மேலதிக வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவுடன் தடை
Posted in இலங்கை செய்திகள்

மேலதிக வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவுடன் தடை

மேலதிக வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவுடன் தடை

மேலதிக வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவுடன் தடை ,கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், செயலமர்வுகள்

மற்றும் கருத்தரங்குகள் என்பன நாளை (19) நள்ளிரவுக்குப் பின்னர் நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சையானது எதிர்வரும் 25ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிளவுபடுத்தும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி
Posted in இலங்கை செய்திகள்

பிளவுபடுத்தும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி

பிளவுபடுத்தும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி

பிளவுபடுத்தும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி ,இலங்கையில் பிளவுபடுத்தும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவையை நியமித்ததன் பின்னர் ஆற்றிய உரையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

“இலங்கையின் அரசியல் கலாச்சாரம் நீண்ட காலமாக வடக்கை தெற்கிற்கு எதிராகவும் அதற்கு நேர்மாறாகவும் நிறுத்தும் முயற்சிகளால் வரையறுக்கப்படுகிறது.

“இருப்பினும், பிளவுபடுத்தும் அரசியல் இனியும் ஆட்சி செய்யாது என்பதை இந்தத் தேர்தல் காட்டுகிறது. இது அனைத்து மக்களின் அபிலாஷைகளையும் வெற்றிகரமாக ஒரே மையத்திற்கு கொண்டு வந்துள்ளது,” என்றார்.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு வாக்களித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் நன்றி தெரிவித்ததுடன், இலங்கை

புலம்பெயர்ந்தோர் மற்றும் இளம் சமூக ஊடக ஆர்வலர்கள் தேர்தலின் போது ஆற்றிய பங்களிப்புகள் மற்றும் ஆதரவினையும் மேற்கோள் காட்டினார்.

சற்றுமுன் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்
Posted in இலங்கை செய்திகள்

சற்றுமுன் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்

சற்றுமுன் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்

சற்றுமுன் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் சற்றுமுன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

முதலாவதாக கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

பிரதமர் ஹரிணி – கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார்.


விஜித ஹேரத் – வெளிநாட்டமைச்சு, வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலா அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
பேராசிரியர் சந்தன அபேரத்ன – பொதுநிர்வாகம் , மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.


பேராசிரியர் ஹர்ஷன நாணயக்கார – நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
சரோஜா சாவித்ரி போல்ராஜ் – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.


கே.டி.லால்காந்த – விவசாயம் , கால்நடை , நீர்ப்பாசனம் , காணி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
அநுர கருணாதிலக – நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.


இராமலிங்கம் சந்திரசேகர் – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
பேராசிரியர் உபாலி பன்னிலகே – கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.


சுனில் ஹந்துன்நெத்தி – கைத்தொழில், தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
ஆனந்த விஜேபால – பொதுமக்கள் பாதுகாப்பு ,பாராளுமன்ற விவகார அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.


பிமல் நிரோஷன் ரத்நாயக்க – போக்குவரத்து , நெடுஞ்சாலைகள், துறைமுக, சிவில் விமான சேவை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி – புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.


சமந்த வித்யாரத்ன – பெருந்தோட்ட ., சமூக அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
நளிந்த ஜெயதிஸ்ஸ – சுகாதாரம் , ஊடகம் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
சுனில் குமார கமகே – இளைஞர் விவகாரம் ,விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.


வசந்த சமரசிங்க – வர்த்தக , வாணிப , உணவுப்பாதுகாப்பு , கூட்டுறவு அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன – விஞ்ஞானம் , தொழிநுட்பம் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.


பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ – தொழில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
குமார ஜெயக்கொடி – வலுசக்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
தம்மிக்க பட்டபெந்தி – சுற்றாடல் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

ஆசிரியைகளால் மோசமாக தாக்கப்பட்ட மாணவி மரணம்
Posted in இலங்கை செய்திகள்

ஆசிரியைகளால் மோசமாக தாக்கப்பட்ட மாணவி மரணம்

ஆசிரியைகளால் மோசமாக தாக்கப்பட்ட மாணவி மரணம்

ஆசிரியைகளால் மோசமாக தாக்கப்பட்ட மாணவி மரணம் ,வென்னப்புவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 2 ஆசிரியைகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் பாடசாலை மாணவி ஒருவர் மூன்று மாதங்களுக்கு மேலாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

இதன்படி, சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட 2 ஆசிரியைகளும் மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்

முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வென்னப்புவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்றுவந்த குறித்த மாணவி, வகுப்பறையை விட்டு வேறொரு மாணவியுடன் வெளியேறியமை தொடர்பில்,


வகுப்பு ஆசிரியையுடன் இணைந்து மற்றுமொரு ஆசிரியையினால் தாக்கப்பட்டதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளின் பின்னர், சந்தேக நபர்களான ஆசிரியைகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுக் கடந்த செப்டம்பர் 13 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த மாணவி சிகிச்சை பலனின்றி அண்மையில் உயிரிழந்தார். இதையடுத்து, இரண்டு ஆசிரியைகளும் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.

அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை
Posted in இலங்கை செய்திகள்

அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை

அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை

அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை ,ஒற்றையாட்சிக்கு எதிராகவே வட கிழக்கு தமிழ் மக்கள் வாக்கrpளித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 80 ஆயிரம் வாக்குகள் மட்டும் தான் கிடைத்தது

ஆனால் சமஷ்டியை வலியுறுத்தும் தமிழ் தரப்புகளுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன. EPDP மற்றும் அங்கஜன் போன்ரோரின் வாக்குகளே NPPகு கிடைக்கப் பெற்றுள்ளது அவர்களை மக்கள்

நிராகரித்துள்ளனர் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.

வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே இதை குறிப்பிட்டார்.

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகள் முழு நாட்டிற்கும் தமிழீழ மக்களுக்கும் பல செய்திகளை சொல்லியுள்ளது. தமிழ் மக்கள் வழங்கிய

தீர்ப்பை ஏற்றுக்கொள்கின்றோம். தோல்விகள் பின்னடைவுகள் புதிதல்ல. மீண்டும் எழுந்து நிற்போம்.

தமிழ்த் தேசியத்தை எவரும் பேச கூடாது என்று அர்த்தமல்ல. தமிழ்த் தேசியம் தொடர்பில் அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை.

மக்களின் தீர்ப்பின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுங்கள்.

நிதி நெருக்கடி தொடர்பில் பத்திரிகை செய்தி மூலம் அறிந்து கொண்ட உள்ளூர் மற்றும் புலம்பெயர் வாழ் தமிழர்கள் தங்களால் முடிந்த அளவு நிதி உதவிகளை செய்திருந்தனர்.

நிதி உதவிகளை அனுப்பியிருந்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன் மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தியிருந்தது.

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்பதே மக்கள் தீர்ப்பு.

தமிழீழத்திலே சிங்கள இனவாத கட்சிகளின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் ஓரணியாக ஒன்றுபட வேண்டும் என்றார்.

தேசியப்பட்டியல் எம்.பிகள் குறித்து ஆணைக்குழுவின் விளக்கம்
Posted in இலங்கை செய்திகள்

தேசியப்பட்டியல் எம்.பிகள் குறித்து ஆணைக்குழுவின் விளக்கம்

தேசியப்பட்டியல் எம்.பிகள் குறித்து ஆணைக்குழுவின் விளக்கம்

தேசியப்பட்டியல் எம்.பிகள் குறித்து ஆணைக்குழுவின் விளக்கம் ,தேசியப் பட்டியலில் இருந்து 10ஆவது பாராளுமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட நபர்களின் பெயர்களை சில கட்சிகள் இன்னும் அனுப்பவில்லை என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, சில கட்சிகள் வழங்கிய பெயர்களை அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, தொகுதி மட்டத்தில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி

அறிவித்தலை வெளியிடுவதற்கு உரிய பெயர்கள் அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்களைத் தவிர வேறு நபர்களை தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு நியமிக்க முடியாது எனவும், தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

IMF இலங்கை விஜயம்
Posted in இலங்கை செய்திகள்

IMF இலங்கை விஜயம்

IMF இலங்கை விஜயம்

IMF இலங்கை விஜயம் ,இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவொன்று நவம்பர் 17 முதல் 23 வரை கொழும்பிற்கு விஜயம் செய்யவுள்ளது.

IMF இன் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழான இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வை இக்குழு நடாத்தவுள்ளதாக, IMF பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதையும் நாடு எதிர்நோக்கும் நிதி சவால்களை எதிர்கொள்வதையும் இலக்காகக் கொண்ட

சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதில் இந்த மீளாய்வு ஒரு முக்கியமான படியாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதித் திட்டம் இலங்கையின் பொருளாதார மீட்பு முயற்சிகளை எளிதாக்குவதற்கு தேவையான நிதி உதவி மற்றும் கொள்கை வழிகாட்டல்களை வழங்குகிறது

டிரம்புடன் ஒத்துழைக்கத் தயார் சீன ஜனாதிபதி
Posted in இலங்கை செய்திகள்

டிரம்புடன் ஒத்துழைக்கத் தயார் சீன ஜனாதிபதி

டிரம்புடன் ஒத்துழைக்கத் தயார் சீன ஜனாதிபதி

டிரம்புடன் ஒத்துழைக்கத் தயார் சீன ஜனாதிபதி ,எதிர்வரும் ஜனவரி மாதம் ஓய்வுபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (16) இடம்பெற்றுள்ளது.

பெருவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் போது இந்த சந்திப்பு நடந்தது.

இதன்போது அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்புடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக சீன அதிபர் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், டிரம்பின் முதல் பதவிக் காலத்தில், சீன-அமெரிக்க உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன, மேலும் கோவிட் ஒரு சீன வைரஸ் என்று டிரம்ப்

கூறிய பிறகு, அந்த உறவுகள் வீழ்ச்சியடையும் நிலையை எட்டியமை குறிப்பிடத்தக்கது.

கண்காணிப்பாளர்களுக்கு அலைபேசி எடுத்துச் செல்ல தடை
Posted in இலங்கை செய்திகள்

கண்காணிப்பாளர்களுக்கு அலைபேசி எடுத்துச் செல்ல தடை

கண்காணிப்பாளர்களுக்கு அலைபேசி எடுத்துச் செல்ல தடை

கண்காணிப்பாளர்களுக்கு அலைபேசி எடுத்துச் செல்ல தடை ,இம்முறை, கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சை நடைபெறும் பரீட்சை

நிலையங்களுக்குள், உதவி அதிபர் உட்பட கண்காணிப்பு ஆசிரியர்களுக்கு அலைபேசிகளை எடுத்துச் செல்லதடை விதிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை மையத்தின் நிலைய அதிகாரி மற்றும் மேலதிக கண்காணிப்பாளர் மட்டுமே அலைபேசிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.

கடந்த காலங்களில் எழுந்த பிரச்சினைகள் காரணமாக, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், பரீட்சை காலத்தில் தேர்வு கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, பரீட்சை திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக, மாகாண மற்றும் பிராந்திய அலுவலகங்களின் அதிகாரிகளும் கண்காணிப்புக்கு ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

ஒரு கண்காணிப்பாளர் 15 நாட்களில் 20 பரீட்சை மையங்களை கண்காணிக்க வேண்டும்

ஜனாதிபதியை வாழ்த்தினார் இந்திய உயர்ஸ்தானிகர்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியை வாழ்த்தினார் இந்திய உயர்ஸ்தானிகர்

ஜனாதிபதியை வாழ்த்தினார் இந்திய உயர்ஸ்தானிகர்

ஜனாதிபதியை வாழ்த்தினார் இந்திய உயர்ஸ்தானிகர் ,பொதுத் தேர்தலில் விசேட வெற்றியை பதிவு செய்துள்ள தேசிய மக்கள் சக்திக்கு வாழ்த்து

தெரிவிப்பதற்காக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துள்ளார்.

அருகிலுள்ள ஜனநாயக நாடாக தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ள ஆணைக்காக இந்தியா வாழ்த்து தெரிவிப்பதுடன் இருநாட்டு மக்களின் நலனுக்காக

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்

10வது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட எம்.பி.க்களின் பதிவு
Posted in இலங்கை செய்திகள்

10வது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட எம்.பி.க்களின் பதிவு

10வது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட எம்.பி.க்களின் பதிவு

10வது பாராளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு எதிர்வரும் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக, பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார்.

இதன்போது, நாடாளுமன்ற முறை, பேரவையின் பணிகள், குழுக்களின் பணிகள் குறித்து விளக்கமளிக்கப்படும் என்றார்.

மேலும், 10வது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட எம்.பி.க்களின் பதிவு எதிர்வரும் 18, 19 மற்றும் 20ஆம் திகதிகளில் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

அந்த நடவடிக்கைகளுக்காக அதிகாரிகள் குழுக்கள் தயார்படுத்தப்படும் என்றும் குலரத்ன கூறினார்.

இந்த நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க பாராளுமன்ற ஊழியர்களின் விடுமுறை 18 முதல் 22 வரை இரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், கூறினார்

எத்தனை அமைச்சர்கள் தெரியுமா அனுரா அரசில்
Posted in இலங்கை செய்திகள்

எத்தனை அமைச்சர்கள் தெரியுமா அனுரா அரசில்

எத்தனை அமைச்சர்கள் தெரியுமா அனுரா அரசில்

எத்தனை அமைச்சர்கள் தெரியுமா அனுரா அரசில் ,எதிர்வரும் திங்கட்கிழமை ஆளும் அனுரா அரசில் 25 அமைச்சர்கள் நியமிக்க படவுள்ளதாக அந்த அரசை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன .

22 மில்லியன் மக்களுக்கு 25 மைச்சர்கள் வழிகாட்டிகளாக இருந்து நாதரை கட்டி காப்பாற்ற போகின்றனர் .

இந்த விடயம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .

மக்களுக்கு வழங்க பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில் இந்த தெரிவு இடம்பெறும் எனவும் ,மக்களுக்கு உரிய எதிர் பரப்புக்குள் பூர்த்தி செய்யப்படும் என எதிர் பார்க்க படுகிறது .

மக்கள் ஆதரவின்றி பாராளுமன்றம் செல்லும் நாமல்
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் ஆதரவின்றி பாராளுமன்றம் செல்லும் நாமல்

மக்கள் ஆதரவின்றி பாராளுமன்றம் செல்லும் நாமல்

மக்கள் ஆதரவின்றி பாராளுமன்றம் செல்லும் நாமல் ,நடந்து முடிந்த ஒன்பதாவது பாராளுமன்ற தேர்தலின் அடைப்படையில் கிடைக்க பெட்ரா வாக்கு முடிவுகளின் அடைப்படையில் மகிந்த மகன் நாமல் இராஜபக்ச தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்கின்றார் .

தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லும் இவருக்கு மக்கள் மிக பெரும் ஆதரவை நல்கி வருகின்றனர் என அந்த கட்சி தெரிவித்துள்ளது .

தேர்தலுக்கு பின்னரான காலம் குறித்து விசேட அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

தேர்தலுக்கு பின்னரான காலம் குறித்து விசேட அறிவிப்பு

தேர்தலுக்கு பின்னரான காலம் குறித்து விசேட அறிவிப்பு

தேர்தலுக்கு பின்னரான காலம் குறித்து விசேட அறிவிப்பு ,பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு

அமைதியான காலம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளனர்.

மேலும், தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் நாடு முழுவதும் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு வார காலப்பகுதியில், பொது இடங்களில் எந்தவிதமான கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் பேரணியை நடத்த முடியாது.

மேலும், நாடு முழுவதும் ரோந்து பயணங்களில் ஈடுபடுவதன் மூலம் தேவையான பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

புலனாய்வு அதிகாரிகள் பணியில் உள்ளனர். பிரத்தியேகமாக அடையாளம் காணப்பட்ட பொலிஸ் பிரிவுகளில் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முந்திய காலப்பகுதியில் தேர்தல் சட்டத்தை மீறிய 581 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அர்ச்சுனாட வெற்றி உணவு வழங்கி கொண்டாடிய பெண்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனாட வெற்றி உணவு வழங்கி கொண்டாடிய பெண்

அர்ச்சுனாட வெற்றி உணவு வழங்கி கொண்டாடிய பெண்

அர்ச்சுனாட வெற்றி உணவு வழங்கி கொண்டாடிய பெண் ,அர்ச்சுனாட வெற்றிக்காக வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் சார்பாக முதியவர்களுக்கு உணவு வழங்கி ,அந்த வெற்றியை கொண்டாடி இருக்கிறார் டயானி என்கிற உறவு .

யாழ்ப்பாணம் கிளிநொச்சி பகுதியில் போட்டியிட்ட மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் ,ஒன்பதுதாவது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார் .

இதில் அவர் வெற்றி பெற்றதை அடுத்தே தற்பொழுது ,முதோயார் இல்லத்தில் உள்ள ,பிள்ளைகளினால் கைவிட பட்ட இவர்க்ளுக்கு ,உணவை வழங்கி அவர்களை மகிழ்வித்து தனது அன்பை பகிர்ந்துள்ளார் டயானி என்கின்ற உறவு .

அவருக்கு எமது வாழ்த்துக்களையும் பாரட்டுக்கையு எதிரி இணையமும் ,வன்னி மைந்தன் டிக் டாக் தளமும் தெரிவித்து கொள்கிறது .

அர்ச்சுனாட வெற்றி உணவு வழங்கி கொண்டாடிய பெண்
அர்ச்சுனாட வெற்றி உணவு வழங்கி கொண்டாடிய பெண்
அர்ச்சுனாட வெற்றி உணவு வழங்கி கொண்டாடிய பெண்
அர்ச்சுனாட வெற்றி உணவு வழங்கி கொண்டாடிய பெண்
அர்ச்சுனாட வெற்றி உணவு வழங்கி கொண்டாடிய பெண்
அர்ச்சுனாட வெற்றி உணவு வழங்கி கொண்டாடிய பெண்
சுமந்திரன் படு தோல்வி விரட்டிய மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

சுமந்திரன் படு தோல்வி விரட்டிய மக்கள்

சுமந்திரன் படு தோல்வி விரட்டிய மக்கள்

சுமந்திரன் படு தோல்வி விரட்டிய மக்கள் ,நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் சுமந்திரன் படு தோல்வியை சந்தித்துள்ளார் .

மக்கள் அவரை ஓட ஓட விரட்டியடித்துள்ளனர் .

தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்து சிதைத்த சுமந்திரன் ,அதே தமிழ் மக்களினால் இம்முறை விரட்டியடிக்க பட்டுள்ளார் .

மக்கள் விரோத போக்கை கடைபிடித்து ,மக்கள் வெறுப்பை சந்தித்த நிலையில் படு தோல்வியை சந்தித்துள்ளார் .

எனினும் பின் கதவு வழியாக பாராளுமன்ற்ம் இவர் நுழைய கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

அர்ச்சுனா வெற்றி பெற்றார்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா வெற்றி பெற்றார்

அர்ச்சுனா வெற்றி பெற்றார்

அர்ச்சுனா வெற்றி பெற்றார் ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஒரு ஆசனத்தை பெற்றுள்ளார் .

இருபத்தி ஏழாயிரம் வாக்குகளையோ பெற்று வெற்றி பெற்றுள்ளார் .ஏனையவர்கள் தோல்வியை தழுவி உள்ளனர் .

அர்ச்சுனா மூன்று ஆசனத்தை பெற்று மகத்தான வெற்றியை பெறுவார் என எதிர் பார்க்க பட்ட நிலையில் இந்த படு தோல்வி இடம்பெற்றுள்ளது .

வடகிழக்கில் தமிழரசு கட்சி 7 ஆசனம்
Posted in இலங்கை செய்திகள்

வடகிழக்கில் தமிழரசு கட்சி 7 ஆசனம்

வடகிழக்கில் தமிழரசு கட்சி 7 ஆசனம்

வடகிழக்கில் தமிழரசு கட்சி 7 ஆசனம் ,வடகிழக்கு ந்தமிழர் பகுதியில் இலங்கை தமிழரசு கட்சி ஏழு ஆசனத்தை பெற்று சுருண்டுள்ளது .

யாழ்மாவட்டம் தொகுதியில் சிறிதரன் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார் ,ஏனையவர்கள் பலத்த தோல்வியை தழுவி வீடு சென்றுள்ளனர் .

தனது கோட்டையை மட்டும் சிறிதரன் தக்க வைத்து செயல் பட்டுள்ளது ,இந்த வெற்றியின் மூலம் மீளவும் உறுதியாகியுள்ளது .

5 கட்சிகளுக்கு வன்னியில் ஆசனம்
Posted in இலங்கை செய்திகள்

5 கட்சிகளுக்கு வன்னியில் ஆசனம்

5 கட்சிகளுக்கு வன்னியில் ஆசனம்

5 கட்சிகளுக்கு வன்னியில் ஆசனம் ,0 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP)- 39,894 வாக்குகள் (2 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 32,232 வாக்குகள் (1 ஆசனம்)


இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 29,711 வாக்குகள் (1 ஆசனம்)
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 21,102 வாக்குகள் (1 ஆசனம்)
இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP) – 17,710 வாக்குகள் (1 ஆசனம்)

பெரும் பான்மை வெற்றியை பெற்றுள்ள அனுரா
Posted in இலங்கை செய்திகள்

பெரும் பான்மை வெற்றியை பெற்றுள்ள அனுரா

பெரும் பான்மை வெற்றியை பெற்றுள்ள அனுரா

பெரும் பான்மை வெற்றியை பெற்றுள்ள அனுரா ,நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இதுவரை வௌியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) மொத்தம் 123 இடங்களை வென்றுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 19 ஆசனங்களில் 16 ஆசனங்களைக் கைப்பற்றியதன் பின்னர், தேசிய மக்கள் சக்தியின் பெரும்பான்மை பலம் உறுதியாகியுள்ளது.

இதுவரை தேசிய மக்கள் சக்தி 6,842,223 வாக்குகளைப் பெற்றுள்ளது. இது இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 61.73% ஆகும்.