Tag: வவுனியாவில்
வவுனியாவில் மின்சார வேலியில் தொங்கிய மனித சடலம்
வவுனியாவில் மின்சார வெளியில் தொங்கிய மனித சடலம்
வவுனியா குடகச்சிக்கொடியில் மின்சார வேலி ஒன்றில் சிக்கி இளம் வாலிபர் ஓருவர் பலியாகியுள்ளார் .
இரவு வேளை ,வேட்டை துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற வாலிபர் ,அங்கு அமைக்க பட்டிருந்த திருட்டு மின்சார வேலியில் சிக்கி பலியாகியுள்ளார் .
பலியானவர் 25 வயதுடைய லக்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .
மேற்படி வாலிபன் மரணம் அந்த கிராம மக்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது .
வவுனியாவில் கோர விபத்து மூவர் மரணம்
வவுனியாவில் கோர விபத்து மூவர் மரணம்
வவுனியா நொச்சிமோட்டை பலத்துக்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
இரவு 12.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த 17 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.













