Posted in உலக செய்திகள்

சட்டிங் ரூமில் பெண்களை மிரட்டி செக்ஸ் லீலை புரிந்து – வீடியோ விற்ற நபர் – மடக்கி பிடிப்பு

சட்டிங் ரூமில் பெண்களை மிரட்டி செக்ஸ் லீலை புரிந்து – வீடியோ விற்ற நபர் – மடக்கி பிடிப்பு

தென் கொரியாவில் நபர் ஒருவர் ஆன்லைன் சட்டிங் மூலம் பெண்களுக்கு

வலைவிரித்து அவர்களுடன் செக்ஸ் லீலைகள் புரிந்து அதனை காட்டி மிரட்டி

பணம் ,மற்றும் அந்த காணொளிகளை பிற நபருக்கு விற்ற வந்த ஒருவர் காவல்துறையினரால் மடக்கி பிடிக்க பட்டார்

இவ்வாறு மடக்கி பிடிக்க பட்ட நபருக்கு நீதிமன்றம் நாற்பது

ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது

பர பரப்பாக இடம்பெற்ற நீதிமன்ற வழக்கில் இந்த தீர்ப்பு

வெளிவந்துள்ளது பாதிக்க பட்டவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Posted in உலக செய்திகள்

நபர் ஒருவரை கொலை செய்த மூவர் கைது

நபர் ஒருவரை கொலை செய்த மூவர் கைது

அமெரிக்கா சிக்காகோ நகரில் நபர் ஒருவரை மிக கோரமாக

படு கொலை புரிந்த மூவர் காவல் துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

கைதானவர்கள் காவல்துறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

குற்றங்கள் நிரூபிக்க பட்டால் ஆயூள் தண்டனை கிடைக்க பெறலாம் என நம்ப படுகிறது

Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் 26 லட்சம் மக்கள் வேலை இழந்து தவிப்பு

பிரிட்டனில் 26 லட்சம் மக்கள் வேலை இழந்து தவிப்பு

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கோரனோ நோயின் தாக்குதலில் சிக்கி மக்கள் பாதிக்க பட்ட நிலையில் ,அடித்து பூட்டும்

நிகழ்வுகள் தொடரும் நிலையில் வேலையிழந்து மக்கள் தொகை சுமார் 26 லட்சம் என தெரிவிக்க பட்டுள்ள்த்து

மேலும் இது அதிகரிக்க கூடும் என்பதால் அதனை தடுக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது

புதிய வியாபாரிகளை உருவாக்குதல் ,மற்றும் சலுகைகள் வழங்குதல் ,வரிக்குறைப்பு அல்லதுவிலக்கு அளித்தால் ஊடாக

சரிந்த பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் நகர்வில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது

அதற்கான அறிவிப்புக்களி நிதி அமைச்சர் அறிவித்து வருவதை காணலாம்

Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் 778,000 பேர் வேலை அற்று உதவி கோரல்

அமெரிக்காவில் 778,000 பேர் வேலை அற்று உதவி கோரல்

அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பல்லாயிரம்

பேர் பலியாகியும் பாதிக்க ,பட்ட நிலையில் மக்கள் வேலை

வாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர்

இதனால் ,தற்போது 778,000 பேர் வேலை அற்ற நிலையில் அரசிடம்

உதவி கோரி விண்ணப்பித்துள்ளனர்

மேலும் இந்த மக்கள் விண்ணப்பங்கள் வரும் வாரங்களில் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

Posted in உலக செய்திகள்

புயலால் சேதமடைந்த பிரபல இயக்குனரின் கார்

புயலால் சேதமடைந்த பிரபல இயக்குனரின் கார்

தற்போது உருவாகியிருக்கும் நிவர் புயல் காற்றால் பிரபல இயக்குனர் ஒருவரின் கார் மீது மரம் விழுந்து சேதம் அடைந்துள்ளது.

நிவர் புயலால் சேதமடைந்த பிரபல இயக்குனரின் கார்
சேதமடைந்த கார்


தற்போது உருவாகி இருக்கும் நிவர் புயல் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறியுள்ளது. இன்று இரவு அல்லது நாளை அதிகாலையில் புயல் கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ள

நிலையில் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக

சாலைகளில் தண்ணீர் தேங்கி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.

சாலைகளில் அதிக அளவில் தேங்கியிருக்கும் தண்ணீர் ஒரு சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் புகுந்துள்ளது. ஒருபுறம் காற்று வேகமாக வீசுவதால் மரங்களும் சாய்ந்து வருகின்றன. இதனால்

சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களும் பெரிதும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.

இயக்குனர் கண்ணன்

இந்நிலையில் கண்டேன் காதலை, வந்தான் வென்றான், பிஸ்கோத் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் கண்ணன், வீட்டுக்கு

வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது கார் மீது மரம் விழுந்ததில் காரின் முன் பக்கம் சேதமடைந்துள்ளது

இயக்குனரின் கார்
இயக்குனரின் கார்
Posted in உலக செய்திகள்

கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை -இம்ரான்

கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை -இம்ரான்

பாகிஸ்தானில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மைநீக்க தண்டனை வழங்குவது தொடர்பாக கொள்கை அடிப்படையில் பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் அளித்துள்ளார்.

பாகிஸ்தானில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை -இம்ரான் கான் ஒப்புதல்

பாகிஸ்தானில் கற்பழிப்பு வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டது.

இந்நிலையில், கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மையை நீக்கி தண்டனை வழங்குவதற்கும், கற்பழிப்பு வழக்குகளை விரைவாக

விசாரிப்பதற்கும் பிரதமர் இம்ரான் கான் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான அவசர சட்ட வரைவை அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்தபோது, இந்த கடுமையான தண்டனை குறித்து முடிவு

எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

காவல்துறையில் பெண்களை அதிக அளவில் சேர்ப்பது, கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரிப்பது, சாட்சிகளின் பாதுகாப்பு

ஆகிய அம்சங்கள் இந்த வரைவு சட்டத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிடவேண்டும் என்று சில மந்திரிகள் பரிந்துரை செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆண்மை நீக்க தண்டனை ஒரு தொடக்கமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள ஆளுங்கட்சி செனட்டர் பைசல் ஜாவேத் கான்,

விரைவில் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும் என கூறி உள்ளார்

Posted in உலக செய்திகள்

கால்பந்து ஜாம்பவான் மரடோனா மரணம்

கால்பந்து ஜாம்பவான் மரடோனா மரணம்

கால்பந்து ஜாம்பவான் மரடோனா மறைவையொட்டி அர்ஜென்டினாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கால்பந்து ஜாம்பவான் மரடோனா மரணம் – அர்ஜென்டினாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு


1986-ம் ஆண்டு வென்ற உலக கோப்பையுடன் மரடோனா.
பியூனஸ் அயர்ஸ்:

அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான மரடோனா 1977முதல் 1994-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சர்வதேச கால்பந்து அரங்கில்

கலக்கியவர். தனது வேகம் மற்றும் விவேகம் நிறைந்த நளினமான ஆட்டத்தால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின்

உள்ளத்தை கொள்ளை கொண்ட கால்பந்து கதாநாயகனாக ஜொலித்தார்.

1986-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியின் கேப்டனாக இருந்த மரடோனா உலக கால்பந்து அரங்கில் பிரேசில் ஜாம்பவான் பீலேவுக்கு நிகராக பார்க்கப்பட்டவர். 4 உலக

கோப்பை போட்டியில் (1982, 1986, 1990, 1994) பங்கேற்றவரான அவர் அர்ஜென்டினா அணிக்காக 91 சர்வதேச போட்டிகளில் விளையாடி 34 கோல்கள் அடித்துள்ளார். பார்சிலோனா, நபோலி, செவில்லா

உள்ளிட்ட கிளப் அணிகளுக்காக களம் கண்டு இருக்கும் அவர் மொத்தம் 491 கிளப் போட்டிகளில் ஆடி 259 கோல்கள் அடித்து இருக்கிறார்.

10-ம் நம்பர் சீருடைக்கு தனி மரியாதை சேர்த்த அவர் ஓய்வுக்கு பிறகு அர்ஜென்டினா உள்பட பல்வேறு அணிகளின் பயிற்சியாளராக பணியாற்றினார். அத்துடன் போதை

பழக்கத்துக்கு அடிமையாகி உடல் நலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சையும் பெற்றார். இந்த நிலையில் 60 வயதான மரடோனா கடந்த 2-ந் தேதி உடல் நலக்குறைவு காரணமாக பியூனஸ் அயர்சில்

உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்ததை அடுத்து

அவசரமாக ஆபரேஷன் செய்யப்பட்டு ரத்த உறைவு அகற்றப்பட்டது. ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்ற அவர் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் மரடோனாவுக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அவரது திடீர் மறைவு கால்பந்து ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவரது

மறைவையொட்டி அர்ஜென்டினாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் உள்பட பலரும் மரடோனா மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளனர்.

Posted in உலக செய்திகள்

இந்தியா எல்லை அருகே சீனாவின் மிக பெரும் பதுங்கு குழிகள் கண்டு பிடிப்பு

இந்தியா எல்லை அருகே சீனாவின் மிக பெரும் பதுங்கு குழிகள் கண்டு பிடிப்பு

சீனா இந்தியா எல்லை அருகே மிக இரகசியமாக அமைக்க பட்ட

பதுங்குகுழிகள் செய்மதி படங்கள் ஊடக வெளியிட பட்டுள்ளது

இந்தியா எல்லையில் இருந்து தாம் விலகுவதாக கூறிய சீனாவின்

உரு மறைக்க பட்ட மேற்படி பதுங்கு குழிகள் இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மேற்படி சம்பவம் தொடர்பில் இரு நாடுகளும் பேச உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன

Posted in உலக செய்திகள்

இந்தியாவில் 46 கைபேசி செயலிகளுக்கு தடை – அதிர்ச்சியில் பாவனையாளர்கள்

இந்தியாவில் 46 கைபேசி செயலிகளுக்கு தடை – அதிர்ச்சியில் பாவனையாளர்கள்

இந்தியாவில் புதிதாக 43 கைபேசி செயலிகளை அந்த நாடு திடீர் தடை உத்தரவை

பிறப்பித்துள்ளது ,நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் சமூகங்களுக்கு

இடையிகள் முரண்களை ஏற்படுத்துவது போன்ற குற்ற சாற்றட்டுக்கள் முதன்மையாக வைக்க பட்டு தடை விதிக்க பட்டுள்ளது

மேற்படி செயலிகளில் அதிகமானவை சீனாவை தளமாக கொண்டு இயங்கி வந்தவை

அதனால் இந்த திடீர் தடை உத்தரவை இந்தியா பிறப்பித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

Posted in உலக செய்திகள்

கூகுள் நிறுவனம் மீது ரஷிய அரசு வழக்கு- நடந்தது என்ன ..?

கூகுள் நிறுவனம் மீது ரஷிய அரசு வழக்கு- நடந்தது என்ன ..?

ரஷியாவில் ‘கூகுள் சர்ச்’ தேடுபொறி தடை செய்யப்பட்ட உள்ளடக்கங்களை நீக்க தவறி விட்டதாக கூறி கூகுள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

கூகுள் நிறுவனம் மீது ரஷிய அரசு வழக்கு

இணைய தேடலில் அமெரிக்காவை சேர்ந்த கூகுள் நிறுவனத்தின் ‘கூகுள் சர்ச்’ தேடுபொறி பயனாளர்களின் முதன்மையான தேர்வாக

இருந்து வருகிறது. இந்த நிலையில் ரஷியாவில் ‘கூகுள் சர்ச்’ தேடுபொறி தடை செய்யப்பட்ட உள்ளடக்கங்களை நீக்க தவறி

விட்டதாக கூறி கூகுள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

இதுகுறித்து ரஷியாவின் தகவல் கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் “பயங்கரவாதம், ஆபாசம் மற்றும் தற்கொலையை

தூண்டுவது உள்ளிட்ட ஆபத்தான உள்ளடக்கங்களை அகற்ற கூகுள் தவறிவிட்டது. எனவே கூகுள் நிறுவனத்துக்கு எதிராக ரஷிய அரசு

நிர்வாக நடவடிக்கைகளை திறந்துள்ளது. கோர்ட்டில் வழக்கு தொடர்வது மட்டுமல்லாமல் 65 ஆயிரத்து 670 அமெரிக்க டாலர்

(இந்திய மதிப்பில் சுமார் 48 லட்சத்து 60 ஆயிரம்) அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

Posted in உலக செய்திகள்

பிரசவத்தில் மனைவி பலி – 8 மாதங்களுக்கு பிறகு குழந்தையை பார்த்த கணவன்

பிரசவத்தில் மனைவி பலி – 8 மாதங்களுக்கு பிறகு குழந்தையை பார்த்த கணவன்

கொரோனா பரவல் காரணமாக பிரசவத்தில் மனைவியை இழந்த நிலையில் 8 மாதங்கள் கழித்து நேபாள வாலிபர் தனது குழந்தையை சந்தித்த சம்பவம் பலரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

பிரசவத்தில் மனைவி பலி : கொரோனா பரவல் காரணமாக 8 மாதங்களுக்கு பிறகு குழந்தையை சந்தித்த நேபாள வாலிபர்

நேபாள நாட்டில் காட்மண்டு பகுதியை சேர்ந்தவர் யுப்ராஜ் பூசல் (வயது 30). துபாயில் உள்ள தனியார் கல்லூரியில் நீச்சல் குளத்தின் பாதுகாப்பு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது கர்ப்பிணி

மனைவி மினா சொந்த ஊரில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் யுப்ராஜின் மனைவிக்கு ஜலந்தா என்ற அழகிய

பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த ஒரு சில நாட்களில் மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு பலியானார்.

அப்போது கொரோனா பரவல் காரணமாக அனைத்து நாடுகளும் தங்கள் எல்லைகளை மூடுவதாக அறிவித்திருந்தது.

இதனால் அவர் தனது சொந்த ஊருக்கு திரும்ப முடியவில்லை. தொடர்ந்து 8 மாதங்கள் மனைவியை இழந்து தனது குழந்தையை காணாமல் தவித்து வந்தார்.

இதற்கிடையே சக ஊழியர்கள் உதவியுடன் பண உதவி பெற்று சொந்த ஊருக்கு சென்றார். அங்கு காட்மண்டு பகுதியில்

மலைக்கிராமம் ஒன்றில் சிறிய குடிசையில் தனது குழந்தை ஜலந்தாவுடன் விடுமுறையை கழித்து வருகிறார்.

தொழிலாளியான இவர் அடுத்த மாதம் இறுதியில் துபாய் திரும்ப உள்ளார். மனைவியை இழந்த நிலையில் 8 மாதங்கள் கழித்து

குழந்தையை சந்தித்த சம்பவம் துபாயில் பலரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது

பிரசவத்தில் மனைவி பலி
பிரசவத்தில் மனைவி பலி
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் ஒவ்வொரு வீட்டுக்கும் 200 இலவச பணம் வழங்கும் அரசு

பிரிட்டனில் ஒவ்வொரு வீட்டுக்கும் 200 இலவச பணம் வழங்கும் அரசு

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் காரணமாக


ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஆளும் அரசு 95 பில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ளது

இதன் பிரகாரம் வீடு ஓவொன்றுக்கும் 200 பவுண்டுகள் வழங்கும் சட்டம் அமுலுக்கு வருகிறது

நத்தர் தினத்தை முன்னிட்டு இவை மக்களுக்கு வழங்க படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது

Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் தள்ளாடும் பிரபல சினி வோர்ல்ட் திரை அரங்கு

பிரிட்டனில் தள்ளாடும் பிரபல சினி வோர்ல்ட் திரை அரங்கு

லண்டனில் மிக பிரபலம் ஆன சினிவேல்ட் திரை அரங்கு

நடப்பாண்டு நிகழ்கால வைரஸ் நோயின் தாக்குதல் அச்சறுத்தல் காரணமாக மூட பட்டுள்ளது

இதனால் இதுவரை 750 மில்லியன் பவுண்டுகள் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது


மேலும் இது பெற்றுள்ள கடன் தொகையும் மீள செலுத்த முடியாத நெருக்கடி

நிலை இடம்பெற்று வருகிறது ,தொடர்ந்து அடித்து பூட்டும் நிகழ்வு இடம்பெற்றால்

அரங்குகள் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம் என ஐயம் வெளியிட படுகிறது

Posted in உலக செய்திகள்

பேரறிவாளன் ஒருவாரம் விடுதலை

பேரறிவாளன் ஒருவாரம் விடுதலை

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்த பட்டு முப்பது ஆண்டுகளுக்கு

மேலாக சிறையில் அடைக்க பட்டுள்ள
பேரறிவாளனை விடுதலை செய்ய கோரி வழக்கு இடம் பெற்று வருகிறது

நீதிமன்ற உத்தரவு மதிக்காது ஆளுநர் அமைதியாக உறக்கம் இட்டுள்ளார்

இவ்விதம் நகர்வுகள் நகர்ந்து கொண்டிருக்க ஒருவாரம் மேலும் மருத்துவ சிகிச்சைக்காக விடுவிக்க வேண்டும் என கோர பட்ட

நிலையில் நீதிமன்ற அதற்கும் ஒப்புதல் அளித்து விடுதலை செய்துள்ளது

எனினும் நிரந்தர விடுதலை உறக்கத்தில் போட பட்டுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

நடிகர் தவசி மரணம்

நடிகர் தவசி மரணம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் தவசி, சிகிச்சைக்கு போதிய பணமின்றி தவித்து வருவதாகவும் தனக்கு உதவுமாறும்

அவர் வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில்

வெளியாகி வைரலானது. இதையடுத்து அவருக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வந்தனர்.

நடிகர்கள் சூரி, சிவகார்த்திகேயன்,விஜய் சேதுபதி, சௌந்தர ராஜா, சிம்பு ஆகியோர் பணவுதவி செய்தனர்.

சீக்கிரம் உடல் நலம் பெற்று வருவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். இந்நிலையில்

நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Posted in உலக செய்திகள்

சுரங்கம் அமைத்து இந்தியாவுக்குள் புகுந்த தீவிரவாதிகள்

சுரங்கம் அமைத்து இந்தியாவுக்குள் புகுந்த தீவிரவாதிகள்

இந்தியாவுக்குள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் சுரங்கம்

அமைத்து புகுந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

இவ்வாறு தீவிரவாதிகள் நுழைந்தமை இரகசிய தகவல்கள் ஊடக கிடைக்க

பெற்றதை அடுத்து குறித்த சுரங்க பாதை கண்டுபிடிக்க பட்டு அழிக்க பட்டுள்ளது என இந்தியா இராணுவம் அறிவித்துள்ளது

Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் 2000 அகதிகள் பொய்யான வயது வழங்கியது விசாரணையில் அம்பலம்

பிரிட்டனில் 2000 அகதிகள் பொய்யான வயது வழங்கியது விசாரணையில் அம்பலம்

பிரிட்டனில் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த அகதிகள் தமது

வயதை மறைத்து குறைத்து வழங்கி வந்தது விசாரணைகள் மூலம் அம்பலமாகியுள்ளது

சிறகை என்ற பிரிவுக்குள் தம்மை அடக்கிட இவ்விதம் பொய்யான

வயதை அவர்கள் வழங்கியுள்ளது அம்பலமாகியுள்ளது

நீண்டகாலமாக இடம்பெற்று வந்த விசாரணையில் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது ,


தொடர்ந்து இரண்டாயிரம் பேரிடமும் அது தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்,பெற்ற வண்ணம் உள்ளது

Posted in உலக செய்திகள்

குறைந்தது கொரனோ – குத்துகாரணம் அடிக்கும் லண்டன்

குறைந்தது கொரனோ – குத்துகாரணம் அடிக்கும் லண்டன்

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வந்த வைரஸ் நோயின் தாக்குதல்

குறைந்து வருவதாகவும் அதனால் டிசம்பர் இரண்டாம் திகதி

லொக்கடவுன் நீக்க படுவதன் பேச்சுக்கள் வெளியிட பட்ட வண்ணம் உள்ளன

இவை இவ்விதம் நகர நாள் தோறும் மக்கள் பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது என தெரிவிக்கும் அரசு


அதனால் மீள மக்களை வெளியில் நடமாட அனுமதித்து வீழ்ந்து போன பொருளாதாரத்தை நிமிர்த்திட முயற்சிப்பதன் நோக்கத்தை காண முடிகிறது

அதற்காக நத்தார் தினத்திற்குள் நமக்கு வீடுகள் ஒன்றிணைந்து சிறப்பிக்க

அனுமதி தரப்படுகிறது என கருத்து வெளியிட பட்டு வருகிறது இங்கே கவனிக்க தக்கது

Posted in உலக செய்திகள்

போதையில் மகளை கர்ப்பம் ஆக்கிய தந்தை

போதையில் மகளை கர்ப்பம் ஆக்கிய தந்தை

இந்திய தமிழகத்தில் தந்தை ஒருவர் தனது 14 வயது மக்களை

கர்ப்பம் ஆக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மகள் உடல் நிலையில் ஏற்பட்ட மறுதலை அடுத்து அவரை

மருத்துவமனைக்கு அழைத்துசென்ற பொழுது மேற்படி சம்பவம் தெரியவந்துள்ளது


தயார் வழங்கிய முறைப்படடினை அடுத்து தந்தை கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார்

Posted in உலக செய்திகள்

14 வயது மாணவனுக்கு அகோர கத்தி குத்து – பூட்ட பட்ட பாடசாலை

14 வயது மாணவனுக்கு அகோர கத்தி குத்து – பூட்ட பட்ட பாடசாலை

Arthur Phillip High School in Parramatta, western Sydney பகுதியில் உள்ள

பாடசாலையில் கல்வி கற்று வந்த 14 வயது மாணவன் மீது சரமாரி

கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது

இந்த தாக்குதலில் சிக்கி பலத்த காயமடைந்த வாலிபன் வைத்திய சாலையில்

அனுமதிக்க பட்டார் ,மேலும் பாடசாலை அடித்து பூட்ட பட்டது

,மேற்படி சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது