Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
உதயசூரின் சின்னத்தில் புதிய கூட்டணி
உதயசூரின் சின்னத்தில் புதிய கூட்டணி
கிழக்கில் 4 கட்சிகள் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி கட்சி உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் சின்னம்
உதயசூரின் சின்னம் தெரிவு செய்யப்பட்டு தேர்தலில் களமிறங்கவுள்ளதாக கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ரி. சிவநாதன் தொரிவித்தார்
மட்டக்களப்பு ஏரன்ஸ் வீதியில் அமைந்துள்ள கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைமைகாரியலயத்தில் நேற்று (22)
இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வி. ஆனந்த சங்கரி, இலங்கை தமிழர் முற்போக்கு முன்னணி கட்சி
தலைவர்முன்னாள் பிரதி அமைச்கருமான நா.கணேசமூர்த்தி ஆகியேர் கலந்து கொண்டுனர். இதன்
போது கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ரி. சிவநாதன் இவ்வாறு தெரிவித்தனர்.
கிழக்கு தமிழர் ஒன்றியம் நீண்ட காலமாக கிழக்கில் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றினைத்து பொதுச்
சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற முயற்சியை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஆரம்பித்து இன்று சிவராத்திரி தினத்தில் வெற்றி கண்டுள்ளது.
கிழக்கு தமிழர் ஒன்றிய தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற செயற்குழு கூட்டத்திலே எதிர்வருகின்ற
பாராளமன்றம் மாகாணசபை தேர்தலில் போட்டியிட வைப்பதற்கான கலந்துரையாடல் சுமூகமான முறையில்
இடம்பெற்றது தமிழர் ஐக்கிய முன்னணி பெயர் கொண்ட கூட்டணி அமைக்கப்பட்டு இதன் சின்னம் உதய சூரியன் ஆகும்.
தற்போது 4 கட்சிகளான பி. ஆனந்த சங்கரியை தலைசராக கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, சிரேஷ்ட
சட்டத்தரணியான ரி. சிவநாதன் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனை தலைவராக கொண்ட முற்போக்கு
தமிழர் அமைப்பு, முன்னாள் பிரதி அமைச்சாரன நா. கணேசமூர்தியை தலைவரான கொண்ட இலங்கை தமிழர்
முற்போக்கு முன்னணி ஆகிய 4 கட்சிகள் இன்று இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி என கட்சி உருவாக்கப்பட்டு தமிழ்
மக்களின் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணயின் சின்னமான உதய சூரியன் சின்னத்தை இந்த தமிழர் ஜக்கிய
முன்னணியின் ஏகோபித்த சின்னமாக தெரிவு செய்து உடன்பாட்டில் கைச்சாத்துட்டுள்னர்.
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கிழக்கு தமிழர் ஓன்றியம் பேச்சு வார்த்தையில் பல தடவை ஈடுபட்டோம் அவர்கள்
எங்கள் கொள்கையை ஏற்றுக் கொண்டிருந்தனர். கள நிலை யதார்த்த நிலையை உணர்ந்து எமது முயற்சி நன்று
என்றனர். ஆனால் தாங்கள் வீட்டு சின்னத்தை விட்டு எமது சின்னத்தில் வருவது பிரச்சனையுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
கிழக்கு மாகாணத்தின் கள நிலையை கருத்தில் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பை விடுத்து ஏனைய தமிழ் கட்சிகள் ஒன்றினைந்து ஒரு குடையின் கீழ் சேர்ந்து
போட்டியிடுவது மிகவும் சாதூரியமானது சானக்கியமான விடயமாக அமையும் இதன் மூலம் தமிழர்களின் வாக்கு
சிதறடிக்காமல் கனிசமான ஆசனங்களை பெற்றுக் கொள்ளலாம்.
கடந்த காலத்தில் தேசிய தலைவர் தமிழ் மக்களின் வாக்கு சிதறக் கூடாது என அவர் துரோகி என்றும் தியாகி என்றும்
பார்க்காமல் அவருக்கு துரோகிகளாக இருந்த இயக்கங்களையும் சேர்த்து இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியிருந்தார்.
அதேபோல கிழக்கு மாகாணத்தில் வாக்குகள் சிதறக் கூடாது என கருத்தில் எடுத்து அம்பாறை மட்டக்களப்பு
திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் கட்சிகள் ஒன்றினைகின்றோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அதே நோக்கம் தான் இந்த தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியும் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது அதன் மூலம் இனப் பிரச்சனைக்கான
சாத்தியமான தீர்வை அடைவது அதன் மூலம் தமிழ் மக்களின் அபிவிருத்தி பாதையை முன்னெடுப்பது எனவே
வெறுமனமே போலி தேசியம் பேசி தமிழ் மக்களை பட்டினிச் சாவில் போட விரும்பவில்லை தமிழ் தேசிய
கூட்டமைப்புக்கு எதிரானனவர்ள் அல்ல அவர்கள் இதுவரை காலம் பயணித்த விதம் தமிழ் மக்களை பாதுகாக்க கூடியதானது அல்ல.
அவர்கள் தனிநலனை பேணக் கூடியதை தான் இதுவரை காலமும் இருந்தது. ஆகவே தமிழ் மக்கள் அவர்கள் மீது
நம்பிக்கையில்லை எனவே தமிழ் மக்களை பாதுகாக்க கூடிய மாற்று அணி தேவை அது புத்துஜீவிகள் கொண்ட
நல்ல அமைப்பை உருவாவேண்டும் என மக்களின் அவாவாக இருந்தது அதனால் இந்த அணியை உருவாகியுள்ளோம்.
எனவே ஏனைய தமிழ் கட்சிகள் வந்து இணையுமாறு அழைப்பு விடுகின்றோம் அதேவேளை கருணா அம்மானை
கொண்டு தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியும் எம்முடன் நேர்ந்து செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளனர்
. அவர்கள் எதிர்வரும் நாட்களில் உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளனர் என அவர் தெரிவித்தார்
வவுனியாவில் தேங்காய் ஏற்றி சென்ற பட்டா ரக வாகனம் பாலத்திற்குள் பாய்ந்து விபத்து PHOTO
வவுனியாவில் தேங்காய் ஏற்றி சென்ற பட்டா ரக வாகனம் பாலத்திற்குள் பாய்ந்து விபத்து PHOTO
வவுனியா நொச்சிமோட்டை பாலத்தடியில் இன்று (21.02.2020) அதிகாலை 4.00 மணியளவில் இலகுரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.
இவ் விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
யாழிலிருந்து ஏ9 வீதியூடாக வவுனியா நோக்கி தேங்காய்களை ஏற்றிக்கொண்டு பயணித்துக் கொண்டிருந்த இலகுரக வாகனம் நொச்சிமோட்டை
பாலத்திற்கு அருகில் சென்றபோது வேக்கட்டுப்பாட்டை இழந்து பாலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் வாகனம் சிறு சேதங்களுக்குள்ளாகியுள்ளதுடன் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





பேஸ்புக்கில் பெண்களின் படங்களை நிர்வாணப் படமாக்கி வெளியிட்ட கும்பல்
பேஸ்புக்கில் பெண்களின் படங்களை நிர்வாணப் படமாக்கி வெளியிட்ட கும்பல்
இலங்கையில் பேஸ்புக்கில் உள்ள பெண்களின் படங்களை நிர்வாண படங்களாக்கி வெளியிட்ட கும்பல் ஒன்றை காவல் துறையினர் மடக்கி பிடித்துள்ளனர் .
இவ்வாறு கைதுசெய்ய பட்டுள்ள ஏழு பேரிடம் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இவர்கள் அனைவரும் மாணவர்கள் என்பதுடன் அனைவரும் இருபது வயதுக்கு உள்ளிட்டவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது
ஆடைகள் அணிந்த வண்ணம் தமது பக்கங்களில் வெளியிட்ட பெண்களின் புகைப்படத்தை எடுத்து இவ்வாறு நிர்வாணப் படமாக்கி வெளியிட்டுள்ளனர்
இதற்கு என விசேட தொழில்நுட்பத்தை இவர்கள் பயன் படுத்தியுள்ளது கண்டறிய பட்டுள்ளது

தாய் கள்ள காதல் ,பொலிஸ் சிப்பாயை கொன்று வீசிய மகன்
தாய் கள்ள காதல் ,பொலிஸ் சிப்பாயை கொன்று வீசிய மகன்
காணாமல்போன பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை செய்யப்பட்டதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, 3
பொலிஸ் குழுக்கள் கடந்த 18 ஆம் திகதி முதல் குளியாபிட்டிய, கங்கனிமுல்ல காட்டில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது காட்டில் பல இடங்களில் இரத்தம் காணப்பட்டதாகவும் ஆனால் சடலம்
எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் வீரகெட்டிய பகுதியை வசிப்பிடமாக கொண்ட 37 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த 16 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடவத்த பகுதியில் உள்ள பெண் ஒருவருடன் கள்ள உறவில்
இருந்ததாகவும், அந்த பெண்ணின் மகன் இந்த கொலையை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேரெதிர் மோதிய இரு பேரூந்துகள் – 40 பேர் காயம்
நேரெதிர் மோதிய இரு பேரூந்துகள் – 40 பேர் காயம்
தம்புள்ள பகுதியில் நேரெதிர் இரு பேரூந்துகள் மோதியதில் அதில் பயணித்த நாற்பது
பொதுமக்கள் படுகாயமடைந்தனர் .
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
குறித்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
சாரதிகள் அலட்சிய போக்கே இவ்வாறான விபத்துக்களுக்கு காரணம் என கண்டறிய பட்டுள்ளது

காவல்துறையை ஊழியரை கொன்று வீசிய பேரூந்து
காவல்துறையை ஊழியரை கொன்று வீசிய பேரூந்து
மஸ்கெலியாவில் இருந்து நல்லதன்னி நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர்
ஒருவர் மவுசாகலை சோதனை சாவடியில் வைத்து பேருந்தின் பின் டயர் பகுதியில் சிக்குண்டு உயிரிழந்து உள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (20) இரவு 7 மணி அளவில் இடம்பெற்றதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ் திணைக்களத்தின் வாழ்க்கை பாதுகாப்பு பிரிவில் பணியாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
40 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான கெப்படிபொல பகுதியை சேர்ந்த அஜித்வீரசூரிய என்ற
பொலிஸ் உத்தியோக்தரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
வீதியில் இறந்த நிலையில் மீட்க பட்ட முஸ்லீம் நபர்
வீதியில் இறந்த நிலையில் மீட்க பட்ட முஸ்லீம் நபர்
இலங்கை திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் இறந்த நிலையில் முஸ்லீம் நபர் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவரது இறப்பு கொலையா,தற்கொலையா என்பது தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் .
48 வயதுடைய நபரே இவ்வாறு இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து – லைகா நிறுவனம் மீது வழக்கு
இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து – லைகா நிறுவனம் மீது வழக்கு
இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக லைகா நிறுவனம் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து – லைகா நிறுவனம் மீது வழக்குப்பதிவு
விபத்து நிகழ்ந்த பகுதி
சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் படம் ‘இந்தியன்-2’. இதன் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி. பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து
வருகிறது. நேற்று இரவு மிக உயரமான ராட்சத கிரேனில் மின்விளக்குகளை பொருத்தி காட்சிகள் படமாக்கப்பட்டது.
அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, கலை உதவி
இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9
பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நடிகர் கமல் தரப்பில் தலா ரூ.1 கோடி நிதியுதவியும், லைகா
நிறுவனம் சார்பில் ரூ.50 லட்சம் நிதியுதவியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நிகழ்ந்த பகுதி
இந்நிலையில், இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ்
நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் கிரேன் உரிமையாளர், புரொடக்ஷன் மேனேஜர்
மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இணை இயக்குனர் குமார் என்பவர் கொடுத்த புகாரின்
அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா ரூ.12 கோடி நிதி
யாழ்ப்பாணம் விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா ரூ.12 கோடி நிதி
யாழ்ப்பாணம் விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா ரூ.11 கோடியே 83 லட்சம் நிதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
யாழ்ப்பாணம் விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா ரூ.12 கோடி நிதி
யாழ்ப்பாணம் விமான நிலையம்
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் பெருவாரியாக வாழ்கின்றனர். அங்குள்ள யாழ்ப்பாணம்,
அந்த நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாகும். இதுதான் விடுதலைப் புலிகளின் தலைமையகமாக திகழ்ந்தது.
இந்தியாவின் அலையன்ஸ் ஏர் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் சென்னைக்கு ஒரு விமான சேவையை
தொடங்கியபோது, யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்கும் முதல்
நிறுவனமாக மாறியது. இந்த மாதம்தான் கொழும்பு நகரில் இருந்து யாழ்ப்பாணம் பலாலிக்கு முதல் பயணிகள் விமான
சேவை தொடங்கியது. இதன் மூலம் யாழ்ப்பாணம் பலாலி, சென்னை இடையே பயணிகள் விமான போக்குவரத்து சீராக நடைபெறும்.
இந்த விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா முன்வந்துள்ளது. இதற்காக இந்தியா ரூ.11 கோடியே 83 லட்சம்
நிதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. இந்த திட்டத்துக்கு இலங்கை மந்திரிசபை நேற்று முன்தினம் ஒப்புதல்
அளித்தது. இந்த நிலையில் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை மேம்படுத்த விரைவில் இந்தியாவுடன்
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று இலங்கை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின்படி, யாழ்ப்பாணம் பலாலி
விமான நிலையத்தில் முனையம் மாற்றியமைப்பு, மின்வினியோகங்கள், பயன்பாட்டு சேவைகள்,
போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படும் என்று இலங்கை அறிவித்துள்ளது.
இதன்காரணமாக வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் சமூக பொருளாதார நலன்கள் அதிகரிக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

லண்டன் பள்ளிவாசலில் கத்தி குத்து -ஆயுத பொலிசார் குவிப்பு
லண்டன் பள்ளிவாசலில் கத்தி குத்து -ஆயுத பொலிசார் குவிப்பு
பிரட்டன் மத்திய லண்டன் பகுதியில் அமைந்துள்ள முஸ்லீம்கள் பள்ளி
வாசலுக்குள் புகுந்த நபர் ஒருவர் அங்கு நின்ற 70 வாயது நபர் மீது சரமரியாக கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டார் .
இதனால் அவர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுளளார் .
எனினும் அவர் உயிராபத்து இன்றி மருத்துவமனையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இது ஒரு பயங்கர தாக்குதல் சம்பவமாக தெரிவிக்க பட்டுள்ளது .
தற்போது ஆயுத போலீசார் குவிக்க பட்டு பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது
கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டவர் வெள்ளை இனத்தவர் என அடையாளம் காண பட்டுளளார் ,அவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுளளார்


யாழில் இருந்து தமிழகத்திற்கு 7 நாள் விமான சேவை
யாழில் இருந்து தமிழகத்திற்கு 7 நாள் விமான சேவை
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் இருந்து
தமிழகத்திற்கு வாரத்தில் ஏழு நாட்களுக்கும் விமான
சேவையை நடத்த உள்ளதாக குறித்த சேவையை
மேற்கொள்ளும் விமான சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
நாள் தோறும் மக்களின் வருகை அதிகரித்து செல்வதை
அடுத்து இந்த பயண சேவை விரிவாக்க பட்டுள்ளது .
எதிர் வரும் பங்குனி இறுதியில் இருந்து இந்த சேவை ஏழு நாளும் மேற்கொள்ள திட்டமிட்ட பட்டுள்ளது
நூறு முதல் நூற்றி ஐம்பது பயணிகள் நாள்தோறும் பயணம்
செய்யும் நிலையில் இந்த சேவை விஸ்தரிக்க பட்டுள்ளது
என தெரிவிக்க பட்டுள்ளது

வெளிநாட்டு வேலை பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்த நபர் கைது
வெளிநாட்டு வேலை பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்த நபர் கைது
இளநகையில் இருந்து சைப்ரஸ் நாட்டுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி 80 ஆயிரம் ரூபா பண
மோசடியில் ஈடுபட்ட நபரொருவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
பொலிசாருக்கு வழங்க பட்ட முறைப் பாட்டை அடுத்து இந்த கைது வேடடை இடம்பெற்றுள்ளது ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
விசாரணைகளை அடுத்து இவருடன் தொடர்பில் இருந்த மேலும் பலர் கைது செய்ய படலாம் என எதிர் பார்க்க படுகிறது
தப்பி ஓடிய 13 அதிகாரிகள் உள்ளிட்ட – 8024 இராணுவத்தினர் மீள் இணைவு
தப்பி ஓடிய 13 அதிகாரிகள் உள்ளிட்ட – 8024 இராணுவத்தினர் மீள் இணைவு
இலங்கை இராணுவத்தில் இருந்து தப்பி ஓடியா சுமார் ஐம்பதாயிரம் படையில் ,அரசு வழங்கிய பொது மன்னிப்பு
காலத்தில் மட்டும் 13 அதிகாரிகள் மற்றும் முப்படையைச் சேர்ந்த 8024 இராணுவத்தினர் மீளவும் இராணுவத்தில்
தம்மை இணைத்துள்ளதாக இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது
இது தமக்கு கிடைக்க பெற்ற மகத்தான வெற்றி என இராணுவம் அறிவித்துள்ளது ,புலிகளின் தாக்குதல்களை
எதிர்கொள்ள முடியாது இந்த இராணுவதினர் தப்பி ஓடி இருந்தனர் ,அவ்வாறனவர்கள் மீளவும் இணைந்துள்ளனர்
.இவர்களை காணவில்லை பாட்டியலில் இராணுவம் இணைத்திருந்தமை குறிப்பிட தக்கது

கத்தியால் வெட்டி நபர் படுகொலை – சடலம் மீட்பு
கத்தியால் வெட்டி நபர் படுகொலை – சடலம் மீட்பு
இலங்கை மாத்தறை பகுதியில் மர்ம நபர்களினால் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்ய பட்டுளளார்
இரத்த வெள்ளத்தில் மிதந்த சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது
இலங்கையில் தற்பொழுது கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்காகி பலர் பலியாகி வருகின்றமையும்
இதனை தடுக்க இலங்கை அரசு முடியாது திணறி வருவதும் குறிப்பிட தக்கது

ஜெனீவா மனித உரிமை தீர்மானத்தில் இருந்து விலக அமைச்சரவை அனுமதி
ஜெனீவா மனித உரிமை தீர்மானத்தில் இருந்து விலக அமைச்சரவை அனுமதி
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் 2015 ஆம் ஆண்டு கூட்டாக கொண்டு வந்த தீர்மானத்தை
மீளப்பெற்றுக் கொள்ள இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுவரும் அமைச்சரவை தீர்மானங்களை
அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ள அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

அதிகாரபூர்வ இல்லத்தை கூட பெற்றுக்கொள்ளாத அமைச்சராக நான் இருந்தேன் -மனோ கணேசன்
அதிகாரபூர்வ இல்லத்தை கூட பெற்றுக்கொள்ளாத அமைச்சராக நான் இருந்தேன் -மனோ கணேசன்
மனோ கணேசன் எம்பி
அமைச்சர்கள் வாங்கி பயன்படுத்தியதாக கூறப்படும் வாகனங்கள் பற்றி பெரிய எடுப்பில் பேசப்படுகிறது.
எனது அமைச்சு பற்றியும் பேசப்பட்டது. நான் அமைச்சராகியது, 2015ம் ஆண்டு. அப்போது அங்கு இருந்த பழைய வாகனம், அன்றைய முன்னாள் அமைச்சர்கள்
வாசுதேவ நாணயக்கார, ஜோசப் மைக்கல் ஆகியோர் பயன்படுத்திய வாகனம் ஆகும். உடனடியாக வாகனம்
வாங்க நிதி ஒதுக்கீடு இருந்தாலும், நான் வாகனம் வாங்கவில்லை.
இரண்டு வருடம் முடிய, 2017ல் ஒருமுறை பணி காரணமாக நான் யாழ்ப்பாணம் சென்றபோது, எனது வாகனம் நடு
வீதியில் நின்று விட்டது. அதன்பிறகே வாகனம் வாங்கும்படி அமைச்சு செயலாளர் என்னிடம் கேட்டுக்கொண்டார்.
பிறகே வாகனம் வாங்கும்படி நான் சொன்னேன். அதாவது நிதி ஒதுக்கீடு இருந்தும் இரண்டு வருடம் கழித்து
அமைச்சருக்கு கடைசியாக வாகனம் வாங்கிய அமைச்சு, எனது அமைச்சே என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச
கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் எம்பி நேற்று பாராளுமன்றத்தில் உரையாடும் போது கூறினார்.
மனோ எம்பி மேலும் கூறியதாவது,
அமைச்சர்களுக்கு, அவ்வந்த அமைச்சுகள் வாகனம் வாங்குவது என்பது எப்போதும் எல்லா அரசாங்கங்களிலும் நடைபெறும் ஒரு விடயம். இதை வேண்டுமென்றே நீங்கள்
பெரிது படுத்துகிறீர்கள். இவ்வாகனங்களை எவரும் வீட்டுக்கு கொண்டு போவதில்லை. அவை அந்த அமைச்சின் வாகனங்கள். எம் சொந்த வாகனங்கள் அல்ல.
அமைச்சரவை ராஜினாமா செய்த அடுத்த நாளே, நான் என் வாகனங்களை எல்லாம் மீள எனது அமைச்சு செயலாளரிடம் ஒப்படைத்து விட்டேன். இன்று யாராவது ஒரு முன்னாள்
அமைச்சரின் வாகனங்கள் அந்த அமைச்சுகளுக்கு மீள ஒப்படைக்கப்பட்டிருக்காவிட்டால் அல்லது வாகனங்கள்
காணாமல் போய் இருந்தால், அவற்றை தேடுங்கள். நடவடிக்கை எடுங்கள்.
ஆகவே இந்த வாகனங்களை பற்றி பேசும்போது அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பொறுப்புடன் பேச வேண்டும். பொதுவாக பேசாமல், யார் இன்னமும் வாகனங்களை மீள
ஒப்படைக்கவில்லை, யார் என்ன வாகனம் பாவித்தார்கள், என்று பெயர் குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.
இன்னொரு விடயம் இங்கே பேசப்படுவதில் ஒரு அடிப்படை மயக்கம் உள்ளது. அதாவது, இந்த வாகனங்கள் வாங்கும்
நிதி தொகையில் 60 விகிதம் மீண்டும் வரி காரணமாக அரசாங்க திறைசேரிக்கு போகிறது. ஒரு வாகனம் 40
மில்லியன் என்றால் சுமார் 30 மில்லியன் மீண்டும் அரசாங்க திறைசேரிக்கு போகிறது.
எனது அமைச்சில் மூன்று சொகுசு வாகனங்கள் இருந்ததாக கூறுகிறார்கள். ஒன்று அமைச்சரான எனது வாகனம்.
அடுத்த இரண்டு வாகனங்கள் எவை? இன்று இந்த ஆளும் கூட்டணியின் தவிசாளர் யார்? முன்னாள் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன. மைத்திரிபாலவுக்கு கீழ் இருந்த அமைச்சின் ராஜாங்க அமைச்சரே திரு. பெளசி. அதேபோல் பிரதி அமைச்சர் அலி சாஹிர் மௌலானா. இவர்கள்
இருவரும் கடைசி வருடத்திலேயே என் அமைச்சுடன் இணைக்கப்பட்டார்கள். இவர்கள் வாங்கி பயன்படுத்திய
வாகனங்களும் இப்போது எனது கணக்கில் சொல்லப்படுகிறது.
ஒரு அமைச்சரவை அமைச்சர் என்ற முறையில் எனக்கு அதிகாரபூர்வ இல்லம் ஒன்றை பெற்றுக்கொள்ள உரிமை உண்டு. ஆனால், அதைக்கூட நான் பெறவில்லை.
அமைச்சராக இருந்தபோதும் சரி, இப்போது சரி, எனது சொந்த வீட்டில்தான் நான் வாழ்கிறேன். நான் ஒருபோதும்
இந்த அமைச்சர்களுக்கான அதிகாரபூர்வ இல்லம் ஒன்றை கேட்டு பெறவே இல்லை. பத்தரமுல்லை மாதிவலயில்
அமைந்துள்ள எம்பீக்களின் விடுதி வீட்டை கூட நான் ஒருபோதும் பெற வில்லை.
நான் இப்படிதான் எனது அரசியல் பொதுபணிகளை செய்கிறேன். சொகுசு வாகனங்களை அரசியல் பதவி பெற்ற
பிறகுதான் கண்டவனும், நானல்ல. அதேவேளை அரசியல் பதவிகளை பயன்படுத்தி சுகம் அனுபவித்தவனும், நானல்ல
.

பிரிட்டனில் -ஆயுத முனை திருடனை- கடைக்குள் போட்டு தாக்கும் தமிழன்video
பிரிட்டன் தமிழர் கடைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த
திருடனை போட்டு தாக்கும் வீர தமிழன்
குறித்த சம்பவத்தை பார்க்கும் பொழுது உடல் பதறுகிறது
,இவ்வாறான ஆபத்தான வேலைகளில் எம்மவர்கள்
ஈடுபடுவதை தவிர்க்கவும் .
மீளவும் கத்தியுடன் அவரை குத்த வந்த வெறி பிடித்த
திருடனை பாருங்கள்
300 மில்லின் ரூபா செலவில் மலையகத்தின் 09 பெருந்தோட்ட பாடசாலைகளை இந்திய உதவி
300 மில்லின் ரூபா செலவில் மலையகத்தின் 09 பெருந்தோட்ட பாடசாலைகளை இந்திய உதவி
வே.இராதாகிருஸ்ணன் நடவடிக்கை
மலையத்தில் காணப்படும் 09 பெருந்தோட்ட பாடசாலைகளை இந்திய உதவி 300 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்வதற்கு தற்போதைய
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த வேலையில் இந்திய அரசாங்கத்துடன்
பேச்சுவார்த்தை நாடாத்தி அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்ததற்கு இனங்க அதற்கான அனுமதியை இந்திய அரசு வழங்கியுள்ளது. தொடர்ந்து இந்த
செயற்திட்டத்தை முன்னெடுத்து செல்வதற்கு நாளைய தினம் 20.02.2020 மாலை கல்வி அமைச்சின் செயலாளருக்கும் இந்திய அரசிற்கும் இடையிலான புரிந்துணர்வு கைசாத்து
உடன்படிக்கை கொழும்பு இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயத்தில் நடைபெற உள்ளது.
இதன் படி நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை
விக்னேஷ்வரா தமிழ் வித்தியாலயம் ஹட்டன் ஹெல்பொட தமிழ் வித்தியாலயம் டெம்பெஸ்டோர் தமிழ் வித்தியாலயம் நுவரெலியா வெஸ்டடோ தமிழ் வித்தியாலயம் கண்டி
மாவட்டத்தில் குண்டசாலை விவேகானந்த தமிழ் வித்தியாலயம் கண்டி விவேகானந்த தமிழ் வித்தியாலயம் பதுளை மாவட்டத்தில் நீவ்பேர்க் தமிழ் வித்தியாலயம் காலி
மாவட்டத்தில் தலங்கம சரஸ்வதி தமிழ் வித்தியாலயம் கேகாலை மாவட்டத்தில் ருவான்வெல ஸ்ரீ கலைவானி தமிழ் வித்தியாலயம் அடங்களாக 09 பாடசாலைகள் அபிவிருத்தி
செய்யபடவுள்ளன. இந்த அபிவிருத்தியில் பாடசாலையின் கட்டடம் உட்பட் உட்கட்மைப்பு வசதிகள் தளபாடங்கள் அனைத்தும் பெற்றுக் கொடுக்கப்படும். தலா ஒரு
பாடசாலைக்கு 30 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்திகள் முன்னெடுக்கபடவுள்ளன
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள்
முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்ணியின் பிரதி தலைவரும் முன்னால் அமைச்சருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன்
உன்மையிலேயே இது ஒரு சந்தோஷமான விடயமாகும். நான் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த பொழுது இதனை பெற்றுக் கொள்வதற்காக இந்திய அரசுடன் பல
சுற்று பேச்சுவார்த்தைகளை நடாத்தினேன். அதன் பயனாக இந்த பெறுபேறு கிடைத்துள்ளது. இதற்கு உதவி செய்த கல்வி அமைச்சின் முன்னால் செயலாளர் முன்னால் கல்வி
அமைச்சர் உட்பட அனைத்து பனிப்பாளர்களும் அதிகாரிகளுக்கும் உத்தியோகஸ்த்தர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அதே போல்
தொடர்ந்து இந்த வேலைத்திட்டத்தை தற்போதும் முன்னெடுத்து வரும் தற்போதைய கல்வி அமைச்சின் செயலாளர்; கல்வி அமைச்சர் உட்பட அனைத்து
பனிப்பாளர்களும் அதிகாரிகளுக்கும் உத்தியோகஸ்த்தர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். எமது நாட்டைவிட்டு
விடைபெற்று சென்ற முன்னால் இந்திய உயர் ஸ்தானிகர் சரன்ஜித் சிங் அவர்களுக்கும் தற்போதைய இந்திய உயர்
ஸ்தானிகர் அவர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்தக் கொள்கின்றேன் என்று கூறினார்.

செட்டிகுளத்தில் முஸ்லிம் இளைஞர்களை மோதித்தள்ளிய இராணுவ வாகனம் photo
செட்டிகுளத்தில் முஸ்லிம் இளைஞர்களை மோதித்தள்ளிய இராணுவ வாகனம் photo
வவுனியா சின்னசிப்பிக்குளம் பகுதியில் இராணுவ வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி
விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 9.50 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
வவுனியா செட்டிகுளம் சின்னச்சிப்பிகுளம் பகுதியில் இருந்து செட்டிகுளம் ஹயசிங்கபுர இராணுவ முகாம்
நோக்கி சென்றுகொண்டிருந்த ஹன்டர் வாகனத்தின் பின்பாக சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த சின்னசிப்பிகுளத்தை சேர்ந்த நௌபர் மிர்ஷட் (24வயது), அப்துல் ஜக்பர் ஜூவான் (22 வயது) ஆகிய இருவரும்
படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு நௌபர் மிர்ஷட் என்ற இளைஞன்
மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






வன்னியில் மக்களின் காணியை ஆக்கிரமிக்கும் வனவள திணைக்களம்; இராஜாங்க அமைச்சர் சொன்ன பதில்
வன்னியில் மக்களின் காணியை ஆக்கிரமிக்கும் வனவள திணைக்களம்; இராஜாங்க அமைச்சர் சொன்ன பதில்
வன்னியில் வனவள திணைக்களத்தினால் எல்லைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் மக்களின் காணிப்பிரச்சினைகளை தீர்பதற்கு குழு அமைக்கப்படும்
என வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்
இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்,
வாழ்வாதாரத்திற்காக பொதுமக்கள் முன்வைக்கும் விடயங்களை நாம் பார்க்கதான் வேண்டும். அதேபோல அலுவலர்களது செயற்பாடுகளையும் கவனத்தில்
கொள்ளதான் வேண்டும். பலஆயிரம் வருடங்களாக சூழலோடு நாம் வாழ்ந்திருக்கிறோம். மனிதர்கள், வனம்
,வனவிலங்குகள் இவை மூன்றும் இணைந்ததாகவே எமது வாழ்க்கை அமைந்திருந்தது. இவை தீர்கப்படவேண்டிய பிரச்சனைகள்.
இதே செயலகத்தில் முன்னர் கதைக்கபட்ட விடயங்கள் தொடர்பாக இன்றும் நாம் கதைத்துக்கொண்டிருக்கிறோம். கதைத்தால் மாத்திரம் பிரச்சனை தீராது என்பதை
உணரவேண்டும். முதற்கட்டமாக காணிப்பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வன்னிமாவட்டங்களின் அரச அதிபர்களை தலைமையாக கொண்டு, பிரதேசசெயலாளர்களையும்
உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு குறித்த பிரச்சனைகளை தீர்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதுடன், இந்த குழுவால் தீர்கப்படமுடியாத
பிரச்சனைகளை தேசிய குழு ஒன்றிற்கு பாரப்படுத்தப்பட்டு அதன் மூலம் தீர்பதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்.
இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமருடன் கலந்துரையாடவுள்ளேன். நான் இல்லாவிடிலும் இந்த
பொறுப்பிற்கு மீண்டும் வருகின்ற அமைச்சர் இவற்றை தீர்த்து வைக்கவேண்டும் என்பதே எனது வேண்டுகோள் என்றார்.







