Category: சினிமா
தமிழ் சினிமா, சினிமா செய்திகள் ,இன்றைய சினிமா செய்திகள் ,
கொரோனாவால் நெருங்கிய உறவினர் பலி…. சோகத்தில் குஷ்பு
கொரோனாவால் நெருங்கிய உறவினர் பலி…. சோகத்தில் குஷ்பு
நடிகையும், அரசியல் ஆர்வலருமான குஷ்புவின் நெருங்கிய உறவினர் ஒருவர் கொரோனா பாதிப்பால் பலியாகி உள்ளார்.
கொரோனாவால் நெருங்கிய உறவினர் பலி…. சோகத்தில் குஷ்பு
குஷ்பு
கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் கோரமுகத்தை காட்டி வருகிறது. இதன் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம்
உள்ளது. குறிப்பாக கொரோனா அதிகம் பதித்த மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இங்கு 62 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் 2 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் மும்பையில் உள்ள தனது நெருங்கிய உறவினர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக நடிகை குஷ்பு தனது
டுவிட்டர் பக்கத்தில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து
குஷ்புவுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் டுவிட்டரில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
தனிமைப்படுத்தப்பட்டது ஏன்? – வீடியோ வெளியிட்ட பிந்து மாதவி
தனிமைப்படுத்தப்பட்டது ஏன்? – வீடியோ வெளியிட்ட பிந்து மாதவி
தமிழ் திரையுலகில் வளர்ந்துவரும் நடிகையான பிந்துமாதவி, 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டது ஏன்? – வீடியோ வெளியிட்ட பிந்து மாதவி
பிந்து மாதவி
கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் நடித்த பிந்து மாதவி, பிக்பாஸ் நிகழ்ச்சியில்
கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். அடுத்ததாக மாயன், யாருக்கும்
அஞ்சேல் போன்ற படங்களில் நடித்துவந்த அவர், கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி உள்ளார்.
இந்நிலையில் நடிகை பிந்துமாதவி வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டிருப்பதாகவும், அதனால் மாநகராட்சி ஊழியர்கள் அந்தக் குடியிருப்புக்கு சீல் வைப்பதையும் தனது டுவிட்டர்
பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். மேலும் அங்கு வசிக்கும் அனைவரும்
14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் நடிகை பிந்து மாதவி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்
48 கோடி ரூபாயில் அலுவலகம் அமைத்த கங்கனா ரனாவத்
48 கோடி ரூபாயில் அலுவலகம் அமைத்த கங்கனா ரனாவத்
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி 48 கோடி ரூபாயில் அலுவலகம் அமைத்து இருக்கிறார்.
பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி 48 கோடி ரூபாயில் அலுவலகம் அமைத்த கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், மணிகர்ணிகா பிலிம்ஸ் என்ற பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.
இந்த நிறுவனத்துக்காக மும்பையின் பெரும்புள்ளிகள் இருக்கும் பாந்த்ராவின் பாலி ஹில் பகுதியில் ஒரு மாளிகையை வாங்கி வடிவமைத்துள்ளார். இ
இதற்காக அவர் செலவழித்திருக்கும் தொகை 48 கோடி ரூபாய். மூன்று மாடி கொண்ட இந்த மாளிகையைப் பற்றி சமீபத்தில் பேசியுள்ள கங்கனா ரனாவத், “நான் சொந்தமாக ஒரு
ஸ்டுடியோவைக் கட்ட நினைத்தேன். ஆனால் நடுவில் ‘ரங்கூன்’, ‘சிம்ரன்’ உள்ளிட்ட சில படங்கள் ஓடவில்லை. அதனால் சற்று
தள்ளிப் போட்டேன். ‘மணிகர்ணிகா’வுக்குப் பிறகும் நிலை மீண்டும் மாறியது. எனக்குப் பிடித்த விதத்தில் நான் மொத்தமாக என் மாளிகையைக் கட்டமைத்துக் கொண்டேன்.
எனது ஆடிட்டர், ஏன் இந்த சொத்தில் பணத்தைப் போடுகிறீர்கள். வழக்கமாக நீங்கள் எந்த தயாரிப்பு நிறுவனத்துக்காக
பணியாற்றுகிறீர்களோ அவர்களே உங்களுக்கான இடத்தை வாடகைக்கு எடுத்துத் தருவார்களே. இந்த பணத்தை வைத்து
பத்திரங்களில் முதலீடு செய்யுங்கள் அல்லது உணவகத்தை வாங்குங்கள். குறைந்தது 40-50 லட்சம் வருடத்துக்கு வாடகையே கிடைக்கும் என்றார்.
என் பெற்றோர் உட்பட அனைவருமே நான் பணத்தை வீணடிக்கிறேன் என்று நினைத்தனர். ஆனால் இப்போதும் இது
எனக்கு ஒரு சவால் தான். இது நல்ல முதலீடா இல்லையா என்பதை நானே போகப் போகப் தெரிந்துகொள்வேன்” என்று கூறியுள்ளார்
பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த சாயிஷா
பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த சாயிஷா
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் சாயிஷா, பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த சாயிஷா…. வைரலாகும் புகைப்படம்
சாயிஷா
ஊரடங்கு நேரத்தில் தமிழ் திரைப்பட நடிகைகள் பலர் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வித்தியாசமான வேடிக்கையான
நகைச்சுவையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஏற்கனவே நடிகை சாயிஷா ஒரு சில வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த நிலையில்
தற்போது பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.
மேலும் இந்த புகைப்படத்துடன் தண்ணீரை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என்றும் கூறியிருக்கிறார்.
சமூக வலைத்தளத்தில் மோதிக்கொண்ட சமந்தா, பூஜா ஹெக்டே ரசிகர்கள்
சமூக வலைத்தளத்தில் மோதிக்கொண்ட சமந்தா, பூஜா ஹெக்டே ரசிகர்கள்
சமூக வலைத்தளத்தில் நடிகைகள் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டேவின் ரசிகர்கள் மோதிக் கொண்டுள்ளனர்.
சமூக வலைத்தளத்தில் மோதிக்கொண்ட சமந்தா, பூஜா ஹெக்டே ரசிகர்கள்
சமந்தா
சமூக வலைத்தளத்தில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் அடிக்கடி சண்டை போட்டு வருவார்கள். அந்த வரிசையில் தற்போது சமந்தா ரசிகர்களும், பூஜா ஹெக்டே ரசிகர்களும் மோதி கொண்டனர்.
நேற்று பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் கணக்கில் சமந்தா புகைப்படத்தை பதிவிட்டு அவர் அழகாக இல்லை என
குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை பார்த்து சமந்தாவின் ரசிகர்கள் கோபம் அடைந்தனர்.
அது பற்றி விளக்கம் அளித்த பூஜா, தனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் ஆகிவிட்டது என்று கூறி இருந்தார். அதன் பிறகு சற்று நேரம்
கழித்து டெக்னிக்கள் டீம் உதவியுடன் அதை மீட்டதாக தெரிவித்தார். போடப்பட்ட பதிவுகளையும் கணக்கில் இருந்து
நீக்கிவிட்டார் பூஜா. ஆனாலும் பூஜா ஹெக்டே மன்னிப்பு கேட்கவேண்டும் என சமந்தா ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டனர்.
இந்நிலையில் சமந்தா நடித்த ஓ பேபி படத்தின் இயக்குனர் நந்தினி ரெட்டி இன்ஸ்டாகிராமில் சமந்தாவை பாராட்டி ஒரு பதிவினை
போட்டுள்ளார். அதில் கமெண்டில் சமந்தா, சின்மயி மற்றும் நந்தினி ரெட்டி மூவரும் பூஜா ஹெக்டேவை விமர்சிக்கும் வகையில் பேசிக்கொண்டனர். அந்த கமெண்டுகளை பின்னர் நீக்கிவிட்டனர்.
அதன் ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் வைரலானது. பூஜா ஹெக்டே தவறு செய்தாரா என உறுதியாக தெரியாத நிலையில் இப்படி
சமந்தா-சின்மயி மற்றும் நந்தினி ரெட்டி மோசமாக பேசியிருப்பது ரசிகர்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
இதனால் இருவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் மிகவும் மோசமாக சண்டை போட்டுக் கொண்டனர்.
இயற்கையின் குரலாக மாறும் பிரகாஷ் ராஜ்பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ்
இயற்கையின் குரலாக மாறப்போகிறேன் என்று கூறியுள்ளார்.
இயற்கையின் குரலாக மாறும் பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ்
நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு இயற்கை ஆர்வலர். ஊரடங்கு காலத்தைக்கூட தனது பண்ணை வீட்டில் தான் குடும்பத்துடன்
செலவிட்டு கொண்டு வருகிறார். அதிலும் இயற்கை விவசாயத்தின் மீதும் அவருக்கு அதிக ஈடுபாடு உள்ளது.
சினிமாவில் பிசியாக நடித்து வந்தாலும், இயற்கையின் மீது கொண்ட ஈடுபாட்டால் சின்னத்திரையில் கால்பதித்துள்ளார்.
டிஸ்கவரி தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் வைல்ட் கர்நாடகா எனும் நிகழ்ச்சிக்கு அவர் குரல் கொடுக்க முன்வந்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர், ஒரு உபயோகமுள்ள பயணம். இயற்கையின் குரலாக மாறப்போகிறேன். இதற்கு முன்பு
இல்லாத அளவுக்கு மிகுவும் சிரமப்பட்டு தயாராக்கப்பட்ட இந்திய வன வாழ்க்கையின் ஆவணப்படம். அதற்கு தமிழ் மற்றும்
தெலுங்கில் வர்ணனை கொடுத்ததை மிகவும் சிறப்பாக உணர்கிறேன். இவ்வாறு பிரகாஷ்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.
- தெஹிபாலே மல்லி’யின் சகோதரர் துபாயில் கைது

- சீனத் தூதர் ஜேவிபி பொதுச் செயலாளர் தில்வின் சில்வாவை சந்தித்தார்

- நேபாளம்-சீனாவில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

- 22வது அரசியலமைப்புத் திருத்தம் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

- முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜெயரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

நயன்தாராவின் பெஸ்ட் குணம்… புகழாரம் சூட்டிய பிரபல தொகுப்பாளினி.
நயன்தாராவின் பெஸ்ட் குணம்… புகழாரம் சூட்டிய பிரபல தொகுப்பாளினி.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவின் பெஸ்ட் குணம் பற்றி பிரபல தொகுப்பாளினி கூறியிருக்கிறார்.
நயன்தாராவின் பெஸ்ட் குணம்… புகழாரம் சூட்டிய பிரபல தொகுப்பாளினி
நயன்தாரா
நயன்தாரா தற்போது நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சிறந்த நடிப்பையும் தாண்டி அவர்
படக்குழுவினர்களுக்கு கொடுக்கும் ஒத்துழைப்பு, சக மனிதர்களிடம் காட்டும் அன்பு, உண்மையாக நட்பை நேசிப்பது
ஆகியவையே அவர் இன்னும் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதற்கான காரணம் என்று கோலிவுட் திரையுலகினர் கூறி வருகின்றனர்.
நயன்தாரா, டிடி
இந்த நிலையில் நயன்தாராவின் பெஸ்ட் குணம் என்ற ஒன்றை பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி, ரசிகரின் கேள்வி
ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே கூறியுள்ளார். நயன்தாராவை பொருத்தவரை அவருக்கு யார் மீதாவது கோபம் என்றால் அந்த
கோபத்தை மனதில் வைத்துக்கொள்ள மாட்டார். உடனே சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசியில் அழைத்து, ‘இதெல்லாம்
எனக்கு பிடிக்கவில்லை என்று அவரது கோபத்தை சம்பந்தப்பட்டவரிடமே காட்டி விடுவார்.
எனக்கு தெரிந்து இது மிகவும் சிறந்த பெஸ்ட் குணம் என்று நினைக்கிறேன். டிடியின் இந்த பதிலால் நயன்தாரா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கணவருடன் விளையாடும் எமி ஜாக்சன்
கணவருடன் விளையாடும் எமி ஜாக்சன்
தமிழில் மிகவும் பிரபலமான எமி ஜாக்சன் குழந்தையை விட்டு கணவருடன் விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.
குழந்தையை விட்டு கணவருடன் விளையாடும் எமி ஜாக்சன்
கணவருடன் எமி ஜாக்சன்
தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில்
நடித்திருக்கிறார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை.
ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பது குழந்தை பெற்றுக் கொண்டார். அவருக்கு ஆன்ட்ரியேஸ் என்று பெயர் வைத்தனர்.
சமீப காலமாக குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை மட்டும் வெளியிட்டு வந்தார் எமி ஜாக்சன். தற்போது கணவருடன்
விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் அள்ளிக் கொடுத்து வருகிறார்கள்

ஊரடங்கும் தேவை இல்லாதது – மன்சூரலிகான்
ஊரடங்கும் தேவை இல்லாதது – மன்சூரலிகான்
கொரோனா வைரஸ் பயமும், ஊரடங்கும் தேவை இல்லாதது என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.
பயமும், ஊரடங்கும் தேவை இல்லாதது – மன்சூரலிகான்
நடிகர் மன்சூரலிகான்
நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் விடுத்துள்ள அறிக்கையில், “தட்டம்மை, தடுப்பம்மை போன்றவற்றை குழந்தை
பருவத்திலேயே எதிர்கொண்டு நம் உடல் வலிமை பெற்று இருக்கிறது. மேலும், நமது உணவு பழக்கங்களால் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது இயற்கையிலேயே அதிகமாக உள்ளது.
கொரோனாவை பார்த்து நாம் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. ஏன், தமிழகத்தில் கொரோனா ஒன்றுமே இல்லை, என்பது தான் என்
கணிப்பு. நம் மூதாதையரின் வைத்தியமே கொரோனாவை 100 சதவீதம் குணப்படுத்திவிடும். சலி, இருமல் போன்றவைகள்
வந்தால், சுக்கு, மிளகு, இஞ்சி போன்றவற்றை கொதிக்க வைத்து குடித்தால், இரண்டு நாட்களிலேயே சலி காணாமல்
போய்விடுகிறது. மேலும், தூதுவலை உள்ளிட்ட ஏகப்பட்ட இயற்கை மருத்துவம் நம் கையில் இருக்கிறது.
இப்படி சலி மற்றும் காய்ச்சலை வைத்து வரும் கொரோனாவையும், நம் உணவு பழக்கம் மூலம் நாம் எளிதாக எதிர்கொள்ள முடியும்.
ஆனால், நம் நாட்டு அரசு, மேலை நாட்டினரை பார்த்து பயந்து ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. ஊரடங்கே இங்கே
போட்டிருக்க கூடாது என்பது தான் என் கருத்து. இதனால், ஏழை எளியவர்களின் வாழ்வாதாரமும், வாழ்வும்
கேள்விக்குறியாகியிருப்பதோடு, நாடே மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் இருக்கிறது.
பல துறைகள் மீண்டும் பழையபடி செயல்பட உத்தரவு விட வேண்டும், என்று மத்திய மற்றும் மாநில அரசுகளை தாழ்மையோடு
கேட்டுக் கொள்கிறேன். அதேபோல், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் மற்றும் கோவில்களையும் திறக்க வேண்டும், என்றும் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் – லாவண்யா
நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் – லாவண்யா
நெருக்கமான காட்சிகளில் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று நடிகை லாவண்யா திரிபாதி கூறியுள்ளார்.
நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் – லாவண்யா
லாவண்யா திரிபாதி
தமிழில் சசிகுமார் நடித்த பிரம்மன் மற்றும் மாயவன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி.
தற்போது தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வரும் இவர், சமீபத்திய பேட்டி ஒன்றில் இனிவரும் நாட்களில்
கதாநாயகர்களுடன் மிக நெருக்கமாக நடிக்க வேண்டிய காட்சிகளை தவிர்த்து விடுவேன் என கூறியுள்ளார்.
கொரோனா தாக்கம் முடிந்தபின்பு படப்பிடிப்புகள் துவங்கினாலும் நிச்சயம் பல மாற்றங்கள் அதில் காணப்படும் என கூறியுள்ள
லாவண்யா திரிபாதி, கட்டாயம் அரசு விதிக்கும் விதிமுறைகளை பின்பற்றித்தான் படப்பிடிப்பு நடக்கும் என கூறியுள்ளார்.
அதனால் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்
நயன்தாராவின் சீக்ரெட் சொல்லும் ஆர்.ஜே.பாலாஜி
நயன்தாராவின் சீக்ரெட் சொல்லும் ஆர்.ஜே.பாலாஜி
நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி வரும் ஆர்.ஜே.பாலாஜி, அவருடைய சீக்ரெட் பற்றி சொல்லியிருக்கிறார்.
நயன்தாராவின் சீக்ரெட் சொல்லும் ஆர்.ஜே.பாலாஜி
ஆர் ஜே பாலாஜி – நயன்தாரா
நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் பங்கேற்ற கலந்துரையாடலில், அவரது அடுத்த படமான மூக்குத்தி அம்மன்
படம் குறித்து மனம்திறந்துள்ளார். அதில், மூக்குத்தி அம்மன் படம் திரையரங்கில் வெளியான பின்னரே ஓடிடி இணையதளத்தில்
வெளியாகும் என்று கூறியிருக்கிறார். கெரோனா ஊரடங்கு முடிந்து திரையரங்குகள் திறக்கும் பட்சத்தில் முதல் படமாக மூக்குத்தி
அம்மன் படத்தை ரிலீஸ் செய்வதில் உறுதியாக இருப்பதாக கூறினார்.
நயன்தாரா பற்றிய கேள்விக்கு, தான் இதுவரை நடித்த நாயகிகளுள் மிகவும் ஒழுக்கமான நடிகை அவர், அதனாலேயே ஆண்களுக்கு
முக்கியத்துவம் உள்ள இந்த துறையில், அவர் தனித்து நிற்கிறார் என்று கூறியிருக்கிறார்.
ஆர்.ஜே.பாலாஜி கதை எழுதி நடிக்க, சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி இருவரும் இணைந்து இந்த படத்தை இயக்கியுள்ளனர். வேல்ஸ்
பிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் சுமனா கித்தூர் தனது டுவிட்டர் பக்கத்தில், தனது காதலனை கரம்பிடித்த
இந்த நிலையில் சுமனா கித்தூர் தனது டுவிட்டர் பக்கத்தில், தனது காதலனை கரம்பிடித்த
கொரோனா ஊரடங்கு நேரத்தில் பிரபல பெண் இயக்குனர் தன் காதலனை கரம்பிடித்து இருக்கிறார்.
ஊரடங்கு நேரத்தில் காதலனை கரம்பிடித்த பெண் இயக்குனர்
காதலருடன் இயக்குனர் சுமனா கித்தூர்
கன்னட திரைப்பட உலகில் பிரபல இயக்குனராக இருப்பவர், சுமனா கித்தூர். இவரது சொந்த ஊர் கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா தாலுகா கித்தூர் ஆகும். இவர்
சிவமொக்காவை சேர்ந்த என்ஜினீயரான சீனிவாசை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் வைத்து திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு இருவரும் புதுச்சேரி மாநிலத்திற்கு சென்றிருந்தனர். கொரோனா ஊரடங்கால் கர்நாடகம் திரும்ப முடியாமல் அவர்கள் அங்கேயே
சிக்கிக்கொண்டனர். இதனால் சுமனா கித்தூரும், சீனிவாசும் புதுச்சேரியில் வைத்து எளிமையாக திருமணம் செய்துகொண்டனர்.
இந்த நிலையில் சுமனா கித்தூர் தனது டுவிட்டர் பக்கத்தில், தனது காதலனை கரம்பிடித்த புகைப்படங்களை வெளியிட்டார். அதில் அவர், எங்களது திருமணம் புதுச்சேரியில் எளிமையாக நடந்தது.
இதில் இரு குடும்பத்தினர் மட்டும் கலந்துகொண்டனர் என்று தெரிவித்துள்ளார். தற்போது சுமனா கித்தூர்- சீனிவாசின் திருமண
புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கன்னட திரைப்பட பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா
அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா
மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகும் நெற்றிக்கண் படத்தில் இடம்பெறும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் நடிகை நயன்தாரா டூப் போடாமல் நடித்துள்ளாராம்.
அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா
நயன்தாரா
‘அவள்’ படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் அடுத்ததாக நயன்தாராவை வைத்து ’நெற்றிக்கண்’ என்கிற திரில்லர் படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார்.
அவர் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்க உள்ளார்.
இப்படத்தில் நயன்தாரா கண் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார்.
மேலும் இப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ’பிளைண்டு’ என்ற கொரியன் படத்தின் ரீமேக்காகும்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா ஊரடங்கு முடிந்தபின் எஞ்சியுள்ள படப்பிடிப்புகளை நடத்த உள்ளனர்.
நெற்றிக்கண் படக்குழு
இந்நிலையில், இப்படத்தின் எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் சமீபத்திய நேர்காணலில் கூறியதாவது: “நெற்றிக்கண் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வரவைக்கும் திரில்லர் படம்.
இப்படத்தில் வரும் சண்டை காட்சிகள் ரசிகர்களை நிச்சயம் கவரும். சண்டை காட்சிகளில் நயன்தாரா டூப் போடாமல் நடித்துள்ளார்.
இந்த படத்தில் வித்தியாசமான நயன்தாராவை ரசிகர்கள் பார்ப்பார்கள்” என அவர் கூறினார்

அதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை ஜோதிகா – ராதிகா
அதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை ஜோதிகா – ராதிகா
நடிகை ஜோதிகா, வடக்கிலிருந்து வந்தாலும் அதை கச்சிதமாக செய்துள்ளதாக நடிகை ராதிகா டுவிட்டரில் பாராட்டி உள்ளார்.
அதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை ஜோதிகா – ராதிகா புகழாரம்
ஜோதிகா, ராதிகா
ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. நேர்மையான
வழக்கறிஞர் ஒருவர், தவறாக குற்றம்சாட்டப்பட்ட ஓர் அப்பாவிப் பெண்ணை விடுவிக்கும் முயற்சிகளைப் பற்றி பரபரப்பான நீதிமன்ற விசாரணைக் கதைதான் ‘பொன்மகள் வந்தாள்’.
ஊட்டியில் வசிக்கும் பெட்டிஷன் பெத்துராஜ் என்பவர், 2004-ம் ஆண்டு நடந்த தொடர் கொலைகளில் சம்பந்தப்பட்ட, ஆள் கடத்தல், கொலைக்காக தண்டனை அளிக்கப்பட்ட சைக்கோ ஜோதி
என்பவரின் வழக்கை மீண்டும் விசாரிக்க ஆரம்பிக்கிறார். இதைச் சுற்றி நடக்கும் விறுவிறுப்பான கதை இது.
ராதிகாவின் டுவிட்டர் பதிவு
2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ் சினிமாவில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் படமாக
அமைந்துள்ளது. மே 29-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை விளம்பரப்படுத்த, கொரோனா ஊரடங்கு என்பதால் வீடியோ கால் மூலமாக
பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஜோதிகா. இதில் முழுக்க தமிழில் பேசினார். இந்த வீடியோ வெளியானது.
ஜோதிகாவின் பேட்டி குறித்து ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: “நம்பிக்கையுடன், தெளிவாக தமிழைப் பேசும் ஜோதிகாவின் முயற்சியை நான் பாராட்டுகிறேன்.
எவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. வடக்கிலிருந்து இங்கு வந்து இதைக் கச்சிதமாகச் செய்த ஒரே நடிகை.
அவருக்குப் பாராட்டுகள்” இவ்வாறு ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின்
டிரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக 2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.
2 மாதங்களாக வெளிநாட்டில் தவிக்கும் நடிகை.
2 மாதங்களாக வெளிநாட்டில் தவிக்கும் நடிகை.
பிரபல இந்தி நடிகை மவுனிராய் 4 உடையுடன் 2 மாதங்களாக வெளிநாட்டில் சிக்கி தவித்து வருகிறார்.
4 உடையுடன் 2 மாதங்களாக வெளிநாட்டில் தவிக்கும்
பிரபல இந்தி நடிகை மவுனிராய். இவர் விளம்பர படமொன்றில் நடிப்பதற்காக அபுதாபி சென்று இருந்தார். படப்பிடிப்பு நடந்து
கொண்டிருந்தபோது கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. இதனால்
மவுனிராயால் இந்தியா திரும்ப முடியவில்லை. கடந்த 2 மாதங்களாக அபுதாபியிலேயே சிக்கி தவிக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
விளம்பர படப்பிடிப்பை சில நாட்களில் முடித்து விடலாம் என்று சொல்லி என்னை அழைத்து வந்தனர். இதனால் 4 நாட்களுக்கு
தேவையான உடைகளை மட்டுமே எடுத்து வந்தேன். ஊரடங்கினால் என்னால் இந்தியாவுக்கு திரும்ப முடியவில்லை. 4 நாள்
உடைகளோடு 2 மாதங்களாக அபுதாபியில் தவித்துக்கொண்டு இருக்கிறேன்.
இப்படி ஒரு கஷ்ட நிலைமை ஏற்படும் என்று நான் நினைத்து பார்க்கவே இல்லை. ஒவ்வொரு நாளும் விமானம் எப்போது கிளம்பும்
என்பதை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன். தெரிந்த சில நண்பர்கள் இருப்பதால் ஓரளவு நிம்மதியாக இருக்கிறேன்.
இந்தியா திரும்பும் நாளை ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன். கொரோனா ஊரடங்கு உலகம் முழுவதும்
அனைத்து மக்களுக்கும் நல்ல படிப்பினையை கொடுத்து இருக்கிறது.
இவ்வாறு மவுனிராய் கூறினார்.
வருங்கால கணவர் பற்றி மனம் திறந்த ஷெரின்
வருங்கால கணவர் பற்றி மனம் திறந்த ஷெரின்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஷெரின் வருங்கால கணவர் பற்றி மனம் திறந்த பேசியிருக்கிறார்.
வருங்கால கணவர் பற்றி மனம் திறந்த ஷெரின்
ஷெரின்
தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானவர் ஷெரின். இதையடுத்து விசில், உற்சாகம் உள்ளிட்ட படங்களில்
நடித்தார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 சீசனில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில் ஷெரினிடம் திருமணம் குறித்து கேட்டதற்கு, ”திருமணம் செய்ய, நம் வாழ்வில் யாராவது ஒருவர் இருக்க
வேண்டும். அப்படியான ஒருவர் இப்போது என் வாழ்க்கையில் இல்லை. அதுவும் இல்லாம நாம இப்போ ஊரடங்குல இருக்கோம்,
நான் வீட்டுக்குள்ளே, வர போற என் இளவரசருக்காக காத்துட்டு இருக்கேன்” என்று கூறியுள்ளார்
இலியானாவின் நீச்சல் புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்
இலியானாவின் நீச்சல் புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை இலியானாவின் நீச்சல் புகைப்படம் வைரலாகி வருகிறது.
இலியானாவின் நீச்சல் புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்
இலியானா
தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை இலியானா. விஜய்
நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். தெலுங்கு,
இந்தி திரைப்படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.
நீருக்குள் நீச்சலடிக்கும் இலியானா
ஒல்லியான இடுப்புக்கு புகழ்பெற்ற இலியானா திடீர் என்று உடல் எடை அதிகமானார். தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகின்றார்.
இந்நிலையில் நீருக்குள் நீச்சலடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் இலியானா.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்திற்கு பல லைக்ஸ்களும் குவிந்து வருகிறது.

சொந்த தயாரிப்பிலேயே நடிக்கிறேன் – ஜோதிகா
சொந்த தயாரிப்பிலேயே நடிக்கிறேன் – ஜோதிகா
சொந்த தயாரிப்பிலேயே தொடர்ந்து நடிக்க காரணம் என்ன என்று ஜோதிகாவிடம் கேட்டதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.
அந்த காரணத்தால்தான் சொந்த தயாரிப்பிலேயே நடிக்கிறேன் –
ஜே.ஜே. பிரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள்
வந்தாள்’ படம் வரும் 29-ந் தேதி அமேசான் பிரைம் இணையதளத்தில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் சொந்த தயாரிப்பிலேயே தொடர்ந்து நடிக்க காரணம் என்ன? என்று ஜோதிகாவிடம் கேட்டதற்கு, இது எனக்கு வசதியாக
இருக்கிறது. குடும்பம், குழந்தைகளையும் கவனிக்க வேண்டும் என்பதால் படப்பிடிப்புகளில் எனக்கு சில தளர்வுகள் வேண்டும்.
அதற்கு சொந்த தயாரிப்பு தானே வசதி? என்று பதில் அளித்துள்ளார்.
வைரலாகும் வேதிகாவின் வெறித்தனமான ஆட்டம்
வைரலாகும் வேதிகாவின் வெறித்தனமான ஆட்டம்
காளை, காஞ்சனா படங்களில் நடித்த வேதிகா, வெறித்தனமாக
ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் வேதிகாவின் வெறித்தனமான ஆட்டம்
வேதிகா
சிம்புவுடன் காளை படத்தில் நடித்து பிரபலமானவர் வேதிகா. இப்படத்தை
தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தார். கடந்த வருடம் நடிகர் ராகவா
லாரன்ஸின் காஞ்சனா-3 படத்தில் நடித்தார். மேலும் தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை வேதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டான்ஸ்
ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வெறித்தனமாக ஆடும் வேதிகாவின்
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள்
பலரும் சிறப்பாக நடனம் ஆடுவதாக பாராட்டும் தெரிவித்து வருகிறார்கள்.
கமல் கொடுத்த அன்புப்பரிசு… நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த ஹாலிவுட் நடிகை
கமல் கொடுத்த அன்புப்பரிசு… நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த ஹாலிவுட் நடிகை
கமல்ஹாசன் குறித்து ஹாலிவுட் நடிகை மெக்கன்ஸி வெஸ்ட்மோர்
தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
கமல் கொடுத்த அன்புப்பரிசு… நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த ஹாலிவுட் நடிகை
மெக்கன்ஸி வெஸ்ட்மோர், கமல்ஹாசன்
ஹாலிவுட்
படங்களில் ஒப்பனையாளராக பணியாற்றிய வெஸ்ட்மோர், தசாவதாரம்,
அவ்வை சண்முகி உள்ளிட்ட படங்களில் கமல்ஹாசனுடன் பணியாற்றியுள்ளார்.
வெஸ்ட்மோரின் மகள் மெக்கன்ஸி வெஸ்ட்மோர் நடிகையாகவும், பாடகியாகவும்
வலம் வருகிறார். இவர் தனது டுவிட்டர் பதிவில், எனக்கு கமல்ஹாசனைத் தெரியுமா என்று பலர் கேட்கின்றனர்.
நான் சிறிய பெண்ணாக இருந்த போது கமல்ஹாசனின் பல கதாபாத்திரங்களுக்கு
என் தந்தை மேக்கப் செய்துள்ளார். கடைசியாக அவரை சந்தித்து சில வருடங்களாகிவிட்டன.
2வது புகைப்படத்தில் நானும் எனது அப்பாவும் கமல்ஹாசன் பரிசளித்த
இந்திய உடைகளை அணிந்துள்ளோம் என்று கூறியுள்ளார். கமல்ஹாசன்
பற்றிய மெக்கன்ஸியின் பதிவுக்கு கமல் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்






