Posted in இலங்கை செய்திகள்

பஸ்வண்டிகளில், புகையிரதத்தில் பயணிப்போருக்கு வயதுக்கட்டுப்பாடு

பஸ்வண்டிகளில், புகையிரதத்தில் பயணிப்போருக்கு வயதுக்கட்டுப்பாடு

பைஷல் இஸ்மாயில் –

பஸ்வண்டிகளில், புகையிரதத்தில் பயணிப்போருக்கு வயதுக்கட்டுப்பாடு இல்லை. ஏனைய சமயத்தலங்களுக்கு செல்வோருக்கு வயதுக் கட்டுப்பாடு இல்லை. பாடசாலைகள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கு கல்வி கற்போர் மிகப்பெரும்பாலானோர் 18 வயதுக்கு

குறைந்தவர்களாகும். இந்நிலைமை இவ்வாறிருக்க பள்ளிவாயல்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டும் செல்ல முடியும் என்ற வரையறை எந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டது

என்ற கேள்வியை கேட்க விரும்புகின்றேன் என்று திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கேள்வி எழுப்பினார்.

நோன்பு தொடர்பாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (19) அவரது கிண்ணியா அலுவலகத்தில் இடம்பெற்றது. அங்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்தக் கேள்வியை எழுப்பினார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், குறித்த சுற்றறிக்கை இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்ட சமய ரீதியான அடிப்படை உரிமையை மீறுகின்ற செயலாகும். நோன்பு தொடர்பாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பாக 20 க்கு

ஆதரவளித்த முஸ்லிம் எம்.பிக்களின் நிலைப்பாடு என்ன? பள்ளிவாயல்களினால் தான் கொரோனா பரவுகின்றது என்ற ஒரு மாயையை ஏற்படுத்த இதன் மூலம் முயற்சி

எடுக்கப்படுகின்றதா? என்ற சந்தேகம் எழுகின்றது. இது முஸ்லிம் சமுகம் பற்றிய மோசமான ஒரு மனப்பதிவை ஏனையோருக்கு ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகும்.

இது குறித்து 20 வது திருத்த சட்ட மூலத்துக்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பிக்களின் நிலைப்பாடு என்ன என்பதை அவர்கள் தெளிவு படுத்த வேண்டும். ஒருங்கிணைப்புத் தலைவர் பதவி, ஒருசில வேலைவாய்ப்புகள், வேறு சில தனிப்பட்ட நன்மைகள் என்பவற்றுக்காக தொடர்ந்து முஸ்லிம்

சமுகத்தின் உரிமைகளை பறிகொடுத்து வரலாற்றில் இடம் பிடிக்கப்போகின்றீர்களா? அல்லது முஸ்லிம் சமுகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்கப் போகின்றீர்களா? என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

எனவே, 20 க்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பிக்கள் தற்போது அரசாங்கத்தின் பக்கம் உள்ளதால் இந்த விடயங்கள் குறித்து அரசாங்கத்துடன் பேச வேண்டும். முஸ்லிம்கள் உரிமைகள் தொடர்பான விடங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் மாகாணசபை தேர்தல் விரைவில் நடத்துங்கள் – இந்தியா வலியுறுத்தல்

    இலங்கையில் மாகாணசபை தேர்தல் விரைவில் நடத்துங்கள் – இந்தியா வலியுறுத்தல்

    இலங்கையில் மாகாணசபை தேர்தல் விரைவில் நடத்த பட வேண்டும் என இந்தியா இலங்கையிடம் கோரியுள்ளது

    இலங்கையில் புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் இலங்கையை இந்தியா கட்டுப்படுத்த முனைந்து

    வருகிறது இதன் ஊடாக அம் பலமாகியுளளது

      Posted in இலங்கை செய்திகள்

      பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு -905 பேர் கைது

      18 மணித்தியாலங்களில் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 3,871 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

      பொலிஸ்மா அதிபரின் உத்தரவிற்கமைய கடந்த 18 ஆம் திகதி மதியம் 12 மணி தொடக்கம் 18

      மணித்தியலாயங்கள் வரையான காலப்பகுதியில் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளபபட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

      குறித்த சோதனை நடவடிக்கையின் போது குடிபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில்

      905 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்

        Posted in இலங்கை செய்திகள்

        பொலிஸாருக்கு போலி தகவல் வழங்கிய பெண்கள் இருவர் கைது

        பொலிஸாருக்கு போலி தகவல் வழங்கிய பெண்கள் இருவர் கைது

        இலங்கையில் காவல்துறை அவசர இலக்கத்திற்கு அழைப்பினைமேற் கொண்டு போலி

        தகவல்களை வழங்கிய இரு பெண்கள் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

        இவ்வாறு கைது செய்ய பட்ட பெண்கள் தற்போது தீவிர விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளனர்

          Posted in இலங்கை செய்திகள்

          நாடு முழுவதும் நாளை மறுதினம் விசேட பாதுகாப்பு

          நாடு முழுவதும் நாளை மறுதினம் விசேட பாதுகாப்பு

          உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு 2 வருடம் பூர்த்தியடையும் எதிர்வரும் புதன்கிழமை நாடு முழுவதும்

          விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

          இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக அன்றைய தினம் கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட தேவாராதனை நடைபெறவுள்ளது.

          இவற்றுக்கு ஆகக்கூடிய பாதுகாப்பை வழங்குவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். இதுதொடர்பாக

          அனைத்து பிரதி பொலிஸ் மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியச்சகர்களின் தொகுதி, பொலிஸ் பிரிவின்

          அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் இது தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

            Posted in இலங்கை செய்திகள்

            20ம் திருத்தத்துக்கு வாக்களித்த எம்பீக்களுக்கு “பாவமன்னிப்பு” பெற சந்தர்ப்பம் இதோ வருகிறது-மனோ கணேசன்

            20ம் திருத்தத்துக்கு வாக்களித்த எம்பீக்களுக்கு “பாவமன்னிப்பு” பெற சந்தர்ப்பம் இதோ வருகிறது-மனோ கணேசன்

            தமுகூ தலைவர் மனோ கணேசன்

            20A திருத்தத்துக்கு ஆதரவாக அணி மாறி வாக்களித்த தமிழ் பேசும் எம்பீக்களுக்கு, நாம் இந்த சட்டமூலங்களுக்கு ஆதரவளிக்க “மாட்டோம், மாட்டோம்” என இரண்டு முறை தாம் இப்போது

            அங்கம் வகிக்கும் அரசுக்கு இடித்துக்கூறி, பாவமன்னிப்பு பெற சந்தர்ப்பம் வருகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து கலாச்சார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

            இது தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

            இன்றைய அரசாங்கம், பாராளுமன்றத்தில் இரண்டு சட்ட மூல மசோதாக்களை கொண்டு வந்து நாட்டையும், இந்நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களையும் ஆபத்தில் போட திட்டமிடுகிறது. இந்த ஆபத்துகள் இன்று எம் கண் முன்னே தெரிகின்றன.

            ஒன்று, நமது தமிழ் பேசும் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களை அழித்து, ஒழிக்கும் உத்தேச இரகசிய திட்டமிடலும், முயற்சியும் ஆகும். அதாவது, இந்நாட்டில் இன்றுள்ள தேர்தல்

            முறை சட்டங்களை திருத்தியமைக்க, இவர்கள் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கொண்டுவர திட்டமிடும் சட்டமாகும்.

            இரண்டாவது, இந்நாட்டில் நிலவும் சட்டங்களிலிருந்து விலக்களித்து, சீன நாட்டுக்கு விசேட சலுகைகளை அளித்து, கொழும்பு தலைநகரை ஒட்டி, மேற்கு கரையில் அமைகின்ற, தனியொரு நிர்வாகம் கொண்ட “துறைமுக நகர்” ஆகும்.

            இந்நாட்டில் தமிழ் மக்களின் ஜனத்தொகையில் 50 விகிதமும், முஸ்லிம் மக்களின் ஜனத்தொகையில் 65 விகிதமும், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே, தென்னிலங்கையில்

            வாழ்கிறார்கள். இப்படி பரவி, விரவி வாழும் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் பாராளுமன்ற மற்றும் மாகாணசபை பிரதிநிதித்துவங்களை இல்லாமல் ஒழிக்கும் புதிய தேர்தல் முறைமையை, இன்றைய அரசின் பிரதான கட்சியான பொதுஜன பெரமுன கொண்டு வர முயல்கிறது.

            அதிஷ்டவசமாக, இன்று அரசின் உள்ளே இருக்கும் பங்காளி சிறுகட்சிகளின் இருப்பையும் இந்த புதிய தேர்தல் முறை யோசனைகள் சவாலுக்கு உட்படுத்துகின்றன. ஆகவே அரசுக்கு உள்ளே

            இருக்கும், சிங்கள மக்களை பிரதிநித்துவம் செய்யும் சிறு பங்காளி கட்சிகள் இதை அரசுக்கு உள்ளேயே இருந்து எதிர்க்கின்றன. நாளை இந்த கட்சிகள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் இது தொடர்பில் கலந்துரையாடுகின்றன.

            ஆனால், அரசின் உள்ளே இருக்கும் தமிழ், முஸ்லிம் பங்காளி கட்சியினரும், 20ம் திருத்தத்துக்கு ஆதரவாக அரசு பக்கம் தாவிய எம்பீக்களும் அமைதி காக்கின்றனர். இது இன்று தமிழ் பேசும் மக்களின் சாபக்கேடாக இருக்கிறது.

            இன்று இருக்கும் தமிழ் பேசும் எம்பீக்கள், அமைச்சர்கள் நாளை இல்லாமல் போகலாம். ஆனால், இந்த நாடு இருக்கும். இந்நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழத்தான் போகிறார்கள். இந்த உத்தேச தேர்தல்முறை மாற்ற முயற்சி, 20ம் திருத்தத்தை விட மிக மிக ஆபத்தானது. எமது மக்களின் இருப்பை இந்நாட்டில் இல்லாமல் செய்யும் உள்நோக்கம் கொண்டது.

            ஆகவே எதிர்காலத்தில் எமது தமிழ், முஸ்லிம் இனங்களின் பிரதிநிதித்துவங்களை இல்லாமல் செய்யும் சட்டமூலங்களுக்கு முட்டாள்தனமாக கையை தூக்கி, வரலாற்றின் சாபத்துக்கு மீண்டும் ஒருமுறை உள்ளாக வேண்டாம் என சம்பந்தபட்டவர்களுக்கு கூறி வைக்க விரும்புகிறேன்.

            கடந்த அரசில் பங்காளி கட்சி அமைச்சர்களாக நாம் இருக்கும் போது, நமது மக்களின் இருப்புக்கு ஆபத்து வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் உரக்க குரல் கொடுத்து அரசுக்கு உள்ளேயே சண்டையிட்டு, எமது இருப்பை உறுதி செய்தோம் என்பதையும் இங்கே நான், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் என்ற முறையில் பெருமையுடன் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

            அதேபோல், அடுத்த தேசிய ஆபத்து, சீன நாட்டுக்கு விசேட சலுகைகளை அளித்து, இந்நாட்டில் நிலவும் சட்டங்களிலிருந்து விலக்களித்து, கொழும்பு தலைநகரை ஒட்டி, மேற்கு கரையில் அமைக்கின்ற தனியொரு நிர்வாகம் கொண்ட “துறைமுக நகர்” ஆகும். இதற்கான விசேட வர்த்தமானி பிரகடனம் வெளியாகி விட்டது.

            நாளை பாராளுமன்ற கட்சி தலைவர் கூட்டத்தில், இது தொடர்பில் பேசப்படும். நீதிமன்ற தீர்ப்புகளுக்கு பின் இந்த சட்டமூலம் பாராளுமன்றம் வருமா, இல்லையா, வருமானால், வரும் திகதி என்பவை மீண்டும் கட்சி தலைவர்கள் கூடி முடிவு செய்வோம்.

            இந்நிலையில், 20ம் திருத்தத்துக்கு ஆதரவாக அணி மாறி வாக்களித்த தமிழ் பேசும் எம்பீக்கள் ஒன்று கூடி, சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவங்களை ஒழிக்கும் தேர்தல் முறைக்கு ஆதரவாக

            நாம் வாக்களிக்க மாட்டோம் என்றும், துறைமுக நகரை சீனாவுக்கு தாரை வார்க்கும் சட்டமூலத்துக்கு ஆதரவாக நாம் வாக்களிக்க மாட்டோம் என்றும், தாம் இன்று அங்கம் வகிக்கும் அரசுக்கு உறுதியாக இடித்துரைக்க வேண்டும் என நான் இந்நாட்டின் தமிழ், முஸ்லிம் மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

              Posted in இலங்கை செய்திகள்

              முல்லையில் வாய் சண்டையில் – வெட்டி வீச பட்ட மீனவர் கை

              முல்லையில் வாய் சண்டையில் – வெட்டி வீச பட்ட மீனவர் கை

              முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் அமைந்துள்ள வாடியில் இரு குடும்பங்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் மோதலாக மாறி கத்தி வெட்டில் முடிவடைந்துள்ளது.

              கடந்த 17 ஆம் திகதி மாலை நாயாற்று வாடிப்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புத்தளம், மன்னார் மாவட்டத்தினை சேர்ந்த மீனவர்கள் வாடி அமைத்து தொழில் செய்து வருகின்றார்கள்.

              இவர்களில் புத்தளம் கலாவத்தை பகுதியினை சேர்ந்த 41 அகவையுடைய மீனவர் கைவிரல் ஒன்று துண்டாடப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

              இச்சம்பவம் தொடர்பில் கத்தியால் வெட்டிய குற்றவாளியான மன்னாரை சேர்ந்த நபரை முல்லைத்தீவு பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

              இச்சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்


                Posted in இலங்கை செய்திகள்

                யாழில் 40 லட்சம் பெறுமதியான பொருட்கள் 9 பாடசாலைகளில் திருட்டு

                யாழில் 40 லட்சம் பெறுமதியான பொருட்கள் 9 பாடசாலைகளில் திருட்டு

                யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 9 பாடசாலைகளை உடைத்து 40 லட்சம் பெறுமதியான இலத்திரனியல் கற்றல் உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

                வட்டுக்கோட்டை, முழங்காவில், குமுழமுனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

                சந்தேக நபர்கள் மூவரும் இணைந்து கடந்த நான்கு மாதங்களில் யாழ்ப்பாணம் மானிப்பாய், காங்கேசன்துறை, சாவகச்சேரி மற்றும் பூநகரி பொலிஸ் பிரிவுகளில் உள்ள 9 பாடசாலைகளை

                இரவு வேளைகளில் உடைத்து பெறுமதியான இலத்திரனியல் கற்றல் உபகரணங்களை திருடியுள்ளனர். திருடிய பொருள்களில் ஒரு பகுதியை விற்பனை செய்தும் உள்ளனர்.

                செம்மணியில் வைத்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

                சாவகச்சேரி மகளிர் கல்லூரி, புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலயம், மாவிட்டபுரம் வீமன்காமம் மகா வித்தியாலயம், கைதடி கலைவாணி வித்தியாலயம், கட்டுடை சைவ

                வித்தியாலயம், இளவாலை மெய்கண்டான் வித்தியாலயம், கீரிமலை வலித்தூண்டல் றோ.க.த.க பாடசாலை மற்றும் பூநகரி மத்திய கல்லூரி ஆகியவற்றிலேயே சந்தேக நபர்களால் பொருள்கள் திருட்டப்பட்டுள்ளன.

                இந்தப் பாடசாலைகளில் இரண்டில் இருதடவைகள் திருட்டுப் போயுள்ளன.

                ஒளி எறிவு படக் காட்டமைவு (Projector), கணினிகள், அதிதிறன் பலகைகள் (Smart Board), மடிகணினிகள் உள்ளிட்ட 40 லட்சம் பெறுமதியான பொருள்கள் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

                சந்தேக நபர்கள் திருட்டுக்குப் பயன்படுத்தியதாக முழங்காவிலைச் சேர்ந்தவரிடமிருந்து பட்டா படி வாகனம் ஒன்றும் வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவரிடமிருந்து முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

                பாடசாலை உபகரணங்களை அடையாளம் காண்பிக்க அதிபர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

                சந்தேக நபர்கள் மூவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கையில் நாளை பாடசாலைகள் மீழ ஆரம்பம்

                  இலங்கையில் நாளை பாடசாலைகள் மீழ ஆரம்பம்

                  இலங்கையில் இரண்டாம் தவணை காரணமாக விடுப்பு விட பட்டிருந்த பாடசாலைகள் மீள ஆரம்பமாகிறது

                  ,நாளை முதல் நாள் என்பதால் மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கையை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்

                  மேலும் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு ஏற்றவாறு மாணவர்கள் உள்வாங்க பட்டு

                  கற்றல் நடவடிக்கை மேற்கொள்ள படும் என தெரிவிக்க படுகிறது

                    Posted in இலங்கை செய்திகள்

                    இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி இதுவரை 618 பேர் மரணம்

                    இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி இதுவரை 618 பேர் மரணம்

                    இலங்கையில் இதுவரை இடம்பெற்று வந்த கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 618

                    பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் தொடர்ந்து இந்த நோயின் தாக்குதல் அதிகரித்து வருகின்றமை

                    இங்கே குறிப்பிட தக்கது

                      Posted in இலங்கை செய்திகள்

                      மியன்மார் இராணுவம் சிறைபிடித்த 12 இலங்கை மீனவர்கள் விடுதலை

                      மியன்மார் இராணுவம் சிறைபிடித்த 12 இலங்கை மீனவர்கள் விடுதலை

                      மியன்மார் கடல் படையினரால் கைது செய்ய பட இலங்கையை சேர்ந்த 12 மீனவர்கள் அந்த கடல்

                      படையினரால் இப்பொழுது விடுதலை செய்ய பட்டுள்ளனர்

                      மாசி மாதம் அவர்கள் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய

                      பட்ட இவர்களை விடுதலை செய்துள்ளமை குறிப்பிட தக்கது

                        Posted in இலங்கை செய்திகள்

                        கூட்டமைப்பை உடைக்கும் சுமந்திரன் – தவராசா கூக்குரல்

                        கூட்டமைப்பை உடைக்கும் சுமந்திரன் – தவராசா கூக்குரல்

                        இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் அரசியல் குழு உறுப்பினருமான ஜனாதிபதி

                        சட்டத்தரணி கே.வி.தவராசா தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

                        தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆணையைப் பெற்றுத் தமிழர்களின் தலைமைத்துவத்தைச் சுமந்து திறம்பட வழிநடத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறிது சிறிதாக மக்கள் ஆணையை

                        இழந்து செல்லும் சூழ்நிலையில், அதற்கான காரணங்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

                        கடந்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இன்னும் சரியான முறையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்

                        பதவி நிலைகள் உரியவர்களுக்கு அளிக்கப்படாத இடைவெளியில், கட்சியின் இருப்பைச் சிதைக்கும் பல்வேறு கருத்தாடல்கள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

                        இன்னும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஓர் ஊடகப் பேச்சாளர் நியமிக்கப்படவில்லையெனவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தன்னைக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் போன்று

                        பிரதிபலித்தபடி தொடர்ந்தும் சர்ச்சையான கருத்துக்களை பொதுவெளியில் தெரிவித்து வருவது கட்சியின் அரசியல் இருப்பிற்கும் உறுதிப்பாட்டிற்கும் சவாலாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          மலையகத்தில் நடைபெற்ற மாபெரும் மென்பந்து கிரிகெட் சுற்று போட்டி photo

                          மலையகத்தில் நடைபெற்ற மாபெரும் மென்பந்து கிரிகெட் சுற்று போட்டி

                          கிரிகெட் சுற்று போட்டி

                          “ஒற்றுமையே எமது பலம்”

                          இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன

                          இந்த நாட்டின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையே எமது பலம் என்று கூறுகின்றார் கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள் நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன அவர்கள்

                          புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் மேற்படி கல்லூரியில் கடந்த காலங்களில் கல்வி பயின்ற பழைய மாணவர்களை ஒன்றினைத்து 11 பேர் கொண்ட 16 அணிகள் உறுவாக்கபட்டு குறித்த அணிகளுக்கு இடையில் கிரிகெட் மென்பந்து சுற்றுப்போட்டி 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நடைபெற்றது.

                          கல்லூரியின் அதிபர் எஸ்.சந்திரமோகன் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் எம். கவாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த சுற்போட்டியை கடந்த 16.04.2021 ஆம் திகதி கிராமிய

                          வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள்இ நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன அவர்களினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கபட்டது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.

                          தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்.

                          இன்று நம் நாட்டில் மக்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக இனம் மதம் மொழி சாதி அரசியல் தோட்டம் ஊர் ரீதயாக பிரிக்கபட்டே இருக்கின்றோம். இது இந்த நாட்டுக்கும் எமக்கும் எமது சமூகத்திற்கும் உகந்த ஒன்று அல்ல நாம் இளைஞர்கள் என்ற ரீதியில் ஒன்றுமையாக இருந்து எமது

                          சமூகத்தையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டும். இதற்கு இந்த கிரிகெட் போட்டி ஒரு நல்ல சந்தர்ப்பம். இதில் எப்படி ஒன்றுமையாக இருக்கின்றோமோ அதேபோல் நாமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நான் இங்கு கட்சி அரசியல் ரீதியாக வரவில்லை. உங்களில் ஒருவனாகவே

                          வந்திருக்கின்றேன். ஒற்றுமையே எமது பலம். இந்த பாடசாலையில் விளையாட்டு மைதானத்தை விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ ஊடாக புணர்நிர்மானம் செய்ய இரண்டு

                          மில்லியன் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளேன். தொடர்ந்து இந்த பாடசாலையின் அபிவிருத்தியில் உங்களுடன் தோல் நிற்பேன் என்று கூறினார்

                          .

                          இந் நிகழ்வில் சமய பெரியார்கள் கல்வி அதிகாரிகள் பிரஜாசத்தி பணிப்பாளர் பாரத் அருள்சாமி அயல் பாடசாலைகளின் அதிபர்கள் அரசியல் பிரமுகர்கள் பாடசாலையின் அபிவிருத்தி சங்கத்தினர் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட நலன் விரும்பிகள் கலந்துக் கொண்டனர்.

                          தொடர்ந்து நடைபெற்ற இந்த கிரிகெட் சுற்றுபோட்டி 17.04.2021 மாலை முடிவுற்றது. இந்த போட்டியின் முதலாவது வெற்றி கின்ணத்தையும் பணப்பரிசையும் 2014 ஆம் கல்வி பயின்ற

                          பழைய மாணவர் அணி வெற்றிக் கொண்டதுடன் இரண்டாம் இடத்தை 2009 ஆம் ஆண்டு கல்வி பயின்ற பழைய மாணவர் அணியும் மூன்றாம் இடத்தை 2010 ஆம் ஆண்டு கல்வி பயின்ற பழைய மாணவர் அணியும் பெற்றுக் கொண்டது

                          கிரிகெட் சுற்று போட்டி

                          கிரிகெட் சுற்று போட்டி
                            Posted in இலங்கை செய்திகள்

                            தடம்புரண்ட இராணுவ வண்டி – இரு சிப்பாய்கள் காயம்

                            தடம்புரண்ட இராணுவ வண்டி – இரு சிப்பாய்கள் காயம்

                            இலங்கை வவுனியா ஓமந்தை சோதனை சாவடிக்கு அருகில் இராணுவத்தினர் பிக்கப் ரக வண்டி

                            ஒன்று விபத்தில் சிக்கியத்தில் அதில் பயணித்த இரு இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர்

                            காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                            இந்த விபத்து தொடர்பனா விசாரணைகள் இடப்பெற்ற வண்ணம் உள்ளன

                            தடம்புரண்ட இராணுவ வண்டி
                            தடம்புரண்ட இராணுவ வண்டி
                              Posted in இலங்கை செய்திகள்

                              பெண்ணை பேரூந்தால் இடித்து கொன்ற சாராதி

                              பெண்ணை பேரூந்தால் இடித்து கொன்ற சாராதி

                              இலங்கை கதிர்காமம் பகுதியில் உள்ள பஸ் டிப்போ ஒன்றில் ,குறித்த பேரூந்து நிலையத்தில்

                              பயணித்த பெண் ஒருவரை அரச பேரூந்து ஒன்று இடித்து வீழ்த்தி கொன்றுள்ள சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                              மேற்படி விபத்து அங்கு பொருத்த பட்டிருந்த கமராவில் பதிவகையுள்ள நிலையில்,சாரதி ,நடத்துனர் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

                              மேற்படி விபத்து காட்சி வைரலாகி வருகிறது

                              இடித்து கொன்ற சாராதி
                              இடித்து கொன்ற சாராதி
                                Posted in இலங்கை செய்திகள்

                                கோட்டாவால் என் உயிருக்கு ஆபத்து – பாதுகாப்பை பாலப்படுத்துக -விஜயதாச கோரிக்கை

                                கோட்டாவால் என் உயிருக்கு ஆபத்து – பாதுகாப்பை பாலப்படுத்துக -விஜயதாச கோரிக்கை

                                இலங்கையின் முன்னாள் நீதி அமைச்சர் வியஜாதச தனது உயிருக்கு ஆளும் ஜனாதிபதி

                                கோத்தபாயாவினால ஆபத்து உள்ளது எனவும் ,இதனால் தனது பாதுகாப்பை பலப்படுத்த படி IGP க்கு கடிதம் எழுதியுள்ளார்

                                முன்னாள் அமைச்சர் ஒருவருக்கே நாட்டில் இவ்விதம் கொலை அச்சுறுத்தல் உள்ளது எனின்

                                சாதாரண மக்களின் வாழ்வியல் எவ்வாறு இருக்கும் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள முடியும் என்பதே இந்த நிகழ்வுகளின் வெளிப்பாடாக உள்ளது

                                இவரது ஆட்சியில் நாள் தோறும் நீர் ஏரிகளில் மனித சடலங்கள் மிதந்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                                விஜயதாச
                                விஜயதாச
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இலங்கையில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள் – 52 பேர் மரணம்

                                  இலங்கையில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள் – 52 பேர் மரணம்

                                  இலங்கையில் கடந்த ஐந்து நாட்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் சிக்கி இதுவரை ஐம்பத்தி இரண்டு பேர் மரணமாகியுள்ளனர்

                                  மேலும் பல நூறு பேர் படுகாயமடைந்துள்ளனர்

                                  சாரதிகள் அலட்சியமும் ,வீதி போக்குவரத்து விதிகளை பின்பற்ற தவறியதன் காரணமாக இந்த உயிர்பலிகள் இடம்பெற்றுள்ளன

                                  பல்லாயிரம் போலீசார் குவிக்க பட்டுள்ள பொழுதும் இந்த மனித உயிர் பலிகளை தடுக்க முடியாது போலீசார் திணறி வருகின்றனர்

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    நாட்டிலுள்ள பல வளங்களை இன்னும் சரியாக நிர்வகிக்க முடியாத நிறை காணப்பட்டு வருகிறது – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

                                    நாட்டிலுள்ள பல வளங்களை இன்னும் சரியாக நிர்வகிக்க முடியாத நிறை காணப்பட்டு வருகிறது – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

                                    பைஷல் இஸ்மாயில் –

                                    எமது நாட்டிலுள்ள பல வளங்களை இன்னும் சரியாக நிர்வகிக்க முடியாத நிறை காணப்பட்டு வருகிறது என்றும், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டுக்கு புதிய துறைகளைக்

                                    கற்ற துறை சார்ந்தவர்கள் அதிகளவில் தேவைப்படுகிறார்கள். இதனை அரசாங்கத்தினால் மட்டும் செய்துவிட முடியாது என்று கல்வி மறுசீலமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

                                    பம்பலப்பிட்டி அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

                                    கலந்துகொண்டார், விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், மாலைதீவுக்கான தூதுவர் ஒமர் ரஸ்ஸாக், பிரதித் தூதுவர் அஸ்லம் சாகிர், சிறைச்சாலை ஆணையாளர் மலின் லியனகே, முன்னாள் கொழும்பு மாகாண சபை அங்கத்தவரும் மனித

                                    உரிமைகள் அமைப்பின் ஆளுநருமான எ.ஜே.முஹம்மட் பாயிஸ், கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதி எஸ் சந்திரசேகரம் உள்ளிட்ட பல உள்நாட்டு வெளிநாட்டு கல்விமான்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

                                    இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், இன்று இலங்கையின் பொருளாதார கல்வி வளர்ச்சியில் கணிசமான பங்கினை தனியார் துறையை துறையினரே வழங்கி வருகின்றனர். அந்த வகையில் அமேசன்

                                    உயர் கல்வி நிறுவனத்தின் சேவை உண்மையில் பாராட்டத்தக்கது. இந்த நிறுவனம் வெறும் புத்தக கல்வியை மட்டும் மையமாக கொள்ளாமல், மாணவர்களுக்கிடையே சுய வேலைத்திட்டங்கள், (Individual Project) பயிற்சி பட்டறைகள் (practical workshops), வெளிநாட்டு மாணவர்களின்

                                    தொடர்பாடல், (Foreign Students exchange), பல உள்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை கை சாத்தி, மாணவர்களுக்கு Individual Training போன்றவற்றை வழங்கி தொழில் சந்தைக்கு ஏற்றவாறு மாணவர்களை தயாரித்து அனுப்புகின்ற நிறுவனமாக இயங்கி வருகின்றது.

                                    எதிர்வரும் ஆண்டுகளில் உலகிலேயே அதிகமாக தேவைப்படுகின்ற தொழிற்துறையான Robertic Engineering,Green Technology, Solor Technology, Hybrid technology, Cloud Computing, Automated System, Mobile

                                    Technology, Wireless technology, போன்ற துறைகளுடன் தொடர்புடைய பாடநெகளையும் இந்த கல்வி நிறுவனம் வெகுவிரைவில் ஆரம்பிக்க உள்ளதை நான் பாராட்டுகின்றேன் என்றார்.

                                    உலகை மாற்றுவதற்கான முதல் சக்தி, கல்வி அறிவு எவருக்கு நல்ல கல்வி அறிவு ஞானம் இருக்கிறதோ அவர்கள் எந்த துறையில் பயணித்தாலும் வெற்றி பெறுவது நிச்சயம் இந்த

                                    அடிப்படையில் பம்பலப்பிட்டி அமேசன் உயர்கல்வி நிறுவனம் சுமார் 10 வருடங்களாக ஏனைய கல்வி நிறுவனங்களை விடவும் மாறுபட்ட முறையில் தனது கல்வி நடவடிக்கைகளை

                                    முன்னெடுத்து வருகின்ற அதேவேளை பல சமூக சேவைகளையும், பல இலவச புலமைப்பரிசில் திட்டங்களையும் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

                                    இந்த பட்டமளிப்பு விழாவில் 140 மாணவர்கள் உளவியலும் உளவளத்துணையும், ஆசிரியர் பயிற்சி நெறி, தகவல் தொழில்நுட்பம், கணக்கியல், போன்ற பல துறைகளுக்கான பட்டச் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.

                                    அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
                                    அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
                                      Posted in இலங்கை செய்திகள்

                                      இலங்கையில் தந்தை, மகளின் கண்டுபிடிப்பு

                                      இலங்கையில் தந்தை தந்தை, மகளின் கண்டுபிடிப்பு

                                      நாம் அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளான பேனாவின் மூலம் இயற்கையைப் பாதுகாக்கும் திட்டமொன்றை இலங்கையைச் சேர்ந்த தந்தையும் மகளும் கண்டுபிடித்துள்ளனர்.

                                      பிளாஸ்டிக் உள்ளிட்ட இயற்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பொருட்களால் இத்தனை காலமும் பேனா தயாரிக்கப்பட்டு வந்துள்ளது.

                                      இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களால் மட்டும் நாளொன்றுக்கு 80 கிலோ கிராம் அளவுக்கு பேனாக்கள் வீசப்பட்டு வருவதாக கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

                                      இந்த செய்தியை அவதானித்த கண்டி பகுதியைச் சேர்ந்த சச்சினி கிறிஸ்டினா சுகிர்தன், இதற்கான மாற்றுத் திட்டத்தை சிந்தித்துள்ளார்.

                                      இந்த விடயம் தொடர்பில் தான், தனது தந்தையான சுகிர்தனுடனும் கலந்துரையாடியுள்ளதாக கிறிஸ்டினா தெரிவித்தார்.

                                      “இலங்கையில் கொவிட் தொற்றின் முதலாவது அலை ஏற்பட்டிருந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான முடக்க நிலையின் போதே, இந்த திட்டத்தை நான் சிந்திக்கத் தொடங்கினேன். இயற்கைக்கு பாதிப்பு இல்லாத பேனா ஒன்றை தயாரிக்க முடிவெடுத்தேன்,” என்று அவர் கூறினார்.

                                      தன்னால் தயாரிக்கப்பட்டுள்ள பேனா, பயன்படுத்தப்பட்ட பின்னர், வெளியில் வீசப்படும் பட்சத்தில், அதில் இருந்து மரங்கள் வளரும் வகையில் இந்த பேனா தயாரிக்கப்பட்டுள்ளது.

                                      முதற்கட்டமாக தயாரிக்கப்பட்டுள்ள பேனாவில், சிறிய வகையிலான செடிகள் மாத்திரமே வளரும் என பேனாவை தயாரித்த கிறிஸ்டினா கூறுகிறார்.

                                      பேனாவின் அளவு சிறியதாக உள்ளதால், சிறிய விதைகளை மாத்திரமே பேனாவில் உள்ளடக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

                                      எதிர்வரும் காலங்களில் பெரிய மரக்கன்றுகள் வளரும் வகையில், இந்த பேனாவை தயாரிக்க தானும், தனது தந்தையும் எதிர்பார்த்துள்ளதாக கிறிஸ்டினா நம்பிக்கை தெரிவித்தார்.

                                      தன்னால் தயாரிக்கப்பட்டுள்ள பேனா, 96 சதவீதம் இயற்கையுடன் ஒன்றிணைந்து செல்லும் என்றும் முதல் கட்டமாக, பேனாவில் மரக்கறி கன்றுகள், பூக்கன்றுகள் மற்றும் ஆயுர்வேத செடிகள் போன்ற விதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

                                      இந்த பேனாவின் பின்புறத்தில் மரக்கறி, பூக்கன்று மற்றும் ஆயர்வேத செடிகளின் விதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், பேனாவின் பின்புறத்தில் இருந்தே, இந்த செடி துளிர்விட ஆரம்பிக்கின்றன.

                                      இந்த பேனாவை, பின்புறமாக, மண்ணில் நட வேண்டும் என அவர் குறிப்பிட்டார். மேலும், இந்த பேனா, பயன்பாட்டிற்குப் பின்னர், மண்ணில் நடப்பட்டு ஒன்று முதல் இரண்டு வாரங்களில் கன்று வளரும் என அவர் தெரிவித்தார்.

                                      குறிப்பாக நடப்படும் பேனாவுக்கு, உரிய வகையில் நீர் சேர்க்கப்படுவதாக இருந்தால், அந்த செடி உரிய வகையில் வளரும் என பேனாவை தயாரித்த கிறிஸ்டினா தெரிவிக்கிறார்.

                                      இந்த பேனாவில் உள்ளடக்கப்பட்டுள்ள விதைகள் அனைத்தும், உரிய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே, பேனாவுக்குள் அடைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

                                      இந்த பேனாவின் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் ஆதரவு வழங்க முன்வந்துள்ளது. சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, அண்மையில், இந்த பேனாவை தயாரித்த கிரிஷ்டினா, அவரது தந்தை சுகிர்தன் ஆகியோரை அழைத்து, ஆலோசனை நடத்தியிருந்தார். அப்போது இந்த பேனாவின் உற்பத்தியை விரிவுபடுத்த அரசாங்கம் உதவி செய்யும் என அமைச்சர் உறுதியளித்துள்ளதாக பேனாவை தயாரித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

                                      அதேபோன்று, இந்த பேனாவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒத்துழைப்பையும் இலங்கை அரசாங்கம் வழங்க முன்வந்துள்ளது.

                                      இலங்கையிலுள்ள அரச பாடசாலை மாணவர்களுக்கு இந்த பேனாவின் பயன்பாட்டை அதிகரிப்பதே தமது நோக்கம் என அவர் கூறுகிறார். இதேபோன்று, பேனாவின் உற்பத்தியை அதிகரித்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தமது மற்றுமொரு நோக்கம் என்று கே.சுகிர்தன் தெரிவித்தார்.

                                      இலங்கையை விடவும், வெளிநாடுகளில் வாழ்வோர் இயற்கையுடன் ஒன்றிணைந்து செல்வதற்கு முக்கியத்தும் வழங்குவதாகவும் அதனால், வெளிநாடுகளில் வாழ்வோருக்கு இந்த பேனாவை மிக இலகுவாக கொண்டு சேர்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.

                                      எதிர்வரும் காலங்களில் இந்த பேனாவின் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்றும் கே.சுகிர்தன் நம்பிக்கை தெரிவித்தார்.

                                        Posted in இலங்கை செய்திகள்

                                        தீவிரவாத தேரர்கள், இன்னொரு “ரவுண்ட்” ஆடப்பார்க்கிறார்கள்-மனோ கணேசன்

                                        பெளத்த அமைப்புகளுக்கு அரசு தடை எனக்கூறி, தீவிரவாத தேரர்கள், இன்னொரு “ரவுண்ட்” ஆடப்பார்க்கிறார்கள்

                                        தமுகூ தலைவர் மனோ கணேசன்

                                        பெங்கமுவே நாலக தேரர், அஸ்கிரிய அனுநாயக தம்மானந்த தேரர், ரத்தன தேரர், முருத்தெடுகம ஆனந்த தேரர், சிங்கள ராவய தேரர், ஞானசார தேரர், ராவண பலய தேரர் ஆகிய பெளத்த தீவிரர்கள், இப்போது புதிய பாடல் ஒன்றை பாடுகிறார்கள்.

                                        இந்த அரசு தமது பெளத்த அமைப்புகளை தடை செய்ய போகிறது என்ற புரளியை கிளப்பி மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார்கள்.

                                        உண்மையில் இந்நாடு உருப்பட வேண்டுமானால், பெளத்த தேரர்கள் அரசியலில் தலையிடுவதை தடை செய்யத்தான் வேண்டும். நான் இரண்டு கைகளையும் உயர்த்தி ஆதரிப்பேன்.

                                        ஆனால், இந்த அரசு இப்போது இவர்களை தடை செய்து தற்கொலை செய்ய போவதில்லை என தமுகூ தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

                                        மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

                                        முஸ்லிம் அரசியல்வாதிகள், குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் ரிசாத், ரவுப் மீது, உயிர்த்த ஞாயிறு குண்டு தொடர்பில் குற்றம் சாட்டப்பட வேண்டும் என இவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அதற்கான சாட்சியம் இல்லை. அப்படி சாட்சியங்கள் இருந்தால், இந்த அரசே சும்மா விடாது.

                                        தேரர்களிடம் சாட்சியம் இருந்தால் அதை விசாரணை கமிசனிடம் அவர்கள் தர வேண்டும். ஆனால், அப்படி இவர்களிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை.

                                        தமிழ், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் மட்டுமே இருக்கிறது. தமிழ், முஸ்லிம் அடிப்படைவாதம் பற்றி பேசும் இவர்கள் தமது அடிப்படைவாத, இனவாதத்தை தேசபக்தியாக காட்டுகிறார்கள்.

                                        ஆகவே இன்று, அரசின் பிரதான கட்சியில் உள்ள தீவிரவாதிகளையும், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட நபர்களையும் கொண்டு, எதிரணியிலும் சிங்கள பெளத்த தீவிரர்கள்

                                        கிடைத்தால், அவர்களையும் சேர்த்து, இந்த அரசின் மீதான சிங்கள மக்களின் அதிருப்தியை திசை திருப்பி, மீண்டும் ஒருமுறை சிங்கள பெளத்த அரசு ஒன்றை அமைக்க முயல்கிறார்கள்.

                                        அதாவது இன்னொரு ரவுன்ட் வர முயல்கிறார்கள்.

                                        இனிவரும் மாற்று அரசு, ஒரு சிங்கள பெளத்த அரசாக இருப்பதை நாம் ஏற்க முடியாது. உலகமும் ஏற்காது. அது ஒரு இலங்கை (ஸ்ரீலங்கா) அரசாக மட்டுமே இருக்க முடியும்.

                                        இல்லாவிட்டால் அடுத்த இரண்டு வருடத்தில், இலங்கை நாடு அரசியல், சமூக, பொருளாதார துறைகளில் தோற்றுப்போன நாடாக உலகில் ஒதுக்கப்படும். அதன்பிறகு சாம்பலில் இருந்து எழுந்து வர வேண்டியதுதான்