Posted in இலங்கை செய்திகள்

யாழில் வெடித்து சிதறிய எரிவாயு சிலிண்டர்

யாழில் வெடித்து சிதறிய எரிவாயு சிலிண்டர்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வீடொன்றில் எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்து

சிதறியுள்ளது ,எனினும் இதனால சேதங்கள் தவிர்க்க பட்டுள்ளது ,உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை


மேற்படி தொடர் வெடிப்புகள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை குழு விசாரணைகளை

ஆரம்பித்துள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    மோடியை சந்திக்க பறந்தார் – நிதியமைச்சர் பசில்

    மோடியை சந்திக்க பறந்தார் -நிதியமைச்சர் பசில்

    இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசிட இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸா

    விரைந்துள்ளார்

    இந்த சந்திப்பில் இலங்கை தொடர்பான அபிவிருத்தி மற்றும் முதலீடுகள் தொடர்பாக பேச

    உள்ளார் என
    தெரிவிக்க படுகிறது

      Posted in இலங்கை செய்திகள்

      சூறாவளி மக்களுக்கு எச்சரிக்கை

      சூறாவளி மக்களுக்கு எச்சரிக்கை

      இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

      அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

      2021 டிசம்பர்01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

      தென்கிழக்கு மற்றும் அண்மையாகவுள்ள கிழக்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு

      மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகியுள்ளது. அது அடுத்த சில நாட்களில் ஒரு சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

      கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

      மழை நிலைமை:

      புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் குறிப்பாகபிற்பகலில் அல்லது இரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

      நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

      காற்று :

      நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது பிரதானமாக வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

      கடல் நிலை:

      நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.

      இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.

        Posted in இலங்கை செய்திகள்

        வருடம் 16 மில்லியன் டொலர் பணத்தை அள்ளும் பிரிட்டனில் பிறந்த இலங்கை பெண்

        வருடம் 16 மில்லியன் டொலர் பணத்தை அள்ளும் பிரிட்டனில் பிறந்த இலங்கை பெண்

        பிரிட்டனில் பிறந்த இலங்கையை சேர்ந்த சிங்கள பெண்மணி ஒருவர் நிறுவனம் ஒன்றின்

        நிறைவேற்று சர்வ வல்லமை பொருந்திய முதன்மை அதிகாரியாக விளங்குகிறார் ,அதாவது CEO

        அவுஸ்ரேலியாவில் பணியாற்றுமிவர் உலக ஆசிய பணக்கார பட்டியலில் அதிக பணத்தினை

        பெற்று கொள்ளும் பெண்மணியாக இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்

        இவரது ஆண்டு வருமானம் 16 மில்லியன் டாலராக உள்ளது

        அறிவார்ந்த நிலையில் எமது சமூகமும் இது போல பயணிக்க வேண்டும் என்பதே நமது எண்ண

        கருத்தாகும் ,இவரை போல நீங்களும் முன்னேறலாம் .


        எடுத்து கொண்ட விடயத்தில் உரிய கவனத்தைச செலுத்தி வெற்றி காணுங்கள்

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் மின்சார கார் பாவனைக்கு வருகிறது

          இலங்கையில் மின்சார கார் பாவனைக்கு வருகிறது

          இலங்கையில் சுற்று சூழல் பாதுகாப்பை அடுத்து புகையை தடுத்து வளி மண்டலத்தை காக்கும்

          முகமாக மின்சார காரினை இறக்குமதி செய்திடும் நிலைக்கு இலங்கை தயராகி வருகிறது

          இதற்கான அனுமதி தற்போது வழங்க படவுள்ளது

          பிரிட்டன் உள்ளிட்ட ஐரோபிய நாடுகளில் 2040 ஆண்டிற்கு பின்னர் முற்று முழுதாக எரிபொருள் கார்கள்
          தடை செய்ய படுகின்றன.

          அதன் முன்னோடி நடவடிக்கையாக இந்த கார் இறக்குமதிக்கு இலங்கையும் தயராகி வருகிறது

            Posted in இலங்கை செய்திகள்

            கட்டக்காடு கடற்கரையில் கரை ஒதுங்கிய மனித சடலம்

            கட்டக்காடு கடற்கரையில் கரை ஒதுங்கிய மனித சடலம்

            யாழ்ப்பாணம் கட்டைக்காடு பகுதி கடலப்குதியில் உருக்குலைந்த நிலையில் மனித சடலம் ஒன்று

            மீட்க பட்டுள்ளது

            இவ்வாரு சில நாட்களுக்கு முன்னரும் மூன்று சடலங்கள் கரை ஒதுங்கி இருந்தமை குறிப்பிட தக்கது

              Posted in இலங்கை செய்திகள்

              தீக்குளித்து நபர் தற்கொலை – அதிர்ச்சியில் குடும்பம்

              தீக்குளித்து நபர் தற்கொலை – அதிர்ச்சியில் குடும்பம்

              மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள அமிர்தகழி பிரதேசத்தில் முதியவர் ஒருவர்

              தனக்கு தானே மண்எண்ணெய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக

              மீட்கப்பட்ட சம்பவம் இன்று (30) காலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

              அமிர்தகழி ஆனந்தன் வீதியைச் சேர்ந்த 69 வயதுடைய தியாகராஜா பத்திராஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளர்.

              குறித்த நபர் நடக்க முடியாத நிலையில் தனிமையில் வாழ்ந்து வருவதாகவும் தனக்கு வாழ்கை

              வெறுத்து போயுள்ளது என கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு சம்பவதினமான இன்று காலை 9

              மணியளவில் சமையலறை பகுதியில் தனக்கு தானே மண்எண்ணெயை ஊற்றி தீயிட்டு

              தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

              தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள அவரின் சடலம் பிரோத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

                Posted in இலங்கை செய்திகள்

                விபச்சார நிலையம் சுற்றிவளைப்பு – மூவர் கைது

                விபச்சார நிலையம் சுற்றிவளைப்பு – மூவர் கைது

                இலங்கை நீர்கொழும்பு பகுதியில் இரகசியமாக இயங்கி வந்த விபச்சார நிலையம் ஒன்று

                பொலிஸாரினால் , சுற்றிவளைக்க பட்டது ,இதன் போது மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்

                கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

                  செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                  Posted in இலங்கை செய்திகள்

                  கொரானாவுக்கு சிக்கி 23 பேர் மரணம்

                  கொரானாவுக்கு சிக்கி 23 பேர் மரணம்

                  இலங்கையில் கடந்த தினம் கொரானாவுக்கு சிக்கி 23 பேர் பலியாகியுள்ளனர் என சுகாதார

                  அமைச்சு தெரிவித்துள்ளது ,அரசு தெரிவிக்கும் இந்த மரணங்களை விட இறப்பு விகிதம்

                  இரட்டிப்பாக உள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன

                    Posted in இலங்கை செய்திகள்

                    கொட்டான்களுடன் மக்களை மிரட்டிய கடற்படையினர்

                    கொட்டான்களுடன் மக்களை மிரட்டிய கடற்படையினர்

                    யாழ்ப்பாணம், மாதகல்- குசுமந்துறை பகுதியில் கடற்படையினர் கொட்டான்களுடன்

                    குவிக்கப்பட்டு , மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.

                    மாதகல் குசுமந்துறை கிராம சேவையாளர் பிரிவு – 150 , பகுதியில் கடற்படையினரின்

                    தேவைக்காக தனியாருக்கு சொந்தமான 1 பரப்பு காணியை சுவீகரிப்பதற்கான காணி அளவீட்டு

                    பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெறவுள்ளது.

                    அந்நிலையில் குறித்த காணியை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக

                    அரசியல்வாதிகள் , அப்பகுதி மக்கள் என பலரும் குறித்த காணிக்கு முன்பாக கூடிய வேளை ,

                    கொட்டான்களுடன் கடற்படையினர் அவர்களை சூழ்ந்து கொண்டு , அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர்.

                    அச்சுறுத்தல்களை மீறியும் அப்பகுதியில் மக்கள் கூடி தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன

                      Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

                      புலிகள் உடைத்த உலக உளவுத்துறை -video

                      தமிழீழத்தில் தமிழ் மக்களின் விடியலுக்காக சிங்கள அரசு புரிந்த கோர தாக்குதல் இவ்வேளை

                      இங்கு சர்வதேச உளவு வேலைகள் என்பன தொடர்பில் உடைக்க படும் உண்மைகள்

                      காணொளியை இப்போதாவது பார்த்துக்கோ

                      ,இப்பொழுதாவது இவை வெளிவந்துள்ளது

                      முஸ்லீம்களை புலிகளுக்கு எதிராக சிங்களம் திருப்பியது எப்படி ,தமிழா மறக்காது இந்த

                      Posted in இலங்கை செய்திகள்

                      யாழில் தேவாலயம் அடித்து நொறுக்கு – நபர் கைது

                      யாழில் தேவாலயம் அடித்து நொறுக்கு – நபர் கைது

                      யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகில் உள்ள தேவாலயம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது

                      ,இவரது தாக்குதலில் ஆலயம் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது

                      விரைந்து வந்த போலீசாரை போதையில்நபர் ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்க

                      படுகிறது

                        Posted in இலங்கை செய்திகள்

                        உணவாக சமையல்காரர் படியில் இருந்து வீழ்ந்து மரணம்

                        உணவாக சமையல்காரர் படியில் இருந்து வீழ்ந்து மரணம்

                        இலங்கை நீர்கொழும்பு பகுதியில் உள்ள பிரபல உணவாகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த

                        பிரதான சமையல்காரர் மாடியில் இருந்து வீழ்ந்து பலியாகியுள்ளார் ,இவரது மரணம் தொடர்பில்

                        விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                          Posted in இலங்கை செய்திகள்

                          கடலில் கொந்தளிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை

                          கடலில் கொந்தளிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை

                          இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

                          அடுத்த 24 மணித்தியாலத்துக்கானஇ நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

                          2021 நவம்பர் 29ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

                          மழை நிலைமை:

                          பெந்தோட்டையிலிருந்து காலிமற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான

                          கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                          நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் குறிப்பாக பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                          காற்று :

                          திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை மற்றும் மன்னார் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளில் காற்றானது கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன்,

                          நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும்.

                          நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

                          திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளில்

                          காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                          கடல் நிலை:

                          திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

                          இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            விபச்சாரத்தை சட்டமாக்க நடவடிக்கை

                            விபச்சாரத்தை சட்டமாக்க நடவடிக்கை

                            இலங்கையில் விபச்சாரத்தை சட்டமாக்க ஆளும் கட்சி பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

                            ,பாலியல் வழக்குகளில் சிக்கி அப்பாவி பெண்கள் சிறைகளில் சிக்கி தவிக்கின்ற நிலையிலும்

                            ,அவர்கள் குடும்பம் நின்மதியாக வாழும் நிலைக்கு எடுத்து செல்லவும் ,உல்லாச பயணிகள்

                            தங்கும் கொட்டல்கள் வருமானத்தை அதிகரிக்கவும் இதனை சட்டமாக வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

                            இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் நிலவி வருகிறது

                              Posted in இலங்கை செய்திகள்

                              8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

                              8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

                              இலங்கையில் நிலவை வரும் சீரற்ற காலநிலையால் எட்டு மாவாட்டங்களுக்கு மண்சரிவு

                              எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

                              நுவரெலியா, கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை மற்றும்

                              குருநாகல் இந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                                Posted in இலங்கை செய்திகள்

                                இலங்கையில் மாவின் விலை அதிகரிப்பு

                                இலங்கையில் மாவின் விலை அதிகரிப்பு

                                இலங்கையில் கூப்பன் மாவின் விலை 17,50 சதத்தால் அதிகரிக்க பட்டுள்ளது ,பாணின் விலை 10

                                ரூபாவால் அதிகரிக்க பட்ட நிலையில் இவ்விதம் மவன் விளையும் அதிகரிக்க பட்டுள்ளது மக்கள்

                                மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                  செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இலங்கையில் 27 பேர் கொரனோவால் மரணம்

                                  இலங்கையில் 27 பேர் கொரனோவால் மரணம்

                                  இலங்கையில் கடந்த தினம் கொரனோ நோயில் சிக்கி 27 பேர் பலியாகியுள்ளனர் என சுகாதார

                                  அமைச்சு தெரிவித்துள்ளது .

                                  இதுவரை 14 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

                                    Posted in இலங்கை செய்திகள் சீமான் பேச்சு

                                    சீமான் எழுச்சியுரை | மாவீரர் நாள் விழா 2021 காணொளி

                                    தமிழீழ தேசிய மாவீரர் நாளினை உலக தமிழர்கள் அவர் தம் நாடுகளில் நினைவு கூர்ந்து

                                    வருகின்றனர் ,அந்த வகையில் நாம் தமிழர் கட்சியும்,அதன் செயல் தலைவரும் அதனை

                                    https://www.youtube.com/watch?v=Xm3tEnQ9ZyU

                                    நன்றே செய்து முடித்தனர் ,இதில் சீமான் அவர்கள் பேசிய வீர ஆவேச பேச்சு காண காணொளியை

                                    பாருங்கள்

                                    இதில் அழுத்தி காணொளி

                                    Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

                                    மாவீரர் நாள் நடத்தவிடாது -ஆயுத முனையில் மிரட்டிய சிங்கள இராணுவம்

                                    மாவீரர் நாள் நடத்தவிடாது -ஆயுத முனையில் மிரட்டிய சிங்கள இராணுவம்

                                    தமிழர் தாயக பகுதி எங்கும் மக்கள் மாவீரர் நாளினை நினைவுகூற பொங்கி எழுந்தனர்

                                    ,ஆயினும் அந்த மக்கள் உணர்ச்சிகளை மழுங்கடித்து அந்த நிகழ்வுகளை நடத்த விடாது ஆளும்

                                    கோட்டாபய இராணுவம் ஆயுத முனையில் மக்களை மிரட்டியது

                                    மேற்படி நிகழ்வுகள் சர்வதேச அளவில் உன்னிப்பாக கவனிக்க பட்ட ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது

                                    ஆளும் அரசின்கொள்கை நிலை பிரகடனம் நாட்டை பெரும் அழிவுக்கு இட்டு செல்கிறது என்பது

                                    நிபுணர்கள் கருத்தாக மாற்றம் பெற்றுள்ளது