விவசாயிகளுக்கு வாயு துப்பாக்கி
Posted in இலங்கை செய்திகள்

விவசாயிகளுக்கு வாயு துப்பாக்கி

விவசாயிகளுக்கு வாயு துப்பாக்கி


வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்கள் அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குரங்கு, மயில், மர அணில் போன்ற விலங்குகளினால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வனவிலங்குகளினால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுக்கும் வகையில் விவசாயிகளுக்கு வாயு துப்பாக்கிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்குனுகொலபெலஸ்ஸவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விவசாயிகளுக்கு 268 வாயு துப்பாக்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.

கண்காணிப்பு குழுவிற்கு இருவர் நியமனம்
Posted in இலங்கை செய்திகள்

கண்காணிப்பு குழுவிற்கு இருவர் நியமனம்

கண்காணிப்பு குழுவிற்கு இருவர் நியமனம்

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்கும் துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கம் வகித்த பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் மற்றும் எம்.ராமேஸ்வரன் ஆகியோர் பதவிகளை துறந்த

நிலையில் அவர்களின் வெற்றிடத்தினை நிரப்புவதற்காக சரத்வீரசேகர மற்றும் நாலக்க பண்டார கொத்தேகொட ஆகிய இரண்டு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பழனி திகாம்பரம் மற்றும் எம்.ராமேஸ்வரன் ஆகியோர் துறைசார் கண்காணிப்புக் குழுவில் இருந்து விலகியதன் காரணமாகவே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கரை ஒதுங்கியது கடற்கன்னியா
Posted in இலங்கை செய்திகள்

கரை ஒதுங்கியது கடற்கன்னியா

கரை ஒதுங்கியது கடற்கன்னியா

கடலுக்கடியில் புதைந்துள்ள பல ரகசியங்கள் படிப்பதற்கும், கேட்பதற்கும் சுவாரசியமாக இருக்கும், அதே போல கதைகள், திரைப்படங்கள் வழியாக கடற்கன்னிகள் குறித்தும் நாம் அறிந்திருப்​போம்

தென்மேற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள நாடு, பப்புவா நியூ கினியா. அந்நாட்டின் பிஸ்மார்க் கடற்கரையோரம் உள்ள சிம்பேரி தீவு பகுதியில் கடற்கன்னியை போன்ற தோற்றமுடைய விசித்திர உயிரினம் ஒன்றின் உடல், கரை ஒதுங்கியுள்ளது.

இத்தகைய உயிரினங்கள் “கிளாப்ஸ்டர்” (globster) என அழைக்கப்படுவதாக “லைவ் சைன்ஸ்” எனும் அறிவியல் ஆய்வுகள் குறித்த தகவல் வலைதளம் தெரிவிக்கிறது. தற்போது கரை ஒதுங்கியிருக்கும் இந்த “கிளாப்ஸ்டர்” உயிரினத்தின் உடல் எடை, நீளம், மற்றும் இவை எவ்வாறு உருவாகின்றன என்பது குறித்த தகவல்களை அறிவது கடினம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

கரை ஒதுங்கியது கடற்கன்னியா

இவை ஒருவகையான கடற்வாழ் பாலூட்டிஉயிரினங்கள் என்பதை தவிர மேற்கொண்டு எதுவும் கூறுவது கடினம் என ஆழ்கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உயிரிழந்து கடலிலேயே நீண்ட நாட்கள் பிற மீன்களால்

உண்ணப்பட்டு தோல் மற்றும் மாமிசத்தை இழக்கும் திமிங்கிலம், டால்பின் போன்ற உயிரின வகைகள் அடையும் நிறத்தையே தற்போது கரை

ஒதுங்கியிருக்கும் “கிளாப்ஸ்டர்” கொண்டிருப்பதால், அனேகமாக இதுவும் ஒரு திமிங்கில வகை உயிரினமாக இருக்கலாம் என சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடற்கன்னி குறித்த “தி லிட்டில் மெர்மெய்ட்” எனும் ஆங்கில திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து உலகெங்கும் வெற்றிகரமாக ஓடியது.

இந்நேரத்தில் இந்த “கடற்கன்னி” கரை ஒதுங்கியதும், அதன் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது.

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

உரகஹா வீதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம்

உரகஹா வீதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம்

அஹுங்கல்ல, உரகஹா வீதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் பிள்ளை காயமடைந்துள்ளதாகவும், மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே அவர்கள் இந்தச் சம்பவத்தை எதிர்கொண்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முச்சக்கரவண்டியொன்றில் பிரவேசித்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸாருடன் முறுகல் கைதான பெண் விளக்கமறியலில்

பொலிஸாருடன் முறுகல் கைதான பெண் விளக்கமறியலில்

மதுபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இரு இளைஞர்களை அம்பலாங்கொடை பொலிஸார் அண்மையில் கைது செய்திருந்தனர்.

இதன்போது அங்கு பெண் ஒருவர் பொலிஸ் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

பின்னர், குறித்த பெண்ணும் குறித்த இரு இளைஞர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,

“19ஆம் திகதி நள்ளிரவில் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையம் இரண்டு பேரை கைது செய்தது. அவர்கள் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர். அவர்கள் மதுபோதையில் வாகனம் செலுத்தினார்கள் என பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.”

பொலிஸாருடன் முறுகல் கைதான பெண் விளக்கமறியலில்

“இருவரும் மதுபோதையில் இருந்ததால், பொலிஸ் அதிகாரிகளால் சம்பவத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் அம்பலாங்கொடையைச் சேர்ந்த 27 மற்றும் 25 வயதுடைய இரு இளைஞர்கள் ஆகும்.

கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காவல்நிலையத்துக்கு வந்த ஒரு பெண், பொலிஸ் அதிகாரிகளை மிக மோசமான வார்த்தைகளாலும், கடுமையான வார்த்தைகளாலும் திட்டியுள்ளார்.

எனினும் அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றபோதும், அவர் செல்லவில்லை.

“இதையடுத்து, குறித்த பெண்ணை கைது செய்ய அம்பலாங்கொடை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பின்னரும், இந்த பெண் பொலிஸ் அதிகாரிகளுடன் சண்டையிட்டு அவர்களை துன்புறுத்தியுள்ளார், கடித்துள்ளார்.”

“ஒருவாறு பெண்ணைக் கட்டுப்படுத்தி, அவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்படி, இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.” என்றார்.

அநுராதபுரத்தில் கோர விபத்து தாயும் மகளும் பலி
Posted in இலங்கை செய்திகள்

முறிகண்டி செல்வபுரம் பகுதியில் விபத்து ஒருவர் பலி

முறிகண்டி செல்வபுரம் பகுதியில் விபத்து ஒருவர் பலி

முறிகண்டி, செல்வபுரம் பகுதியில் விபத்து சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து நேற்று (21) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்புரம் பகுதியில் A9 வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய கதிரவேலு லட்சுமனன் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன், அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து வீடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பயணித்த பாரஊர்தி மோதி விபத்துக்குள்ளானது.

முறிகண்டி செல்வபுரம் பகுதியில் விபத்து ஒருவர் பலி

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களே உயிரிழந்தும், படுகாயமடைந்துள்ளனர்.

பார ஊர்தியின் சாரதி தப்பி சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் பொலிஸாருக்கும், பொதுமக்களிற்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு மாங்குளம் தலைமைப் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பகுதியில் பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

உயர் பதவியில் இருப்பவர்களை ஏமாற்றி பணம் பறித்த இளம்பெண் சிக்கினார்
Posted in இலங்கை செய்திகள்

உயர் பதவியில் இருப்பவர்களை ஏமாற்றி பணம் பறித்த இளம்பெண் சிக்கினார்

உயர் பதவியில் இருப்பவர்களை ஏமாற்றி பணம் பறித்த இளம்பெண் சிக்கினார்

சமூகத்தில் முக்கிய பதவிகளை வகிக்கும் நபர்களை நுட்பமாக மிரட்டி பணத்தை சுரண்டும் அநுராதபுரம் பிரதேசத்தை பெண் ஒருவர் தொடர்பில் தகவல் வௌியாகியுள்ளது.

இன்றைய அத தெரண உக்குஸ்ஸாவின் வெளிப்படுத்தல் அது பற்றியதாகும்.

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் பிரபல வைத்தியர் ஒருவர் சிகிச்சைக்கு வரும் பெண்களை தேவையில்லாமல் தொடுவதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதைப் பார்த்த மருத்துவர் பேஸ்புக்கில் உள்ள நண்பர்களிடம் இதை அகற்ற ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார், மேலும் ஒரு பெண்ணும் அதை அகற்ற முன்வந்தார்.

உயர் பதவியில் இருப்பவர்களை ஏமாற்றி பணம் பறித்த இளம்பெண் சிக்கினார்

குறித்த பெண், முகநூலில் இருந்து பதிவை நீக்க மருத்துவரிடம் பணம் கேட்டுள்ளார்.

இதன்படி குறித்த மருத்துவர் 30 லட்சத்திற்கும் அதிகளவான பணத்தை பகுதி பகுதியாக அந்த பெண்ணுக்கு வழங்கியிருந்தார்.

ஆனால் அந்தச் சம்பவம் நடந்து சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு ஃபேஸ்புக் பக்கத்தில் வைத்தியரை அவமதிக்கும் பதிவு ஒன்று பரவியுள்ளது.

அதன்படி, முன்பு அவருக்கு உதவிய பெண் மீது மருத்துவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர், இது தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் வைத்தியர் முறைப்பாடு அளித்துள்ளார்.

வைத்தியருக்கு உதவிய பெண் பல பிரபலமானவர்களுடன் தொடர்புகளைக் கொண்டவராக குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது கணவரை ஜனாதிபதி ஊடகப் பிரிவில் உயர் பதவியில் இருப்பவர் என அறிமுகப்படுத்தும் குரல் பதிவையும் காட்டியுள்ளார்.

அவர் இலங்கை நாடாளுமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகக் காட்டும் அதிகாரப்பூர்வ அடையாள அட்டையையும் தயாரித்திருந்தார்.

கில்மிசா போட்டியில் இருந்து விலக்கல்|கில்மிசாவுக்கு சதி|kilmisha song|kilmisha saregamapa today episode
Posted in அசானி asani saregamapa songs இலங்கை செய்திகள் கில்மிசா பாடல் kilmisha zee tamil

கில்மிசா போட்டியில் இருந்து விலக்கல்|கில்மிசாவுக்கு சதி|kilmisha song|kilmisha saregamapa today episode


கில்மிசா போட்டியில் இருந்து விலக்கல்|கில்மிசாவுக்கு சதி|kilmisha song|kilmisha saregamapa today episode

கில்மிசா சிரிக்காம பாடல் போட்டியில் அசதி வந்தாக ,அனால் இலங்கை குயில் கில்மிசா கல்வரே கல்வரே என்ற பாடலை இவ்வாரம் பாடி இருந்தாக ,அதிலேயே அவர் சதிகள் மூலம் கவிழ்க்க .பட்டுளளார்

kilmishasongs #kilmisha

எஹலியகொட OIC துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

எஹலியகொட OIC துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு

எஹலியகொட OIC துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு

எஹலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனது உத்தியோகபூர்வு குடியிருப்புக்குள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தற்கொலையா அல்லது கொலையா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்

இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஒரு வருடத்தில் 1,135 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டதாக தொழுநோய் பிரச்சாரம் அறிவிக்கிறது.

செப்டம்பர் மாதத்தில் மட்டும் 175 தொழுநோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதன் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர குறிப்பிட்டுள்ளார்.

புதிய நோயாளர்களை அடையாளம் காண, அதிக நோயாளர்கள் பதிவாகும் பகுதிகளை வரை படமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிபுணர் பிரசாத் ரணவீர குறிப்பிட்டுள்ளார்.

மின்சார கட்டணம் அதிகரிப்பு மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள்
Posted in இலங்கை செய்திகள்

மின்சார கட்டணம் அதிகரிப்பு மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள்

மின்சார கட்டணம் அதிகரிப்பு மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள்

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரின் தீர்மானத்திற்கு மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

மின்சார சபையின் முன்மொழிவுகளுக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு ஒப்புதல் அளிக்கத் தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் காணி ஒன்றில் கிளிநொச்சியில் புதையல்
Posted in இலங்கை செய்திகள்

தனியார் காணி ஒன்றில் கிளிநொச்சியில் புதையல்

தனியார் காணி ஒன்றில் கிளிநொச்சியில் புதையல்

கிளிநொச்சி திருநகர் பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கூறி நேற்று அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

17 அடிவரை அகழ்வு நடைபெற்ற போதிலும், எவையும் சிக்கவில்லை. அகழ்வுப் பணியின் போது தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், கிராம சேவையாளர் பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் முன்னிலையில் இருந்தனர்.

தனியார் காணி ஒன்றில் கிளிநொச்சியில் புதையல்

இரண்டு கனரக இயந்திரங்கள் மூலம் அகழ்வு பணி நடைபெற்றது. இதன் போது எந்தவித தடயங்களும் கிடைக்காத நிலையில் பணி இடைநிறுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியான பணி நாளை 9.00 மணியளவில் மீண்டும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

காணாமல் போன மாணவர்கள் கண்டுபிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

காணாமல் போன மாணவர்கள் கண்டுபிடிப்பு

காணாமல் போன மாணவர்கள் கண்டுபிடிப்பு


புகையிலை மற்றும் சுண்ணாம்பு வைத்திருந்த போது அதிபரால் கண்டிக்கப்பட்ட நாத்தாண்டிய பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை

ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவர்கள் இருவர், காணாமல் போன நிலையில் குருநாகல் புத்தளம் வீதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

காணாமல் போன மாணவர் ஒருவரின் உறவினர் வீட்டிலேயே குறித்த மாணவர்கள் இருவரும் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இரண்டு மாணவர்களும் காணமல் போனதைப் பற்றி, ஒரு மாணவனின் தாயும் மற்றைய மாணவனின் தந்தையும் நேற்று (19) நள்ளிரவு மாரவில தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

காணாமல் போன மாணவர்கள் கண்டுபிடிப்பு

புகையிலை மற்றும் சுண்ணாம்பு போன்றவற்றை வைத்திருந்த நிலையில், பிடிப்பட்டதையடுத்து அதுபற்றி பாடசாலை அதிபர் அந்த இரண்டு மாணவர்களையும் கண்டித்ததாகவும், அதனையடுத்து அவ்விருவரும்

அழுதுகொண்டிருந்ததாகவும் மாணவர்களின் பெற்றோர்கள் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

மாரவில தலைமையக பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று காணாமல் போன நிலையில் மீட்கப்பட்ட இரு மாணவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் , அவர்களை பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்

லலித் கொத்தலாவல காலமானார்
Posted in இலங்கை செய்திகள்

லலித் கொத்தலாவல காலமானார்

லலித் கொத்தலாவல காலமானார்

செலிங்கோவின் முன்னாள் தலைவரும் செலான் வங்கியின் ஸ்தாபக தலைவருமான லலித் கொத்தலாவல (84 வயது) காலமானார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார்.

பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்
Posted in இலங்கை செய்திகள்

உணவகம் பேக்கரி பொருட்களின் விலைகளில் மாற்றம்

உணவகம் பேக்கரி பொருட்களின் விலைகளில் மாற்றம்

மின்கட்டண உயர்த்தப்படுவதாக வெளியான அறிவிப்பைத் தொடர்ந்து பேக்கரி மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளை திருத்துவது குறித்து பரிசீலிக்க உணவகங்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

மின்சார கட்டண திருத்தத்தின் மூலம் தமது உற்பத்திகளின் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

உணவகம் பேக்கரி பொருட்களின் விலைகளில் மாற்றம்

கலந்துரையாடலுக்கு பிறகு, விலை திருத்தம் செய்யும் முறை அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

மின்சார கட்டணத்தை 18 வீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

திருத்தப்பட்ட கட்டணங்கள் ஜூன் 30, 2024 வரை அமுலில் இருக்கும் என்பதுடன், இது இந்த ஆண்டுக்கான மூன்றாவது மின் கட்டணத் திருத்தமாகும்.

வீடியோ

ஹர்த்தாலால் முடங்கியது யாழ் நகர்
Posted in இலங்கை செய்திகள்

ஹர்த்தாலால் முடங்கியது யாழ் நகர்

ஹர்த்தாலால் முடங்கியது யாழ் நகர்


தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று (20) வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்திற்கு

யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பூரண ஆதரவை வழங்கியுள்ளன. இதனால் யாழ்ப்பாண நகரம் முற்றாக முடங்கியுள்ளது.

தனியார் பேருந்து சேவை அனைத்தும் முடங்கியுள்ளன. இலங்கை போக்குவரத்து சபை பேருந்து அங்காங்கே சேவையில் ஈடுபடுவதை

அவதானிக்க முடிந்தது.தவணைப் பரீட்சைகள் காரணமாக பாடசாலைகள் இயங்கியதையும் அவதானிக்க முடிந்தது.

ஹர்த்தாலால் முடங்கியது யாழ் நகர்

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த பொது போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்தன.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ப. சரவணராஜா, அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு பதவியிலிருந்து இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டதை எதிர்த்து வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பஸ் மற்றும் பவுஸர் விபத்தில் 6 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

கற்பிட்டி விபத்தில் சிறுவன் பலி

கற்பிட்டி விபத்தில் சிறுவன் பலி

கற்பிட்டி – நுரைச்சோலை ஜூம்ஆ மஸ்ஜிதுக்கு முன்பாக வியாழக்கிழமை (19) இரவு இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் ஐந்து வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

கற்பிட்டி – தலவில பகுதியைச் சேர்ந்தவர்களே இந்த விபத்தில் காயமடைந்துள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

கற்பிட்டி பகுதியிலிருந்து பாலாவியை நோக்கிப் பயணித்த மகேந்திர ரக லொறியொன்றும், எதிர்த் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கற்பிட்டி விபத்தில் சிறுவன் பலி

உயிரிழந்த சிறுவனின் தாய் தொழில் நிமித்தம் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், தனது தந்தையோடு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த ஐந்து வயது சிறுவன் உட்பட மூவர் குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த சிறுவன் உட்பட மூவரையும் சிகிச்சைக்காக அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதன்போது, காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் தெரிவித்தார்.

மேலும், விபத்தில் படுகாயமடைந்த இருவரும் புத்தளம் தள வைத்தியசாலையில் இருந்து, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் கூறினார்.

இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட இருவரில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோட்டார் சைக்கிள் சாரதி, முறையற்ற வகையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கற்பிட்டி விபத்தில் சிறுவன் பலி

இந்த விபத்து சம்பவம் இடம்பெற்ற விதம் பற்றி வீதியோரத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.ரி.வி கமராவிலும் பதிவாகியுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி சுனில் தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சீனா பறந்த ரணில் ஜி ஜின்பிங்கை சந்தித்தார்
Posted in இலங்கை செய்திகள்

சீனா பறந்த ரணில் ஜி ஜின்பிங்கை சந்தித்தார்

சீனா பறந்த ரணில் ஜி ஜின்பிங்கை சந்தித்தார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது சீன விஜயத்தின் போது, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சற்று முன்னர் சந்தித்துள்ளார்.

சீனாவின் பீஜிங் நகரில் இன்று வெள்ளிக்கிழமை காலை, இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

வீடியோ

இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை மின்சார சபை மின் கட்டணம் அதிகரிப்பு

இலங்கை மின்சார சபை மின் கட்டணம் அதிகரிப்பு

இலங்கை மின்சார சபை இன்று (20) முதல் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்றுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட கட்டணமானது ஒக்டோபர் 20, 2023 முதல் ஜூன் 30, 2024 வரை அமுலில் இருக்கும்.

இலங்கை மின்சார சபை மின் கட்டணம் அதிகரிப்பு

மின் கட்டணத்தை 18 சதவீதம் உயர்த்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த வருடத்தில் இவ்வாறு மின் கட்டணம் உயர்த்ப்படுவது இது மூன்றாவது தடவையாகும்.

ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கை மக்களின் மேல் மேலும் சுமையை சுமத்தும் வகையில் இந்த மின் கட்டண அதிகரிப்பு காணப்படுகின்றது.

கொழும்பின் பல பகுதிகளுக்கு 10 மணித்தியால நீர் வெட்டு
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பின் சில பகுதிகளில் நாளை நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை மாலை 5.00 மணி முதல் மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.