Posted in Uncategorized

இலங்கை வங்கிகளில் உள்ள பணத்தை சுருட்ட கோட்டா இரகசிய திட்டம்

இலங்கை வங்கிகளில் உள்ள பணத்தை சுருட்ட கோட்டா இரகசிய திட்டம்

இலங்கை வங்கிகளில் பணத்தை வைப்பு செய்து வட்டியை பெற்று வரும் மக்களுக்கு பெரும் ஆப்பு ஒன்றை வைக்க கோட்டபாய முனைந்து வருகிறார்

நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி ,பொருளாதார பிரச்சனை குறித்து தீர்வு காண்பதற்கு மக்களின் பணத்தை அரசு உடமையாக்கவும் ,அவசரகால நிதியாக அதனை

பயன்படுத்தவும் கோட்டபாய இரகசிய திட்டமிடல்கள் இடம்பெற்று வருவதான கசிவுகள் வெளியாகிய நிலையில்


வங்கிகளில் பணத்தை வைப்பு செய்துள்ள மக்கள் அந்த பணத்தை மீள பெற்று வெளி நாடுகளில் பதுக்கி வருகின்றனர்

இவ்வாறு 260 மில்லியன் அமெரிக்கா டொலர்களை வெளிநாட்டுக்கு அனுப்பிய இரு வர்த்தகர்களை கைது செய்து விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகிறது

இவ்வாறு முக்கிய செல்வந்தர்களை இலக்கு வைத்து கோட்ட பாய முதல் ஆட்டத்தை

ஆரம்பித்துள்ள நிலையில் வங்கிகளில் பணத்தை வைத்துள்ள மக்கள் பீதியடைந்து வருகின்றனர்

இஸ்ரேல் இராணுவம்
Posted in Uncategorized

13 பலஸ்தீனர்களை இழுத்து சென்ற இஸ்ரேல் இராணுவம்

13 பலஸ்தீனர்களை இழுத்து சென்ற இஸ்ரேல் இராணுவம்

பாலஸ்தீனம் மேற்கு கரையில் இஸ்ரேலிய இராணுவத்தினரால் 13 க்கு மேற்பட்ட

அப்பாவி பாலஸ்தீனர்கள் கைது செய்ய பட்டு இழுத்து செல்ல பட்டனர்

இராணுவத்தினரால் பலமாக தாக்க பட நிலையில் இழுத்து செல்ல பட்டுள்ள காட்சிகள்

உலக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

இஸ்ரேல் ஏவுகணை
Posted in Uncategorized

சிரியாவுக்குள் சுட்டு வீழ்த்த பட்ட இஸ்ரேல் ஏவுகணை

சிரியாவுக்குள் சுட்டு வீழ்த்த பட்ட இஸ்ரேல் ஏவுகணை

சிரியாவின் அ டமகாஸ் பகுதிக்கு வெளியில் உள்ள முக்கிய இராணுவ நிலைகள் மீது

விமான மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டது

குறித்த ஏவுகணைகளை தாம் இடைமறித்து சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் சிலது இலக்கை தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்க பட்டுள்ளது

சிரியாவுக்குள் உள்ள ஈரான் மற்றும் ,சிரியா அரச இராணுவ நிலைகளை இலக்கு

வைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றது

தமது ஏவுகணைகளி துல்லியமாக இலக்கை தாக்கியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது

இந்திய இராணுவம்
Posted in Uncategorized

கஸ்மீரில் ஐந்து தீவிரவாதிகள் சுட்டு கொலையாம் – இந்திய இராணுவம்

கஸ்மீரில் ஐந்து தீவிரவாதிகள் சுட்டு கொலையாம் – இந்திய இராணுவம்

இந்திய காஸ்மீர் பகுதியில் நடமாடிய ஐந்து தீவிவாதிகள் என சந்தேகிக்க படும் ஐவர்

சுட்டு கொலை செய்ய பட்டுள்ளதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது

அவ்வாறு சுட்டு கொலை செய்ய பட்டவர்கள் அப்பாவி மக்கள் என அவரது

குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்

இந்திய இராணுவம் இலங்கையில் தமிழர்களை புலிகள் என சுட்டு கொன்றதை

போலவே காஸ்மீரிலும் நடத்தி வருகினறமை இங்கே குறிப்பிட தக்கது

    தலிபான்கள்
    Posted in Uncategorized

    100 அரச இராணுவ அதிகாரிகளை கொன்று குவித்த தலிபான்கள்

    100 அரச இராணுவ அதிகாரிகளை கொன்று குவித்த தலிபான்கள்

    ஆப்கனிஸ்தான் நாட்டை தமது கட்டுப் பாட்டுக்குள் தலிபான் அமைப்பினர் கொண்டு

    வந்தனர் .முழு நாட்டையும் ஆக்கிரமித்து தமது அதிகாரத்தை நிலை நிறுத்திய நிலையில் அரச இராணுவத்தினர் கைது செய்ய பட்டனர்

    இவ்வாறு கைது செய்ய பட்ட அரச இராணுவத்தை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டவர்களை

    தலிபான்கள் படுகொலை செய்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது

    இவர்கள் தலிபான்களை முன் நின்று கொன்று குவிக்கவும் ,அவர்கள் மீது போர்

    நடத்தவும் உடந்தையாக விளங்கியவர்கள் என்பதால் ,அவ்வாறானவர்கள் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

    நான் ஏன் காந்தியை கொன்றேன்
    Posted in Uncategorized சினிமா

    நான் ஏன் காந்தியை கொன்றேன்” படத்தை வெளியிடுவதற்கு தடை

    நான் ஏன் காந்தியை கொன்றேன்” படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

    இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடுவதற்கு முன் உயர்நீதிமன்றத்தை மனுதாரர்கள் நாடியிருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

    “நான் ஏன் காந்தியை கொன்றேன்” படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
    நான் ஏன் காந்தியை கொன்றேன் திரைப்படத்தின் போஸ்டர்

    மகாத்மா காந்தியை கொலை செய்தது தொடர்பாக கோட்சே முன்வைத்த வாதங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் “நான் ஏன் காந்தியை கொன்றேன்”. இந்த திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.

    ஆனால் மகாத்மா காந்தியின் கொலையை நியாயப்படுத்தும் நோக்கில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறி பல்வேறு தரப்புகள் கண்டனம் தெரிவித்தன.

    இதையடுத்து இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் அமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது. பின் இந்த படத்தை வெளியிடக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், இந்த திரைப்படம் வெளியாவதை தடுக்காவிட்டால், மீளமுடியாத பாதிப்பு ஏற்படும். நாட்டின் பொது அமைதியை சீர்குலைத்து, ஒற்றுமையின்மையையும்,

    வெறுப்பையும் விதைப்பதை நோக்கமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் காந்தியின் நற்பெயருக்கு களங்களத்தை ஏற்படுத்துகிறது.

    உச்சநீதிமன்றம்

    அவரை கொன்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த கோட்சேவை புனிதப்படுத்துகிறது. எனவே இந்த படத்தை தடைவிதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை

    நாடுவதற்கு முன் உயர்நீதிமன்றத்தை மனுதாரர்கள் நாடியிருக்க வேண்டும். இப்போதும் கூட மனுதாரர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என அறிவுறுத்தியுள்ளது

      Posted in Uncategorized

      தப்பி ஓடிய சிங்கம் சுட்டு கொலை

      தப்பி ஓடிய சிங்கம் சுட்டு கொலை

      ஈரான் ஆராக் சிட்டி பகுதியில் உள்ள மிருக காட்சி சாலையில் வளர்க்க பட்டு வந்த சிங்கம் ஒன்று அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது

      குறித்த பூங்காவின் ஊழியர்கள் சிங்கத்திற்கு இறைச்சிகளை உண்ண கொடுக்க

      வாயிலை திறந்த பொழுது இவர்களை மிரட்டி விட்டு சிங்கம் தப்பி ஓடியுள்ளது

      இவ்வாறு ஓடிய சிங்கத்தை போலீசார் துரத்தி சென்றனர் எனினும் அது தப்பி தொடராக

      மக்களை வேட்டையாட ஓடிய வேளை சுட்டு கொலை செய்ய பட்டுள்ளது

        பற்றி எரிந்த வான்
        Posted in Uncategorized

        பற்றி எரிந்த வான் – கருகி இறந்த 13 உயிர்கள்

        பற்றி எரிந்த வான் – கருகி இறந்த 13 உயிர்கள்

        மெஸ்சிக்கோவில் பயணித்து கொண்டிருந்த வான் ஒன்று திடீரென தீ பற்றி கொண்டது.இதன் பொழுது அதில் பயணித்த 13 பேர் தீயில் எரிந்து பலியாகினர்

        மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

        சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வான் தலைகீழாக வீழ்ந்து நொறுங்கிய போது ஏற்பட்ட தீ பற்றலில் இந்த
        சோகம் இடம்பெற்றுள்ளது

          தத்து கொடுக்கப்பட்ட பெண் நெதர்லாந்தில்
          Posted in Uncategorized

          தத்து கொடுக்கப்பட்ட பெண் நெதர்லாந்தில் இருந்து வந்து தாயுடன் சந்திப்பு

          தத்து கொடுக்கப்பட்ட பெண் நெதர்லாந்தில் இருந்து வந்து தாயுடன் சந்திப்பு

          23 ஆண்டுக்கு பின் கடல் கடந்து தத்து கொடுக்கப்பட்ட ஒரு குழந்தை இன்று குமரியாகி தாய் முன் நின்றால் அந்த தாயின் மனநிலை எப்படி இருக்கும்… ஆம்…இப்படி ஒரு நெகிழ்ச்சி சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.

          பிறந்த 40 நாளில் தத்து கொடுக்கப்பட்ட பெண் நெதர்லாந்தில் இருந்து வந்து தாயுடன் சந்திப்பு
          23 ஆண்டுக்கு பின் தாயை கண்ட மகிழ்ச்சியில் அமுதவல்லி.
          தாய்…

          முதன் முதலாக நாம் பார்த்த தெய்வம்…பிறந்ததும் முதன் முதலாய் பார்த்த முகம்…ஆண்டுகள் கடந்தாலும் காட்டும் அளவற்ற பாசம்…நம் கண் கலங்கினால் துடிக்கும் ஒரே இதயம்…அன்பின் ஒட்டுமொத்த பிறப்பிடம்…

          எத்தனையோ உறவுகள் இருந்தாலும் தாய்க்கு நிகர் யாரும் இல்லை எனலாம். அந்த தாய்க்கு உலகமே தன் குழந்தைதான். மகளோ, மகனோ யாராக இருந்தாலும் அவர்களுக்காக தன்னையே உருக்கிக்கொள்வாள் தாய்.

          23 ஆண்டுக்கு பின் கடல் கடந்து தத்து கொடுக்கப்பட்ட ஒரு குழந்தை இன்று குமரியாகி தாய் முன் நின்றால் அந்த தாயின் மனநிலை எப்படி இருக்கும்…

          ஆம்…இப்படி ஒரு நெகிழ்ச்சி சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.

          சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா, பூசாரிப்பட்டி கிராமத்தில் உள்ள தாசசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் அமுதா (வயது 50). இவர் தர்மபுரி மாவட்டம் ஜகுரு பகுதியில் கணவர் ரங்கநாதனுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு ஜெனிபர், அமுதவல்லி ஆகிய 2 மகள்கள் பிறந்தனர்.

          ரங்கநாதனின் முதல் மனைவிக்கும் குழந்தைகள் உள்ளனர். ரங்கநாதனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அமுதா குடும்பம் வறுமையில் வாடியது. இதையடுத்து காடையாம்பட்டி தாசசமுத்திரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார்.

          அமுதவல்லி பிறந்ததும் அவரை வளர்க்க முடியாமல் அமுதா தவித்தார். இதனால் அந்த குழந்தையை தத்து கொடுக்க முன்வந்தார். இதையடுத்து அமுதவல்லி பிறந்த 11-வது நாளில் சேலத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ மி‌ஷனரியில் தத்து கொடுத்தார்.

          அங்கு ஒப்படைக்கப்பட்ட அமுதவல்லியை 40-வது நாளில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் தத்தெடுத்தனர். பின்பு அந்த குழந்தையை தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்று வளர்த்து வந்தனர். நெதர்லாந்து பிரஜையாக அமுதவல்லி வளர்ந்தாள்.

          அங்கேயே பள்ளிப்படிப்பை முடித்தாள். நாட்கள் ஓடின… 23 ஆண்டுகள் ஆன நிலையில் அமுதவல்லி வளர்ந்து பெரியவள் ஆனாள். தற்போது அமுதவல்லி நெதர்லாந்தில் அலங்கார பூச்செண்டு விற்பனை மையம் (பிளவர் ஷாப்) நடத்தி வருகிறார்.

          நெதர்லாந்தில் பெற்றோரிடம் அளவற்ற பாசம் காட்டி வளர்ந்த அமுதவல்லிக்கு ஒரு சந்தர்ப்பத்தில் தனது பிறப்பின் ரகசியம் தெரிந்தது. தனது தாயகம் இந்தியா என்றும், குழந்தையாக இருக்கும்போதே தான் தத்து கொடுக்கப்பட்ட விவரத்தையும் அறிந்தார்.

          இதை தொடர்ந்து அமுதவல்லி, பெற்றெடுத்த தாய் மற்றும் குடும்பத்தை பார்க்க விரும்பினார். கடந்த 2 ஆண்டுகளாக முகநூல், இன்டர்நெட் மூலம் தேடியும் பலன் கிடைக்கவில்லை.

          அதனை அறிந்த வளர்ப்பு பெற்றோர்களே அவருக்கு உதவ முன் வந்தனர். பின்னர் அவரது தாயாரின் இருப்பிடத்தை தெரிவித்து நேரில் பார்த்து விட்டு வருமாறு வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

          அதன்படி தனியொரு பெண்ணாக நெதர்லாந்தில் இருந்து விமானத்தில் சென்னைக்கு வந்த அமுதவல்லிக்கு மொழிப் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சென்னையில் உள்ள மொழிப்பெயர்ப்பாளர் ஒருவரது உதவியுடன் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள தாசசமுத்திரம் பகுதிக்கு வந்தார்.

          அங்கு தனது வீட்டிற்கு சென்றார். அங்கு பாசத்தின் உருவமான தனது தாயை பார்த்தார். அந்த தாய்க்கு முதலில் தன் மகள் என்பதை அறியமுடியவில்லை. பின்பு அமுதவல்லி மொழிபெயர்ப்பாளர் மூலம் விவரத்தை கூறியதும் உணர்ச்சி பெருக்கில் கட்டியணைத்து முத்தம் கொடுத்தார். ஆனந்த கண்ணீர் வடித்தார்.

          தனது தாயை நேரில் பார்த்த அமுதவல்லிக்கு கடவுளே நேரில் காட்சி கொடுத்தது போன்ற உணர்வு…அந்த சில நிமிடங்களில் பாசப்பெருக்கால் பனித்துளி போல கண்களில் கண்ணீர் கொட்டியது.

          இதுகுறித்து அமுதவல்லி கூறும்போது, என்னை பெற்ற தாயை பார்த்தபோது ஏற்பட்ட சந்தோசத்திற்கு அளவே இல்லை. இவர்கள் காட்டும் அன்பும், பாசமும் நெகிழ வைக்கிறது என்றார்.

          அவரது தாய் அமுதா கூறும்போது, 23 ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவரின் குடிப்பழக்கத்தால் என்னை கைவிட்டுவிட்டார். வறுமையில் இருந்ததால் எனது குழந்தை வேறு எங்காவது நல்ல முறையில் வாழ வேண்டும் என்ற தத்து கொடுத்தேன்.

          அதன்பிறகு எனது குழந்தையை நினைத்து அடிக்கடி வருந்துவதுண்டு. 23 ஆண்டுகளுக்கு பிறகு மகள் என்னை பார்க்க வருவாள் என நான் கனவிலும் நினைக்கவில்லை என்று தெரிவித்தார்.

            ஐ.நா. அதிகாரிகள் கொலை
            Posted in Uncategorized

            ஐ.நா. அதிகாரிகள் கொலை வழக்கு – 51 பேருக்கு மரண தண்டனை

            ஐ.நா. அதிகாரிகள் கொலை வழக்கு – 51 பேருக்கு மரண தண்டனை

            ஐ.நா அதிகாரிகளைக் கொன்ற வழக்கில் தொடர்புடைய 20-க்கும் மேற்பட்டோரை தலைமறைவானவர்கள் என தீர்ப்பு வழங்கியது காங்கோ நாட்டு ராணுவ நீதிமன்றம்.

            ஐ.நா. அதிகாரிகள் கொலை வழக்கு – 51 பேருக்கு மரண தண்டனை விதித்தது காங்கோ நீதிமன்றம்
            கொலை செய்யப்பட்ட ஐ.நா.அதிகாரிகள்

            ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அதிகாரிகளான மைக்கேல் ஷார்ப் என்ற அமெரிக்கரும், சைடா கேட்டலான் என்ற ஸ்வீடன் நாட்டவரும் கடந்த 2017ம் ஆண்டு திடீரென மாயமாகினர்.

            இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் ஆயுதம் ஏந்திய நபர்களால் சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டு, வயலுக்கு அழைத்துச் சென்று கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

            இந்த சம்பவம் தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதுதொடர்பான வழக்கு நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது.

            இந்நிலையில், ஐ.நா. அதிகாரிகளைக் கொன்ற வழக்கில் தொடர்புடைய 51 பேருக்கு காங்கோ நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது

              விமானத்தை சுட்டு வீழ்த்திய
              Posted in Uncategorized

              விமானத்தை சுட்டு வீழ்த்திய ஏமன் இராணுவ படைகள்

              விமானத்தை சுட்டு வீழ்த்திய ஏமன் இராணுவ படைகள்

              ஏமன் நாட்டின் Ma’rib பகுதியில் பறந்து கொண்டிருந்த ஆள் இல்லா அமெரிக்கா

              இராணுவத்தின் கழுகு ரக உளவு விமானத்தை எமனிய கவுதிய படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்

              ஏமன் பகுதிகளை இலக்கு வைத்து சவுதி விமானங்கள் தாக்குதல் நடத்தி வரும்

              நிலையில் இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                Posted in Uncategorized

                அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்

                அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்

                கிழக்கு சிரியாவின் al-Hasakah பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா இராணுவத்தின் முகம் மீது ஆறு ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது

                தொடராக இலக்கு வைத்து தாக்க பட்டு வரும், இந்த முகாம் மீதான தாக்குதல் அதிகரிப்பை அடுத்து அமெரிக்கா படைகள் அங்கிருந்து வெளியேற கூடும் என எதிர் பார்க்க படுகிறது

                இதே முகாமில் 22 பல் நாட்டு படைகள் காயமடைந்து இருந்தமை குறிப்பிட தக்கது

                  பதட்டம் ரசியா
                  Posted in Uncategorized

                  எமது கோரிக்கை நிராகரிப்பு – இதுவே பதட்டம் ரசியா

                  எமது கோரிக்கை நிராகரிப்பு – இதுவே பதட்டம் ரசியா

                  எமது நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் நேட்டோ படைகள் அலட்சியம் செய்ததன்

                  விளைவ இந்த பதட்டத்திற்கு காரணம் என ரசியா தெரிவித்துள்ளது

                  உக்கிரேன் அருகில் ஆயிரக்கணக்கில் இராணுவத்தை குவித்துள்ள நிலையில்

                  அமெரிக்கா நேட்டோ படைகளும் இராணுவத்தை குவித்து வருகின்றனர் ,இதனால் இந்த விளைவு ஏற்பட்டுள்ளதாக ரசியா அதிபர் புட்டீன் தெரிவித்துள்ளார்

                    Posted in Uncategorized

                    கொரனோ பரவல் – நாட்டை முடக்க கோரிக்கை

                    கொரனோ பரவல் – நாட்டை முடக்க கோரிக்கை

                    நாட்டை முடக்குமாறு பல்வேறு தரப்பினர் விடுத்து வரும் கோரிக்கை தொடர்பில், எவ்விதத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பயணிப்பாளர்

                    நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

                    எனினும், இத்தருணத்தில் நாட்டை முடக்குவது பிரச்சினைக்குத் தீர்வாகாது என்றும் அவர் தெரிவித்தார்.

                    நாடு திறந்திருக்கும் போதே, ​கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

                    மேலும், கொரோனா வைரஸ் தொற்றுவதன் வேகம் அதிகரித்துள்ளமையால், சகலரும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

                      பயணிகள் பஸ்
                      Posted in Uncategorized

                      பள்ளத்தில் விழுந்த பயணிகள் பஸ்

                      பள்ளத்தில் விழுந்த பயணிகள் பஸ்

                      ஹட்டன் – டிக்கோயா சலங்கந்தை பிரதான வீதியில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 17 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

                      இந்த சம்பவம் இன்று காலை 6.45 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                      சலங்கந்தை பகுதியிலிருந்து ஹட்டனில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.

                      இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸூக்கு இடம் கொடுக்க முயன்ற போது, குறித்த தனியார் பேருந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

                      விபத்தில் காயங்களுக்கு உள்ளான 17 தொழிலாளர்களும் டிக்கோயா கிலங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் .

                      சம்பவத்தில் மரியசவரி என்ற 55வயதுடைய ஆண் தொழிலாளி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்..

                      சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரை ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

                        இராணுவம் தளம் மீது தாக்குதல்
                        Posted in Uncategorized

                        அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல் -விமானங்கள் சேதம்

                        அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல் -விமானங்கள் சேதம்

                        ஈராக்கில் தலைநகர் அருகில் அமைக்க பெற்றுள்ள அமெரிக்காவின் விக்ட்டோரியா இராணுவ விமானம் தளம் மீது ஆறு ரொக்கட் வீழ்ந்து வெடித்துள்ளது

                        இதனால அங்கிருந்த அமெரிக்கா படைகள் விமானங்கள் சேதமடைந்துள்ளன ,மேலு குறித்த முகாம் ,ஆளணி மற்றும் ,இராணுவ தளபாடங்கள் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ஈராக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன

                        தொடராக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா படைகள் துரத்தி தாக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                          மரண தண்டனை
                          Posted in Uncategorized

                          காதலிக்காக ஓட்டலில் கொள்ளை அடித்தவருக்கு மரண தண்டனை

                          காதலிக்காக ஓட்டலில் கொள்ளை அடித்தவருக்கு மரணதண்டனை

                          இரண்டு பேரை கொலை செய்து ஓட்டலில் கொள்ளை அடித்தவருக்கு அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

                          அமெரிக்காவில் 2022-ல் முதல் மரண தண்டனை: காதலிக்காக ஓட்டலில் கொள்ளை அடித்தவருக்கு நிறைவேற்றம்
                          டொனால்டு கிராண்ட்
                          அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் வசித்து வந்த டொனால்டு கிராண்ட் என்பவர் கடந்த 2001-ம் ஆண்டு தனது 25 வயதில், ஓட்டல் ஒன்றில் புகுந்து இரண்டு ஊழியர்களை கொலை செய்து கொள்ளையடித்தார்.

                          டொனால்டு கிராண்ட் ஒரு ஊழியரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ததுடன், மற்றொருவரை கத்தியால் குத்தி கொலை செய்தார். விசாரணையின்போது, ஜெயிலில் இருந்து அவரது காதலியை ஜாமீனில் எடுக்க பணம் தேவைப்பட்டதால் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

                          விசாரணை முடிவில் அவருக்க்கு நீதிமன்றம் கடந்த 2005-ம் ஆண்டு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டில் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.

                          அமெரிக்காவில் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததால் டொனால்டு கிராண்டின் தண்டனை நிறைவேற்றம் தள்ளிப்போனது. பல்வேறு மாகாணங்களில் மரண தண்டனை நிறைவேற்றம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

                          இதில் ஒக்லஹோமா மாகாணமும் ஒன்று. கடந்த 2015-ம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்ற தடைவிதிக்கப்பட்டது. அந்த தடை கடந்த ஆண்டு நீக்கப்பட்டது. இந்த நிலையில் டொனால்டு கிராண்டிற்கு மூன்று விஷ ஊசிகள் செலுத்தப்பட்டு மரண் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

                          அமெரிக்காவில் 23 மாநிலங்களில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

                          Posted in Uncategorized

                          வேகமாக பரவும் புதிய வைரஸ் – மக்களுக்கு எச்சரிக்கை

                          வேகமாக பரவும் புதிய வைரஸ் – மக்களுக்கு எச்சரிக்கை

                          ஒமைக்ரான் வைரஸ் தொற்று உலக அளவில் மிக வேகமாக பரவி வரும் நிலையில், கொடிய உயிர்க்கொல்லி தன்மையுடன் உருமாற்றம் அடைந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

                          புதிதாக கண்டறியப்பட்ட ‘நியோகோவ்’ வைரஸ் : பயங்கர உயிர்க்கொல்லி என எச்சரிக்கை..!
                          நியோகோவ்
                          இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                          சீனாவின் வுகான் நகரில் முதன்முதலில் 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதில் இருந்து தற்போது வரை உலக நாடுகள் நிம்மதியற்ற நிலையில் உள்ளன. அதற்கு காரணம் கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்தடுத்த உருமாற்றம்தான்.

                          கொரோனா வைரஸ் தொற்று டெல்டா, பீட்டா, காமா என உருமாற்றம் அடைந்தது. ஆனால், இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா உருமாற்றம் அடைந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்றைவிட அதிக பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது. அதிக உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது.

                          டெல்டா அலை ஒருவழியாக ஓய்ந்த நிலையில், ஒமைக்ரான் என்ற வைரஸ் கடந்த நவம்பர் இறுதியில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் டெல்டாவைவிட மிக அதிக அளவில் பரவும் தன்மைகொண்டதாக உள்ளது. தற்போது உலகம் முழுவதும் இந்த வைரஸ் ஆக்கிரமித்துள்ளது.

                          வேகமாக பரவினாலும் உயிர்ச்சேதம் அதிக அளவில் இல்லை என்பதால் உலக நாடுகள் பெருமூச்சுவிட்டன. இரண்டு டோஸ், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பாதுகாப்பானவர்கள் என கருதப்படுவதால், பொது முடக்கம் இல்லாமல் உலக நாடுகள் செல்கிறது.

                          உலக சுகாதார அமைப்பு, ஐரோப்பிய யூனியன் நாடுகள் கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வர இருக்கிறது எனத் தெரிவித்தன.

                          இந்த நிலையில்தான் தென்ஆப்பிரிக்காவில் MERS-Cov என்ற நியோகோவ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாம். இந்த வைரஸ் 3-ல் ஒருவரை கொல்லும் கொடிய தன்மை கொண்டது என சீனாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

                          இது உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் அல்ல. திரிபு அல்லது வவ்வாலிடம் இருந்து பரவிய புது வகையான வைரஸாக இருக்கலாம் எனவும் கண்டறிந்துள்ளனர். இதனால் உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ளன. சீனா ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தது முதற்கட்ட சோதனைதான். முழுமையாக ஆய்வுத் தகவல் வெளியான பின்னர்தான் அதன் பாதிப்பு குறித்து தெரியவரும்.

                          இருந்தாலும், தற்போதைய நோய் எதிர்ப்பு சக்தி இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                            27 நபர்களை சுட்டு கொன்ற இராணுவம்
                            Posted in Uncategorized

                            27 நபர்களை சுட்டு கொன்ற இராணுவம்

                            27 நபர்களை சுட்டு கொன்ற இராணுவம்

                            ஜோர்டான் நாட்டில் போதைவஸ்து கடத்தல்களில் ஈடுபட்ட குழுவினரை தேடி இராணுவத்தினர் தேடுதலில் ஈடுபட்டனர்

                            இதன் பொழுது கடத்தலில் ஈடுபட்ட இருபத்தி ஏழுபேரை இராணுவத்தினர் சுட்டு படுகொலை செய்துள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது

                            தொடர்ந்து மேலும் பலர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்ய பட்டுள்ளனர்

                              கவிழ்ந்த படகு
                              Posted in Uncategorized

                              கவிழ்ந்த படகு – 39 பேரை காணவில்லை

                              கவிழ்ந்த படகு – 39 பேரை காணவில்லை

                              அமெரிக்கா புளோரிடா கடல் பகுதியில் சட்டவிரோதமாக படகில் நுழைய முயன்ற அகதிகள் படகு கவிழ்ந்ததில் அதில் பயணித்த 39 பெரும் காணாமல் போயுள்ளனர்

                              இவ்வாறு காணாமல் போனவர்களில் நால்வரது சடலங்கள் மீட்க பட்டுள்ளன

                              ,ஏனையவர்களை தேடும் பணி
                              முடுக்கிவிட பட்டுள்ளது