Category: சினிமா
தமிழ் சினிமா, சினிமா செய்திகள் ,இன்றைய சினிமா செய்திகள் ,
மாப்பிள்ளை தேடும் நடிகை – தப்பி ஓடும் காதலர்கள்
மாப்பிள்ளை தேடும் நடிகை – தப்பி ஓடும் காதலர்கள்
என் திருமணம் எனக்கு ஏன் கடைசியாகத் தெரிகிறது என்று பிரபல நடிகை வரலட்சுமி கோபமாக பதிவு செய்திருக்கிறார்.
என் திருமணம் எனக்கு ஏன் கடைசியாகத் தெரிகிறது – வரலட்சுமி கோபம்
வரலட்சுமி
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். தற்போது தமிழில்
‘காட்டேரி’, ‘பாம்பன்’, ‘சேஸிங்’, ‘டேனி’, ‘பிறந்தாள் பராசக்தி’ ஆகிய படங்களிலும்,
தெலுங்கில் ‘க்ராக்’ மற்றும் கன்னடத்தில் ‘ரணம்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் வரலட்சுமி.
வரலட்சுமிக்கு திருமணம் என்று பலமுறை வதந்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் வரலட்சுமி, சந்தீப் என்ற
தொழிலதிபரை காதலித்து வருவதாக தகவல் வெளியானது. இந்தச் செய்தி
தொடர்பாக வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“எனக்குத் திருமணம் என்ற விஷயம் ஏன் எனக்கு மட்டும் கடைசியாகத் தெரிகிறது? அதே முட்டாள்தனமான வதந்திகள்.
என் திருமணத்தில் ஏன் எல்லாரும் ஆர்வமாக இருக்கிறார்கள். எனக்குத்
திருமணம் என்றால் நான் அதை என் கூரை மீது ஏறி அறிவிப்பேன். எனக்குத்
திருமணம் இல்லை. நான் சினிமாவுக்கு முழுக்குப் போடவில்லை” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா நிவாரணத்துக்காக உடைகளை ஏலம் விடும் நித்யாமேனன்
கொரோனா நிவாரணத்துக்காக உடைகளை ஏலம் விடும் நித்யாமேனன்
கொரோனா நிவாரணத்துக்காக தான் உடுத்திய உடைகளை ஏலம் விட்டு வருகிறார் நடிகை நித்யாமேனன்.
கொரோனா நிவாரணத்துக்காக உடைகளை ஏலம் விடும்
நித்யா மேனன்
மெர்சல், 24 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நித்யா மேனன். சில மாதங்களுக்கு முன் நடந்த பேஷன் நிகழ்ச்சியில் நித்யா மேனன்
பங்கேற்றார். அதில் தான் அணிந்த உடையை அவர் முதல் கட்டமாக
ஏலம் விடுகிறார். அதை தொடர்ந்து படங்களில் பயன்படுத்திய உடைகளை ஏலம் விட உள்ளார்.
இது பற்றி நித்யா மேனன் கூறியது:- ‘நான் இந்த உடையை ஏலத்திற்காக கொடுக்கப் போகிறேன். அதில் வரும் பணத்தில் 100
சதவீதமும் அப்பணம் டிரஸ்ட்டுக்கு செல்லும். அவர்கள் கிராமப்புறங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை
மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். கொரோனாவால் முடங்கியுள்ள அவர்களுக்கு பண உதவி செய்து மீண்டும் அவர்கள்
சொந்த காலிலேயே நிற்க வழி செய்யப்படுகிறது. இந்த உடையை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அது பல மாதங்கள் தயாரான
டிசைனர் உடை. அது எனக்காகவே ஸ்பெஷலாக செய்யப்பட்டது. பேஷன்
நிகழ்ச்சியில் ரேம்ப் வாக் செய்வதற்காக தான் இந்த உடை டிசைன் செய்யப்பட்டது.
இதன் புகைப்படத்தை முன்பே நான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறேன்.
நீங்கள் பார்த்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எனது தோழியும் பிரபல
டிசைனருமான காவேரி தான் இதை டிசைன் செய்தார். அவர் அழகான, இயற்கையாக தெரியும் உடைகளை தயாரிப்பவர் என்றார்.
ஹீரோக்கள் தான் அதிக சம்பளம் வாங்கனுமா? நாங்க வாங்கக் கூடாதா? நடிகை குமுறல்
ஹீரோக்கள் தான் அதிக சம்பளம் வாங்கனுமா? நாங்க வாங்கக் கூடாதா? நடிகை குமுறல்
ஹீரோக்களை போல் ஹீரோயின்களும் ஏன் அதிக சம்பளம் வாங்கக்கூடாது என நடிகை தமன்னா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹீரோக்கள் தான் அதிக சம்பளம் வாங்கனுமா? நாங்க வாங்கக் கூடாதா? – தமன்னா கறார்
தமன்னா
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார், தமன்னா. இவரை தெலுங்கில் ரவிதேஜா படத்தில்
நடிக்க அணுகினர். ஆனால் அந்த படத்தில் நடிக்க அவர் அதிக சம்பளம் கேட்டதாகவும், அந்த தொகையை கொடுக்க தயாரிப்பு
நிறுவனம் மறுத்துவிட்டதால் தமன்னா அப்படத்திலிருந்து விலகியதாக செய்திகள் பரவின.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தமன்னா, என்னை பற்றி கற்பனையான தகவல்கள் பரவி உள்ளன. படத்தில் நடிப்பது குறித்து
எனது மேலாளரிடம் படக்குழுவினர் பேசினர். ஆனால் கொரோனா பிரச்சினையால் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது. இப்போது எந்த
பட நிறுவனமும் படப்பிடிப்புக்கு தயாராகவில்லை. ரவிதேஜாவுடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது.
தமன்னா
எனவே அவரது படத்தை ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. சம்பளம் என்பது நடிகர்களின் தனிப்பட்ட விஷயம். குறிப்பிட்ட
சம்பளத்தை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பத்தை பொறுத்தது. நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று
பேசுவது ஏற்புடையது அல்ல. ஒருதலைபட்சமானது. இதே கேள்வியை நடிகரிடம் கேட்பது இல்லை.
நடிகைகள் குறிப்பிட்ட நிலையை அடைய கஷ்டப்பட்டு உழைத்து இருக்கிறார்கள். கதாநாயகனை போலவே கதாநாயகியும்
படத்துக்கு தேவை. நடிகைகள் அதிக சம்பளம் ஏன் வாங்க கூடாது? ஹீரோக்கள்
மட்டும்தான் அதிக சம்பளம் வாங்க வேண்டுமா? இவ்வாறு தமன்னா கேள்வி எழுப்பி உள்ளார்.
விஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித்
விஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித்
விஜய்யை பார்த்து அஜித் பொறாமைப்பட்டார் என்று பிரபல பாடகி
சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
விஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித் – பிரபல பாடகி
நடிகர்கள் அஜித், விஜய்
விஜய் மற்றும் அஜித் இருவரும் தமிழ் திரையுலகில் மாஸ் நடிகர்களாக,
வலம் வருகின்றனர். தங்களுக்குள் நல்ல நட்பைப் பகிர்ந்து
கொள்ளும் இருவரும் ‘ராஜாவின் பார்வையில்’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
அதன் பின்னர் இரண்டு நடிகர்களும் தங்களது தனி பாதையில் பயணித்து,
தொழில்துறையில் புதிய உயரங்களை எட்டி வருகின்றனர்.பாடகி சுசித்ரா
தற்போது பிரபல பாடகி சுசித்ரா சமீபத்திய பேட்டியில் வெளிப்படுத்திய
ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய்க்கு படங்கள்
மட்டும் அல்லாது படங்களில் இடம்பெறும் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை
பெறுவது வழக்கம். இதற்காக விஜய் மீது அஜித் பொறாமை கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
நடிகையின் காதல் முறிவுக்கு அவர் தான் காரணமா?
நடிகையின் காதல் முறிவுக்கு அவர் தான் காரணமா?
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையின் காதல் முறிவுக்கு அவர்தான்
காரணம் என்றே பலரும் பேசி வருகிறார்களாம்.நடிகையின் காதல் முறிவுக்கு அவர் தான் காரணமா?
சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்த நடிகையும், இருக்கு ஆனா இல்லை
என்று சொல்லும் இயக்குனருக்கும் காதல் இருப்பதாக ஏற்கனவே அரசல்புரசலாக
பலரும் பேசி வந்தார்களாம். இதை இருவரும் கண்டு கொல்லாமல் இருந்தார்களாம்.
ஆனால் நடிகையை திடீரென்று கல்லூரி நண்பர் ஒருவரை காதலிப்பதாக
சொன்னாராம். தற்போது அந்த காதல் முடிந்துவிட்டதாம். இதற்கு காரணம்
அந்த இயக்குனர் தான் என்று கோடம்பாக்கத்தினர் பரவலாக பேசி வருகிறார்களாம்.
அனிருத்தின் பியானோ வாசிப்புக்கு குவியும் லைக்ஸ்கள்
அனிருத்தின் பியானோ வாசிப்புக்கு குவியும் லைக்ஸ்கள்
தமிழில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் அனிருத்தின்
பியானோ வாசிப்புக்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.
அனிருத்தின் பியானோ வாசிப்புக்கு குவியும் லைக்ஸ்கள்
அனிருத்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர்
அனிருத். இவருடைய இசையில் தற்போது மாஸ்டர் திரைப்படம்
உருவாகி உள்ளது. விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தை லோகேஷ்
கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படம் ஊரடங்கு முடிந்த பிறகு வெளியாக இருக்கிறது.
அனிருத் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் அவ்வப்போது உரையாடுவார்.
தற்போது பியானோவால் ‘நீயும் நானும்… ‘ என்ற பாடலையும், ஜெர்சி படத்தின்
பின்னணி இசையையும் வாசித்து பதிவு செய்திருக்கிறார்.இந்தப் பதிவுக்கு
ஏராளமான லைக்ஸ்கள் குவிந்துள்ளது. இசை பிரியர்கள் அனைவரும்
இதை ரசித்து சிறப்பாக இருக்கிறது என்று வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள்.

துப்புரவு பணியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமிதாப் பச்சன்
துப்புரவு பணியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமிதாப் பச்சன்
துப்புரவு பணியாளர்கள் மத்தியில் தோன்றிய அமிதாப் பச்சன் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
துப்புரவு பணியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமிதாப் பச்சன்,அமிதாப் பச்சன்
இந்தி திரையுலக மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மும்பை ஜூகுவில் உள்ள தனது ‘ஜல்சா’
பங்களாவில் ரசிகர்களை சந்தித்து வந்தார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வாராந்திர ரசிகர்கள் சந்திப்பை நிறுத்தினார்.
இந்தநிலையில், ஜல்சா பங்களா வீட்டு முன் துப்புரவு பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது துப்புரவு பணியாளர்கள் முன் அமிதாப் பச்சன் தோன்றி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இந்த சந்திப்பின் போது, தெருவை சுத்தம் செய்யும் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.
வைரலாகும் ஆண்ட்ரியாவின் லிப் லாக் காட்சி
வைரலாகும் ஆண்ட்ரியாவின் லிப் லாக் காட்சி
தமிழ் சினிமாவில் நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வரும்
ஆண்ட்ரியாவின் லிப் லாக் காட்சி வைரலாகி வருகிறது.
வைரலாகும் ஆண்ட்ரியாவின் லிப் லாக் காட்சி
ஆண்ட்ரியா
தமிழ் சினிமாவில் நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் அனிருத் மற்றும்
ஆண்ட்ரியாவின் லிப் லாக் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
லிப் லாக் வீடியோ
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஆண்ட்ரியாவின் லிப் லாக் வீடியோ
ஒன்று சமூக வலை வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ
கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ’அவள்’ என்ற படத்தில் சித்தார்த்
மற்றும் ஆண்ட்ரியா இணைந்து நடித்த காட்சிகளில் ஒன்று என்று கூறப்படுகிறது.
பழைய வீடியோவை நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறார்கள்.

விஜய்யை விடாமல் துரத்தும் ராஷ்மிகா
விஜய்யை விடாமல் துரத்தும் ராஷ்மிகா
தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் பிரபலமாக இருக்கும் நடிகை ராஷ்மிகா விஜய்யை விடாமல் துரத்துவதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
விஜய்யை விடாமல் துரத்தும் ராஷ்மிகா
விஜய் – ராஷ்மிகா
தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. தமிழில் கார்த்தியுடன் இணைந்து சுல்தான் என்ற படத்தில் நடித்து
வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.
ராஷ்மிகாவுக்கு விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசை. பேட்டி கொடுக்கும் போது எல்லாம் எனக்கு பிடித்த தமிழ் ஹீரோ தளபதி
விஜய் என்கிறார். மேலும் ட்விட்டரில் யாராவது உங்களுக்கு பிடித்த கோலிவுட் நடிகர் யார் என்று கேட்டால், விஜய் பெயரை சொல்லிவிடுகிறார்.
இந்நிலையில் லாக்டவுனால் வீட்டில் முடங்கியிருக்கும் ராஷ்மிகா ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்பொழுது ஒருவர் நீங்கள் தியேட்டரில் பார்த்த முதல் படம் எது என்று கேட்டார். உடனே ராஷ்மிகா விஜய்யின் கில்லி படம் என்றார்.
இதற்கு விஜய் ரசிகர்கள் சிலர் இது பொய். ராஷ்மிகாவுக்கு விஜய் படத்தில் நடிக்க வேண்டும். அதற்காக இப்படி பொய் சொல்கிறார் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

எனக்கு பாலியல் கொடுமை லட்சுமி ராமகிருஷ்ணன்
எனக்கு பாலியல் கொடுமை லட்சுமி ராமகிருஷ்ணன்
சிறு வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
சிறுவயதில் பாலியல் கொடுமை – லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்ட பகீர் தகவல்
திரைப்படங்களில் அம்மா வேடங்களில் நடித்து பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். சில படங்களை டைரக்டும் செய்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். சிறு வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை
அனுபவம் பற்றி அவர் கூறியதாவது: “எனக்கு சிறு வயதில் நடந்த ஒரு அனுபவத்தை இப்போது நினைக்கும்போதும் மனது வலிக்கிறது
. அப்பா வயதில் இருக்கும் ஒருவர் என் முன்னால் அந்தரங்கத்தை காட்டியபடி நின்றார். ஆரம்பத்தில் அது எனக்கு புரியவில்லை.
லட்சுமி ராமகிருஷ்ணன்
வளர வளர புரிய ஆரம்பித்ததும் எவ்வளவு கேவலமான செயல் என்று மனதில் ரணம் ஏற்பட்டது. பெண் குழந்தைகளுக்கு என்ன
பாதுகாப்பு இருக்கிறது என்று நினைத்து பாருங்கள். அதே மாதிரி எனது மகள் பள்ளியில் இருந்து வரும்போது லிப்டில் ஒருவன்
ஆபாசமாக நின்றுள்ளான். சி.சி.டி.வி. கேமராவில் தேடியும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. எனது நெருங்கிய நண்பர்கள்
குடும்பத்திலும் ஒரு பெண்ணுக்கு மோசமான தொடுதல் நடந்துள்ளது.
இப்படி பல பெண்களுக்கு கொடுமைகள் நடக்கிறது”. இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்
நடிகர் விஜய்சேதுபதி மீது பா.ஜ.க புகார்
நடிகர் விஜய்சேதுபதி மீது பா.ஜ.க புகார்
இந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் விஜய்சேதுபதி மீது பா.ஜ.க.வினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
நடிகர் விஜய்சேதுபதி மீது பா.ஜ.க புகார்
விஜய்சேதுபதி
ஈரோடு மாவட்டம் கோபி போலீஸ் நிலையத்துக்கு நேற்று கோபி பா.ஜ.க.
நிர்வாகிகள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் நிலையத்தில்
ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள்
கூறியிருப்பதாவது: நடிகர் விஜய் சேதுபதி ஒரு தனியார்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.
அது மத ரீதியாகவும் தேசிய இறையாண்மைக்கு எதிராகவும், மத கலவரத்தை
தூண்டும் வகையிலும் இருந்தது. விஜய் சேதுபதியின் இந்த பேச்சால் மனவேதனை
அடைந்துள்ளோம். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு
அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர். அதன்பின்னர் பா.ஜ.க.வினர்
அங்கிருந்து கலைந்து சென்றார்கள். இதனால் கோபி போலீஸ்
நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கண்ணடித்து பிரபலமான நடிகைக்கு என்னாச்சு? இப்படி பண்ணிட்டாரே
கண்ணடித்து பிரபலமான நடிகைக்கு என்னாச்சு? இப்படி பண்ணிட்டாரே
ஒரு அடார் லவ் என்ற படத்தின் மூலம் கண்ணடித்து பிரபலமான நடிகை பிரியா வாரியாரின் திடீர் முடிவு அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கண்ணடித்து பிரபலமான நடிகைக்கு என்னாச்சு?…. திடீரென இப்படி பண்ணிட்டாரே,பிரியா வாரியர்
ஒரு அடார் லவ் என்ற மலையாள படத்தில் புருவத்தை வளைத்து சுருக்கி முக பாவனை காட்டியதன் மூலம் உலகம் முழுவதும்
பேசப்படும் நடிகையாக மாறினார் பிரியா வாரியர். பள்ளி மாணவியாக இருந்த பிரியா வாரியர், அடார் லவ் படத்தில் பள்ளி
மாணவியாகவே நடித்தார். அவர் காட்டிய முக பாவனைகள், உலகம் முழுவதும், ஒரே நாளில் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களை
பெற்று தந்தது. அவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டியது.
பிரியா வாரியர்
இந்நிலையில் திடீரென்று பிரியா வாரியார் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து விலகியுள்ளார். அதற்கான காரணம் பற்றி அவர்
தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. அதே சமயம் மற்ற சமூக வலைதள கணக்குகளில் தொடர்ந்து நீடிக்கிறார். லட்சக்கணக்கான
பாலோவர்களை இன்ஸ்டாவில் வைத்திருக்கும் பிரியா வாரியர் மீது யார் கண்ணு
பட்டுச்சோ இன்ஸ்டாவிலிருந்து விலகி விட்டாரே, என ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.

பைக்கில் ஊர் சுற்றிய சமந்தா
பைக்கில் ஊர் சுற்றிய சமந்தா
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தனது கணவருடன் பைக்கில் ஊர் சுற்றி இருக்கிறார்.
பைக்கில் ஊர் சுற்றிய சமந்தா
நடிகை சமந்தா
சென்னையைச் சேர்ந்த சமந்தா, 2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் நடிகையாக அறிமுகமானார்.
அதன்பின் சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், அவரை தெலுங்கு திரையுலகம்தான் முன்னணியில் கொண்டு வந்தது. தொடர்ந்து
அங்கு பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வீட்டிலேயே முடங்கி இருந்த சமந்தா, அவரது
கணவர் நாகசைதன்யாவுடன் பைக்கில் வெளியில் சென்றதை புகைப்படம்
எடுத்து பகிர்ந்திருக்கிறார். அந்தப் புகைப்படத்தை 15 லட்சம் பேருக்கு மேல் லைக் செய்திருப்பது ஆச்சரியம்.

வடிவேலுவின் கிண்டலை பாராட்டிய ரஜினி
வடிவேலுவின் கிண்டலை பாராட்டிய ரஜினி
காமெடி நடிகராக இருக்கும் வடிவேலுவின் கிண்டலுக்கு ரஜினிகாந்த் போனில் பாராட்டி இருக்கிறார்.
வடிவேலுவின் கிண்டலை பாராட்டிய ரஜினி
ரஜினி, வடிவேலு
நகைச்சுவை நடிகர் வடிவேலு கடந்த மாதம் திருச்செந்தூரில் அளித்த பேட்டி பரபரப்பானது. அந்த பேட்டி பற்றி வடிவேலு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் திருச்செந்தூர்ல சாமி கும்பிட்டுட்டு வெளியே வரும்போது என்கிட்ட மைக்கை நீட்டி `ரஜினி அரசியலுக்கு வந்தா நான்
கட்சியைப் பார்த்துப்பேன். முதலமைச்சரா வேறு ஒருத்தரை வைக்க போறேன்று சொல்றாரே’னு கேள்வியை கேட்டுப்புட்டாங்க.
அப்போ `ரஜினிசார் சொல்றது சரிதானே யாருக்கு அந்த மனசு வரும்.
பாராட்டுறேன் அவர் சொன்னதை வரவேற்குறேன்’னு சொல்லிட்டு நான்
பாட்டுக்கு மதுரைக்கு வந்துட்டேன். திடீர்னு ஒரு நாள் போன். என்ன வடிவேலு எப்படி இருக்கீங்க?’ன்னு ரஜினி சார் பேசுனார்.
ரொம்ப நல்லா பேசுனீங்க’னு பாராட்டுனார். அதுக்கப்புறம் ரெண்டு
http://ethirinews.com/பேரும் கொஞ்ச நேரம் மனம்விட்டு பேசிட்டு இருந்தோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆபாசமாக கமெண்ட் அடிக்கிறார்கள்…. நடிகை பரபரப்பு புகார்
ஆபாசமாக கமெண்ட் அடிக்கிறார்கள்…. நடிகை பரபரப்பு புகார்
சமூக வலைதளத்தில் ரசிகர்கள் ஆபாசமாக கமெண்ட் அடிப்பதாக இளம் நடிகை ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் ஆபாசமாக கமெண்ட் அடிக்கிறார்கள்…. நடிகை பரபரப்பு புகார்சிரிண்டா
தமிழில் வெண்ணிலா வீடு படத்தில் நடித்தவர் சிரிண்டா. கேரளாவை சேர்ந்த இவர் போர் பிரண்ட்ஸ் படத்தில் அறிமுகமாகி 22
பிமேல் கோட்டயம், 101 வெட்டிங்ஸ், தட்டத்தின் மறையத்து, மங்கலீஷ், ஆடு, லோஹம், ராணி பத்மினி உள்ளிட்ட பல படங்களில்
நடித்துள்ளார். மம்முட்டி, பகத் பாசில், நிவின் பாலி போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்தும் நடித்து இருக்கிறார்.
சிரிண்டா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடை அணிந்த தனது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அந்த
புகைப்படங்களை பார்த்து சிலர் ஆபாச கருத்துகள் பதிவிட்டனர். அவரது தோற்றம் பற்றி அவதூறான வார்த்தைகளையும்
பகிர்ந்தனர். இது சிரிண்டாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிரிண்டா
இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் கூறியதாவது: சமூக வலைத்தளத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
சுதந்திரமும் இல்லை. எனது சமூக வலைத்தள பக்கத்தில் சிலர் ஆபாசமான கருத்துகளை பதிவிடுகின்றனர். இதனை அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
நான் எந்த மாதிரியான உடைகளை அணிய வேண்டும், என்ன கருத்துகளை பதிவிட வேண்டும் என்று யாரும் எனக்கு சொல்லித்தர
தேவை இல்லை. எனது சமூக வலைத்தளத்தில் வந்து உங்கள் வக்கிரங்களை காட்ட வேண்டாம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

பாரதிராஜா மீது விசாரணை
பாரதிராஜா மீது விசாரணை
தனிமைப்படுத்தும் விதியை இயக்குனர் பாரதிராஜா மீறினாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
விதியை மீறியதாக பாரதிராஜா மீது விசாரணை
பாரதிராஜா
திரைப்பட இயக்குனர் பாரதிராஜா சென்னையில் இருந்து கடந்த வாரம் தேனிக்கு வந்தார். கொரோனா பாதிப்பு அதிகரித்து
வருவதால் சென்னை சிவப்பு மண்டல பகுதியாக உள்ளது. அங்கிருந்து வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை
செய்யப்பட்டு 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சென்னையில் இருந்து தேனிக்கு வந்த இயக்குனர் பாரதிராஜாவும் தன்னை கொரோனா பரிசோதனைக்கு
உட்படுத்திக் கொண்டார். சுகாதாரத்துறையினர் வேண்டுகோளை ஏற்று அவரும் தன்னை தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில் போடி அருகே முந்தல் சோதனை சாவடியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட சுகாதாரத்துறை அலுவலர்
ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் இயக்குனர் பாரதிராஜாவுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த
புகைப்படத்தில், கொரோனா தடுப்பு பணியின் போது குரங்கணி சென்று திரும்பிய இயக்குனர் பாரதிராஜாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் என்று கருத்தையும் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தனிமைப்படுத்தும் விதிமுறையை இயக்குனர்
பாரதிராஜா மீறினாரா? என்ற சர்ச்சையை இந்த புகைப்படம் உருவாக்கி உள்ளது. இதுகுறித்து தேனி அல்லிநகரம் நகராட்சி
சுகாதார அலுவலர் அறிவுச்செல்வத்திடம் கேட்டபோது, “இயக்குனர் பாரதிராஜா தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக்
கொண்டார். ஆனால், தனிமைப்படுத்திக் கொண்ட காலக்கட்டத்தில் குரங்கணிக்கு சென்றாரா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” என்றார்.
சிம்புவின் மனைவியை சந்திக்க காத்திருக்கிறோம் – பிரபல நடிகை
சிம்புவின் மனைவியை சந்திக்க காத்திருக்கிறோம் – பிரபல நடிகை
நடிகர் சிம்புவின் வருங்கால மனைவியை சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறோம் என்று பிரபல நடிகை கூறியிருக்கிறார்.
சிம்புவின் மனைவியை சந்திக்க காத்திருக்கிறோம் – பிரபல நடிகை
சிம்பு
நடிகர் சிம்பு சமையல் செய்யும் வீடியோ ஒன்று சமீபத்தில் சமூகவலைதளங்களில் வெளியானது. அதில், சிம்பு, பெண்களை
வேலைக்காரி மாதிரி நடத்தக்கூடாது. அவர்கள் விரும்பினால் சமையல் செய்யலாம். என் மனைவி சந்தோஷமாக இருக்க
வேண்டும் என்று தான் நினைப்பேன் என்றும் நான் உங்களை மாதிரி அல்ல என்றும் விடிவி கணேஷிடம் கூறுகிறார்.
இந்த வீடியோவைப் பதிவிட்டு கருத்து பதிவிட்டிருக்கும் நடிகை பிந்து மாதவி, சரியான கொள்கை சிம்பு, நாங்கள் எல்லோரும்
அந்தப் பெண்ணை சந்திக்க காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகை பிந்து மாதவி
சிம்புவின் இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

இப்படியா துணி துவைப்பாங்க? – பிரபல நடிகையின் வைரல் வீடியோ
இப்படியா துணி துவைப்பாங்க? – பிரபல நடிகையின் வைரல் வீடியோ
ஊரடங்கால் வீட்டில் இருக்கும் பிரபல நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
அட கடவுளே… இப்படியா துணி துவைப்பாங்க? – பிரபல நடிகையின் வைரல் வீடியோ
ரித்திகா சிங்
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங். இயல்பிலேயே கிக்
பாக்சிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா, அந்த படத்தில் அதே வேடம் என்பதால் கனகச்சிதமாக பொருந்தினார்.
இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம், பிளாக்பஸ்டர்
ஹிட்டானது. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார்.
அடுத்ததாக தமிழில், அருண் விஜய்யின் பாக்சர், அரவிந்த் சாமியின் வணங்காமுடி போன்ற படங்களில் அவர் நடிக்கிறார்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் ரித்திகா சிங், இன்ஸ்டாகிராமில் பாடிக்கொண்டே துணி துவைக்கும்
வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் என் அம்மா என்ன எதிர்பார்த்தார், ஆனால் நான் என்ன செய்துள்ளேன் என
நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்த 11 பெண்களுக்கு உதவிய விஜய்
ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்த 11 பெண்களுக்கு உதவிய விஜய்
ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடியாமல் தூத்துக்குடியில் சிக்கி தவித்த 11 பெண்களுக்கு நடிகர் விஜய் ரசிகர்கள் மூலம் உதவியுள்ளார்.
ஒரே ஒரு போன் கால்…. ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்த 11 பெண்களுக்கு உதவிய விஜய்
விஜய்
சென்னையை சேர்ந்த தேவிகா உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 11 பெண்கள் கடந்த மார்ச் மாதம் தூத்துக்குடிக்கு திருமணத்திற்காக சென்றிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென ஊரடங்கு
பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் அவர்கள் அனைவரும் தூத்துக்குடியில் மாட்டிக்கொண்டனர். அவர்களில் தேவிகா தவிர மற்ற பெண்கள் அனைவரும் 20 வயத்துக்குட்பட்டவர்களாம்.
கையில் இருந்த பணம் சில நாட்களில் செலவான நிலையில், பின்னர் பேருந்து நிலையங்களிலும், கோவில்களிலும் தங்கியிருந்த
அவர்கள், ஒரு கட்டத்தில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடினார்கள். இதையடுத்து தூத்துக்குடியில் உள்ள விஜய்
ரசிகர் மன்ற நிர்வாகியை சந்தித்து, அப்பெண்கள் தங்களது நிலையை எடுத்துக் கூறியுள்ளார்கள்.
விஜய்
உடனடியாக அவர் அகில இந்திய விஜய் ரசிகர் மன்ற தலைவர் பிசி ஆனந்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்மூலம் இந்த விஷயம் விஜய்யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. விஜய்
உடனடியாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் உள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை போனில் தொடர்பு கொண்டு, அந்த 11
பெண்களையும் சென்னைக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அரசிடம் முறையாக அனுமதி
பெற்று, அந்த 11 பெண்களும் பத்திரமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

எனக்கு பாலியல் தொல்லை- கதறும் நடிகை
எனக்கு பாலியல் தொல்லை- கதறும் நடிகை
தமிழில் கண்ணுக்குள்ளே, ராமர், திலகர், ஒரு நாள் இரவில், சூரன் ஆகிய படங்களில் நடித்தவர் அனுமோள். கேரளாவை சேர்ந்த இவர்
மலையாளத்தில் சாயில்யம், அகம், வெடிவழிபாடு, ராக் ஸ்டார், பிரமோஸ்தரம் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி
நடிகையாக இருக்கிறார். தற்போது 4 மலையாள படங்களில் நடித்து வருகிறார். ஒரு பெங்காலி படத்திலும் நடிக்கிறார்.
இந்த நிலையில் அனுமோளுக்கு சமூக வலைத்தளம் மூலம் சிலர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து அவர் தனது
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “சிலர் தங்களின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளம் மூலம் எனக்கு
அனுப்புகிறார்கள். அவர்கள் என்னை பின்தொடராமல் இருக்க சமூக வலைத்தளத்தில் தடை செய்து நான் சோர்வடைந்து விட்டேன்.
ஒருவர் தனது ஆபாச வீடியோக்களை வெவ்வேறு கணக்கில் இருந்து எனக்கு தொடர்ந்து அனுப்பி வருகிறார். இப்படி அந்தரங்க
புகைப்படங்களையும், ஆபாச வீடியோக்களையும் அனுப்பி தொல்லை கொடுப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள். இனியும்
தொடர்ந்து செய்தால் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து சட்ட நடவடிக்கை எடுப்பேன். இதுபோன்ற ஆபாச படங்களை
அனுப்பினால் பெண்களுக்கு அறுவெறுப்புத்தான் வரும். வேறு எந்த உணர்வும் ஏற்படாது”. இவ்வாறு அனுமோள் கூறியுள்ளார்.







