Posted in Uncategorized

பிரிட்டனில் முழங்கிய கோட்டா – இது முக்கியமாம்

பிரிட்டனில் முழங்கிய கோட்டா – இது முக்கியமாம்

இயற்கைக்கு எதிராக மனிதர்கள் செயற்படுவதற்குப் பதிலாக, அதனோடு மிகவும் இணைந்துச் செயற்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள்,

நிலையான அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட புதிய விவசாயப் புரட்சியொன்று அவசியம் என்று எடுத்துரைத்தார்.

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இடம்பெற்று வரும் COP: 26 என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டுக்கு இணையாக “நைதரசனை மீண்டும் கண்டுபிடித்தல், காலநிலை மாற்றம், சுகாதார உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் நிலையான பொருளாதாரத்துக்கான தீர்வுகள் மற்றும் இணைச் செயற்பாடுகள்” என்ற தலைப்பின் கீழ் இலங்கை ஏற்பாடு செய்திருந்த விசேட கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அந்நாட்டு நேரப்படி, நேற்று (31) மாலை 5.00 மணிக்கு இந்தக் கருத்தரங்கு நடைபெற்றது.

நிலையான அபிவிருத்தியே தமது அரசாங்கத்தின் கொள்கைக் கட்டமைப்பாகும் என்று எடுத்துரைத்த ஜனாதிபதி அவர்கள், காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சாசனத்துக்கமைய, இலங்கையின் புதுப்பிக்கப்பட்ட தேசிய நிர்ணயங்கள் மற்றும் அபிலாஷைகள் என்பன நன்கு பிரதிபலிக்கின்றன என்று குறிப்பிட்டார்.

நவீன, விஞ்ஞான பொறிமுறைகள் மற்றும் பண்டைய வழிமுறைகள் ஊடாக, சுற்றாடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதே, தற்போது எமக்கு உள்ள சவாலாகக் காணப்படுகின்றது. இலங்கையில் விவசாயிகளிடையே, பல தசாப்தங்களாக சிறுநீரக நோய் பரவுவது பாரிய பிரச்சினையாக உள்ளது. இரசாயனப் பசளையை அதிகளவில் பயன்படுத்துவதே இதற்கு மிக முக்கிய காரணமாகியுள்ளது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், இச்சூழ்நிலையிலேயே இரசாயனப் பசளை இறக்குமதியைக் குறைப்பதற்கும் சேதன விவசாயத்தை அதிகளவில் ஊக்குவிப்பதற்கும் எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது” என்றும் குறிப்பிட்டார்.

“இச்செயற்பாடுகள் பாரியளவில் பாராட்டப்பட்டாலும், ஒருசில விமர்சனங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் முகங்கொடுத்து வருகின்றோம். இரசாயனப் பசளைப் பயன்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கும் குழுக்களுக்கு மத்தியில், அதிகளவில் பசளையைப் பயன்படுத்தி விளைச்சலை அதிகரித்துக்கொள்ளும் வழிவகைகளைக் கையாளப் பழகியிருக்கும் விவசாயிகளும் இதனை எதிர்க்கின்றனர். இலங்கையின் சிறந்த விவசாய உரிமைகளை அவதானிக்கும்போது, இந்நிலை மிகவும் வருத்தத்துக்குரியது” என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடு என்ற வகையில் முகங்கொடுத்து வருகின்ற வளப் பற்றாக்குறைக்கு மத்தியிலேயே, சுற்றாடல் தொடர்பான இலங்கையின் முற்போக்கு நிகழ்ச்சி நிரல் செயற்படுத்தப்படுகிறது என்று தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அபிவிருத்தித் திட்டங்களோடு அவ்வாறான நிகழ்ச்சி நிரல் ஒன்றை நடைமுறைப்படுத்துவதென்பது, விசேடமாக நோய்த் தொற்றின் பின்னர் அபிவிருத்தி அடைந்துவரும் அனைத்து நாடுகளுக்கும் பாரியதொரு சவாலாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறான நாடுகளுக்கான அபிவிருத்தி உதவிகள், தொழில்நுட்பப் பரிமாற்றல்கள், திறன் அபிவிருத்தி, முதலீடுகள் மற்றும் நிதி உதவிகளையும் இயலுமான பங்களிப்புகளையும் அபிவிருத்தி அடைந்த நாடுகள் வழங்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அவற்றில் வர்த்தகத்துக்கு பாரியதொரு பொறுப்பு உள்ளதோடு மேலாண்மைக்காக முதலீடு செய்யும்போது, பாரியதொரு பிரதிபலன் கிடைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

எதிர்காலச் சந்ததியினருக்காகவே, இந்தப் பூமியின் பாதுகாவலர்களாக நாம் அனைவரும் இன்று வாழ்ந்து வருகின்றோம் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இயலுமான வகையில் அதற்குப் பங்களித்து, சுகாதார நலனை உறுதி செய்துகொள்வதற்காக அனைவரும் ஒன்றிணைந்துச் செயற்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அனைவரும் ஒற்றுமையாகவும் நல்லெண்ணத்துடனும் இதனை நடைமுறைப் படுத்துவோமாயின், மக்களுக்கும் எமுது பூமிக்கும் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் மேலும் தெரிவித்தார்.

100 சதவீதமளவில் பசுமை விவசாயத்துக்கு மாறுவதற்கான தீர்மானத்தை எடுத்துள்ள உலகின் முதல் நாடாக இலங்கை இருப்பதாகக் குறிப்பிட்ட சுற்றாடற்றுறை அமைச்சர் மஹிந்த அமரவீர, காலநிலை மாற்றத்துக்கான சிறந்த தீர்மானத்துடன்கூடிய பசுமை – சமூகப் பொருளாதாரத்தை உருவாக்குவதே அதன் நோக்கமாகும் என்றும் குறிப்பிட்டார்.

வரலாற்றுக் காலம் முதல் தற்போது வரை முன்னெடுக்கப்பட்டுள்ள நைதரசன் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக விஞ்ஞானிகளுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்த அமைச்சர், நைதரசன் கண்டுபிடிக்கப்பட்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இலங்கையும் அந்தச் சவாலை வெற்றிகொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

சர்வதேச நைதரசன் முகாமைத்துவக் கட்டமைப்பின் பணிப்பாளர் பேராசிரியர் மார்க் ஸட்ன் அவர்கள், “நைதரசன் மற்றும் காலநிலை” என்ற தலைப்பின் கீழ் உரையாற்றினார்.

“காலநிலைக்கு முகங்கொடுப்பதற்கான இயலுமை மற்றும் ஒத்துப்போதல் தொடர்பாக இலங்கையின் எதிர்பார்ப்புகள் COP: 26 மற்றும் அதனைக் கடந்த” என்ற தலைப்பின் கீழ், சுற்றாடற்றுறை அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க கருத்து தெரிவித்ததோடு, ஐக்கிய இராச்சியத்துக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிரிசேனவும் தமது கருத்துக்களை முன்வைத்தார்.

Posted in Uncategorized

லண்டன் வீட்டுக்குள் நுழைந்த பொலிஸ் – ஒரு லட்சம் பவுண்டு மீட்பு

லண்டன் வீட்டுக்குள் நுழைந்த பொலிஸ் – ஒரு லட்சம் பவுண்டு மீட்பு

லண்டன் Chorister Crescent பகுதியில் ஆடம்பர வீடொன்றுக்குள் இடம்பெற்று வந்த போதைவஸ்து ,மற்றும் புடவை விற்பனை என்பன கண்டு பிக்க பட்டுள்ளது

பொலிசுக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இடம்பெற்ற திடீர் முற்றுகையின் பொழுது குறித்த வீட்டிற்குள் இருந்து ஒரு லட்சம் பவுண்டுகள் மற்றும் ஆடம்பர ஆடை வடிவமைப்பு என்பன மீட்க பட்டுள்ளது

2 hour 500+ profit-2 மணித்தியாலத்தில் 500 இலாபம் forex trade tamil video

தந்தை ,மகன் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளனர் ,கொரனோ லொக் டவுன் காலத்தில் இவ்விதமான பல போதைவஸ்து கும்பல் காவல்துறை வேட்டைக்கு உள்ளாக்க பட்டமை குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized

    சர்வதேச நீதிமன்றில் இலங்கையை நிறுத்த முடியும் – விக்கினேஸ்வரன் அதிரடி அறிவிப்பு

    சர்வதேச நீதிமன்றில் இலங்கையை நிறுத்த முடியும் – விக்கினேஸ்வரன் அதிரடி அறிவிப்பு

    சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஸ்தாபித்த ரோம் சாசனத்தில் இலங்கை கையொப்பம் இடவில்லை என்ற போதிலும், ஏன், எவ்வாறு, எதற்காக இலங்கை தொடர்பாக பாதிக்கப்பட்ட 200 பேர் முறைப்பாடு செய்துள்ளார்கள் என்பதை 200 பேரின் சாட்சியங்களின் அடிப்படையிலும்

    மற்றைய சாட்சியங்களின் அடிப்படையிலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இலங்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

    அவர் நேற்று (30) ஊடகங்களுக்கு வழங்கிய கேள்வி பதிலின் போது அவ்வாறு தெரிவித்தார்.

    அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,

    கேள்வி :- இலங்கையில் இறுதி யுத்தம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள், இந்நாள் முக்கிய பிரமுகர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் மீது நடவடிக்கை

    எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட 200 தமிழர்கள் சார்பில் என்ற Global Rights Compliance LLR (GRC) சட்ட நிறுவனம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கு நடத்துநருக்கு சமர்ப்பித்துள்ள ஆவணம் தொடர்பாக உங்கள் கருத்து என்ன? இது சாத்தியமா?

    பதில் :- இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது நடைபெற்றது இனப்படுகொலை தான் என்று மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபை தீர்மானம் ஒன்றை இயற்றியுள்ளது.

    இந்த இனப்படுகொலை தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தி எல்லா தமிழ் கட்சிகளுமே கடந்த காலத்தில் வலியுறுத்தி வந்துள்ளன. அத்துடன், இலங்கையை சர்வதேச

    நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் என்றும் எல்லா தமிழ் தேசிய கட்சிகளும் கூட்டாகக் கடிதம் ஒன்றில் கையொப்பமிட்டு ஐ.நாவுக்கு அனுப்பியுள்ளன.

    ஆகவே, இந்த பின்னணியில், Global Rights Compliance LLP (GRC) செய்திருக்கும் இந்த நடவடிக்கை மிகவும் சரியானதும் அத்தியாவசியமானதும் காலத்துக்குப் பொருத்தமானதும் ஆகும்.

    சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தைத் ஸ்தாபித்த ரோம் சாசனத்தில் இலங்கை கையொப்பமிடவில்லை என்ற போதிலும், ஏன், எவ்வாறு, எதற்காக இலங்கை தொடர்பில் பாதிக்கப்பட்ட 200 பேர் முறைப்பாடு செய்துள்ளார்கள் என்பதை 200 பேரின் சாட்சியங்களின்

    அடிப்படையிலும் மற்றைய சாட்சியங்களின் அடிப்படையிலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இலங்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும்.

    அவ்வாறான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று உரிய சட்டக் கொள்கைகள், கோட்பாடுகள், வாதங்களுடன் இந்த முதலாவது தொடர்பாடலுக்கான ஆவணத்தை முறையாக Global Rights Compliance LLP (GRP) சமர்ப்பித்துள்ளது என்று நான் நம்புகின்றேன்.

    கேள்வி :- இந்த சமர்ப்பணத்தின் அடிப்படையில் அடுத்து என்ன நடைபெறும்?

    பதில் :- இலங்கை மீது விசாரணை நடைபெறுமா என்பது தொடர்பில் இப்பொழுது எந்த எதிர்வு கூறலையும் செய்ய முடியாது. ஆனால், சர்வதேச நீதிமன்றம் இந்த ஆவணத்தை பரிசீலித்து எடுக்கவிருக்கும் முடிவிலேயே அது தங்கி இருக்கின்றது. சட்ட கோட்பாடுகளின் அடிப்படையிலும்,

    எதிர்காலத்தில் மீண்டும் ஒரு இனப்படுகொலை இலங்கையிலோ அல்லது உலகின் வேறு எந்த நாட்டிலுமோ நடக்கக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இந்தக் கோரிக்கையைப் பரிசீலனை செய்யும் என்று எதிர்பார்க்கின்றேன்.

    கேள்வி :- இந்த சமர்ப்பணத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

    பதில் :- அவசியமாக செய்யப்பட வேண்டிய ஒரு விடயத்தை நல்ல முறையில் Global Rights Compliance LLP (GRP) செய்திருக்கின்றது. பாதிக்கப்பட்ட 200 பேரின் சாட்சியங்களின் அடிப்படையில் சர்வதேச நீதிமன்றத்திடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது.

    ஆகவே, இந்த ஆவண சமர்ப்பணம் வலுவானதாக செய்யப்பட்டிருப்பதாகவே நான் உணர்கின்றேன்.மேலும் இவ்வாறான நடவடிக்கைகள் இந்தக் கால கட்டத்தில் அவசியமாகின்றன. இங்கு எமது வட கிழக்கு நிலங்கள் பறிபோகின்றன.

    பௌத்தர்கள் இல்லாத இடத்தில் பௌத்த வணக்கஸ்தலங்கள் பலாத்காரமாக நிர்மாணிக்கப்படுகின்றன. தொல்பொருளியலைத் திரிபுபடுத்தி தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த இடங்களை சிங்கள பௌத்தர்கள் வாழ்ந்த இடங்களாக எடுத்துக் காட்டி பல ஏக்கர் காணிகளை

    தொல்பொருள் திணைக்களமும் வேறு காரணங்களை முன்வைத்து மற்றும் அரசாங்க திணைக்களங்கள் பலவும் எமது காணிகளைக் கையேற்று வருகின்றன.

    அங்கு வாழும் தமிழ் மக்கள் இராணுவ ஒத்துழைப்புடன் விரட்டி அடிக்கப்படுகின்றனர். சிங்கள குடியேற்றம் தமிழர் தாயகத்தில் துரிதமாக நடைபெறுகின்றன.

    இனப்படுகொலையின் பல்வேறு பரிமாணங்கள் இவை. இவ்வாறான விசாரணைகளின் போது தற்போது இங்கு நடைபெறும் விடயங்களும் உண்மையை உலகம் உணர உதவி புரியும். நான் இந்த நடவடிக்கையை முற்றும் வரவேற்கின்றேன்.

      Posted in Uncategorized

      மனைவி தாய் ,தந்தையை கோடரியால் வெட்டிய மருமகன்

      மனைவி தாய் ,தந்தையை கோடரியால் வெட்டிய மருமகன்

      இலங்கை வாழைச்சேனை காவல்துறை பகுதியில் குடும்ப தகராறு காரணாமாக மனைவியை

      விட்டு பிரிந்த கணவன் ,பெண்ணின் தாயார் வீடு புகுந்து அவரது தந்து ,மற்றும் தாயை

      கோடரியால் சரமாரியாக வெட்டியுள்ளார்

      இதில் பலத்த காயமடைந்த நிலையில் இருவரும் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய வண்னம் உள்ளனர்

      மேற்படி செயல் அந்த கிராம பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

        Posted in Uncategorized

        புதிய கொரனோ பரவல் – செயல் இழக்கும் தடுப்பூசிகள்

        புதிய கொரனோ பரவல் – செயல் இழக்கும் தடுப்பூசிகள்

        இலங்கை முதல் உலக நாடுகள் வரை தற்பொழுது கொரனோ நோயின் தடுப்பூசிகள் இயல் இழக்க வைக்கும் புதிய வைரஸ் பரவி வருகின்றமை கண்டு பிடிக்க பட்டுள்ளது

        ஊசி செலுத்த பட்டவர்கள் உள் இந்த புதிய வைரஸ் தொற்றி கொண்டால் அவர்களை காப்பாற்ற முடியாது போகும் நிலை ஏற்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது

        இதனால மக்கள் மத்தியில் கொதிப்பு ஏற்பட்டுள்ளது

          Posted in Uncategorized இலங்கை செய்திகள்

          இன்று முதல் பஸ் ரயில் சேவைகள் கொழும்பில் இருந்து யாழ்நோக்கி பயணம்

          இன்று முதல் பஸ் ரயில் சேவைகள் கொழும்பில் இருந்து யாழ்நோக்கி பயணம்

          கொரனோ நோயின் பரவல் காரணமாக தடுக்க பட்ட பேரூந்து ரயில் சேவைகள் மீண்டும்

          மாகாணங்களுக்கு இடையில் ஆரம்பிக்க பட்டுள்ளது

          வரையறைக்கு உட்படுத்த பட்டு இந்த சேவைகள் ஆரம்பிக்க படும் எனவும் ,பின்னர் முழுமையாக

          செயல் நடவடிக்கை எடுத்து செல்ல படும் என தெரிவிக்க படுகிறது

            Posted in Uncategorized

            பெண்களை கடத்தி விபச்சாரத்தில் ஈடுபட வைத்த கும்பல்

            பெண்களை கடத்தி விபச்சாரத்தில் ஈடுபட வைத்த கும்பல்

            இலங்கையில் வெளி நாடுகளில் இருந்து அழைத்துவரப்பட்ட ஐந்து பெண்களுக்கு இலங்கையில்

            வேலைவாங்கி தருவதாக கூறி அழைக்க பட்டுள்ளனர் ,இலங்கை வந்தடைந்த அவர்களை

            விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்த கும்பல் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்


            இவர்களது கடவு சீட்டு பறிக்க பட்டு அடைத்து வைக்க பட்டு இவ்வாறு சித்திர வதைகளிற்கு

            உள்ளாக்க பட்டுள்ளதாக பாதிக்க பட்ட ஐந்து பெண்களும் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்

              Posted in Uncategorized சினிமா

              இறந்த பிறகும் இரண்டு பேருக்கு பார்வை கொடுத்த புனித் ராஜ்குமார்

              இறந்த பிறகும் இரண்டு பேருக்கு பார்வை கொடுத்த புனித் ராஜ்குமார்

              மறைந்த பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் தனது கண்களை தானம் செய்ததன் மூலம் 2 பேருக்கு பார்வை கொடுத்து இருக்கிறார்.

              இறந்த பிறகும் இரண்டு பேருக்கு பார்வை கொடுத்த புனித் ராஜ்குமார்
              புனித் ராஜ்குமார்


              நடிகர் புனித் ராஜ்குமார் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் ஏற்கனவே கண்களை தானம் செய்திருந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர், நாராயணா நேத்ராலயா கண்

              மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பேசி, உடனே வந்து புனித் ராஜ்குமாரின் உடலில் உள்ள கண்களை தானம் செய்வதாக கூறினர்.

              புனித் ராஜ்குமார்

              இதையடுத்து டாக்டர் புஜரங்கி தலைமையிலான குழுவினர் விக்ரம் மருத்துவமனைக்கு வந்து, புனித் ராஜ்குமாரின் கண்களை எடுத்து சென்றனர். அவரின் 2 கண்கள், 2 பேருக்கு

              பொருத்தப்படும் என்றும், 2 நாட்களுக்குள் இந்த பணி மேற்கொள்ளப்படும் என்றும் அவர்

              கூறினார். இதன் மூலம் புனித் ராஜ்குமார் இறந்த பிறகும் 2 பேருக்கு பார்வை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

                Posted in Uncategorized

                பிரிட்டனுக்கு வருகை தந்துள்ள கொலையாளி கோட்டா

                பிரிட்டனுக்கு வருகை தந்துள்ள கொலையாளி கோட்டா

                இலங்கை தமிழ் இனப் படுகொலையாளி கோட்ட பாய இன்று பிரிட்டன் நாட்டுக்கு

                வந்தடைந்துள்ளார் ,ஸ்கொட்லாந்தில்


                நடைபெறவுள்ள கூட்ட தொடரில் கலந்து கொள்ள உள்ளார் ,இவ்வேளை தமிழர்கள் பாரிய

                ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிட தக்கது

                  Posted in Uncategorized

                  கனடாவில் பிறந்த தினம் – பளையில் போராளி குடும்போதிற்கு உதவிய நல் உள்ளம் – photo

                  கனடாவில் பிறந்த தினம் – பளையில் போராளி குடும்போதிற்கு உதவிய நல் உள்ளம் – photo

                  இப்படியும் நாள் உள்ளங்கள் உள்ளதை எண்ணி தமிழர் தேசம் பெரு கொள்கிறது ,
                  இவர்களுக்கு எமது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

                  கனடா நாட்டில் பிறந்த தினத்தை கொண்டாடும்
                  பெயர்குறிப்பிட விரும்பாத நல் உள்ளம் கொண்டவரின்


                  நிதிப்பங்களிப்பில் பளை கச்சார்வெளியை சேர்ந்த


                  தேசப்பற்றாளர்களான வீரவேங்கை போல் மற்றும் வீரவேங்கை நந்தகுமாரி ஆகியோரின் தாயாரான முருகையா


                  ஞானப்பிரகாசி அவர்களுக்கு உலர் உணவு பொதிகளும் சிறு தொகைப் பணமும் இன்றைய தினம் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களால் கையளிக்கப்பட்டது.

                    Posted in Uncategorized

                    பளையில் சகோதரி வீட்டுக்கு சென்றவர் மரணம்

                    பளையில் சகோதரி வீட்டுக்கு சென்றவர் மரணம்

                    இலங்கை பளை இத்தாவில் பகுதியில் உள்ள தனது சகோதரிக்கு வீட்டுக்கு சென்ற உறவினர்

                    ஒருவர் அங்கு இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுளளார்

                    இவரது மரணம் தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம்

                    உள்ளனர் ,இவர் இயற்கையில் மரணித்தாரா அல்லது படுகொலையா என்பது தொடர்பில்

                    விசாரணைகள் முன்னெடுக்க பட்டுள்ளது

                      Posted in Uncategorized

                      நீர் தாங்கியில் காவல்துறை அதிகாரி சடலம்

                      நீர் தாங்கியில் காவல்துறை அதிகாரி சடலம்

                      இலங்கை காவல்துறையை சேர்ந்த அதிகாரி எஸ். இளங்கோவன், கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு
                      வழங்க படும் நீர் தாங்கியில் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார்

                      இவர் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்ட பொழுது காணாமல் போயிருந்தார்

                      இந்த நிலையில் அந்த அ மருத்துவமனைக்கு வழங்க படும் நீரில் ஒருவித மணம் வீசுவதாக

                      தெரிவிக்க பட்ட நிலையில் ,அதனை சோதனை செய்த பொழுது சடலம் இருப்பது கண்டு பிடிக்க பட்டது

                        Posted in Uncategorized உலக செய்திகள்

                        அவுஸ்ரேலியா கிரிக்கட் வீரர் மரணம்

                        அவுஸ்ரேலியா கிரிக்கட் வீரர் மரணம்

                        அவுஸ்ரேலிய நாட்டின் முன்தன்மை மிகு மட்டை பந்து வீச்சாளராக விளங்கிய Ashley Mallett


                        அவர்கள் தனது 76 ஆவது வயதில் மரணமாகியுள்ளார் இவர் தனது முதலாவது ஆட்டத்தை

                        இந்தியாவுக்கு எதிராக ஆடி அசத்தி இருந்தமை இங்கே பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது

                          Posted in Uncategorized

                          ரஜினிகாந்த் விரைவில் பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டும் -கமல் ஹாசன்

                          ரஜினிகாந்த் விரைவில் பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டும் -கமல் ஹாசன்


                          ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பலரும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.

                          இனிய நண்பர் ரஜினிகாந்த் விரைவில் பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டும் -கமல் ஹாசன்
                          ரஜினிகாந்த், கமல் ஹாசன்

                          நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக

                          ரஜினிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் வேகமாக குணமடைந்து

                          வருவதாகவும், ஒருசில நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியிருக்கிறது.

                          ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பலரும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.

                          இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் என் இனிய நண்பர் ரஜினிகாந்த்

                          விரைவில் குணமடைந்து பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

                            Posted in Uncategorized

                            கவிழ்ந்த பயணிகள் பேரூந்து – பலர் காயம் – சாரதி கைது

                            கவிழ்ந்த பயணிகள் பேரூந்து – பலர் காயம் – சாரதி கைது

                            மாத்தளையில் இருந்து குருணாகல் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று களுபாலத்திற்கு அருகில் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

                            குறித்த பேருந்து வீதியை விட்டு விலக வயல் நிலம் ஒன்றில் குடைசாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                            விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பேருந்தில் 35 பேர் இருந்ததாகவும் அவர்களில் 14 பேர் காயங்களுக்கு உள்ளாகி மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

                            இவ்வாறு காயமடைந்தவர்களுள் 3 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

                            சம்பவம் தொடர்பில் பேருந்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

                              Posted in Uncategorized

                              ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

                              ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

                              அரசியல் பழிவாங்கல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள

                              ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                              அதன்படி, குறித்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக

                              தகவல் வெளியாகியுள்ளது.

                                Posted in Uncategorized

                                சீனா அதிரடி: மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலுக்குள் சேர்த்தது.

                                சீனா அதிரடி: மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலுக்குள் சேர்த்தது.

                                இலங்கை மக்கள் வங்கியை சீனா கறுப்புப் பட்டியலுக்கு சீனா சேர்த்துவிட்டுள்ளது.

                                கடன் கடிதம் மற்றும் இரு தரப்பிற்கு இடையிலான உடன்படிக்கைகளின் பிரகாரம், பணம்

                                செலுத்த தவறியதை அடுத்து, இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வணிக

                                அலுவலகத்தினால் கறுப்பு பட்டியலில் மக்கள் வங்கி, இணைக்கப்பட்டுள்ளது.

                                சீனாவின் இந்த தீர்மானம், வர்த்தக அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக

                                தெரிவிக்கப்படுகின்றது.

                                  Posted in Uncategorized

                                  பேஸ்புக்’கின் பெயர் மாற்றம் Facebook – Meta

                                  பேஸ்புக்’கின் பெயர் மாற்றம் Facebook – Meta

                                  பேஸ்புக்’கின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதன் புதிய பெயர் மெட்டா என பேஸ்புக்’கின் தலைமை

                                  அதிகாரி (CEO ) Mark Zuckerberg மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

                                  சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், மெய்நிகர் ஒன்லைன் உலகமான ‘மெட்டாவெர்ஸ்’ நோக்கி

                                  தன்னுடைய கவனத்தை திருப்பி வருவதாகவும், அதனை பிரதிபலிக்கும் வகையில், நிறுவனத்தின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                    Posted in Uncategorized

                                    வீட்டின் மீது விழுந்த வீதி; சிறுமி காயம்

                                    வீட்டின் மீது விழுந்த வீதி; சிறுமி காயம்

                                    கண்டி பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, கண்டி- உடபோவல வீதியின் ஒரு

                                    பகுதி, வீடொன்றின் மீது சரிந்து விழுந்ததால், 13 வயது சிறுமியொருவர் காயமடைந்து,
                                    பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                                    இச்சம்பவம் நேற்று முன்தினம் (26) இரவு 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன்
                                    இதன்போது வீட்டில் அவரது தந்தையுடன் சிறுமி மாத்திரமே இருந்துள்ளார்.


                                    இதனையடுத்து சிறுமியை அவரது தந்தை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில், வீடு கடுமையாக சேதமடைந்துள்ளது.

                                    இடிந்து விழுந்த வீதியில் வெடிப்பு ஏற்பட்டுள்ளமை தொடர்பில், ஜனாதிபதி செயலகம் மற்றும் கங்கவட்டகோரல பிரதேசசபைக்கு அனுப்பப்பட்ட நிலையில், இந்த விடயம் தொடர்பில்

                                    உடனடியாக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி செயலகத்தால்
                                    கங்கவட்டகோரல பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

                                    எனினும் இதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு எந்தவொரு அதிகாரியும் முன்வரவில்லை என வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

                                    இதேவேளை குறித்த வீதியின் பல இடங்களிலும் இவ்வாறு வெடிப்பு காணப்படுவாகவும்,


                                    எதிர்வரும் காலங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் மணசரிவு ஏற்படும் என்றும்
                                    பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

                                      Posted in Uncategorized

                                      இராணுவத்திடம் இருந்த 11 ஏக்கர் காணி விடுவிப்பு

                                      இராணுவத்திடம் இருந்த 11 ஏக்கர் காணி விடுவிப்பு

                                      முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள மக்களின் காணிகளில் 11 ஏக்கர்

                                      காணிகள் இராணுவத்தினரிடம் இருந்து இன்று (28) விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

                                      யுத்தம் நிறைவடைந்து மக்கள் புதுக்குடியிருப்பில் மீள குடியமர்ந்த போது புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள சுமார்

                                      19 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

                                      இந்நிலையில் மீள்குடியேறிய மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பல்வேறு தரப்பினரிடமும் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வந்தபோதும் எந்தவித தீர்வுகளும்

                                      கிடைக்கப்பெறாத நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு மாசி மாதம் 3 ஆம் திகதி குறித்த பகுதியில் இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட 19 ஏக்கர் காணிகளையும் விடுவிக்குமாறு கோரி 49

                                      குடும்பங்களை சேந்தவர்கள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்பாக தொடர் போராட்டம் ஒன்றை ஆரம்பித்தனர்.

                                      போராட்டம் ஆரம்பித்து சுமார் 1 மாத காலத்தில் குறித்த காணிகளை 3 கட்டங்களாக விடுவிப்பதாக உறுதிமொழி வழங்கப்பட்டது. இருப்பினும் முதலாவது பகுதி காணிகள் விடுவிக்கும்

                                      வரை தாம் போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்த மக்கள் குறித்த உறுதிமொழிகளுக்கு அமைய முதற்கட்டமாக விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட 7.75 ஏக்கர் காணி விடுவிப்போடு தொடர் போராட்டத்தை நிறுத்தினர்.

                                      புதுக்குடியிருப்பில் 682 ஆவது படைப்பிரிவினால் சுவீகரிக்கப்பட்ட 7.75 ஏக்கர் காணி விடுவிப்பை தொடர்ந்து மீதமுள்ள 29 பேரினது 10 ஏக்கர் காணி இராணுவ முகாமில் அமைக்கப்பட்ட

                                      கட்டடங்களை அகற்றிய பின்னர் 3 மாதத்திற்குள் விடுவிக்கப்படும் எனவும் மீதமுள்ள பொன்னம்பலம் வைத்தியசாலைக் காணி விடுவிப்பதற்கு 6 மாத காலம் தேவைப்படுவதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.

                                      இந்நிலையில் குறித்த காணி சுமார் 4 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமை குறித்தும் குறிப்பாக சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் 682 ஆவது படைப்பிரிவு முகாம் கைவேலிப் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளபோதும் இன்று வரை மக்களுடைய காணிகள் மக்களுக்கு வழங்கப்படவில்லை

                                      எனவும் குற்றம் சுமத்தி இருந்ததோடு இராணுவம் மிக விரைவாக தமது காணிகளை தம்மிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அதிகாரிகள் தமது காணிகளை விரைவில்

                                      பெற்றுத்தர வேண்டும் எனவும் தாம் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படட நிலையில் உள்ளதாகவும் மக்கள் தெரிவித்திருந்தனர்.

                                      இவ்வாறான நிலையில் குறித்த காணிகளில் பதினொரு ஏக்கர் காணி இன்று (28) காலை 10 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளதாக

                                      இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் பொன்னம்பலம் வைத்தியசாலை

                                      அமைந்திருந்த ஒரு சிறு பகுதியை தவிர ஏனைய காணிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.