மஹிந்தானந்த பெர்னாண்டோவுக்கு கடூழிய சிறை
Posted in இலங்கை செய்திகள்

மஹிந்தானந்த பெர்னாண்டோவுக்கு கடூழிய சிறை

மஹிந்தானந்த பெர்னாண்டோவுக்கு கடூழிய சிறை

மஹிந்தானந்த பெர்னாண்டோவுக்கு கடூழிய சிறை ,முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின்

பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குறித்த இருவரும் குற்றவாளிகள் என மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​சதொச ஊடாக 14,000 கேரம் பலகைகளை கொள்வனவு செய்ததன் மூலம் 53 மில்லியன்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு

ரூபா நட்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது.

அதற்கமைய, குறித்த வழக்கு இன்று மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருட கடூழிய

கடூழிய சிறைத்தண்டனை

சிறைத்தண்டனையும், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்புக்கு முன்னர் நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்ப்பித்த இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி, இந்த

பிரதிவாதிகள் தங்கள் பதவியின் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் தவறான செயலைச் செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

இந்தத் தவறு காரணமாக, அரசாங்கம் 53 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பொது வரி வருமானத்தை இழந்துள்ளதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, இதுபோன்ற குற்றங்களைச் செய்யத் தயாராகி வருபவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் வகையிலும் ஊழல் எதிர்ப்பு ஆர்வலர்களை ஊக்குவிக்கும்

வகையிலும் தீர்ப்பை வெளியிடுமாறு இலஞ்ச விசாரணை ஆணைக்குழு சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தைக் கோரினார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர், நீதிபதி மஹேன் வீரமன் தலைமையிலான மூவரடங்கிய மேல் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

22ஆயிரம் பேர் டெங்கு பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

22ஆயிரம் பேர் டெங்கு பாதிப்பு

22ஆயிரம் பேர் டெங்கு பாதிப்பு

22ஆயிரம் பேர் டெங்கு பாதிப்பு ,22 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளது.

சுற்றுப்புற சூழல் காரணமாக பெருகிவரும் நுளம்பு கொசுக்களின் ஊடாக இந்த நோய் தொற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நுளம்புகளினால் காவிச் செல்லப்படும் கொடிய கிருமி ஒன்றே காய்ச்சலை ஏற்படுத்தி ,அது டெங்கு நோயாக மாற்றமடைந்து மரணமான சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், 22627 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் தாக்கம் என்பது சுற்றுப்புற சூழல் காரணமாகவே ,அதிகமாக இடம்பெற்று வருவதாகவும், நீர் நிலையிலிருந்து எழுந்து பறக்கும் நுழம்புகளினால், இந்த நோய் அதிகமாக பரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டு சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்கும்படி சுகாதாரப் பிரிவு அறிவித்து வருகின்ற பொழுதும், மக்கள் அதனை செவிமடுக்காது இருப்பதினாலேயே ,இந்த நோய் தொற்றுக்கொள்ள வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிர்பலிகளை தடுக்கவும் ,இந்த நோயின் தாக்குதலில் இருந்து எம்மை தற்காத்து கொள்ளவும் ,மக்கள் விழிப்பாக செயல்படும்படி வேண்டுதல் விடுக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து தூதுக்குழு சஜித் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

நியூசிலாந்து தூதுக்குழு சஜித் சந்திப்பு

நியூசிலாந்து தூதுக்குழு சஜித் சந்திப்பு

நியூசிலாந்து தூதுக்குழு சஜித் சந்திப்பு ,இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதிப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸுக்கும் (Vinston Peters)

பாடசாலைகளில் சித்திரவதை பிராமத்தார் எச்சரிக்கை
பாடசாலைகளில் சித்திரவதை பிராமத்தார் எச்சரிக்கை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (27) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

நியூசிலாந்து பிரதிப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸ், பிரதி அமைச்சரும், வெளிவிவகார அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகருமான மைக்கேல் ஆப்பிள்டன், பிரதி பிரதமரின் பணியாளர் குழாம்

எதிர்க்கட்சி தலைவரை சந்தித்த நியூசிலாந்து தூதுக்குழு

பிரதானி கலாநிதி ஜான் ஜோஹன்சன், நியூசிலாந்து வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா பிரிவுகளுக்கான

முகாமையாளர் திருமதி ஜோனா கெம்ப்கர்ஸ், இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எட்வட் அபல்டன் மற்றும் இலங்கைக்கான

நியூசிலாந்து பிரதி உயர்ஸ்தானிகர் திருமதி கேப்ரியல் ஐசக் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

நமது நாடு தற்போது எதிர்கொள்ளும் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான ஆதரவை பெற்றுத் தருமாறு எதிர்க்கட்சித் தலைவர்

சஜித் பிரேமதாச இதன்போது நியூசிலாந்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

வர்த்தகம், முதலீடு, தொழிற்கல்வி, மூன்றாம் நிலை கல்வி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை (RCEP) இன்

முக்கிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு

கீழ் ஈடுபாடு உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இதேபோல், இலங்கையை தன்னிறைவு பெற்ற பால் உற்பத்தி நாடாக மாற்றுவதற்காக 2013 ஆம் ஆண்டு கைச்சாதிடப்பட்ட பால் கூட்டுறவு

ஒப்பந்தத்தை (DCA) விரிவாக்குவது தொடர்பில் மறுபரிசீலனை செய்யுமாறு இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் நியூசிலாந்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

நவீன தொழில்நுட்பம், விவசாயிகளுக்கான பயிற்சி மற்றும் நிலைதகு விவசாய நடைமுறைகள் மூலம் DCA-வை வலுப்படுத்துவதன் ஊடாக, காலப்போக்கில், பால் இறக்குமதியில் நாடு சார்ந்திருப்பதை தவிர்க்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

மேலும், தொழிற்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் மூன்றாம் நிலைக் கல்வியில் நீண்டகால ஒத்துழைப்பை நிறுவனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட

இலங்கை-நியூசிலாந்து உயர்கல்வி மற்றும் திறன் கூட்டாண்மை செயலணியை தாபிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கோரிக்கை விடுத்தார்.

உயிர்வாழும் இலங்கை யானைக் குட்டியொன்றின் முழு அளவிலான புகைப்படத்தினை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸுக்கு வழங்கி வைத்தார்.

தேசிய சரணாலயத்தில் யானை குட்டியொன்று சுதந்திரமாகப் பிறப்பதை சித்தரிக்கும் இந்த புகைப்படம், இலங்கையின் பாதுகாப்பிற்கான ஆழ்ந்த

அர்ப்பணிப்பைக் குறிப்பதோடு, இரு தீவு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்பையும் குறிக்கிறது.

பாடசாலைகளில் சித்திரவதை பிராமத்தார் எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலைகளில் சித்திரவதை பிராமத்தார் எச்சரிக்கை

பாடசாலைகளில் சித்திரவதை பிராமத்தார் எச்சரிக்கை

பாடசாலைகளில் சித்திரவதை பிராமத்தார் எச்சரிக்கை ,பாடசாலைகளுக்குள் பிள்ளைகள் முகம்கொடுக்கும் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், பாடசாலை மாணவர்களுக்கு எதிரான சித்திரவதைகளுக்கு இனியும்

இடமளிக்கக்கூடாதெனவும், அவ்வாறான சம்பவமொன்று இடம்பெறுமாயின் உடனடியாக அதிபர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கல்வியமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் பேச்சு

இது தொடர்பில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த அதிபர்களை தெளிவுபடுத்தும் வகையில் கல்வியமைச்சில் நேற்று (27) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,

பிள்ளைகள் ஒரு அரசின் அடிப்படை பொறுப்பாகும். இலங்கை, ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் தொடர்பான பிரகடனத்தில்

கைச்சாத்திட்டுள்ளதன் ஊடாக சிறுவர் உரிமைகளை பாதுகாப்பதற்கும், அவர்களின் உச்சகட்ட நலனிற்காக செயற்படுவதற்கும் கடமைப்பட்டுள்ளது.

இதனூடாக குறித்த பொறுப்பு அரசிற்கும், பாடசாலை கட்டமைப்புக்கு பொறுப்பாக செயற்படும் அரச பிரதிநிதிகளான அனைத்து அதிகாரிகளுக்கும் உள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்

அண்மைக்காலமாக பதிவாகும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களை கண்ணோக்கும் போது, பாடசாலை கட்டமைப்பிற்குள் சிறுவர்கள்

முகம்கொடுக்க நேரிட்டுள்ள துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்ப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.

எனினும் வீடு உட்பட பாடசாலையும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான மற்றும் பொருத்தமான சூழலாக அமைய வேண்டுமென சுட்டிக்காட்டிய பிரதமர்,

பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புகின்றனர்.

இதனால் பாடசாலை சூழல் பிள்ளைகளுக்கு பாதுகாப்பற்ற சூழலாக மாறுவதற்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாதென பிரதமர் வலியுறுத்தினார்.

பிள்ளைகளுக்கு எதிராக இடம்பெறும் சித்திரவதை

பாடசாலை கட்டமைப்பிற்குள் பிள்ளைகளுக்கு எதிராக இடம்பெறும் எந்த வகையிலான சித்திரவதையும் தொடர்ந்தும் இடம்பெறக்கூடாதெனவும், பாடசாலைக்குள் பிள்ளை முகம்கொடுக்கும் உடல் ரீதியான துஷ்பிரயோகம்,

பாலியல் துஷ்பிரயோகம், வேறு வகையிலான புறக்கணிப்பு, உள ரீதியான துஷ்பிரயோகம் என எதுவாக இருந்தாலும் அதனை மறைத்து அல்லது புறக்கணிப்பு செய்வதை மேற்கொள்ளக்கூடாதெனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

அது மறைப்பதற்கு அல்லது புறக்கணிப்பதற்கான விடயம் அல்ல. பாடசாலையின் பிரதான அதிகாரம்மிக்க நபராக பாடசாலை அதிபரினால் அவை குறித்து துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறான செயற்பாடுகளை அலட்சியப்படுத்துவது முழு பாடசாலை கட்டமைப்பும் தோல்வியடைவதற்கு காரணமாக அமைகிறது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் மிக விரைவாகவும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும்.

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான பதிலளிப்பு தாமதமடையும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதற்கு முகம்கொடுத்த பிள்ளை உடல், உள ரீதியாக வழமைக்கு திரும்ப முடியாத அளவிற்கு பாதிப்பை எதிர்கொள்ளும்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் துரித தலையீடு செய்வதன் ஊடாக உயிரைக் காப்பாற்றுவதற்கும், சுய கௌரவத்தை பாதுகாத்து நீதியை நிலைநாட்டுவதற்கும் சந்தர்ப்பம் கிடைக்குமென பிரதமர் தெரிவித்தார்.

சிறுவர்களுக்கு எதிரான வன்முறை

ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறையிலுள்ள ஏனைய அதிகாரிகள் சிறுவர்களுக்கு எதிரான அனைத்து வகையிலுமான வன்முறைகளை அடையாளம் காண்பதற்கும், தடுப்பதற்கும், அறிக்கையிடுவதற்கும்

தேவையான அறிவு மற்றும் அது தொடர்பில் செயற்படுவதற்கு தேவையான வழிமுறைகள் குறித்தான அறிவைக் கொண்டிருப்பதும் மிக முக்கியமானது என்பதையும் பிரதமர் இங்கு சுட்டிக்காட்டினார்.

தொடர்ச்சியாக பிள்ளைகளுடன் தொடர்புபடும் உங்கள் அனைவரும் சிறுவர் உரிமைகள் தொடர்பிலும், சட்டரீதியிலான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் அறிந்திருத்தல் வேண்டும்.

சிறுவர் உள்ளங்களை புரிந்துகொள்வதற்கும், சிறுவர்களுடன் சரியான முறையில் செயற்படுவதற்கும் உதவும் சிறுவர் உளவியல் கல்வியை

பெற்றிருப்பதும் மிகவும் முக்கியமானதென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

சிறுவர்களுக்குள் ஏற்படும் அழுத்தங்களை அடையாளம் காண்பதற்கும், சிறுவர்களுக்குள் ஏற்படும் அதிருப்தி அவர்களின் கற்றல் செயற்பாடுகளை பாதிக்கும் விதத்தை புரிந்துகொள்வதற்கும் சிறுவர்களுடன் மிகவும்

நெருக்கமாகவும் கருணையுடனும் பழகி அவர்களுக்கு பதிலளிப்பதற்கு கல்வித் துறையில் சேவையாற்றும் அதிகாரிகள் பயிற்சிகளைப் பெற்றிருப்பது

உட்பட தேவையான சந்தர்ப்பங்களில் குறித்த அறிவைப் பயன்படுத்துவதும் மிகவும் முக்கியமானதென பிரதமர் குறிப்பிட்டார்.

சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் அரசின் வளமான நாடு – அழகான வாழ்க்கை கொள்கை பிரகடனத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் மற்றும் அனைத்து வகையிலான சித்திரவதைகளிலிருந்து அவர்களை பாதுகாப்பது அதன் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் நீதிபதி எல்.டீ.பீ.தெஹிதெனிய, இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைவர் நிமல் ஜீ புஞ்சிஹேவா, ஆணையாளர் பேராசிரியர்

டீ.தனராஜ், மேல் மாகாண கல்வி செயலாளர் நிஷாந்தி ஜயசிங்க உள்ளிட்ட அதிகாரிகளும் அதிபர்களும் கலந்துகொண்டனர்.

சிறப்பு பாதுகாப்பு எம்பிக்களுக்கு
Posted in இலங்கை செய்திகள்

சிறப்பு பாதுகாப்பு எம்பிக்களுக்கு

சிறப்பு பாதுகாப்பு எம்பிக்களுக்கு

சிறப்பு பாதுகாப்பு எம்பிக்களுக்கு ,பாதுகாப்பு கோரும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை தேசிய பாதுகாப்பு சபைக்கு பரிசீலனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு தொடர்பான இறுதி மதிப்பீட்டு அறிக்கைகளைப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் பாராளுமன்ற வளாகத்தில்

நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றபோது பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக பல எதிர்க்கட்சித் தலைவர்கள் சமீபத்தில் சபாநாயகரைச் சந்தித்து, நடைபெற்ற

கலந்துரையாடலின் போது, தங்கள் பாதுகாப்பு பிரச்சினைகளை முன்வைக்க கலந்துரையாடலைக் கோரி நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கைகளின் முன்னேற்றம் குறித்து தனக்குத் தெரிவிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து இதன்போது கருத்து தெரிவித்த பதில் பொலிஸ்மா அதிபர், சமீபத்திய மனித கொலைகள், பல குற்றக் கும்பல்களுக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும்

இடையிலான மோதல்களின் விளைவாகும் என்றும், உள்ளூர் அரசியல்வாதிகள் அந்தக் குற்றங்களில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு தேவை

இதன்போது எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு தேவை தொடர்பில் விளக்கமளித்துள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தமக்கு தேவையான பாதுகாப்பை வழங்க வசதிகள்

இல்லையென்றால், தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கியை வழங்குமாறு கோரியுள்ளார்.

இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உயர் ஜனநாயக பண்புகள் கொண்ட நாட்டில், பாதுகாப்புக்காக துப்பாக்கிகளை வழங்கக்கூடாது என்று கூறினார்.

ஒவ்வொரு தனிநபரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.

பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தனது கருத்தைத் தெரிவிக்கும் போது, பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கை கிடைக்கும் வரை அவர்களின் முழு பாதுகாப்பையும் அகற்றாமல் பாதுகாப்பு தேவை என்று கூறும் பாராளுமன்ற

உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது பொருத்தமானது என்றும், மதிப்பீட்டு அறிக்கையைப் பெற்ற பிறகு அதன் பரிந்துரைகளின்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

புதையல் தோண்டிய ஏழுபேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஏழுபேர் கைது

புதையல் தோண்டிய ஏழுபேர் கைது

புதையல் தோண்டிய ஏழுபேர் கைது ,திருக்கோவில் போலீஸ் பிரிவில் விநாயகபுரம் ஓரம் தேசத்தில் சட்ட விரோதமாக புதையல் தோண்டிய பெண்ணிருவர் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

காவல்துறையருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அதிகாலை இதைச் சுற்றி விழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட பொழுதே ,

அகழ்வு பணியில் ஈடுபட்டிருந்த உபகரணங்களுடன் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்,

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 50 வயது பெண் 41 முதல் 64 வயது இடைப்பட்ட சந்தேகம் அவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது,

திருக்கோவில் பகுதியில் புதையல் தோண்டியவர்கள் கைது

கைது செய்யப்பட்டவர்கள் ,திருக்கோவில் ,கப்புத்தலை ,இதழ் காகித, வத்தளை , விநாயகபுரம் பகுதிகளை சேர்ந்த உள்ளன விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த இடத்தில் புதையல் கிடைப்பதாக போலியான பரப்பப்பட்ட தகவலை எடுத்து அந்த புதிய தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஆனால்புதையல் தோண்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட பொழுது அந்த நடவடிக்கை தோல்வியில் முடிந்துள்ளது.

விடுதலைப் புலிகளுடைய தங்கங்கள் பணங்கள் நகைகள் ஆயுதங்கள் என்ன புதைத்து வைக்கப்பட்ட சம்பவங்கள் இடம் பெற்றிருந்தன .

அவ்வாறு அந்த புதையல் தோண்டும் சம்பவங்கள் கடந்த காலங்கள் நடைபெற்றுது .

சிலர் அதனை மீட்டு சென்றதாகவும் சிலரின் தோற்றுப்போனதாகவும் வரலாறு காணப்படுகின்றது .

காவல்துறை திடீர் சுற்றிவளைப்பு

அவ்வாறான வேளையிலேயே திருக்கோவில் பகுதியில் இந்த புதையல் தோண்டும் நடவடிக்கை இடம் பெற்ற பொழுது ,காவல்துறை திடீர் சுற்றிவளைப்பு நடத்தி அவர்களை கைது செய்து இழுத்துச் சென்றுள்ளார்.

கண்டியில் நீர்வெட்டு மக்கள் அவதி
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் அவதி கண்டியில் நீர்வெட்டு

மக்கள் அவதி கண்டியில் நீர்வெட்டு

மக்கள் அவதி கண்டியில் நீர்வெட்டு ,கண்டியில பல பகுதிகளுக்கான 36 மணி நேரம் நியர் விநியோகம் துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த நீர் துடிப்பை எடுத்து மக்கள் சொல்லு நதியலை சந்தித்து வருகின்றனர்.

கண்டி குட்செட் பேருந்து நிலைய கட்டுமான பணிகளின் போது நீர் விரிவாகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நீர் விரியும் துண்டிக்கப்பட உள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

நீர் விநியோக வழிகள் தடை

அதன்படி இன்று இரண்டு மணி முதல் 30 ஆம் தேதி அதிகாலை 2 மணி வரை 36 மதியான நேரத்துக்கு அதாவது மூன்று நாட்களுக்கு இந்த நீர் விநியோக வழிகள் தடைப்படும் என அவை தெரிவித்துள்ளது.

இதனால் இந்த பகுதியில் உள்ள அடுத்த மக்களும் சொல்லாத துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர்.

குடிநீர் என்பது மக்களுடைய அத்தியாவசிய தேவை

குடிநீர் என்பது மக்களுடைய அத்தியாவசிய தேவையாக இருக்கும் பொழுது இந்த நீர் விநியோகம் தடைபட்டுள்ளதால் அங்கு வாழ்கின்ற மக்கள் அதிர்ச்சியில் வளர்ந்துள்ளதுடன் சிரமங்களை சந்தித்து வருகின்றது .

கட்டுப்பாடு பணிகளை ஆரம்பிக்கின்ற பொழுது அதனை கவனமாக கையாண்டு அதை கிட்ட வகையில் செய்திருக்க வேண்டும் ஆனால் திடீரென இவ்வாறு தெரிவிப்பதே மக்களுக்கு பெரு நேரிடலையும் கோபத்தையும் கிளப்பி இருக்கின்றது.

சவால்விடும் வன்னிமைந்தன் பேச தயாரா
Posted in Tik Tok வன்னிமைந்தன் உரையாடல்கள் இலங்கை செய்திகள்

வன்னிமைந்தன் சவால் பேச தயாரா

வன்னிமைந்தன் சவால் பேச தயாரா

வன்னிமைந்தன் சவால் பேச தயாரா வெளிநாட்டு கட்டமைப்புகளுக்கு வண்ணிமைந்தன் பகிரங்க சவால் விட்டு அவரது திட்டோத்திரத்தில் பேசியிருக்கின்றார் .

கடந்த 16 வருடங்களாக அமைப்புகள் எனக் கூறிக்கொண்டு மக்களுடைய உணர்வுகளை மிதித்து , தாயக தேசிய விடுதலைக்கு எதிராக செயல்படுவதாக அவர் குற்றம் சுமத்துகிறார் .

16 ஆண்டுகளாக சிங்கள தேசிய வாதம் ,தமிழருக்கு எதிராக தனது கருத்து க்களையும் ,அடக்குமுறைகளையும் நடத்தி வருகிறது.

எங்கள் இனம் எழுந்து வாழ வேண்டுமாக இருந்தால் ,எங்களுடைய இனமான விடுதலை அந்த மண்ணில் நிமிர வேண்டிய எழுச்சி பெறவேண்டிய காலம் இருக்கிறது.

ஆனால் தன்மானத் தமிழர்களாக வாழ்ந்து கொண்டிருந்த எங்கள் இனமான மக்கள் இன்று தலை தெறிக்க ஓடுகின்ற நிலையும் ,அதிலிருந்து மீண்டு எழ முடியாத சூழலும் உருவாகிக் கொண்டிருக்கிறது.

தாங்கென்னா வலிகளையும் துயரங்களையும் சுமந்து வாழுகிற என் தமிழ் உறவுகள் ,இனி எப்படி எழுச்சி கொள்ள வேண்டும் என்பதுதான் இன்றைய கேள்வியாகும்.

ஆகவே தான் சொல்கிறோம் நாங்கள் நிமிர்ந்து வாழ வேண்டுமாக இருந்தால் ,எங்கள் இனம் எழுந்து வாழ வேண்டுமாக இருந்தால் நாங்கள் நாங்களாக மாற வேண்டும்.

ஆதலால் தான் வன்னிமைந்தன் வெளிநாட்டு விடுதலைப் புலிகள் சர்வதேச அமைப்புகளை ஒன்று சேரும்படி அழைப்பு விடுத்துள்ளார் .

இல்லாவிட்டால் நேரடியாக வந்து பேசுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அழைப்பை ஏற்று இவர்கள் வந்து பேச வேண்டும் என்பது அவரது கோரிக்கையாகிறது.

இல்லாவிட்டால் வரும் ஆண்டுக்குள் நீங்கள் காணாமல் போவீர்கள் என அவர் எச்சரிக்கிறார் .

காணொளியில் முழு விவரம் கேட்கத் தவறாதீர்கள்

இதில் அழுத்தி காணொளி பார்க்க

https://www.youtube.com/watch?v=aEIHqYlAEdQ
தமிழர்கள் விடயத்தில் காணி அமைச்சரின் உருட்டு
Posted in இலங்கை செய்திகள்

தமிழர்கள் விடயத்தில் காணி அமைச்சரின் உருட்டு

தமிழர்கள் விடயத்தில் காணி அமைச்சரின் உருட்டு

தமிழர்களின் காணி அபகரிப்பு தொடர்பில் காணி அமைச்சு வெளியிட்டுள்ள தகவலைப் பார்த்து அரசியல்வாதிகள் உட்பட மக்கள் கோபமடைந்துள்ளனர்.

“வடக்கு மக்களின் சொந்தக் காணிகளை அவர்களுக்கு உரித்துடன் வழங்கவே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆனால், வர்த்தமானி அறிவித்தலைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ள தமிழ் அரசியல்வாதிகள் சிலர், மக்களையும் தவறாக வழிநடத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.”

இவ்வாறு காணி அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“வடக்கில் மக்களின் காணிகளை அபகரிக்கும் நோக்கம் அரசுக்குக் கிடையாது. கைவிடப்பட்டிருக்கும் அவர்களின் சொந்தக் காணிகளை அவர்களுக்கு உரித்துடன் வழங்கவே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமையவே வர்த்தமானியை அரசு வெளியிட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ள தமிழ் அரசியல்வாதிகள் சிலர், மக்களையும் தவறாக வழிநடத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

தமிழ் மக்களின் சொந்தக் காணிகளை ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசு சுவீகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது என்று

பொய்யான கோஷத்தை முன்வைத்து வடக்கு மக்களை வீதியில் களமிறக்கி அரசுக்கு எதிராகப் போராட வைக்கத் தமிழ் அரசியல்வாதிகள் சிலர் எத்தனிக்கின்றனர்.

எனவே, வடக்கு மக்கள் உண்மையை நிலைமையைப் புரிந்துகொள்ள வேண்டும். போலி வேடம் போட்டு உங்களைத் தவறாக வழிநடத்தும் தமிழ் அரசியல்வாதிகளை நம்ப வேண்டாம் என்று வடக்கு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.

மாம்பழம் விற்ற பட்டதாரி ஆளுநர் செயலகம் பரபரப்பு
Posted in இலங்கை செய்திகள்

மாம்பழம் விற்றபட்டதாரி ஆளுநர்செயலகம் பரபரப்பு

மாம்பழம் விற்றபட்டதாரி ஆளுநர்செயலகம் பரபரப்பு

மாம்பழம் விற்றபட்டதாரி ஆளுநர்செயலகம் பரபரப்பு பட்டதாரி ஒருவர் ஆளுநர் செயலகம் முன்பாக மாம்பழ விற்பனையில் ஈடுபட்டதால் அங்கு அசெளகரிய சூழ்நிலை ஏற்பட்டு வளாகம் பரபரப்பாகியுள்ளது.

திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பட்டதாரி ஒருவர் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் முன்பாக நேற்று (26)

தனது பட்டத்தை மாம்பழக் கூடையில் வைத்துக்கொண்டு மாம்பழ வியாபாரத்தில் ஈடுபட்டு தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் பட்டத்தை முடித்துக்கொண்ட அவர், தனக்கு இதுவரையில் எந்தத் தொழிலும் கிடைக்கவில்லை என்றும்,

க.பொ.சாதாரண தரம் மற்றும் உயர் தர படிப்பை பூர்த்தி செய்தவர்களுக்கு இலங்கை அரசு தொழில் வழங்கி வருகின்றன. ஆனால் பல்கலைக்கழகம் சென்று பட்டம்பெற்ற எங்களுக்கு

எந்தத் தொழிலையும் வழங்க முன்வரவில்லை. இது எந்த விதத்தில் நியாயம் என்று நான் கேட்கிறேன்.

க.பொ.சாதாரண தரம் மற்றும் உயர் தர படிப்பை பூர்த்தி செய்தவர்களுக்கு அரச தொழில் மிக சுலபமாக கிடைக்கின்றன. அவ்வாறனவர்களுக்கு தொழில் வழங்கும் செயற்பாட்டில் அதிக முக்கியத்துவத்தை அரசு கொடுப்பதாக சொல்லியிருந்தால்,

நாங்கள் பல்கலைக்கழகத்திற்குச் சென்று ஏன் பட்டம்பெறவேண்டும்? எங்களின் பணத்தையும், ஐந்து வருடங்களையும் அநியாயமாக செலவு செய்திருக்கமாட்டோம்.

பட்டம் வைத்திருக்கும் நாங்கள் மாம்பழம் மற்றும் மீன் வியாபாரிகளாக தொழில் செய்யவேண்டிய நிலைமைக்கு இன்று ஆளாகியுள்ளோம்.

ஆனால் க.பொ.சாதாரண தரம் மற்றும் உயர் தரம் கற்றவர்களுக்கு அரச தொழில் மிக சுலபமாகக் கிடைத்து தொழிலை செய்பவர்களாக இருக்கின்ற நிலைமையே எமது நாட்டில் உள்ளது.

இதை பார்க்கும் போது பெரும் மன உளைச்சலை எங்களுக்கு ஏற்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

அரசே எங்களின் பட்டத்திற்கு தொழில் தரவேண்டும். அல்லது எங்களின் பட்டத்தை மீளப்பெற வேண்டும் என்றே நான் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன் என்று அந்த பட்டதாரி தெரிவித்தார்.

மகள் முன் இறந்த தந்தை
Posted in இலங்கை செய்திகள்

மகள் முன் இறந்த தந்தை

மகள் முன் இறந்த தந்தை

மகள் முன் இறந்த தந்தை , ஒருவர் மரணம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கே காலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பிறகு வீதியில் இடம் பெற்ற விபத்தொண்டில் ஒன்றாக பயணித்த தந்தை மகள் முன்பாக தந்தை நசிந்து பலியான சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


ராக் ஒன்று மோட்டார் சைக்கிள் சென்ற தந்தை மகளை தாக்கியது.

இதன் பொழுது தந்தை அந்த ட்ரக்கில் நசை உண்டு இறந்த சம்பவம் பரபரப்பை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நசிந்து பலியான தந்தை மக்கள் முன் நடந்த அகோரம்

53 வயது உடைய நபரை மகள் முன்னால் நசிந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதை

வாகன சாரதிகள் அலட்சிய போக்கின் காரணமாகவே இந்த அப்பாவி உயிர் உண்டு பறிக்கப்பட்டுள்ளதாக சமூகவலைத்தளங்கள் செய்திகள் பரவி வருகிறது

விழிப்புணர்வு அற்ற தேசமாகவும் சட்டங்கள் இறுக்கப்படாத நிலையிலுமே இந்த விபத்துக்கள் தொடராக இடம்பெற காரணமாக உள்ளது இந்த விபத்து எடுத்துக்காட்டுகிறது.

தேங்காயின் விலை மேலும் அதிகரிக்கும்
Posted in இலங்கை செய்திகள்

தேங்காயின் விலை மேலும் அதிகரிக்கும்

தேங்காயின் விலை மேலும் அதிகரிக்கும்

இலங்கையில் தேங்காயின் விலை மேலும் அதிகரிக்கும் எதிர்வரும் காலங்களில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலைமை கூட ஏற்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்ளூர் சந்தையில் தேங்காய் விலை தொடர்ந்து அதிகரிப்பதற்கு அரசாங்க தேங்காய் ஏலங்களில் இடைத்தரகர்களின் விலை நிர்ணய நடைமுறைகளே முக்கிய காரணம் என

அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெங்குப் பயிர்ச் செய்கை சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் மாதங்களில் தேங்காய் உற்பத்தி மீண்டும் குறைவடையக்கூடும் எனவும், இது மற்றொரு விலை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் எனவும்

தெங்குப் பயிர்ச் செய்கை சபையின் தலைவர் ஜயக்கொடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் சிரேஷ்ட அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் தெங்குப் பயிர்ச் செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி இந்தப் பிரச்சினையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளில் இருந்து தேங்காய்கள் குறைந்த விலையில் ஏலம் விடப்பட்டாலும், இடைத்தரகர்கள் இந்தப் பங்குகளை வாங்கி சந்தையில் அதிக விலைக்கு விற்று, இலாபத்தைப் பெறுகிறார்கள்.

இந்த நடைமுறை தென்னை விவசாயிகள் மற்றும் நுகர்வோர் இருவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என ஜயக்கொடி சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து தேங்காய் உற்பத்தியில் வீழ்ச்சி காணப்பட்டாலும் தேங்காய் விலை 200 ரூபாவுக்கும் அதிகமாகவே உள்ளது. இது ஒரு நெருக்கடியான சூழ்நிலை ஆகும்.

மே மற்றும் ஜூன் மாதங்களில் 555 மில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படும் என்ற கணிப்புகளுக்கு மத்தியில், உற்பத்தியில் எதிர்பார்க்கப்பட்ட அதிகரிப்புகள் இருந்தபோதிலும்,

தொடர்ச்சியான விலை அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடலின் போது கவலைகள் எழுந்தன.

இந்த விலை அதிகரிப்புக்கு ஓர் தீர்வாக கையிருப்பில் உள்ள தேங்காய்களிழல் ஒரு பகுதியை மட்டுமே ஏலங்கள் மூலம் விற்பனை செய்யவும், எஞ்சியவற்றை சதொச விற்பனை நிலையங்கள் மற்றும்

கூட்டுறவு சங்கங்கள் மூலம் பொதுமக்களுக்கு சலுகை விலையில் விநியோகிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் தேங்காய் விலைகள் தொடர்பில் விசாரணைகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கொண்டுள்ளார்.

விலைகளை நிலைப்படுத்த திட்டம் ஒன்றை வகுக்குமாறு விவசாயத்துறையுடன் தொடர்புடைய உயர் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கு ஏற்ப தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க அடுத்த மாதம் முதல் பல திட்டங்களை செயல்படுத்த தெங்கு பயிர்ச்செய்கை சபை தயாராகி வருகிறது.

அரசாங்கம் தற்போது கிட்டத்தட்ட 100,000 ஏக்கர் தென்னந்த தோட்டங்களை சொந்தமாக வைத்திருந்தாலும், அந்த நிலங்களில் பல போதுமான அளவு பயன்படுத்தப்படாமல் இருப்பது கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.

இதன் விளைவாக, அரசாங்கம் தற்போது அந்த காணிகளை அபிவிருத்தி செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது.

எதிர்வரும் மாதங்களில் தேங்காய் உற்பத்தி மீண்டும் குறையக்கூடும் எனவும், இது மற்றொரு விலை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் எனவும் ஜயக்கொடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் உற்பத்தி அதிகரிக்கும் என்ற அவர்களின் கணிப்பு குறித்து தென்னங் பயிர்ச்செய்கை சபை லுணுவில தேங்காய் ஆராய்ச்சி நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.

மாணவி தற்கொலை துரத்தும் விசாரணை
Posted in இலங்கை செய்திகள்

மாணவி தற்கொலை துரத்தும் விசாரணை

மாணவி தற்கொலை துரத்தும் விசாரணை

மாணவி தற்கொலை துரத்தும் விசாரணை ஆசிரியர் தப்பு ஓட்டம் மக்கள் கொதிப்பு தொடரும் போராட்டம் திணறு மானூர் அரசின் நடவடிக்கைகள்

பயம்ப தேசிய கல்வியில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருவதாக குற்ற புலானய்வு துறை அறிவித்துள்ளது .

இந்த மாணவி ஏன் பலியானார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்கின்ற விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஆசிரியர் ஒருவரினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அதிக மன உளைச்சல் காரணமாகவே இவர் தற்கொலை முயற்சியை மேற்கொண்டார் என குற்றம் சுமத்தப்படுகிறது.

ஆனால் தற்கொலை என தெரிவிக்கப்படுகின்ற பொழுது அந்த மாணவி படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிய வருகிறது.

இறந்த மாணவி தொடர்பாக பல்வேறுபட்ட கருத்துக்கள் சமூக வளைத் தளங்களை ஆக்கிரமித்து வருகிறது.

அவற்றில் எது உண்மை எது பொய் என்பதை கண்டறியும் நோக்கம் மக்கள் சமூக ஆர்வலர்களும் ஈடுபட்டுள்ளார்கள்.

எனினும் ஒரு அப்பாவி இளம் மாணவி பலியான சம்பவம் மக்கள் மத்தியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

குற்றச்சாட்டுகள் விதிக்கப்பட்டால் அவை உண்மையானதாகவே நீதிமன்ற அழைத்துக் கொள்ளப்படும் ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் ,

அந்த குற்றத்தை ஏற்காத நிலையில் வழக்கில் திடீர் மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்ப்பு படுவதாலேயே இந்த வழக்கு தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சமையலறையில் எரிந்து பெண் பலி
Posted in இலங்கை செய்திகள்

சமையலறையில் எரிந்து பெண் பலி

சமையலறையில் எரிந்து பெண் பலி

சமையலறையில் எரிந்து பெண் பலி ,சமையலறையில் எரிந்து பெண் பலியான சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

யாழ்ப்பாணம் புலவர் வீதி நவாலி வடக்கு மாணிப்பாய் சேர்ந்த கயன் தனுஷா 23 வருட ஒரு வயது குழந்தையின் தாயே சமையலறையில் தீ பற்றி பிடித்ததால் உடல் கருகி பலியாகி உள்ளார்.

மண்ணெண்ணையை ஊற்றி அடுப்பை பற்ற வைக்க முற்பட்ட பொழுது தீ பற்றி எரிந்ததில் அவர் உடல் கருகி பலியாகி உள்ளார்.

குழந்தையுடன் தாய் இருந்த பொழுது அடுப்பு எரியாத காரணத்தால் அடுப்பை மூட்டை மண்ணெண்ணையை ஊற்றிய பொழுது பெண்ணின் உடலில் மன்னனை சிந்தியதன் காரணத்தால் ,

தீக்காயம் ஏற்பட்டு அவர் யாழ்ப்பாவதென்ன வைத்தீஸ்வரர் அனுபவிக்கப்பட்டு இருந்து நேத்து சிகிச்சை பெற வேண்டி பலியாகி உள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் மாவட்ட திடீர் வர்ண விசாரி அதிகாரிகள் ஆறுமுகம் ஜெயபால சிங்கம் விசாரணையை மேற்கொண்டுள்ளார்.

இளம் பெண் ஒருவர் தீயில் கருகி பலியான சம்பவம் நவாலி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அலட்சியப் போக்கின் காரணமாக நடந்த ஒரு உயிர் இழப்பு என இதனை மக்கள் பேசிக் கொள்கிறார்கள்

சம்பவங்கள் உங்களுக்கு இடம் பெற்று விடாது இருக்க மக்களை ஒழிப்பாக இருங்கள்.

ரயில் சேவைகள் தாமதம் பயணிகள்அவதி
Posted in இலங்கை செய்திகள்

ரயில் சேவைகள் தாமதம் பயணிகள்அவதி

ரயில் சேவைகள் தாமதம் பயணிகள்அவதி

ரயில் சேவைகள் தாமதம் பயணிகள்அவதி ,ரயில் சேவைகள் தாமதம் பயணிகள் அவதிப்படுகின்ற நிலை ஒன்று என்று ஏற்பட்டுள்ளது.

கடலோர மார்க்கத்திலான ரயில் சேவைகள் அனைத்தும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

காலியிலிருந்து மருதானை நோக்கி செல்லும் 311 இரவு நேர அஞ்சறையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கடலோர மார்க்கத்திலான ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்து.

இதனால் தொலைவிடங்களுக்கு பயணிக்க இருந்த பயணிகள் பல ரயில்வே நிலையங்களில் சொல்லெண்ணா துயரை சந்தித்த வண்ணம் இருக்கின்றன.

திடீர் திடீரென இரத்தாகும் ரயில் சேவைகளினால் தொலைதூரத்திற்கு வேகமாக கடக்க வேண்டிய பயணிகள் நேரத்தை வீணடித்து அங்கு தத்தளித்து தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிறது ரயில்வேயில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த பயணிகள் சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளதால் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளதாள் பயணிகள் அவதியில் உறைந்துள்ளனர் .

இலங்கையர் வெளிநாட்டில் கைது
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையர் வெளிநாட்டில் கைது

இலங்கையர் வெளிநாட்டில் கைது

இலங்கையர் வெளிநாட்டில் கைது ,மூன்று இளைஞர்கள் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இத்தாலி குடியுரிமை பெற்றதாக தெரிவித்து அல்பேனியாவை கடக்க முற்பட்ட பொழுது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள.

அந்த நாட்டின் குடிவரவு குடியகல்வு அமைச்சு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் பொழுது போலி ஆவணங்களை காண்பித்து ஐரோப்பா நாட்டுக்கு நுழைய முயன்ற இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்

கைதாண்டவர்கள் இலங்கையைச் சேர்ந்த 36 58 மற்றும் 57 வயது உடைய உள்ளன் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்

பிசா மோசடி குற்றச்சாட்டில் சட்டவிரோத செயல்பாட்டில் ஈடுபட்டார்கள் என்பதன் அடிப்படையில் இவர்கள் அல்பேனியாவில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளார்கள்

சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் இவர்கள் நாடு கடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பா மற்றும் கனடா அமெரிக்காவுக்குள் நுழையும் முகமாக இவ்வாறு ஏனைய நாடுகள் ஊடாக சட்ட விரோதமாக போலிய ஆவணங்கள் தயாரித்து இளைஞர்கள் நுழைந்து வருவதான குற்றச்சாட்டு இந்த செய்தியில் பகிரப்பட்டு உள்ளது

ஆனால் இவர்கள் தமிழர்களா அல்லது சிங்களவர்கள் என்பது தொடர்பாக முழுமையான தகவல் தெரிய வரவில்லை.

நியூசிலாந்து பிரதிப்பிரதமருடன் அனுரா சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

நியூசிலாந்து பிரதிப்பிரதமருடன் அனுரா சந்திப்பு

நியூசிலாந்து பிரதிப்பிரதமருடன் அனுரா சந்திப்பு

நியூசிலாந்து பிரதிப்பிரதமருடன் அனுரா சந்திப்பு ,இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதிப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸுக்கும் ஜனாதிபதி

அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் பெற்ற குறிப்பிடத்தக்க வெற்றிகளுக்காக ஜனாதிபதி அநுர குமாரதிஸாநாயக்க மற்றும் புதிய அரசாங்கத்திற்கு நியூசிலாந்து அரசாங்கம் மற்றும் மக்களின் வாழ்த்துகளைத்

தெரிவித்த பிரதிப் பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவதே தனது அரசாங்கத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் நடைபெற்று வரும் சாதகமான முன்னேற்றங்கள் குறித்து மகிழ்ச்சியைத் தெரிவித்த நியூசிலாந்து பிரதிப்

பிரதமர், அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சமூக மேம்பாட்டிற்கான புதிய அரசாங்கத்தின் முயற்சிகளைப் பாராட்டினார்.

நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமைத்துவத்தை பாராட்டிய பிரதிப் பிரதமர்,

இந்த வேலைத்திட்டம் இலங்கைக்கு நிலையான அபிவிருத்தியை அடைய உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தச் சூழலில், எதிர்காலத்தில் இலங்கைக்கு வழங்கப்படும் நிதி உதவியை மேலும் விரிவுபடுத்த நியூசிலாந்து அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் பிரதிப் பிரதமர் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நியூசிலாந்து பிரதிப் பிரதமர் வின்சென்ட் பீட்டர்ஸின் விஜயம் இலங்கை – நியூசிலாந்து உறவுகளில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

மக்களிடையே நீண்டகாலமாக நிலவும் பிளவுகள் நீண்டகால மோதல்களுக்கு வழிவகுத்துள்ளன என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை விளக்கியதுடன்,

நல்லிணக்கச் செயல்பாட்டின் முக்கிய தூணாக தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு தனது அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

விவசாயம், கல்வி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன்,

இரு நாடுகளுக்கும் பரஸ்பர ஆர்வமுள்ள இந்தத் துறைகளின் முன்னேற்றத்திற்காக நெருக்கமாக செயற்படவும் இணக்கம் தெரிவித்தனர்.

துப்பாக்கியுடன் ஒருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது , செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையில் தெரிவிக்கின்றது .

புத்தள காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியை தயாரித்து விற்பனை செய்து வந்த நபர் ஒருவரே தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.

40 வயதுடைய இந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு தற்பொழுது போலீஸ் விசாரணையில் சிக்கி இருக்கின்றார்.

நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தி இவர் வேட்டையில் ஈடுபட்டு வந்தாரா, அல்லது மனிதர்களை படுகொலை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தாரா என்பதை கேள்வியாகிறது.

இலங்கையில் நாள்தோறும் அதிநவீன துப்பாக்கியுடன் படுகொலை நடத்துகின்றவர்கள் தப்பிச் செல்கின்றார்கள் .

இவ்வாறான நிலையில் அப்பாவிகள் நாட்டு துப்பாக்கி உடன் ,தொடர்பு கொண்டவர்கள் கைது செய்யப்படுவது வேடிக்கையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சக்கை துப்பாக்கி

சக்கை துப்பாக்கி எனச் சொல்லப்படுகின்ற இந்த துப்பாக்கியை நாட்டில் தயாரிக்கப்படுகிறது அவரான துப்பாக்கிகளை இவர்கள் வைத்திருப்பது அரசு தவறு.

கட்டு துவக்கு

கட்டு துவக்கு வைத்திருப்பதற்கே நாட்டில் தடை என்றால் நவீன துப்பாக்கிகளை வைத்திருப்பவர்களை ஏன் அரசு கைது செய்யவில்லை.

இலங்கையில் நடைபெறுகின்ற அதிகளவாட துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதனால் பலியாகி வருகின்ற சம்பவங்களுக்கு யார் பொறுப்பு.

ஆக ஆளுகின்ற அனுரா ஆட்சி இன்று மக்களுக்கு எதிராக திசை திரும்பி உள்ளதா பாதாள குழுக்களுக்கும் மாவியாக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறதா .

ஆதலால் தான் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறதா அப்பாவிகள் திட்டமிட்டு கைது செய்யப்படுகிறார்கள் என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.

முன்னாள் அமைச்சர் பிணையில் விடுதலை
Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் அமைச்சர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றனர்.

மஹிந்த ஆட்சியில் அமைச்சராக விளங்கிய விவசாய அமைச்சராக விளங்கிய மைந்த நாளந்த அவர்கள் தற்பொழுது பிணையில் நீதிமன்றம் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் மீது பல இளைஞர் உழல் முறைகேட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்ற கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வந்தார்

அவ்வாறு நிலையில் தற்போது இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சீனா நிறுவனத்தால் சிக்கிய அமைச்சர்

சீனா நிறுவனம் ஒன்றுக்கு இவரால் பல விடயங்கள் தாரை வார்த்து கொடுக்கப்பட்டதாகவும் ,அது தொடர்பாகவே இவர் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அதன் அடிப்படையில் தற்போது அதில் லஞ்ச ஊழல் செய்தார் என்ற குற்றச்சாட்டில் முன்வைக்கப்பட்ட விசாரணையில் ,தற்பொழுது புனையில் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் லஞ்சம்

இலங்கை அரசியல்வாதிகள் லஞ்சங்களை வாங்கி மேற்குல நாட்டு நிறுவனங்களுக்கு ,இலங்கையை தாரை பார்த்து கொடுக்கிற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அவ்விதமான ஒரு நடவடிக்கையிலேயே இப்பொழுது இவர் சிக்கியிருந்தார்.

இந்த அமைச்சர் தற்பொழுது விடுதலை ஆகியுள்ளது இலங்கை அரசியலில் பெரும் புயலைக் குழப்பி இருக்கிறது.

லஞ்ச ஊழல்வாதிகள் தொடர்ந்து மதனி செய்து கொண்டிருப்பார்கள் நீதியும் அவர்களுக்கு சார்பாக செயல்படுகிறது ஆகவே இளங்க அரசியல்வாதிகள்,

நீதியையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளார்கள் என்ற விடயம் இவருக்கு வழங்கப்பட்ட பிணையினூடாக தெரிய வருவதாக மக்கள் கொந்தளிக்கின்றார்கள்.

விபத்தில் ஒருவர் பலி சாரதிஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் ஒருவர் பலி சாரதிஓட்டம்

விபத்தில் ஒருவர் பலி சாரதிஓட்டம்

விபத்தில் ஒருவர் பலி சாரதிஓட்டம் ,விபத்தில் ஒருவர் பலி சாரதி ஓட்டம் பிடித்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்

கொத்மலை தைலத்தோட்ட வீதியில் நேற்றிரவு ஒன்று விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார் சம்பவத்தில் உயிரிழந்த 33 வயது உடைய அதே பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்க படுகிறது .

வாலிபன் உயிரை பறித்த சாரதி தப்பி ஓட்டம்

எனவே வாகனத்தை தவறாக செலுத்தி அப்பாவி வாலிபன் உயிரை பறித்த சாரதி தப்பி ஓடி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வாகனச் சாரதிகள் ,வீதி விதிமுறைகளை மதிக்க மறந்து ,தரமான பீதியென கண்ணை மூடிக்கொண்டு வேகமாக வாகனங்களை செலுத்துவதால் இந்த வீதி விபத்து இடம்பெறுகிறது .

அதேபோன்று வீதிகளை மக்களும் வீதி விதிமுறை மதிக்காமல் தாறுமாறாக குறுக்குடு செய்து வருவதால் இந்த விபத்தும் ஏற்படுகிறது.

ஆகவே மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை இலங்கை அரசுக்கு உள்ளது.

காவல்துறையினர் சரியான முறையில் நடவடிக்கை மேற்கொண்டால் இந்த விகுதிபத்துக்களை தடுக்க முடியும்.

அதனை தடுக்க மருந்து அவர்கள் இவ்விதம் மேலும் விபத்துக்கள் அதிகரிக்க காரணமாக உள்ளது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

24 மணித்தியாலத்தில் ஐந்துக்கு மேற்பட்ட விபத்து

கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்துக்கு மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டும் விவரத்தல ஐந்துக்கு மேற்பட்ட உங்கள் பலியாய் உள்ள தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அப்படி என்றால் இலங்கை வீதிகள் ஆபத்தானவை.

இலங்கை பேருந்துகள் மூலம் மக்களிற்கு நாட்டில் நடமாட முடியாத சுதந்திரம் அங்கு இருக்கிறதா என்ற அச்சத்தை கேள்வியை இந்த விபத்துக்கள் ஏற்படுத்தி நிற்கின்றன.

விபத்துக்களை தடுக்க அரசாங்கம் என்ற நடவடிக்கை எடுக்கப் போகிறது ..?

தப்பியோடும் வாகன சாரதிகளை பிடித்து சிறையில் அடைத்து நாட்டை வளப்படுத்துமா கேள்வியோடு செய்தி முடிகிறது.