பால் மா இறக்குமதி வரியில் மாற்றம்
Posted in இலங்கை செய்திகள்

பால் மா இறக்குமதி வரியில் மாற்றம்

பால் மா இறக்குமதி வரியில் மாற்றம்

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரியை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ பால்மாவுக்கு 100 ரூபாய் வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வரி திருத்தம் நேற்று (12) முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவுக்கு 20 வீதம் அல்லது 225 ரூபாய் சுங்க இறக்குமதி வரி விதிக்கப்பட்டு பின்னர், அதனை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பால் மா இறக்குமதி வரியில் மாற்றம்

எவ்வாறாயினும், நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவுக்கு நிதியமைச்சு 100 ரூபாய் வரி விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வரித் திருத்தம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், வரி அதிகரிக்கப்பட்டாலும் பால் மாவின் விலையில் மாற்றம் செய்ய எதிர்பார்க்கவில்லை என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எட்டு கிலோ தங்கத்துடன் இருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

எட்டு கிலோ தங்கத்துடன் இருவர் கைது

எட்டு கிலோ தங்கத்துடன் இருவர் கைது


சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக எடுத்துச் செல்ல முற்பட்ட 08 கிலோ 450 கிராம் தங்கத்துடன் சந்தேகநபர்கள் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி – வன்னிமுந்தலம் கலப்பு பகுதியில் கடற்படையினர் இன்று (12) காலை விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

எட்டு கிலோ தங்கத்துடன் இருவர் கைது

அங்கு கற்பிட்டி கடற்பகுதியை நோக்கி சந்தேகத்திற்கிடமான வகையில் டிங்கி படகு ஒன்று பயணிப்பதை கடற்படையினர் அவதானித்து சோதனையிட்டனர்.

இதன்போது டிங்கி படகில் சூட்சுமமாக மறைத்து சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் நான்கு பொதிகளில் பொதி செய்யப்பட்ட தங்கம் கடற்படையினரால் இவ்வாறு கைப்பற்றப்பட்டது.

Posted in இலங்கை செய்திகள்

யாழில் இருந்து கொழும்பு சென்ற குடும்பஸ்தருக்கு 6 வருடங்களின் பின் மரணதண்டனை வழங்கிய நீதிபதி மா.இளஞ்செழியன்

யாழில் இருந்து கொழும்பு சென்ற குடும்பஸ்தருக்கு 6 வருடங்களின் பின் மரணதண்டனை வழங்கிய நீதிபதி மா.இளஞ்செழியன்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி விற்பனைக்காக 1கிலோ 135 கிராம் தூய்மையான ஹெரோயின் போதைப் பொருளை கொண்டு சென்ற குடும்பஸ்தருக்கு 6 வருடங்களின் பின்
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09 திகதி வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, வவுனியா பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ஸ தலைமையில் பொலிசார், அன்றைய தினம் இரவு 8.30 மணியளவில் வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேரூந்துக்ளை சோதனையிட்டனர்.

இதன் போது பேரூந்து ஒன்றில் பயணித்த குடும்பஸ்தர் தன் வசம் உடமையில் வைத்திருந்த பை ஒன்றில் இருந்து ஹெரோயின் போதைப் பொருள் கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஹெரோயின் போதைப் பொருள் பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த குடும்பஸ்த்தரும் கைது செய்யப்பட்டிருந்தார்.

யாழில் இருந்து கொழும்பு சென்ற குடும்பஸ்தருக்கு 6 வருடங்களின் பின் மரணதண்டனை வழங்கிய நீதிபதி மா.இளஞ்செழியன்

மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் ஒரு கிலோ 135 கிராம் நிறை உடையது என்பதுடன், கலப்படம் அற்ற தூய ஹெரோயின் என்பதும் பொலிஸ் விசாரணை மற்றும் சோதனைகளில் தெரியவந்தது.

இதனையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று விளக்கமறியில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டுருந்தார்.

ஒரு கிலோ 135 கிராம் தூய ஹெரோயினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனைக்காக கொண்டு சென்றமை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டு, அரச சட்டத்தரணிகளான தர்சிகா திருக்குமாரன் மற்றும் ஆறுமுகம் தனுஜன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

குறித்த வழக்கு விசாரணைகளில் குறித்த நபர் ஓரு கிலோ 135 கிராம் தூய ஹெரோயினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனைக்காக எடுத்து சென்றமை என்பன எந்தவித சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தப்பட்டமையால் குறித்த நபருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரண தண்டனை வழங்கி இன்று தீர்ப்பளித்தார்.

யாழ் நாவற்குழியை சேர்ந்தவரும், தற்போது வவுனியாவில் வசித்து வருபவருமான கந்தையா தியாகராஜா என்ற 55 வயது குடும்பஸ்தருக்கே 6 வருடங்களின் பின் இவ்வாறு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லண்டனில் கருப்பு யூலை தீர்வு தேடி மிக பெரும் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

லண்டனில் கருப்பு யூலை தீர்வு தேடி மிக பெரும் போராட்டம்

லண்டனில் கருப்பு யூலை தீர்வு தேடி மிக பெரும் போராட்டம்

லண்டனில் இலங்கையில் அரச அபாயங்கரவாத ,
அரசுகளினால் நடத்த பட்ட ,தமிழ் இனப்படுகொலை மற்றும் ,
கறுப்பு யூலை இனக்கலவர நினைவுகளை சுமந்து, மிக பெரும்
அறவழி போராட்டம் இடம்பெறுகிறது .

இந்த போரட்டத்தில் தமிழ் தேசியம் ,சுயநிர்ணயம் ,உரிமைகளை
வழங்க கோரி இந்த போராட்டம் இடம்பெறுகிறது .

இவ்வேளை ,அனைவரையும் கலந்து ஆதரவை வழங்கும் படி ,
ஏற்பட்டு குழுவினர் வேண்டுதல் விடுத்துள்ளனர் .

யூலை 25 மதியம் ஐந்து மணி முதல்,
எட்டு மணி வரை இந்த நிகழ்வு இடம்பெறுகிறது .

மேலதிக விபரம் கீழே

காலிக்கு அருகில் மீன்பிடி கப்பல் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

காலிக்கு அருகில் மீன்பிடி கப்பல் விபத்து

காலிக்கு அருகில் மீன்பிடி கப்பல் விபத்து

தென்கடலில் ஏற்பட்ட விபத்தினால் தீக்காயங்களுடன் நெடுநாள் மீன்பிடி படகில் இருந்த மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுப்ப கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காலியில் இருந்து சுமார் 431 கடல் மைல் தொலைவில் இலங்கைக்கு தென்மேற்கே ஆழ்கடல் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மீனவர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த மீனவர் காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஐந்து மீனவர்களுடன் “சசிந்த புதா” என்ற நெடுநாள் மீன்பிடி படகு கடலுக்கு சென்றதாக கடற்படை தெரிவித்துள்ளது.

காலிக்கு அருகில் மீன்பிடி கப்பல் விபத்து

காலியிலிருந்து இலங்கையின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஆழ்கடலில் வெளிநாட்டு படகு ஒன்றும் குறித்த நெடுநாள் படகும் மோதி விபத்து ஏற்பட்டது.

இதன்போது அந்த வௌிநாட்டு படகில் இருந்தவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கையின் நெடுநாள் படகில் இருந்த மீனவர் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகியதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் கடற்படைக்கு அறிவித்துள்ளது.

இதன்படி, கடற்படையின் “ஸ்பார் மிரா” என்ற வணிகக் கப்பல் ஊடாக தீக்காயமடைந்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்ததாக கடற்படையினர் தெரிவித்தனர்.

ரணிலுக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி கண்டனம்

குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி கண்டனம்

ஸ்வீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது மத சுதந்திரத்தை மீறும் செயல் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தெற்கின் பூகோள விழுமியங்களை மதிக்குமாறும், கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அமைதியின்மைக்கு இடமளிக்க வேண்டாம் என்றும் மேற்கத்திய நாடுகளிடம் ஜனாதிபதி வேண்டுகோள்
விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

ரயில் மோதி வாலிபன் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் சிரமம்

ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் சிரமம்

ரயில் எஞ்சின் மற்றும் இயந்திரத் தொகுதிகளுக்கான தட்டுப்பாடு காரணமாக வழமையான நேர அட்டவணைக்கு அமைய ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாளாந்த ரயில் சேவைகளுக்காக 74 எஞ்சின்களும் 193 இயந்திரத் தொகுதிகளும் தேவைப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், பயணிப்பதற்கு ஏற்ற வகையில் 58 எஞ்சின்களும் 162 இயந்திரத் தொகுதிகளுமே தற்போது உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் இருவர் பலி

விபத்தில் இருவர் பலி

பாணந்துறை மற்றும் வரகாபொல பகுதிகளில் நேற்று(11) இடம்பெற்ற விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை, கோரக்கான பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் என்பன மோதி விபத்துக்குள்ளானதில் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

வாதுவ பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தில் இருவர் பலி

இதேவேளை, வரகாபொல அங்குருவெல்ல வீதியின் மைனொலுவ பிரதேசத்தில், முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று பாதசாரி மீது மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த 62 வயதுடைய நபர் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னம்பிட்டி விபத்து; பேருந்து தொடர்பான அதிர்ச்சி செய்தி
Posted in இலங்கை செய்திகள்

மன்னம்பிட்டி விபத்து; பேருந்து தொடர்பான அதிர்ச்சி செய்தி

மன்னம்பிட்டி விபத்து; பேருந்து தொடர்பான அதிர்ச்சி செய்தி

மன்னம்பிட்டிய பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற விபத்தில் குறித்த பஸ் உரிய முறையில் அனுமதிப்பத்திரத்தைப் பெறாமல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இது தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (11) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

மன்னம்பிட்டி விபத்து; பேருந்து தொடர்பான அதிர்ச்சி செய்தி

மன்னம்பிட்டி விபத்து; பேருந்து தொடர்பான அதிர்ச்சி செய்தி

ND7804 இலக்கம் கொண்ட குறித்த பஸ் , தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடமிருந்து உரிய முறையில் அனுமதிப்பத்திரத்தை பெற்றிருக்கவில்லை.

கிழக்கு மாகாண சபையால் , 2018ஆம் ஆண்டு குறித்த பேரூந்துக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

அனுமதிப்பத்திர உரிமையாளருக்கு இதற்கு முன்னரும் நீதிமன்றத்தில் 10 000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தை செலுத்திய பின்னரும் அவர் இவ்வாறான தவறை இழைத்துள்ளார் என்று தெரிவித்தார்

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மரம்
Posted in இலங்கை செய்திகள்

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மரம்

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மரம்

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கம்பஹா தரால்வாவில் உள்ள ‘பன்டு கரந்த’ அல்லது க்ரூடியா சிலனிக்கா மரம் நேற்று (10) அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டது.

அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளுடன் தொடர்புடைய 15 பில்லியன் ரூபா நட்டத்தை தவிர்ப்பதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு மரம் அகற்றப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று மதியம் வந்த குழுவினர் இருபது நிமிடங்களில் மரத்தை அகற்றியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மரம்

எவ்வாறாயினும், தனது நிறுவனத்திற்கு தெரியாமல் மரம் அகற்றப்பட்டதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ்.வீரகோன் தெரிவித்துள்ளார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை முதல் மீரிகம வரையான பகுதியின் கட்டுமானத்திற்கு இடையூறாக இருக்கும் என்று கூறி 2021 ஆம் ஆண்டு பெப்ரவரியில் கம்பஹா தரல்வாவில் அமைந்துள்ள ‘பன்டு கரந்த’ அல்லது க்ரூடியா சிலனிக்கா மரத்தை அகற்ற திட்டமிடப்பட்டது.

அப்போது, ​​கம்பஹா மாவட்ட வன அதிகாரி தேவானி ஜயதிலக மற்றும் சுற்றாடல் அமைப்புகளிடமிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் அமைப்புகள் இன்று ஊடக சந்திப்பை ஏற்படுத்தி எதிர்ப்பினை வௌியிட்டனர்.

“இது ஒரு குற்றமாகும் மரம் காணாமல் போயுள்ளது, விசாரணை தேவை இது சட்டவிரோதமான செயல் என அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

காதல் ஜோடிக்கு வலை
Posted in இலங்கை செய்திகள்

காதல் ஜோடிக்கு வலை

காதல் ஜோடிக்கு வலை

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுருவாகலை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி தனது 16 வயது காதலனுடன் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் ஜோடிக்கு வலை

இருவரும் ஒரே பாடசாலையில் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் எனவும் காதல் உறவு குறித்து சிறுமியின் தாயார் எச்சரித்ததையடுத்து, கவலையடைந்த சிறுமி, செல்லபாவ பகுதியைச் சேர்ந்த 16 வயது தனது காதலனுடன் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் குறிப்பிட்ட மாணவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் நியமனம்
Posted in இலங்கை செய்திகள்

ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் நியமனம்

ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் நியமனம்

கனடாவைச் சேர்ந்த மார்க்-ஆன்ட்ரே ஃபிராஞ்சை இலங்கையில் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளராக ஐக்கிய நாடுகளின் செயலாளர்

நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் நியமித்துள்ளார். அவர் ஜூலை 8 அன்று தனது பதவியை ஏற்றுக்கொண்டார்.

24 ஆண்டுகளுக்கும் மேலாக ஐக்கிய நாடுகள் சபையில் ஃபிராஞ்ச் பணியாற்றியுள்ளார்.

ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் நியமனம்

இலங்கையில் ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளராக அவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர், சிறந்த நிர்வாகம், உள்ளூர் சமாதானத்தை

கட்டியெழுப்புதல் மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக லிபியாவில் ஐ.நா அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) வதிவிடப் பிரதிநிதியாகச் செயற்பட்டார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் மைத்திரிபால சிறிசேன
Posted in இலங்கை செய்திகள்

15 மில்லியன் ரூபாய் நட்டஈடு செலுத்தியுள்ள மைத்திரிபால

15 மில்லியன் ரூபாய் நட்டஈடு செலுத்தியுள்ள மைத்திரிபால

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், இதுவரை 15 மில்லியன் ரூபாயை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார் என உயர் நீதிமன்றில் பிரேரணை ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய தொகையான 85 மில்லியன் ரூபாயை 2024 ஜூன் 30 ஆம் திகதி முதல் வருடத்துக்கு 8.5 மில்லியன் ரூபாய் வீதம் 10 தவணைகளாக செலுத்தப்படும் என அவர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

15 மில்லியன் ரூபாய் நட்டஈடு செலுத்தியுள்ள மைத்திரிபால

அதனடிப்படையில், எஞ்சியுள்ள இழப்பீட்டை 2024 ஆம் ஆண்டு ஜூன் 30 முதல் 2033 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 வரை வருடாந்தம் வழங்குவதற்கு அனுமதிக்குமாறும் முன்னாள் ஜனாதிபதி தனது பிரேரணையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் சமர்ப்பித்த பிரேரணையில், முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் மாதாந்தம் 97,500 ரூபாய் ஓய்வூதியம் பெறுவதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் 54,285 ரூபாயையும் பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கைத் தமிழர்கள் தீண்ட தகாதவர்களா என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் கேள்வி

இலங்கைத் தமிழர்கள் தீண்ட தகாதவர்களா என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் கேள்வி

இந்தியாவிடம் 13 திருத்தங்களைக் கேட்கும் தமிழர்கள் ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவின் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பைக் கேட்கவில்லை? நாம் தீண்டத்தகாத தமிழர்களா? என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் 2332வது நாளாக சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கொட்டகையில் இன்று (11.07) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளை கண்டுபிடிக்கவும், எதிர்காலத்தில் தமிழர்கள் காணாமல் ஆக்கப்படுவதை தடுக்கவும், தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை அழைக்கும் எமது தொடர்போராட்டத்தின் 2332வது நாள்.

தமிழ் தாய்மார்களாகிய எமக்கு கூடிய விரைவில் அரசியல் தீர்வு வேண்டும். தமிழர்களின் இறையாண்மை கடந்த காலத்தில் வலிநது காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களை கண்டறிய உதவும், தற்போதைய தமிழர்கள் காணாமல் ஆக்கப்படுவதை தடுத்து நிறுத்தும். எதிர்காலத்தில் அனைத்து காணாமல் ஆக்கப்படுவதை கண்டிப்பாக நிறுத்தும்.

இலங்கைத் தமிழர்கள் தீண்ட தகாதவர்களா என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் கேள்வி

13வது திருத்தச் சட்டத்தை முன்வைக்கும் இந்த அரசியல் வாதிகள், இலங்கையில் இந்திய பாணி அரசியலமைப்பை அமுல்படுத்த ஒருபோதும் குரல் கொடுக்காதது ஆச்சரியமாக உள்ளது. இதற்குக் காரணம், ஒருவேளை அவர்கள் இந்திய அரசியல்வாதிகளை விடத் தாழ்ந்தவர்கள் என்று நினைக்கலாம் அல்லது தமிழர்களாகிய நாம் தீண்டத்தகாதவர்கள் என்று நினைக்கலாம்.

இந்த 13வது திருத்தத்தில் மோசமான எண் 13 உள்ளது. சந்திரனுக்கு அனுப்பிய அப்பல்லோ 13க்கு என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியும். 13ம் தேதி வெள்ளிக்கிழமையென்றால் நாங்களும் பயப்படுகிறோம். அமெரிக்காவில், பல இடங்களில், அவர்களின் உயரமான கட்டிடங்களில் 13 வது தளம் இல்லை.

கடந்த 36 ஆண்டுகளாக 13வது திருத்தம் தமிழர்களுக்கு என்ன செய்தது என்பதை நாம் அறிவோம். 1987ல் 13வது திருத்தம் வந்ததில் இருந்து பல வீரத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1,46,000 அப்பாவித் தமிழர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர். 50,000 தமிழ் குழந்தைகள் அனாதைகளானார்கள். 90,000 தமிழர்கள் விதவைகள் ஆனார்கள். 35,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். பல தமிழ் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். கற்பழிக்கப்பட்டனர். பின்னர் கொலை செய்யப்பட்டனர்.

இந்த 13வது திருத்தம் பற்றிய பேச்சு இன்னும் தமிழர்களுக்கு சேதம் விளைவித்து வருகிறது. தமிழர்களின் கோவில்கள் சிங்கள பௌத்த சின்னங்களாக மாற்றப்பட்டுள்ளன.

13வது திருத்தம் கேரள அரசியல்வாதிகளான நாராயணன் மற்றும் சிவசங்கர் மேனன் ஆகியோரால் பரிந்துரைக்கப்பட்டது. சேர ஆட்சியாளர்களை சோழர்கள் தோற்கடித்ததால் கேரள அரசியல்வாதிகள் தமிழகத்தில் தமிழர்கள் மீது இன்னும் கோபத்தில் உள்ளனர். அதே போல இந்த கேரள அரசியல்வாதிக்கு தமிழர் தாயகத்தில் உள்ள தமிழர்கள் மீது பைத்தியம். ஏனென்றால் நாமும் தமிழர்கள் என்பதால். 13 தமிழர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்த உருவாக்கப்பட்டது. எனவே, 13வது திருத்தம் போதும் 13வது திருத்தம் பற்றிய பேச்சும் போதும்.

உலகில் பெரும்பான்மை அடக்கு முறையாளர்களின் கீழ் நில அதிகாரம் மற்றும் பொலிஸ் அதிகாரம் கொண்ட நாடு இல்லை. இந்த 13வது திருத்தம் ஒரு தனித்துவமான கருத்தாகும். இது தமிழர்களை முட்டாளாக்கவே உருவாக்கப்பட்டது.

13வது திருத்தத்தை அமுல்படுத்த முடியாது ஏனெனில் ஒற்றையாட்சியில் சிங்கள பெரும்பான்மையினரால் மட்டுமே அமுல்படுத்தப்பட வேண்டும். இந்த ஒற்றையாட்சி நாட்டில் சுதந்திரம் பெற்று கடந்த 75 வருடங்களாக தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பதை நாம் அறிவோம்.

வெறுமனே, ஒற்றையாட்சி அரசின் கீழ் எந்த அரசியல் தீர்வும் இயங்காது. குறிப்பாக சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் போது எந்த அரசியல்வாதியும் இதை இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்றால், அவர்கள் இனி மேலும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

சிங்களவர்கள் இந்த முழுத் தீவிழும் பௌத்த மயமாக்கலையும் சிங்கள மயமாக்கலையும் விரும்புகிறார்கள் என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு மற்றும் அடக்குமுறை முழு உலகிற்கும் சிங்கள சிந்தனையை காட்டுகிறது.

எனவே, தமிழர்களின் அரசியல், நிலம், பொருளாதாரம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் தமிழ் இறையாண்மையே சிறந்த தீர்வாகும். அதனால் தான் தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்க பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் தாய்மார்களாகிய நாங்கள் கோருகிறோம். எஸ்டோனியா, குரோஷியா, ஸ்லோவேனியா, எரித்திரியா, மாசிடோனியா, கிழக்கு திமோர், மாண்டினீக்ரோ, கொசாவா, தெற்கு சூடான் மற்றும் பல இடங்களில் சுதந்திரம் பெற பொதுவாக்கெடுப்புகள் பயன்படுத்தப்பட்டன.

இந்த வாக்கெடுப்பு ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்கள் தங்கள் தலைவிதியை தீர்மானிக்கும் ஜனநாயக கருவியாகும். 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தக் கோரும் இந்த தமிழ் அரசியல் வாதிகள் சர்வஜன வாக்கெடுப்பு கேட்பதற்கு வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை.

13வது திருத்தம் வேண்டும் என்று மோடிக்கு கடிதத்தில் கையெழுத்திட்ட தமிழர்கள், தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் தற்போதைய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அமுல்படுத்த மோடியிடம் ஏன் கேட்கவில்லை. அரசியல் அதிகாரம் இல்லாத ஒன்றை ஏன் கேட்கிறார்கள்? 13ஐ இந்திய அரசியலமைப்புச் சட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அதில் ஒன்றுமில்லை.

இந்த தமிழர்கள் தங்களை இந்திய அரசியல்வாதிகளுக்கு நிகராக பார்க்க விரும்பாததால், தங்களை தீண்டத்தகாதவர்கள் என்று நினைக்கும் வகையில் 13வது சட்டத் திருத்தத்திற்கு அழைப்பு விடுப்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

தற்போதைய இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூட சரியான தீர்வு அல்ல. இது ஒரு பாராளுமன்ற அரசாங்க வடிவமாகும். இது ஒற்றையாட்சி அம்சங்களுடன் கூட்டாட்சி கட்டமைப்பாகும். இந்தியாவில் 25க்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வ மொழிகள் மற்றும் 28 மாநிலங்கள் மற்றும் 9 யூனியன் பிரதேசங்கள் இருப்பதால் இது செயல்படுகிறது. இந்தி பேசும் மக்கள் பெரும்பான்மையினர் அல்ல, 43மூ மட்டுமே. இந்தியாவில் எந்த இனத்திற்கும், மொழிக்கும் பெரும்பான்மை இல்லை. இந்திய ஒற்றையாட்சி நிலைத்திருக்க அதுவே காரணம். தமிழ் அரசியல்வாதிகள் பொதுவாக்கெடுப்பு நடத்த கோரா வேண்டும் எனத் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணிலுக்கு ராஜீவ் கொலையாளி கடிதம்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி ரணிலுக்கு ராஜீவ் கொலையாளி கடிதம்

ஜனாதிபதி ரணிலுக்கு ராஜீவ் கொலையாளி கடிதம்

தம்மை இலங்கைக்கு வர அனுமதி அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ராஜீவ் கொலை வழக்கில் இருந்து விடுதலையான சாந்தன் கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரில் இலங்கையை சேர்ந்த சுதந்திரராஜா என்ற சாந்தனும் ஒருவர். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

ஜனாதிபதி ரணிலுக்கு ராஜீவ் கொலையாளி கடிதம்

ஆனால் இவர், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோருடன் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் இருந்தபடி கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், இலங்கை குடிமகனான நான், முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டேன்.

தற்போது நான் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளேன். கடந்த 32 வருடங்களாக எனது தாயாரை பார்க்கவில்லை.

அவருடைய இந்த முதுமையான காலத்தில் அவருடன் வாழ விரும்புகிறேன். ஒரு மகனாக அவருக்கு உதவிகரமாக இருக்க ஆசைப்படுகிறேன்.

ஜனாதிபதி ரணிலுக்கு ராஜீவ் கொலையாளி கடிதம்

தயவுசெய்து நான் இலங்கைக்கு வர அனுமதி அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட பிறகு, கடவுச்சீட்டு, அடையாள அட்டையை புதுப்பிப்பது சம்பந்தமாகவும், இலங்கைக்கு திரும்புவது சம்பந்தமாகவும் ஆலோசனை

பெற வேண்டி இலங்கை துணை தூதருக்கும், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் ஏற்கனவே மனு அனுப்பினேன்.

இலங்கையில் என் மீது வழக்கு இல்லை. தயவு செய்து எனது சிரமத்தை கருத்தில் கொண்டு இலங்கைக்கு நான் வர உதவ வேண்டும் இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பு

சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பு

வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

தமிழ் நீதிபதிகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் சபையில் தெரிவித்த கருத்தை கண்டித்து இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அதேநேரம் இன்று இடம்பெறும் கண்டன போராட்டத்தில் வட மாகாணத்தின் அனைத்து சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

இராணுவ முகாமின் முன் கார் விபத்து | இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

சாரதிகளின் கவனயீனமே விபத்துகளுக்கு காரணம்

சாரதிகளின் கவனயீனமே விபத்துகளுக்கு காரணம்

இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை 09 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1126 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துகளில் 1190 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்திய படகுச் சேவைக்கு புலிகளின் கப்பல்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இந்திய படகுச் சேவைக்கு புலிகளின் கப்பல்

இலங்கை இந்திய படகுச் சேவைக்கு புலிகளின் கப்பல்

தமிழ் நாட்டின் நாகப்பட்டின துறைமுகத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் கப்பல்களைப் பயன்படுத்தி இலங்கை இந்திய படகுச் சேவையைத் தொடங்க இலங்கை தயாராக இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவுக்கும் (பாண்டிச்சேரி) காங்கேசன்துறைக்கும் எந்த நேரத்திலும் படகுச் சேவையைத் தொடங்க இலங்கை தயாராக இருப்பதாகவும் ஆனால் இந்தியா அனுமதி வழங்காததால்தான் இந்தச் சேவையைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2011 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி ஒரு கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

“இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால் எங்களுக்கு படகு சேவை வேண்டும். காங்கேசன்துறை துறைமுகத்தில் பயணிகள் முனையம் மற்றும் பிற வசதிகளை நாங்கள் அமைத்துள்ளோம்.

இலங்கை இந்திய படகுச் சேவைக்கு புலிகளின் கப்பல்

இந்தியாவுடன் எங்களுக்கு கிடைத்த சமீபத்திய தகவல்களின்படி, அவர்கள் படகு சேவையை மாத்திரமே ஆரம்பிக்க முடியும் என கூறியுள்ளார்கள்.

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திலிருந்து மாத்திரம் இந்த சேவையை தொடங்க முடியும் எனவும் இந்தியா குறிப்பிட்டுள்ளது” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியாவுடனான பாதுகாப்பு மதிப்பீட்டின்படி இலங்கைக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இந்த திட்டத்துக்கு யார் ஒப்புதல் அளித்தாலும், நாங்கள் அதை ஏற்றுக்கொள்வோம் என்றார்.

படகு நடத்துநர்கள் இந்திய அரசாங்கத்தை தொடர்புகொண்டு, தங்களின் நற்சான்றிதழ்கள் மற்றும் அவர்களின் உண்மையான தன்மையை நிரூபித்து, நாகப்பட்டினத்திலிருந்து படகு தொடங்குவதற்கு இந்தியாவிடம் அனுமதி பெற வேண்டும்.

இந்திய அரசாங்கம் பச்சை கொடி காட்டிய தருணத்திலிருந்து, எந்தவொரு கப்பலையும் பெறுவதற்கு நாங்கள் அனுமதி வழங்குவோம் என்றார்.

படகு நடத்துனர்களை இந்தியாவுக்கு வந்து அங்கு படகு நடத்துனர்களாக அங்கீகரிக்குமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இலங்கை இந்திய படகுச் சேவைக்கு புலிகளின் கப்பல்

படகு நடத்துனர்களிடம் இருந்து பதினைந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் கூறினார்.

இந்தியாவில் சில தெரிவு நடைமுறைகள் இருக்கும். படகு நடத்துனர்களுக்கான 15 விண்ணப்பங்களையும் இந்திய அரசாங்கம் அங்கீகரித்தால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகர் படகு நடத்துனர்களிடமிருந்து பதினைந்து விண்ணப்பங்களைப் பெற்றதாக தெரியவருகிறது.

இந்தியாவில் சில தேர்வு நடைமுறைகள் இருக்கும். படகு நடத்துனர்களுக்கான 15 விண்ணப்பங்களையும் இந்திய அரசாங்கம் அங்கீகரித்தால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்​கையில் மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்​கையில் மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு

இலங்​கையில் மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு

2023 – 2024 ஆண்டுகளில் மக்கள் தொகை மற்றும் வீட்டுமனை கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் 15வது மக்கள்தொகை மற்றும் வீட்டுமனை கணக்கெடுப்பு 2021 ஆம் ஆண்டில் நடத்த திட்டமிடப்பட்டது.

இலங்​கையில் மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு

ஆனால் கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக அதை ஒத்திவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

இலங்கையில் முதலாவது சனத்தொகை மற்றும் வீட்டுமனை கணக்கெடுப்பு 1871 ஆம் ஆண்டு நடத்தப்பட்டதுடன் இறுதியாக சனத்தொகை மற்றும் வீட்டுமனை கணக்கெடுப்பு 2012 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.

மக்கள் தொகை மற்றும் வீட்டுமனை கணக்கெடுப்பு பொதுவாக பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்

இத்தாலியில் 2 இலங்கையர்கள் பலி
Posted in இலங்கை செய்திகள்

இத்தாலியில் 2 இலங்கையர்கள் பலி

இத்தாலியில் 2 இலங்கையர்கள் பலி

வென்னப்புவ பகுதியில் வசித்து வந்த ஒருவரும் அவரது மகனும் தங்களது உறவினர்களுடன் இத்தாலியின் மிலன் அருகே உள்ள ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.

இதன்போது தனது 25 வயது மகன் நீரில் மூழ்குவதை பார்த்த 60 வயது தந்தை, மகனை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்துள்ளார். எனினும், இருவரும் நீரோட்டத்தில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, அங்கு சென்ற அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டன.