இராமேஸ்வரம் மீனவர்கள் 30பேருக்கு விளக்கமறியல்
Posted in இலங்கை செய்திகள்

இராமேஸ்வரம் மீனவர்கள் 30பேருக்கு விளக்கமறியல்

இராமேஸ்வரம் மீனவர்கள் 30பேருக்கு விளக்கமறியல்

இராமேஸ்வரம் மீனவர்கள் 30பேருக்கு விளக்கமறியல் ,இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 30 இராமேஸ்வரம்

மீனவர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் இராமேஸ்வரம் பாம்பன் பகுதிகளை சேர்ந்த 30 மீனவர்கள் நெடுந்தீவுக் கடற்பரப்பில் 4 படகில் மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த

நிலையில் கடற்படையினரால் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர் .

வழக்கை விசாரித்த மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்

இராமேஸ்வரம் தலைமன்னார் கப்பல் போக்குவரத்து விரைவில்
Posted in இலங்கை செய்திகள்

இராமேஸ்வரம் தலைமன்னார் கப்பல் போக்குவரத்து விரைவில்

இராமேஸ்வரம் தலைமன்னார் கப்பல் போக்குவரத்து விரைவில்

இராமேஸ்வரம் தலைமன்னார் கப்பல் போக்குவரத்து விரைவில் மீனவர்களின் வாழ்வாதார பிரச்னையை மனிதாபிமான முறையில் அணுக இலங்கை ஜனாதிபதியுடன் விவாதிக்கப்பட்ட போது ஒப்புக்கொள்ளப்பட்டது. இராமேஸ்வரம்- தலைமன்னார் வரை கப்பல் போக்குவரத்து துவங்கப்படும்’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்தியா வந்துள்ள இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க, டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே உறவை வலுப்படுத்துவது குறித்து, இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர்.

குறித்த சந்திப்பின் போது ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளதாவது: மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்தியாவின் சிறப்பான வரவேற்புக்கு நன்றி.

இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும். இந்திய மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சுருக்குமடி வலையால் மீன்வளம் பாதிக்கப்படும். மக்களுக்கான சேவைகளை

டிஜிட்டல் முறையில் வழங்க இந்தியா முன்வந்துள்ளது. நிதி நெருக்கடியை இலங்கை சந்தித்த போது, இந்தியா உதவி செய்தது. இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடி கூறியதாவது: மனிதாபிமான அடிப்படையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அணுக வேண்டும். ராமேஸ்வரம்- தலைமன்னார் வரை கப்பல் போக்குவரத்து துவங்கப்படும்.

இலங்கையின் வளர்ச்சி திட்டங்களுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும். இந்தியா இலங்கை உறவு வலுப்படும். பெட்ரோலியம், எரிவாயு, சூரிய ஒளி, மின்சார துறைகளில் ஒத்துழைப்பு வலுப்படும்.

நமது திட்டங்கள் அனைத்தும் இலங்கையின் வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு இயங்குகின்றன. காங்கேசன் துறைமுகத்தை புனரமைக்க நிதி உதவி அளிக்கப்படும்.

இயற்கை பேரிடரின் போதும் நிவாரணம் உள்ளிட்ட பணிகளில் ஒத்துழைப்பு அளிக்கப்படும்.

இலங்கையின் பால் வளம் மீன்வளத்துறை வளர்ச்சிக்கு இந்தியா நிதி உதவி அளிக்கும். என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.