Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
வவுனியாவில் கனடா பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி ஆகியோரின் கொடும்பாவி எரிப்பு
வவுனியாவில் கனடா பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி ஆகியோரின் கொடும்பாவி எரிப்பு
வவுனியாவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சிங்கள தமிழ் மற்றும் முஸ்ஸிம் தேசிய ஒற்றுமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக இன்று (24.06) மாலை முன்னெடுக்கப்பட்டது.
வவுனியாவில் கனடா பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி ஆகியோரின் கொடும்பாவி எரிப்பு

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ‘பயங்கரவாதம் எங்களுக்கு வேண்டாம் ஜஸ்டின் ட்ரூடோ இதை கேள், உங்களுடைய சுதந்திரத்தினை எங்களுக்கு தா, படுகொலை எங்கே நடந்தது?, ஜஸ்டின் ட்ரூடோ இதை கேள் உனக்கு தேவை பயங்கரவாதம், எங்களுடைய நாட்டில் கை போடாதே ஜஸ்டின் ட்ரூடோ’ போன்ற கோசத்தினை எழுப்பியவாறும், ‘இலங்கையின் இறையாண்மைக்கு கைகொடுங்கள், கனடா இனவாதத்தை பற்ற வைக்காதீர்கள் அது குற்றம்’ போன்ற பல்வேறு பதாதைகளை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இறுதியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகள் வீதியில் போடப்பட்டு எரிக்கப்பட்டன.
இவ் போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் உட்பட தமிழ், முஸ்ஸிம், சிங்கள இனத்தினை சேர்ந்த 30க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, இலங்கை இராணுவம் போர்க்குற்றம் இழைத்ததாக கனடா பிரதமர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
லண்டனில் கடைக்குள் நுளைந்த திருடர்களை துரத்திய தமிழன்
லண்டனில் கடைக்குள் நுளைந்த திருடர்களை துரத்திய தமிழன்
லண்டன் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி கடை ஒன்றுக்குள்
கத்தி முனையில் திருட நுழைந்த திருடனை ,அங்கு பணியில் இருந்த தமிழர் ,
கொட்டனை கொண்டு அவர்களை துரத்திய சம்பவம், வைரலாக பரவிய வண்ணம் உள்ளது .
திருட்டு ,துரத்தல் காட்சிகள் கீழ் உள்ள காணொளியில் பார்க்க
லண்டன் பகுதியில் கத்தி ,துப்பாக்கி முனைகளில் இவ்வாறு இடம்பெறும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது .
லண்டனில் கடைக்குள் நுளைந்த திருடர்களை துரத்திய தமிழன்
தனிமையில் கடைகளில் பணிபுரியும் நேரத்தை கண்காணிக்கும் திருடர்கள் ,
அந்த நேரத்தை கணக்கிட்டு ,உள்நுழைந்து பணம் ,பொருள் என்பனவற்றை திருடி சென்று தப்பி விடுகின்றனர் .
ஆனால் இ ங்கே முதன் முதலாக இவ்வாறு தமிழர் ஒருவர் புரிந்த செயல் தற்போது வியப்பையும் பர பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது .
ஆபத்தான கத்திமுனை திருடர்களை ,புலி தமிழம் மிரட்டியா செயல் பாராட்ட பெறுகிறது .
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் விசேட நிவாரணம்
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் விசேட நிவாரணம்: மீண்டும் விண்ணப்பிக்க கோரிக்கை
குறைந்த வருமானம் கொண்ட குடும்ப பயனாளர்களுக்கான நிவாரண தொகை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்படும் என பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சமூக கட்டமைப்பில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்திட்டத்தை வெளிப்படை தன்மையின் முன்னெடுக்கவும், தகுதியானவர்களுக்கு மாத்திரம் நிவாரணம் வழங்கவும் விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.
சமுர்த்தி பயனாளர்களில் 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் நிவாரண தொகையை பெற்றுக் கொள்வதற்கு தகுதியற்றவர்கள் என தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பரசீலனைகள் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டு, தகுதியற்றவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
அரச நிவாரண வழங்கல் திட்டத்தை மறுசீரமைக்கும் வகையில் அஸ்வெசும நிவாரண திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு விசேட ஒழுங்குவிதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும நிவாரண திட்டத்தில் குடும்ப அடிப்படையிலான பயனாளர்களின் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் விசேட நிவாரணம்: மீண்டும் விண்ணப்பிக்க கோரிக்கை
தகுதியானவர்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தால் அவர்கள் பிரதேச சபை ஊடாக எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மேன்முறையீடு செய்யலாம். அத்துடன் தகுதியற்ற ஒருவரின் பெயர் நிவாரண திட்ட பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தால் பொது மக்கள் எவரும் உரிய பிரதேச சபையில் முறைப்பாடு செய்வோம்.
குடும்ப பயனாளர்களுக்கான நிவாரண தொகை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்படும். அத்துடன் நீரழிவு நோயாளர்கள், சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் விசேட தேவையுடையவர்கள் என்ற அடிப்படையில் தனிநபர் பயனாளர்களின் பெயர் பட்டியல் எதிர்வரும் இருவார காலப்பகுதிகளுக்குள் வெளியிடப்படும்.
அஸ்வெசும நிவாரண செயற்திட்டத்தின் இரண்டாம் கட்ட விண்ணப்பம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் கோரப்படும். இந்த ஆண்டு விண்ணப்பம் செய்யாதவர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் விண்ணப்பிக்க முடியும்.
ஆகவே அஸ்வெசும நிவாரண செயற்திட்டம் சிறந்த முறையில் முன்னெடுக்கபடுகிறது. ஒருதரப்பினரது கோரிக்கைக்கு அமைய செயற்திட்டத்தை இடைநிறுத்த முடியாது. குறைப்பாடுகள் காணப்படுமாயின் அதனை ஆராய்ந்து தீர்த்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
துப்பாக்கி சூடு ஒருவர் மரணம்
துப்பாக்கி சூடு ஒருவர் மரணம்
இலங்கை கம்பகா பகுதியில் நடத்த பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார் .
பலியானவர் 28 வயதுடைய நபர் என தெரிவிக்க பட்டுள்ளது .இந்த படுகொலைக்கான கரணம் தெரியவரவில்லை .
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
வாலிபனை கடத்தி கப்பம் கோரிய கும்பல் சிறைபிடிப்பு
கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு
கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு
கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று (24) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர திருத்தப்பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றுக்கு சமூகமளிக்காத பிரதிவாதிகளுக்கு எச்சரிக்கை
நீதிமன்றுக்கு சமூகமளிக்காத பிரதிவாதிகளுக்கு எச்சரிக்கை
இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிராக கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி போராட்டம் நடத்தியமைக்கு எதிராக பொலிஸாரால் தொடுக்கப்பட்ட
வழக்கு விசாரணையை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த யாழ்ப்பாண நீதிமன்றம், சமூகமளிக்காத பிரதிவாதிகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
குறித்த வழக்கு கட்டளைக்காக நேற்று (23) எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்கள் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மட்டுமே மன்றில் சமூகமளித்திருந்தார்.
ஏனைய பிரதிவாதிகள் மன்றுக்கு சமூகமளிக்காத காரணத்தினால் கட்டளையை வழங்க முடியாதுள்ளதாக நீதவான் ஏ.ஆனந்தராஜா
நீதிமன்றுக்கு சமூகமளிக்காத பிரதிவாதிகளுக்கு எச்சரிக்கை
தெரிவித்ததோடு, எதிர்வரும் தவணைக்கு வருகை தராத பிரதிவாதிகளுக்கு பிடியாணை பிறப்பிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
பிரதிவாதிகள் சார்பாக சட்டத்தரணி கே.ரி.தவராசா ஆஜராகியிருந்தார்.
குறித்த வழக்கில் பிரதிவாதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், சாள்ஸ் நிர்மலாதன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணன்பவன்,
எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ்ப்பாண மாநகர முன்னாள் மேயர் வி.மணிவண்ணன், மற்றும் வேலன் சுவாமிகள் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தொண்டமானில் முதுகில் குத்தியவா்கள் பலா்
தொண்டமானில் முதுகில் குத்தியவா்கள் பலா்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று பலமாக இருப்பதற்கு அமரர் முத்து சிவலிங்கமும் பிரதான தூணாக இருந்தார் என இலங்கை தொழிலாளர்
காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (23) நடைபெற்ற முன்னாள் அமைச்சர் அமரர். முத்து சிவலிங்கத்துக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
மேலும் கருத்து தொிவித்த அமைச்சா், அமரர் முத்து சிவலிங்கம் பதவிகளுக்காக ஆசைப்பட்ட நபர் கிடையாது
. அவர் இன்று எம்முடன் இல்லாவிட்டாலும் மலையகம் எப்படி இருக்க வேண்டும் என்ற அவரின் சிந்தனைகளுக்கு நிச்சயம் நாம் உயிர்கொடுப்போம்.
முத்துசிவலிங்கம் ஐயா அமைதியான மனிதர். சேவை மனப்பான்மை கொண்டவர். தான் மட்டும் வளராமல் கட்சியில் உள்ள அனைவரையும் வளர்த்துவிட்ட மா மனிதர் ஆவார்.
தொண்டமானில் முதுகில் குத்தியவா்கள் பலா்
நான் சபரிமலைக்கு முதன் முறையாக மாலை அணிந்திருந்தவேளையிலேயே அவர் உயிரிழந்திருந்தார். மாலையை கழற்றி வைத்து விட்டாவது அஞ்சலி செலுத்த செல்வோமா என நினைத்தேன்.
ஆனால் முதன்முறை என்பதால் அதனை என்னால் செய்ய முடியாமல் போய்விட்டது. ஆனால் அந்த வலி இன்னும் என்னுள் இருந்துகொண்டு இருக்கின்றது.
50 வருடகாலத்துக்கு மேலாக மக்களுக்கும், கட்சிக்கும், தொழிற்சங்கத்துக்கும் சேவையாற்றிய அவருக்கு தகுந்த மரியாதை அளிக்கப்பட்டதா என்ற வினாவுக்கான விடை கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
அதுவும் எனக்கு வேதனையை தந்தது. ஒருவர் நம்முடன் இருக்கும்போது அவரின் முக்கியம் தெரியாது.
இல்லாமல்போனால்தான் அதன் வலி புரியும். முத்துசிவலிங்கம் போன்ற அரசியல் தலைவரை பார்க்க முடியாது. அவர்போல் ஒரு தலைவரை உருவாக்கவும் முடியாது.
தொண்டமானில் முதுகில் குத்தியவா்கள் பலா்
குரலை உயர்த்தி பேசுவது தலைமைத்துவம் கிடையாது. நாம் பேசும்போது மற்றயவர்களின் குரல்களை அடங்க வைப்பதுதான் தலைமைத்துவம். அப்படிபட்ட ஒரு தலைவர்தான் முத்துசிவலிங்கம்.
கட்சிக்காக விசுவாசமாக இருந்தார். மலையகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கினால். மக்கள் அன்பால் அவருக்கு மின்சார கண்ணா என்றுகூட பெயர் வந்தது.
ஆறுமுகன் தொண்டமானுக்கு தூணாக இருந்தார். முதுகில் குத்துவிட்டு பலர் வெளியேறினாலும் பக்க பலமாக இருந்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸை கட்டியெழுப்புவதற்கு பக்க பலமாக இருந்தார். கட்சியில் சமரச தூதுவராக செயற்பட்டார் என்றார்.
லண்டனில் தீபச்செல்வனின் ‘பயங்கரவாதி’ அறிமுக நிகழ்வு | பிரமாண்ட ஏற்பாடு
லண்டனில் தீபச்செல்வனின் ‘பயங்கரவாதி‘ அறிமுக நிகழ்வு | பிரமாண்ட ஏற்பாடு

ஈழத்து கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வன் எழுதிய பயங்கரவாதி நாவலின் அறிமுக நிகழ்வு (ஜூன் 24) இன்று இடம்பெறவுள்ளது.தாயகத்தில் இருந்து தீபச்செல்வன் கலந்து கொள்ளும் நாவல் அறிமுகம்
குறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பெருந்திரளான மக்கள் கலந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வணக்கம் இலண்டன் இணையத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்படும் விசேட நிகழ்வுகளில் ஒன்றான பயங்கரவாதி அறிமுக நிகழ்வு பிரித்தானிவின் பிரமாண்ட அரங்கான Alperton community schoolஇல் இடம்பெறவுள்ளது.
லண்டனில் தீபச்செல்வனின் ‘பயங்கரவாதி’ அறிமுக நிகழ்வு | பிரமாண்ட ஏற்பாடு
திரள் அமைப்புடன் வணக்கம் இலண்டன் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வுக்கு கிளி பீப்பிள் அமைப்பு ஆதரவு வழங்க அபியகம். முல்லை எக்ஸ்பிரஸ். ராம் றீரையில்ஸ். பிராங்கோ குரூப். அம்மா ஹோம் கெயார் சேவை. மிற்சி சாறீஸ் முதலிய அமைப்புக்கள் அனுசரனை வழங்குகின்றன.
நடுகல் நாவல் வாயிலாக உலக அளவில் கவனத்தை பெற்றுள்ள தீபச்செல்வனின் புதிய நாவல் பயங்கரவாதியும் பலதரப்பட்டவர்களாலும் விரும்பி வாசிக்கப்படும் நிலையில் லண்டனில் இந் நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது.
படைப்பாளி சந்திப்பு, இரவுணவு முதலிய நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி – ஈழம் ரஞ்சன்
கணவனால் சீரழிக்கபட்ட 16 மாணவிகள் காட்டி கொடுத்த மனைவி
கணவனால் சீரழிக்கபட்ட 16 மாணவிகள் காட்டி கொடுத்த மனைவி
இலங்கை களுத்துறை பகுதியில் தனியார் வகுப்பு நடத்தி
கொண்டிருந்த வாத்தியார் ஒருவர் தனனிடம் கலவி கற்ற 16 மாணவிகளை
பாலியல் உறவுக்கு உட்படுத்தி இன்பம் அனுபவித்துள்ளார் .
அவர்களுடன் நடத்த பட்ட பாலியல் காட்சிகளை தனது ,
கணணியில் பதிவாக்கி மறைத்து வைத்திருந்துள்ளார் .
அதனை கண்காணித்த மனைவி பாதிக்க பட்ட மாணவிகளின் பெற்றோர்களுக்கு தெரிய படுத்தியதை அடுத்து போலீசார்
கணவனை இளுத்து சென்று சிறையில் அடைத்துள்ளனர் .
மேற்படி சமபாவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
நாங்கள் இனவாதிகள் இல்லை ஸ்ரீதரன்
நாங்கள் இனவாதிகள் இல்லை ஸ்ரீதரன்
தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
இதன் போது இன்றைய தினம் (23) இடம்பெற்ற நீதிமன்ற வழக்கு தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், தமிழ் மக்கள் சார்பாக போராட்டத்தில் நாங்கள் கலந்து கொண்டமை சார்பாக தவறாக குற்றம் சாட்டப்பட்டு இன்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு பிற்போடப்பட்டுள்ளது.
மேலும் குருந்தூர் மலைக்கு உதய கம்பன்பில வருகை மற்றும் இனவாதம் பேசும் இனவாதிகள் யார் என்பது குறித்தும், தலைவர் பிரபாகரனின் மரபு அறிக்கை மற்றும் மருந்து தட்டுபாடு உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஒத்துழைப்பு
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஒத்துழைப்பு
இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் கடன் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை முழு ஒத்துழைப்பு வழங்கும் என ஜக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அண்டோனியா குட்டரெஸ் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.
பிரான்ஸின் பெரிஸ் நகரில் நடைபெறுகின்ற “புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தம்” தொடர்பிலான உச்சி மாநாட்டிற்கு இணையாக இடம்பெற்ற
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய நாடுகள சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அண்டோனியா குட்டாரெஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு உறுதிளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஒத்துழைப்பு
இலங்கையின் புதிய பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளின் முன்னேற்றம், பொருளாதார மீட்சிக்கான
செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகத்திடம் தெளிவுபடுத்தினார்.
நிலையான பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் போதும் நீண்ட கால பொருளாதார வேலைத்திட்டங்களை முன்னெடுகின்ற போதும்
வலுவான நிதிக் கட்டமைப்பொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புடனான முயற்சிகள் பற்றியும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.
நிலையான அபிவிருத்து இலக்குகளை மேம்படுத்தும் அதேநேரம் காலநிலையினால் ஏற்படக்கூடிய மோசமான பாதிப்புக்களை மட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படவுள்ள நீடிக்கப்பட்ட உபாய மார்க்க திட்டங்களை
எடுத்துக்காட்டி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பரிந்துரைக்கமைய முன்னெடுக்கப்படும் “காலநிலை சுபீட்சத்துக்கான திட்டமிடல்” தொடர்பிலும் செயலாளர் நாயகத்திற்கு விளக்கமளித்தார்.
பொலிஸாா் துப்பாக்கிச் சூடு
பொலிஸாா் துப்பாக்கிச் சூடு
ஊரகஸ்மங்ஹந்தி பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபர் ஒருவா் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மற்றுமொருவரை தாக்கிய சம்பவம் தொடா்பில் சந்தேக நபரை கைது செய்ய சென்ற போது, அவர் கூரிய ஆயுதத்தால் பொலிஸ் அதிகாரிகளை தாக்கியுள்ளார்.
அதனைத் தடுக்கும் நோக்கில் பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரின் காலில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளாா்.
சந்தேக நபர் 26 வயதுடையவர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதிரணில்
முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி ரணில்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார் என, முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி ரணில்
ஜனாதிபதி செயலகம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், நடமாடும் சேவை ஒன்று, ஜூலை மாத முற்பகுதியில் நடைபெறவுள்ளது.
இந்த நடமாடும் சேவைக்கு பிரதம விருந்தினராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளவுள்ளார் என முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்
பஸ் விபத்தில் ஒருவர் பலி – பலர் படுகாயம்
பஸ் விபத்தில் ஒருவர் பலி – பலர் படுகாயம்
ஹோமாகம, பிடிபன பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துடன், மேலும் 13 பேர் படுகாயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹோமாகம பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
பெண் போன்று நடித்து மாணவன் துஷ்பிரயோகம்
பெண் போன்று நடித்து மாணவன் துஷ்பிரயோகம்
பேஸ்புக்கில் பெண் போன்று நடித்து 14 வயது சிறுவனை கம்பஹா பிரதேசத்திற்கு வரவழைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன்,
தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.
துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுவன் ருவன்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் எனவும், பெண்ணாக தன்னை
காட்டிக்கொண்ட சந்தேக நபர், பேஸ்புக் ஊடாக அவருடன் உரையாடி பின்னர் கம்பஹாவுக்கு அழைத்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுவனின் தந்தை கம்பஹா பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, சிறுவனிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு, கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
யாழில் மனித சடலம் – வீடு அத்திவராம வெட்டிய பொழுது நடந்த பயங்கரம்
யாழில் மனித சடலம் – வீடு அத்திவராம வெட்டிய பொழுது நடந்த பயங்கரம்
யாழ்ப்பாணம் அல்லப்பிட்டி பகுதியில் வீட்டுக்கு அத்திவாரம் வெட்டும் பொழுது மனித சடலம் ஒன்று கண்டு பிடிக்க பட்டதால் பெரும் பர பரப்பு நிலவியது .
சடலம் கண்டு பிடிக்க பட்ட பகுதிக்கு நீதிபதி அவர்கள் நேரில் வந்து பார்வையிட்டு ,அகழ்வு பணியை கண்காணித்தார் .
இது யார் சடலம் எவ்வாறு வந்தது என்பது தொடர்பிலும் ,எத்தனை ஆண்டுகளாக சடலம் இங்கே புதைக்க பட்டது என்பது தொடர்பிலான மண் ஆய்வு ,என பல விடயங்கள் முடுக்கி விட பட்டுள்ளன .
மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் ,
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
அடையாளம் காண முடியாதவாறு சடலம் மீட்பு
அடையாளம் காண முடியாதவாறு சடலம் மீட்பு
யாழ். வல்லை – தொண்டைமானாறு வீதியில் அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று (22) காலை குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் சடலம் அடையாளம் காண முடியாதவாறு சிதைந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
லண்டன் காம லீலை சாமியார் பிணையின்றி சிறையில் அடைப்பு -சாட்சிகளை குழப்ப நடவடிக்கை
லண்டன் காம லீலைசாமியார் பிணையின்றி சிறையில் அடைப்பு -சாட்சிகளை குழப்ப நடவடிக்கை
லண்டன் காம லீலை சாமியார் பிணையின்றி சிறையில் அடைப்பு -சாட்சிகளை குழப்ப நடவடிக்கை சமீப காலமாக லண்டனில் உள்ள,கேரளாவை சேர்ந்த சாமியார் ஒருவரின் ,
காம லீலைகள் மற்றும் பணமோசடி
காம லீலைகள் மற்றும் பணமோசடி சம்பந்தமான செய்திகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
பாலியல் குற்ற சாட்டு
அவர் மீது சிலர் கொடுத்த பாலியல் குற்ற சாட்டு முறமை காரணமாக ,
நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை
அவரை லண்டன் போலீசார் கைது செய்து விசாரித்த பின்னர் ,நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்த பட்ட பொழுதும் ,
நீதிமன்றத்தினால் பிணை வழங்க மறுக்கப்பட்டு ,
தற்போது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தடுப்புக்காவலில் வைக்க பட்டுள்ளார் .
போலி பரப்புரை
இவருடைய கைதுக்கு பின்னால் ,சிவப்ரியன் என்பவர் உள்ளார் ,
அவர் சாமியாரின் பழைய பக்தகோடி என்றும் ,
போலியான பரப்புரைகள் ,
அவர் சாமியாரை உள்ளே தள்ளி விட்டு ,ஆலயத்தை அபகரிக்க திட்டமிட்டு ,
செயல்பபடுவதாக போலியான பரப்புரைகள் ,
சாமியாரின் ஆதரவு கூலிகளினால் மேற்கொள்ள படுகிறது .
இந்த ஆலய அபகரிப்புக்கு ,சிவப்ரியனுடன் சில பெண்களும் இணைந்து ,
செயல்படுவதாகவும், மக்களை குழப்பும் போலியான ,பொய்யான உண்மைக்கு புறம்பான ,ஆதாரமற்ற கதைகள் பரப்ப பட்டு வருகின்றன .
இந்த செய்தி காணொளி குறிப்பு காணொளியில் பார்க்க அழுத்துங்கள்
மக்களை ஏமாற்றியும் ,மந்திரத்தால் வாய் கட்டு போட்டு விடுவார் என்ற ,
பயமுறுத்தல் ஊடாகவும் , சாமியார் ஏமாற்றி சுருட்டும் பணத்தில்,
சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் ,போலி சாமியாரை ,மனித புனிதனாக்க
இவ்வாறு பரப்ப படுகின்றன .
லண்டன் காம லீலை சாமியார் பிணையின்றி சிறையில் அடைப்பு -சாட்சிகளை குழப்ப நடவடிக்கை
அதற்கு காரணம் ,அது யாதெனில் சாட்சிகள் பலமாக, மன திடத்துடன் உள்ளனர் ,இவ்வாறு சாமியாருக்கு எதிராக மாறிய பெண்களை,சாட்சிகளை ,
மக்கள் முன்பாக கலங்க படுத்துவதன் ஊடாக ,அவர்களுக்கு மன,
உளைச்சலை வழங்க முயற்சிகள் மேற்கொள்ள படுகின்றன .
அவ்வாறு புரிந்தால் சாட்சிகள் போலியானவர்கள் என்ற ,
தோற்றத்தை ஏற்படுத்தி சாமியாரை ,
தப்பிக்க வைக்கும் தந்திர குள்ள நரி திட்டமாக இது பார்க்க படுகிறது .
இவ்வாறு தரம் தாழ்தி செய்தி வெளியிட்டு ,சிவப்ரியனை மிரட்டுவதன் மூலம் ,
வழக்கு தொடுத்தவர்களை வாபஸ் வாங்க வைக்கலாம் என, ரூம் போட்டு ,
யோசித்தவர்களின், சில்மிஷங்கள் வெளியே கசிந்துவிட்டதை அவர்கள் அறியவில்லை.
யார் இந்த சிவப்ரியன்? இங்கிலாந்து சட்டத்துக்கு தலை வணங்கி ,
பலரின் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைக்கும் இலங்கை ,
தமிழருக்கான ஒரு பொக்கிசம்.
இலங்கை தமிழர்களை குறிப்பாக இளம் பெண்களை ,
சாமியாரிடம் இருந்து காப்பற்ற வேண்டும் என்று,
தனது சொந்த உயிரை பணயம் வைத்த, தனது மக்களுக்காக அயராது உழைத்து வருபவர் ,பிரிட்டன் தமிழர் மத்தியில் தனக்கென இடம் பிடித்தவர் .
சிவப்ரியனைப்பற்றி அவதூறு பரப்புவதன் மூலம் ,
அவரின் தர்ம யுத்தத்துக்கும் ,இலங்கை தமிழருக்கான சேவைகளையும் ,
தடுத்து நிறுத்தலாம் என சாமியாரின் அடியாட்கள் ,அல்லது ஆதரவாளர்கள் பகல் கனவு காண்கிறார்கள்.
இலங்கை தமிழரின் கற்பை சூறையாட நினைக்கும் ,
இந்த போலி மோசடி சாமியாருக்கு சிவப்ரியன் போன்றவர்கள்
சிம்மசொற்பனமே.
லண்டன் காம லீலை சாமியார் பிணையின்றி சிறையில் அடைப்பு -சாட்சிகளை குழப்ப நடவடிக்கை
குறிப்பாக அனைத்து ஈழத்தமிழர்களும் அவரின் பின்னால் அணிதி ரள்வார்கள்,என்பதனை சாமியாருக்கு வக்காளத்து வாங்கும் ,குழுவுக்கு
ஆணித்தரமாக கூறுவதோடு ,இலங்கை மக்களை ஏமாற்றுபவர்களை தமிழர்கள், சட்டத்தின் முன் நிறுத்துவார்கள்.
சாமியார் மீது சுமத்த பட்ட குற்ற சாட்டுக்கள் ,மற்றும் சாட்சிகளினால் வழங்க பட்ட ஆதாரங்கள் யாவையும் ,நீதிமன்றம் குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து ,முடிவெடுத்து தீர்ப்பினை வழங்கும் .
சிறை சாலையில் பலத்த கண்காணிப்பு
மேலும் பிணை இன்றி ஒருவர் நீதிமன்றின் உத்தரவின் பேரில் அடைக்க படுகிறார் எனின் ,அவர் சிறை சாலையில் பலத்த கண்காணிப்புக்கு உள்ளாக்க
படலாம் ,மேலும்,குற்றத்தின் விடயம் உச்சமாக அமைய பெற்றால் மட்டுமே இந்த பிணை மறுப்பு உத்தரவிட படும் .
அப்படி என்றால் இந்த வழக்கின் தன்மையை இபோழுதே ,
மக்கள் எளிதாக விளங்கி கொள்ள முடியும் .
மேலும் வழக்கு இடம்பெறும் பொழுது வழக்கை முன்னெடுத்து செல்பவர்களுக்கு எதிராக,இவ்வாறான போலிகளால் பரப்ப படும், இவ்வாறான
போலி செய்திகள் ,கவனத்திற்கு உள்வாங்க பட்டு ,அவர்கள் மீதும் ,நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்புக்கள் ஏற்படலாம் என்பதாக விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
சாமியார், ஆலயத்துடன் தொடர்பு கொண்ட பொழுதும் அழைப்புக்கு பதில் ,இல்லை
உங்கள் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் எம்மை தொடர்பு கொள்ளுங்கள் ,
துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் மரணம்
துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் மரணம்
துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயதுடைய சிறுவன் ஒருவன் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பன்வெல கெத்பஹூவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தையடுத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய சிறுவன் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் மரணம்
வயல்வெளியிலிருக்கும் குடிசையில் தனித்திருக்கும் போது குறித்த சிறுவன் துப்பாக்கியைக் கையாண்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதையடுத்து, வயலில் அன்றாட வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த சிறுவனின் பெற்றோர், குடிசைக்கு விரைந்து வந்து பார்த்த போது சிறுவன் காயமடைந்து கிடந்துள்ளான்.
சம்பவம் தொடர்பில் அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.



























