Tag: ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி கண்டனம்
குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி கண்டனம்
ஸ்வீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது மத சுதந்திரத்தை மீறும் செயல் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தெற்கின் பூகோள விழுமியங்களை மதிக்குமாறும், கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அமைதியின்மைக்கு இடமளிக்க வேண்டாம் என்றும் மேற்கத்திய நாடுகளிடம் ஜனாதிபதி வேண்டுகோள்
விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது
ஜப்பானில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
ஜப்பானில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
ஜப்பானின் முன்னாள் பிரதமர் யசுவோ ஃபுகுடா மற்றும் ஜப்பான் – இலங்கை சங்கம் இணைந்து டோக்கியோவில் நடத்திய காலை உணவு சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கலந்து கொண்டார்.
இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகாவை சந்தித்தார்.
ஜப்பானில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
இதன்போது நாட்டின் பொருளாதார மீட்சி குறித்து தெளிவுபடுத்திய ஜனாதிபதி, மீண்டும் எமது நாட்டிற்கு வந்து முதலீடு செய்யுமாறு ஜப்பானுக்கு அழைப்பு விடுத்தார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஜப்பான் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு இதன் போது ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.


















