Tag: சல்மான் கான்
சல்மான் கான் நடிக்க மறுத்த படத்தில் ஒப்பந்தமான விஜய் சேதுபதி
சல்மான் கான் நடிக்க மறுத்த படத்தில் ஒப்பந்தமான விஜய் சேதுபதி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, இந்தியில் மும்பைகார், மெரி கிறிஸ்துமஸ், காந்தி டாக்ஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
சல்மான் கான் நடிக்க மறுத்த படத்தில் ஒப்பந்தமான விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி, சல்மான் கான்
இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘அந்தாதூன்’. 3 தேசிய விருதுகளை வென்ற இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருந்தார். இவர் இயக்கத்தில்
அடுத்ததாக உருவாகும் படம் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’. இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்பும் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
பாலிவுட் நடிகர் சல்மான் கானை மனதில் வைத்து தான் இந்தப் படத்தின் கதையை இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் எழுதியிருந்தாராம். கதை சல்மான் கானுக்கு பிடித்திருந்தாலும், படத்தில்
கமர்ஷியல் அம்சங்கள் குறைவாக இருந்ததால் அவர் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தான் அந்த வாய்ப்பு நடிகர் விஜய் சேதுபதிக்கு சென்றதாம்.
சல்மான் கான் மீது மோசடி புகார்
சல்மான் கான் மீது மோசடி புகார்
சல்மான்கான், அவரது சகோதரி அல்விராகான் மற்றும் பீயிங் ஹ்யூமன் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
சல்மான் கான் மீது மோசடி புகார்… சம்மன் அனுப்பிய போலீஸ்
சல்மான் கான்
இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கான் ஏற்கனவே அரிய வகை மானை வேட்டையாடிய வழக்கில் சிக்கினார். தற்போது அவர் மீது புதிதாக மோசடி புகார் கூறப்பட்டு உள்ளது.
சண்டிகார் நகரை சேர்ந்த தொழில் அதிபர் அருண் குப்தா என்பவர் சல்மான்கான் மற்றும் அவரது சகோதரி அல்விராகான் ஆகியோர் மீது போலீசில் அளித்துள்ள புகார் மனுவில், ‘’நான் சண்டிகாரில்
2018-ல் சல்மான்கானின் பீயிங் ஹ்யூமன் நிறுவனம் பெயரில் அதிக பணம் செலவழித்து நகைக்கடை தொடங்கினேன். கடைக்கு தேவையான பொருட்களை அளிப்பதாக சல்மான்கான் தரப்பில் தெரிவித்தனர். ஆனால் சொன்னபடி செய்யவில்லை.
கடை திறப்பு விழாவில் சல்மான்கான் கலந்து கொள்வார் என்று கூறினர். ஆனால் அவர் வரவில்லை. கடைக்கு தேவையான பொருட்களை அனுப்பாததால் கடந்த வருடம் பிப்ரவரி மாதம்
முதல் கடை பூட்டப்பட்டு எனக்கு பொருளாதார இழப்பும், மன உளைச்சலும் ஏற்பட்டு உள்ளது’’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
சல்மான் கான்
இந்த புகாரின் பேரில் சல்மான்கான், அவரது சகோதரி அல்விராகான் மற்றும் பீயிங் ஹ்யூமன்
அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் வருகிற 13-ந் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
பண்ணைவீட்டில் தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடிய சல்மான் கான்
பண்ணைவீட்டில் தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடிய சல்மான் கான்
இந்தி நடிகர் சல்மான் கான் தனது 55-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.
பண்ணைவீட்டில் தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடிய சல்மான் கான்
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சல்மான் கான்
இந்தி சினிமா துறையில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சல்மான்கான். இவர் 100-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
இவர் மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் 1965 ஆம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி பிறந்தார். இவர் தனது நடிப்பு திறனால் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில், நடிகர் சல்மான் கான் இன்று (டிசம்பர் 27) தனது 55-வது வயதில் அடியெடுத்துவைக்கிறார். தனது பிறந்தநாளையொட்டி
நேற்று இரவே மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள தனது பண்ணைவீட்டிற்கு சல்மான் கான் சென்றார்.
அங்கு தனது நண்பர்கள் மற்றும் பாலிவுட் துறையினருடன் இணைந்து சல்மான் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.
55-வது பிறந்தநாளை கொண்டாடிவரும் சல்மான் கானுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.







