Posted in இலங்கை செய்திகள்

ஈழத்தமிழர்களின் உற்ற தோழர் – அமெரிக்காவின் முன்னாள் தலைமைச் சட்டத்தரணி ரம்சி கிளர்க் மறைவு !

ஈழத்தமிழர்களின் உற்ற தோழர் – அமெரிக்காவின் முன்னாள் தலைமைச் சட்டத்தரணி ரம்சி கிளர்க் மறைவு !

அமெரிக்காவின் முன்னாள் தலைமைச் சட்டத்தரணியும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் மேற்சபை உறுப்பினருமாகிய ஈழத்தமிழர்களின் மதிப்புக்குரிய ராம்சி கிளர்க்கின் மறைவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளை ‘வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு’ என்று அமெரிக்க அரசு அறிவித்த போது, சட்டத்தரணி என்ற முறையில் ராம்சி கிளர்க் அவர்கள,; அதனை எதிர்த்து விடுதலைப் புலிகள் சார்பில் வழக்காடியிருந்தவர்.

அன்னாரின் இழப்பு தனது ஈழத்தமிழர் தேசத்தின் இரங்கலைத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், நீதியும், சுதந்திர அரசியல் இறைமையும் கொண்ட தமிழீழ அரசை நிறுவிக்

கொள்வதற்குமான ஈழத்தமிழர் போரட்டத்தின் அயரா ஆதரவாளரான விளங்கிய அமரர் ரம்சி கிளர்க், ஈழத்தமிழர்களின் மதிப்புக்குரிய கூட்டளியாகத் திகழ்ந்தார் என தெரிவித்துள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


கொலம்பியா மாநில அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ‘தமிழீழ விடுதலைப் புலிகள் வெளிநாட்டு அமைப்பு அல்லவென்றும், அது ஒரு மெய்ந்நிலை அரசாங்கம் என்றும், தமிழீழ

விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டமானது சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையில் பன்னாட்டுச் சட்டக் கொள்கைகளின் படி நடப்பது’ என்றும் தனது வாதுரையின் போது குரல் கொடுத்திருந்தவர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு தேசிய விடுதலை இயக்கம் ஆகும், ஈழத்தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் என்றும் ஆகும் அமரர் கிளர்க் உறுதியாக நம்பினார்.

பொதுவெளிகளிலோ அல்லது சகசட்டத் தரணிகளுடனும் கல்வியாளர்களுடனும் தனிப்பட்ட உரையாடல்களிலோ இதைச் சொல்ல அவர் ஒருபோதும் தயங்கியதில்லை.

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் சட்ட அறிவுரையினை அமரர் கிளர்க் அவர்கள் வழங்கி வந்தார்.

இறுதி போரின் போது தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாவதற்கு எதிராகக் கிளர்க் குரல் கொடுத்தார். அமெரிக்காவில் தமிழர்கள் ஒழுங்கு செய்த போராட்டங்களிலும் கலந்து கொண்டார். குறிப்பாக நியு யோர்க்கில் 5 ஈழத் தமிழர்கள் மேற்கொண்டிருந்த உணவுத்தவிர்ப்பு போராட்டத்தினை நிறைவு செய்து வைத்தவர்.

2009ம் ஆண்டு பெரும் இனஅழிப்பு போரின் மூலம் தமிழர் தேசம் ஆக்கிரமிப்பு உள்ளான பின்னர், ஈழத்தமிழ் மக்களிள் அரசியல் பெருவிருப்பின் ஜனநாய வடிவமாக இலங்கைத்தீவுக்கு வெளியே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தோற்றம் பெற துணையாக விளங்கிய வளப்பெருமக்களில் அமரர்

கிளர்க் அவர்களும் ஒருவர். 2010ம் ஆண்டு நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதல் அரசவைத் தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நியு யோர்க் தேர்தல் ஆணையராகப் பணியாற்றினார்.

தேர்தல் ஆணையர் பொறுப்பை மிகுந்த அக்கறையுடன் நிறைவேற்றினார் என்பதற்கு சான்றாக, வாக்குப்பெட்டிகள் தனது வீட்டுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என அமரர் வலியுறுத்தினார் என ரம்பி கிளார்க்கை நினைவுகூரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருத்திரகுமாரன்,

இத்தகைய நேர்மை கொண்டு தமது கடமையை அணுகியதன் வாயிலாக அவர் தமது சீரிய பண்பைக் காட்டியது மட்டுமல்ல, ஈழத்தமிழர்கள்பால் பெருமதிப்பையும், பன்னாட்டுலகின் செயலின்மைக்கு நடுவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேவை பற்றிய ஆழ்ந்த புரிதலையும் வெளிப்படுத்தினார் என குறிப்பிடுகின்றார்.


பிலடெல்பியாவில் உள்ள அமெரிக்காவின் அரசமைப்புக் கூடத்தில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவைக் அமர்வில் கலந்து கொண்டடதோடு, கடந்த பத்தாண்டு காலம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினராகவும் அங்கம் வகித்துள்ளார்.

‘ராம்சே உயர்ந்த கொள்கைப் பற்றுறுதியும் பெருந்தன்மையும் மிக்கவர். எமது இலட்சியத்தில் முழுமனதாக நம்பிக்கை கொண்டிருந்தவர். எமது முதல் கூட்டத்தில் எம்மோடிருக்க வேண்டி நியு

யோர்க்கிலிருந்து பிலடெல்பியாவுக்குத் தொடருந்தில் வந்தவர் என்பது மட்டுமல்லாது பயணக் கட்டணத்தை நாம் கொடுக்க முன்வந்த போதும் அதனை அவர் ஏற்க மறுத்து விட்டார்’ என மேலும் ரம்சி பற்றிய நினைவுகளை பிரதமர் உருத்திரகுமாரன் கூர்ந்தார்.

2013ம் ஆண்டு தமிழீழ சுதந்தர சாசனம் முரசறையப்பட்ட நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

சட்டத்தரணி ரம்சி கிளர்க் மறைவு
சட்டத்தரணி ரம்சி கிளர்க் மறைவு

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை மே 18 – தமிழீழத் தேசிய துக்க நாளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும், ‘முள்ளிவாய்க்கால் நினைவுச் சொற்பொழிவு’ நிகழ்வின் முதலுரையினை அமரர் ரம்சி கிளார்க் அவர்கள் 2015ம் ஆண்டு அவர்கள் வழங்கினார்.

என சமகாலத்தில் கருத்துவாக்கம் பெற்றுள்ள ‘சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்’ என்ற நிலைப்பாட்டுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

முன்கையெடுத்திருந்த ‘மில்லியன் கையெழுத்து போhரட்டத்தின்’ முதல் கையெழுத்தினை அமரர் அவர்களே இட்டார் என்பது வரலாற்று பதிவாகவுள்ளது. முதல் மூன்று மாதக் காலத்திற்குள் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட கையொப்பங்களை இவ்வியக்கம் திரட்டியிருந்தது.

இதேவேளை கருத்துரையினையும், அரசியல் வெளிப்பாட்டு உரிமையினையும் பறிக்கின்ற சிறிலங்காவின் அரசமைப்புக்கான ஆறாம் திருத்தத்தை எதிர்த்து ஐ.நா மனித உரிமைக்குழுவுக்கு விண்ணப்பம் செய்தவர்களில் அமரர் கிளர்க்கும் ஒருவர்.

‘கடந்த 25 ஆண்டுக் காலம் ராம்சியுடன் பழகவும் சேர்ந்து உழைக்கவுமான பெரும்பேறு பெற்றேன், எனக்கு தோழராக மட்டுமின்றி எனக்குத் தந்தைபோலவும் விளங்கினார் என குறிப்பிடும் பிரதமர்

வி.உருத்திரகுமாரன். நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான எமது விடுதலைப் போராட்டத்துக்கு அவரது நினைவு என்பது, ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் தொடர்ந்து வழிகாட்டியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

    Posted in இலங்கை செய்திகள்

    நினைவூட்டல்: நாட்டுப்பற்றாளர் நாள் 2021 – மெல்பேர்ண் அறிவித்தல்

    நினைவூட்டல்: நாட்டுப்பற்றாளர் நாள் 2021 – மெல்பேர்ண் அறிவித்தல்

    நாட்டுப்பற்றாளர் நாள் – 2021 – மெல்பேர்ண் (அறிவித்தல்)

    பாரத தேசத்திடம் இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகரில் மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் 19-03-1988 முதல் 19-04-1988 வரையான முப்பது நாட்கள் உண்ணாநோன்பிருந்து

    ஈகைச் சாவைத் தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது 33-ஆவது ஆண்டு நினைவுநாளும் தாயக விடுதலைப் போராட்டத்திற்குப் பின்புலமாக நின்றுழைத்துச் சாவைத் தழுவிக்கொண்ட நாட்டுப்-பற்றாளர்களையும் மாமனிதர்களையும் நினைவு கூருகின்ற

    நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் இவ்வாண்டும் விக்ரோறியா மாநிலத்தில் மெல்பேர்ணில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

    குடும்ப வாழ்வியலில் ஈடுபட்டிருந்தபோதும் இடர்மிகுந்த நெடிய தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் உறுதுணையாக உழைத்து உயிர்நீத்த நாட்டுப்பற்றாளர்களை நினைவுகூருவது ஒவ்வொரு ஈழத்தமிழனதும் தலையாய கடமையாகும்.

    எமது சுதந்திரமான வாழ்வுக்காக முப்பது நாட்கள் தியாக வேள்வியில் தன்னை உருக்கி தன்னுயிர் ஈந்த தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் மாமனிதர்களையும்

    நினைவுகூருகின்ற இப்புனிதமான நிகழ்வில் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள், பள்ளிமாணவர்கள், பொதுமக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

    நடைபெறும் இடம்: St John’s Parish Hall, 52 Yarra Street, Heidelberg, Vic 3084

    காலம்: 18-04-2021 ஞாயிற்றுக்கிழமை.

    நேரம்: மாலை 6.00 மணிமுதல் 8.00 மணிவரை.

    மேலதிக தொடர்புகளுக்கு: 0433 002 619 & 0406 429 107.

    தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – விக்ரோறியா, அவுஸ்திரேலியா.


    மெல்பேர்ண் தமிழ் ஊடகம்.
    அவுஸ்திரேலியா.
    தொடர்புகள்:
    மின்னஞ்சல்:melbournetamilmedia@gmail.com

      Posted in இலங்கை செய்திகள்

      சாதாரண உடையில் போலீசார் -இவர்களை கைது செய்ய வேட்டை

      சாதாரண உடையில் போலீசார் -இவர்களை கைது செய்ய வேட்டை

      இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்தும் முகமாக அரசு பல்வேறு பட்ட

      விழிப்புணர்வுகளை தெரிவித்து வருகிறது ,ஆனால் மக்களோ அதனை பின்தொடரது அலட்சியமாக சென்று வருகின்றனர்

      இவ்வாறு விதி மீறல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க தற்பொழுது மக்கள் சாதாரண உடையில் காவல்துறையினர் ஈடுபடுத்த பட்டுள்ளனர்

      முகக்கவம் அணியாது செல்பவர்களை கண்ட இடத்தில கைது செய்யவும் ,தண்டம் அறவிடவும் இந்த போலீசார் முயல்வார்கள் என நம்ப படுகிறது

        Posted in இலங்கை செய்திகள்

        மண்சரிவு அபாயம் – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

        மண்சரிவு அபாயம் – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

        இலங்கையில் ஏற்பட்டுளள சீரற்ற காலநிலை காரணமாக மலை பகுதி வழியாக செல்லும் மக்களிற்கு அவசர எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

        பதுளை பிரதான வீதி, நுவரெலியா சாலைகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது , ஆதலால்

        இவ் வழியாக பயணப்படுபவர்களை மிக விழிப்பாக செல்லும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

        பாறைகள் உருண்டு வீதிகளில் விழலாம் என எதிர் பார்க்க படுகிறது ,மக்களே யாக்கிரதை

          Posted in இலங்கை செய்திகள்

          வேலைக்கு சென்ற இலங்கை பெண்களுக்கு நடந்த கொடூரம் – சவுதியில் நடந்த பயங்கரம்

          வேலைக்கு சென்ற இலங்கை பெண்களுக்கு நடந்த கொடூரம் – சவுதியில் நடந்த பயங்கரம்

          இலங்கையில் இருந்து வேலை வாய்ப்பு தேடி ,முஸ்லீம் நாடான சவுதிக்கு வீட்டு வேலைகளில் ஈடுபட்டு

          வந்த 41 பெண்கள் பலர் பல்வேறு பட்ட துன்பியல் நிகழ்வுகளிற்கு உள்ளான நிலையில் அகதிகள் பராமரிப்பு முகாமில் தங்க வைக்க பட்டுள்ளனர்

          இவர்கள் அனைவரும் தமது தாயகத்திற்கு உயிருடன் செல்லும் நோக்குடன் அங்கு தங்கியுள்ளனர் ,பாலியல்,

          மற்றும் சொல்லென்னா துன்பியலுக்கு உள்ளான நிலையில் கண்ணீருடன் குறித்த பெண்கள் தத்தளித்த வண்ணம்உள்ளனர்

          இவ்வாறு தவிக்கும் அவர்களை அழைத்து வரும் முயற்சியில் மனித உரிமை அமைப்புக்கள் ஈடுபட்டுள்ளன

            Posted in இலங்கை செய்திகள்

            புத்தாண்டு தினத்தில் பத்து பேர் மரணம் – சோகமான குடும்பம்

            புத்தாண்டு தினத்தில் பத்து பேர் மரணம் – சோகமான குடும்பம்

            இலங்கையில் இடம்பெற்ற புத்தாண்டு தின நிகழ்வின் பொழுது பல்வேறு பட்ட விபத்துக்களில்

            சிக்கி பத்து பேர் பலியாகியுள்ளனர் ,169 பேர் படுகாயமடைந்துள்ளனர்

            பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்க பட்டிருந்த பொழுதும் இந்த விபத்துக்களை தடுக்க முடியவில்லை

            மேலும் இதே காலத்தில் போதையில் வாகனம் செலுத்தி சென்ற நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கைது

            செய்ய பட்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

              Posted in இலங்கை செய்திகள்

              இலங்கையில் இருந்து கடல்வழியாக வருபவர்களை தடுக்க 5 உளவு விமானத்தை வழங்கிய அவுஸ்ரேலியா

              20 MORE SRILANKA NEWS READ CLICK HERE

              இலங்கையில் இருந்து கடல்வழியாக வருபவர்களை தடுக்க 5 உளவு விமானத்தை வழங்கிய அவுஸ்ரேலியா

              இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்குள் நுழைபவரக்ளை தடுத்து அவர்களை கைது

              செய்திடும் நோக்குடன் ஐந்து உளவு விமானங்களை இலங்கைக்கு இலவசமாக அவுஸ்ரேலிய வழங்கியுள்ளது

              மகிந்த காலத்தில் கப்பல் ஊடாக அவுஸ்ரேலியாவுக்குள் பலநூறு பேர் மகிந்த மகனால் கடத்த பட்டனர்

              அவ்வாறான ஒரு கடத்தல் இப் பொழுது இடம்பெறலாம் என்பதால்,அவுஸ்ரேலிய முந்தி கொண்டு

              இந்த அன்பளிப்பை செய்துள்ளமை கவனிக்க தக்கது

                Posted in இலங்கை செய்திகள்

                போதையில் வாகனம் ஒட்டிய 758 பேர் கைது

                போதையில் வாகனம் ஒட்டிய 758 பேர் கைது

                இலங்கையில் புத்தண்டு தினத்தன்று மட்டும் போதையில் வாகனம் ஓட்டி சென்ற சுமார் 758 பேரை

                தாம் கைது செய்துள்ளதாக வீதி போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்

                புத்தாண்டு தின நிகழ்வுகளில் சிறப்பு காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின்

                விசேட சேவையினரால் இந்த கைதுகள் இடம் பெற்றுள்ளது

                இவ்வாறான கைதின் மூலம் பெரும் விபத்துக்கள் மற்றும் உயிர்ப் பலிகள் தடுக்க பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

                  Posted in இலங்கை செய்திகள்

                  பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முன்னாள் தலைவர் மரணம்

                  பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முன்னாள் தலைவர் மரணம்

                  பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஆரம்பகாலத் தலைவர் திரு. பிரான்சிஸ் சேவியர் மரியாம்பிள்ளை அவர்கள் 09.04.2021 வெள்ளிக்கிழமை இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.

                  தமிழீழம் யாழ் மடத்தடியை பிறப்பிடமாக கொண்ட திரு.பிரான்சிஸ் சேவியர் 1982 காலப்பகுதியில் புலம்பெயர்ந்து பிரான்ஸ் மண்ணில் குடியேறினார். 1986 ம் ஆண்டு தனது குடும்பத்தையும்

                  பிரான்ஸ் நாட்டிற்கு அழைத்துக்கொண்ட இவர் புலம்பெயர்ந்து பிரான்ஸ் மண்ணில் வாழ்ந்த காலம் தொட்டு இவரும் இவரது குடும்பமும் சிறீலங்கா அரசாங்கத்தின் தமிழர் மீதான

                  ஒடுக்குமுறைகளை எதிர்த்தும், மனிதாபிமான செயற்பாடுகள், மனித உரிமை, புனர்வாழ்வு நடவடிக்கைகள் என தமிழீழ மக்களின் விடுதலைச் செயற்பாடுகளில் இணைந்து பணியாற்றினார்.

                  இரண்டாம் கட்ட ஈழப்போர் காலத்தில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் விரிவாக்கம் செய்யப்பட்டபோது பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழம் 1990ம் ஆண்டு ஆரம்பமாகியது.

                  அதன் ஆரம்பகால தலைவராக திரு.பிரான்சிஸ் சேவியர் அவர்களும், செயலாளராக திருமதி மகேஸ்வரி பிரான்சிஸ் சேவியர் அவர்களும் இணைந்து பணியாற்றினார்கள்.

                  புலம்பெயர் வாழ் தமிழ் சமூகத்தின் மத்தியில் தாயக மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணக் கருவை விதைக்கவைக்க சிறுதுளி பெரு வெள்ளம் உண்டியல் திட்டத்தை

                  நடைமுறைப்படுத்தியவர். அன்றைய காலத்தில் உண்டியல்களை தனது கைப்பட உருவாக்கிய பெருமைக்குரியவர்.

                  தாய்மண்ணுக்கான இவரது செயற்பாடுகளுக்கு இவரது துணைவியார் பெரும் பக்கபலமாக இருந்தார். 03.04.1992ம் ஆண்டு இவரது துணைவியார் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.

                  அவரது இழப்பு இவரை வெகுவாக பாதித்தது. அதன் விளைவாக சமூக செயற்பாடுகளில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டார்.

                  தாயக மக்கள் மீது அன்பும் கரிசனையும் கொண்ட இவர் தாயகத்தில் நடந்த பேரவலங்கள் கொடுமைகள் துயரங்களை கேள்வியுற்று மனம் வருந்தினார்.

                  தாயக மக்களின் நல்வாழ்வுக்காக பிரான்சில் உருவாகிய புனர்வாழ்வுக் கழகம் இன்றும் தனது சேவையை ஆற்றி வருகின்றது. எந்த நோக்கத்திற்காக இப்பெருமகனார் உறுதுணையாக

                  நின்றாரோ அந்த நோக்கத்திற்காக தொடர்ந்தும் பணியாற்றுவதே நாம் அவருக்கு செய்யும் மரியாதையாகும்.

                  தமிழீழ மக்கள் மீது கரிசனை கொண்ட சமூக சேவையாளனின் இழப்பால் துயருறும் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், மருமக்கள், உறவினர் மற்றும் நண்பர்களுடன் நாமும் சேர்ந்து துயரை பகிர்கின்றோம்.

                  ஒன்றிணைவோம் சேவை செய்வோம்

                  தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ்

                  பணிப்பாளர்

                  செ.சுந்தரவேல்

                    Posted in இலங்கை செய்திகள்

                    27 பொருட்களுக்கான சலுகை விலையை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க திட்டம்

                    27 பொருட்களுக்கான சலுகை விலையை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க திட்டம்

                    27 பொருட்களுக்கு சதோச நிறுவனம் சலுகை வழங்கின்றது. நுகர்வோரின் கோரிக்கைக்கு அமைய இந்த

                    நடைமுறையை மேலும் மூன்று மாதங்களுக்கு அமுற்படுத்த எதிர்பார்ப்பதாக சதோச நிறுவனத்தின் உபதலைவர் துஷார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

                    பண்டிகைக் காலத்தில் குறைந்த விலையில் பொருட்களை வழங்கி வருவதாக இதனால் நுகர்வோரை ஏனைய வியாபாரிகளால் ஏமாற்றுவதற்கு ஏமாற்ற முடியவில்லை.

                    சந்தையின் தீர்மானமிக்க சக்தியாக சதோச நிறுவனம் செயற்படுகின்றது. சலுகைப் பொதிக்கு

                    பாரிய கிராக்கி நிலவுகின்றது என்று சதோச நிறுவனத்தின் உபதலைவர் துஷார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      போதையில் வாகனங்களை செலுத்துவோருக்கு பொலிசார் எச்சரிக்கை

                      போதையில் வாகனங்களை செலுத்துவோருக்கு பொலிசார் எச்சரிக்கை

                      பண்டிகைக் காலத்தில் மது போதையுடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை சட்டத்தின் பிடியில் சிக்க

                      வைக்கும் விசேட தேடுதல் நடவடிக்கை எதிர்வரும் 20ம் திகதி வரை முன்னெடுக்கப்படும். என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

                      மது போதையில் வாகனத்தை செலுத்துவோருக்கு பிணை வழங்கப்பட மாட்டாது. இவர்கள் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

                      இவ்வாறோனரின் வாகனங்களையும் பொலிசார் கைப்பற்றுவார்கள் என்று தெரிவித்த அவர்,வாகன

                      விபத்துக் காரணமாக நேற்று 11 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 8 பேர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களாவர்.

                      மது போதையுடன் பயணிக்கும் சாரதிகளுக்கு மேலதிகமாக வீதிச் சட்டங்களை மீறுவோரையும் சட்டத்தின்

                      முன் நிறுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      போலீசார் மீது தாக்குதல் – கார் சாரதி கைது

                      போலீசார் மீது தாக்குதல் – கார் சாரதி கைது

                      இலங்கையில் இன்று காலை Kurundugahahetekma வீதியில் போக்குவரத்துக்கு கண்காணிப்பில்

                      ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் மீது வாகன சாரதி ஒருவர் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளார்

                      இந்த தாக்குதலில் காயமடைந்த போலீசார் சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுளளார் ,சாரதி கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

                      கோட்டா ஆட்சியில் முதன் முறையாக காவல்துறையினர் மீது தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை இங்கே கூர்ந்து கவனிக்க தக்கது

                        Posted in இலங்கை செய்திகள்

                        புத்தாண்டு தினத்தில் 165 பேர் காயம் – எகிறிய அசம்பாவிதங்கள்

                        புத்தாண்டு தினத்தில் 165 பேர் காயம் – எகிறிய அசம்பாவிதங்கள்

                        இலங்கையில் இடம் பெற்று கொண்டிருக்கும் புத்தாண்டு நிகழ்வுகளில் பொழுது ஏற்பட்ட

                        விபத்துக்களில் சிக்கி 165 பேர் காயமடைந்த நிலையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                        இவர்களில் வீதி விபத்து ,மற்றும் தனி நபர்,குழு வன்முறை தாக்குதல் மற்றும் ,பட்டாசு

                        வெடிப்புகளின் பொழுது ஏற்பட்ட சேதங்கள் உள்ளிட்டவை அடங்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

                        கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை 42 வீதம் அசம்பாவிதங்கள் அதிகரித்துள்ளதாக சுட்டி காட்ட பட்டுள்ளது குறிப்பிட தக்கது

                          Posted in இலங்கை செய்திகள்

                          தெற்கு வேக சாலையின் மூலம் 4 நாட்களில் 13 மில்லியன் வருமானம்

                          தெற்கு வேக சாலையின் மூலம் 4 நாட்களில் 13 மில்லியன் வருமானம்

                          இலங்கை தெற்கு வேக சாலையின் ஊடக பயணித்த வாகனங்களினால் அரசுக்கு 13 மில்லியன்

                          ரூபா வருமானமாக கிடைத்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                          புத்தாண்டை முன்னிட்டு மக்கள் அவ்வழியினை பயன்படுத்தி சென்று வந்தனர் ,இவ்வாறு மக்கள்

                          சென்று வந்த நிலையில் இந்த வருமானம் கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                            Posted in இலங்கை செய்திகள்

                            இலங்கை வீதிகளில் உடல் சிதறி பலியான 11 பேர்

                            இலங்கை வீதிகளில் உடைல்சிஉடல் சிதறி பலியான 11 பேர்

                            இலங்கை வீதிகளின் ,வீதி விதிமுறைகளை முறையாக பின்பற்ற தவறியதன் விளைவால் 11 பேர்

                            வீதி விபத்தில் சிக்கி பலியாகினர்

                            இவ்வாறு இறந்தவர்களில் எட்டுப்பேர் மோட்டார் சைக்கிள் ஒட்டி சென்றவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

                            இலங்கை வீதி விபத்துக்களில் அதிகம் இறந்து வருவது இருசக்கர வண்டி ஓட்டிகள் என போலீசா தெரிவித்துள்ளனர்

                              Posted in இலங்கை செய்திகள்

                              கல்முனை – காரைதீவு கடற்கரை வீதி காபட் வீதியாகும் வேலைத்திட்டம் ஆரம்பம்

                              கல்முனை – காரைதீவு கடற்கரை வீதி காபட் வீதியாகும் வேலைத்திட்டம் ஆரம்பம்

                              (எம்.எஸ்.எம்.ஸாகிர்)

                              நாட்டின் ஒரு லட்சம் கிலோமீட்டர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில்

                              கல்முனை தொடக்கம் காரைதீவு வரையான 3.4 கிலோமீற்றர் கடற்கரை வீதி காபட் வீதியாக புனரமைப்பு செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

                              அதற்கான வேலைத்திட்டங்கள் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் கடற்கரை வீதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டன

                              . இதனை (08) கடந்த வியாழக்கிழமை காலை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனை தொகுதி செயற்பாட்டாளரும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளருமான றிஸ்லி முஸ்தபா ஆரம்பித்து வைத்தார்.

                              இந்நிகழ்வில், என்.எஸ் என்ஜினீரிங் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் றிஸ்லி முஸ்தபாவின் இணைப்பாளருமான எம்.யூ.எம்.நியாஸ்,


                              றிஸ்லி முஸ்தபாவின் செயளாலர் ஜவாஹீர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் மற்றும் கல்முனை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனை ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

                              கல்முனை - காரைதீவு கடற்கரை
                              கல்முனை – காரைதீவு கடற்கரை
                                Posted in இலங்கை செய்திகள்

                                புத்தாண்டை முன்னிட்டு 3000 பேரூந்துகள் விசேட சேவையில்

                                புத்தாண்டை முன்னிட்டு 3000 பேரூந்துகள் விசேட சேவையில்

                                இலங்கையில் நிகழவுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மூவாயிரம் பேரூந்துகள் மக்கள்

                                போக்குவரத்தை இலகுபடுத்த விசேடமாக இயக்க படுகின்றன

                                இந்த சேவையில் தனியார் பேருந்துகளும் உள்ளடக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                                மேலும் முப்பதாயிரம் பொலிசாரும் காவல் கடமையில் ஈடுபட்டுள்ளனர்

                                வீதிகளில் திடீர் சோதனைகளும் இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இலங்கையில் கொரனோ மரணம் 600 ஆக அதிகரிப்பு

                                  இலங்கையில் கொரனோ மரணம் 600 ஆக அதிகரிப்பு

                                  இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை அறுநூறு பேர்

                                  பலியாகியுள்ளனர் ,தற்போது நால்வர் பலியான எண்ணிகையுடன் இந்த உச்சத்தை தொட்டுள்ளது

                                  மேலும் மேற்படி நோயானது பரவாமல் இருக்க பல தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு

                                  வருகின்ற பொழுதும் மக்கள் அதனை செவிமடுக்காது அலட்சியம் செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    125 கிலோ ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 12 பேர் கைது

                                    125 கிலோ ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 12 பேர் கைது

                                    ஐஸ்’ என்ற போதைப்பொருளுடன் 12 சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் (12) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

                                    அவர்களிடமிருந்து 125 கிலோகிராம் எடை கொண்ட ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 3 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் மூலம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

                                    110 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் சபுகஸ்கந்த பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.. இதனுடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

                                    வனவாசல மற்றும் மாபோல பகுதிகளில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கிடைத்த தகவல்களுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 2 பெண்களும் அடங்குகிறார்கள்.

                                    வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வெயல்படும் ரூபன் மற்றும் லால் ஆகிய போதைப்பொருள் கடத்தல்காரர்களின் வழிகாட்டலுக்கு அமைய இந்தக் கடத்தல் இடம்பெற்றிருக்கிறது. இந்தப் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற லொறி, ஹொரணை பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.

                                    டுபாயில் தலை மறைவாக இருந்து செயற்படும் நிபுண என்பவர் கடல் வழியாக இதனை நாட்டிற்கு எடுத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றார் என்று தெரியவந்துள்ளது.


                                    சம்பவம் பற்றி பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      இலங்கையில் கொரனோ மரணம் 600 ஆகி அதிகரிப்பு

                                      இலங்கையில் கொரனோ மரணம் 600 ஆகி அதிகரிப்பு

                                      இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை அறுநூறு பேர்

                                      பலியாகியுள்ளனர் ,தற்போது நால்வர் பலியான எண்ணிகையுடன் இந்த உச்சத்தை தொட்டுள்ளது

                                      மேலும் மேற்படி நோயானது பரவாமல் இருக்க பல தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு

                                      வருகின்ற பொழுதும் மக்கள் அதனை செவிமடுக்காது அலட்சியம் செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது