Posted in Uncategorized

மனைவியுடன்சண்டை – கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை

மனைவியுடன்சண்டை – கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை

மட்டக்களப்பு தாழங்குடா பகுதியில் ஆண் ஒருவர் வீட்டின் கூரையில் தூக்கிட்டுத் தற்கொலை

செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (10) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

தாழங்குடா சமுர்த்தி வங்கி வீதியைச் சேர்ந்த மேசன் தொழிலாளியான 45 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான விக்டர் சுஜித்குமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சண்டையை அடுத்து சம்பவ தினமான நேற்று (09) மனைவி பிள்ளைகளுடன் அவரது தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் தனிமையில் இருந்த

குறித்த நபர் வீட்டின் கூரையில் கயிற்றின் உதவியுடன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது