அறிமுகப்படுத்துதல்.
  • NTC, SLTB மற்றும் ஒன்பது மாகாணங்களுக்கும் தனித்தனி எண்களாக பயணிகள் விதிமீறல்களைப் முறைப்பாடளிக்க அனைத்து பேருந்துகளிலும் வட்ஸ்அப் எண்களைக் காட்சிப்டுத்தல்.

இந்த முடிவுகளை செயல்படுத்துவதற்குத் தேவையான முதற்கட்ட பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் ரத்நாயக்க அறிவுறுத்தினார், மேலும் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

ஆசிரியையை தாக்கிய ஆசிரியைக்கு சிறை
Posted in இலங்கை செய்திகள்

ஆசிரியையை தாக்கிய ஆசிரியைக்கு சிறை

ஆசிரியையை தாக்கிய ஆசிரியைக்கு சிறை

ஆசிரியையை தாக்கிய ஆசிரியைக்கு சிறை ,துடைப்பக் கைப்பிடி மற்றும் குடையால் தாக்கி ஆசிரியை ஒருவரை காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு ஆசிரியையை குற்றவாளி எனக் கண்டறிந்த அனுராதபுரம் மேலதிக நீதவான் பி.கே. திருமதி. சமரசிங்க ​அந்த ஆசிரியைக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஆசிரியருக்கு ஐந்து ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறை தண்டனை விதித்தார். பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டார்.

மேலும், முறைப்பாடு செய்த ஆசிரியைக்கு முப்பதாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு பிரதிவாதியான ஆசிரியைக்கு நீதவான் உத்தரவிட்டார்.

மிஹிந்தலை, கன்னடிய, கல்வல சந்திப்பில் வசிக்கும் ஒரு பெண் ஆசிரியரை துடைப்பக் கைப்பிடி மற்றும் குடையால் தாக்கி காயங்களை ஏற்படுத்தியதாக 54 வயதான ஆசிரியைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

2021 செப்டம்பர் 30, மிஹிந்தலை, கன்னட்டியவைச் சேர்ந்த 59 வயதான ஆசிரியையின் வீட்டுக்குள் நுழைந்து, இந்த தாக்குதலை ஆசிரியையை மேற்கொண்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியையால் தாக்கப்பட்ட ஆசிரியை, மிஹிந்தலை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக நீதிமன்ற விசாரணையின் போது தெரியவந்தது.

தனது தோட்டத்தில் உள்ள ஒரு வெறிச்சோடிய கிணற்றில் இரண்டு காட்டுப்பன்றிகள் விழுந்து இறந்து விட்டதாகவும், அது துர்நாற்றம் வீசுவதாகவும் கூறியதற்காக முறைப்பாட்டாளரான ஆசிரியை திட்டிய பின்னர், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை இந்த தாக்குதலை நடத்தியதாகவும் நீதிமன்ற விசாரணையின் போது தெரியவந்தது.

வயல் பகுதியில் இருந்து ஆணின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

வயல் பகுதியில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

வயல் பகுதியில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

வயல் பகுதியில் இருந்து ஆணின் சடலம் மீட்பு ,மட்டக்களப்பு , எருவில் கிராமத்தில் உள்ள மாலை வயல் பகுதியில் இருந்து சனிக்கிழமை (26) அன்று ஆண் ஒருவர் சடலமாக மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் எருவில் கிராமத்தை சேர்ந்த 44 வயதுடைய இரத்தினசிங்கம் உத்தமன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அப்பகுதியில் அமைந்துள்ள அவரது வயலுக்குள் வேளாண்மையை பார்ப்பதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்றுள்ளதுடன் துவிச்சக்கர வண்டியை குளக்கட்டில் வைத்துவிட்டு வயலுக்குள் இறங்கி தனது

வேளாண்மைச் செய்கையை பார்வையிட்ட நிலையில் அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ள நிலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி

வி.ஆர்.மகேந்திரன், சடலத்தை பார்வையிட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவ அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

A/L சித்தியடையாத மாணவர்களுக்காக புதிய திட்டம்
Posted in இலங்கை செய்திகள்

A/L சித்தியடையாத மாணவர்களுக்காக புதிய திட்டம்

A/L சித்தியடையாத மாணவர்களுக்காக புதிய திட்டம்

A/L சித்தியடையாத மாணவர்களுக்காக புதிய திட்டம் உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையாக பரீட்சை எழுதத் தயாராகி வருவதாகவும், சில மாணவர்களுக்கு அடுத்து என்ன

செய்வது என்பது குறித்து எந்த நோக்கமும் இல்லை என்றாலும், தற்போதைய அரசாங்கத்தின் புதிய திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களுக்கும்

முறையான வழிகாட்டுதலுடன் கூடிய ஒரு திட்டம் 2026 இல் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெவ, ஹூங்கம மற்றும் தங்காலை பகுதிகளில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் எழுபத்தைந்து ஆண்டுகளாக ஊழல் மற்றும் குற்றங்களுக்கு இருந்த அரசியல் பாதுகாப்பை தற்போதைய அரசாங்கம் நீக்கியுள்ளதாக கூறிய பிரதமர் அந்த மக்கள் விரோத ஊழல் மற்றும் குற்றங்களுக்கு பாதுகாப்பு

இல்லாததால், பயந்து குழப்பமடைந்த அரச மற்றும் பாதுகாப்பு சேவையில் உள்ளவர்கள், அரசியல் ஆசீர்வாதத்துடன் இவை அனைத்தையும் தொடர்ந்ததாகவும் கூறினார்.

ஆணைக்குழுவுக்கு வந்தார் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

ஆணைக்குழுவுக்கு வந்தார் ரணில்

ஆணைக்குழுவுக்கு வந்தார் ரணில்

ஆணைக்குழுவுக்கு வந்தார் ரணில் ,பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மீது அளித்த வாக்குமூலம் தொடர்பாக மணிக்கு இலஞ்சம் அல்லது

ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் ஆஜரானார்.

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கு தொடர்பாக அவர் அளித்த வாக்குமூலம் தொடர்பாக, ஏப்ரல் 17ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய

சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுற்கு ரணில் விக்ரமசிங்க முதலில் அழைக்கப்பட்டார்.

முந்தைய சம்மனுக்கு பதிலளிக்கும் விதமாக, ரணில் விக்ரமசிங்க, ஆணையத்தில் ஆஜராகத் தயாராக இருப்பதாகவும், புத்தாண்டு விடுமுறை காலத்தில் தனது வழக்கறிஞர்கள் கொழும்பில் இருக்க மாட்டார்கள் என்பதால்

வேறு திகதியைக் கோருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில், இன்று (28) அவருக்கு தினம் வழங்கப்பட்டிருந்தது. அதனடிப்படி ரணில் விக்கிரமசிங்க ஆஜரானார்.

முன்னாள் அமைச்சரின் ரிட் மனு நிராகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் அமைச்சரின் ரிட் மனு நிராகரிப்பு

முன்னாள் அமைச்சரின் ரிட் மனு நிராகரிப்பு

முன்னாள் அமைச்சரின் ரிட் மனு நிராகரிப்பு ,முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

களனி பிரதேச செயலக அதிகார வரம்புக்கு உட்பட்ட அரச காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்துள்ளது.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட சிலர், இந்த சம்பவம் தொடர்பாக, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பழம்பெரும் சிங்கள பாடகர் சமன் டி சில்வா காலமானார்
Posted in இலங்கை செய்திகள்

பழம்பெரும் சிங்கள பாடகர் சமன் டி சில்வா காலமானார்

பழம்பெரும் சிங்கள பாடகர் சமன் டி சில்வா காலமானார்

பழம்பெரும் சிங்கள பாடகர் சமன் டி சில்வா காலமானார் ,இலங்கையின் பழம்பெரும் சிங்கள பாடகர் சமன் டி சில்வா காலமானார் என்பதை அவரது குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இறக்கும் போது அவருக்கு வயது 69 ஆகும்.

இலங்கையின் பைலா இசைத் துறையில் மிகவும் முக்கியமான ஒருவராக சமன் டி சில்வா திகழ்ந்தவர்.

1975இல் தனது இசை வாழ்க்கையை ஆரம்பித்த இவர், கடந்த 4 தசாப்தங்களுக்கும் மேலாக தனது ரசிகர்களுக்காக சிறந்த பாடல்களை பாடி வந்துள்ளார்.

இலங்கை இசையை சர்வதேச பார்வையாளர்களிடம் கொண்டு சென்று, உலகம் முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்துவதில் தனது வாழ்க்கையை கழித்துள்ளார்.

அவர் கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி அனுர தலைமையில் மே தின பேரணி
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி அனுர தலைமையில் மே தின பேரணி

ஜனாதிபதி அனுர தலைமையில் மே தின பேரணி

ஜனாதிபதி அனுர தலைமையில் மே தின பேரணி ,தேசிய தொழிலாளர் தினத்தன்று தேசிய மக்கள் சக்தி இயக்க அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மே தின பேரணியை எதிர்வரும் வியாழக்கிழமை (மே 1) கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில், அரசாங்கத் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறும் இந்த மே தினக் கூட்டத்திற்கான அணிவகுப்பு நடத்துவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில், அதன் தலைவர்களின் பங்கேற்புடன், தலவாக்கலை நகரில் மே தினக் கூட்டத்தை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் மே தினக் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதுடன், நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கொழும்பிலும் மே தினக் கூட்டங்களை நடத்தவுள்ளனர்.

மே தினக் கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் எடுக்கவில்லை.

இந்த நாட்டில் உள்ள பல அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தீவின் பல்வேறு பகுதிகளில் மே தினக் கூட்டங்களை நடத்த ஏற்கெனவே முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மே 02 முதல் A/L பரீட்சை மறு பரிசீலனை
Posted in இலங்கை செய்திகள்

மே 02 முதல் A/L பரீட்சை மறு பரிசீலனை

மே 02 முதல் A/L பரீட்சை மறு பரிசீலனை

மே 02 முதல் A/L பரீட்சை மறு பரிசீலனை ,2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சனிக்கிழமை (26) அன்று வெளியான நிலையில்,

பரீட்சைப் பெறுபேறுகளின் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை மே 02ஆம் திகதி முதல் மே 16ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பாதாள உலக செயற்பாடுகளை தடுக்க நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

பாதாள உலக செயற்பாடுகளை தடுக்க நடவடிக்கை

பாதாள உலக செயற்பாடுகளை தடுக்க நடவடிக்கை

பாதாள உலக செயற்பாடுகளை தடுக்க நடவடிக்கை ,உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் பாதாள உலக நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக, பாதுகாப்புப் படையினரின் ஆதரவுடன், புதிய, விரிவான பாதுகாப்புத் திட்டத்தை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இந்தப் பாதுகாப்புத் திட்டத்தில், பொலிஸ் சிறப்புப் படையைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள், அரச புலனாய்வு அமைப்புகள் மற்றும் சாதாரண உடையில் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

கூடுதலாக, நடமாடும் ரோந்துகள் மற்றும் பாதுகாப்பு மோட்டார் சைக்கிள் பிரிவும் செயல்படுத்தப்பட்டுள்ளன.

கொலன்னாவை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர் டான் பிரியசாத்தின் கொலையைத் தொடர்ந்து, சில நபர்களின் தொடர்புகளின் அடிப்படையில், பாதாள உலகக் குற்றங்கள் நடந்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பல்வேறு அரசியல் கட்சிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு பாதாள உலகம் மிகவும் நுட்பமான தந்திரோபாயங்களைப் பயன்படுத்தக்கூடும் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3 பாடங்களில் 9457 மாணவர்கள் A சித்தி
Posted in இலங்கை செய்திகள்

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3 பாடங்களில் 9457 மாணவர்கள் A சித்தி

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3 பாடங்களில் 9457 மாணவர்கள் A சித்தி

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3 பாடங்களில் 9457 மாணவர்கள் A சித்தி ,இந்த ஆண்டு நடைபெற்ற (2024) க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 9,457 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்தியைப் பெற்றதாக பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.

மேலும், மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளைப் பெற்ற மாணவர்களின் சதவீதம் 3.45 சதவீதம் என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் அமித் ஜெயசுந்தர இவ்வாறு தெரிவித்தார்.

பெறுபேறுகளின்படி, பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளில் 64.73 சதவீதமானவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பல்கலைக்கழக சேர்க்கைக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், 2023ஆம் ஆண்டில் 64.33 சதவீதத்தை எட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு 274,361 பரீட்சார்த்திகள் தோற்றியதாகவும், அவர்களில் 177,588 மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்ததாகவும் அவர் கூறினார்.

மேலும், தேர்வில் 222,774 பள்ளி பரீட்சார்த்திகளும் 51,587 தனியார் பரீட்சார்த்திகளும் பங்கேற்றதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், பரீட்சையில் 3 முக்கிய பாடங்களிலும் மொத்தம் 29,244 பரீட்சார்த்திகள் தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வன்னிமைந்தனின் முள்ளிவாய்க்கள் புதிய பாடல்
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள் விசேட செய்திகள்

வன்னிமைந்தனின் முள்ளிவாய்க்கல் புதிய பாடல்

வன்னிமைந்தனின் முள்ளிவாய்க்கல் புதிய பாடல்

வன்னிமைந்தனின் முள்ளிவாய்க்கல் புதிய பாடல் ,முள்ளிவாய்க்கால் துயர் சுமந்து புதிய பாடல் ஒன்றை வன்னி மைந்தன் வெளியிட்டுள்ளார் .

இந்த பாடல் உருவாக்கத்தில் கைகோர்த்து பங்காற்றியவர் ,தேனிசை செல்லப்பாவின் புதல்வன், இளங்கோவன்செல்லப்பாவின் இசையில் ,அவரது மகன் பாவேந்தன் குரலில் ,வன்னி மைந்தன் வரிகளில் ,காரை சேனாதி அண்ணாவின் நிதி பங்களிப்பில் ,இந்த பாடல் உருவாக்கம் பெற்றுள்ளது .

72 மணித்தியாலத்தில் சிறப்பாக உருவாக்கி உயிர் கொடுத்து ஈழ தமிழ் மக்கள் மனங்களின் சுமைகளை வெளிப்படுத்திய அனைவருக்கும் எதிரி இணையம் மற்றும் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறது .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கை வருகிறது
Posted in இலங்கை செய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கை வருகிறது

ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கை வருகிறது

ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கை வருகிறது ,ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளது.

GSP+ சலுகை தொடர்பான நிபந்தனைகள் குறித்த முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்காக இந்த குழு வருகிறது.

இந்தக் குழு எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழுவொன்று எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் மே மாதம் 7 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூடு
Posted in இலங்கை செய்திகள்

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூடு

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூடு

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூடு ,கட்டுநாயக்க துப்பாக்கிச் சூடு குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகின

கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இன்று (26) அதிகாலை ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 29 வயதான உதார சதுரங்க என்ற இளைஞர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணைகளில், அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி இரண்டு முறை சுட்டதாக தெரியவந்துள்ளது.

காயமடைந்த இளைஞர், வட்டிக்கு பணம் வழங்குவது மற்றும் பல வணிக நிறுவனங்களை நடத்தி வருபவர் என தெரிவிக்கப்படுகிறது.

இவர் தனது தந்தையுடன் வீட்டில் உள்ள அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இரு துப்பாக்கிதாரிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

காயமடைந்த இளைஞர் முதலில் மினுவங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவ இடமான வீட்டு அறையில் இருந்து இரண்டு வெற்று துப்பாக்கி தோட்டா உறைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன

மின்னல் தாக்கி ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

மின்னல் தாக்கி ஒருவர் பலி

மின்னல் தாக்கி ஒருவர் பலி

மின்னல் தாக்கி ஒருவர் பலி ,அரலகங்வில பொலிஸ் பிரிவின் கெக்குளுவெல பகுதியில் நேற்று வயல்வெளியில் வேலை செய்துக் கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

மின்னல் தாக்கியதில் காயமடைந்த நபர் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவர் அரலகங்வில, கெக்குலுவெல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

இதில் மற்றொரு நபரும் காயமடைந்து அரலகங்வில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

துறவியின் உடையில் நுழைய முயன்ற மாணவன் கைது
Posted in இலங்கை செய்திகள்

துறவியின் உடையில் நுழைய முயன்ற மாணவன் கைது

துறவியின் உடையில் நுழைய முயன்ற மாணவன் கைது

துறவியின் உடையில் நுழைய முயன்ற மாணவன் கைது ,பௌத்த துறவியின் உடையில் ஸ்ரீ தலதா மாளிகைக்குள்நுழைய முயன்ற பள்ளி மாணவன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் கம்பஹா, கிரல்லவெல பகுதியைச் சேர்ந்த18 வயதுடைய பாடசாலை மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

புத்த துறவிகளுக்கான ஒதுக்கப்பட்ட வரிசை வழியாகதலதா மாளிகைக்குள் நுழைய முயன்ற போது அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்துகண்டி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திடீரென மோடிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த அநுர
Posted in இலங்கை செய்திகள்

திடீரென மோடிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த அநுர

திடீரென மோடிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த அநுர

திடீரென மோடிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த அநுர ,அண்மையில் 26 பேர் கொல்லப்பட்ட இந்தியாவின் காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று (25) பிற்பகல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இரு நாட்டுத் தலைவர்களும் சுமார் பதினைந்து நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினர்.

இந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகக் கூறிய ஜனாதிபதி, இந்திய மக்களுடன் இலங்கை எப்போதும் சகோதரத்துவத்துடன் பிணைந்துள்ளது என்றார்.

உலகில் எங்கு இடம்பெற்றாலும், பயங்கரவாதத்தை தான் வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட ஜனாதிபதி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தித்தார்.

மேலும், எழுந்துள்ள நிலைமையால் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழ்நிலை விரைவில் தீர்க்கப்பட்டு பிராந்திய அமைதி நிலைநாட்டப்படும் என்பது இலங்கையின் எதிர்பார்ப்பாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்