Tag: குவைத்
தற்போது எரியும் குவைத் எண்ணெய் வயல்
தற்போது எரியும் குவைத் எண்ணெய் வயல்
தற்போது எரியும் குவைத் எண்ணெய் வயல் , குவைத்தின் மினா அல்-அஹ்மதி சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதலால் தீ விபத்து
குவைத்தில் உள்ள மினா அல்-அஹ்மதி சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல்
குவைத்தில் உள்ள மினா அல்-அஹ்மதி சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில், பல பிரிவுகளில் தீ விபத்து
ஏற்பட்டுள்ளதாக, அந்நாட்டின் தேசிய எண்ணெய் நிறுவனத்தை மேற்கோள் காட்டி அரசு செய்தி நிறுவனமான குனா தெரிவித்துள்ளது.
“இன்று அதிகாலை மினா அல்-அஹ்மதி சுத்திகரிப்பு நிலையம் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், இதனால் பல செயல்பாட்டுப் பிரிவுகளில் தீ
குவைத் பெட்ரோலியக் கழகம்
விபத்து ஏற்பட்டதாகவும் குவைத் பெட்ரோலியக் கழகம் (KPC) தெரிவித்துள்ளது,” என அந்த நிறுவனம் கூறியது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஈரான் கப்பலில் ஆயுதங்கள் அடித்துவிடும் அமெரிக்கா

- மொசாட் உளவாளிகளுக்கு ஈரானில் தூக்கு

- ஈரானில் வெடிக்காத அமெரிக்கா குண்டுகள் மீட்பு

- போருக்கு நாங்க தயார் ஈரான் இராணுவம்

- ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை அரசாங்கம் அரசியல்மயமாக்குவதாக நாமல்

- ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து டிம் குக் விலகுகிறார்

- கியூஆர் நடைமுறையில் இருக்கும் அனுரா அரசு

- 10 நாய்கள் விஷம் வைத்து கொலை

- கப்பல் தாக்குதல் ஐநாவில் ஈரான் புகார்

- இலங்கை தழுவிய ‘அமைதிக்கான நடைப்பயணம்’ முயற்சிக்கு ஜனாதிபதி ஆதரவு

- டிரம்ப் முக்கிய நிர்வாகி பதவி விலகல்

- விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ரூ. 1.2 பில்லியன் ஒதுக்கீடு

குவைத் இலங்கை விமான சேவை மீண்டும் ஆரம்பம்
குவைத் இலங்கை விமான சேவை மீண்டும் ஆரம்பம்
குவைத் இலங்கை விமான சேவை மீண்டும் ஆரம்பம் ,கடந்த 2021 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குவைத் விமான
இலங்கைக்கான விமான பயணங்கள்
சேவையின் இலங்கைக்கான விமான பயணங்கள் மீண்டும் ஆரம்பமானதுடன் அதன் ஆரம்ப பயணமாக, மங்கள விமானம்
திங்கட்கிழமை (27) அன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
முதல் மங்கள பயணத்திற்காக ஏ- 320 நியோ வகை விமானமொன்று குவைத்தில் இருந்து திங்கட்கிழமை (27) அதிகாலை கட்டுநாயக்க விமான
நிலையத்திற்கு வந்துள்ளதுடன் குறித்த விமானம் இதன்போது நீர் பாய்ச்சு வரவேற்கப்பட்டது.
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து
இந்த விமானத்தை வரவேற்பதற்காக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் சுனில் ஜயரத்ன, இலங்கைக்கான
குவைத் பதில் தூதர் அல் முஹானா மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டுள்ள ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
குவைத் விமான நிலையத்திற்கும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையிலான விமானங்கள் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை,
வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டார் விமானசேவை மீள் ஆரம்பித்தது
கட்டார் விமானசேவை மீள் ஆரம்பித்தது
கட்டார் விமானசேவை மீள் ஆரம்பித்தது ,ஈரான் இஸ்ரேல் உக்கிர தாக்குதலால் 2025 ஜூன் 21-இல், ஈரான் கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளமான Al-Udeid Air Base மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
கட்டார் அரசாங்கம் வான்வெளியை தற்காலிகமாக மூடியது
பாதுகாப்பு காரணங்களால் கட்டார் அரசாங்கம் வான்வெளியை தற்காலிகமாக மூடியது.
விமானங்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கவும், பயணிகள் உயிர் சேதம் ஏற்படாமலும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
2025 ஜூன் 24 – ஈரான்–இஸ்ரேல் இடையே போர்நிறைவு ஒப்பந்தம் (ceasefire) ஏற்பட்டதைத் தொடர்ந்து வான்வெளி பாதுகாப்பாக மீண்டும் அறிவிக்கப்பட்டது.
விமான சேவைகள் வழமைக்கு திரும்பின
வான்வெளி திறக்கப்பட்டதை அடுத்து கட்டார் எயார்வேஸ் உட்பட விமான சேவைகள் வழமைக்கு திரும்பின, அத்தோடு விமான கப்பல் சரக்குகள் மற்றும் பொருளாதார சுமைகள் குறைந்துள்ளன.
FIFA World Cup சுற்றுச்சூழல் பிந்தைய சுற்றுலா மீண்டும் விரைவுபெற்றது.
கட்டார், மற்றும் குவைத் வான்வெளி மூடல் ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக இருந்தது.
தற்போது, Qatar Airways உறுதியுடன் பாதுகாப்பான பயண சூழல் அமைந்துள்ளதாக அறிவித்து, சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது.
எதிர்காலத்தில் பாதுகாப்பு நிலவரம் நிலைத்திருக்கும் வரை வான்வெளி திறப்பும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வான்வெளியை மூடிய கட்டார் மற்றும் குவைத்
வான்வெளியை மூடிய கட்டார் மற்றும் குவைத்
கட்டாரில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் தங்கள் குடிமக்களுக்கு அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்து வருவதால், கட்டார் தனது வான்வெளியை தற்காலிகமாக மூட தீர்மானித்துள்ளது.
அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் அந்நாட்டில் உள்ள தங்கள் குடிமக்களை “மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பாக இருக்குமாறு” அறிவுறுத்தியுள்ளது.
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அதன் நட்பு நாடான கத்தாருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கத்தாரில் இருந்த படைகளையும் அமெரிக்கா திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதோடுமட்டுமின்றி கட்டாரிலுள்ள தோஹாவின் தென்மேற்கே உள்ள இரண்டு ராணுவ தளங்களில் அல் உதெய்த் விமான தளத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த 10,000 வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையைத் தொடர்ந்து கட்டார் தனது வான்வெளியை தற்காலிகமாக மூட தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
கட்டார் தனது வான்வெளியை தற்காலிகமாக மூட தீர்மானித்துள்ள நிலையில் தற்போது குவைட் நாடும் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளது.
கட்டாரில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் தங்கள் குடிமக்களுக்கு அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்து வருவதால், கட்டார் தனது வான்வெளியை தற்காலிகமாக மூட தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னர் மரணம் மக்கள் கதறல்
மன்னர் மரணம் மக்கள் கதறல்
குவைத் மன்னர் மரணம் மக்கள் கதறல் ,செய்க் நவாப் அல் அகமது அல் சபா தனது 86 வயதில் இன்று (16)காலமானார். உடல்நலக்குறைவால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு இஸ்லாமிய நாடுகளின் இன்னும் மன்னராட்சி முறை என்பது நடைமுறையில் உள்ளது.
அந்த வகையில் குவைத் மன்னராக செய்க் நவாப் அல் அகமது அல் சபா இருந்தார்.
இவர் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பரில் குவைத் மன்னராக பொறுப்பேற்றார்.
வயது முதிர்வு காரணமாக செய்க் நவாப் அல் அகமது அல் சபா உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதனால் அவரால் தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து செய்க் நவாப் தனது பெரும்பாலான பொறுப்புகளை 2021ம் ஆண்டே பட்டத்து இளவரசர் செய்க் மெஷல் அல் அகமது அல் சபாவிடம் ஒப்படைத்தார்.
இந்நிலையில் தான் கடந்த மாதம் மன்னர் செய்க் நவாப் அல் அகமது அல் சபாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
குவைத் மன்னர் காலமானார்
இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இந்தநிலையில் வைத்தியசாலை வட்டாரங்கள் தரப்பில் செய்க் நவாப் நன்றாக உள்ளார் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டது.
அவருக்கு எந்த மாதிரியான உடல்நல பிரச்சனை உள்ளது என்பது பற்றி எதுவும் தெரிவிக்கப்பவில்லை.இதையடுத்து சிகிச்சை முடிந்து மன்னர் செய்க் நவாப்
மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்று சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
செய்க் நவால் அல் அகமது அல் சபா குவைத் மன்னராக குறுகிய காலம் அதாவது 3 ஆண்டு மட்டுமே பதவி வகித்துள்ளார்.
தற்போது செய்க் நவாப் அல் அகமது அல் சபா காலமான நிலையில் குவைத்தின் அடுத்த மன்னராக பட்டத்து இளவரசர் செய்க் மெஷல் அல் அகமது அல் சபா பொறுப்பேற்க உள்ளார்.
இவருக்கு வயது 83 ஆகும். இவர் விரைவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உறுதிமொழி ஏற்றி குவைத்தின் அதிகாரப்பூர்வ மன்னராக பட்டம் சூடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை அரசாங்கம் அரசியல்மயமாக்குவதாக நாமல்
- கியூஆர் நடைமுறையில் இருக்கும் அனுரா அரசு
- 10 நாய்கள் விஷம் வைத்து கொலை
- இலங்கை தழுவிய ‘அமைதிக்கான நடைப்பயணம்’ முயற்சிக்கு ஜனாதிபதி ஆதரவு
- விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ரூ. 1.2 பில்லியன் ஒதுக்கீடு
- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்காரர்களுக்கு மன்னிப்பு
- இலங்கையின் தெரு விலங்குகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை
- சாராய வருமானம் 70 மில்லியன் இலாபம் அனுரா அரசு
- யாழ் கண்டி வீதியில் பயங்கர விபத்து
- உல்லாச பயணம் வீழ்ந்தது அலறும் அனுரா அரசு
குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 52 பெண்கள்
குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 52 பெண்கள்
இலங்கையில் இருந்து குவைத் நாட்டுக்கு வீட்டு பணிப்பெண்களாக சென்ற இலங்கையை சேர்ந்த 52 பெண்கள் தாம் வேலைபுரிந்த எயமானர்களினால் வதைகள்
மற்றும் துன்புறுத்தல்களுக்கு உள்ளான நிலையில் அந்த நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சம் அடைந்திருந்தனர் .
அவ்வாறான பெண்கள் தற்போது இலங்கைக்கு மீள திரும்பியுள்ளனர்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஊடாக இவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு அவர் தம் குடும்பத்துடன் மீள் இணைக்க பட்டுள்ளனர்




















