Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
12 பேர் காவல்துறையினரால் திடீர் கைது
12 பேர் காவல்துறையினரால் திடீர் கைது
இலங்கையில் பரவி வரும் நோயின் தாக்குதலை அடுத்து விதிக்க பட்ட நிகழ்கால
விதிகளை மீறி செயல் பட்ட பண்ணிரெண்டு பேரினைதாம் கைது செய்துள்ளதக் காவல்துறையினர்
தெரி வித்துள்ளனர்
முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத நபர்களே
இவ்விதம் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இலங்கையில் இதுவரை கொரனோவால் 283 பேர் பலி
இலங்கையில் இதுவரை கொரனோவால் 283 பேர் பலி
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயில் சிக்கி இதுவரை 283 பேர் பலியாகியுள்ளனர் ,
தொடர்ந்து அதிகரித்து வரும் நோயினால் பலநூறு பேர் புதிதாக
பாதிக்க பட்ட நிலையில் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளமை குறிப்பிட தக்கது
கோட்டா கட்சி எம்பிக்கு கொரனோ
கோட்டா கட்சி எம்பிக்கு கொரனோ
இலங்கையில் ஆளும் கோட்டாபய கட்சியை சேர்ந்த ,கண்டி பாராளுமன்ற
உறுப்பினரான வசந்த யாப்பா பண்டாரவுக்கு கொரனோ நோயுள்ளது
கண்டு பிடிக்க பட்டுள்ளது .இதனை அடுத்து அவர் இப்பொழுது தனிமை படுத்த பட்டுள்ளார்
மட்டக்களப்பு பாலத்திற்கு கீழ் இருந்து வெடிகுண்டு மீட்பு
மட்டக்களப்பு பாலத்திற்கு கீழ் இருந்து வெடிகுண்டு மீட்பு
இலங்கை மட்டக்களப்பு வலையிறவு பாலத்திற்கு கீழ் இருந்து
வெடிக்காத நிலையில் இருந்த கைக்குண்டு ஒன்று மீட்க பட்டுள்ளது
வெளிநாட்டு தயாரிப்பிலான இந்த கைக்குண்டு இதற்குள் எவ்விதம்
வந்தது என்பது தொடபில் விசாரணைகள் மேற்கொள்ள வருகின்றது
சுருதிக்கு திருமணமாம்
சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகை சுருதிஹாசன், திருமணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இந்த ஆண்டு திருமணமா? – சுருதிஹாசன் விளக்கம்
சுருதிஹாசன்
கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் இந்தியில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக ஒரு ரவுண்டு வந்தார். இவர் நடித்த படங்கள் கடைசியாக 2017-ல் வெளியாகின. அதன் பின்னர் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார்.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார் சுருதிஹாசன். சமீபத்தில் இவர் நடித்த ‘புத்தம் புது காலை’ என்கிற ஆந்தாலஜி படம் வெளியானது. தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுருதிஹாசன் அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
சுருதிஹாசன்
அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு பாய் பிரண்ட் இருக்கிறாரா? என கேள்வி கேட்டார். அதற்கு ஆமாம் என பதிலளித்த சுருதி, இந்த ஆண்டு திருமணமா? என்ற மற்றொரு ரசிகரின் கேள்விக்கு, இல்லை என பதிலளித்தார். மேலும் மற்றொரு ரசிகர் நீங்கள் தற்போது காதலில் இருக்கிறீர்களா? என கேள்வி எழுப்ப, நான் எப்போதுமே காதலில் தான் இருக்கிறேன் என கூறினார் சுருதிஹாசன்
எயமானுக்காக வாசலில் காத்து கிடந்த நாய்
எயமானுக்காக வாசலில் காத்து கிடந்த நாய்
துருக்கி நாட்டில் உரிமையாளர் வருகைக்காக வளர்ப்பு நாய் ஒன்று 6 நாட்களாக மருத்துவமனை வாசலில் காத்திருந்து தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளது.
உரிமையாளர் சிகிச்சைக்கு அனுமதி – மருத்துவமனை வாசலில் 6 நாளாக காத்திருந்த வளர்ப்பு நாய்
உரிமையாளருக்காக காத்திருந்த வளர்ப்பு நாய்
இஸ்தான்புல்:
துருக்கி நாட்டின் வடகிழக்கே டிராப்ஜன் நகரில் வசித்து வருபவர் சிமல் சென்டர்க் (68). இவர் போன்கக் என்ற பெயரிடப்பட்ட சிறிய, கலப்பின வகையை சேர்ந்த பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 14-ம் தேதி சென்டர்க் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை கொண்டு செல்லும்பொழுது ஆம்புலன்ஸ் பின்னாலேயே போன்கக் தொடர்ந்து சென்றுள்ளது. இதன்பின் அவரது வருகைக்காக மருத்துவமனை வாசலில் காத்திருந்தது.
ஆனால், அதன் உரிமையாளர் உடனடியாக வெளியே வரவில்லை. அவருக்கு 6 நாட்கள் சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் காலையில் மருத்துவமனைக்கு வெளியே வாசலில் நின்று கொண்டு தனது உரிமையாளரை காண ஆவலுடன் காத்திருந்தது போன்கக்.
சென்டர்க்கின் மகள் பலமுறை போன்கக்கை வீட்டிற்கு கொண்டு செல்ல முயன்றுள்ளார். ஆனால், அது மீண்டும் மருத்துவமனைக்கு ஓடி விடும் என அவர் கூறியுள்ளார். அதனை மருத்துவமனை ஊழியர்கள் துரத்தினாலும் அவற்றை கவனத்தில் கொள்ளவில்லை.
இதுதொடர்பாக, அந்த மருத்துவமனை இயக்குனர் புவாட் உகுர் கூறுகையில், யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படுத்தவில்லை. ஒவ்வொருவருக்கும் அது மகிழ்ச்சி ஏற்படுத்தியது என தெரிவித்துள்ளார்.
அதன்பின், 6 நாட்கள் கழித்து சிகிச்சை முடிந்து சென்டர்க் வரும்பொழுது, அவரை கண்ட ஆவலில் தனது வாலை ஆட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. மனிதர்களை போன்று எங்களுடன் நெருங்கியுள்ளது. உங்களை அது மகிழ்ச்சிப்படுத்தும் என சென்டர்க் கூறியுள்ளார்.

வீட்டில் வெடிகுண்டுகள் மீட்பு – சுற்றிவளைத்த பொலிஸ்
வீட்டில் வெடிகுண்டுகள் மீட்பு – சுற்றிவளைத்த பொலிஸ்
தென்னிலங்கை கம்பாக பகுதியில் வீடு ஒன்றில் மறித்து வைக்க பட்ட
நிலையில் வெடிபொருட்கள் மீட்க பட்டுள்ளன ,இந்த வெடிபொருட்கள்
வெளி நாட்டு தயாரிப்ப்புக்கள் எனவும் ,இவை எவ்விதம் இங்கு
எடுத்துவரப்பட்டன என்பது தொடர்பில் விசாரணைகள் முடுக்கிவிட பட்டுள்ளன
பேருந்துகளில் செல்லும் பொழுது சக மனிதர்களுடன் பேச வேண்டாம் என எச்சரிக்கை
பேருந்துகளில் செல்லும் பொழுது சக மனிதர்களுடன் பேச வேண்டாம் என எச்சரிக்கை
உலகை உலுப்பி வரும் கொரனோ நோயின் பரவல் மிக வேகமாக பரவி உயிர்களை காவு கொண்டு வருகிறது ,
இதில் இருந்து மக்களை காத்து கொள்ளும் முகமாக மக்கள் பொது பாவனையில் பாவிக்க படும் பேரூந்துகள் ,ரயில்கள்
,போன்றவற்றில் சக மனிதர்களுடன் உரையாட வேண்டாம் என கேட்டுக்கொள்ள படுகிறது
அவ்வாறு உரையாடுவதன் மூலம் அவர்கள் மூச்சு காற்றின் வழியாக
இந்த நோயானது பரவி விடுகிறது என பிரான்சு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்
நடிகை… சமந்தாவின் புதிய சாதனை
நடிகை… சமந்தாவின் புதிய சாதனை
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவிற்கு புதிய அங்கீகாரம் பெற்று சாதனை படைத்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே முதல் நடிகை… சமந்தாவின் புதிய சாதனை
சமந்தா
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில், அமேசான் பிரைமில் வெளியாகி ஹிட்டடித்திருந்த ஃபேமிலி மேன் சீரியஸின் இரண்டாவது பாகத்தில் சமந்தா நடித்திருக்கிறார்.
சமந்தா
மனோஜ் பாஜ்பாய் – பிரியாமணி ஆகியோர் நடித்திருந்த ஃபேமிலி மேன் சீரியஸ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
அந்த சீரியஸின் தொடர்ச்சியாக ஃபேமிலி மேன் – 2 வரும் பிப்ரவரி 12-ம் தேதி முதல் ஸ்ட்ரீமாக இருக்கிறது. இதற்கான அறிவிப்பை
அமேசான் பிரைம் ட்விட்டரில் வெளியிட்டது. அப்போது சமந்தாவுக்கென தனி எமோஜியையும் டிவிட்டர்
அறிமுகப்படுத்தியது. இது இந்திய நடிகைகளில் சமந்தாவிற்கு தான் முதல் முறையாக அமைந்துள்ளது.
பைடன் கனடாவுடன் தனது முதலாவது வெளிநாட்டு பேச்சை ஆரம்பித்தார்
பைடன் கனடாவுடன் தனது முதலாவது வெளிநாட்டு பேச்சை ஆரம்பித்தார்
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள பைடன் தனது
ஆட்சியின் முதலாவதுபேச்சுவார்த்தையை கனடா அதிபருடன் நடத்தியுள்ளார்
இரு நாடுகளுக்கு இடையிலான அரசியல் ,பொருளாதாரம்
,வர்த்தகம்,பாதுகாப்பபு தொடர்பில் இது பேச பட்டுள்ளதாக
தெரிவிக்க படுகிறது
கொரனோவின் தாயகமான குவான் மாகாணம் மீள அடித்து பூட்டு
கொரனோவின் தாயகமான குவான் மாகாணம் மீள அடித்து பூட்டு
கொரானோவின் தாயகம் என கூறப்பட்ட சீனாவின் ஊகான் மாநகரம்
தற்போது மீள அடித்து பூட்ட பட்டுள்ளது
இங்கு
119 பேர் புதிதாக இதே நோயினால் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது
சீனா கூறுவதை விட நோயின் பாதிப்பு அதிகரித்துள்ளதால் இந்த
நிலை ஏற்பட்டு இருக்கலாம் என கருத படுகிறது
தமிழர்களின் பூர்வீக அடையாளங்களை அழிக்கும் இராணுவம்
சிவில் உடையில் வந்த இராணுவத்தினரே, நிலாவரையில் கிடங்கு வெட்டினார்கள் என, தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமிழர்களுடைய பாரம்பரிய நிலங்கள் பறிக்கப்படுவது மாத்திரம் அல்ல மத அடையாள
சின்னங்கள் சிதைக்கப்பட்டு பௌத்த மத சின்னங்கள் புகுத்தப்படுகின்ற ஒரு நிலைமையை தாங்கள் பார்க்கின்றோமென்றார்.
இதற்கு நிச்சயமாக, தமிழர் தரப்பில் இருந்து மிகப்பெரிய அளவிலான ஒரு எதிர்ப்பு இயக்கம் இல்லாமல் இருப்பது பெரிய குறைபாடு எனவும், அவர் தெரிவித்தார்.
‘நாங்கள் மீண்டும் மீண்டும் தென்னிலங்கை மக்களுக்கு சொல்ல விரும்புகின்றோம் நாங்கள் புத்த பெருமானுக்கு எதிரானவர்கள் இல்லை. மிகப்பெரிய அரசனாக இருந்து அனைத்தையும் துறந்து
வந்த புத்த பெருமானின் போதனைகளை நீங்கள் பின்பற்றாமல் அதே புத்தபெருமானை எங்களை ஆக்கிரமிக்கின்ற நடவடிக்கைக்கு பயன்படுத்துவதால் தான் நாங்கள் புத்தபெருமானை
எதிர்க்கின்றோம்’ எனவும், அவர் கூறினார்.
‘பல இடங்களை தொடர்ந்து ஆக்கிரமிப்பவர்கள் யாழ்ப்பாணம் நிலாவரையில் நேற்றையதினம் வந்து தோண்ட ஆரம்பித்து
இருக்கின்றார்கள். இதில் தெளிவாக தெரிகின்றது தோண்ட ஆரம்பித்த பொழுது நான்கு பேர் சீருடை அணியாத சிவிலுடையில் வந்த இராணுவத்தினர்தான் வெட்டி இருக்கின்றார்கள். அவர்களுக்கு
அங்கு என்ன வேலை? தொல்பொருள் திணைக்கள ஊழியர்கள் வந்தார்கள் என்றாலும் பரவாயில்லை அதன் பின்னர்தான்
தொல்பொருள் திணைக்கள ஊழியர்கள் பொறுப்பெடுத்து இருக்கின்றார்கள்.
‘அங்கே யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களுக்குப் பொறுப்பான உதவி அத்தியட்சகர் நின்றார். அவருக்கு சிங்கள
மொழியிலே மிக காத்திரமாக பதிலை நான் வழங்கியிருந்தேன் புல்லு வெட்ட வேண்டும் என்றால் எதற்கு கிடங்கு என்றேன்.
அத்துடன், கட்டிடங்களை கட்டுவதற்கு மதிப்பீடுள் செய்யப்பட இருக்கின்றோம் என்றார்கள். கிடங்கு ரீ வடிவில் ஆழமாக
வெட்டப்பட்டிருந்தது. உள்ளிருந்து எடுக்கப்பட்ட மண் சுவர் அருகில் போடப்பட்டிருந்தது. அதற்குள் எதையாவது கொண்டுவந்து
புதைத்தார்களோ தெரியவில்லை. இன்றும் சில காலத்தில் புத்தரோ அல்லது வேற ஏதோ வெளிவரலாம் இதே போன்று
தொன்னிலங்கையில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளது’ எனவும், சிவாஜிலிங்கம் கூறினார்.
அனைத்து விமான நிறுவனங்களும் மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்க இணக்கம்
அனைத்து விமான நிறுவனங்களும் மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்க இணக்கம்
கொவிட் தொற்றுக்கு முன்னர் பயணிகள் விமான சேவையை மேற்கொண்ட அனைத்து சர்வதேச விமான நிறுவனங்களும்
மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் நாடு திறக்கப்படுவதை உத்தியோகபூர்வமாக
அறிவிக்கும் வைபவத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், அடுத்த 6 மாதங்களில்
சுற்றுலா பயணிகளின் வருகை இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
விமான நிலையங்கள் மீண்டும் திறப்பு
விமான நிலையங்கள் மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளன.
இன்று 17 விமானங்கள் இலங்கைக்கு வரவுள்ளது. முதலாவது விமானம் 55 பயணிகளுடன் ஓமானிலிருந்து கட்டுநாயக்க விமான
நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்ரசிறி தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க, மத்தள சர்வதேச விமான நிலையங்கள் இன்று தொடக்கம் முழுமையாக திறக்கப்படுவதாக ஜி.ஏ சந்ரசிறி குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக கட்டுநாயக்க விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் குறித்த வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
நாட்டுக்கு வருகை தந்த பின்னர் ஹோட்டல் அறை முன்பதிவு, பி.சீ.ஆர் பரிசோதனைகள் மற்றும் பார்வையிட வேண்டிய இடங்கள்
உட்பட பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்பன இந்த சுகாதார வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமான நிலையம் திறந்த பின்பு இலங்கையர்கள் இரண்டை பிரஜா உரிமையுள்ளவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித தடைகளும் இன்றி நாட்டிற்கு வருகை தர முடியும்.
நாட்டுக்கு வருகை தருகின்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கை சுற்றுலா அதிகார சபையின் www.srilanka.travel என்ற
இணையத்தளத்தின் ஊடாக அதிகார சபையின் அனுமதியுடன் பதிவு செய்யப்பட்ட 53 ஹோட்டல்களில் ஒன்றை தெரிவு செய்ய வேண்டும்.
அத்துடன் நாட்டுக்கு வருகைத்தரும் சுற்றுலா பயணிகள் 40 அமெரிக்க டொலர்களை செலுத்தி இலங்கையில் பி.சீ.ஆர் பரிசோதனை செய்வதற்கான பற்றுச்சீட்டை பெற்றிருக்க வேண்டும்.
சுற்றுலா பயணி இலங்கையில் 1 முதல் 6 நாட்கள் தங்குவாராயின், ஒரு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஒருவர் 7 நாட்களுக்கு மேல் தங்குவாராயின், அவர் இன்னுமொரு பி.சீ.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
இதற்கு மேலதிகமாக இலங்கைக்கு வர எதிர்ப்பார்த்திருக்கும் சுற்றுலா பயணிகள் 12 அமெரிக்க டொலர்களை செலுத்தி கொவிட் காப்புறுதி திட்டம் ஒன்றையும் பெற்றிருக்க வேண்டும்.
அதேபோல் நாட்டிற்கு வருகைத்தருகின்ற வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் அல்லது இரண்டை பிரஜா உரிமை உள்ளவர்கள் இந்த காப்புறுதி திட்டத்தை பெறவேண்டிய அவசியம் இல்லை என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வர இருக்கின்ற சுற்றுலா பயணிகள் விமான டிக்கெட், இலங்கையில் தங்கியிருப்பதற்கான ஹோட்டல் பற்றிய விபரம் மற்றும் ஒதுக்கப்படும் இலக்கம், இலங்கையில் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட செலுத்தப்பட்ட பணம் தொடர்பான பற்றுச்சீட்டு, கொவிட் காப்புறுதி பத்திரம் இத்துடன், இலங்கைக்கு வர 72 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனை அறிக்கை என்பவற்றை முன்வைக்க வேண்டும்.
மேலும் இலங்கை வரும் அனைத்து விமான பயணிகளும் முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.
அத்தோடு இந்த பயணிகளுக்கு வழங்கப்பட்ட சுகாதார அறிக்கைகளை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார அறிக்கை கருமபீடத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறான சுகாதார அறிக்கை சமர்ப்பிக்க 10 கருமபீடங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பாடு செய்திருப்பதுடன், மத்தள விமான நிலையத்திலும் 2 கருமபீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த விமான பயணிகளின் உடல் வெப்பநிலை 37.5 க்கு மேல் இருக்குமாயின் அவர்கள் விமான நிலைய சுகாதார வைத்திய அதிகாரியிடம் அனுப்பப்படுவர்.
அத்துடன் இலங்கைக்கு வருகின்ற சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்தில் பி.சீ.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளாது அவர்கள் தங்கும் ஹோட்டல்களில் மேற்கொள்ள சுற்றுலாத்துறை அமைச்சு தீர்மானித்திருப்பதாக அதன் செயலாளர் ளு.ஹேட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான திட்டமும் தொடர்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இத்துடன் விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் முதல் விமானம் நாளை அதிகாலை 2.15 மணிக்கு கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரவுள்ளது.
விமான நிலையங்கள் மீண்டும் திறப்பு
விமான நிலையங்கள் மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளன.
இன்று 17 விமானங்கள் இலங்கைக்கு வரவுள்ளது. முதலாவது விமானம் 55 பயணிகளுடன் ஓமானிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்ரசிறி தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க, மத்தள சர்வதேச விமான நிலையங்கள் இன்று தொடக்கம் முழுமையாக திறக்கப்படுவதாக ஜி.ஏ சந்ரசிறி குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக கட்டுநாயக்க விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் குறித்த வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
நாட்டுக்கு வருகை தந்த பின்னர் ஹோட்டல் அறை முன்பதிவு, பி.சீ.ஆர் பரிசோதனைகள் மற்றும் பார்வையிட வேண்டிய இடங்கள் உட்பட பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்பன இந்த சுகாதார வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமான நிலையம் திறந்த பின்பு இலங்கையர்கள் இரண்டை பிரஜா உரிமையுள்ளவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித தடைகளும் இன்றி நாட்டிற்கு வருகை தர முடியும்.
நாட்டுக்கு வருகை தருகின்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கை சுற்றுலா அதிகார சபையின் www.srilanka.travel என்ற இணையத்தளத்தின் ஊடாக அதிகார சபையின் அனுமதியுடன் பதிவு செய்யப்பட்ட 53 ஹோட்டல்களில் ஒன்றை தெரிவு செய்ய வேண்டும்.
அத்துடன் நாட்டுக்கு வருகைத்தரும் சுற்றுலா பயணிகள் 40 அமெரிக்க டொலர்களை செலுத்தி இலங்கையில் பி.சீ.ஆர் பரிசோதனை செய்வதற்கான பற்றுச்சீட்டை பெற்றிருக்க வேண்டும்.
சுற்றுலா பயணி இலங்கையில் 1 முதல் 6 நாட்கள் தங்குவாராயின், ஒரு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஒருவர் 7 நாட்களுக்கு மேல் தங்குவாராயின், அவர் இன்னுமொரு பி.சீ.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
இதற்கு மேலதிகமாக இலங்கைக்கு வர எதிர்ப்பார்த்திருக்கும் சுற்றுலா பயணிகள் 12 அமெரிக்க டொலர்களை செலுத்தி கொவிட் காப்புறுதி திட்டம் ஒன்றையும் பெற்றிருக்க வேண்டும்.
அதேபோல் நாட்டிற்கு வருகைத்தருகின்ற வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் அல்லது இரண்டை பிரஜா உரிமை உள்ளவர்கள் இந்த காப்புறுதி திட்டத்தை பெறவேண்டிய அவசியம் இல்லை என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வர இருக்கின்ற சுற்றுலா பயணிகள் விமான டிக்கெட், இலங்கையில் தங்கியிருப்பதற்கான ஹோட்டல் பற்றிய விபரம் மற்றும் ஒதுக்கப்படும் இலக்கம், இலங்கையில் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட செலுத்தப்பட்ட பணம் தொடர்பான பற்றுச்சீட்டு, கொவிட் காப்புறுதி பத்திரம் இத்துடன், இலங்கைக்கு வர 72 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனை அறிக்கை என்பவற்றை முன்வைக்க வேண்டும்.
மேலும் இலங்கை வரும் அனைத்து விமான பயணிகளும் முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.
அத்தோடு இந்த பயணிகளுக்கு வழங்கப்பட்ட சுகாதார அறிக்கைகளை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார அறிக்கை கருமபீடத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறான சுகாதார அறிக்கை சமர்ப்பிக்க 10 கருமபீடங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பாடு செய்திருப்பதுடன், மத்தள விமான நிலையத்திலும் 2 கருமபீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த விமான பயணிகளின் உடல் வெப்பநிலை 37.5 க்கு மேல் இருக்குமாயின் அவர்கள் விமான நிலைய சுகாதார வைத்திய அதிகாரியிடம் அனுப்பப்படுவர்.
அத்துடன் இலங்கைக்கு வருகின்ற சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்தில் பி.சீ.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளாது அவர்கள் தங்கும் ஹோட்டல்களில் மேற்கொள்ள சுற்றுலாத்துறை அமைச்சு தீர்மானித்திருப்பதாக அதன் செயலாளர் ளு.ஹேட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான திட்டமும் தொடர்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இத்துடன் விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் முதல் விமானம் நாளை அதிகாலை 2.15 மணிக்கு கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரவுள்ளது.
கொரனோ பரவல் -இரண்டு பாடசாலைகளுக்கு பூட்டு
கொரனோ பரவல் -இரண்டு பாடசாலைகளுக்கு பூட்டு
அநுராதபுரம் கல்விவலயத்துக்கு உட்பட்ட நிராவிய பகுதியில் உள்ள இரண்டு
பாடசாலைகள் காலவரையறையின்றி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிராவிய கிராமத்தில் 09 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக
இனங்காணப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் இளம் தொழில் முயற்சியாளர்கள் 79,590 பேர் அரச காணிக்கு விண்ணப்பிப்பு
மட்டக்களப்பில் இளம் தொழில் முயற்சியாளர்கள் 79,590 பேர் அரச காணிக்கு விண்ணப்பிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷஷவின் சுபிட்சத்தினை நோக்கிய நாடு என்ற கருப்பொருளில் இளைஞர்களை தொழில் முயற்சியாளர்களாக உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை
மேம்படுத்தும் முகமாக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு அரச காணிகளை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்துகின்ற வகையிலே காணிகளை பகிர்ந்து அளிப்பதற்கு விண்ணப்பங்கள்
கோரப்பட்டு அவர்களின் தொழில் முயற்சிக்கான திட்ட முன்மொழிவுகளும் கோரப்பட்டு இருந்தது.
இதன் இடிப்படையில் காணி பாவணை திட்டமிடல் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் கிஷhந்தி கலந்து கொண்டு காணி பெறுவோருக்கான நேர்முக தேர்வுக்கான திகதியினை
விரைவாக பிரதேச செயலாளர்கள் முன்வைக்கின்ற பட்சத்தில் காணி கோரி விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முக பரீட்சைகள் விரைவாக எதிர்காலத்தில் நடாத்தப்படும் என குறிப்பிட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் 79,590 நபர்களின் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. அதில்
70,769 விண்ணப்பதாரிகள் மாத்திரமே காணி பெறுவதற்கு தகுதி உடையவர்களாக உள்ளனர்.
அந்த வகையிலே கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் 8438 பேரும், மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் 12860 பேரும், ஏறாவூர் நகர் பிரதேச செயலகப்பிரிவில் 4652 பேரும், மண்முனை பற்று பிரதேச செயலகப்பிரிவில் 2714 பேரும், கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் 4239 பேரும், கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப்பிரிவில் 4007 பேரும், கோரளைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் 3044 பேரும், கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவில் 3516 பேரும், மண்முனை மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் 2168 பேரும், காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் 2349 பேரும், போரதீவுபற்று பிரதேச செயலகப்பிரிவில் 4631பேரும், மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலகப்பிரிவில் 6585 பேரும,; மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் 3090 பேர்களுடைய விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
காணி பயன்பாட்டு திட்டமிடல் கூட்டம் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் காணி திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் பிரதேச செயலாளர்கள் காணி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
வெறுப்பு வராத அளவுக்கு நடிகைகள் ஆடைகளை அணிய வேண்டும் – சிங்கமுத்து
வெறுப்பு வராத அளவுக்கு நடிகைகள் ஆடைகளை அணிய வேண்டும் – சிங்கமுத்து
வெறுப்பு வராத அளவுக்கு நடிகைகள் ஆடைகளை அணிய வேண்டும் என்று நடிகர் சிங்கமுத்து சமீபத்தில் நடந்த விழாவில் வேண்டுகோள் விடுத்தார்.
வெறுப்பு வராத அளவுக்கு நடிகைகள் ஆடைகளை அணிய வேண்டும் – சிங்கமுத்து
சிங்கமுத்து
நடிகர் சிங்கமுத்து சமீபத்தில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, நகைச்சுவை என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். கடவுள்
நமக்கு கொடுத்து இருக்கிற சிறப்பு போனஸ் தான் சிரிப்பு. அது போல யாருமே வாய்விட்டு சிரிக்க மாட்டேங்கிறாங்க. அவர்களை எல்லாம் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான்,
நாங்கள் எல்லோரும் சினிமாவில் இரவு பகலாக யோசித்து எப்படி எழுதலாம் எப்படி சிரிக்க வைக்கலாம் எந்த காட்சியை காட்டினால் சிரிக்கிறார்கள் என்று யோசித்துக்கொண்டே இருக்கிறோம்.
கலைத்துறை என்பது பொழுதுபோக்கு மட்டுமின்றி மக்களை சிந்திக்க வைப்பதற்கான ஒரு ஆயுதமாகும். சினிமாவில் நடிக்கிற
நடிகைகள் பொதுமக்கள் வெறுப்பு வராத அளவுக்கு ஆடைகளை அணிந்து நடிக்க வேண்டும். அப்போது தான் நமது தமிழ் கலாசாரத்துக்கு ஏற்றதாகும்.
கொரோனாவுக்கு பயந்து மக்கள் சினிமா தியேட்டருக்கு செல்லாமல் இருந்துவிடாதீர்கள். முக கவசம் அணிந்து, சமூக
இடைவெளியை பின்பற்றி தியேட்டருக்கு சென்று சினிமா தொழிலை காப்பாற்றுங்கள்.
இவ்வாறு நடிகர் சிங்கமுத்து கூறினார்.
பொலிஸாரால் ஒருவர் சுட்டுக்கொலை
பொலிஸாரால் ஒருவர் சுட்டுக்கொலை
அவுஸ்ரேலியா தலைநகர் அருகில் உள்ள விக்ட்டோரியா பகுதியில்
துப்பாக்கியுடன் நுழைந்த நபர் ஒருவரை சுற்றிவளைத்த போலீசார் சுட்டு கொன்றனர்
மேற்படி நபருக்கு எவ்விதம் இந்த ஆயுதங்கள் கிடைத்தன என்பது தொடர்பிலும் ,
இவரது பின்புலம் என்ன என்பது தொடர்பான விசாரணைகளை போலீசார் தீவிர படுத்தியுள்ளனர்
இது ஒரு தீவிரவாத செயலுடன் தொடர்புடையதா என்பது தொடர்பில் தெரியவரவில்லை
உடைந்து வீழ்ந்த கட்டிடம் – உடல் நசுங்கி நால்வர் மரணம்
உடைந்து வீழ்ந்த கட்டிடம் – உடல் நசுங்கி நால்வர் மரணம்
ஸ்பெயின் தலைநகர் Madrid பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று
திடீரென இடிந்து வீழ்ந்ததில் அவ்வேளை அதற்குள் இருந்த நால்வர்
உடல் நசுங்கி பலியாகினர்
இந்த வெடிப்பு சமபவம் எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள்
இடம்பெற்ற வண்ணம் உள்ளது
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது
ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தில் பண்பாட்டு இனவழிப்பு
ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தில் பண்பாட்டு இனவழிப்பு
ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு எதிராக சர்வதேச பாதுகாப்பு
பொறிமுறையொன்றின் அவசியத்தினை ஆதி ஐயனார் ஆலய சூலம் அழிக்கப்பட்ட சம்பவம் மீளவும் வெளிப்படுத்தியுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ் மக்களால் தொன்றுதொட்டு வழிபட்டு வரப்பட்ட முல்லைத்தீவு குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்தெறியப்பட்டு, அங்கு பௌத்த விகாரையின்
சிதைவுகள் இருந்ததாக குறிப்பிட்டு ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துணையுடன் சிறிலங்காவின் தொல்லியல் துறை அப்பகுதியினை
அபகரித்துள்ளமையானது தமிழர் தேசத்தின் மீதான பண்பாட்டு இனவழிப்பாக (Cultural genocide) காணப்படுகின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் தெரிவிக்கையில், சிறிலங்கா அரசு தனது அரசாங்க திணைக்களங்கள் ஊடாக பல்வேறு பெயர்களிலும், தமிழ் மக்களின்
நிலங்களை அபகரித்துக் கொள்வதும், சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதும் மட்டுமல்லாது, தமிழ்மக்களின் பண்பாட்டு
அடையாளங்கள் மீதான பண்பாட்டு இனவழிப்பினையும் (Cultural genocide)தொடர்ந்து தனது கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பின் ஒரு பகுதியாக செய்து வருகின்றது.
தனது ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துணையுடன் தமிழர் தேசத்தின் மீதான சிங்களமயமாக்கல், பௌத்த மயமாக்கலை சிங்கள்
பேரினவாத அரசு தீவிரப்படுத்தியுள்ள இவ்வேளையில் தமிழர் தேசத்தில் சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையொன்றின் அவசியத்தினை மீள நாம் வலியுறுத்துகின்றோம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.






