பயணிகள் பேரூந்து
Posted in Uncategorized

பள்ளத்தாக்கில் வீழ்ந்த பயணிகள் பேரூந்து

பள்ளத்தாக்கில் வீழ்ந்த பயணிகள் பேரூந்து

ஹட்டன் சலங்கந்தை வீதியின் பட்டல்கல பகுதியில் தனியார் பேருந்து ஒன்று இன்று (28) காலை 6.30 மணியளவில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஹட்டன் டீ.கே டபீள்யூ தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி 72 அடி பள்ளத்தில் உள்ள ஆற்றினுள் விழுந்துள்ளது.

15 பேர் சென்ற இப்பஸ்ஸில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 9 பேர் காயமடைந்த

நிலையில் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

    Posted in Uncategorized உலக செய்திகள்

    உக்ரைன் மீது ராணுவ தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம்

    உக்ரைன் மீது ராணுவ தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம்

    விளாடிமிர் புடினின் ஒவ்வொரு நடவடிக்கையும் உக்ரைன் மீது ரஷ்ய படையெடுக்கும் என்பதை உறுதி செய்வதாக அமெரிக்க தூதர் குறிப்பிட்டுள்ளார்.

    உக்ரைன் மீது ராணுவ தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம் – அமெரிக்கா குற்றச்சாட்டு
    வெண்டி ஷெர்மன், விளாடிமிர் புடின்
    அண்டை நாடான உக்ரைன் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சம் ராணுவ வீரர்கள் நிறுத்தி உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய அச்சுறுத்தலை தடுக்க அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகள் முயற்சித்து வருகின்றன.

    இந்நிலையில் அடுத்த மாதம் மத்தியில் உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்த அதன் அதிபர் புடின் திட்டமிடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அவரது நடவடிக்கையை தடுக்க அழுத்தம் கொடுக்கப்பட்ட போதிலும், பிப்ரவரி நடுப்பகுதியில் உக்ரைனுக்கு எதிராக பலத்தைப் பயன்படுத்த புடின் தயாராக இருக்கிறார் என்பதை அமெரிக்கா நம்புவதாக அந்நாட்டு தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    அவர் இறுதி முடிவை எடுத்தாரா என்பது தெரியாது, ஆனால் அவர் இராணுவப் பலத்தைப் பயன்படுத்தப் போகிறார் என்பதற்கான எல்லா அறிகுறிகளையும் நாங்கள் நிச்சயமாக பார்க்கிறோம். ஒருவேளை அது இப்போது இருக்கலாம் அல்லது பிப்ரவரி நடுப்பகுதியில் இருக்கலாம் என அமெரிக்க வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வெண்டி ஷெர்மன் கூறியுள்ளார்.

    அண்டை நாடுகளின் மீது படையெடுப்பதற்கு எதிராக மாஸ்கோவை எச்சரிக்கும் வகையில், இந்த மாத தொடக்கத்தில் வியன்னாவில் தனது ரஷ்ய கூட்டாளியை சந்தித்த ஷெர்மன், புடின் நடவடிக்கைகளால் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி பாதிக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

      Posted in Uncategorized

      ரஷிய அமீது பொருளாதார தடை விதிக்கப்படும்: ஜோ பைடன் மிரட்டல்

      ரஷிய அமீது பொருளாதார தடை விதிக்கப்படும்: ஜோ பைடன் மிரட்டல்

      ரஷியா உக்ரைன் மீது படையெடுத்தால் அந்த நாட்டின் அதிபர் புதின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மிரட்டல் விடுத்துள்ளார்.

      ரஷிய அதிபர் புதின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும்: ஜோ பைடன் மிரட்டல்
      ஜோ பைடன்
      வாஷிங்டன் :

      சோவியத் ஒன்றியத்தின் ஒரு அங்கமாக இருந்து வந்த உக்ரைன், கடந்த 1991-ம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பின் தனிநாடாக உருவானது. ஆனாலும் கலாசார ரீதியிலும் சமூக ரீதியிலும் ரஷியாவோடு பல தொடர்புகளைக் கொண்டுள்ளது உக்ரைன். இப்போதும் ரஷிய மொழி பேசுவோர் கணிசமாக உக்ரைனில் வாழ்ந்து வருகின்றனர்.

      உக்ரைன் தன் எல்லைகளை ஒருபுறம் ரஷியாவோடும், மற்றொரு புறம் ஐரோப்பிய நாடுகளுடனும் பகிர்ந்து கொள்கிறது.

      இந்த சூழலில் அமெரிக்கா, கனடா மற்றும் 27 ஐரோப்பிய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பு உக்ரைனை தன்னுடன் இணைத்து கொள்ள விரும்புகிறது. ஆனால் தனது எல்லையையொட்டி அமைந்துள்ள அந்த நாடு நேட்டோவில் இணைந்தால் தங்களது தேசியப் பாதுகாப்புக்கு அது மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷியா கருதுகிறது.

      உக்ரைனை தங்களது அமைப்பில் இணைக்க மாட்டோம் என்று நேட்டோ உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. எனினும், இதற்கு நேட்டோ அமைப்பு மற்றும் அமெரிக்கா உடன்படாததால் இரு தரப்பிலும் பதற்றம் அதிகரித்து வருகிறது.

      இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையருகே சுமாா் 1 லட்சம் படையினரை ரஷியா குவித்துள்ளது. உக்ரைன் மீது படையெடுத்து அந்த நாட்டை தன்னுடன் இணைத்துக் கொள்வதற்காக ரஷியா படை குவிப்பில் ஈடுபட்டுள்ளாக அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றன.

      ரஷியா இந்த குற்றச்சாட்டை மறுத்தாலும் இருநாடுகளின் எல்லையில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

      இந்த நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது ஜனாதிபதி ஜோ பைடனிடம் உக்ரைன் விவகாரம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்விகளை எழுப்பினர்.

      அப்போது ஒரு பத்திரிகையாளர் “உக்ரைன் மீதான படையெடுப்பு விவகாரத்தில் ரஷிய அதிபர் புதின் மீது தனிப்பட்ட முறையில் பொருளாதார தடைகள் விதிக்கப்படுமா?” என கேட்டார்.

      அதற்கு பதிலளித்த ஜோ பைடன் “ஆம், உக்ரைனுக்குள் ரஷியா ஊடுருவினால் நிச்சயமாக புதின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கும்” என்றார்.

      தொடர்ந்து பேசிய அவர் “ரஷியா, உக்ரைன் மீது படையெடுத்தால் அது, 2-ம் உலக போருக்கு பிந்தைய மிகப்பெரிய படையெடுப்பாக அமையும். இது நடந்தால் மிகவும் மோசமான விளைவுகளை ரஷியா எதிர்கொள்ளவேண்டி வரும். போர் சூழல் ஏற்படுவதை அமெரிக்கா விரும்பவில்லை, அமைதியான சூழலை ஏற்படுத்தத் தேவையான முயற்சிகளை மேற்கொண்டால் அதை எங்கள் நாடு ஆதரிக்கும்’’ எனவும் கூறினார்.

      சுந்தர் பிச்சை மீது வழக்கு
      Posted in Uncategorized

      அனுமதியின்றி யூடியூப்பில் இந்தி திரைப்படம் பதிவேற்றம் – சுந்தர் பிச்சை மீது வழக்கு

      அனுமதியின்றி யூடியூப்பில் இந்தி திரைப்படம் பதிவேற்றம் – சுந்தர் பிச்சை மீது வழக்கு

      தமது திரைப்படத்தை யாருக்கும் விற்கவில்லை, இருப்பினும், அது லட்சக்கணக்கான பார்வைகளுடன் யூடியூப்பில் வலம் வருவதாக இந்தி திரைப்பட தயாரிப்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

      அனுமதியின்றி யூடியூப்பில் இந்தி திரைப்படம் பதிவேற்றம் – சுந்தர் பிச்சை மீது வழக்கு
      சுனில் தர்ஷன், சுந்தர் பிச்சை
      மும்பை:

      பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் சுனில் தர்ஷன், ‘ஏக் ஹசீனா தி ஏக் தீவானா தா’ என்ற படத்தை எழுதி, தயாரித்து, இயக்கி உள்ளார். இதில் சிவ தர்ஷன், நடாஷா பெர்னாண்டஸ் மற்றும் உபென் படேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

      இன்னும் திரைக்கு வராத நிலையில் அந்த திரைப்படம் யூடியூப்பில் சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக யூடியூப் நிர்வாகத்திடம் பலமுறை அவர் புகார் தெரிவித்தும் அதை நீக்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் புகார் தெரிவித்துள்ளார்.

      தமது திரைப்படத்தை யாருக்கும் விற்கவில்லை, வெளியிடவில்லை, இருப்பினும், அது லட்சக்கணக்கான பார்வைகளுடன் யூடியூப்பில் வலம் வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யூடியூப் நிர்வாகம் விளம்பரங்கள் மற்ற ஆதாரங்கள் வழியே இந்தி திரைப்படத்தின் மூலம் பெரும் வருவாயை ஈட்டியதாக சுனீல் தர்ஷனின் வழக்கறிஞர் ஆதித்யா தெரிவித்துள்ளார்.

      காப்புரிமை சட்டத்தை மீறி யூடியூப்பில் திரைப்படம் பதிவேற்றப்பட்டது தொடர்பாக சுனில் தர்ஷன் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், எஃப்ஐஆர் பதிவு செய்ய மும்பை காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கூகுள் முதன்மை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் யூடியூப் ஊழியர்கள் ஐந்து பேர் மீது எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டுள்ளது

        செருப்பால் அடி - பா.ஜ.க., எம்.எல்.ஏ
        Posted in Uncategorized

        செருப்பால் அடி – பா.ஜ.க., எம்.எல்.ஏ.பேச்சால் சர்ச்சை

        செருப்பால் அடி – பா.ஜ.க., எம்.எல்.ஏ.பேச்சால் சர்ச்சை

        எம்.எல்.ஏ மகேஷ் திரிவேதியின் பேச்சு,பா.ஜ.க.வின் உண்மையான முகம் மற்றும் குணத்தை காட்டுவதாக சமாஜ்வாடி கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

        தடி மற்றும் செருப்பால் அடி – பா.ஜ.க., எம்.எல்.ஏ.பேச்சால் சர்ச்சை
        ஆதரவாளர்களுடன் பா.ஜ.க. எம்.எல்.ஏ மகேஷ் திரிவேதி

        உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் காணொலி மூலம் அரசியல் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். கான்பூர் பாஜக எம்.எல்.ஏ மகேஷ் திரிவேதி, கித்வாய் நகர் தொகுதியில் காணொலி மூலம் பிரச்சாரம் செய்தார்.

        அப்போது தமது ஆதரவாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

        இந்த நேரத்தில், கொடுங்கோலர்கள், ஒருபுறம் பேசுபவர்கள், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்கள், அவர்களை தடி மற்றும் செருப்பால் அடி, ஆனால் சுட வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நான் எல்லாவற்றையும் கையாள்வேன்.இவ்வாறு தமது பேச்சின்போது அவர் குறிப்பிட்டார்.

        அவரது பேச்சை பொதுமக்கள் கைதட்டி ஆரவாரத்துடன் வரவேற்றனர். இந்த வீடியோவை ஆதரவாளர் ஒருவர் முகநூலில் நேரலையாக ஒளிபரப்பினார். இது தற்போது வைரலாகி வருகிறது. அந்த தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளரை தாக்கி, பாஜக எம்.எல்.ஏ மகேஷ் திரிவேதி பேசியதாக கூறப்படுகிறது.

        அவரது பேச்சிற்கு சமாஜ்வாடி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜகவின் உண்மையான முகமும் குணமும் இதுதான். இது குறித்து நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம் என்று அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

        இந்நிலையில் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்த வீடியோவை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்வதாகவும், விதிமீறல் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கான்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர் நேஹா ஷர்மா குறிப்பிட்டுள்ளார்.

        கடத்த பட்ட ஆயுதங்கள்
        Posted in Uncategorized உலக செய்திகள்

        ஈரானுக்கு கடத்த பட்ட ஆயுதங்கள் மடக்கி பிடிப்பு

        ஈரானுக்கு கடத்த பட்ட ஆயுதங்கள் மடக்கி பிடிப்பு

        ஈரானுக்கும் அதன் எல்லையோர வழியாக கடத்த பட்ட அதி நவீன ஆயுதங்கள் ஈரான் போலீசார்

        நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் பொழுது மீட்க பட்டுள்ளது

        இரண்டு வாகனங்கள் ஊடக மறைத்து எடுத்து வரப்பட்ட பொழுதே மடக்கி பிடிக்க பட்டுள்ளது

        ,இந்த ஆயுத கடத்தலில் ஈடுபட்ட நால்வர் கைது செய்ய பட்டுள்ளனர் .இவ்வாறு

        கைதானவர்க்ளுக்கு ஈரானில் தூக்கு தண்டனை வழங்குவது குறிப்பிட தக்கது

          Posted in Uncategorized

          தாய்வான் எல்லையில் பறக்கும் சீனா போர் விமானங்கள் – பதட்டம் அதிகரிப்பு

          தாய்வான் எல்லையில் பறக்கும் சீனா போர் விமானங்கள் – பதட்டம் அதிகரிப்பு

          தாய்வான் தனது நாட்டின் ஒரு பகுதி என கூறி வரும் சீனா ஆந்த நாட்டை தாம் மீட்டு சீனாவுடன் இணைத்துவிட முயன்று வருகிறது

          சீனாவின் இந்த நடவடிக்கையால் நாடுகளுக்கு இடையில் பதட்டம் உருவாகியுள்ளது ,இவ்வேளை

          சீனாவின் அதி உயர் ரக போர் விமானங்கள் தாய்வான் எல்லையில் பறப்பில் ஈடுபட்டுள்ளதால் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது

          அமெரிக்கா இராணுவம் ,விமானங்கள் ,போர் கப்பல்களுடன் அங்கு அனுப்பி வைக்க பட்டுள்ளது ,தொடர்ந்து போர் பதட்டம் நிலவி வருகிறது

            Posted in Uncategorized உலக செய்திகள்

            சீன கடலில் வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா போர் விமானம்

            சீன கடலில் வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா போர் விமானம்

            தென் சீன கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா விமான தாங்கி


            கப்பல் ஒன்றில் தரை இறங்க முற்பட்ட fc 35 ரக விமானம் ஒன்று கடலில் வீழ்ந்து மூழ்கியது

            இதன் பொழுது அதில் இருந்த விமானி உலங்கு வானூர்தி மூலம் காப்பாற்ற பட்டுள்ளார்

            அதே கப்பலில் பணியில் ஈடுபட்டிருந்த ஏழு மாலுமிகள் காயமடைந்துள்ளனர்

            குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

            உக்ரைனுக்கு அதிநவீன ராக்கெட்
            Posted in Uncategorized

            பறந்து வந்த ஏவுகணை – சுட்டு வீழ்த்திய இராணுவம்

            பறந்து வந்த ஏவுகணை – சுட்டு வீழ்த்திய இராணுவம்

            ஏமான் நாட்டி கவுதிய போராளிகள் குழுவினர் அபுதாபி மற்றும் சவூதி நாடுகள் மீது தொடர்

            ஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்

            இவ்விதம் ஏவ பட்ட இரண்டு ஏவுகணைகளை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக UAE பாதுகாப்பு

            அமைச்சர் தெரிவித்துள்ளார்

            அமெரிக்காவுடன் நல்லுறவை உறவை பேனி முசுலீம் நாடுகளை கூறு போட்டு தாக்கி வரும்

            சவுதிக்கு பதிலடி கொடுக்க ஈரான் இந்த வவுகணைகளை தமது ஆதரவு குழுக்களுக்கு வழங்கி வருகிறது

            அவ்விதமான ஏவுகணைகள் மூலமே இந்த தாக்குதல் தொடுக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

              விமான நிலையம்
              Posted in Uncategorized

              அதிக சினோ – விமான நிலையம் அடித்து பூட்டு

              அதிக சினோ – விமான நிலையம் அடித்து பூட்டு

              துருக்கி நாட்டின் இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையம் திடீரென அடித்து பூட்ட பட்டுள்ளது

              அதிக சினோ பொழிவு இடம்பெற்று வருவதால் இந்த விமான நிலையம் தற்காலிகமாக பூட்ட பட்டுள்ளது

              இதனால் பயணிகள் பெரிதும் அவதியில் சிக்கினர்

                காணாமல் போன விமானம்
                Posted in Uncategorized

                அமெரிக்க விமானம் – இமயமலை பகுதியில் கண்டுபிடிப்பு

                அமெரிக்க விமானம் – இமயமலை பகுதியில் கண்டுபிடிப்பு

                சீனாவின் குன்மிங் பகுதியில் இருந்து 1945ம் ஆண்டு 13 பேரை ஏற்றிக்கொண்டு பறந்த அந்த விமானம் அருணாச்சலப் பிரதேச மலைப்பகுதியில் காணாமல் போனது.

                இரண்டாம் உலகப்போரின் போது விபத்துக்குள்ளான அமெரிக்க விமானம் – இமயமலை பகுதியில் கண்டுபிடிப்பு


                இரண்டாம் உலகப் போரின் போது காணாமல் போன விமானம்
                இரண்டாம் உலகப் போரின் போது இந்தியா, சீனா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் நூற்றுக்கணக்கான அமெரிக்க இராணுவ விமானங்கள் காணாமல் போயின.

                சீனாவின் குன்மிங்கில் இருந்து 1945 ஆம் ஆண்டு 13 பேரை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சி-46 ரக அமெரிக்க விமானம், மோசமான வானிலை காரணமாக அருணாச்சலப் பிரதேச இமயமலைப்

                பகுதியில் காணாமல் போனது. அந்த விமானத்தை கண்டு பிடிக்கும் முயற்சியில் அதில் பயணம் செய்த ஒருவரின் மகன் ஈடுபட்டார். நியூயார்க் நகரை சேர்ந்த பில் ஸ்கேர் என்ற அந்த நபர் , விமான தேடுதல் பணியை, அமெரிக்க மலையேற்ற சாகச வீரர் கிளேட்டன் குஹ்லெஸ் இடம் ஒப்படைத்திருந்தார்.

                இரண்டாம் உலக போர் விமான பாகங்கள் கண்டு பிடிப்பு

                அதன் அடிப்படையில் தனது குழுவினருடன் குஹ்லெஸ் இமயமலை பகுதியில் விமானம் குறித்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தார். இந்த பயணத்தில் குஹ்லேஸ் மற்றும் உள்ளூர்

                வழிகாட்டிகள் குழுவும் இடம் பெற்றிருந்தது. இமயமலை உச்சியில் உறைபனி ஆபத்து நிறைந்த பகுதியில் முகாமிட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. கடும் முயற்சிக்கு பின்னர் பனி மூடிய

                பகுதியில் கிடந்த போர் விமான பாகத்தை இந்த குழு கண்டுபிடித்துள்ளது. இடிபாடுகளுக்கு இடையே விமான வால்பகுதியில் இருந்த குறியீட்டு எண்ணைக் கொண்டு அடையாளம் காண முடிந்தததாக கிளேட்டன் குஹ்லெஸ் தெரிவித்துள்ளார்.

                சிதைந்த நிலையில் எஞ்சியிருந்த விமான பாகங்களில் மனிதர்கள் இருந்ததற்கான எந்த அடையாளங்களும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் உலகப்போரில்

                பயன்படுத்தப்பட்ட விமானம் 77 ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது வரலாற்று ஆய்வாளர்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

                முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டில் விமானம் குறித்த தேடுதல் வேட்டையின் போது

                பனிப்புயலில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் எதையும் கண்டு பிடிக்க முடியாமல் திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

                  ராஷ்மி கவுதம்
                  Posted in Uncategorized

                  ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகை

                  ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகை

                  தமிழ் திரையுலகில் கண்டேன் படத்தின் மூலமாக அறியப்பட்ட நடிகை ராஷ்மி கவுதம் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் பரவிவருகிறது.

                  ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகை ராஷ்மி கவுதம்?
                  ராஷ்மி கவுதம்
                  நடிகர் சாந்தனு நடித்து வெளியான கண்டேன் படத்தில் அவருக்கு இணையாக நடித்தவர் நடிகை ராஷ்மி கவுதம். இவர் தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார்.

                  தற்போது நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் ’போலா சங்கர்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட உள்ளார்.

                  ராஷ்மி கவுதமும் தெலுங்கு நடிகர் சுடிகள்ளி சுதீரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகி வந்தன. ஆனால், இதனை மறுத்த இருவரும் நாங்கள் நண்பர்களாகத்தான் பழகி வருகிறோம்

                  என்றனர். இந்நிலையில், தொழில் அதிபர் ஒருவரை நடிகை ராஷ்மி கவுதம் ரகசிய திருமணம்

                  செய்துகொண்டதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி வருகிறது. இதுபற்றி ராஷ்மி எந்தவொரு விளக்கமோ மறுப்போ தெரிவிக்கவில்லை.

                  ராஷ்மி கவுதம்
                  ராஷ்மி கவுதம்

                  சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்கள் பகிர்ந்து வரும் ராஷ்மி கவுதம், அவருடைய

                  திருமணத்தை ஏன் மறைக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

                    பிரான்ஸ் இராணுவ முகாம்
                    Posted in Uncategorized

                    பிரான்ஸ் இராணுவ முகாம் மீது தாக்குதல் – 20 படைகள் காயம்

                    பிரான்ஸ் இராணுவ முகாம் மீது தாக்குதல் – 20 படைகள் காயம்

                    மாலியில் அமைந்துள்ள பிரான்ஸ் இராணுவ முகம் மீது போராளிகள் நடத்திய தாக்குதலில்


                    சிக்கி அந்த முகாம் பலத்த சேதமடைந்துள்ளது

                    மேலும் அங்கிருந்த கூட்டு படைகளை சேர்ந்த இருபது இத்தாலிய இராணுவத்தினர்

                    காயமடைந்துள்ளதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்

                    எனினும் இழப்பு இதைவிட பலமடங்கு என சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன

                      வெடித்து சிதறும் அமெரிக்கா
                      Posted in Uncategorized

                      வெடித்து சிதறும் அமெரிக்கா இராணுவ வண்டிகள் – துரத்தி தாக்கும் போராளிகள்

                      வெடித்து சிதறும் அமெரிக்கா இராணுவ வண்டிகள் – துரத்தி தாக்கும் போராளிகள்

                      வெடித்து சிதறும் அமெரிக்கா இராணுவ வண்டிகள் – போராளிகள்

                      ஈராக் பப்பில் பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவ வண்டிகளை


                      இலக்கு வைத்து போராளிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு அழிந்துள்ளது

                      இதில் அமெரிக்கா படைகளிற்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை

                      ,பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என


                      ஈரான் அறிவித்த நிலையில் மேற்படி தாக்குதல்கள் தொடர்கின்றமை குறிப்பிட தக்கது

                        ரஷியா இராணுவம்
                        Posted in Uncategorized உலக செய்திகள்

                        உக்கிரேன் எல்லையில் பதட்டம் குவிக்க படும் ரஷியா இராணுவம்

                        உக்கிரேன் எல்லையில் பதட்டம் குவிக்க படும் ரஷியா இராணுவம்

                        உக்கிரேன் எல்லையில் ரயில்களில் இருந்து ரசியா இராணுவத்தின் ஆயுத வண்டிகள் இறக்க பட்டு


                        குவிக்க பட்டு வருவதால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது

                        ரசியா உக்கிரேன் மீது திடீர் போர் நடவடிக்கை மேற்கொண்டு அந்த நாட்டை கைப்பற்றலாம் என்ற பீதி நிலவி வருகிறது

                        இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன

                          வெடித்த குண்டு
                          Posted in Uncategorized

                          வெடித்த குண்டு 10 பேர் மரணம் – 17 பேர் காயம்

                          வெடித்த குண்டு 10 பேர் மரணம் – 17 பேர் காயம்

                          ஆப்கானிஸ்தான் Herat பகுதியில் இடம்பெற்ற பெரும் குண்டு தாக்குதலில் சிக்கி சம்பவ இடத்தில பத்து
                          பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்

                          காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

                          தலிபான்கள் ஆட்சியில் அவர்கள் புரிந்தே அதே தாக்குதல்கள் இவர்களுக்கு எதிராக எதிரி

                          படையினரால் தொடுக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                            இராணுவம்
                            Posted in Uncategorized

                            அமெரிக்காவில் 2 இராணுவம் பலி -17 பேர் காயம்

                            அமெரிக்காவில் 2 இராணுவம் பலி -17 பேர் காயம்

                            வடக்கு கரோலினா பகுதியில் இராணுவத்தின் மறேன் படையினர் சென்ற வாகனம் விபத்தில்

                            சிக்கியதில் அதில் பயணித்த இருவர் பலியாகினர் ,மேலும் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்

                            மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,இது சதியா அல்லது விபத்தா

                            என்பது தொடர்பில் தெரியவரவில்லை

                              அர்னால்டு
                              Posted in Uncategorized

                              கார் விபத்தில் சிக்கிய நடிகர்

                              கார் விபத்தில் சிக்கிய நடிகர்

                              பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்னேகர் பெரிய கார் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து இருக்கிறார்.

                              கார் விபத்தில் சிக்கிய நடிகர் அர்னால்டு
                              அர்னால்டு


                              பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்னேகர். ஹாலிவுட் திரைப்படங்களின் மூலம் புகழ் பெற்ற இவர் தற்போது படங்களில் நடிப்பதை விடுத்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

                              அர்னால்டு சென்ற கார் தற்போது விபத்தில் சிக்கியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள சாலையில் அர்னால்டு கார் விபத்தில் சிக்கியுள்ளார்.

                              அர்னால்டு காருக்கு முன்னதாக சென்ற இரு கார்கள் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதனால் பின்னாடி வந்த வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக மோதின.

                              மொத்தம் நான்கு கார்கள் இந்த விபத்தில் சிக்கின. அர்னால்டின் எஸ்யூவி மாடல் கார் ஒரு சிறிய

                              காரின் மீது மேலே ஏறி நின்றது. சீட் பெல்ட் அணிந்திருந்தால் அதிர்ஷ்டவசமாக அர்னால்டுக்கு எந்த பெரிய காயங்களும் ஏற்படவில்லை.

                              அர்னால்டு

                              விபத்து தொடர்பான பல படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விபத்தில் பெண்

                              ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

                              Posted in Uncategorized உலக செய்திகள்

                              அமெரிக்காவில் எகிறிய கொரனோ மரணம் -2,777 பலி

                              அமெரிக்காவில் எகிறிய கொரனோ மரணம் -2,777 பலி

                              அமெரிக்காவில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த

                              தினம் மட்டும் சுமார் 2,777 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் அதே நாளில் 779,036 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                              இதே போன்று பிரிட்டனில் 288 பேர் பலியாகியும் ,95,787 பேர் பாதிக்க பட்டுள்ளனர் என சுகாதார

                              அமைச்சு தெரிவித்துள்ளது

                                Posted in Uncategorized

                                யாழில் சிக்கிய நகை கொள்ளையர்கள்

                                யாழில் சிக்கிய நகை கொள்ளையர்கள்

                                யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் நடமாடும் மக்களிடம் நகைகளை இலக்கு வைத்து

                                கொள்ளையடித்து வந்த ஐவர் அடங்கிய குழு ஒன்று காவல்துறையிடம் சிக்கியுள்ளது

                                நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த மேற்படி குற்ற செயல் தொடர்பாக போலீசார் மேற்க்கண்ட

                                கண்காணிப்பு தேடுதல் வேட்டையின் பொழுதே மேற்படி கைது இடம்பெற்றுள்ளது