Posted in Uncategorized

அகதி தஞ்ச கோரிக்கைகாக புலிகள் அமைப்பு லண்டனில் இயக்கம்- இலங்கை அரசு

அகதி தஞ்ச கோரிக்கைகாக புலிகள் அமைப்பு லண்டனில் இயக்கம்- இலங்கை அரசு

பிரிட்டனில் புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் பெரும்பாலான புலிகள் அமைப்பினர் அதில் இருந்து ஒதுங்கி விட்டனர் ,அவர்கள் தாம் ஒன்று தமது வேலை ஒன்று என உள்ளனர்


ஆனால் அகதி தஞ்ச அகோரிக்கை ஏற்று நடத்தும் சிலர் ஆட்களை கூட்டி அவர்களுக்கு விசா பெற்று கொள்ளும்

முகமாக இந்த கூட்டங்களை ஒழுங்கு படுத்தி அதில் கலந்து கொள்கின்றனர்
என சிங்கள உளவுத்துறை ஊடகம் ஒன்று செய்தி வெளிட்டு தமிழர்களை கொச்சை படுத்தியுள்ளது

மேற்படி தகவலை பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு புலிகள் கட்சி பிரமுகர் தமக்கு தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிட பட்டுள்ளது

அப்படி என்றால் சிங்கல அரசினால் சில சட்டத்தரணிகள் இலக்கு வைக்க படுவதுடன் ,மேலும் அகதிகளுக்கு ஆப்பு வைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது

மகிந்த காசில் வாழ்கை ஓட்டும் புலிகள் கட்சிகள் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது இங்கே குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized

    செல்பி மோகம் – ரயிலில் இருந்து வீழ்ந்து இறந்த வாலிபர்

    செல்பி மோகம் – ரயிலில் இருந்து வீழ்ந்து இறந்த வாலிபர்

    வவுனியா கல்லாறு பாலத்தின் ஊடக பயணித்து கொண்டிருந்த பயணிகள் தொடரூந்தில்

    பயணித்த வாலிபர் ஒருவர் செல்பி மோகத்தினால் அந்த பாலத்தை கடக்கும் பொழுது செல்பி

    எடுக்க முயன்று அதில் மோதுண்டு வீழ்ந்த பரிதாபம் இடம்பெற்றுள்ளது

    சிதைந்த நிலையில் சடலம் மீட்க பட்டு குடும்ப உறவுகளிடம் ஒப்படைக்க பட்டுள்ளது

    இறந்தவர் 21 வயதுடைய வாலிபர் என தெரிவிக்க படுகிறது

      Posted in Uncategorized

      இந்தியா இராணுவ சரக்கு விமனங்கள் கொழும்பில் செய்த வேலை

      இந்தியா இராணுவ சரக்கு விமனங்கள் கொழும்பில் செய்த வேலை

      இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நானோ நைட்ரஜன் திரவ உரத் தொகுதியை ஏற்றிக்கொண்டு

      இந்திய விமானப்படையின் இரண்டு சிறப்பு சரக்கு விமானங்கள் வியாழக்கிழமை கட்டுநாயக்க

      பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன.

      கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் கூறியதாவது: இரண்டு IAF C-17 Globemaster

      விமானங்கள் 100,000 கிலோ நானோ நைட்ரஜனுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான

      நிலையத்தை வந்தடைந்தன. இலங்கை விவசாயிகளுக்கு நானோ நைட்ரஜன் உரம் கிடைப்பதை

      விரைவுபடுத்துவதற்கும், இயற்கை விவசாயத்தை நோக்கிய இலங்கை அரசாங்கத்தின்

      முன்முயற்சிக்கு ஆதரவளிப்பதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டதாக இந்திய அதெரிவித்துள்ளது

      Posted in Uncategorized

      காவல்துறை திடீர் சோதனை – 1,019 பேர் கைது

      காவல்துறை திடீர் சோதனை – 1,019 பேர் கைது

      இலங்கை மேல்மனத்தில் காவல்துறை அணியினர் நடத்திய திடீர் சோதனைநடவடிக்கையின்

      பொழுது


      சுமார் 1,019 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

      இவர்கள் நீதிம்னற பிடியாணை பிறப்பிக்க பட்டு தலைமறைவாக இருந்த நூற்றுக்கு

      மேற்பட்டவர்கள் கைதாகியுள்ளமை குறிப்பிட தக்கது

        Posted in Uncategorized

        யாழில் வாள்வெட்டு – ரவுடிகள் அட்டகாசம்

        யாழில் வாள்வெட்டு – ரவுடிகள் அட்டகாசம்

        யாழ்ப்ப்பாணம் கொக்குவில் – கேணியடிப் பகுதியில் ஊந்துருளியில் வருகை தந்த மூவர்
        திடீரென வாலிபர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதலை நடத்தினர்

        இதில் பலத்த காயமடைந்த வாலிபர் யாழ்ப்பாண மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

        மகிந்த ஆட்சியில் உருவாக்க பட்ட வாள்வெட்டு குழுவினர் பெரும் அடாவடியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

          Posted in Uncategorized

          பெட்ரோல் தாங்கி வெடித்து சிதறி 100 பேர் மரணம்

          பெட்ரோல் தாங்கி வெடித்து சிதறி 100 பேர் மரணம்

          Sierra Leone பகுதியில் பெட்ரோல் காவி சென்ற தாங்கி ஒன்று ரக் ஒன்றுடன் மோதி சிதறி வெடித்தது

          ,இந்த சம்பவத்தில் சிக்கி இதுவரை நூறு பேர் பலியாகியுள்ளனர் மேலும் நூற்றுக்கு

          மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற வண்ண உள்ளனர்

          மேற்படி விபத்து தொடர்பில் பூரண விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

            Posted in Uncategorized

            போலி நகைகளை அடகு வைத்து லட்சக்கணக்கில் மோசடி

            போலி நகைகளை அடகு வைத்து லட்சக்கணக்கில் மோசடி

            தனியார் நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து வாடிக்கையாளர்கள் கடன் பெற்று இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக 2 ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

            காஞ்சிபுரம் தனியார் நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து லட்சக்கணக்கில் மோசடி
            நகைகள்

            மும்பையை தலைமையிடமாகக் கொண்டு எஸ்.பி. எப்.சி. எனும் பெயரில் தனியார் நகைக்கடன் வழங்கும் நிறுவனம் காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் செயல்பட்டு வருகிறது.

            இந்த நிறுவனத்தில் ஆண்டுதோறும் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்வது வழக்கம். கடந்த சில தினங்களாக நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் தலைமை நிறுவனத்தில் இருந்து வந்த அதிகாரிகள் கணக்குகளை தணிக்கை செய்த போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

            தனியார் நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து வாடிக்கையாளர்கள் கடன் பெற்று இருப்பது தெரியவந்தது.

            இது குறித்து வங்கியில் பணிபுரியும் ஊழியர்களான காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன், மகேஷ் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

            அப்போது அவர்கள் இருவரும் வாடிக்கையாளர்களின் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து கடன் பெற்றதாக கணக்கு காட்டி பல லட்சம் பணத்தை எடுத்து மோசடி செய்து இருப்பது தெரியவந்தது.

            இச்சம்பவம் குறித்து தனியார் நகை கடன் நிறுவன தலைமை அதிகாரி விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் தனியார் நகை கடன் வழங்கும் நிறுவனத்தில் பணிபுரிந்த இரு ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

              Posted in Uncategorized

              போதையில் அடுத்தவர் வீட்டுக்குள் ஆடையின்றி புகுந்த முன்னாள் எம்.பி.

              போதையில் அடுத்தவர் வீட்டுக்குள் ஆடையின்றி புகுந்த முன்னாள் எம்.பி.

              குடிபோதையில் அடுத்தவர் வீட்டுக்குள் ஆடையின்றி புகுந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. தாக்கப்பட்டதால் குன்னூரில் பரபரப்பு ஏற்பட்டது.

              குடிபோதையில் அடுத்தவர் வீட்டுக்குள் ஆடையின்றி புகுந்த முன்னாள் எம்.பி.


              குன்னூரில் ஒரு வீட்டிற்குள் நிர்வாணமாக புகுந்த முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன்
              இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

              குன்னூர்:

              நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(வயது 56). கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சியில் நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக

              இருந்தார். மேலும் குன்னூர் நகர்மன்ற தலைவராக பதவி வகித்து உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தீபாவளி நாளில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் குடிபோதையில்

              இரவு 10 மணியளவில் ஓட்டுப்பட்டறை அருகே முத்தாளம்மன் பேட்டை குடியிருப்பு பகுதியில் உள்ள கோபி(47) என்பவரது வீட்டுக்குள் ஆடையின்றி நிர்வாண கோலத்தில் திடீரென புகுந்தார்.

              அப்போது வீட்டில் பெண்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரிடம், கோபி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அவரை

              கோபி தாக்கியதாக தெரிகிறது. இதனால் காயமடைந்ததாக கூறி குன்னூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கோபாலகிருஷ்ணன் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

              இதையடுத்து முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் தனது வீட்டிற்குள் நிர்வாணமாக நுழைந்தது குறித்து குன்னூர் நகர போலீஸ் நிலையத்தில் கோபி புகார் அளித்தார். மேலும் தன்னை

              தாக்கியதாக கோபி மீது கோபாலகிருஷ்ணன் புகார் கொடுத்தார். இதனால் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் நிர்வாணமாக

              அடுத்தவர் வீட்டுக்குள் புகுந்த காட்சி செல்போனில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

                Posted in Uncategorized

                அமெரிக்கா பறக்கும் கூட்டமைப்பு – அவசர அழைப்பு ஏன் ..?

                அமெரிக்கா பறக்கும் கூட்டமைப்பு – அவசர அழைப்பு ஏன் ..?

                இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழு ஒன்று அமெரிக்காவிற்கு பயணமாகிறது ,இந்த

                பயணத்தின் பொழுது


                இலங்கை தமிழர் தொட்ரபில் பேச படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது


                அமெரிக்காவின் அழைப்பினை ஏற்று இவர்கள் பயணமாவது ஆளும் ஆட்சியாளர்களுக்கு

                கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

                  Posted in Uncategorized

                  கடலில் மோதி சிதறிய அமெரிக்கா நீர்மூழ்கி

                  கடலில் மோதி சிதறிய அமெரிக்கா நீர்மூழ்கி

                  அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் எப்படி விபத்தில் சிக்கியது? கடற்பகுதியில் அல்லது நீருக்கடியில் உள்ள மலை மீது மோதியதா? என்பது குறித்த முழுமையான விவரத்தை கடற்படை வெளியிடவில்லை.

                  அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் விபத்து- 2 உயர் அதிகாரிகளை நீக்கியது அமெரிக்க கடற்படை
                  விபத்துக்குள்ளான நீர்மூழ்கி கப்பல்
                  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                  வாஷிங்டன்:

                  அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான அணு ஆயுத திறன் கொண்ட நீர்மூழ்கி கப்பலான யூஎஸ்எஸ் கனெக்டிகட் நீர்மூழ்கி கப்பல் கடந்த மாதம் 2ம் தேதி தென்சீனக்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத பொருள் மோதி சேதமடைந்துள்ளது. இதில் மாலுமிகள் சிலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்த தகவலை 5 நாட்களுக்கு பிறகே கடற்படை வெளியிட்டது.

                  விபத்தில் கப்பலுக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், அமெரிக்க பிராந்தியமான குவாமை நோக்கி கப்பல் பயணிப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.

                  இந்த விபத்து குறித்து அமெரிக்க கடற்படை விசாரணை நடத்தி வந்த நிலையில், 2 உயர் அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தளபதி மற்றும் நிர்வாக அதிகாரிக்கு ஆலோசகராக பணியாற்றிய ஒரு மாலுமியும் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

                  யுஎஸ்எஸ் கனெக்டிகட் நீர்மூழ்கிக் கப்பல் எப்படி விபத்தில் சிக்கியது? கடற்பகுதியில் அல்லது நீருக்கடியில் உள்ள மலை மீது மோதியதா? மற்றும் கப்பலுக்கு ஏற்பட்ட சேதம் குறித்த முழுமையான விவரத்தை கடற்படை பகிரங்கமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

                    Posted in Uncategorized சினிமா

                    விஜய் சேதுபதியை தாக்க முயன்ற கேரள வாலிபர் கைது

                    விஜய் சேதுபதியை தாக்க முயன்ற கேரள வாலிபர் கைது

                    நடிகர் விஜய் சேதுபதியை தாக்க முயன்ற கேரள வாலிபரை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

                    விஜய் சேதுபதியை தாக்க முயன்ற கேரள வாலிபர் கைது
                    விஜய் சேதுபதி – விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை வாலிபர் தாக்க முயன்ற காட்சி
                    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி.

                    நடிகர் விஜய் சேதுபதி நேற்று முன்தினம் பெங்களூருவில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து விமானத்தில் சென்றார்.

                    விமான நிலையத்தில் அவரும், உதவியாளரும் சென்றபோது, வாலிபர் ஒருவர் திடீரென அவரை தாக்க முயன்றார். உடனே விஜய் சேதுபதியின் பாதுகாவலர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் அந்த வாலிபரை பாய்ந்து சென்று பிடித்தனர்.

                    பின்னர் அவர்கள் விஜய் சேதுபதியை அங்கிருந்து மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் விஜய் சேதுபதியை தாக்க முயன்ற வாலிபரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.

                    அவர் போலீசாரிடம் கூறும்போது, விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை கண்டதும் அவருடன் செல்ஃபி எடுக்க விரும்பியதாகவும், தான் குடிபோதையில் இருந்ததால், அதற்கு உதவியாளர் மறுத்ததாகவும் கூறினார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் விஜய்சேதுபதியின் உதவியாளரை தாக்க முயன்றதாகவும் கூறினார்.

                    மேலும் அந்த வாலிபர் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வாலிபரை எச்சரித்து அனுப்பினர்.

                    இதற்கிடையே நடிகர் விஜய் சேதுபதியை விமான நிலையத்தில் வாலிபர் ஒருவர் தாக்க முயன்ற வீடியோ காட்சிகளை அங்கிருந்த சிலர் செல்போனில் பதிவு செய்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். சிறிது நேரத்தில் அந்த வீடியோ வைரலானது. அதனை பார்த்தவர்கள் விஜய் சேதுபதியை வாலிபர் தாக்கியது ஏன்? இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்றும் கேள்விகள் எழுப்பினர்.

                    இதற்கிடையே நடிகர் விஜய் சேதுபதியை விமான நிலையத்தில் வாலிபர் தாக்க முயன்ற வீடியோ உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. அவர்கள் இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க பெங்களூரு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

                    அதன்படி பெங்களூரு போலீசார் தாமாக முன்வந்து சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் விஜய் சேதுபதியை தாக்க முயன்ற வாலிபரை கண்டுபிடித்தனர். அவர் கேரளாவைச் சேர்ந்த ஜான்சன் என தெரியவந்தது. தற்போது பெங்களூருவில் வசித்து வரும் ஜான்சன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

                      Posted in Uncategorized

                      வாடிக்கையாளருக்கு அமோசான் கொடுத்த பேரதிர்ச்சி

                      வாடிக்கையாளருக்கு அமோசான் கொடுத்த பேரதிர்ச்சி

                      கேரள மாநிலம் வயநாட்டின் கனியம்பேட்டா கிராமத்தில் வசித்து வருபவர் மிதுன் பாபு. இவர் சமீபத்தில் தான் வாங்கிய பாஸ்போர்ட்டை வைப்பதற்காக கவர் ஒன்றை அமேசான் நிறுவனத்தில் ஆர்டர் செய்துள்ளார்.

                      சில தினங்களுக்குப் பிறகு அமேசன் நிறுவனத்தில் இருந்து நவம்பர் 1-ம் தேதி மிதுன் பாபுவுக்கு ஒரு பார்சல் வந்தது. அந்தப் பார்சலைப் பிரித்து பார்த்த மிதுனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

                      அந்தப் பார்சலில் பாஸ்போர்ட் கவருக்கு பதிலாக உண்மையான பாஸ்போர்ட் இருந்ததைக் கண்டு மிதுன் பாபு அதிர்ச்சி அடைந்தார்.


                      இந்திய அரசால் வழங்கப்படும் பாஸ்போர்ட் அமேசான் மூலம் எப்படி வந்தது என்பது தெரியாமல் அவர் குழம்பினார்.

                      இதுகுறித்து அமேசான் நிறுவன வாடிக்கையாளர் சேவைப் பிரிவைத் தொடர்பு கொண்டார். அங்கு முறையான பதில் அளிக்கப்படவில்லை.

                      இதனால் குழம்பிய மிதுன் பாபு அந்த பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தார். அது திருச்சூரை சேர்ந்த முகமது சலீம் என்பவருடையது என்பதை கண்டுபிடித்தார். உடனே அதில் இருந்த முகவரியை

                      தொடர்பு கொண்டு பாஸ்போர்ட் விவகாரம் குறித்து விசாரித்தார். அந்த பாஸ்போர்ட் முகமது சலீமின் ஒரிஜினல் பாஸ்போர்ட் என தெரிந்தது.

                      விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன் அமேசானில் பாஸ்போர்ட் கவர் வாங்கிய சலீம், கவர் பிடிக்காததால் அதை மீண்டும் திருப்பி அனுப்பிவிட்டார். அப்படி அனுப்புகையில் கவரில் வைத்த பாஸ்போர்ட்டை எடுக்க மறந்தது தெரிய வந்தது.

                      முகமது சலீம் திருப்பி அனுப்பிய பாஸ்போர்ட் கவரை சோதிக்காத அமேசான் நிறுவனத்தினர் மீண்டும் அந்த பாஸ்போர்ட் கவரை மிதுன் பாபுவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

                      வாடிக்கையாளர் ஆர்டர் செய்த பாஸ்போர்ட் கவருக்கு பதிலாக, ஒரிஜினல் பாஸ்போர்ட்டை டெலிவரி செய்த அமேசான் நிறுவனத்தின் செயல் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

                        Posted in Uncategorized

                        ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு பணம் பயன்படுத்த தடை

                        ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு பணம் பயன்படுத்த தடை

                        ஆப்கானிஸ்தானில் கடைகளில், சந்தைகளில் அமெரிக்க டாலர் பரவலாக புழக்கத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

                        ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு பணம் பயன்படுத்த தடை- தலிபான்கள் அதிரடியால் புதிய நெருக்கடி

                        ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது. எந்த நேரமும் துப்பாக்கியும், கையுமாக அலைந்து கொண்டிருக்கிற தலிபான்களின் நிர்வாகம் அங்கு வந்து

                        விட்டது. தலிபான்கள் அங்கு ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததைத்தொடர்ந்து, பல்லாயிரம் கோடி மதிப்பிலான ஆப்கானிஸ்தானின் வெளிநாட்டு சொத்துகளை அமெரிக்க ரிசர்வ் வங்கியும்,

                        ஐரோப்பிய மத்திய வங்கிகளும் முடக்கி உள்ளன. சர்வதேச நிதியமும், உலக வங்கியும் கூட ஆப்கானிஸ்தானுக்கு எந்த நிதி உதவியும் செய்ய முடியாது என கைவிரித்துவிட்டன.

                        இதனால் ஆப்கானிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கிறது. இந்த நிலையில் புதிய நெருக்கடியாக, அங்கு வெளிநாட்டு பணத்தை பயன்படுத்துவதற்கு தலிபான்கள் அதிரடியாக

                        தடை விதித்து உள்ளனர். இதற்கான அறிவிப்பை தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிகுல்லா முஜாகித் வெளியிட்டுள்ளார். அதில் அவர், “அனைத்து குடிமக்களும், கடைக்காரர்களும்,

                        வியாபாரிகளும், தொழில் அதிபர்களும், பொதுமக்களும் இனி எல்லா பரிமாற்றங்களையும் ஆப்கானியைக்கொண்டு (ஆப்கானிஸ்தான் பணம்) மட்டுமே செய்ய வேண்டும். வெளிநாட்டு

                        பணங்களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. யாரேனும் மீறி பயன்படுத்தினால் சட்டப்பூர்வமான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியது வரும்” என கூறி உள்ளார்.

                        பொருளாதார நிலைமையையும், தேசிய நலன்களையும் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தலிபான்கள் கூறி உள்ளனர்.

                        ஆப்கானிஸ்தானில் கடைகளில், சந்தைகளில் அமெரிக்க டாலர் பரவலாக புழக்கத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

                        Posted in Uncategorized

                        சிரியா மீது இஸ்ரேல் விமானங்கள் அகோர ஏவுகணை தாக்குதல்

                        சிரியா மீது இஸ்ரேல் விமானங்கள் அகோர ஏவுகணை தாக்குதல்

                        சிரியாவின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தின

                        இதில் எதிரிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

                        லெபனான் போராளிகள் சிரியாவுக்குள் இருந்து ஆயுத கடத்தலில் ஈடுபட்டுள்ளதால் இந்த தாக்குதல் மேற்கொள்ள பட்டதாக தெரிவிக்க படுகிறது

                          Posted in Uncategorized

                          வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் – பலர் மரணம்

                          வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் – பலர் மரணம்

                          ரஷியாவில் பறந்து கொண்டிருந்த இலகு ரக பயணிகள் விமானம் ஒன்று திடீரென ராடரில் இருந்து மறைந்தது

                          இதனை அடுத்து மேற்படி விமானத்தை தேடும் பணிகள் ஆரம்பிக்க பட்டன

                          இதன் பொழுது காட்டு பகுதியில் ஒன்றில் வீழ்ந்து நொறுங்கிய நிலையில் விமானம் கண்டு பிடிக்க பட்டது

                          கால நிலை சீர்கேட்டினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது

                          இதில் ஐவர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர் ,காயமடைந்த நிலையில் இருவர் மீட்க பட்டுள்ளனர்
                          பனிப்புகார் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

                            Posted in Uncategorized

                            தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.246 கோடி மோசடி


                            தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.246 கோடி மோசடி


                            தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.246 கோடி முறைகேடு- மத்திய மந்திரி எல்.முருகன் பேட்டி
                            மத்திய மந்திரி எல்.முருகன்

                            மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை இணை மந்திரி எல்.முருகன், சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

                            மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் (100 நாள் வேலை திட்டம்) கீழ் தமிழக அரசுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை மத்திய அரசு வழங்கவில்லை என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

                            இந்த திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் தமிழகத்துக்கு ரூ.6 ஆயிரத்து 565 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கான நிலுவைத்தொகை ரூ.1,178 கோடியை விடுவிக்க

                            வேண்டும் என்று அக்டோபர் 27-ந் தேதி மத்திய ஊரக வளர்ச்சித்துறை மந்திரியை தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நேரில் சந்தித்து வலியுறுத்தியபோது ஒரு வாரத்தில் நிலுவைத்தொகை விடுவிக்கப்படும் என்று மத்திய மந்திரி உறுதி அளித்தார்.

                            ஆனால் 5 நாட்களிலேயே, தமிழக அரசு கோரியதைவிட அதிகமாக ரூ.1,361 கோடி நிதி விடுவிக்கப்பட்டது.

                            மத்திய அரசை களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்துகின்றனர். தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் சுமார் ரூ.246 கோடி அளவுக்கு

                            முறைகேடு நடந்துள்ளதாக தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை வெறும் ரூ.1 கோடியே 85 லட்சம் வரை மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.

                            முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

                            இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு 2 ஆயிரத்து 500 லட்சம் மனித வேலை நாட்கள் ஒதுக்கப்பட்டபோதிலும், தமிழக அரசு 2 ஆயிரத்து 190 லட்சம் மனித வேலை நாட்களை மட்டுமே

                            பயன்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின்படி மாவட்டத்துக்கு ஒரு குறைதீர் அதிகாரி, சமூக தணிக்கை குழு நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் அதுபோன்று எந்த ஒரு அதிகாரியும் நியமிக்கப்படவில்லை.

                            இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறது.

                            கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் குறித்த விவரங்களை தமிழக அரசிடம் மத்திய அரசு கோரியபோதிலும், கடந்த மாதம் 25-ந் தேதி வரை தமிழக அரசு இந்த விவரங்களை அளிக்கவில்லை. தமிழக அரசின் அலட்சியப் போக்கால் மீனவர்கள் விடுவிக்கப்படுவது தாமதமாகி வருகிறது.

                            கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருச்சியில் என்னைச் சந்தித்து முறையிட்டனர். மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்.

                            முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடி

                            தலைமையிலான மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம்கூட நடைபெறவில்லை.

                            கடல்சார் மசோதாவால் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அனைத்து கடலோர மாநிலங்கள் மற்றும் மீனவ சங்கங்களின் ஆலோசனை பெறப்பட்டு அனைவரையும் திருப்திப்படுத்தும் விதத்தில் இதற்கான சட்டம் கொண்டு வரப்படும்.

                            இவ்வாறு அவர் கூறினார்.

                            பேட்டியின்போது சென்னை பத்திரிகை தகவல் மையத்தின் இயக்குனர் பி.குருபாபு உடன் இருந்தார்.

                              Posted in Uncategorized

                              சாரதியை அடித்து துன்புறுத்தி நிர்வாணமாக்கிய சிங்கள பொலிஸ்

                              சாரதியை அடித்து துன்புறுத்தி நிர்வாணமாக்கிய சிங்கள பொலிஸ்

                              இலங்கையில் ஆளும் கோட்டபாய அரசில் சாரதி ஒருவர் கைது செய்ய பட்டு துன்புறுத்த பட்டு நிர்வாணமாக்க பட்ட விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                              மேற்படி சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் .

                                Posted in Uncategorized

                                வேகமாக பரவும் நோய் – மக்களுக்கு எச்சரிக்கை

                                வேகமாக பரவும் நோய் – மக்களுக்கு எச்சரிக்கை

                                கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் குறிப்பாக ஓட்டமாவடி, வாழைச்சேனை மற்றும் ஏறாவூர் பகுதிகளில் இருந்து வயிற்றோட்டம் காரணமாக அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

                                சிறுவர்கள் மாத்திரம் இன்றி பெரியவர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். எனவே இது தொடர்பில் அவதானம் தேவை என கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஷ்ட

                                விரிவுரையாளரும் மட்டு. போதனா வைத்தியசாலையின் விசேட குழந்தை நல வைத்திய நிபுணருமான டொக்டர் விஜி திருக்குமார் தெரிவித்தார்.

                                அவர் மேலும் தெரிவிக்கையில்: “இதன் அறிகுறிகளாக காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றோட்டம்

                                காணப்படும். சில சமயம் இரத்தம் கலந்த சளியுடன் வயிற்றோட்டம் காணப்படும். இது ஒருவகை பற்றீரியா தொற்றினால் ஏற்படுகிறது.

                                “சில சமயம் வயிற்றோட்டம் இல்லாமல் அல்லது குறைவான வாந்தி, வயிற்று வலி மற்றும் வயிறு ஊதுதல் போன்ற குணங்குறிகளுடன் தோன்றலாம்.

                                “சிறுவர்கள், உணவு மற்றும் நீர் அருந்துவது குறைவாகவும் நீர் இழப்பு அதிகமாகவும் இருப்பதால் சோர்வு மற்றும் மயக்க நிலை ஏற்படும்.

                                “எனவே, இவ்வாறான அறிகுறிகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் வைத்தியசாலையை நாடுவது அவசியம்.

                                “மேலும், கொரோனா தொற்றின் பின் சிறுவர்களுக்கு ஏற்படுகின்ற Miss-C எனப்படும் பல்தொகுதி அழற்சி நோய் நிலையின் போதும் காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் போன்ற அறிகுறிகள்

                                தோன்றும். எனவே, உங்கள் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு காணப்படுமாயின் விரைவாக வைத்தியசாலையை நாடுதல் சாலச்சிறந்தது” என்றார்

                                  Posted in Uncategorized

                                  அமெரிக்காவில் வேட்டி-சேலை அணிந்து தமிழில் பாட்டுப்பாடிய தமிழர்கள்

                                  அமெரிக்காவில் வேட்டி-சேலை அணிந்து தமிழில் பாட்டுப்பாடிய தமிழர்கள்

                                  புளோரிஸ் யுனைடெட் மெதடிஸ்ட்’ தேவாலயத்தில் தமிழ் குடும்பங்களை சேர்ந்த பெண்கள்

                                  பாரம்பரிய முறைப்படி சேலை, பாவாடை-தாவணி அணிந்தவாறும், ஆண்கள் வேட்டி-சட்டையிலும் பங்கேற்றனர்.

                                  அமெரிக்காவில் உள்ள தேவாலயத்தில் வேட்டி-சேலை அணிந்து தமிழில் பாட்டுப்பாடிய தமிழர்கள்
                                  அமெரிக்காவில் உள்ள தேவாலயத்தில் வேட்டி-சேலை அணிந்து தமிழில் பாட்டுப்பாடிய தமிழர்கள்

                                  அமெரிக்காவின் வெர்ஜினியாவில் உள்ள ஹென்டன் என்ற இடத்தில் தமிழர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

                                  ஹென்டன் நகரில் பிரசித்தி பெற்ற ‘புளோரிஸ் யுனைடெட் மெதடிஸ்ட்’ தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் வழக்கம்போல பிரார்த்தனை நடந்துகொண்டிருந்தது. அப்போது, தமிழ்

                                  குடும்பங்களை சேர்ந்த பெண்கள் பாரம்பரிய முறைப்படி சேலை, பாவாடை-தாவணி அணிந்தவாறும், ஆண்கள் வேட்டி-சட்டையிலும் பங்கேற்றனர்.

                                  இதையடுத்து அவர்கள், தேவாலயத்தில் உள்ள பீடத்தில் நின்று தமிழ் பாடலை தங்களுக்கே

                                  உரித்தான பாணியில் ஒருமித்த குரலில் பாடினர். இதனை தேவாலயத்தில் பிரார்த்தனையில் பங்கேற்ற அமெரிக்கர்கள் மற்றும் பிற நாடுகளை சேர்ந்தவர்களும் ரசித்து பாராட்டினர்.

                                    Posted in Uncategorized

                                    இலங்கை தமிழர்களுக்கு,இந்தியாவில் வாழ்விடம்

                                    இலங்கை தமிழர்களுக்கு,இந்தியாவில் வாழ்விடம்

                                    இலங்கை தமிழர்களுக்கு 3,510 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய

                                    முதலமைச்சர் ஸ்டாலின், ‘தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஒரு தாய் மக்கள் தான்,’ எனப் பேசியுள்ளார்.

                                    வேலூர் மாவட்டம் மேல் மொணவூரில் இலங்கை தமிழர்களுக்காக ரூ.142 கோடி செலவில் 3,510

                                    வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று அடிக்கல் நாட்டி முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:

                                    ஒவ்வொரு முறை திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி பொறுப்பேற்றதும் இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் கட்சி

                                    தி.மு.க., தான். கடந்த 10 ஆண்டுகளாக அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசாங்கம் இலங்கை தமிழர்களுக்காக எந்த திட்டங்களையும் செய்யவில்லை.

                                    இலங்கை தமிழர் நல வாழ்வு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முகாம்களில் உள்ள இலங்கை தமிழ் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசாங்கமே ஏற்கும்.

                                    தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஒரு தாய் மக்கள் தான்; நாம் அனைவரும் தமிழினத்தை

                                    சேர்ந்தவர்கள், கடல் தான் நம்மை பிரிக்கிறது. இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்டங்கள் மேலும் தொடரும். இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல.

                                    தி.மு.க., அரசாங்கம் இலங்கை தமிழர்களுக்கு என்றைக்கும் துணை நிற்கும். என்னை உங்களின் உடன்பிறப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்..