Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
இலங்கையில் கைதிகள் 50 பேர் தப்பி ஓட்டம்
இலங்கையில் கைதிகள் 50 பேர் தப்பி ஓட்டம்
வெலிகந்தை கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) ஏற்பட்ட மோதலையடுத்து 50 மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடியுள்ளதுடன் பொலிஸார் இராணுவத்தினர் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்கள்,வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தப்பியோடிய 35 பேர் சரணடைந்துள்ளதாகவும் ஏனையவர்களை இராணுவத்தினர் பொலிஸார் இணைந்து தேடிவருவதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவார் தெரிவித்தார்.
பொலன்னறுவை மட்டக்களப்பு மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள வெலிகந்தை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ள சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களை தடுத்துவைத்து இராணுவத்தினர் புனர்வாழ்வழித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவதினமான நேற்று இரவு 10 மணியளவில் காலி பகுதியைச் சேர்ந்த வயோதிபர் ஒருபவரை மாதம்பை பகுதியைச் சேர்ந்த ஒருவர் மண்டையில் தாக்கியதையடுத்து காலி மாத்தறையானை தாக்குவதாக
காலி மாத்தறையைச் சேர்ந்த ஒருவர் குரல் கொடுத்ததையடுத்து காலி மாத்தையைச் சேர்ந்த குழுவினருக்கும் மாதேம்பே பகுதியைச் சேர்ந்த குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது
இலங்கையில் கைதிகள் 50 பேர் தப்பி ஓட்டம்
இதனையடுத்து அங்கு சென்று நிலமையை கட்டுப்பாட்டிற்கு கோண்டுவர வெலிகந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையல் சென்ற
பொலிஸாரை தாக்கியதில் பொலிஸ் பொறுப்பதிகாரி, இரு பொலிஸார் ஒரு இராணுவத்தினர் மற்றும் 6 கைதிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இதனை தொடர்ந்து அங்கிருந்து 50 மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடியுள்ள நிலையில் இரு குழுக்களுக்கிடையிலான மோதலை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தப்பியோடிய கைதிகளை தேடியவரும் நிலையில் இன்று காலை வரையில் 35 கைதிகள் சரணடைந்ததுடன் ஏனைவர்களை தேடி இராணுவத்தினரும் பொலிஸாரும் மதுறு ஓயா காட்டுப்பகுதியில் தேடுதல்களை நடாத்தி வருகின்றதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இவ்வாறு இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து வேலியை உடைத்து சுமார் 600 மேற்பட்டோர் தப்பிச் சென்ற நிலையில்
அவர்கள் சரணடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பித்தக்கது
இலங்கை பெண்கள் 150 பேர் அடிமைகளாக விற்பனை
இலங்கை பெண்கள் 150 பேர் அடிமைகளாக விற்பனை
இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து ஓமான் நாட்டில் தாங்கள் அடிமைகளாக விற்கப்பட்டுள்ளதாகவும் தங்களை மீட்டெடுக்குமாறும் கோரி, ஓமானிலிருந்து 150க்கும் மேற்பட்ட பெண்கள் அவலக் குரல் எழுப்பி மன்றாடியுள்ளனர்.
இந்த விடயம் சம்பந்தமாக பாதிக்கப்பட்டு நிர்க்கதி நிலையில் உள்ளதாகக் கூறப்படும் வீட்டுப் பணிப்பெண்கள் அங்கிருந்து தகவல்களை அனுப்பி வைத்துள்ளதுடன், காணொளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
அவர்களால் வெளியிடப்பட்ட தகவல்களில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் பெண்கள் ஜனாதிபதியிடம் உருக்கமாக இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.
அதில் அவர்கள் தெரிவிப்பதாவது, ஓமான் நாட்டில் நிர்க்கதியாகிய நிலையில் இலங்கைக்கு திரும்ப முடியாமல் தினமும் கண்ணீருடன் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் இலங்கைப் பெண்கள் 150 பேரின் துயரக் கதையை இதனூடாக இலங்கை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அரசாங்கத்துக்கும் தூதரகங்களுக்கும் அறிவிக்கிறோம்.
இலங்கையிலுள்ள முகவரும் இங்கே ஓமான் நாட்டிலுள்ள முகவரும் எங்களை ஏமாற்றி சுற்றுலா விசாவில் அழைத்து வந்து எங்களை இங்கே ஓமானில் விற்று விட்டார்கள். இதனால் நாங்கள் இப்போது அடிமைகளாக இங்கே அகப்பட்டுக் கொண்டுள்ளோம்.
இந்த முகவர்கள், எங்கள் ஒவ்வொருவர் சார்பாகவும் சுமார் 18 இலட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டே எங்களை அடிமைகளாக விற்றிருக்கிறார்கள்.
இலங்கை பெண்கள் 150 பேர் அடிமைகளாக விற்பனை
கையில் பாஸ்போட்டும் இல்லை. அதனையும் பறித்துக் கொண்டார்கள். அதனால் நாங்கள் எங்களது நாட்டுக்குத் திரும்ப முடியாதுள்ளது. தொடர்பாடல் எதுவுமே இல்லாமல் தொடர்பு கொள்ளக் கூடிய அலைபேசிகள் எதுவுமே நாம் பாவிக்க முடியாது மறுக்கப்பட்டுள்ளோம்
எங்களது துயரங்களை ஏறெடுத்துப் பாருங்கள், எமது தாய் தந்தையர், சகோதரர்கள், பிள்ளைகள் அவர்களது நிலைமை அவர்கள் என்ன ஆனார்கள் என்பது கூட எமக்குத் தெரியாது. ஏனென்றால் எங்களுக்குத் தொடர்பு கொள்ளும் எல்லா வழிகளும் மறுக்கப்பட்டு விட்டன.
சம்பளம் இல்லை. சாப்பாட்டுக்கு வழியில்லை. சவர்க்காரம் வாங்கக் வாங்கக் கூட கையில் காசு இல்லை. நாங்கள் பரம ஏழைகள் என்றபடியால்தான் இங்கு வீட்டுப் பணிப்பெண்களாக வந்தோம்.
நாங்கள் அனைவரும் பெண்கள். இங்கே சுகாதார வசதிகளும் பாதுகாப்பும் அற்ற சூழ்நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம். மாற்றிக் கொள்ள ஆடைகள் கூட இல்லாது அவஸ்தைப் படுகின்றோம்
நோயுள்ள பெண்கள் இங்கே கடும் துயரத்தோடு காலங் கழிக்கிறார்கள். சிலர் எழுந்திருக்க முடியாத நிலையில் உடல் உபாதைகளுக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளார்கள்.
நாங்கள் இங்கே வந்தது எமது வறுமையைப் போக்கவும் பொருளாதார நெருக்கடியிலுள்ள இலங்கை நாட்டுக்கு டொலர் வருமானத்தைப் பெற்றுக் கொடுப்பதற்குமாகும்.
ஆனால் பெரும் தியாகத்தின் மத்தியில் எங்களது தாயை தந்தையை கணவனை, பிள்ளைகளைப் உறவுகளைப் பிரிந்து வந்து குடும்பத்துக்கும் நாட்டுக்கும் உதவி செய்ய வந்த எங்களை இங்கே அடிமைகளாக விற்று எங்களை அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.
இது சம்பந்தமாக நாங்கள் இங்கே துயரம் தாங்க முடியாமல் கடந்த 26 ஆம் திகதி ஆர்ப்பாட்டமும் செய்தோம் அதற்கும் எந்தத் தீர்வும் இல்லை. இங்குள்ள இலங்கைத் தூதரகமோ, இந்ந நாட்டு அரசாங்கமோ, எவருமே கண்டு கொள்ளவில்லை.
நவம்பர் 1ஆம் திகதி தொழில் நீதிமன்றத்துக்கும் சென்றோம். ஆனால். அங்கும் எங்கள் சார்பாக நீதி வழங்கப்படவில்லை. நீதிமன்றம் நாங்கள் பெற்றுக் கொண்ட 18 இலட்சம் ரூபாய் பணத்தையும் கட்டிவிட்டு போகுமாறு கேட்கிறார்கள்.
உண்மையில் இலங்கையிலுள்ள பணிப்பெண்களை இங்கே அழைத்து வரும்பொழுது இலங்கை முகவர்கள், எங்களுக்கு ஒரு இலட்சம் அல்லது இரண்டு இலட்சத்தை மாத்திரம் தந்து விட்டு மிகுதிப் பணத்தை இரு நாடுகளிலுமுள்ள முகவர்கள் சுருட்டிக் கொள்கிறார்கள்.
இது ஒரு மோசடியும் மனிதக் கடத்தலும் அடிமை வியாபாரமுமாகும். எனவே மனித உரிமை அமைப்புக்கள், பெண்ணுரிமை அமைப்புக்கள் இந்த மோசடியை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்களை இந்தத் துயரத்தில் இருந்து மீட்டெடுத்து எங்களது உறவுகளுடன் எங்களைச் சேர்ப்பிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் இப்பொழுது அடிமைகளாக விற்கப்பட்டு நடுத்தெருவில் நிற்கும் 150 பேரைப் போல இன்னும் பல நூற்றுக் கணக்கான பெண்கள் அடிமைகளாக இலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்டு விற்கப்படுவார்கள்.
இனிமேல் சுற்றுலா வீசாவில் எந்த இலங்கைப் பெண்ணும் இந்த நாட்டுக்கு வீட்டுப்
பணிப்பெண்களாக வர வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் குடிகாரர்கள் வீழ்ச்சி வருமானம் இன்றி தவிக்கும் இலங்கை
இலங்கையில் குடிகாரர்கள் வீழ்ச்சி வருமானம் இன்றி தவிக்கும் இலங்கை
இலங்கையில் குடிகாரர்கள் மதுபானம் அருந்துதல் வீழ்ச்சியடைந்துள்ளதல் ,இலங்கை வருமானம் இன்றி சிக்கி தவித்து வருகிறது .
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,குடி மக்கள் மதுபானம் அருந்துவதில் , ஏற்பட்டுள்ள தக்கம் மகாரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது .
இலங்கையில் மதுபானம் மற்றும் புகைத்தல் பொருட்கள் ஊடாக, ஆண்டு தோறும் அதிக வருமானம் கிடைக்க பெற்று வருகிறது .
இந்த வருமான வீழ்ச்சி நாட்டின் பொருளாதரத்தை பலமாக பாதித்துள்ளதாக ,.இலங்கை மதுபான திணைக்களம் தெரிவித்துள்ளது .
ஏழு மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை
ஏழு மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை
இலங்கையின் ஏழு மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
சீரற்ற கால நிலை காரணமாக ஏற்படும் மழையால் மண் சரிவு அபாயம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
கேகாலை ,கருணாகலா ,பதுளை .கண்டி ,மாத்தளை ,மொனராகலை ,நுவரெலியா ,குருணாகல பகுதிகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
அபாய எச்சரிக்கை விடுக்க பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் சிலர் பாதுகாப்பான பகுதிகளுக்கு நகர்ந்து வருகின்றனர் .
கள்ள உறுதி முடித்து காணிகள் விற்பனை – மக்களே உசார்
கள்ள உறுதி முடித்து காணிகள் விற்பனை – மக்களே உசார்
யாழ்ப்பாணம் வசாவிளான், ஒட்டகப்புலம் பகுதிகளில் கள்ள உறுதி முடித்து காணிகள் விற்கப்படுவதாகவும், அதனால் அப்பகுதிகளில் காணிகளை வாங்குபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில், கடந்த 32 வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டில் உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்த சில காணிகள் தற்போது விடுக்கப்பட்டுள்ளன.
காணி உரிமையாளர்கள் அவற்றினை அடையாளம் கண்டு அறிக்கைப்படுத்த முன்னர், விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு உரிமையாளரின் பெயர்களை
மாற்றம் செய்தும் , உறுதிகளில் மோசடி செய்தும், கள்ள உறுதிகள் முடித்து, அக்காணிகளை விற்பனை செய்யும் முயற்சிகளில் சில குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.
எனவே, அப்பகுதிகளில் காணிகளை வாங்குபவர்கள் உறுதி விடயத்தில் அவதனாமாகவும் விழிப்பாகவும் இருக்குமாறும், வாங்கப் போகும் காணிகள் தொடர்பில் தீர விசாரிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெல்லிப்பளை பிரதேச செயலக உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்தேவி ரெயில் மதவாச்சி வரையில் சேவை
யாழ்தேவி ரெயில் மதவாச்சி வரையில் சேவை
யாழ்தேவி ரெயில் தடம் புரண்டதன் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ரெயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைவாக, மதவாச்சி மற்றும் வவுனியாவிற்கு இடையில் பஸ்கள் மூலம் பயணிகள்செல்வதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொழும்பிலிருந்து மதவாச்சி வரையில் ரெயில்சேவை இடம்பெறுகிறது. மதவாச்சியிலிருந்து வவுனியா தொடக்கம்
காங்கேசன்துறை வரையில் ரெயில்சேவைகள் வழமை போன்று இடம்பெறுகின்றன.
நான்கு முக்கிய அமைச்சுக்கள் தொடர்ந்து ரணில் வசம்
நான்கு முக்கிய அமைச்சுக்கள் தொடர்ந்து ரணில் வசம்
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தொடர்ந்து நான்கு அமைச்சு பதவிகள் உள்ளதாக விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்க பட்டுள்ளது .
இலங்கையில் எவ்வேளையும் தமது ஆட்சியினை கூட்டணி பங்காளிகள் கவிழ்த்து விடலாம் என்கின்ற நிலை உள்ளது .
மேலும் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் காலத்தை இழுத்தடித்து செல்லும் நகர்வில் தீவிர முனைப்பு காட்டி வருகிறார் ரணில் விக்கிரமசிங்க .
ரணில் இந்த செயல் பங்காளிகளுக்கு பெரும் கோபத்தினை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு அரசியல் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
மட்டக்களப்பில் 800 மாடுகள் மரணம் புதிய வகை நோய் பரவல்
மட்டக்களப்பில் 800 மாடுகள் மரணம் புதிய வகை நோய் பரவல்
மட்டக்களப்பு பகுதியில் கடந்த இரண்டு வாரங்களில் 800 மாமடுகள் பலியாகியுள்ளன.
நீர் நிலைகளை அண்மித்த பகுதியில், மேய்ச்சலில் ஈடுபட்ட மாடுகள் இவ்விதம் இறந்துள்ளன .
மூச்சு சுவாசிக்க முடியாது ,வாயால் நுரை தள்ளிய நிலையில் இறந்துள்ளன .
மாடுகள் தொடராக இவ்விதம் இறந்து வருவதற்கான காரணம் கண்டறியப்படவில்லை .
சட்டவிரோத நிறுவன கழிவுகள், நீரில் கலந்து அவை நச்சு தன்மை அடைந்து இறந்திருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
அரசியல் செல்வாக்குடன் விஷமிகளினால் இயக்க படும் இரசாயன பாவனை நிறுவன கழிவுகள் நீர் மற்றும் ,விவசாய நிலங்களில் கலக்க படுகிறது .
அதில் விளையும் உணவுகள் ,மற்றும் நீர் என்பன நச்சு
தன்மை அடைந்து ,இவ்விதம் ஏற்பட்டு இருக்க கூடும் என்ற அச்சம் நிலவுகிறது .
யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்
யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் ஊந்துருளியில் வ்ருகைதந்த ரவுடி கும்பல் அதே பகுதியில் உள்ள கொட்டல் ஒன்றில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த நபர் மீது , வாள்வெட்டு தகத்தலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளது .
இந்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
யாழில் தொடரும் இவ்வாறான வன்முறை தாக்குதல் குழுவை, கைது செய்திட காவல்துறையினர் பின்னடித்து வருவதான குற்ற சாட்டு ,மக்களினால் முன் வைக்க பட்டுள்ளது .
எகிப்துக்கு பறந்தார் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
எகிப்துக்கு பறந்தார் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
எகிப்து நாட்டுக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா பயணமாகியுள்ளார் .
இரண்டு நாட்கள் அரசமுறை பயணத்தை மேற்கொண்டு ,ரணில் விக்கிரமசிங்கா சென்றுள்ளதாக, இலங்கை அரச மையங்கள் தெரிவித்துள்ளன.
பிரான்ஸ் கொழும்புக்கு நேரடி விமான சேவைகள் ஆரம்பம்
பிரான்ஸ் கொழும்புக்கு நேரடி விமான சேவைகள் ஆரம்பம்
பிரான்ஸ் பாரிசில் இருந்து இலங்கை கொம்புக்கு நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
எயார் பிரான்ஸ் விமனா சேவைகள் இந்த பயணத்தை ஆரம்பித்துள்ளன .
வாரம் மூன்று முறை இந்த விமான பயணங்கள் இடம்பெறுவதாக அறிவிக்க பட்டுள்ளது .
இந்த நேரிட விமான பயன்கள் ஆரம்பித்துள்ளதால் பிரான்சன் இலங்கை மக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது .
வவுனியாவில் கோர விபத்து மூவர் மரணம்
வவுனியாவில் கோர விபத்து மூவர் மரணம்
வவுனியா நொச்சிமோட்டை பலத்துக்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
இரவு 12.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த 17 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இராணுவ பிரிவினரால் விதவை பெண்ணின் வாழ்வாதாரத்திற்கு உதவி
இராணுவ பிரிவினரால் விதவை பெண்ணின் வாழ்வாதாரத்திற்கு உதவி
இலங்கை இராணுவ யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 55ஆவது படைப்பிரிவின் தலைமையகம் யாழ்ப்பாணம் கெவில் பகுதியில் வசித்துவரும்
விதவை பெண்ணின் வாழ்வாதாரத்திற்கு வலுவூட்டும் வகையில் தையல் இயந்திரம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியது.
திருமதி மதுரன் நதியா மற்றும் அவரது இரண்டு மகள்கள் மற்றும் மகனின் பொருளாதார சுமைக்கு நிவாரணம் வழங்குவதற்காக, கொழும்பைச் சேர்ந்த
இராணுவ பிரிவினரால் விதவை பெண்ணின் வாழ்வாதாரத்திற்கு உதவி
திருமதி பி சுபத்ரா அவர்களால் 175,000/= பெறுமதியான தையல் இயந்திரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், 55ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அவர் தைக்கும் ஆடைகளை விற்பனை செய்வதற்கான தனியான இடம் ஒன்றையும் வழங்கியது.
இந்த நிகழ்வில், குறித்த படைப் பிரிவின் கட்டளைத் தளபதி
மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்கள் கலந்துகொண்டார்.
அடுக்குமாடி குடியிருப்புகள் டொலர்களில் விற்பனை
அடுக்குமாடி குடியிருப்புகள் டொலர்களில் விற்பனை
நகர அபிவிருத்தி அதிகாரசபையால் (UDA) நிர்மாணிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு டொலர்களில்
விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் மேலும் மூன்று வீடுகள் விற்கப்பட்டுள்ளன.
இந்த மூன்று அடுக்குமாடி குடியிருப்புகளும் 1 இலட்சத்து 43 ஆயிரத்து 700 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இவை பன்னிபிட்டிய, கொட்டாவ மற்றும் மாலபே பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
அடுக்குமாடி குடியிருப்புகள் டொலர்களில் விற்பனை
நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்காக கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் மேலும் 10 வீடுகளை வாங்குவதற்கு விண்ணப்பங்கள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன.
அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரித்தானியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் உள்ள இலங்கை புலம் பெயர்ந்த
தொழிலாளர்களால்
குறித்த விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞருக்கு 7 ஆண்டு சிறை
மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞருக்கு 7 ஆண்டு சிறை
18 வயதுக்குட்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை விதிக்க கூடாது என்று 2021 ஆம் ஆண்டு குற்றவியல் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட புதிய திருத்தங்களை
கருத்தில் கொண்டு ,மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒரு இளைஞருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஏழு ஆண்டு சிறைத்தண்டனையாக மாற்றியுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஆர்.குருசிங்க ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்ட 15 வயது
குற்றவாளிக்கு மரண தண்டனையை வழங்குவது 53வது பிரிவின் விதிகள் மீறல் என குறிப்பிட்டுள்ளனர்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞருக்கு 7 ஆண்டு சிறை
மேலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு உயர்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை இரத்து செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2002 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி கிரிக்கெட் ஸ்டம்பினால் தாக்கி மற்றுமொரு நபரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இரத்தினபுரி
உயர்நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
கொலை செய்த காரணத்தினால் குறித்த சிறுவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக குற்றவாளியினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி தர்ஷன குருப்புவினால், குற்றவியல் சட்டத்தின் 2021 ஆம் ஆண்டின் 25 ஆம் எண்
சட்டத்தால் திருத்தப்பட்ட 53 வது பிரிவின் படி (in terms of section 53 of the Penal Code.
Section 53 of the Penal Code was amended by Act No. 25 of 2021) குற்றம் சாட்டப்படும் போது அவருக்கு 15 வயது மட்டுமே இருக்கும் என்றும், மேலும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கக் கூடாது எனவும் வாதிட்டுள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றம் அனைத்து காரணிகளையும் (Mitigating factors) கருத்தில் கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல்
சிறை தண்டனை விதித்தது, இது 2018 ஆம் ஆண்டு குற்றம் நிரூபிக்கப்பட்ட
திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் எனவும் தீர்ப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
கடற்றொழில் அனுபவமுள்ளவர்களுக்கு கொரியாவில் தொழில் வாய்ப்பு
கடற்றொழில் அனுபவமுள்ளவர்களுக்கு கொரியாவில் தொழில் வாய்ப்பு
கடற்றொழில் அனுபவம் உள்ளவர்களுக்கு கொரியாவில் கடற்றொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் தொழில் மற்றும்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் தென்கொரிய சர்வதேச கூட்டுறவு கடற்றொழில் அமைப்பின் தலைவர் Im Joon
Teak ஆகியோருக்கிடையில் வெற்றிகரமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்படி, மீன்பிடித் தொழில் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில் இரு
தரப்பினரும் கவனம் செலுத்தியுள்ளனர். தென் கொரியாவின் சியோல் நகரில் உள்ள இலங்கை தூதரகமும், கொரிய அரசும் இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளன.
கடற்றொழில் அனுபவமுள்ளவர்களுக்கு கொரியாவில் தொழில் வாய்ப்பு
கொரிய மீன்பிடித் தொழிலுக்காக தற்போது E9விசா வகையின் கீழ் இணைத்துக்கொள்ளும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது
குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், கொரிய மீன்பிடி வேலைகளுக்காக இரண்டு முறை சென்ற தொழிலாளர்கள் மீண்டும் அந்த வேலை வாய்ப்பைப் பெறுவது குறித்தும் இந்த கலந்துரையாடலின்போது கவனம்
செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி, E7 அல்லது E10 வகை விசாக்கள் மூலம் இந்த வாய்ப்பை வழங்குவது குறித்து மேலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரிய மீன்பிடித் துறையைச் சேர்ந்த வர்த்தகர்கள் இலங்கையில் முதலீடு செய்வதை ஊக்குவிக்குமாறு, கொரிய சர்வதேச
கூட்டுறவு சங்கத்தின் தலைவரிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இதற்கு அவர்களிடம் இருந்து நல்ல வரறேபும் கிடைத்துள்ளது.
குரங்கு அம்மை நோய் பரவும் ஆபத்து இல்லை இலங்கை அறிவிப்பு
குரங்கு அம்மை நோய் பரவும் ஆபத்து இல்லை இலங்கை அறிவிப்பு
குரங்கு அம்மை நோய் பரவும் ஆபத்து இல்லை இலங்கை அறிவிப்பு
இலங்கையில் குரங்கு அம்மை நோயானது பரவும் ஆபத்து இலை என இலங்கை சுகாதாரா அமைச்சு அறிவித்துள்ளது .
முதன் முதலாக ஒருவர் குரங்கு அம்மை நோயினால் பாதிக்க பட்டுள்ளது ,கண்டு பிடிக்க பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியிட பட்டுள்ளது.
அவசர வசரமாக இலங்கை வெளியிட்டுள்ள இந்த மறுப்பு அறிக்கை ,சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போனவர்கள் விசாரணைகள் வரும் ஆண்டு நிறைவடையும் இலங்கை
காணாமல் போனவர்கள் விசாரணைகள் வரும் ஆண்டு நிறைவடையும் இலங்கை
இலங்கையில் இறுதி போரின் பொழுது கைது செய்யப்பட்டு காணமால் போன உறவுகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இந்த விசாரணைகள் எதிர்வரும் ஆண்டு நிறைவடையும் என என அமெரிக்கா தூதுவரிடம் இலங்கை நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார் .
மகிந்தா ,மைத்திரி ,கோத்தபாயா அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்கா என நான்கு ஜனாதிபதிகள் ,ஆண்டு ஆட்சி புரிந்த பொழுதும் ,இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை என்பது இங்கே கவனிக்க தக்கது .
தென்கொரியாவில் இறந்த இலங்கையருக்கு நிதி உதவி வழங்க கொரியா இணக்கம்
தென்கொரியாவில் இறந்த இலங்கையருக்கு நிதி உதவி வழங்க கொரியா இணக்கம்
தென் கொரியாவில் மக்கள் நெரிசலில் சிக்கி இழந்த இலங்கையரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்குவதற்கு ,தென் கொரியா இணக்கம் தெரிவித்துள்ளது .
இவருக்குரிய இழப்பீட்டு தொகையாக ,பல மில்லியன் இலங்கை ரூபாய்கள் வழங்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
இலங்கை பிரதமருடன் கொரியா தூதுவர் நடத்திய பேச்சுக்களின் பின்னர் இந்த விடயம் தெரியவந்துள்ளது .
இலங்கைக்கு நிதி கிடைப்பதில் சந்தேகம்
இலங்கைக்கு நிதி கிடைப்பதில் சந்தேகம்
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை பெற்றுக்கொள்ளும் நோக்கில், இலங்கைக்காக கடன் மறுசீரமைப்பை முன்னெடுக்கும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் நேற்று (03) சூம் தொழிநுட்பத்தின் ஊடாக
முன்னெடுக்கப்பட்டது. இலங்கைக்கான இருதரப்பு கடன் வழங்குநர்கள், லஸாட் மற்றும் கிளிஃபோர்ட் நிதி நிறுவன பிரதிநிதிகள், சர்வதேச நாணய
நிதியத்தின் அதிகாரிகள், இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இலங்கை தற்போது எதிர்கொண்டுவரும் நிதி நெருக்கடி நிலைமைகள், மற்றும் இலங்கைக்கு உடனடியாக தேவைப்படுகின்ற நிவாரணங்கள் குறித்து நிதி
அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளதுடன், பொருளாதார மேம்பாட்டுக்கான புதிய வேலைத்திட்டங்கள் குறித்து மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். மேலும், இலங்கையின் இருதரப்பு கடன்
இலங்கைக்கு நிதி கிடைப்பதில் சந்தேகம்
வழங்குநர்களை பொது இணக்கப்பாட்டிற்கு கொண்டுவரும் விதமாக இந்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், இதன் பெறுபேறுகள் மூலமாக மட்டுமே சர்வதேச நாணய நிதியத்தின் நிதி
உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை கருத்தில் கொண்டு, இந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தமிழ் மிரருக்கு தெரிவித்தார்.
மேலும், இருதரப்பு கடன் வழங்குநர்கள் இலங்கைக்கான ஒத்துழைப்புகளை வழங்குவதாக கூறியுள்ள போதிலும், இன்னமும் இறுதி நிலைப்பாடு
எதனையும் எட்டவில்லை எனவும், இலங்கையின் பிரதான கடன் வழங்குநர் நாடான சீனாவின் நிலைப்பாடு என்ன என்பது விரைவில் கிடைக்கப்பெறும்
என எதிர்பார்க்கப்படுவதாகவும், அது குறித்த இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாவும்
நிதி அமைச்சின் மூலமாக உறுதிப்படுத்த முடிந்துள்ளது.










































